tag:blogger.com,1999:blog-18849665765465384192024-03-20T13:53:22.044+05:30சமூக உறவுஉங்கள் அன்பு உடன்பிறப்புகள் சாந்தி மற்றும் பாபு வின் வணக்கங்கள்.சாந்திபாபு http://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.comBlogger269125tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-62396694812870099232024-03-07T10:44:00.001+05:302024-03-07T10:44:55.043+05:30பார்ப்பனர் எதிர்ப்பு நியாயமா அநியாயமா ?<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiH9zBkGg0mL4gM5hYrMZQHp6ZVHb2nXOy0HQpvHrxWRXJTWX_i6sgS4Qz1i9LOSP57CcjaRWSYBI3wrnNn37aXTLSumZM32Dse4Ll40R6-SqbbqoriigALJJqAG5_kYK8keLEher_A4pCFQdZzgHLoQF57ys0F7OW2n1i87PvG5buCfi23TCfOI9M1MZs" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiH9zBkGg0mL4gM5hYrMZQHp6ZVHb2nXOy0HQpvHrxWRXJTWX_i6sgS4Qz1i9LOSP57CcjaRWSYBI3wrnNn37aXTLSumZM32Dse4Ll40R6-SqbbqoriigALJJqAG5_kYK8keLEher_A4pCFQdZzgHLoQF57ys0F7OW2n1i87PvG5buCfi23TCfOI9M1MZs" width="400">
</a>
</div>தொடர்ந்து பார்ப்பன சமூகத்தை பெரியார்வாதிகள் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் என்று ஒருவர் வேதனைப்பட்டு ஆத்திரப்பட்டு பேசுவதாக ஒரு வீடியோ பார்த்தேன். <div><br></div><div>முகநூலில் இருக்கும் பல பார்ப்பன இளைஞர்களுக்கும் அந்த உணர்வு இருக்கும் </div><div><br></div><div>“ என்னடா இது எப்ப பாத்தாலும் எல்லாரும் பார்ப்பனர்களை குறை சொல்லிட்டே இருக்காங்களே” என்று தோன்றும். </div><div><br></div><div>இப்பிரச்சனையை அவர்கள் கொஞ்சம் நுட்பமாக புரிந்து கொள்ள முன்வர வேண்டும். </div><div><br></div><div>“பார்ப்பனர் உசத்தி” என்ற தியரியை குறைந்தது ஆயிரம் வருடங்களாவது அரசர்களின் உதவியோடு பார்ப்பனர்கள் செய்து வந்திருக்கிறார்கள். </div><div><br></div><div>-பார்ப்பனர் உசத்தி</div><div>-பார்ப்பனர்கள் கொலை செய்தால் கூட அவர்களுக்கு மரண தண்டனை கூடாது.</div><div>-சிவனே ஆனாலும் பார்ப்பனன் தலையை எடுத்தால் பிரம்மஹத்தி தோஷம் வந்து விடும்.</div><div><br></div><div>கொஞ்சம் நீங்கள் ராமாயணம், மகாபாரதம் மற்றும் புராண கதைகளை இக்கோணத்தில் வாசித்தால் இதை புரிந்து கொள்ளலாம். </div><div><br></div><div>அதாவது 97 % மக்களுக்கு 3 % மக்கள் உசத்தி உசத்தி என்று திரும்ப திரும்ப சொல்லப்பட்டு அவர்களை நம்பவும் வைத்திருக்கிறார்கள்.</div><div><br></div><div>என் வீட்டு ப்ரிட்ஜை சரி செய்ய ஒரு கடைக்கு சென்றிருந்தேன். அங்கே இரண்டாம் சேல்ஸுக்கு ப்ரிட்ஜுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. </div><div><br></div><div>சும்மானாலும் அது பற்றி கேட்டுக் கொண்டிருந்தேன். கடைக்காரர் “ இத வாங்கிக்கோ சார். இதுக்கு முன்னாடி ஐயர் யூஸ் பண்ணின ப்ரிட்ஜ். நல்லா இருக்கும்” என்றார். </div><div><br></div><div>ஒரு குளிர்பெட்டியை ஐயர் உபயோகித்தால் அது எப்படி மதிப்புள்ளதாக மாறும் என்று புரியவே இல்லை.</div><div><br></div><div>மக்கள் மத்தியில் இன்னமும் பார்ப்பனர் என்றால் உசத்தி என்ற எண்ணம் இருக்கிறதுதான். </div><div><br></div><div>இது ஒரே நாளில் வந்ததல்ல. கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது. </div><div><br></div><div>என்ன திட்டத்தின் மூலம் பார்ப்பனர் உசத்தி என்பது மக்கள் மத்தியில் ஏற்றப்பட்டது? </div><div><br></div><div>உலகில் ஐம்புலன்களை பெற்று மனிதனாக பிறந்து விட்டாலே அவனுக்கு ஒரு பிரச்சனை இருக்கும். </div><div><br></div><div>பிரச்சனையை தீர்க்க பெரும் சக்தி ஒன்றிடம் பிரார்த்தனை செய்வது மனித இயல்பு. அப்படித்தான் கடவுள் உருவாகிறார். </div><div><br></div><div>பார்ப்பனர்கள் திட்டமிட்டு இந்த கடவுளை கைப்பற்றுகிறார்கள். </div><div><br></div><div>அல்லது ஏற்கனவே மக்கள் வழிபட்டுக் கொண்டிருந்த கடவுளை அவர்கள் வழிபாட்டு முறைகளோடு இணைக்கிறார்கள். </div><div><br></div><div>“நிமித்தம்” சொல்வதன் மூலம் அரசர்களை கைக்குள் போட்டுக் கொண்டு கடவுளை கைப்பற்றுகிறார்கள். </div><div><br></div><div>கடவுளுக்கு அடுத்தது பார்ப்பனன்தான் என்ற தியரியை மக்களுக்குள் எளிதாக் மதத்தின் மூலமாக திணிக்கிறார்கள். </div><div><br></div><div>இதனால்தான் பார்ப்பனர்கள் “அனைத்து சாதியினரும் அர்ச்சகர்” என்பதை ஒத்துக் கொள்வதில்லை. </div><div><br></div><div>கடவுளுக்கு அடுத்து கோவிலில் அங்கே ஒரு பார்ப்பனர்தான் இருக்க வேண்டும் என்பது அவர்கள் எண்ணம்.</div><div><br></div><div>அங்கே ஒரு பறையரும், அருந்ததியரும், தேவரும், நாடாரும், வன்னியரும் நின்று பூஜை செய்து கொண்டிருந்தால் “பார்ப்பனர் உசத்தி” என்ற பிம்பம் மக்களிடையே மறைந்து விடும்.</div><div><br></div><div>ஸோ இப்படி இந்து மதத்துக்குள் பின்னி பிணைந்து பார்ப்பனர்கள் அவர்கள் பற்றிய இமேஜை மக்களிடையே உயர்த்திக் கொள்ளும் போதுதான் பெரியார் எதிர்க்கிறார். அம்பேத்கர் அதை எதிர்க்கிறார்.</div><div> </div><div>பாமர மக்கள் “எப்படி ஒரு பார்ப்பனர் உசத்தி” என்று கேட்கும் போதெல்லாம் கடவுளை கைக்காட்டி “கடவுள் சொன்னாராக்கும். கடவுள் எழுதி வைச்சிருக்கிறார்” என்றெல்லாம் பார்ப்பனர்கள் பதில் சொல்லி நம்ப வைத்தனர். </div><div><br></div><div>அதனால்தான் பெரியார் பார்ப்பனர்கள் கைகாட்டும் கடவுளையே எதிர்க்க ஆரம்பித்தார். </div><div><br></div><div>இப்படி யோசித்து பாருங்கள். </div><div><br></div><div>உங்கள் வகுப்பு லீடர் ஆசிரியர் இல்லாத நேரம் ஆசிரியர் சொன்னதாக பெரும் அதிகாரம் செய்கிறான். </div><div><br></div><div>மற்றவர்களுக்கு தண்டனை கொடுக்கிறான். எதிர்த்து கேட்டால் “ டீச்சர்தான் எனக்கு பவர் கொடுத்தாங்க” என்று சொல்கிறான். </div><div><br></div><div>குறிப்பிட்ட எல்லையை அவன் தாண்டும் போது “என்னடா உங்க டீச்சர். நா அவுங்க கிட்டையே கேப்பேன். டீச்சர காட்டி எங்கள அதிகாரம் செய்றியா? என்று ஸ்டாப் ரூமை நோக்கி செல்வோமா இல்லையா? “ </div><div><br></div><div>அதைத்தான் பெரியாரும் செய்தார். </div><div><br></div><div>கடவுள் ஒரு பெரும் சக்தி என்று நான் நம்புகிறேன் என்ற லாஜிக்கை பெரியார் எதிர்க்கவில்லை. </div><div><br></div><div>சரி அது உன் நம்பிக்கை இருந்துவிட்டு போ என்றுதான் சொல்கிறார். </div><div><br></div><div>ஆனால் கடவுள் பெரும் சக்தி, அவரின் ஒரே பிரதிநிதி பார்ப்பனர்கள்தான் என்று அதற்கு ஒரு லாஜிக் புராண கதைகளை இட்டு கட்டும் போதுதான் பெரியார் அதே லாஜிக்கை வைத்து அந்த புராண கதைகளை ஆராய்ந்து உண்மையை மக்களிடதில் அம்பலப்படுத்துகிறார். </div><div><br></div><div>மதன காமராஜன் கதை என்றொரு கதை கொத்து உண்டு. </div><div><br></div><div>அதில் ஒரு பார்ப்பன இளைஞன் உலக அனுபவம் வேண்டி தேசம் விட்டு தேசம் செல்கிறான். </div><div><br></div><div>காட்டை கடக்கும் போது வேடன் ஒருவன் எதிர்படுகிறான் </div><div><br></div><div>“ ஐயா நீங்கள் இந்த இரவை காட்டின் இருட்டில் கடந்தால் மிருகங்கள் தாக்கி இறந்து போவீர்கள். ஆகையால் எங்கள் வீட்டில் தங்குங்கள் என்று அழைக்கிறான். </div><div><br></div><div>பார்ப்பனனும் செல்கிறான். அங்கே சிறிய பரண் ஒன்று இருக்கிறது. </div><div><br></div><div>கீழே தூங்கினால் புலி தின்றுவிடும் என்று பரண் அமைத்து அங்கே தூங்கும் பழக்கம் கொண்டிருந்தார்கள். </div><div><br></div><div>வேடனின் மனைவி அப்பரணில் பார்ப்பனனும் தூங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தாள். </div><div><br></div><div>அது இருவர் தூங்கும் பரண் எப்படி மூவர் தூங்க முடியும் என்று சொல்கிறாள். </div><div><br></div><div>ஆனால் வேடனோ “பாவம் இந்த பார்ப்பனன் அஞ்சி நடுங்கி போய் இருக்கிறான். இவனுக்கு நாம்தான் அடைக்கலம் கொடுக்க வேண்டும்” என்று மூன்று பேரும் சமாளித்து பரணில் படுக்கிறார்கள். </div><div><br></div><div>வேடன் இடது ஒரம் , மனைவி வலது ஒரம் , பார்ப்பனன் மத்தியில் என்று படுத்து தூங்குகிறார்கள். </div><div><br></div><div>இரவில் அசைந்து தூங்கும் போது வேடன் பரணில் இருந்து விழுந்து விடுகிறான். </div><div><br></div><div>அவனை புலி தின்று விடுகிறது. </div><div><br></div><div>மறுநாள் காலை பார்ப்பனன் வருத்தம் தெரிவித்து விட்டு வேறு நாட்டுக்கு சென்று விடுகிறான். </div><div><br></div><div>ஒருவருடம் கழித்து அந்த நாட்டின் மன்னனுக்கு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. அப்போது பார்ப்பனன் தியானம் செய்கிறான். </div><div><br></div><div>அந்த தியானத்தின் போதுதான் தனக்கு பரணில் இடம் கொடுத்து உயிர் நீத்த வேடனே அப்புண்ணியத்தால் இளவரசனாக பிறந்ததாக கண்டுகொள்கிறான். </div><div><br></div><div>சரி அந்த வேடனின் மனைவி என்னவானாள் என்று தியானம் செய்கிறான். அவளும் அந்த பிராமணன் சென்ற ஒரிரு நாளில் விஷமுள் குத்தி இறந்து விடுகிறாள். </div><div><br></div><div>இப்போது அவள் எங்கே பிறந்திருக்கிறாள் என்று பார்த்தால் அவள் ஒரு சேரியில் பன்றிகுட்டைக்கு அருகே இருக்கும் வீட்டில் பிறந்திருக்கிறாளாம். </div><div><br></div><div>கதையை கவனியுங்கள் </div><div><br></div><div>- பார்ப்பனருக்கு உதவி செய்தால் அவர் மறுபிறவியில் இளவரசனாம்.