Monday, February 28, 2011

ஜெ & விஜயகாந்த் செய்தது தமிழ் துரோகமா ?


கடவுள்களில் கூட தமிழ்நாட்டை புறக்கணித்து.. விஜயகாந்த் ஆந்திரவிற்கும் ,ஜெயலலிதா கர்நாடகத்திற்கும் சென்று தமிழ்நாட்டு மக்களின் ஆதரவிற்காக தன் சொந்த மாநிலத்திற்கு சென்று வேண்டிவிட்டு வந்து தங்களின் இனபற்றை நிருபித்துவிடார்கள் ...

"தனது பிறந்த நாளையொட்டி தேர்தலுக்காக மைசூர் சாமுண்டீசுவரி கோவிலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறப்புப் பூஜை நடத்தினார்.இதற்காக தனி விமானத்தில் அவர் தோழி சசிகலாவுடன் சென்றுவந்தார் ."

"தனது உறவினர்களுடன் கூட்டணிக்காக திருப்பதிக்குச் சென்று தரிசனம் செய்து வந்திருந்தார் விஜயகாந்த்"

''தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா'' என்றெல்லாம் மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லிக் கொண்டிருக்கும் விஜயகாந்த் நிஜத்தில் ஒரு பச்சை தெலுங்கர், அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதும், கட்சி நடத்தப் பண உதவிகள் செய்வதும் தெலுங்குத் தொழிலதிபர்கள்தான் .

தெற்கில் தமிழ் பேசுபவர்கள் தெலுங்கு பேசும் “மனவாடு”களைக் கண்டு கடுப்படைவதற்கு காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

பிள்ளைகளை தெலுங்கு பேசச் சொல்வது – பேசுவதோ தெலுங்கு. வீட்டில் தமிழ் பேசாதே என்று அறிவுரை. நம்மெல்லாம் தெலுங்கு என்று தனி அடையாளம் தேடுவது / பிரித்து பார்ப்பது ரெட்டி,நாயக்கர் ஜாதிக் காரர்கள் தாங்களாகவே செய்து கொள்வது தான். cultural identity என்று வரும் போது நான் தனி, எனக்கு தனி தொகுதி கொடு என்றெல்லாம் மாநாடு போடுகிறார்கள். அதையே தமிழ் பேசுறவன்... உன்ன தமிழ் நாட்டு சிஎம் ஆக விட மாட்டேன்னு சொன்னா discrimination ன்னு சொல்ல வேண்டியது.

இவர்களுக்கு “தெலுங்கு” என்ற அடையாளம் வேணும், அதை வைத்து அரசியலும் செய்யணும், ஆனா அதையே வச்சு தமிழ் காரன் எதிர் அரசியல் செஞ்சா ஏன் கசக்குது?. அதோட இந்த தமிழ் / தெலுங்கு; நாயக்கர் / மறவர் அரசியல் ஒண்ணும் புதிது இல்லை .கட்டபொம்ம்னும், பூலித்தேவனும் அடிச்சுகிட்ட காலத்தில் இருந்தே நடந்துகிட்டுதான் இருக்கு.

வார்த்தைக்கு வார்த்தை, மேடைக்கு மேடை, ''நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டைப் புரட்டிப் போடுவேன், முதல் மாநிலம் ஆக்குவேன்''என்று சூளுரைக்கிறாரே விஜயகாந்த்! இவருக்கு கிடைச்ச ஒரே தொகுதியான விருத்தாச்சலத்தில் என்ன பண்ணியிருக்கிறார்? அந்த ஊர் மக்கள்கிட்ட போய் கேட்டா இவரோட வண்டவாளத்தைச் சொல்லுவாங்க!

கொஞ்சம் கூட தமிழ் உணர்வே இல்லாததால்தான் அனைத்துக்கட்சிக் கூட்டம் உட்பட முதல்வர் ஈழப் பிரச்னையில் எடுக்கும் எல்லா முடிவுகளையும் கொச்சைப்படுத்திக் கேவலமாய் பேசினார் விஜயகாந்த.ஈழப் பிரச்னையில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து எனக்கும் சில கருத்து முரண்பாடுகள் உண்டு. மத்திய அரசிடம் நமது சில உரிமைகளை வலியுறுத்துவதில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்பது எனது கருத்து. ஆனாலும், லட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் தமிழக அரசு எந்த முடிவு, முயற்சி எடுத்தாலும் நாம் நம் நிபந்தனையற்ற ஆதரவை கொடுப்பது நம் தார்மீகக் கடமை.

ஒரு கட்சித் தலைவரா அந்தக் கூட்டத்துக்குப் போய் தனது ஆலோசனையையோ, எதிர்ப்பையோ வெளிப்படுத்தலாம் விஜயகாந்த, ஆனா, அனைத்துக்கட்சிக் கூட்டம் எதையும் சாதிக்காது, அது தேவையில்லாதது, அது நாடகம் என்றெல்லாம் அறிக்கை விடும் விஜயகாந்த் மட்டும் அதனால என்ன சாதிக்கப்போறார். 

முதவரை பார்த்து "திருவள்ளுவரைப் பற்றி புகழ்கிறீர்களே, அவர் எந்தக் கல்லூரியில் படித்தவர் ?"என்று கருணாநிதிக்கு எதிராக கேள்வி எழுப்பியதில் இருந்து இவருக்கு இதிகாச புராண கதைகளில் வரும் பாத்திரங்களுக்கும், ஒப்பற்றவர்களாக வாழ்ந்து மறைந்த திருவள்ளுவர் போன்றவர்களுக்கு முடிச்சு போடுவதில் இருந்து இவரின் இந்திய / தமிழக வரலாற்றின் அறியாமையும் வெளிப்பட்டுவிட்டது. எந்த ஒருதமிழனும் கேள்வி எழுப்ப துணியாத திருவள்ளுவரை, கற்பனை பாத்திரம் போல் திருவள்ளுவர் காலேஜில் படித்தாரா ? என்று கேள்வி எழுப்பியதில் இருந்தும், திருவள்ளுவரை தாம் புகழந்ததில்லை/மதிக்கவில்லை என்றும் மறைமுகமாக சொல்லி இருப்பதன் மூலம், தமிழகத்தில் பிறந்து, தமிழர்களால் புகழடைந்திருந்தாலும் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட தமக்கு இருப்பது தமிழுணர்வு இல்லை என்று வெட்ட வெளிச்சமாக்க்கிக் கொண்டுள்ளார்.

அடுத்து இவர் கூட்டணி போட்டு தமிழக மக்களை ஏமாத்தறதுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் குரல்தான உண்மையில் நாடகம். அந்த நாடகத்தில் ஒரு நடிகரா தன் பங்கை மிகச்சிறப்பா செய்துகிட்டிருக்கார் விஜயகாந்த. இவரால் எந்த தமிழனுக்கும் நல்லது செய்ய முடியாது, செய்யவும் மாட்டார் அவர். அன்று காசுக்காக நடிச்சவர், இன்னைக்கு நாற்காலிக்காக திறமையா நடிச்சிகிட்டிருக்கார்.

இதாச்சு பரவாயில்ல கர்நாடகாகாரங்க இம்சை இன்னும் கொடுமை . தமிழ் நாட்டுக்கு தண்ணி தரமாட்டேன்னு சொன்ன தேவகவுடாவுக்கே வொக்கலிக ஜாதி மாநாட்டுல மேடையில ஏத்தி பாராட்டுராங்க. இந்த கூத்த என்ன சொல்றது?

அறுவைசிகிச்சை செய்யும் போது வலிக்கத்தான் செய்யும். வலிக்கும் என்பதற்காக சிகிச்சை செய்யாமல் இருக்கமுடியாது. எல்லோரையும் ஓர்தாய் மக்களாய் தமிழினினம் நினைத்தது போதும். காடு மேடென்று பார்க்காமல் அனைத்தும் நம் நிலமே, நம் உறவே என்று பார்த்ததால் இந்தத் தமிழினம் இழந்தது ஏராளம். தமிழினம் தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆந்திராவிலோ, கேரளாவிலோ, கர்நாடகத்திலோ தமிழன் முதலமைச்சராக முடியுமா? ஒருபோதும் முடியாது. அப்படி நடக்கவும் கூடாது. தமிழ் நாட்டின் நிலமை என்ன என்பதை தாங்கள் சிந்திக்கவேண்டும். அவரவர் மண்ணை அவரவர் ஆளவேண்டும். இதுபற்றி நியாய உணர்வுடன் அனைவரும் சிந்திக்கவேண்டும்

தமிழர்களுக்கு உண்மையாக இல்லாமல், அவர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கிற யாராக இருந்தாலும் தழிழ்நாட்டு மக்கள் அவங்களுக்கு வர்ற தேர்தல்ல சத்யமா பாடம் புகட்டுவாங்க. நடிகனா மட்டும் இங்க நடிச்சு தமிழனை ஏமத்தல . பல அரசியல் கட்சித் தலைவர்களும் இங்கு மிகத் திறமையா நடித்து மக்களை ஏமாத்திகிட்டுதான் இருக்காங்க. எல்லா அரிதாரமும், சிங்க வேஷம் போட்டு மழையில் நனைந்த நரி, அம்பலமான மாதிரி ஓட ஓட தமிழர்கள் துரத்தும் நாள் வெகு தூரத்தில் இல்லை....

தி.மு.க. கூட்டணிக்குக் கண்களுக்குத் தெரியாத மிகப்பெரும் வலிமை இருக்கிறது. அந்த வலிமைதான் மக்கள் செல்வாக்கு. கடந்த ஐந்து ஆண்டுகளில் கலைஞர் அரசு செய்த மக்கள் நலப்பணிகள் அரசியல், கட்சி எல்லைகளை உடைத்துக் கொண்டு அந்த மகத்தான செல்வாக்கை தி.மு.கவுக்கு தேடித் தந்திருக்கிறது. தமிழக அரசு செயல்பாட்டில் 10 சதவிகித பணிகளைத்தான் பிகாரில் நிதிஷ்குமார் நிறைவேற்றியது. அவருடைய கூட்டணியே மகத்தான வெற்றி பெற்றபோது தமிழகத்தில் தி.மு.க. அணி எத்தகைய வெற்றி பெறும் என்று சொல்லத் தேவையில்லை.

Saturday, February 26, 2011

CPI யும் , CPM மும் காக்கை எச்சமா ?


ஒரு புரட்சிகர சித்தாந்தம் மக்களின் கையில் கிடைக்கப் பெறும் போது பௌதீக சக்தியாகிறது 
ம-கம்யூனிஸ்ட் இ-கம்யூனிஸ்டுவின் புரட்சிகர சித்தாந்தம் ஒரு பௌதீக சக்தியாக இன்னும் முழு அளவில் பரிணமிக்கவில்லை. ஆனால் புரட்சிகர சித்தாந்தத்தை தமது கொள்கையாக அவர்கள் கொண்டுள்ளனர். CPM-CPI   வெறும் விசிலடிக்கும் குஞ்சுகளையும், RSSக்கு இணையாகன கூட்டத்தையுமே தமது பிரதான சக்தியாக கொண்டுள்ளது. புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தை பிழைப்புவாத மோகத்தில் மூழ்கடித்து, தொழிற்சங்கம் என்பத்ற்க்கே அவப் பெயரை உருவாக்கியுள்ளது.
முதலாளித்துவ பாரளுமன்றம் நடைமூறையில் உள்ள நாட்டிலேயே ஒரு கம்யுனிஸ்டு கட்சி என்பது தலைமறைவாக செயல்பட வேண்டியதன் தேவை குறித்து லெனின் கூறுகீறார். மகஇக வெகு ஜன அமைப்புதான். தமிழகம் முழுவதும் வீதிகள் தோறும் நக்சல்பாரி என்று எழுதியவர்கள்தான். ஒவ்வொரு பேரணியிலும் நக்சல்பாரி என்று முழங்கியவர்கள்தான். தமது பொருளாதார அரசியல் கொள்கைகளை தமது ஒவ்வொரு போராட்டத்திலும் நேரடியாக மக்கள் முன் வைத்துதான் அவர்க்ளை அணி திரட்டுகீறார்கள் மக இகவினர். சிலர் கூறுவது போல பக்கத்து வீட்டுக்காரனுக்குக் கூட தெரியாமல் அரசியல் செய்துதான் மக இகவிற்கு அமைப்பு கடந்த ஆதரவு இன்று உருவாகியுள்ளதோ?