</div><div><br></div><div>- பார்ப்பனருக்கு உதவி செய்ய மறுத்தால் அவர் பன்றிகுட்டை சேரியில் பிறப்பாராம்.</div><div><br></div><div>இது போன்ற ஏராளமான பார்ப்பன சாதி போற்றும் கதைகளை நம்மிடையே அனைத்து பழங்கதைகளும் திணித்திருக்கும். இப்படி திணித்து திணித்துதான் “பார்ப்பனர் உசத்தி” என்ற பிம்பத்தை உருவாக்கினார்கள். </div><div><br></div><div>சமதர்ம சமூகத்தில் இந்த போலி பிம்பம் உடையத்தானே வேண்டும். </div><div><br></div><div>அது தேவையில்லாத பிம்பம்தானே. </div><div><br></div><div>அது சமத்துவத்துக்கு எதிரான பிம்பம்தானே. அந்த பிம்ப உடைப்பை ஒவ்வொருவரும் செய்யும் போதுதான் அது பார்ப்பனர்கள் மனதை புண்படுத்தி விடுகிறது. </div><div><br></div><div>அந்த பிம்ப உடைப்பின் அவசியத்தை ஒரு சமூகநீதி ஆர்வலராக நீங்கள் புரிந்து கொள்ளும் போது நீங்களும் பெரியார்வாதிகளுடன் சேர்ந்து அப்பிம்பத்தை உடைக்க ஆரம்பித்துவிடுவீர்கள். </div><div><br></div><div>எந்தவிதமான உண்மையும் இல்லாமல் வெறுமே இட்டுக்கட்டல் மூலம் பிம்பம் நமக்கெதுக்கு என்று அதற்கு எதிராக போராட ஆரம்பித்து விடுவீர்கள்.</div><div><br></div><div>- Vijay Bhaskarvijay பதிவு</div>சாந்திபாபு http://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-30157387535084904332024-01-20T11:28:00.001+05:302024-01-20T11:28:23.840+05:30நான் மிக்ஜாம் பேசுகிறேன்..<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjQ2c3YIs_pRG9XGSft7tFDJipdoqBI7dsvN8_kRXk-esgR74kjHlevHG2x3ssAnKN7w8ym1FjWyT0YgwuNwkI0PzzUZ4VUidMLfHh0V9Qh_-cJvBRb5_CIoCaUu1_oq3PLJwiDHjJTsJ_eV7353tFyuN7MR1ZgeUopdMha2QrSOv1mcGnZ2AyR2y13rR0" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjQ2c3YIs_pRG9XGSft7tFDJipdoqBI7dsvN8_kRXk-esgR74kjHlevHG2x3ssAnKN7w8ym1FjWyT0YgwuNwkI0PzzUZ4VUidMLfHh0V9Qh_-cJvBRb5_CIoCaUu1_oq3PLJwiDHjJTsJ_eV7353tFyuN7MR1ZgeUopdMha2QrSOv1mcGnZ2AyR2y13rR0" width="400">
</a>
</div>நான் மிக்ஜாம் பேசுகிறேன்..<div><br></div><div><br></div><div>நிஷா, ஜல், தானே, வர்தா, ஒக்கி, நிவர் வரிசையில் நான் மிக்ஜாம் பேசுகிறேன்..</div><div><br></div><div>என் முன்னோர்கள் வந்தார்கள் சென்றார்கள், நானும் அப்படியே செய்ய நினைத்தேன்..</div><div>ஆனால் உங்களுக்கு சில பாடங்களை கற்றுத் தர வேண்டி இருந்தது..</div><div>நான் கடந்து சென்ற கதையை சொல்கிறேன் கேளுங்கள்..</div><div>நான் குறைந்த காற்றழுத்த மண்டலமாக உருவாகி 100 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து விடலாம் என்றுதான் நினைத்தேன்.. ஏனென்றால் என் முன்னோர்கள் வந்த பொழுதெல்லாம் 10 முதல் 20 சென்டி மீட்டர் மழையை கொட்டிச் சென்றாலே சென்னை மிதக்கும்..</div><div><br></div><div>எப்பவும் போல இல்லாமல் இந்த முறை நான் உருவாகும் பொழுதே முன்னெச்சரிக்கை அறிவிப்புகளும் நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டது.. எனக்கு கோபம்.. சரி ஒரு கை பார்த்து விடுவோம் என்று தல தோனியை போல் அடி பட்டையை கிளப்ப பூஸ்ட் குடித்துவிட்டு என் வலிமையை கூட்டி தயாரானேன்.. </div><div>அதில் 20 சென்டிமீட்டர் பொழிந்தாலும் எதுவும் ஆகாது என்று மக்களுக்கு நம்பிக்கை விதைத்தார் மாசற்ற மனிதர் ஒருவர்.. </div><div>இப்படித்தான் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்மார்ட்டா வேலை செஞ்சிருக்கோம் ஒரு சொட்டு தண்ணீர் தேங்காது என்று டி நகரில் நின்று எகத்தாளம் பேசினார் மண்டியிட்ட மனிதர் ஒருவர்.. ஆட்சி மாறியது காட்சியும் மாறியது 2021ல் என் தங்கச்சி பருவமழைக்கே பல்லை இளித்தது டி நகர்..</div><div><br></div><div>என் பலத்தை ஏற்றி கொண்டு நகரத் துவங்கினேன், 10 சென்டிமீட்டர் 20 சென்டிமீட்டர் என்று மழை பொழிவை கூட்டினேன்.. என்ன ஆச்சரியம், கொட்டியவுடன் ஆங்காங்கே காணாமல் போகிறது தண்ணீர்.. எனக்கு கோபம் தலைக்கேறியது உடனே பிரேக் போட்டு கீர் டவுன் செய்து 10 கிலோமீட்டர் என்று வேகத்தை குறைத்து அண்ட சராசரங்களும் நடுங்கும் அளவிற்கு அமலாக்கத்துறை விடிய விடிய சோதனை என்பதை போல் நின்று நிதானமாக இரவு பகலாக என் வேலையை காட்டினேன்.. </div><div><br></div><div>அப்படி இருந்தும் என்னால் புறநகர் சென்னையான வேளச்சேரி, பள்ளிக்கரணை போன்ற சில இடங்களை தவிர எங்குமே தண்ணீரை நிரப்ப முடியவில்லை.. விசாரித்த போதுதான் தெரிந்தது, சரியாக திட்டமிட்டு ஏரிகளில் தண்ணீரை குறைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று.. </div><div><br></div><div>உடனே 4 ஆயிரம் கோடி எங்கே என்று கொக்கரித்தது சில கூட்டம்... அடேய் அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் சென்னையை அழித்திருப்பேன்..</div><div>அப்படி இருந்தும் பள்ளிக்கரணை ஏரி கரைகள் உயர்த்தப்படாதது குற்றம் தானே?</div><div>குற்றம்தான் யார் செய்த குற்றம்?</div><div>கரையோரத்தில் இருக்கும் கோயில்களை கட்டியவர் குற்றமா? கோயிலை இடித்தால் இந்து மதத்திற்கு எதிரி என்று பொய் பிரச்சாரம் செய்பவர்களின் குற்றமா ?அல்லது பழிச்சொல் வந்தால் பரவாயில்லை என்று அந்தக் கோயிலை இடித்து கரையை பலப்படுத்தி உயர்த்தாமல் இருந்தவர்களின் குற்றமா?</div><div>எது எப்படியோ என் ஆசை கொஞ்சம் நிறைவேறியது..</div><div>ஊரே தத்தளிக்க முன்னெச்சரிக்கை இல்லாமல் மதியற்ற ஒருவர் மாண்புமிகுவின் மனைவிக்கு அலைபேசியில் உதவி கேட்டு அழைத்த சர்ச்சைகள் ஆங்காங்கே.. எப்பவும் போல நான்கு பேர் வீடியோ எடுக்க மூட்டை தூக்கும் முட்டாள் கூட்டம் ஒரு பக்கம்.. </div><div>வாம்மா மின்னல் போல திடீரென்று வந்து நொட்டை சொல்லும் மண்டியிட்ட மாமனிதர் ஒரு பக்கம். </div><div>இரண்டு நாட்களுக்கு முன்பு கொடுத்த உணவை எடுத்து நாடகம் போடும் நாடக கம்பெனி ஒரு பக்கம்...</div><div>வாயில் மட்டுமே வடை சுடும் ராஜ் பவன் ராங்கி எங்கு சென்றார் என்ற கேள்விகள் ஒரு பக்கம்...</div><div>இருந்தாலும் என் முன்னோர்கள் வந்து சென்றதற்கும் இதற்கும் பல வேறுபாடுகளை காண முடிகிறது.. பவர் இல்லாமல் வந்து பத்து நாள் முடக்கி போட்டு பல பேரை பலி வாங்கிய என் முன்னோர்களை காட்டிலும் பத்து மடங்கு பவரோட வந்த என்னால் அதில் பாதி சேதாரம் கூட செய்ய முடியவில்லை.. திட்டமிட்டு பவர் கட் செய்து ஆங்காங்கே மக்களை பாதுகாத்து என் பவரை குறைத்துவிட்டது இந்த அரசாங்கம்..</div><div>அப்படி இருந்தும் நடுநிலை அமுக்கிகள் (translate in English) என்று சொல்லிக்கொண்டு கேப்டன் விஜயகாந்த் சொல்வதைப்போல ஒரு பக்கம் தானே காட்டுனீங்க என்பதைப் போல் அவதூறுகளை மட்டுமே காட்டிக் கொண்டிருந்தன சில அமுக்கிகள்..</div><div>பாதம் தாங்கிகள், ஆட்டுக் கூட்டங்கள் எல்லாம் ஆங்காங்கே குறை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்த போது பறந்து வந்த ஒன்றிய ஆய்வுக் குழு சிறப்பாக செயல்பட்டதால் இயல்பு வாழ்க்கை ஈஸியாக திரும்பிவிட்டது என்று நற்சான்றிதழ் கொடுத்து கொக்கரித்த கூட்டங்களின் வாயில் வாழைப்பழம் வைத்தது.. </div><div>இதிலும் ஒரு சூட்சமம் இருக்கலாம்.. ஜாக்கிரதையாக இருங்கள் ஒன்றிய நிவாரண தொகையை குறைத்துக் கொடுக்க பாராட்டு பத்திரம் வாசிக்கவும் வாய்ப்பிருக்கிறது..</div><div>எது எப்படியோ மனசாட்சி உள்ளவர்களுக்கு தெரியும் என் வலிமை என்னவென்று.. என்னை சமாளித்த அரசுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும்..</div><div>என்னால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணத் தொகை வாங்கிக் கொண்டு தங்கள் வாழ்க்கை பயணத்தை மகிழ்ச்சியாக தொடருங்கள்.. </div><div>எங்கள் குடும்பத்திலிருந்து இனிய எவராவது வருவாராயின் பல மடங்கு பலத்துடன் வருவோம்..</div><div>அரசாங்கம் மட்டுமல்ல மக்களாகிய நீங்களும் எச்சரிக்கையாக இருங்கள்..</div><div>அரசாங்கம் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் ஆங்காங்கே வாட்டர் பீட் போடும் முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.</div><div>அமேசானில் நான்கு பேர் செல்லும் படகு எட்டாயிரம் ரூபாய்தான் வரும் வீதிக்கு ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்..</div><div>மீண்டும் சந்திப்போம்.. நன்றி</div><div><br></div><div>இப்படிக்கு உங்கள் அன்பு மிக்ஜாம் புயல்..</div><div><br></div>சாந்திபாபு http://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-85724246671493812422023-11-06T07:15:00.001+05:302023-11-06T07:15:51.654+05:30பெரியாரைப் பற்றி அறிஞர் அண்ணா<div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiYAWDuey9KWPoKwOy4w9i0UsLA0sgXDNn79JmnJo0T5eNub2gTUavILceHj64bjcGpc2TAyzPAT40wt5umz4osAR8AKvjAqik9bYL5ynbMfD8RtD3V5wSTaqkEMSZwkfLOYcnQDghO0hQaDWVlRWRdlPpYfZVjMLL-M_ZTHUUqUEia8qt7wtYwYLO831Q" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiYAWDuey9KWPoKwOy4w9i0UsLA0sgXDNn79JmnJo0T5eNub2gTUavILceHj64bjcGpc2TAyzPAT40wt5umz4osAR8AKvjAqik9bYL5ynbMfD8RtD3V5wSTaqkEMSZwkfLOYcnQDghO0hQaDWVlRWRdlPpYfZVjMLL-M_ZTHUUqUEia8qt7wtYwYLO831Q" width="400">
</a>
</div><br></div>நான் கண்டதும் கொண்டதும் <div>அந்த ஒரே தலைவரைத்தான்.</div><div><br></div><div>இப்போது நான் உள்ள வயதில் அவர் இருந்தார், </div><div>நான் அவருடன் இணைந்த போது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு.</div><div><br></div><div>அதற்கு முன் முப்பது ஆண்டுகள் பணியாற்றி வந்திருக்கின்றார்.</div><div><br></div><div>இந்த " ஆண்டுகள் " தமிழரின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டுகள்.</div><div><br></div><div>" திடுக்கிட வைக்கிறாரே! </div><div>திகைப்பாக இருக்கின்றதே! </div><div>எரிச்சல் ஏற்படுத்துகின்றாரே</div><div>ஏதேதோ சொல்லுகிறாரே! </div><div><br></div><div>இவரை விட்டு வைக்கக் கூடாது! ஒழித்துக் கட்டியாக வேண்டும்! </div><div>நானே தீர்த்துக் கட்டுகிறேன்! என்று பலர் ப</div><div>ஏசினர்; பகைத்தனர்; எதிர்த்தனர்; ஏளனம் செய்தனர்; மறுப்பு உரைத்தனர்.</div><div><br></div><div>ஆனாலும் மூலையில் நின்றாகிலும்,மறைந்து இருந்தாகிலும் அவர் பேச்சைக் கேட்ட வண்ணம் இருந்தனர்.</div><div>அந்தப் பேச்சு ஐம்பது ஆண்டுகளுக்கப் மேலாக நடந்தபடி இருந்தது. </div><div><br></div><div>எதிர்த்தவர்கள், ஏளனம் புரிந்தவர்கள், ஏனோதானோ என்று இருந்தவர்கள், தத்தமது நிலை தன்னாலே மாறிடக் கண்டனர்.</div><div><br></div><div>கொதித்தவர்கள் அடங்கினர்; மிரட்டினோர் பணிந்தனர்; </div><div>அலட்சியம் செய்தோர் அக்கறை காட்டினர்; </div><div><br></div><div>அவருடைய பேச்சோ தங்குதடையின்றி வேகம் குறையாமல் பாய்ந்தோடி வந்தது.</div><div><br></div><div>மலைகளைத் துளைத்துக் கொண்டு, கற்களை உருட்டிக் கொண்டு காடுகளை கழனி வளம் பெறச் செய்து கொண்டு </div><div>ஓசை நயத்துடன்,ஒய்யார நடையுடன்! </div><div><br></div><div>அங்கே பேசுகிறார், </div><div>இங்கே பேசுகிறார், </div><div>அதைக் குறித்துப் பேசுகிறார், </div><div>இதைக் குறித்துப் பேசுகிறார் என்று தமிழகம் ஐம்பது ஆண்டுகளாகக் கூறி வருகின்றது.</div><div><br></div><div>மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் - எது நேரிடினும் - </div><div>என்ற உரிமைப் போர், </div><div>அவருடைய வாழ்வு முழுவதும். </div><div><br></div><div>அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. </div><div>அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை. </div><div><br></div><div>இன்று அனைவரும் பெற்றுள்ளனர் </div><div><br></div><div>இன்று தமிழகத்தில் தூய்மையுடன், மனத்திற்குச் சரியெனப் பட்டதை எவரும் எடுத்து உரைக்கலாம் என்ற நிலை உறுதிப்படுத்தப் பட்டு இருக்கின்றது.</div><div><br></div><div>அறிவுப்புரட்சியின் முதற்கட்ட வெற்றி இது! </div><div>இதற்கு முழுக்க முழுக்கப் பொறுப்பாளர் பெரியார்! </div><div><br></div><div>இந்த வெற்றி கிடைத்திட அவர் ஆற்றிய தொண்டின் அளவு, மிகப்பெரியது.</div><div><br></div><div>தமிழகத்தில் இன்று அவரால் ஏற்பட்டுள்ள இந்த நிலை, இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாது.</div><div><br></div><div>பிற பகுதியினர் இதுபற்றிக் கேள்விப்பட்டபோது வியர்த்துப் போகின்றனர். </div><div><br></div><div>அப்படியா! முடிகிறதா!நடக்கிறதா!விட்டு வைத்து இருக்கின்றார்களா? என்று கேட்கின்றார்கள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு.</div><div><br></div><div>அரித்துவாரம், கல்கத்தா, பாட்னா, கான்பூர் காசி, லாகூர், அலகாபாத், அமிர்தசரஸ் மேலும் இதுபோன்ற பல நகரங்களில்</div><div> என்னையும் உடன் அழைத்துக் கொண்டு பெரியார் சுற்றுப்பயணம் செய்த போது </div><div>ஒவ்வொரு ஊரிலேயும் இதுபோலத்தான் கேட்டனர். </div><div><br></div><div>யார்? அந்த ஊர்களிலே உள்ள பகுத்தறிவுவாதிகள்!</div><div><br></div><div>அந்தப் பகுத்தறிவுவாதிகள் படிப்பார்கள் பெரிய பெரிய ஏடுகளை, எழுதுவார்கள் அழகழகான கட்டுரைகளை, </div><div>கூடிப் பேசுவார்கள் சிறிய மண்டபங்களில் போலீசு பாதுகாப்புப் பெற்றுக் கொண்டு! </div><div><br></div><div>இங்கு?</div><div><br></div><div>இங்கா! இவர் பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? </div><div>அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டா? </div><div>எதைக் கண்டு அவர் திகைத்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது?</div><div><br></div><div>ஏ! அப்பா ! </div><div>ஒரே ஒருவர் </div><div>அவர் நம்மை அச்சு வேறு, ஆணி வேறாக எடுத்து வீசுகிறாரே என்று </div><div><br></div><div>இந்த நாட்டை என்றென்றும் விடப்போவதில்லை என்று எக்காளமிட்டுக் கொண்டு இருந்த பழமை அலறலாயிற்று! </div><div><br></div><div>புதுப்பதுப் பொருள் கொடுத்தும்,</div><div>பூச்சு மெருகு கொடுத்தும் </div><div>இன்று பழமையின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றாலும்,</div><div><br></div><div>விழுந்த அடியால் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டது என்பதனை அறியாதார் இல்லை!</div><div><br></div><div>எனவேதான் </div><div>பெரியாருடைய பெரும் பணியை ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல,</div><div>ஒரு சகாப்தம் - ஒரு காலகட்டம் - ஒரு திருப்பம் என்று நான் கூறுவது வாடிக்கை. "</div><div><br></div><div>- பேரறிஞர் அண்ணா -</div>சாந்திபாபு http://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-74774620265819673282023-10-22T16:25:00.001+05:302023-10-22T16:25:16.103+05:30A2B புறக்கணிப்பு வரலாறு..<div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjqaU_LRcz_jFH4n5huJh06a5u7bcPJwd7agyGfxCU4F30z2C_Xu4O_895ZR6AnI7k5p8Nyg5sN28NytQ1inMb8JUbQvBokjNOYDEWeAH7ea0LZ7buOz_wnBS8-fSOTU3cjxZ_-6xHgYnXnaNGBE7EB96kBnhK9s7fSXavSaeEgmTwEQbGrbhOvEsaQ2WQ" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjqaU_LRcz_jFH4n5huJh06a5u7bcPJwd7agyGfxCU4F30z2C_Xu4O_895ZR6AnI7k5p8Nyg5sN28NytQ1inMb8JUbQvBokjNOYDEWeAH7ea0LZ7buOz_wnBS8-fSOTU3cjxZ_-6xHgYnXnaNGBE7EB96kBnhK9s7fSXavSaeEgmTwEQbGrbhOvEsaQ2WQ" width="400">