ஆனால், முல்லைப் பெரியாறு முதல், காவிரி வரை தமது நிலைப்பாட்டை மாநிலத்திற்க்கு ஒரு குரலில் பேசி புரட்சி செய்வது யார்? இந்தியாவெங்கும் ஸ்டைரைக் ஆனால் மே.வாவில் கிடையாது, இந்தியா முழுவதும் உலகமயத்திற்க்கு அடையாள எதிர்ப்பு ஆனால் மே.வாவில் பில் கிளீண் டனுக்கு வரவேற்ப்பு, இந்தியா முழுவதும் ஜார்ஜ் புஷ்க்கு எதிர்ப்பு மே.வாவில் அமெரிக்க ராணுவ பயிற்சிக்கு சிகப்பு கம்பள வரவேற்ப்பு – நல்ல புரட்சிகர கட்சி. இதைத்தான் வோட்டுப் பொறூக்கி அரசியல் என்கிறோம். மக்களை வெறும் வோட்டு போடும் மிசின்களாக கருதி நடக்கும் இவர்களைத்தான் நாம் போலி கம்யுனிஸ்டு என்கிறோம். மக்களிடமிருந்து கற்றுக்கொள் மக்களுக்கு கற்றுக் கொடு என்பதை இவர்கள் நடைமுறைப்படுத்தும் விதம் இதுதான். உண்மையில் கூரை ஏறி கோழி பிடிக்கும் விசயம் இவர்களுக்குத்தான் சாலவும் பொருந்தும். சாதாரண விசயங்களிலேயே மிக அற்பமாக சரணாகதி அடையும் இவர்கள் எந்த காலத்திலும் பாட்டளிக்கோ அல்லது விவசாயிக்கோ விடுதலை வாங்கி கொடுக்கப் போவதில்லை. இவர்களின் நில சீர்திருத்தத்தின் அவலம் வேலையின்மையிலும், கேரள வல்லநாடு உள்ளிட்ட இடங்களிலும், ரப்பர் தொழில் சரிவிலும் தெரிகீறது. நாடாளுமன்ற குண்டு சட்டிக்குள் புரட்சி செய்ய முனைந்து ஏகாதிபத்திய சேமியாவுக்கு கறிவேப்பிலையாக மணக்கும் CPI,CPMன் அவலம் உண்மையிலேயே மிக பரிதாபகரமானதுதான்.
புரட்சிகர கட்சியின் பாத்திரம் பற்றி லெனின் கூறுகிறார், ஒரு சிறப்பான கட்டமைப்பான புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சி இருந்தால், எந்தவொரு சாதாரண சம்பவத்தையும் புரட்சிக்கான சம்பவமாக மாற்ற முடியும்.

புரட்சி என்பது மேலே பறந்து போகும் காக்கை போடும் எச்சமல்ல. காக்கை போடும் பொழுது பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருப்பதற்க்கு.

அதற்க்கு அடிப்படையாக தேவைப்படுவது முரன்பாடுகளை கையாளும் துணிச்சலும், தத்துவ பலமும். இந்த இரண்டும் உறுதியாக CPI,CPM-க்கு கிடையாது. அதுவும் முரன்பாடுகளை கையாளும் துணிச்சல் உறுதியாக அதற்க்கு கிடையாது. மாறாக முரன்பாடுகளை பார்த்தால் வசதியாக ஒருக்களித்து படுக்கும் ஒரு இடுக்கு கிடைத்து விட்டது என்று சந்தோசப்படும். இதை அந்த கட்சிகள் பல்வேறு பிற்போக்கு சக்திகளுடன் தத்துவ தளத்தில் வைத்திருக்கும் உறவுகளை பார்த்தால் புரியும்..

பார்ப்பனியம் தமிழகத்தில் பிழைத்துக்கொள்ள, பாப்பாத்தி ஜெயலலிதா ஊடாக வேஷம் போட்டு ஆட, புலியிசம் ஈழத் தமிழனை ஏமாற்றி பிழைக்க அம்மா சரணம் தாயே என்ற கும்பிடு போடுகின்றனர்.

வர்க்கப் போராட்டாம், வெகுஜன இயக்கம், ஹிந்துத்துவ எதிர்ப்பு என்று தங்களது நடைமுறைக்கு சம்பந்தமில்லாத விசயங்களைப் பற்றி பேசுகிறார்கள். அப்படி என்ன விதமான போராட்டங்களை நடத்தி விட்டார்கள் என்று நான் கேட்பதை விடுங்கள் மக்களுக்கு தெரியும்.
நன்றி-செந்தில் 

Friday, February 25, 2011

அதிமுக கொடுக்க, தேமுதிக குடிக்க-மப்பு மக்களுக்கு



“போதையில் மிதக்கிறார்” என்று விஜயகாந்த் பற்றி விமர்சித்தவர் ஜெ. அதற்குப் பதிலடியாக, “இவரா ஊற்றிக் கொடுத்தார்?” என்று விஜயகாந்த் கேட்டார். இவையெல்லாம் பழைய விமர்சனங்கள். இதுவரை ரகசியமாக, அ.தி.மு.க.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவந்த தே.மு.தி.க. செல்வி.ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ந் தேதியன்று அதிகாரப்பூர்வமாகப் பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது.

இது போன வருஷம்  

     சென்ற பாராளமன்றதேர்தல் பிரசாரத்தின் பொது அவர் திருச்செந்தூர் கூட்டத்தில் பேசுகையில்...................

 திருச்செந்தூர் சூரனை வதம் செய்த ஊர். அதைபோன்று தி.மு.க.- அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் வதம் செய்யுங்கள். தே.மு.தி.க. வின் முரசு சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். ஒரு தடவை கொடுத்து பாருங்கள். நான் மாறாமல் இருக்கிறேன்.

மற்றவர்கள் மாட்டு சந்தையை போன்று பேரம் பேசுகிறார்கள். நான் உங்களை மட்டும் நம்பி வந்திருக்கிறேன். எதிர்கால சந்ததிக்கு நல்ல கட்சியை அடையாளம் காட்டுங்கள். அல்லது நீங்கள் நல்லது செய்யுங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன் என்றார் விஜயகாந்த்.

அதே போல் தூத்துக்குடி தேமுதிக வேட்பாளர் எம்.எஸ்.சுந்தரை ஆதரித்து பேசுகையில் ...........
தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் முதன்முதலில் அடியெடுத்து வைக்கிறது. தூத்துக்குடி தொகுதிக்கு வேட்பாளர் சுந்தர் முதன்முதலாக களம் இறங்கி உள்ளார். உங்கள் ஆதரவு எங்களுக்கு நிச்சயம் வேண்டும்.

கூட்டணி வைத்துக் கொண்டால் சுதந்திரமாக செயல்பட முடியாது என்பதால் நான் மக்களோடும், தெய்வத்தோடும் மட்டும் கூட்டணி வைத்துள்ளேன். நான் உங்களை நம்புகிறேன். நீங்கள் என்னை நம்புங்கள்.

மூப்பனார் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் அவர் சொல்லை நான் கேட்டிருப்பேன். காலையில் 'டிவி' பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அம்மா (ஜெ.,) முன்பாக ஒருவர் விரைப்பாக நின்றுகொண்டிருந்தார்.

அவர், ஐந்து ஆண்டுகள் வேட்டி துவைப்பார்; அடுத்த ஐந்து ஆண்டுகள் சேலை துவைப்பார். அவரது பெயரை நான் சொல்லாமலே உங்களுக்குப் புரியும். அந்த அளவுக்கு எல்லாம் நான் தன்மானத்தையும், சுயமரியாதையையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

அவரைப்போல நான் யார் முன்னும் நிற்க விரும்பவில்லை; மக்களாகிய உங்கள் முன் நிற்கிறேன். கருணாநிதியின் பின் நின்றுகொண்டு காங்கிரசார் எப்படி காமராஜர் ஆட்சியை ஏற்படுத்தமுடியும்.

ஆண்டாண்டாக பதவி வகிப்பவர்கள் வறுமையை ஒழிக்க என்ன செய்தார்கள்? ஜெயலலிதா தன்னை ஒரு துறவி என்று கூறுகிறார். அப்படியானால் அவருக்கு பதவி எதற்கு? வீட்டுக்குப் போக வேண்டியதுதானே? டாஸ்மாக் ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஜெயலலிதாதான்.

எனது வேட்பாளர்கள் படித்தவர்கள். அவர்கள் தவறு செய்தால் நானே அடிப்பேன். தமிழக மக்கள் சொல்பவரே பிரதமராக இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழகம் வளம் பெறும்.

நான் குடும்ப அரசியல் செய்வதாக கூறுகிறார்கள். எனது மைத்துனர் ஆரம்பத்திலிருந்தே என்னுடைய சினிமா கால்ஷீட்டை கவனித்து வந்தார். கட்சி தொடங்கிய பின்னரும் எனக்கு உதவியாக இருந்து வருகிறார். விவசாயம் செய்யும் விவசாயிக்கு உதவியாக அவரது மனைவி, மக்கள் வரக் கூடாதா?

நான் தேர்தலில் நான்கைந்து சீட்டு கேட்டதாக கூறினார். நான் யாரிடமும் கூட்டணிக்காக போகவில்லை. நான் நினைத்திருந்தால் எப்போதோ கோடீஸ்வரன் ஆகியிருக்க முடியும். ஆனால் நான் மக்களுக்கு நன்மை செய்யவேண்டும், அவர்களை அழகுப்படுத்தி பார்க்க வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன்.

எம்.ஜி.ஆரைப் பற்றி பேச எனக்கு அருகதை இல்லை என்று ஒரு நடிகர் கூறியுள்ளார். எம்.ஜி.ஆரைப் பற்றி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

எம்.ஜி.ஆரை தனது சினிமா படத்தில் காட்டினால்தான் அவருக்கு விசுவாசம் என்றில்லை. வேண்டும் என்றால் அந்த நடிகர் அவரது தலைவியிடம் சென்று எம்.ஜி.ஆர் படங்களை ஏன் சிறியதாக போடுகிறீர்கள் என்று கேட்கலாமே.

காங்கிரசை விமர்சிக்காதே என்கிறார்கள். தங்க ஊசி என்பதற்காக அதை எடுத்து கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா?

தே.மு.தி.க தொண்டர்கள் புற்றில் இருந்து வரும் ஈசல் போல வந்து கொண்டே இருப்பார்கள். தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தொண்டர்கள் இரவு-பகல் பாராமல் சுறுசுறுப்பாக செயல்பட்டு கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் விஜயகாந்த்.