</a>
</div><br></div>1940 வரையிலும் கூட ஹோட்டல் எனும் பெயரே அதிகம் புழங்கவில்லை. க்ளப்பு கடை (மெம்பர்களுக்கு மட்டுமான கடையாக இருந்து மெல்ல மற்றவர்களுக்கும் விற்கத் தொடங்கியவை), காபி கடை (cafe என்பதின் மருவல்), பட்ஷணக் கடை (டிஃபனுக்கு தமிழ்ப் பெயர் பலகாரம்) என்றெல்லாம் தான் இருந்தது. ஹோட்டலில் சாப்பிட்டு வாழ்வது என்பது சபிக்கப்பட்ட வாழ்க்கை என்று கருதிய காலம். தமிழ் பிரமணர்கள், கன்னட பிராமணர்கள், நெல்லை பிள்ளைமார்கள் போன்ற பிரிவினர் கையில் மட்டுமே இருந்த தொழில் அது.<div>பெரும்பாலான ஹோட்டல்களில், "பிராமணர்கள் மட்டும் சாப்பிடும் அறை" என்று தனியாக இருந்தது. 1941 ஆம் ஆண்டு வெளிவந்த சபாபதி போன்ற பழைய திரைப்படங்களில் இவைகளை காணலாம்! மேலும் இதையெல்லாம் தி.ஜ, லாசரா காலத்துக் கதைகளில், அப்பம், வடை, தயிர்சாதம் நாவலில் கதைப் பின்னணியாக பாலக்குமாரன் விரிவாக எழுதி இருப்பதைப் படிக்கலாம். </div><div><br></div><div>காங்கிரஸ் மாநாட்டில் சாப்பாட்டுப் பந்தியில் பிராமணர், சூத்திரர் என தனி தனி பந்திகள் அமைக்கப்பட்டதை எதிர்த்ததுதான் தந்தை பெரியார் முதலில் காங்கிரஸில் கருத்து மாறுபாடு கொண்டார். பின்னாளில் அவர் மாநாடு நடத்தியபோது, "நாடார் சமைக்கும் உணவு பறிமாறப்படும்" என்று நோட்டீஸிலேயே போட்டார். நாடார்கள் என்பது அந்தக் காலத்தில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள். தொட்டாலே தீட்டு எனப் பார்க்கப்பட்டவர்கள். அவர்களை அழைத்து பொதுச் சமையல் செய்யச் சொல்லி சமத்துவப் புரட்சி நிகழ்த்தினார். </div><div><br></div><div>உணவுக் கூடங்களில், தொழில்களில் இத்தகைய ஒரு சாராரின் ஆதிக்கம், அடக்குமுறைகள் தமிழ்நாட்டில்தான் முதன் முதலாக எதிர்க்கப்பட்டது. பின்னாளில் மாற்றப்பட்டது.</div><div><br></div><div>அதை முதன்முதலில் எதிர்த்தவர் பெரியார். மாற்றியவர் பெரியார்.</div><div><br></div><div>இத்தனை ஆதாரங்கள், காட்சிப்படங்கள், காணொளிகள் இருக்கும்போதே முழுப் பூசணியை உப்புமாவில் மறைக்கப் பார்க்கின்றனரே!</div><div><br></div><div>இவர்கள் நமக்குக் காட்டும் அந்தக்காலச் சரித்திரம் எந்த லட்சணத்தில் இருக்கும்!!</div><div><br></div><div>#ஈரோடு_குரங்குகுட்டை பதிவிலிருந்து</div>சாந்திபாபு http://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-78512173348749709862023-09-30T11:49:00.000+05:302023-09-30T11:50:13.483+05:30ஸ்டாலின் மிசாவில் கைது பொய்யா உண்மையா ?<div class="q-box qu-bg--white qu-borderBottom spacing_log_question_header dom_annotate_question_header"><div class="q-box"><div class="q-text qu-dynamicFontSize--xlarge qu-fontWeight--bold qu-color--gray_dark_dim qu-passColorToLinks qu-lineHeight--regular qu-wordBreak--break-word">பொய் என்று சொல்பவர்களிடம்..</div><div class="q-text qu-dynamicFontSize--xlarge qu-fontWeight--bold qu-color--gray_dark_dim qu-passColorToLinks qu-lineHeight--regular qu-wordBreak--break-word">கீழ்க்கண்ட கேள்விகளை கேட்டால் பதில் வராது</div><div class="q-text qu-dynamicFontSize--xlarge qu-fontWeight--bold qu-color--gray_dark_dim qu-passColorToLinks qu-lineHeight--regular qu-wordBreak--break-word"><br></div><div class="q-text qu-dynamicFontSize--xlarge qu-fontWeight--bold qu-color--gray_dark_dim qu-passColorToLinks qu-lineHeight--regular qu-wordBreak--break-word">1.ஸ்டாலின் எந்த குற்றத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்? </div><div class="q-text qu-dynamicFontSize--xlarge qu-fontWeight--bold qu-color--gray_dark_dim qu-passColorToLinks qu-lineHeight--regular qu-wordBreak--break-word">2.அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (FIR) எங்கே? பதியப்பட்டுள்ளதா?<br></div><div class="q-text qu-dynamicFontSize--xlarge qu-fontWeight--bold qu-color--gray_dark_dim qu-passColorToLinks qu-lineHeight--regular qu-wordBreak--break-word">3.அந்த வழக்கின் குற்றப்பத்திரிகை எப்பொழுது தாக்கல் செய்யப்பட்டது? செய்யப்பட்டதா?</div><div class="q-text qu-dynamicFontSize--xlarge qu-fontWeight--bold qu-color--gray_dark_dim qu-passColorToLinks qu-lineHeight--regular qu-wordBreak--break-word">அந்த வழக்கின் இறுதி தீர்ப்பு என்ன?</div><div class="q-text qu-dynamicFontSize--xlarge qu-fontWeight--bold qu-color--gray_dark_dim qu-passColorToLinks qu-lineHeight--regular qu-wordBreak--break-word">4.அப்படி FIR இல்லாமல் எப்படி ஒரு முன்னாள் முதல்வர் மகனை எப்படி பல மாதங்களுக்கு சிறை வைக்க முடியும்?</div><div class="q-text qu-dynamicFontSize--xlarge qu-fontWeight--bold qu-color--gray_dark_dim qu-passColorToLinks qu-lineHeight--regular qu-wordBreak--break-word">5.மிசாவில் மட்டும் தான் FIR, புகார் இல்லாமல் கைது செய்ய முடியும் என்பது உண்மையா? </div><div class="q-text qu-dynamicFontSize--xlarge qu-fontWeight--bold qu-color--gray_dark_dim qu-passColorToLinks qu-lineHeight--regular qu-wordBreak--break-word">6.அப்படி FIR இல்லை என்றால் ஸ்டாலின் மிசாவில் தான் கைது செய்யப்பட்டார் என்பது உண்மை தானே?</div><div class="q-text qu-dynamicFontSize--xlarge qu-fontWeight--bold qu-color--gray_dark_dim qu-passColorToLinks qu-lineHeight--regular qu-wordBreak--break-word">7.ஷா கமிஷன் அறிக்கையில் எந்த தலைவர் பெயர் உள்ளது?</div><div class="q-text qu-dynamicFontSize--xlarge qu-fontWeight--bold qu-color--gray_dark_dim qu-passColorToLinks qu-lineHeight--regular qu-wordBreak--break-word">8.ஆற்காடு வீராசாமி, சிட்டி பாபு பெயர் உள்ளதா?</div><div class="q-text qu-dynamicFontSize--xlarge qu-fontWeight--bold qu-color--gray_dark_dim qu-passColorToLinks qu-lineHeight--regular qu-wordBreak--break-word"><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh0pGYA7QDcSrtdOt19npesXSlyH8PVlc4DTf0oPmpgDm7kZtKSJSlwhpb_9hgH41U1KSmvj19t6eF7fXTXS09nPThn7vXkTTd23Dfc6iflBWD0ZPck64naZeQOXmSOawzNOrAmYEA6JR5AovKdN7DAAgLhAcqitjHd6lf6pTN3jV55wbhI09xCg-Umz1g" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh0pGYA7QDcSrtdOt19npesXSlyH8PVlc4DTf0oPmpgDm7kZtKSJSlwhpb_9hgH41U1KSmvj19t6eF7fXTXS09nPThn7vXkTTd23Dfc6iflBWD0ZPck64naZeQOXmSOawzNOrAmYEA6JR5AovKdN7DAAgLhAcqitjHd6lf6pTN3jV55wbhI09xCg-Umz1g" width="400">
</a>
</div><br></div><div class="q-text qu-dynamicFontSize--xlarge qu-fontWeight--bold qu-color--gray_dark_dim qu-passColorToLinks qu-lineHeight--regular qu-wordBreak--break-word">இந்த கேள்வி மட்டும் கேளுங்கள்...<br></div></div></div>சாந்திபாபு http://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-50446442299618789302023-09-13T10:44:00.000+05:302023-09-13T10:45:07.042+05:30"உடன்கட்டை எனும் சதி"ஒரு விரிவான பார்வை...<div>Donald Campbell என்கிற ஐரோப்பியன் இந்தியாவைக் காணும் திட்டத்தில் கப்பல் ஏறி பாதி வழியில் கப்பல் உடைந்து ஒரு வழியாக இந்தியக் கரையேறி கைது செய்யப்படுகிறான். சிறையில் அடைக்கப்பட்டு தம் நண்பர்களின் உதவியுடன் விடுதலையாகி பின் இந்தியாவைச் சுற்றி வந்து தன் அனுபவங்கள் பற்றி கேம்ப்பெல் எழுதிய கடிதங்களின் தொகுப்பை வாசித்தேன்.</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEih26er2UILtkqjYpGVU_BGNpO3rRjtPRTzG7K5FjX6g_ovPxVmeUKuHW4MwsmY_MnSRSW2d673ozsG7_G-JmNVZ6wFhBs_bebshFMIaRMK5_8IS7Pt-tolQU3VIQZLzAekCG153beKdb48CZWyzVG1Axx0wjWOM0LsDpEbTIl10O32XmAML8Xw4ZvQF8Q" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEih26er2UILtkqjYpGVU_BGNpO3rRjtPRTzG7K5FjX6g_ovPxVmeUKuHW4MwsmY_MnSRSW2d673ozsG7_G-JmNVZ6wFhBs_bebshFMIaRMK5_8IS7Pt-tolQU3VIQZLzAekCG153beKdb48CZWyzVG1Axx0wjWOM0LsDpEbTIl10O32XmAML8Xw4ZvQF8Q" width="400">