இது இந்த வருஷம் 

தற்போது 41 சீட் என்றும் 46 சீட் என்றும் 1 ராஜ்யசபா சீட் என்றும் கணக்குகள் வெளிப்படுகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் (அநேகமாக அஷ்டமி, நவமி முடிந்தபிறகு)உண்மைக் கணக்கு, ஜெ.வும் விஜயகாந்த்தும் கேமராக்களுக்கு போஸ் கொடுக்கும்போதுதெரிந்துவிடும்.

 அதன்பின், உலகத் தலைவர்கள் பாணியில் ஒருவர் ஊற்றிக் கொடுக்க, இன்னொருவர் வாங்கிக் குடிக்கலாம்.

விஜயகாந்த் முதலில் நான் முதல்வர் வேட்பாளர் என்றார் ,தேசிய கட்சியுடன் கூட்டணி என்றார். பின்னர் மக்களோடும், தெய்வத்தோடும் கூட்டணி என்றார். நான் கை காட்டுபவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்றார். இப்போது அந்த தெய்வமே ஜெயா தான் என்கிறார் . 

என் அன்பு மக்களே புரிந்துகொள்ளுங்கள் ..................


Thursday, February 24, 2011

பதிவுலகில் :- தி.மு.க.வும் நடுநிலைவாதிகளும்

வணக்கம் பதிவர்களே ,

தமிழ்பதிவுலகில் சமீப காலமாக நடுநிலைவாதிகள் அதிகமாகி வருகிறார்கள். முதலில் நடுநிலைவாதி என்பவர் யார். நீங்களும் எப்படி நடுநிலைவாதி ஆகலாம் என்று பார்க்கலாம். நடுநிலைவாதி ஆவது என்பது மிகவும் எளிது. கலைஞரை திட்டி ஒரே ஒரு பதிவு எழுதினால் போதும். ஆயுளுக்கும் உங்களோடு ஒட்டிக் கொள்ளும் நடுநிலைவாதி பட்டம் உடனே கிடைத்துவிடும்.

பதிவு எழுதுகிற அளவிற்கு உங்களுக்கு நேரம் கிடைக்காவிட்டால் பரவாயில்லை. அதற்கு இன்னொமொரு சுலபமான வழி ஒன்று இருக்கிறது. ஏற்கனவே நடுநிலைவாதி பட்டம் பெற்றவர்கள் பதிவில் போய் ஒரு பின்னூட்டம் போட்டாலே போதும்

 இதில் குறிப்பிட பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நான் சென்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு தான் ஓட்டு போட்டேன் என்று ஒரு டிஸ்கியையும் போட்டுவிட வேண்டும். இந்த டிஸ்கியை போட்டுவிட்டால் நடுநிலைவாதி பட்டம் உங்களுக்கு கன்ஃபார்ம் ஆன மாதிரி தான்

இப்படி ஒட்டு போட்டதாக சொல்லிக் கொண்டு கலைஞரை பற்றி அவதூறாக எழுதி கொண்டு இருப்பவர்கள் உண்மையில் ஓட்டை போடுபவர்களாகவே இருக்கிறார்கள். இந்த ஓட்டை போடுபவர்களை உடன்பிறப்புகள் சிலர் விமர்சித்து எழுதினால் "அவர் பெரியவர், அவருக்கு மரியாதை கொடுக்கவும்" என்று அறிவுரை வரும். அடப்பாவிகளா, கலைஞர் எவ்வளவு மூத்தவர் அவருக்கு நீங்கள் மரியாதை கொடுத்தீர்களா. பெரியவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் 89 வயது பெரியவரை  என்னென்ன வசவு சொற்களை எல்லாம் பாவிக்கிறீர்கள்.



இவர்கள் ஏன் கலைஞரை வசைபாட நடுநிலை வேஷம் போட வேண்டும். ஏனென்றால் இவர்கள் தாங்கள் அ.தி.மு.க. அபிமானி என்று காட்டிக் கொண்டால் அவர்கள் சொந்த வீட்டிலேயே அவர்களை மதிக்கமாட்டார்கள். ஒரு அ.தி.மு.க. அனுதாபிக்கு சமூகத்தில் எவ்வளவு மரியாதை என்று பார்த்தீர்களா. இதை உணர்ந்தே பலர் நடுநிலைவாதிகள் ஆகிவிட்டனர்.

ஐயா பெரியவர்களே, தங்களை விமர்சிக்க வேண்டாம் என்று சொலவில்லை, அதிமுக தலைவி போல் அல்லாமல் 89 வயதிலும் உழைக்கும் கலைஞரை  இனிமேலாவது மரியாதை குறையாமல் விமர்சிபார்களா இந்த நடுநிலைவாதிகள் ?

நன்றி - உடன்பிறப்பு 

Tuesday, February 22, 2011

தமிழச்சி , சோபாசக்தி யார்? என்ன வேறுபாடு ?

யார் அந்த தமிழச்சி 
இவங்க தான் தமிழச்சி


யார் அந்த சோபாசக்தி 
இவர்தான் சோபாசக்தி 


என்ன வேறுபாடு


தமிழச்சி - பெண் 

சோபாசக்தி -ஆண் 



எத்தினி நாளைக்குதான் நானும் சீரியஸ்சாவே பதிவு எழுதுவது , இது நூறாவது பதிவு , ஆனா நூத்திஒன்னாவதும் இப்படிதான் இருக்குமுன்னு எதிர்பார்க்காதீங்க , எப்பூடி ......

Saturday, February 19, 2011

தி.மு.க. , அ.தி.மு.க , What is This?


தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த திங்களன்று அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்தக் கூட்டத் தொடரில், உடல் நலிவின் காரணமாக, மருத்துவர் ஆலோசனைப்படி கலந்துகொள்ள முடியாத நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளார் என்றும், அதற்கு அனுமதி வேண்டும் என்றும், கோரிய அந்தத் தீர்மானத்தை அரசியல் கண்ணோட்டமின்றி, ஆளும் தி.மு.க., ஏற்றுக்கொண்டு, அந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறிட ஒத்துழைப்புத் தந்தது.

தனக்கு உடல்நலம் சரியில்லை என்று ஒருவர் கூறும் போது, அதில் அரசியலை நுழைக்காமல், மிகவும் பெருந் தன்மையோடு தி.மு.க. நடந்துகொண்டு இருக்கிறது.

அந்தக் கூட்டத்தில் அவர் கண்டிப்பாகக் கலந்து கொள்ளவேண்டியது சட்ட ரீதியான நிலையெல்லாம் உண்டு. புதிய சட்டப்பேரவையில் தாம் காலடி எடுத்து வைக்கப் போவதில்லை என்று சபதம் செய்து இருக்கிறாரே - இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், ஒரு சட்ட ரீதியான அணுகுமுறையை அ.இ.அ.தி.மு.க. மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தபோது, அதற்குள்ளிருக்கும் விவகாரங்களுக்குள் போகாமல், தீர்மானத்திற்குத் தி.மு.க. ஒத்துழைப்புக் கொடுத்திருக்கிறது.

அன்று காலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பொதுவுடைமை இயக்க வீரர் தோழர் ப. ஜீவா அவர்களின் இல்லத் திருமணத்திற்குத் தலைமை தாங்கி உரையாற்றிய முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் கொள்கை வேறுபாடு வேறு - ஒருவரை ஒருவர் மதிப்பது என்பது வேறு என்று உயர்ந்த பண்பாடுபற்றி எடுத்துக் கூறினார்.

அதற்கு எடுத்துக்காட்டாக தந்தை பெரியாரும், மூதறிஞர் ராஜாஜியும் விளங்கினார்களே என்றும் சுட்டிக்காட்டினார்.

அன்றைக்கே சட்டப்பேரவையில்- காலையில் திருமணத்தில் கூறிய அந்தப் பண்பாட்டுக்கு இலக்கணமாக - அ.இ.அ.தி.மு.க. கொண்டுவந்த அந்தத் தீர்மானத்தை நிறைவேறும்படிச் செய்தார்.

அ.இ.அ.தி.மு.க. என்றால் எப்படி நடந்துகொண்டி ருக்கும் என்பது வெளிப்படை! உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், திரு. முரசொலி மாறன் அவர்கள் ஒரு குறிப் பிட்ட மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கப்படு வதற்குக்கூட முட்டுக்கட்டை போட்டவர்கள் யார் என்று தெரியுமே!

ஆன்டன் பாலசிங்கத்துக்கு மருத்துவ உதவி இந்தியாவுக்குள் எங்கும் செய்யப்படக்கூடாது என்று கறாராகக் கூறிய மனிதாபிமானிகள் ஆயிற்றே...!

அத்தகையவர்களுக்கு நல்ல புத்தியைக் கற்பிக்கும் வகையில்,

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

என்ற குறள்மொழிக்கு ஏற்ப, கலைஞர் தலைமையிலான தி.மு.க. நடந்துகொண்டிருக்கிறது என்பது சாதாரண மானதல்ல!

பொதுவாழ்வில் கலைஞர் அவர்கள் காட்டிய முன்மாதிரியை மற்றவர்களும் தொடர்ந்தால், அது தந்தை பெரியார் பக்குவப்படுத்திய பண்பாட்டுக்குப் பெருமை சேர்த்ததாகவே அமையும்.

இந்த நேரத்தில், தி.மு.க.வின் இன்னொரு பெருந் தன்மையான செயல்பாட்டை எடுத்துக்காட்டுவதும் அவசியமாகும்.

தேனி மாவட்ட பஞ்சாயத்துக்கு மொத்தம் பத்து மாவட்டக் கவுன்சிலர்கள்; உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. 6, அ.இ.அ.தி.மு.க. 3, ம.தி.மு.க. ஒரு இடம் என்றவாறு கைப்பற்றின.
தேனி மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டதாகும். தி.மு.க. வுக்கு அறுதிப் பெரும்பான்மை இருந்தும், தாழ்த்தப்பட்ட பெண் கவுன்சிலர் யாரும் இல்லை. இதனால் தலைவர் பதவிக்கு தி.மு.க. போட்டியிட முடியாத நிலை.

அதே நேரத்தில், அ.இ.அ.தி.மு.க.வில் 2 தாழ்த்தப்பட்ட பெண் கவுன்சிலர்கள் இருந்தாலும், வெற்றி பெறுவதற்கான எண்ணிக்கைப் பலம் இல்லை. மாவட்டத் துணைத் தலைவர் பதவிக்கு தி.மு.க.வைச் சேர்ந்த வீரராகவன் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.

ஆனால், தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட முடியாத இழுபறி நிலை; மூன்று முறை தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தோழர் திருமாவளவன் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு முதலமைச்சர் கலைஞர் அவர்களைக் கேட்டுக்கொண்டார். மானமிகு கலைஞர் அவர்களோ இந்தப் பிரச்சினையை வெறும் அரசியல் கண்கொண்டு பார்க்காமல், தி.மு.க. உறுப்பினர்களை அ.இ.அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு பணித்தார்.

4 ஆவது முறையாக மாவட்ட ஆட்சியர் ஹர்சகாய் டீனா தலைமையில் தேர்தல் நடைபெற்றது (19.12.2006). அ.இ.அ.தி.மு.க. வேட்பாளராக ரமாதேவி மட்டும் மனு தாக்கல் செய்திருந்தார்.

தி.மு.க. ஆதரவு அளித்த நிலையில், அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க தகவல் ஒன்று உண்டு. அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் வராததால், வாக்களிக்கவும் முடியவில்லை.