</a>
</div><br></div><div>இந்த நூல் Indian culture என்கிற பொது வலைதளத்தில் வேறு தகவல் தேடிய போது கண்ணில் பட்டது. </div><div>இதில் அவர் திருவிதாங்கூரில் இருந்து பாளையங்கோட்டை, மதுரை திருச்சி தஞ்சாவூர் நாகப்பட்டினம் வழியாக சென்னை சென்று திரும்பிய அனுபவங்களை குறிப்பிட்டிருக்கிறார். அதில் தஞ்சையில் அவர் பார்த்ததை குறிப்பிட்டு இருப்பது மிக முக்கியமான பதிவாகும். இது 1798ல் எழுதப்பட்டது. அப்போது இந்தியர்களை ஐரோப்பியர்கள் Hindu என்ற அடையாளப்படுத்தவில்லை Gentoo என்றே அடையாளப்படுத்தினார்கள். ஐரோப்பியர்கள் நம் மக்களை. Natives என்றோ சிலசமயம் திமிராக savages என்றோ black man என்றோ குறிப்பிடுவார்கள். இதிலும் தொடக்கத்தில்.மட்டும் Gentoo என்று குறிப்பிடுகிறார். அதன் பிறகு Brahmin என்ற வார்த்தையை இந்த குறிப்பில் நிறைய தடவை உபயோகப் படுத்தியுள்ளார். நான் தான் திரும்பத் திரும்ப உபயோகப்படுத்த சங்கடப்பட்டுக் கொண்டு விட்டு விட்டேன். 👇👇👇👇👇👇👇👇</div><div><br></div><div>"இந்துப் பெண் ஒருத்தி, இறந்து போன தன் கணவனோடு சேர்த்து எரிக்கப்பட விருந்த நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றேன் இந்த வேதனைதரும் கொடிய சம்பவத்தை நிகழ்த்தத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இடம் தஞ்சாவூர் கோட்டையிலிருந்து ஒருமைல் வடக்கே உள்ள காவிரி ஆற்றின் கரை</div><div><br></div><div>அந்தப் பெண்ணுக்கு 16 வயதிற்கு உள்ளே தான் இருக்கும் வெள்ளை சேலை கட்டி இருந்தாள். தலையிலும் கழுத்தைச் சுற்றிலும் வெள்ளை நிற மல்லிகை பூ சூடி இருந்தாள். அவளைச் சுற்றி 20 பெண்கள் நின்று கொண்டு ஒரு வெள்ளைத் துணியை அவள் தலைக்கு மேல் வெயில் படாமல் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து 20 அடி தள்ளி சில பிராமணர்கள் விறகுக் கட்டைகளால் எட்டடி நீளத்தில் நான்கடி அகலத்தில் சிதை தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.</div><div>முதலில் மூன்றடி உயரத்திற்கு கம்புகளை செங்குத்தாக நிறுத்தினார்கள் உள்ளே சிறிய மரத்துண்டுகளால் நிரப்பினார்கள்</div><div>பக்கத்தில் மூங்கில் கழிகளின் மேல் கிடத்தப்பட்டிருந்த இறந்தவருக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும். இறந்தவரின் உடம்பைச் சுற்றி நான்கு பிராமணர்கள் முதல் முறை சூரியனுக்கு எதிர் திசையாகவும் அடுத்த மூன்று முறை சூரிய ஒளி வீசும் திசையிலுமாக சுற்றி வந்தார்கள். இப்போது அவர்கள் தங்களுடைய நீண்ட தலைமுடியை அவிழ்த்து விட்டுக் கொண்டும் உடனே மீண்டும் முடிந்து கொண்டும் ஏதோ மந்திரங்களை உச்சரித்தார்கள்.</div><div>மற்றவர்கள் மந்திரம் சொல்லிக்கொண்டு கையில் இருந்த பச்சை இலையால் தண்ணீரை எடுத்து அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த சாண எருக்களின் மீது தெளித்துக் கொண்டிருந்தார்கள். வடகிழக்கு மூலையில் அமர்ந்திருந்த ஒரு வயதானவர் கையில் இருந்த ஓலைச் சுவடியில் உள்ளதை வாசித்துக் கொண்டிருந்தார். </div><div>அந்த சூழலின் அழுத்தமும் சோகமும் தாங்க முடியாமல் அருகில் இருந்தவரிடம் இன்னும் எவ்வளவு நேரம் நடக்கும் என்று கேட்டேன். இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகும் என்று சொல்லவே நான் கோட்டையை நோக்கித் திரும்பினேன்.</div><div>500 கெஜ தூரம் நான் சென்றிருக்கும் பொழுது ஒருவர் என் பின்னாலேயே வந்து திரும்பி வருமாறு.அழைத்தார். சடங்கு உடனே நடத்தப்பட இருப்பதாகச் சொன்னார்.</div><div>நான் சென்றபோது அந்தப் பெண்ணை மற்ற பெண்கள் அழைத்துச் சென்று ஆற்றில் குளிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். அவள் நெற்றியில் செந்நிறத்தில் ஆறு பென்ஸ் காசு அளவுக்கு பொட்டு வைத்தார்கள். பிறகு ஈரமண் போன்று எனக்குத் தெரிந்த ஏதோ ஒன்றை பிசைந்து அவள் நெற்றியில் தடவினார்கள்.</div><div>பிறகு அந்தப் பெண் சிதைக்கு அழைத்து வரப்பட்டு அவள் சிதையைச் சுற்றி மூன்று தடவை நடந்தாள். சிதையில் அவள் கணவன் உடல் ஏற்கனவே ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. இவள் யாருடைய துணையும் இல்லாமல் தானாகவே அதில் ஏறி தன் கணவன் உடல்அருகில் அமர்ந்தாள்.</div><div>பிறகு தான் அணிந்திருந்த நகைகளின் திருகுகளை, திருகி கழற்றி அந்த ஆபரணங்களை கையில் எடுத்து மீண்டும் அந்த திருகுகளை பொருத்தி பக்கத்தில் நின்ற இரு பெண்களிடமும் ஆளுக்கு ஒன்றாக கொடுத்தாள். தன் காதில் அணிந்திருந்த ஆபரணங்களையும் அவள் மிகுந்த நிதானத்துடன் திருகை கழற்றி எடுத்து, மீண்டும் திருகை பொருத்தி அந்த பெண்களிடம் பிரித்துக் கொடுத்தார். பிரித்துக் கொடுக்கும் பொழுது ஏதோ சிறிய குழப்பம் ஏற்பட அவள் பொறுமையாக அதை சரியாகப் பிரித்துக் கொடுத்தாள்.</div><div><br></div><div>பிறகு மெதுவாக அப்படியே மல்லாக்க சாய்ந்து படுத்தாள் ஒரு மஞ்சள் துணியால் தன் முகத்தை மூடிய பிறகு புரண்டு தன் கணவருக்கு நெருக்கமாக படுத்து தன் வலதுகையை தூக்கி அவர் மார்பின் மீது வைத்தாள். அதன் பிறகு எந்த அசைவுமின்றி காத்திருந்தார்.</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh7gqWCzVXYcpfg6WqI3DEWRxn16k0y8I4T7TtyxbRn_EVp0_yryFFGa8I5j2U8IaUVp-M23AXFwue4PcHLMctC9bai8ZAIuP-jbZUh1FLt_es9dSD7RL4q4g58kop_xQdzAAtPUw7WEG4VVpH-4LGi9nAetMoZ8tv_dtNRFSMAv1NMWeAxjxHIMIDTcCE" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh7gqWCzVXYcpfg6WqI3DEWRxn16k0y8I4T7TtyxbRn_EVp0_yryFFGa8I5j2U8IaUVp-M23AXFwue4PcHLMctC9bai8ZAIuP-jbZUh1FLt_es9dSD7RL4q4g58kop_xQdzAAtPUw7WEG4VVpH-4LGi9nAetMoZ8tv_dtNRFSMAv1NMWeAxjxHIMIDTcCE" width="400">
</a>
</div><br></div><div>பிராமணர்கள் இறந்தவரின் வாயில் சிறிது அரிசியையும் மீதி அரிசியை அவள் மீதும் தூவினார்கள் பிறகு சிறிது நீரை இருவர் மீதும் தெளித்தார்கள். பிறகு ஒரு சிறிய கயிறு கொண்டு இருவரையும் சேர்த்துக் கட்டினார்கள். பிறகு இருவர் உடலும் மற்றவர் கண்களில் மறையும் அளவுக்கு மரக்கட்டைகளை சுற்றி அடுக்கினார்கள். குறுக்குவாக்கில் சிறிது கட்டைகளை அடுக்கிய பிறகு ஒரு பாத்திரத்தில் இருந்து எண்ணெய் போன்ற திரவத்தை அந்த பெண் இருந்த பகுதியில் ஊற்றினார்கள். பிறகு மீண்டும் கட்டையை அடுக்கினார்கள். இப்போது வெறும் விறகு குவியலாகவே எனக்குத் தெரிந்தது. இதே நேரத்தில் ஒரு பிராமணர் சிதைக்கு அருகே இருந்தவர் அந்தப் பெண்ணின் தலைப்பகுதி அருகே குனிந்து அவளை கூப்பிடுவது போல் சத்தம் கொடுத்தார். ஏதோ அவளிடம் சொல்வது போல சொல்லி பின் எல்லோரையும் பார்த்து சிரித்தார். பிறகு முழுவதுமாக வைக்கோலால் மூடினார்கள் சுற்றிலும் கயிறால் இறுக்கிக் கட்டினார்கள். பிறகு ஒருவர் சிறிது வைக்கோலை எடுத்து அருகில் கனன்று எரிந்து கொண்டிருந்த சாண எருக்களில் பற்ற வைத்து அதை சிதையில் போட்டார். பிறகு தீ நன்றாக பற்றுமாறு விசிறி விட்டார்கள். அப்போது காற்றும் அதே திசையில் வீச தீ வேகமாக பற்றி கொண்டது. ஏதோ ஒரு கிறீச்சிடும் ஒலியை நான் கேட்டது மாதிரியும் மற்ற இரைச்சலிடமிருந்து அதை தனிமைப்படுத்தி கேட்காதது மாதிரியும் இருந்தது. சில நிமிடங்களில் அந்த குவியல் சாம்பல் ஆனது.</div><div><br></div><div>நான் அந்த மொத்த நடவடிக்கைகளையும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன் என் பார்வை முழுவதும் அந்தப் பெண்ணின் மீது தான் இருந்தது அவளிடம் எந்தவிதமான பயமோ பீதியோ எதிர்ப்புணர்வோ இல்லவே இல்லை மிக சாந்தமாகவும் நிதானமாகவும் இருந்தாள். அவளுக்கு ஏதேனும் மயக்க மருந்து கொடுத்திருப்பார்கள் என்று நான் நம்பவில்லை.</div><div><br></div><div>இந்த கொடூரமான சடங்கை நடத்தியவர்கள் அதை நிறைவேற்றியதில் பெருமிதம் கொண்டிருந்த மாதிரியும் ஐரோப்பியன் ஒருவன் அதைப் பார்த்துக் கொண்டிருப்பது அவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதும் கோட்டைக்கு திரும்பிய வழியில் என் சிந்தனையாக இருந்தது."</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgnDOJ6RrAqUuM4jG9GeYzOms8eDQvyw0CjxOwJIrFea9OZTxZ95WBeWzg5I_1UCrviqWd2tEtUMrsarDk9OJ84kaj-A_rbbmpkn0grPr1EXAVXbGZJzr1wQwtxR4pAsDm9bmdotNfOZiQHbhmeiJenP9RaYnFOv-jEQ76bplerXicJ-w_kODKCZrsxkHg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgnDOJ6RrAqUuM4jG9GeYzOms8eDQvyw0CjxOwJIrFea9OZTxZ95WBeWzg5I_1UCrviqWd2tEtUMrsarDk9OJ84kaj-A_rbbmpkn0grPr1EXAVXbGZJzr1wQwtxR4pAsDm9bmdotNfOZiQHbhmeiJenP9RaYnFOv-jEQ76bplerXicJ-w_kODKCZrsxkHg" width="400">