தி.மு.க.வின் பொறுப்புணர்ச்சியையும், அ.இ.அ.தி.மு.க. வின் பொறுப்புணர்ச்சியையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

தி.மு.க. இருந்த இடத்தில் அ.இ.அ.தி.மு.க. இருந் திருக்குமேயானால், கலைஞர் அவர்கள் காட்டிய பெருந்தன்மையை செல்வி ஜெயலலிதா காட்டியிருப்பாரா என்பதை எவரும் சிந்தித்துப் பார்க்கட்டும்!

அரசியலில் தி.மு.க. காட்டிய இந்தக் கண்ணியம் மற்றவர்களால் பின்பற்றத் தகுந்ததாகும்.

நன்றி:- விடுதலை 

Thursday, February 17, 2011

இளம் வயது இந்தியரை ஈர்க்கும் இணையச் சூழல்


அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் இணையத்தைப் பயன்படுத்தும் பயனாளர்கள் எண்ணிக்கை மூன்று மடங்காக உயரும் என்று இது குறித்து ஆய்வு நடாத்திய பாஸ்டன் கன்சல்டிங் குரூப் தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் இணைய பயனாளர்கள் எண்ணிக்கை 8.1 கோடியாக உள்ளது. இது 2015ஆம் ஆண்டில் 23.7 கோடியாக உயரும் என்று ‘இணையத்தின் புதிய 100 கோடி’ என்று தலைப்பில் ஆய்வு செய்த பாஸ்டன் கன்சல்டிங் குரூப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் பிரேசில், இரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 1.2 பில்லியனாக (1 பில்லியன் = 100 கோடி) உயரும் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 

“இந்த 4 நாடுகளிலும் இளம் வயதினர் மிக அதிகமாக இணையச் சூழலிற்கு ஈர்க்கப்படுகிறார்கள். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆண்டிற்கு 20 விழுக்காடு அதிகரித்து வருகிறது என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது

உலக நாடுகளில் தகவல் தொடர்பு அயல் பணிக்கு (Business Process Out-sourcing - BPO) மிகவும் உகந்த நாடாக இந்தியா உள்ளதென, இது தொடர்பான ஆய்வு மேற்கொண்ட ஏடி கியர்னி நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

2011இல் உலக சேவைகள் இட குறியீடு (Global Services Location Index - GSLI) என்ற ஆய்வை, கணினி அயல் பணி செய்யும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏடி கியர்னி நிறுவனம் நடத்தியுள்ளது. தனது ஆய்வில் கிடைத்த விவரங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ள ஏடி கியர்னி நிறுவனம், “இந்தியாவே முதன்மை நாடாக உள்ளது. 

அயல் பணித் தேவை எப்படிப்பட்டதாக இருப்பினும் அதற்குரிய பணியாளர் சக்தியை அளிக்கும் நாடாகத் திகழ்கிறது. வேகமான போக்குவரத்து வசதிகள்(!), ஆழமான திறன் உள்ளமை ஆகியவற்றால் உலக அளவில் அளிக்கப்படும் அயல் பணி வாய்ப்புகளை இந்தியா பெறுகிறது” என்று கூறியுள்ளது.

உலக சேவைகள் இடக் குறியீட்டின் படி, இரண்டாவது இடத்திலுள்ள சீனாவை விட 0.5 புள்ளிகள் அதிகம் பெற்றும், மலேசியாவை விட 1 புள்ளி அதிகம் பெற்றும் முதலிடத்தில் இந்தியா உள்ளது என்று கூறியுள்ள ஏடி கியர்னி ஆய்வு, இந்தியா முதலிடத்தில் உள்ளதற்குக் காரணம் அதன் ஈடிணையற்ற திறன் கொண்ட பணியாளர்களும், பணியை நிறைவேற்ற ஆகும் குறைந்த செலவும் ஆகும் என்று கூறியுள்ளது.

தகவல் தொழில் நுட்ப அயல் பணியில் உருவாகும் போட்டிகளை சமாளிக்கவும், அதனையும் தாண்டி தன்னை நிரூபிக்கவும், அத்துறையில் புதிதாக எழும் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் திறனும் இந்தியாவை அயல் பணித் துறையில் தலைமையிடத்தையும், மிகச் சிறந்த நாடாகவும் உயர்த்தியுள்ளது என்று கூறியுள்ளது.

ஆங்கில மொழித் திறன் மட்டுமின்றி, அயல் பணியாற்ற உகந்த திறனைப் பெறக்கூடிய கல்வி நிறுவனங்களும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான தகுதியுடைய பணியாளர்களை உருவாக்குவதும் இந்தியாவை இத்துறையில் தனித்த நாடாக முன்னிறுத்துகிறது என்று கூறியுள்ள அந்த ஆய்வறிக்கை, தாங்கள் அளிக்கும் சேவையில் தனி முத்திரை பதிக்கும் அளவிற்கு மதிப்பை உயர்த்தும் நடவடிக்கைகளிலும் இந்தியாவின் அயல் பணி நிறுவனங்கள் உள்ளதெனவும், அதில் இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகியன முன்னணியில் உள்ளதாகவும் கூறியுள்ளது.

அயல் பணியில் உலகின் முதல் பத்து நாடுகளில் முதலிடத்தில் இந்தியாவும், இரண்டாவது இடத்தில் சீனாவும், மூன்றாவது இடத்தில் மலேசியாவும், இந்தோனேஷியா 5வது இடத்திலும், தாய்லாந்து 7வது இடத்திலும் வியட்நாம் 8வது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 9வது இடத்திலும் உள்ளன.

கால் செண்டர்களில் சீனா பெரிதாக பங்கு பெறவில்லை என்றாலும், அதிக திறன் தேவைப்படும் பகுப்பாய்வு, உயர் தகவல் தொழில் நுட்பப் பணிகளில் மேற்கத்திய நாடுகளுக்கு அது போட்டியாக வளர்ந்து வருகிறது என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.

நன்றி-தமிழ் 

Wednesday, February 16, 2011

உங்களுக்கு இந்த நோய் இருக்குமா?


அதிக நேரம் கணிப்பொறிக்கு முன்னால் கண் விழித்திருப்பவர்களை பல விதமான நோய்கள் பிடிக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று கண் உலர்தல். இமைக்கக் கூடச் செய்யாமல் கணினியே கதியெனக் கிடைக்கும் மக்களை, இந்த நோயை விரும்பி அழைப்பவர்கள் பட்டியலில், சேர்த்துக் கொள்ளலாம்.

கணிப்பொறிக்கு முன்னால் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்பவர்களின் கண்கள் அதிக அழுத்தத்தைச் சந்திக்கின்றன. இத்தகைய சூழலில் வேலை செய்யும் கண்களுக்கு டிரை ஐ சிண்ட்ரோம் எனப்படும் கண் உலர்தல் நோய் விரைவிலேயே வந்து விடுகிறது.

அதன் விளைவுகளாக கண் எரிச்சல், கண் அரிப்பு, வலி போன்ற இணைப்புகள் கூடவே வந்து விடும். என்கின்றனர் மருத்துவர்கள்.

கண்ணில் இருக்கும் ஈரப்பதம் குறைந்து போவது தான் டிரை ஐ சிண்ட்ரோம் அல்லது கண் உலர்தல் நோயின் ஒரு வரி விளக்கம். இது எளிதான நோய் எனக் கருதி விட்டு விட்டால் இரும்பை துரும்பு அரித்து தீர்ப்பது போல இந்த நோய் நிரந்தரமாகவே கண் பார்வையைப் பறித்துக் கொள்ளும் அபாயம் உண்டு.

கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் வலி, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு இந்த நோய் இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எச்சரிக்கையாய் இருத்தல் பெரும் இன்னலைத் தீர்க்கும்.

பெருநகரங்களில் வாழும் மக்கள் தான் இந்த கண் உலர்தல் நோயினால் அதிகம் பாதிப்படைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் அவர்கள் தான் அடிக்கடி கணினியே கதியெனக் கிடைக்கிறார்கள்.

கணினியில் குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும் போது குளிர்க்காற்று படும் இடத்தில் நேரம் இருப்பது கூட கண் உலர்தலுக்குக் காரணமாகி விடுமாம். கண் உலர்தலிலிருந்து தப்பிக்கும் சுலப வழிகள் கண்ணை அடிக்கடி இமைத்துக் கொண்டே இருப்பதும், தொடர்ந்து கணினியைப் பார்க்காமல் இருப்பதும் தான்.

கணினி பயன்படுத்தும் போது அடிக்கடி கண்ணை இமைத்துக் கொண்டே இருப்பது கண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கும். குளிர் கண்ணாடிகளை அணிந்து பயணம் செய்வதும் கண்ணைப் பாதுகாக்கும்.
நன்றி -பார்த்தி

Tuesday, February 15, 2011

ராசா போல் ஜெயலலிதா கைது செய்யபடுவாரா ?



ஆ. இராசாமீது சி.பி.அய். வழக்குத் தொடர்ந்தது போலவே அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாமீது சி.பி.அய்.வழக்குத் தொடரவில்லையா?

தேர்தலை முன்னிட்டு இன்று அவர் ஆறு மாதம் வழக்கைத் தள்ளிவைக்க கேட்கிறார் .
அவர்மீது சி.பி.அய். தொடர்ந்த வழக்கிற்கு வயது 11 ஆண்டுகள் ஆயிற்றே! அந்த வழக்கின் அடிப்படையில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டாரா?

வெளிநாடு ஒன்றிலிருந்து அவருக்குப் பிறந்த நாள் பரிசாக மூன்று லட்சம் அமெரிக்க டாலர்கள் (77 லட்சத்து 52 ஆயிரத்து 501 ரூபாய் மதிப்பு) அனுப்பப்பட்டன. முதல் அமைச்சர் என்பவர் - அரசு ஊழியர் என்பதால் அந்தத் தொகையை அரசுக் கருவூலத்தில் செலுத்தியிருக்க வேண்டும் என்பதே சட்டத்தின் நிலை - ஆனால் இவர் என்ன செய்தார்? தன் கணக்கில் வரவு வைத்துக் கொண்டார்.

இது சம்பந்தமாக சி.பி.அய். வழக்குத் தொடர்ந்தது. சம்மனும் அனுப்பியது. அதன் அடிப்படையில் சி.பி.அய். அலுவலகத்திற்கு அம்மையார் செல்லவில்லையா?

முன்னாள் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா மாதம் ஒரு ரூபாய் சம்பளம் பெற்று வருவதாகச் சொன்னதுண்டு. அப்படிச் சொன்னவர் 1991 முதல் 1996 முடிய முதல் அமைச்சராக இருந்த அந்தக் காலகட்டத்தில் அவரின் சொத்து மதிப்பு ரூ.66 கோடியே 65 லட்சம் ரூபாய் அளவுக்கு வளர்ந்தது எப்படி என்ற முறையில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்ததே (5.7.1997) நினைவிருக்கிறதா?

14 ஆண்டுகள் ஆகப் போகின்றன. போதிய ஒத்துழைப்பை அம்மையார் கொடுக்காததால் அனுமார் வால்போல நீண்டு கொண்டு போகிறது.

வழக்கு விசாரணையை ஏதாவது காரணம் சொல்லி தள்ளிக்கொண்டே போகும் சாதனையைத்தான் இன்று வரை செய்து கொண்டு இருக்கிறார்.

1997இல் 259 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 2001இல் மீண்டும் அம்மையார் ஆட்சிக்கு வந்தார். வழக்கில் குளறுபடிகள் நடந்த நிலையில், பேராசிரியர் தி.மு.க பொதுச் செயலாளர் க. அன்பழகன் அவர்கள் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கோரிக்கையை ஏற்று வழக்கினை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அந்த உத்தரவில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து - எந்த அளவு செல்வி ஜெயலலிதா நீதியை மதிக்கக் கூடியவர் என்பதற்கான அத்தாட்சியாகும்.

நீதிபதிகள் எஸ்.என். வரியவா, எச்.கே. சேமா ஆகியோர் கூறியது என்ன?

1) எங்களின் கருத்துப்படி மனுதாரர் (க. அன்பழகன்) நியாயப் பூர்வமான, கருத்தில் கொள்ளத்தக்க அய்யப்பாடு களை எழுப்பி, அதாவது நீதி திசை திரும்பியும், பாரபட்சமாகவும் செல்வதால் எங்களுடைய குறுக்கீடு அவசியம் தேவை என்ற கோரிக்கையை வைத்துள்ளனர் என்பதுதான் உண்மை.

2) ஜெயலலிதா தலைமையிலான அரசு 1997 (சி.சி.எண் 7) வழக்கில் தீய நோக்கத்தோடு, வேண்டு மென்றே அரசு வழக்குரைஞரின் உதவியோடு நேர்மை யான, சுதந்திரமான விசாரணையைக் குலைப்பதற்காகத் தலையிட்டுள்ளது.

3) தங்கள் முந்திய வாக்குமூலங்களை மாற்றிக் கூறிய சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவோ, மறு விசாரணை செய்யவோ முயற்சிக்காமல், அரசு வழக்குரைஞர் கடமையிலிருந்து தவறியிருப்பது, அரசு வழக்குரைஞர் துறை, ஜெயலலிதா உட்பட குற்றம் சாற்றப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதற்கு வழியமைத்துக் கொடுக்க இரகசியமாக முடிவு செய்து செயல்பட்டுள்ளது. இதன் மூலம் நீதி நிருவாகத்தில் தலையிட்டுள்ளது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாகிறது.

4) முதல் அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருக்கும்போது, இந்தியக் குற்றவியல் சட்டம் 313 ஆவது பிரிவின்கீழ் அவர் நேரில் ஆஜராகாமல் இருப்பதற்கு அரசு வழக்குரைஞர் ஒப்புதல் அளித்திருப்பது, அரசு வழக்கறிஞர் சுதந்திரமாகச் செயல்படவில்லை; முதல் குற்றவாளியான ஜெயலலிதாவின் விருப்பப்படியே செயல்படுகிறார் என்பதைத் தெரிவிக்கிறது.

5) முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் சட்ட விரோதத் தலையீடும், குற்றம் சாற்றப்பட்டவருக்கு அரசு வழக்குரைஞர் சட்ட விரோத உதவியளித்ததும் இந்திய அரசியல் சட்ட அமைப்புச் சட்டத்தின் 21ஆம் பிரிவையும், இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 313ஆம் பிரிவையும் மீறிய செயலாகும். எல்லாவற்றையும்விட இது குற்றவியல் நீதிமுறையைக் குலைக்க மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சியாகும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனரே!


இப்படி நீதித்துறையை சட்ட அமைப்பு முறையைக் காலில் போட்டு நசுக்கிய அம்மையார்தான் ஆ. இராசாமீதான கைதுபற்றி நீட்டி முழங்கியுள்ளார்.

காலதாமதமான நடவடிக்கைபற்றி இவர் பேசலாமா? தம்மீது உள்ள வழக்கை 14 ஆண்டுகளாக நிலுவையில் நிறுத்தக் கூடியவர் இதுபற்றியெல்லாம் கருத்துக் கூறத் தகுதி உடையவர்தானா?

காங்கரஸ் பற்றியும் குறை கூறும் இவர் ஒரு மாதம் முன்பு என்ன பேசினார் என்று தான் அனைவருக்கும் தெரியுமே...  

இவரைக் கூட்டணியின் தலைவராக ஏற்கத் துடிக்கும் அரசியல் கட்சிகளும் நிதானமாக சிந்திக்க வேண்டும்; பொது மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோளாகும்.
நன்றி-தமிழ் 

Monday, February 14, 2011

அதிர்ச்சியான தற்கொலை காரணங்கள்...


இந்த மாத செய்திகள் என்னை ரொம்பவே காயப்படுத்திவிட்டன.

சென்ற ஆண்டில் மட்டும் பின்னலாடைத்தொழிலில் 11,500 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி நடக்கும் திருப்பூர், நாட்டின் 65 சதவிகித சந்தையைத் தன்னிடம் வைத்திருக்கிறது. இந்த ஆரோக்கியமான புள்ளிவிபரம் ஒருபுறம் இருந்தாலும் - ஒரு ஆண்டில் நடக்கும் தற்கொலைகள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. சென்ற ஆண்டில் மட்டும் 491 பேர் திருப்பூரில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தான் மிகவும் சோகத்தில் இருப்பதாகவும் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு வேதனையில் இருப்பதாகவும் மாணவி ஒருத்தி பேஸ்புக்கில் தெரிவித்திருக்கிறாள். 

‘முடிவெடுத்துவிட்டால் தற்கொலை செய்துகொண்டுவிடு’ என்று பேஸ்புக் மூலம் சிலர் வலியுறுத்தியதால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டாள்.

திண்டுக்கல்லில் மார்க் குறைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை பெசண்ட்நகரைச் சேர்ந்த ஆல்காட் குப்பத்தைச் சேர்ந்த மாணவி திவ்யா.இவர் கடந்த மாதம் 31ஆம் தேதி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார்.இது தொடர்பாக அக் கல்லூரியைச் சேர்ந்த நாலு பேராசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை புளியந்தோப்பில் ஆசிரியை திட்டியதால் மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டார். இதனால் மாணவி பயின்ற பள்ளி முற்றுகையிடப்பட்டது. இச்சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு

கும்பகோணம் அருகே, பள்ளி மாணவி தற்கொலைக்கு காரணமான, பள்ளி 
தலைமையாசிரியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

யோசிக்கும் வேளையில், தனிப்பட்ட முறையில் யாரையும் குற்றம் சாட்டத் தோன்றவில்லை எனக்கு. ஒட்டு மொத்த சமுதாயமே சீரழிந்துகொண்டு இருக்கிறபோது யாரைக் குற்றம் சாட்டுவது?
டி.வி. சீரியல்கள் செய்கிற பிரெயின்வாஷ்தான் இதற்கு முக்கியக் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துபோகிற அல்லது தலையில் கெரஸினை ஊற்றி நெருப்பு வைத்துத் தற்கொலை செய்துகொள்கிற சீன் இல்லாத சீரியல் ஏதாவது ஒன்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

அந்த ஆசிரியை சற்றுக் கடுமையாகவே திட்டிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதற்காக ஒரு சின்னப் பெண்ணுக்குத் தற்கொலை எண்ணம் தோன்றுமா? வீட்டுப் பாடம் எழுதி வரவில்லை என்று கோபித்துக்கொண்டதற்கே ஒரு சின்னப் பெண் தற்கொலை அளவுக்குப் போயிற்றென்றால், இது வளர்ந்த பின்னால் வாழ்க்கையை எப்படி எதிர்கொண்டிருக்கும்? போராட்டங்கள் நிறைந்ததுதானே வாழ்க்கை? அதைத் தைரியமாக எதிர்கொள்ள அந்தக் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்காதது யார் தவறு? பெற்றோரின் தவறா? பள்ளிக்கூடங்களின் தவறா? இந்தச் சமுதாயத்தின் தவறா? ஊடகங்களின் தவறா?
நமக்கு நல்ல படிப்பு, செல்வம் எல்லாம் கிடைத்தவுடன் சகிப்புதன்மை, பொறுமை எல்லாம் பழங்கால பொருளாகிவிட்டது . சின்ன விஷயங்களுக்கும் கூப்பாடுபோடுகிறதை விட்டு அறிவோடு சிந்திக்கதெரியாதவர்களாக இன்றைய பெற்றோர்கள் மாறிவிட்டனர் .
பெரும்பாலான பெற்றோர் எதிர்பார்ப்பதைத் தான் பள்ளிகள் செய்ய முயலுகின்றன.. "என் குழந்தைக்கு படிப்பு சொல்லித்தரதை விட அவர்கள் மனவலிமையை அதிகப்படுத்தும் பள்ளி வேணும் " அப்படின்னு சொல்ல எத்தனைப் பெற்றோர் தயாரா இருக்காங்க‌?

தேர்வில் தோற்றால் தற்கொலை; காதலில் தோற்றால் தற்கொலை; வேலை கிடைக்கவில்லை என்றால் தற்கொலை; போட்டியில் பரிசு கிடைக்கவில்லை என்றால் தற்கொலை; அடுத்தவன் அவமானமாகப் பேசிவிட்டான் என்றால் தற்கொலை... தற்கொலை, தற்கொலை, தற்கொலை..! எங்கே போய்க்கொண்டிருக்கிறது நாடு?

இனி வருகாலங்களை பார்த்தால் இப்படி கூட செய்திகள் வருமோ ?

1.உணவில் உப்பு இல்லை என்று கணவன் தற்கொலை.


2.கணவன் எடுத்து வந்த சேலையின் கலர் பிடிக்கவில்லை என்று மனைவி தற்கொலை .

3.காதலன் காதலர் தின வாழ்த்து சொல்வில்லை என்று காதலி தற்கொலை.

4.காதல் முறித்த பின்னர் முத்தங்களை திருப்பி கொடுக்காததால் காதலன் தற்கொலை.

5.பள்ளி ஆசிரியர் காபி அடிக்க விடாததால் மாணவன் தற்கொலை .

6.தேர்வுவில் பேனா எழுதாததால் மாணவி தற்கொலை.

7.பஸ்சில் அமர இடம் இல்லாததால் கீழே குதித்து பயணி தற்கொலை .

8.தலைவர் திரைப்படம் பிடிக்கவில்லை என்று ரசிகர் தற்கொலை.

9.முதல்வருக்கு முட்டு வலி என்று என்று தொண்டன் தற்கொலை .

10.டைம் பாஸ் ஆகவில்லை என்று பெண் தற்கொலை. 

11.முகநூலில் தன பதிவிற்கு பின்னுட்டம் வராததால் வாலிபர் தற்கொலை.

12.வலைபதிவில் பதிவுக்கு ஒட்டு கிடைக்காததால் வலை பதிவர் தற்கொலை.(புரியும் என்று நினைக்கிறேன் )



இந்த பதிவையும் கொஞ்சம் பாருங்கள் : - 
ஒரு நபருக்கு தற்கொலை உணர்வு தோன்றும் போது இந்த வலைக்கு செல்லாம் http://www.befrienders.org/int/tamil/index.asp?PageURL=suicidal.php

Saturday, February 12, 2011

காதலர் தினத்தில் காதலர்களின் கவனத்திற்கு..!!


    வணக்கம் அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

என்னடா இது காரசாரமான பதிவினை விடுத்து காதலைப்பற்றி போட்டுள்ளாரே என்று பார்க்கிறீர்களா ..?? ஆம். நாளை மறுநாள் காதலர் தினம் என்றதும் என் மனம் குதூகலத்துடன் 24 வருடம் பின்னோக்கி நகர ஆரம்பித்து விட்டது.