</a>
</div><br></div>சாந்திபாபு http://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-20995937425137962972023-09-03T10:05:00.000+05:302023-09-03T10:06:04.372+05:30திமுக சித்தாந்தத்தை புரிந்து கொள்ள கொஞ்சம் எக்ஸ்ட்ரா அறிவு வேண்டும்...<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEi6TuBK_hNKR2gH7RmMA0khTtIh2D0JP4bof447QCH_5pn2n8694vi72ztSLGbwZ66tOVi-9hnw8d2T1vdkLR3-ZnB9iL2Ty-SAdPx0y15ArOuNNuTnWfOgOyxNP0SjyDwjFBZAl5Ac6fmTxInA6C8QA2ojq-HnqXC4VAeg3Y74eNU0xP11esaJbXeeJ0o" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEi6TuBK_hNKR2gH7RmMA0khTtIh2D0JP4bof447QCH_5pn2n8694vi72ztSLGbwZ66tOVi-9hnw8d2T1vdkLR3-ZnB9iL2Ty-SAdPx0y15ArOuNNuTnWfOgOyxNP0SjyDwjFBZAl5Ac6fmTxInA6C8QA2ojq-HnqXC4VAeg3Y74eNU0xP11esaJbXeeJ0o" width="400">
</a>
</div>திமுக ஒரு சாதாரண அரசியல் கட்சியல்ல .. இந்திய ஒன்றியத்தின் நன்னம்பிக்கை முனை<div>இந்தியா முழுமைக்கும் அரசியல் போக்கை</div><div>தீர்மானிக்கும் திராவிட முன்னேற்ற கழகம் (TREND SETTER)</div><div>திராவிட முன்னேற்ற கழகம், ஏனைய அரசியல் கட்சிகளை போல வெறும் ஒரு அரசியல் கட்சி கிடையாது.</div><div>அது ஒரு வெறும் மாநில கட்சி போல் தோன்றினாலும்,</div><div>அதையும் தாண்டிய ஒரு கோட்பாட்டின் அடிப்படையிலேயே அது உருவாகி உள்ளது..</div><div>சுயமரியாதை, சமுக நீதி, பகுத்தறிவு, மாநில சுயாட்சி என்ற நான்கு</div><div>தூண்களும் கொண்டு நிமிர்ந்ததுதான் திராவிட முன்னேற்ற கழகம்! </div><div>இந்த நான்கு அடிப்படை கோட்பாடுகளும் ஆரிய பார்ப்பனீய காலனி தத்துவத்துக்குநேர் எதிரான கோட்பாடுகளாகும் .</div><div>அதன் ஒவ்வொரு படிநிலையிலும் அந்த கருத்தியலில் மிகவும் உறுதியாக முன்னேறி கொண்டே வந்திருக்கிறது. </div><div>இதன் அடிப்படை கொள்கைகள் சராசரி மக்களின் புரிந்துணர்வை தாண்டிய வீச்சு கொண்டதாகும். </div><div>இந்த உண்மையை இன்றைய தலைமுறையினர் பெரிதாக அறிந்திருக்கவில்லை. </div><div>இதை புரிந்து கொள்வது சற்று சிரமமாக இருக்கலாம்.</div><div>திறந்த மனதோடு அணுகினால் மட்டுமே இந்த கருத்தின் ஆழத்தை புரிந்து கொள்ளமுடியும்.</div><div><br></div><div>அது ஒரு சாதாரண விடயம் அல்ல.</div><div>திராவிட கருத்தியல்:</div><div>தெலுங்கு, கன்னடம், வங்காளம், மராட்டியம் போன்ற 20 மாநில மொழிகளும்,</div><div>திராவிட தன்னாட்சி கோட்பாட்டை புரிந்து கொண்டு முன்னெடுக்க முயன்றால்</div><div>ஆரிய காலனி ஆட்சியின் முடிவுக்கு தேதி குறிப்பிடப்பட்டுவிடும்.,.</div><div>அதன் முடிவில் இருந்துதான் உண்மையான இந்திய ஒன்றியம் உருவாகும். </div><div>இந்த உண்மை ஆரிய பார்ப்பனீய காலனித்துவவாதிகளுக்கு புரியும். </div><div>எனவேதான் அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே திராவிட கருத்தியல் மீது வன்மைத்தோடு போர்</div><div>புரிகிறார்கள். </div><div>ஆம் இங்கு சரியான வார்த்தையைதான் பயன் படுத்தி உள்ளேன்.</div><div> ஆரிய பார்ப்பன சக்திகள் திராவிட முன்னேற்ற கழகத்தோடு ஒரு மூர்க்கமான</div><div>போரை நடத்தி கொண்டிருக்கிறார்கள். </div><div>இதற்கு கணக்கில்லாமல் உதாரணங்கள் உண்டு.</div><div>1967இல் பேறிஞர் அண்ணா தலைமையில், திராவிட முன்னேற்றக்கழகம்</div><div>தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டி ஆட்சியை பிடித்தது. </div><div>இந்த வெற்றியானது ஆரிய பார்ப்பன சக்திகளின் நெஞ்சில் விழுந்த இடியாக ஒலித்தது. </div><div>அன்றில் இருந்து அவர்களின் போர் இயந்திரங்கள் பல்முனை தாக்குதல்களை மேற்கொண்ட</div><div>வண்ணமே உள்ளது. </div><div>இந்திய ஒன்றியம் என்று அவர்களால் கூறப்படும் அமைப்பு,</div><div>உண்மையில் ஒன்றியம் என்ற கருத்தை இழந்து பல ஆண்டுகளாகி விட்டன.</div><div><br></div><div>ஒன்றியம் என்பதன் அர்த்தத்தை தமிழகம் புரிந்து கொண்ட அளவு ஏனைய மாநிலங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது.</div><div>பாசிசத்திற்கு எதிரான திராவிடம்:</div><div>ஒவ்வொரு மாநிலங்களும், தங்கள் தன்னாட்சி கருத்தியல் தளத்தில், நிமிர்ந்து</div><div>நின்று கொண்டு அமைக்கும் ஒன்றியம்தான்,</div><div>ஒரு உண்மையான ஒன்றியமாக இருக்க முடியும்.</div><div>ஒரு உண்மையான இந்திய ஒன்றியம் உருவாவதற்கு உரிய சரியான கோட்பாடுகள்,</div><div>திராவிட கருத்தியலில் மட்டும்தான் உண்டு.</div><div>ஆரிய பார்ப்பனீயத்தில் அது ஒருபோதும் சாத்தியப்படாது. </div><div><br></div><div>ஏனெனில், அடிப்படையில் அந்த கோட்பாடு, சக மனிதர்களை தரம் பிரித்து அடிமை படுத்தி ஏமாற்றி</div><div>பிழைக்கும் பாசிசத்தன்மை கொண்டதாகும். </div><div>நவீன உலகில் அதன் இருப்பு சந்தேகத்துக்கு உரியது. </div><div><br></div><div>இன்னும் சரியாக ஆராய்ந்து பார்த்தால்,</div><div>அந்த ஆரியத்தின் அத்தனை நச்சு விதைக்களும் ஹிட்லரின் நாசி தத்துவத்தில்</div><div>இருக்கிறது. உண்மையில் அந்த நாசி தத்துவமே, ஆரிய பார்பனீயம் பெற்ற திருட்டு குழந்தைதான். </div><div><br></div><div> இந்த பாசிசத்தை சரியாக புரிந்த கொண்டவர்கள் தென்னாட்டு திராவிடர்கள்தான். </div><div> திராவிட கருத்தியல் பொறிதான் இந்தி அல்லாத மாநிலங்களையும் சேர்த்து கொண்டு,</div><div>முழு இந்திய உபகண்டத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாக, வழிகாட்டுகிறது. </div><div><br></div><div>இந்திரா காந்தியின் எமர்ஜென்சியில், அதை எதிர்த்து சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது திராவிட முன்னேற்ற கழக அரசு.. </div><div><br></div><div>அன்று, அது சர்வதேச ஊடகங்களின் முதல் பக்க செய்தி என்பது, நினைவிருக்கட்டும்.</div><div>ஒன்றியம் என்ற பெயரில் தோன்றிய சர்வாதிகாரத்துக்கு சவுக்கடி கொடுத்து இந்திய ஒன்றியத்துக்கே ஜனநாயக காவலனாக அவதாரம் எடுத்தார் திராவிட முன்னேற்றக்கழக தலைவர் கலைஞர்.</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjMLVekohu0XACfdPaAtn2Tpy3r-v6yV25oP9STR_hkS2UE3e-gZTfOlLLY82osJZO-VfrPVLdbD3uo25Oo0GVVJTzWX-x4cy5LP7vphM1STOvfcUl_RneNeGmtl5ox61MXiFw5Gw3stSB815H4xHixdgx7rCsyXb-e7c2msXfJWmLHuViGtauurOSpGxw" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjMLVekohu0XACfdPaAtn2Tpy3r-v6yV25oP9STR_hkS2UE3e-gZTfOlLLY82osJZO-VfrPVLdbD3uo25Oo0GVVJTzWX-x4cy5LP7vphM1STOvfcUl_RneNeGmtl5ox61MXiFw5Gw3stSB815H4xHixdgx7rCsyXb-e7c2msXfJWmLHuViGtauurOSpGxw" width="400">
</a>