யோசனை வேண்டாம்.நானே சொல்கிறேன் . நானும் எனது மனைவியும் காதலிக்க ஆரம்பித்து 24 வருடங்களாகிவிட்டது .நான் ஊட்டியில் ஏழாம் வகுப்பு படிக்கும்பொழுது தூரத்து உறவான சாந்தி அன்னூரில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்.எங்கள் சொந்தக்கார பாட்டியின் இறப்பு எங்கள் சந்திப்பிற்கு அடித்தளமிட்டது. அதில் இருந்த சில பெரியோர்கள் இது உனக்கொரு மாமன் பொன்னாகுது என்று எங்களுக்குள் காதல் விதைகளை தூவி விட்டனர்.அன்று முதல் "puppy love" என்று சொல்லக்கூடிய காதல் எங்களை தொற்றிக்கொண்டது.ஆனால் பின்னர் திருமணம் என்று வந்தவுடன் பிரச்சினைகள் மற்ற காதல்களைப்போலவே தான். காரணம் அவரின் படிப்பு B.E, நானோ +2தான். காதலித்தாலும் சாந்தி படிப்பில் படு சுட்டி. +2 வகுப்பில் பள்ளியில் முதலிடம் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர் என்றாலும் அவரது படிப்பை பார்த்து பல அமெரிக்க மாப்பிள்ளைகளும் இன்ஜினியர் மாப்பிள்ளைகளும் வந்த வண்ணம் இருந்தன.

 காதலிலும் ஜெயித்து வாழ்க்கையிலும் ஜெயிக்க் முடியாதா..?(This happen before BOYS movie) என்ற கேள்வியுடன்  என் தூரத்து உறவான சாந்தியை  சுமார் பதினான்கு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டடேன். பல போராட்டங்களுக்கு பிறகு பெற்றோர்களது சம்மதத்துடன் என்னை கை பிடித்தார் சாந்தி.  எங்களுடைய காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்த போதிலும் அவர்களுடைய சம்மதத்திற்க்காக காத்திருந்து பெற்றோர்களின் மனம் கோணாமல் பின்புதான் திருமணம் செய்து கொண்டோம்.. பிறகு அருகில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி கொண்டிருந்தார் . மேற்படிப்பு படிக்க ஆசை பட்டவரை M.E படிக்க வைத்தோம்.

 M.E இறுதியாண்டு படிக்கும் பொழுதே அகில உலக கருத்தரங்கில் கலந்து கொண்டு தனது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்த இவருக்கு அமெரிக்க நிறுவனம் ஓன்று சம்பளமாக சுமார் மூன்று லட்சம் ரூபாய்க்கு வேலை வாய்ப்பு அளித்தது, ஆனால் என் மனைவியோ அந்த வாய்ப்பை நிராகரித்து இந்தியாவிலேயே எங்கள் குடுப்பதினரோடு எங்கள் கிராமத்தில் இருப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி என்று கூறிவிட்டார் . 
                         (நிக்சிதா -  Our family friend & Avinashi union vice chairman's daughter)

சரி எங்களை விடுங்கள் . நாங்கள் இன்னும் எங்களுடைய கூட்டுக்குடும்பத்தில் 24 வருட காதலர்களாகவும் 10 வருட தம்பதியராகவும் இருப்பதால் தான் காதலை பற்றி இந்த பதிவினை போட தகுதியுடன் கூடிய ஆவல் ஏற்பட்டது.

பொதுவாக காதல் பிரச்சனை வீட்டில் தெரியவந்தவுடன் கண்டிப்பாக பிரச்சனைகள் வரவே செய்யும்.குழந்தையாக பாவித்துக் கொண்டிருப்பவர்கள் திடீரென மிகப்பெரிய முடிவினை அவர்களாகவே எடுக்கும் பொழுது கோபம், ஆத்திரம் எல்லாம் பெற்றவர்களுக்கு ஏற்படுவது நியாயமே. 

'ஏன் நமது நியாயமான காதல் ஆசையை, ஆர்வத்தைப் புரிந்து கொள்ளாமல் பெற்றவர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்?' என சிந்திக்காமல், அவர்களது கோபம் நியாயமே, அது தீர்வதற்கு சிறிது நேரம் கொடுக்கலாம் என காத்திருங்கள். இந்திரா காந்தி படிக்கும் காலத்தல் பெரோஸ் காந்தியைக் காதலித்தார். விஷயம் பிரதமராக இருந்த நேருவின் காதுகளுக்குப் போனது. 'நான்கு வருட காலம் இருவரும் சந்திக்காமல், பேசிக்கொள்ளாமல், கடிதம் எழுதாமல் இருங்கள். அதற்குப் பின்னர் இருவருக்கும் காதல் இருப்பதாகத் தெரிந்தால் திருமணம் முடித்து வைக்கிறேன்' என்று நிபந்தனை விதித்தார். 

இருவரும் காதலுக்காக சொன்ன சொல்லைக் காப்பாற்றிக் கிடந்தார்கள். அவர்கள் இருவரும் அன்போடு காதலில் காத்துக் கிடந்திருப்பதைப் பார்த்த நேரு, விரைவிலேயே இருவருக்கும் திருமணம் முடித்து வைத்தார். பெற்றோர்களது கோபம் தீரும் வரை காத்திருங்கள். காத்திருந்தால் கண்டிப்பாக நல்லதே நடக்கும். பெற்றோர், காதல் இரண்டும் மனிதனுக்கு இரு கண்களைப் போன்றது.அதனால் இரண்டுடனும் சேர்ந்து வாழ்வதற்காக முடிந்தவரை கஷ்டப்பட்டு சம்மதம் பெறுதலே நல்லது. 

சில பெற்றோர்கள் காதலுக்கு ஆதரவாகவே இருப்பார்கள். ஆனால், இந்த காதலுக்கு இசைவு தெரிவித்தால் அடுத்ததாக தம்பி, தங்கைக்கு திருமணம் முடிப்பதில் சிக்கல் ஏற்படும் என பயப்படுவார்கள். அவர்களது சந்தேகம், பயம் நியாயமானதே. அதனால் உங்களது காதலால் குடும்பத்தில் மற்றவர்களது எதிர்காலத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என உறுதியளிக்க வேண்டியது உங்கள் கடமை.காதல் திருமணங்கள் என்பது இப்பொழுது வெகு சகஜமாக நடைபெறுகின்றன. இது சமூக குற்றம் அல்ல என்பதை எடுத்துச் சொல்லி அவர்களது அன்பினைப் பெற்று அதன் பின்னர் திருமணம் முடிப்பதே நல்லது. 

உண்மையும், நேர்மையும் கலந்த காதல் என்றும் அழிவதில்லை, தோற்பதில்லை என்பார்கள். காதலின் அடிப்படையும் கூட அதுதான். ஒரு பெண் ஒரு ஆணை ஏன் காதலிக்க முடிவு செய்கிறாள்? இவன் நம் மனதுக்கு ஒத்து வருபவனாக இருக்கிறான், இறுதிவரை உடன் வருவான், துயரங்களில் துணை இருப்பான், இவனின் சினேகிதம் ஆறுதல் தருகிறது என்ற எண்ணத்தில்தான். இது ஆண்களுக்கும் பொருந்தும். இந்த எண்ணங்கள் எந்தக் கோட்டில் உடைகிறதோ அந்த நொடியே அந்தக் காதலின் அஸ்திவாரம் தவிடு பொடியாகி விடுகிறது.

முழுமையான புரிந்து கொள்ளுதல், பாதுகாப்புணர்வு, முழுமையான நம்பிக்கை, உண்மையான நேசம், இன்ன பிறதான் ஒரு காதலை உயிர்ப்புடன், துடிப்புடன், உண்மையான காதலாக நீட்டிக்க வைக்கும்.உணர்வுகளுக்கு அங்கு மதிப்பு இருக்க வேண்டும். பாசத்திலும், நேசத்திலும் பாசாங்கு இருக்கக் கூடாது. வெறும் வார்த்தையாக மட்டுமல்லாமல், உண்மையான செயல்பாடுகள் காணப்பட வேண்டும். உன் முன்னேற்றத்திற்கு நீ இப்படிச் செய்யலாம், இதை நீ செய்தால் சரியாக வரும். உனது உயர்வுக்கு இது உதவும் என்ற அறிவுரைகளில் உண்மையான காதலைக் காணலாம்.

காதல் என்றால் கூடவே எதிர்ப்பும் பின்னாலேயே நிற்கும். அதையும் உணர்ந்து, அதை எப்படி தாண்டுவது என்பதில் பாசிட்டிவான சிந்தனை இருக்க வேண்டும். அவசரம் காட்டுவது அலங்கோலத்திற்கு வழி வகுத்து விடலாம்.உண்மையான காதல், மரியாதை, நம்பிக்கை, பாசப் பிணைப்பு ஆகியவற்றை பலமாக கொண்ட ஒரு அடித்தளமாகும். ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவும் சக்திதான் காதல்.

எனவே, உண்மையாக காதலிப்போம், உண்மையான காதலைக் காதலிப்போம், காதலைக் கொண்டாடுவோம்

Friday, February 11, 2011

இன்று கலைநிதிக்கு முதல் பிறந்தநாள்


இன்று எங்கள் மகன் கலைநிதிக்கு முதல் பிறந்த நாள் .  பலருடைய
வாழ்த்துக்களுடன் இந்த நாள் இனிதே ஆரம்பமானது . 

காலையில் குடும்பத்தினர் அனைவரும் மிக மகிழ்ச்சியாக அந்த தருணத்தை கொண்டாடினோம்
.
பிறகு ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்க்கு சென்று இன்று இரவு விருந்தை அவர்களுடன் அருந்தலாம் என்று என் வீட்டு பெரியோர்கள் ஆலோசனை கூறினார்கள். சரி என்று சொல்லி ஆனால் ஒரு சிறு நிபந்தனையுடன் நாங்கள் ஒப்புக்கொண்டோம் . 

ஆதரவற்றோர் இல்லத்திற்கு பிறந்த நாள் விழா கொண்டாட செல்லும்பொழுது கலைநிதியை அழைத்துக்கொண்டு செல்ல கூடாது என்பதும் , அவன் பிறந்த நாளுக்காகத்தான் இவ்வுணவு வழங்கப்படுகிறது என்பதை அவர்களிடம் சொல்லக்கூடாது என்பதும்தான் . 



அங்கு சென்று இவன் பிறந்த நாளுக்காக உணவு வழங்கிவிட்டு அவர்களிடம்(ஆசிரம குழந்தைகள் ) வாழ்த்து வாங்கிவிட்டு வருவதும் , கலைநிதிக்காக நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு யாருமில்லையே என்ற ஏக்கத்தை அவர்களிடம் விதைத்து வருவதில் எங்கள் இருவருக்குமே உடன்பாடு இல்லை . 

இதுவும் ஒரு வகையில் லஞ்சமாகத்தான் எனக்கு தோன்றுகிறது. 

எதுவும் சொல்லமால் இன்று உணவு விருந்து படைக்க யாரோ ஒருவர் மட்டும் செல்ல உள்ளோம் . நன்றி வாழ்த்துக்களுடன் உங்கள் சாந்திபாபு . 

Thursday, February 10, 2011

அதிமுக vs திமுக -என்ன கொடுமை இது


 2002-2003 நெசவாளர்களை வறுமையில் வாடவிட்டு கஞ்சித்தொட்டி திறந்த பொழுது நான் எழுதிய கண்ணீர் கவிதை.

"ஆராரோ ஆரிரரோ 
கண்ணுறங்கு கண்மணியே 
ஈரஞ்சு மாசத்தில 
நேரமிங்கு சரியில்ல
நெஞ்ச துணி விக்கவில்ல
கஞ்சி காச்ச வழியுமில்ல  
மாருலதான் பாலுமில்ல 
பிஞ்சு நீயும் வாடுறியே 
கொஞ்சம் நீயும் பொருதுக்கயா 
நஞ்ச நானும் வாக்கையில 
பஞ்சமினி உனக்கில்ல
பரலோகம் போய்வாயா 
ஆராரோ ஆரிரரோ 
கண்ணுறங்கு கண்மணியே....!!!

2005-2006ல் 79 விசைத்தறி சங்கங்கள் மட்டும் லாபத்தில் இயங்கின. ஆனால் 2009-2010ல் 126 விசைத்தறி சங்கங்கள் லாபகரமாக இயங்கி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிற 5 கூட்டுறவு நூற்பாலைகளும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமும், ஈரோட்டில் இயங்கி கொண்டுள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலையும் லாபத்தில் இயங்கி வருகின்றன.

இலவச வேட்டி சேலைத்திட்டத்தில் "டெண்டர்" முறையே தொடர்ந்து கடை பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கைத்தறி கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் இலவச வேட்டி சேலை நெய்வதற்காக கூட்டுறவு நூற்பாலைகளில் இருந்து நூல் வழங்கப்பட்டு வருகிறது.

நூல் விலை எவ்வளவு அதிகரித்தாலும் அக்டோபர் 2010 வரை ரூ.950/- விலைக்கே நூல் வழங்கிட வேண்டும். டெண்டர் கமிட்டி முடிவு செய்துள்ள விலையான 5 கிலோ ஒன்றுக்கு ரூ.950/- தான் இந்த ஆண்டு இலவச வேட்டி சேலைக்கு கூட்டுறவு நூற்பாலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நூலுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க. ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு ஐந்தாண்டு காலத்தில் ஒரே முறை 2004ம் வருடம் மட்டும் 10 சதவிகித அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் 2007ல் 10 சதவிகித அகவிலைப்படி உயர்வும்; 2008-ஆம் ஆண்டில் 10 சதவிகித கூலி உயர்வும்; 2009-ஆம் ஆண்டு 15 சதவிகித அகவிலைப்படி உயர்வும்; 2010ல் 10 சதவிகித அடிப்படை கூலி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச வேட்டி சேலை திட்டத்தின் கீழ் 2005-ஆம் ஆண்டில் கைத்தறி சேலைக்கு ரூ45ஆக இருந்த கூலியை உயர்த்தி; தற்போது ரூ68.22 ஆகவும்; கைத்தறி வேட்டியின் கூலியை ரூ.42.13 ஆக இருந்த கூலியை ரூ.58.06ஆக உயர்த்தியும்; விசைத்தறி சேலைக்கு 2005-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ரூ.21.42ஐ, தற்போது ரூ.28.16ஆக உயர்த்தியும்; விசைத்தறி வேட்டிக்கு ரூ.12.38ஆக இருந்ததை ரூ.16 ஆக உயர்த்தியும் கலைஞர் அரசு வழங்கியுள்ளது.

இத்திட்டத்திற்கு கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் உள்ள 11000 கைத்தறிகளும், விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்ளைச் சார்ந்த 41000 தறிகளும் ஈடுபடுத்தப்பட்டு டிசம்பர் மாதம் வரை வேலை வாய்ப்பு வழங்கி உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இலவச வேட்டி சேலை திட்டத்தைப் பற்றி பேசுவதற்கு அருகதை அற்றவர் ஜெயலலிதா. ஏனென்றால் 2001-2002 மற்றும் 2002-2003 ஆகிய இரண்டாண்டுகளில் இத்திட்டத்தை செயல்படுத்தாமல் நெசவாளர்களை வறுமையில் வாடவிட்டு கஞ்சித்தொட்டி திறக்கும் நிலைமைக்கு ஆளாக்கியவர் இவர். தான் திருடி பிறரை நம்பாள் என்பது ஜெயலலிதாவிற்கே பொருந்தும். 

பால் கொள்முதல் விலை

அதிமுக ஆட்சியில் பால் கொள்முதல் விலை பசும்பாலுக்கு ரூ. 1.50, எருமைப் பாலுக்கு ரூ. 1.56 என்றுதான் உயர்த்தப்பட்டது. இப்போதைய திமுக ஆட்சியில் 4 முறை பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பசும்பாலுக்கு ரூ. 6.60 அளவுக்கும், எருமைப் பாலுக்கு ரூ. 12.70 அளவுக்கும் விலை உயர்வு தரப்பட்டுள்ளது.

பசும்பாலுக்கு இது 4 மடங்கும், எருமைப் பாலுக்கு 8 மடங்கும் விலை உயர்வு ஆகும்.தற்போது மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பால் கொள்முதலுக்கு கூடுதல் விலை கொடுக்கப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் லிட்டருக்கு ரூ.16.40ம், ஒரிசாவில்ரூ. 16.32ம், கேரளாவில் ரூ.16.07ம், ஆந்திராவில் ரூ.15.42ம், மேற்குவங்காளத்தில் ரூ. 15.19ம், மராட்டியத்தில் ரூ. 13.50ம் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பசும் பாலுக்கு ரூ.16.50ம், எருமைப்பாலுக்கு ரூ.25.20ம் வழங்கப்படுகிறது. 

இன்னும் இவற்றை போல பல இருக்கிறது எதை சொல்வது எதை விடுவது.
சமந்தபட்டவர்களுக்கு தெரியும் இவற்றின் வேறுபாடு .
மனசாட்சி உள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள் .

Wednesday, February 9, 2011

குப்பைத்தொட்டி தெய்வம்

என்னுடைய 10ஆம் வகுப்பில் கவிதை என்று நினைத்து நான் எழுதிய ஒன்றை இங்கு பதிகிறேன்.

சின்னஞ்சிறு சிட்டு!
கைகளிலோ பிச்சை தட்டு
வாடிப்போன முகம்
நொந்து போன அகம்
மெலிந்துபோன தேகம்
கண்களிலோ சோகம்
இவர்கள் பிச்சை எடுக்க யாரிட்ட சாபம்
தீர்க்கப்பட வேண்டியவை
இந்தப்பிஞ்சு இதயங்களின் தாகம்
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றால்
இன்று பல தெய்வங்களை
குப்பைத்தொட்டியில் தான் பார்க்க வேண்டும்
என்று மாறும் இந்த பரிதாபம் ?

Tuesday, February 8, 2011

செல்வி ,புரட்சி புயல்,போராளி சீமான் அவர்களே



இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் விளையாட்டு தன்மை கொண்டவை இல்லை.அவற்றுக்கு ஆதாரங்கள் இருக்கின்றன என்று சென்னையில் அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் Teresita Schaffer கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை தேசிய நல்லிணக்க நடவடிக்கைகளை எடுக்க தவறின் மீண்டும் வன்முறை வெடிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.வன்னி போரின் இறுதி நாட்கள் மிகவும் பயங்கரமானவை என்பதற்கு ஆதாரங்கள் உண்டு எனவும் நீதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது மஹிந்தா அரசின் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிகாவின் நடவடிக்கை இப்படி இறுக்க நம் அரசியலையும் சற்று அலசுவோம் .

‘ஜெயலலிதா ஈழப் போராட்டத்துக்காக செய்தது என்ன, செய்யப் போவதுதான் என்ன? அவர்தானே இந்த அழிவுக்கு ஆரம்ப அஸ்திவாரத்தைப் போட்டவர்? அவர்தானே சோனியாவை விட அதிகமாக விடுதலைப் புலிகளை எதிர்த்தவர்? 2009, மே 16-ம் தேதிக்குப் பிறகு அவரது ஈழப் பாசம் எங்கே போனது? ஒரு தடவையாவது ஈழத் தமிழர்களுக்குக் குரல் கொடுத்திருப்பாரா? இப்படிப்பட்ட ஒருவரை ஆதரிக்கவா இந்த ஈழத் தமிழ்ப் ‘போர்வை’?’

ஈழத்தை பற்றி மட்டுமே சீமான் கருத்தில் கொண்டு செயல்படுபவராக இருந்தால் அதற்கு ஜெயல்லிதாவுக்கு ஆதரவு என்ற முடிவு எடுக்கத்தேவையில்லையே ! ஈழம் நான் பெற்றுத்தருவேன் என்று கூறும் கட்சிக்குத்தான் என் ஆதரவு என்று அறிவுத்திருக்கலாமே….அப்போதும் ஜெயலலிதாவிடம் இருந்து சீமானுக்கு அழைப்பு வராது…எல்லாம் சீமானுக்கு தெரியும்…அழையா விருந்தாளியாக நூழைந்திருப்பவர் சீமான் தான்…இனிமேல் தான் அரசியலை கற்க ஆரம்பித்திருக்கிறார்…

இவர் ஆதரவு கொடுத்தாலும் ஈழத்தை அவர் (ஜெயலலிதா) வாங்கித்தர சிறு முயற்சிகள் கூட எடுக்கப்போவதில்லை. (பொதுவுடமை கட்சிகள் கூட இந்த கருத்துகளில் தேசிய அளவில் மாறுபடுகிறார்கள் என்பதை இந்திய அரசியல் வாதிகள் அனைவருக்கும் அத்துப்படி)…முதலில் அவருக்கு (ஜெயல்லிதாவுக்கு) துளிகூட விருப்பமில்லை…இது சீமானுக்கும் தெரியும்…தெரிந்தும் ஆதரவு என்றால் இது தான் காரணம்…எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பாணியில் செயல்படும் சிறுபிள்ளை அரசியல் தான்…இந்த செயல்….மீண்டும் மீண்டும் ஈழப்பிரச்சினையை இங்கு அரசியலாக்குமேத் தவிர வேறு எந்த ஒருபயனும், விளையப்போவதில்லை.

ஈழ ஜனநாயக மக்கள் கட்சியே இலங்கையில் ஆளுங்கட்சியாக உள்ளபோது…அதில் உள்ளவர்களே மந்திரிகளாக, எம்.பிக்களாகவும் (டக்ளஸ் தேவனந்தா) இருக்கும் பொழுது…இங்கிருந்து என்ன ஆதரவு கிட்டும் என நினைக்கிறார். தனித்த செல்வாக்கும் சீமானுக்கு இல்லை…நெடுநாள் அரசியலில் இருந்தவரும் இல்லை…அட நடிகராகவாவது இருந்தாரா…இல்லையே…..

பிபிசி ஏற்கனவே ஈழம் பற்றி மக்களிடையே கருத்து கணிப்பு கேட்டு கடந்த தேர்தலிலேயே கருத்து வெளியிட்டுள்ளதை சீமான் படித்திருக்கமாட்டார். ஈழப்பிரச்சினை இந்திய அரசியலை பாதிப்பதில்லை, இது தான் உண்மை. இது என்றைக்கும் மாறாது,

இன்றுவரை தமிழகத்தமிழர்களுக்கு ஒரு சந்தேகம்…இலங்கையில் இலங்கைத் தமிழர்கள் யாருமே இலங்கை அரசாங்கத்தில் பணிபுரியவில்லையா? இலங்கை ராணுவத்தில் காவல் துறையில் தமிழர்கள் இல்லையா?…சிங்களவரும்…தமிழரும் காதலிப்பது கல்யாணம் புரிந்து கொள்வது கிடையாதா? இந்த கேள்விக்கு பதில் எல்லாம் உண்டு….அப்படி என்றால் இதை பிரிவினையாக..மிகத்தீவிரமாக எழுப்புகிறவர்கள் யார்…? நூற்றுக்கு நூறு தமிழ் சமுதாயத்தினரா…? அப்படியென்றால் தேர்தலை புறக்கணித்திருப்பாரகளே!….அங்கேயே மக்கள் தீர்மானிக்கும் நிலையில் இருக்கும் பொழுது…இங்கு சீமான் என்னத்தை தீர்மானிக்கப்போகிறார்…அவர்களுக்கு தெரியாததா?