</div><br></div><div>அனைத்து இந்திய மாநிலங்களிலும் உள்ள அரசியல் கருத்தியல் கூடங்களிலும்,</div><div>இது ஒரு முக்கிய திருப்பு முனையாக எப்போதும் கருதப்படுகிறது. </div><div>அதன் தொடர்ச்சியாக , ஆட்சி கலைப்பு என்ற மிரட்டலையும் மீறி, எதிர்க்கட்சி என்று எந்த பெரிய கட்சியும் இல்லாத அந்த காலக்கட்டத்தில், திராவிட முன்னேற்ற கழகம்</div><div>மேற்கொண்ட அரசியல் முன்னெடுப்புக்கள்தான் ஒரு உண்மையான இந்திய ஒன்றியத்துக்கான மேடையாகும்.</div><div><br></div><div>நன்னம்பிக்கை முனை:</div><div>பார்ப்பனீயத்தின் ஆட்சி அதிகார கட்டுமானம் தங்கி இருப்பது “ஒன்றியம்”</div><div>என்ற பெயரில்தான்.</div><div>மாநிலங்கள்தோறும் உள்ள இந்தி அல்லாத தேசிய இனங்களின்</div><div>தனித்தன்மையை மெதுவாக அரித்து அரித்து இல்லாமல் செய்து விடுவதுதான்,</div><div>ஒன்றியம் என்பதன் தலையாய் பணி என்று, கருதிக்கொண்டு செயல்படுகிறார்கள்.</div><div><br></div><div>ஒன்றியம் என்ற பெயரில் இந்த திருட்டுத்தனத்தை அவர்கள் தொடர்ந்து</div><div>செய்துகொண்டே வருகிறார்கள்.</div><div>அதில் அவர்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றும் விட்டார்கள்.</div><div><br></div><div>ஆனால் அந்த வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு வலுத்து கொண்டே வருகிறது.</div><div>இந்தி மொழி அல்லாத மாநிலங்களில், திராவிட கருத்தியலும், திராவிட</div><div>முன்னேற்றக்கழகமும் எப்படி பார்க்கப்படுகிறது?</div><div><br></div><div> ஒரு மாநில தன்னாட்சி கோட்பாட்டின் நன்னம்பிக்கை முனையாகத்தான்,</div><div>திராவிடமுன்னேற்ற கழகம் பார்க்கப்படுகிறது.</div><div><br></div><div>இது பற்றி தமிழகத்தில் பலருக்கும் தெரியாத செய்திகள் உள்ளன.</div><div>மாநில உரிமைகள், மாநில பெருமைகள்,</div><div>மாநில கலாசார வரலாறு,</div><div>பண்பாட்டு விழுமியங்கள் பற்றி எல்லாம் பேசுவதே இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஏற்றதல்ல என்ற கருத்து ஆரியர்களால் காலத்துக்கு காலம் கட்டமைக்கபட்டு வந்துள்ளது. </div><div><br></div><div>குறிப்பாக, மாநில உரிமைகள் என்ற பேச்சை, செவிமடுத்தாலே,</div><div>ஆரிய பார்ப்பனீய சக்திகள், இடிகேட்ட நாகம் போல ஆகிவிடுகிறது. </div><div><br></div><div>ஏனெனில், அவர்களுக்குத்தான் எந்த மாநிலமும் இங்கு கிடையாதே?.</div><div><br></div><div>அதனால் எல்லா மாநிலங்களையும், அவற்றின் மாநில அடையாளங்களை சிதைப்பதே, தங்களுக்கு நல்லது என்ற நோக்கத்தில், செயல்படுகிறார்கள்..</div><div><br></div><div>வெறும் சமுக இயக்கமாக பிரசாரங்கள் மட்டும்செய்வார்கள் என்று கருதி இருந்த ஆதிக்க சக்திகளுக்கு, திராவிட முன்னேற்றக்கழகத்தின் அரசியல் மேடை, பெரிய அதிர்ச்சி வைத்தியமாகி விட்டது. </div><div><br></div><div>ஒடுக்கப்பட்டவன் ஒரு நாள் நிமிர்ந்து எழுவான் என்பது இயற்கை விதி. </div><div>பேராசைகாரர்களுக்கு, அது இலகுவில் புரிவதில்லை.</div><div><br></div><div>அவர்களுக்கு புரியக்கூடிய அந்த பாடத்தை அவர்களுக்கு முதலில் படிப்பித்தது திராவிட முன்னேற்றக்கழகம்தான்.</div><div><br></div><div>தமிழகம் கற்பித்த இந்த மாநில தனித்துவம் என்ற பாடம்,</div><div> தற்போது எல்லா மாநிலங்களுக்கும் பரவி விட்டது! </div><div>குறிப்பாக இந்தி அல்லாத மாநிலங்களில் மாநில தன்னாட்சியின் பேசு பொருளாக இருப்பது நிச்சயமாக தமிழகத்தின் தன்னாட்சியை நோக்கிய வரலாற்று பயணம்தான். .</div><div><br></div><div>இந்தி அல்லாத எந்த மாநிலத்து அரசியலை எடுத்துகொண்டாலும்,</div><div>அங்கெல்லாம் இப்போது மாநில உரிமைகள் பற்றிய கருத்துக்கள் பெரிய அளவில் ஒலிக்கிறது.</div><div><br></div><div>இந்திய மாநில மொழிகள், இன்றுவரை கொஞ்சமாவது காப்பாற்றப்படுவதற்கு முக்கிய காரணம்,</div><div>திராவிட கருத்தியலை முன்னெடுத்த தமிழகம்தான்.</div><div>தமிழகத்தின் இருமொழிக்கொள்கையின் வெற்றி,</div><div><br></div><div>இப்போது இதர மாநிலங்களை தட்டி எழுப்பிவிட்டது.</div><div>மும்மொழி என்ற பெயரில் இந்தியிடம் தங்கள் அடையாளங்களை பறிகொடுத்து விட்டோம் என்று,</div><div>இப்போது அவர்களுக்கு தெரிந்து விட்டது.</div><div><br></div><div>மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமே தொடர்பு மொழியாக இருக்கும் என்ற</div><div>உறுதி மொழியை திராவிட முன்னேற்றக்கழகம் இந்திய அரசிடம் இருந்து பெற்றது.</div><div><br></div><div>இதன் பலனை இன்று எல்லா மாநிலங்களும் அனுபவிக்கின்றன. </div><div>இன்று ஆங்கில கல்வியை, இந்தி அல்லாத மாநிலங்கள் பெற்று ,</div><div>முன்னேறி இருப்பதற்கு, அவைகள் தமிழகத்துக்கு நன்றி கூறவேண்டும்.</div><div><br></div><div>திராவிட முன்னேற்றக்கழகம் மேற்கொண்ட அரசியல் முன்னெடுப்புக்கள்தான் ஒரு உண்மையான இந்திய</div><div>ஒன்றியத்துக்கான மேடையாகும்.</div><div><br></div><div>தேசிய அரசியல்போக்கை மாற்றிய திராவிடம்:</div><div>அடுத்த கட்டமாக, வி.பி.சிங் ஆட்சியை நிறுவியதிலாகட்டும்,</div><div>அதன் பின்பு,மன்மோகன் சிங் ஆட்சியை கொண்டுவந்ததில் ஆகட்டும்,</div><div>திமுக, என்றைக்குமே புதிய போக்கை முன்னெடுப்பதாக தான் இருந்திருக்கிறது.</div><div><br></div><div>இந்தி அல்லாத எந்த மாநிலத்தில், எந்த மாநில கட்சி வெற்றி பெற்றாலும் திராவிட முன்னேற்றக்கழக</div><div>தலைவரை, முதன்மை விருந்தினராக, அவர்கள் அழைப்பது, ஒரு தொடர் நிகழ்வாக</div><div>நடப்பது ஒன்றும், தற்செயலான விடயம் அல்ல. </div><div><br></div><div>மாநில உணர்வுகள், அங்கெல்லாம் கொழுந்து விட்டு எரிகிறது.</div><div>அந்த மாநில மக்களின் நாடித்துடிப்பை, அந்த தலைவர்கள் எல்லோரும் அறிவார்கள்.</div><div><br></div><div>ஊடகங்கள் ஒன்று கூடி மறைத்தாலும், அந்த மக்களின் உணர்வுகளை,</div><div>அந்த மண்ணின் தலைவர்களும், கட்சிகளும், கவனத்தில் எடுத்து கொண்டே ஆகவேண்டிய நிலை உள்ளது. </div><div><br></div><div>கடந்த மக்களவை தேர்தலில், தலைவர் ஸ்டாலின், முன் மொழிந்த, பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி, என்பதை அப்போது ஏற்று கொண்டு, வெளிப்படையாக ஆதரவு கொடுக்காமையே,</div><div><br></div><div>இன்றைய அவலங்களுக்கு, ஒரு காரணம், என்று பலரும் சிந்திக்க தொடங்கி உள்ளனர்.</div><div><br></div><div>அந்தந்த மண்ணின் மைந்தர்களுக்கு, தங்கள் மாநில உரிமைககளின் முன்னோடி அடையாளமாக திராவிட முன்னேற்றக்கழகம்தான் தெரிகிறது.</div><div><br></div><div>பின் குறிப்பு:</div><div>ஆரியர்களின் வருகைக்கு முன்பு, இந்த மண்ணில், வாழ்ந்த மக்களிடையே, ஜாதி இல்லை.</div><div><br></div><div>மக்களை, ஜாதி என்ற வியாதி கொண்டு, பிரித்து ஆளும் வந்தேறி மதங்கள், இல்லை.</div><div>கடவுளின் பெயரால் அடக்குமுறை இல்லை.</div><div>ஆரிய வருகைக்கு முந்தைய, தொன்மையான திராவிட வரலாற்று சான்றுகளையும், விழுமியங்களையும்,</div><div>மீட்டு எடுப்பதில் திராவிடர்கள், வெற்றி பெற்றுவிட்டார்கள். </div><div>இதில் யாருக்கும் சந்தேகம் தேவை இல்லை.</div><div>இன்னும் வெகு தூரம் செல்லவேண்டி இருக்கிறது என்பது ,உண்மைதான்.</div><div>ஆனாலும், இந்திய துணை கண்டமெங்கும், திராவிட கருத்தியல், முன்னெப்போதையும் விட ,தற்போது கவனிக்கப்படுகிறது..</div><div><br></div><div>:- ராதா மனோகர்</div><div><br></div>சாந்திபாபு http://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-10006538145287543412023-08-12T09:00:00.001+05:302023-08-12T09:00:25.301+05:30பெரியார் தான் தமிழ்நாட்டுக்கு எல்லாம் பண்ணாரா?"<div>சங்கீகளும், தம்பிகளும் எப்போவுமே கேட்குற ஒரு கேள்வி... </div><div><br></div><div>"பெரியார் தான் </div><div>தமிழ்நாட்டுக்கு எல்லாம் பண்ணாரா?"</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEik6HLyTjMr7AEduCYwc-6ZaNHtW8a1cf49pd9ML2Tq2kwiK1ITRF6LNeuRWL8VEsU_l1_nfogBLSe7xST8mRJYNLmVEhSSDkuzrmn5_WEi09q_nI9rlcy2SmvAWccWUqXgPn4GSrD0Zk9lvvTDzr9Q6rlQIuYZ_lc27yDP_-M31qOiy6ewJr1ZJNrT8v0" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEik6HLyTjMr7AEduCYwc-6ZaNHtW8a1cf49pd9ML2Tq2kwiK1ITRF6LNeuRWL8VEsU_l1_nfogBLSe7xST8mRJYNLmVEhSSDkuzrmn5_WEi09q_nI9rlcy2SmvAWccWUqXgPn4GSrD0Zk9lvvTDzr9Q6rlQIuYZ_lc27yDP_-M31qOiy6ewJr1ZJNrT8v0" width="400">
</a>