ஈழம் பற்றிய எண்ணம் கனவு அங்கேயும் உள்ளது…அதை அவர்கள் வாழ்வாதாரத்தோடு அரசியலோடு அராசங்கத்தோடும் போராடிப் பெறவே விரும்புகின்றனர்…பட்டினி கிடந்து போராட விரும்பமாட்டார்கள். அதே போலத் தான் இங்கேயும்…இங்குள்ள பிரச்சினைக்கு பிறகுதான் ஈழம். இதை சீமான் புரிந்தும் புரியாமல் இருப்பது தான் வேடிக்கை. ஒருவேளை மக்களுக்கு இதெல்லாம் தெரியாது என்று நினைத்துவிட்டாரோ?

இது இன்னும் இரண்டு சாதிகளாக மாற்றப்படுவது தான் இன்னும் புரியாத புதிராக உள்ளது.

அங்கேயே (இலங்கையிலேயே) இதற்கு முழு அளவில் ஆதரவில்லாதபொழுது…இங்கு முயற்சித்து என்ன பயன்..முதலில் அங்குள்ள மக்களை ஒன்று சேர்க்க ஏதாவது முயற்சிமேற்கொள்ளட்டும் எல்லாமே ஈழ ஆதரவு தளமான(BBC TAMILOSAI) பிபிசி தமிழோசையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் ஆதரப்பூர்வமாக காணலாம்.. இதை வெளியிடுவீர்களோ என்னவோ தெரியாது. ஏதோ எழுதிவிட்டேன் என்று ,.திரு ஜாஸ்மின் என்பவர் என்வழி இணையத்தில் பின்னூட்டம்

Monday, February 7, 2011

கலைஞரே - வைகோவும் , ஜெயாவும் யார் ?

என் இனிய வலைத்தமிழ் மக்களே...!


"புரட்டுக்காரியின் உருட்டு விழிகளில் உலகைக் காண்பவரே.." என்று என்றைக்கோ 'மனோகரா' படத்திற்காக கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம், இன்றும் அவரையே திரும்பிப் பார்க்கவும், படிக்கவும் வைத்திருக்கிறது.

அப்படி இருக்கையில் அன்று ஜெ.வின் வற்புறுத்தலால் எம்.ஜி.ஆர் அவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கினார். பாராளுமன்றத்துக்கு சென்றவர் அறிஞர் அண்ணா அமர்ந்த இருக்கை எதுவென்று கேட்டு, அவ்விருக்கையை தனக்கு வாங்கிக் கொண்டார். இதற்குப் பின் அவரது வளர்ச்சி ஜெட் வேகம் தான். எம்.ஜி.ஆராலேயே அவரது வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை.

அரசியலின் சித்து விளையாட்டு அம்மாவுக்கு அத்துபடி ஆனது.  இந்நிலையிலே எம்.ஜி.ஆர் உடல்நலமில்லாமல் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்திரா மரணமடைந்த நிலையில் பிரதமராக பொறுப்பேற்ற ராஜீவ் பாராளுமன்றத் தேர்தலை நடத்துகிறார். பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலும் அனுதாப அலைக்காக இணைந்தே நடக்கிறது. தமிழ்நாட்டிலே நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராக பணியாற்றுகிறார்.

அரசியல் அனல் பறந்தது. கலைஞரே கூட எம்.ஜி.ஆர் திரும்பி வந்தால் அவர் தான் முதல்வர் என்று அறிக்கை விட, அம்மா மட்டும் உஷாராக இருந்தார்.எம்.ஜி.ஆர்.,நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதா, அப்போதைய பிரதமர் ராஜிவுக்கு எழுதிய கடிதத்தில், செயல்படாத முதல்வராக எம்.ஜி.ஆர்., உள்ளார். எனவே அவருக்கு பதிலாக தம்மை முதல்வர் பதவியில் உட்கார வைக்க கூறிய துரோகி ஜெயலலிதா. எம்.ஜி.ஆர்., இறந்து அவர் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருந்த இடத்தில், ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், "ஜானகியம்மாள் தான் எம்.ஜி.ஆருக்கு மோரில் விஷம் கலந்துகொடுத்து கொன்றதாக கூறினார்.அரண்டு போனார் ராஜீவ்.
87ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். மரணமடைகிறார். எம்.ஜி.ஆரின் உடல் ராஜாஜி மண்டபத்தில் கிடத்தப்பட்டிருக்கிறது. கட்சி யார் பக்கம்? ஜெயலலிதா மட்டும் வரக்கூடாது என்று அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் சிலரால் முடிவு எடுக்கப்படுகிறது. ஜானகி அம்மாளை முன் நிறுத்தும் யோசனையை ஆர்.எம்.வீ செயல்படுத்தத் தொடங்குகிறார். எம்.ஜி.ஆரின் உடல் ஏற்றப்படும் பீரங்கி வண்டியிலே ஜெயலலிதாவும் ஏற முயற்சிக்க ஆரம்பத்திலேயே அறுத்து விடும் நோக்கில் ஜானகி அம்மாளின் உறவினரான நடிகர் தீபன் எட்டி உதைக்கிறார். எம்.எல்.ஏ.வாக இருந்த கே.பி.ராமலிங்கம் ஓடிவந்து இழுத்து கீழே தள்ளுகிறார்.

இவ்வாறெல்லாம் சொந்தக் கட்சிக்காரர்களாலேயே அவமானப்படுத்தப்பட்ட, அடிக்கப்பட்ட ஜெயலலிதா அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரானது தான் காலத்தின் கோலம்.

எல்.டி.டி.ஈ

விடுதலை புலிகளை பொறுத்த வரை அ.தி.மு.க. பொது செயலாளர் செல்வி ஜெயலலிதாவோ, எல்.டி.டி.ஈ. தீவிரவாத அமைப்பு அதை ஒழிக்க வேண்டுமென்று அறை கூவல் விடுக்கிறார், தமிழினத்தை பொறுத்தவரை இவர் ஒரு சகுனி என்றே கூற வேண்டும், எம்.ஜி.ஆர். இருந்தவரை தீவிரவாத அமைப்பு என்று தெரியாத போது, எம்.ஜி.ஆர். இறந்தபிறகு அ.தி.மு.க. தொண்டர்களின் கருத்துகளை கேட்டா முடிவெடுத்தார். அல்லது தமிழக மக்களையோ, இலங்கையிலும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களையும் கேட்டா எல்.டி.டி.ஈ அமைப்பு தீவரவாத இயக்கம் என்று அறிவிக்கிறார், கேட்டால் எல்.டி.டி.ஈ அமைப்பு சக தமிழ் மக்களையே கொன்றார்கள் என்கிறார். 

தர்மபுரியில் 3 மாணவிகளை எரித்து கொன்றார்களே அ.தி.மு.க வினர். அப்படியானால் அ.தி.மு.க தீவரவாத கட்சியா. அதலால் தமிழகத்தில் அ.தி.மு.கவுக்கு தடை விதிக்கலாமா? ப. சிதம்பரத்தை திருச்சியில் தாக்க முற்பட்டார்களே, கொடுங்கோலன் சுப்ரமணியசாமியை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்க முற்பட்டார்களே இவர்கள் தீவிரவாத கட்சியா? இல்லையா?

வரலாறு தெரியாமல் இழி குணம் கொண்ட ஜெயலலிதா தி.மு.க ஆட்சியை ஒழிக்க ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் செய்யும் அரசியல் ஓட்டு மொத்த தமிழினத்தையே எரிச்சல் படுத்துகிறது. ஜெயலலிதாவின் இச்செயல் ஒரு ஈனச்செயல்! இழிகுணச் செயல்!

வை கோ 

ஈழ துரோகி ஜெயாவுக்கு வெண்சாமரம் புடிக்கும் வைகோ எதுக்காக 19 மாதம் ஜெயிலில் இருந்தாராம் புலிகளை ஆதரித்த்தால் தானே அதை எளிதில் மறந்து விட்டீர்களா கோபால்சாமி அவர்களே . உங்களை பொடாவில் உள்ளே தள்ளியபோது கோர்ட் வளாகத்தில் கர்ஜித்தது ஜெயா ஒரு பாசிச சக்தி என்று முழங்கியது அனைத்தும் மறந்துவிட தமிழர்கள் முட்டாள்கள் அல்ல.  ,கலைஞ்ர் இந்த தள்ளாத வயதிலும் வேலூர் சிறைசாலைக்கு வந்து கண்கலங்க நின்றாரே அவருக்கு நீங்கள் செய்த துரோகம் இந்த உலகம் உள்ளவரை அழியாது .மேலும் அவர் குடும்பத்தாருடன் பழகி அவர்களை பற்றியும் பொதுமேடையில் பழிபேசுவது ,அதைவிட துரோகம் ,எப்ப பார்த்தாலும் வீரவசனம் பேசி இலங்கையில் தமிழின மக்களை உசுப்பேற்றி அவர்களின் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தியது நீதானே 

நீங்கள் பொழப்பு ஓட இலங்கை பற்றி பேசுகிறீர்கள் ,நீங்கள் நடத்தும் மதிமுக வேறு எந்த பிரச்சினை பற்றியும் பேச திராணி இல்லை .கொள்கை மறந்து ஜெயாவுடன் சேர்ந்து இருப்பதுடன் பேசாமல் கட்சியை கலைத்துவிடவேண்டியதுதானே . ஜெயா காங்கிரசில் கூட்டு வைத்தால் நீங்கள் நாண்டுக்கிட்டு செத்திருபீர்களா ? ஒருமாதத்திற்கு முன்பு ஜெய காங்கிரசிற்கு ஆதரவு தர முன்வந்தது உங்களுக்கு தெரியாதா? அப்போ உங்கள் வாயில் தையல் போட்டு இருந்ததா ?
 அரசியல் அரிச்சுவடி கற்று கொடுத்த ஆசான் கலைஞரை முதுகில் குத்தி காட்டிகொடுத்த எட்டப்பன் தான் வைகோ. இப்படி பட்ட துரோகங்களுக்கு மத்தியில் எல்லா துரோகங்களையும் நெஞ்சில் தாங்கி, எத்தனையோ சோதனையான காலங்களிலும் திமுக வை பெரிய ஆலமரமாக வளர்த்து, உண்மையிலேயே, காமராஜரும், அண்ணாவும், காந்தியும் கண்ட ஒரு நல்ல நாட்டை உருவாக்கி வழி நடத்தி கொண்டிருப்பவர் தான் கலைஞர். நண்பர்களே, இன்று ஏழை மக்களுக்கு எதிராக செயல்படுவதும் , கழக அரசை அனைத்து விஷயங்களிலும் குறை சொல்வதும் , தலைவரின் அனைத்து அரசியல் முடிவுகளுக்கும் நக்கல் செய்வதும் , நல்ல திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டும் மலிவான விமர்சனம் செய்து விளம்பரம் தேடிக்கொண்டு இன்று பலர் வலைபூக்களில் வளம் வருகிறார்கள் .

  அரசியல் மன மாச்சரியங்களை கடந்து, விரோத மனப்பான்மையை களைந்து பாருங்கள்,    கலைஞரின் சமூக தொண்டையும், ஏழைகளின் வாழ்வில் கலைஞரின் பங்கையும். உண்மையிலேய பாராட்ட படவேன்டியாய உன்னத மனிதர் கலைஞர். அவருக்கு பிறகும் சரி அவருக்கு முன்பும் சரி, அவருக்கு நிகர் அவர்தான். வாழ்க கலைஞர், வளர்க அவரின் மக்கள் தொண்டு.