</div><br></div><div>ரொம்ப நாளா, இதை பத்தி எழுதணும்னு இருந்தேன்.</div><div><br></div><div>"பெரியார் தான் எல்லாம் பண்ணாரா?" அப்படிங்கிற கேள்விக்கு என்னோட பதில்</div><div>'ஆமாம் பெரியார் தான் எல்லாம் பண்ணார்!'</div><div><br></div><div>வடக்குல அம்பேத்கர் என்ன பண்ணாரோ, அதை இங்கே பெரியார் பண்ணார். சொல்லப்போனா, 1927ல அம்பேத்கர் ‘மகத்’ பொதுக் குளத்துல ‘தீண்டப்படாத’ மக்களை திரட்டி தண்ணீர் எடுக்கும் போராட்டத்தை நடத்துனதுக்கு உந்துசக்தியா இருந்ததே 1925ல பெரியார் வைக்கத்துல நடத்துன சத்தியாகிரகம்தான்னு அம்பேத்கர்</div><div><br></div><div>நடத்துன “Mook Nayak” பத்திரிகையோட தலையங்கத்துல் பதிவு பண்ணியிருக்கார்.</div><div><br></div><div>- அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன் உட்பட எத்தனையோ பேரால முடியாத விஷயங்களை செஞ்சு காட்டுனவர் பெரியார். புத்தர் கூட தோத்து போனார். ராமலிங்க வள்ளலார் எரிச்சு கொல்லப்பட்டார்.</div><div>- 2000 வருஷமா கண்ணை மூடிட்டு பின்பற்றி வந்த சாஸ்திரத்தை, ஜாதியை, மூடநம்பிக்கைகளை இவ்வளவு வலிமையா பெரியாரை விட வேற யார் எதிர்த்தது இருக்காங்க? ஒரு பேரை சொல்லுங்களேன் பார்ப்போம்..</div><div><br></div><div>- இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்குறதுக்கு 30 வருஷம் முன்னாடி இருந்தே, வகுப்புவாரி</div><div>இடஒதுக்கீடு வேணும்ன்னு குரல் கொடுத்தவர் பெரியார். காங்கிரஸ் கட்சியில சேர்ந்து 6 வருஷமா கேட்டும் இடஒதுக்கீட்டு தீர்மானத்தை கொண்டுவராததால, "சமூகத்தை பத்தி கவலைப்படாம, சுதந்திரம் கிடைச்சு என்ன பிரயோஜனம்...? இடஒதுக்கீடு தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி நிறைவேத்தாதுன்னா,</div><div>எனக்கு காங்கிரஸே வேணாம்"னு சொல்லி கட்சியை விட்டு விலகுனவர் பெரியார்.</div><div><br></div><div>- காங்கிரஸை விட்டு வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார் பெரியார். "காங்கிரஸ் கட்சி என் எதிரி இல்ல, ஜாதி தான் எதிரி... ஜாதியை தூக்கி பிடிக்குற வைதீக மதத்தையும், கடவுளை போதிக்குற சாஸ்திரத்தையும்,</div><div>மூடநம்பிக்கைகளையும் வாழ்க்கை முழுக்க தீவிரமா எதிர்க்க போறேன்"னு சொன்னார்.</div><div><br></div><div>- 1937ல மெட்ராஸ் பிரசிடென்சியோட முதல்வரா ராஜாஜி இருந்தப்போ, பள்ளிக்கூடங்கள்ல ஹிந்தியை கட்டாய மொழி ஆக்குனப்போ இந்த மாகாணம் முழுக்க ஹிந்திக்கு எதிரா புரட்சி வெடிக்க காரணமா இருந்தார்.</div><div>1939ல ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்துல உயிரை விட்ட தாளமுத்து நடராசனுக்கு 1940ல வடசென்னையில நினைவு மண்டபம் எழுப்பினார் பெரியார்.</div><div><br></div><div>- இந்தியாவிலேயே பேருக்கு பின்னால ஜாதியை போட்டுக்காத ஒரே மாநிலமா தமிழ்நாடு இருக்குறதுக்கு ஒரே காரணம், சுதந்திரம் அடையுறதுக்கு முன்னாலேயே</div><div>'சுயமரியாதை இயக்கம்' மூலமா பெரியார் எடுத்த முன்னெடுப்பு! இன்னைக்கு வரை, ஒருத்தனோட ஜாதியை நேரடியா கேட்குறதுக்கு கூச்சப்படுறானுங்க இல்ல? அதுக்கு காரணம், பெரியார் இல்லாம வேற யாரு?</div><div><br></div><div>- தமிழ் மொழியை எளிமையா எழுதுறதுக்காகவும், அச்சடிக்குறதுல இருக்குற சிரமங்களை குறைக்குறதுக்காகவும்...</div><div><br></div><div>15 தமிழ் எழுத்துக்கள்ல சீர்திருத்த மாற்றங்களை முன்மொழிந்தார் பெரியார். அவரோட இந்த மொழி சீர்திருத்தத்தை அக்டோபர் 1978ல அரசாணையில கொண்டுவந்த பெருமை, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை சேரும்.</div><div><br></div><div>- கடந்த 100 வருஷத்துல பெரியார் அளவுக்கு பெண்களுக்காக பேசுன ஒரு தலைவர்,</div><div>இந்தியா முழுமையிலும் கிடையாதுன்னே சொல்லலாம். உடன்கட்டை ஏறுதலுக்கு எதிராவும், குழந்தை திருமணத்துக்கு எதிராவும், தேவதாசி முறைக்கு எதிராவும் பேசியவர், போராடியவர் பெரியார். விதவை மறுமணத்தோட அவசியம் பத்தியும், குடும்பக்கட்டுப்பாடோட அவசியம் பத்தியும்,</div><div>பெண்களுக்கு சொத்துல உரிமை வேணும்ன்னும் பல மேடைகள்ல பேசுனவர்.</div><div><br></div><div>இன்னைக்கு நாம பேசுறோமே.. பொண்ணுங்களோட financial independence, பொண்ணுங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணனும்ன்னு அதையெல்லாம் அந்த மனுஷன் 100 வருஷமா முன்னாலேயே பேசிட்டு போயிருக்கார்.</div><div>- பிரிட்டிஷ் ஆட்சியில கம்யூனிச கொள்கை தடை செய்யப்பட்டிருந்தப்போ, கம்யூனிச கொள்கைகளை மொழிபெயர்த்து எழுதி மக்கள்கிட்ட பரப்புனவர் பெரியார்.</div><div><br></div><div>- ஒரு முறை காந்திஜி அவர்கள் "தீண்டாமை தப்பு, ஆனா வர்ணாசிரமம் தப்பு இல்ல"ன்னு சொன்னப்போ உடனே அவரை போய் பெங்களூர்ல சந்திச்சு தன்னோட</div><div>எதிர்ப்பை தெரிவிச்சுட்டு வந்தார் பெரியார்.. "நம்ம சட்டம் தீண்டாமைக்கு எதிராதான் இருக்கு, ஜாதிக்கு எதிரா இல்ல. அதையேதான் நீங்களும் சொல்றீங்க, மகாத்மா... மதத்தை வெச்சுக்கிட்டு, சமுதாயத்துல உங்களால எந்த சீர்திருத்தத்தையும் பண்ண முடியாது"ன்னு சொல்லிட்டு வந்தார்.</div><div>- 1939ல ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்துல இருந்தப்போவும், 1942 காலக்கட்டத்துலயும், இரண்டு முறை முதல்வர் பதவி பெரியாரை தேடி வந்தது... அவர் தலைமையில மந்திரி சபை அமைக்க சொல்லி ஆளுநர் சொன்னப்போ, 'வேணாம், எனக்கு பதவியில ஆசை இல்ல'ன்னு பெரியார் சொல்லிட்டார்...</div><div><br></div><div>ராஜாஜி அவர்கள் கூட 'உங்க தலைமையில ஆட்சி அமைச்சா, நான் காங்கிரஸ் ஆதரவு வாங்கி தர்றேன்"னு சொன்னார். ஆனா, "பதவின்னு வந்துட்டா, நாம எவனை எதிர்க்குறோமோ அவன் கூடவே சமாதானமா போகவேண்டியிருக்கும்.. அதனால, சாகுற வரைக்கும் எந்த அரசியல் பதவியும் வேணாம்ங்கிறதுல நான் ரொம்ப தெளிவா இருக்கேன்..</div><div><br></div><div>அரசியல்வாதிகளுக்கு வேணா அந்த பொழப்பு சரிப்பட்டு வரும், எனக்கு அது வேணாம்"னு சொல்லிட்டார். எந்தவொரு உட்சபட்ச பதவியையும், பணத்தையும் துட்சமா நினைச்ச ஒரு தலைவர் பெரியார்!</div><div><br></div><div>- 1947'ல இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சப்போ கூட, "அதிகாரம் பிரிட்டிஷ் காரன் கையிலருந்து,</div><div>பார்ப்பனர்கள் கைக்கு போயிருக்கு அவ்ளோதான்... அடிமட்ட ஜனங்களுக்கு இது ஒரு துக்க நாள் மட்டுமே"ன்னு சொன்னார் பெரியார்!</div><div><br></div><div>- எல்லா தலைவர்களும் தன்னை பின்தொடர்ந்து வர்றவங்களை எல்லாம் "நான் சொல்றத செய்ங்க"ன்னு தான் சொல்வாங்க.</div><div>ஆனா, பெரியார் ஒருத்தர் தான், 'யார் எது சொன்னாலும், அதை நம்பாதீங்க... கேள்வி கேளுங்க... ஏன், நானே சொல்றதையும் கேள்வி கேளுங்க... அப்புறமா, நீங்க முடிவெடுங்க.. உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை பண்ணுங்க"ன்னு சொன்னார்.</div><div>ஒரு முறை, மெட்ராஸ் யூனிவர்சிட்டியோட vice chancellor சுந்தரவடிவேலு அவர்கள் “இன்னைக்கு கிராமத்துல கூட படிச்சவங்க எண்ணிக்கை ஜாஸ்தியா இருக்கு, நிறைய கல்விக்கூடங்கள் இருக்குதுன்னா, அதுக்கு நீங்க கொண்டு வந்த திட்டங்கள்தான் காரணம்"ன்னு காமராஜரை புகழ்ந்தப்போ,</div><div>"இதுக்கெல்லாம் பெரியார்தான் காரணம். அவர்தானே அடித்தட்டு மக்கள் எல்லாரும் படிக்கணும்ன்னு ஆசைப்பட்டார்"ன்னு பெரியாரை நினைவுகூர்ந்தார் காமராஜர்.</div><div><br></div><div>தமிழ்நாட்டுல காங்கிரஸ் கட்சியை ஒரு கோட்டையா ஆக்க பாடுபட்டவர் பெரியார். அந்த கோட்டையை கட்டி எழுப்பிட்டு, அதை அனுபவிக்காம</div><div>வெளியே போய்ட்டார். அவர் நினைச்சிருந்தா, எப்பவோ முதல்வர் ஆகியிருக்கலாம். ஆனா, மக்கள் தொண்டுதான் முக்கியம்ன்னு நினைச்சார். காங்கிரஸ்ல இருந்துக்கிட்டு பெரியார் சொன்ன சமூகநீதி கொள்கையை நான் செயல்படுத்துறேன்னு சிலர் என் மேல புகார் சொல்றான்.</div><div>அதுக்கு நான் பெருமைப்படுறேன்"னு சொன்னார் 'கல்வி கண் திறந்த' காமராஜர்.</div><div><br></div><div>- பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்ததும் முதல்ல கையெழுத்து போட்ட "சுயமரியாதை திருமண சட்டம்" உருவாக முழுமுதற் காரணமா இருந்தவர் பெரியார்.</div><div><br></div><div>இந்தியாவிலேயே OBC ரிசர்வேஷனை முதன்முதல்ல கொண்டுவந்த மாநிலம் தமிழ்நாடு. அதே போல, இந்தியாவிலேயே முதல்முறையா தலித் சமூகத்தை சேர்ந்த ஒருத்தர் நீதிபதி ஆன பெருமையும் பெரியார் அவர்களையே சேரும்.</div><div><br></div><div>அனைத்து சாதி மக்களும் கோவில் கருவறைக்குள் போக அனுமதி வேண்டும்"ன்னு போராட போறேன்னு</div><div>பெரியார் சொன்னார்.... அப்போ, "அதுக்கு அவசியமே இல்ல.. எல்லா சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம்ன்னு சீக்கிரமே ஒரு சட்டம் கொண்டுவர்றேன்"னு சொல்லி அந்த போராட்டத்தை நிறுத்தினார் கருணாநிதி.</div><div><br></div><div>- பெரியாரை பத்தி பேரறிஞர் அண்ணா "உலக தலைவர்களில், தன்னுடைய காலத்திலேயே தன் கொள்கை வெற்றி</div><div>பெறுவதைப் பார்த்த ஒரே ஒருவர் நீங்கள்தான்"னு சொன்னார். அதுதான் உண்மையும் கூட. ஹிந்துத்துவா, தமிழ் தேசியம் உட்பட எந்த அரசியல் கொள்கையை முதன்முதல்ல பேசுனவங்களும் அந்த கொள்கை அரசியல்ரீதியா வெற்றியடையுறதை பார்க்கல!</div><div>காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா, தொல்.திருமாவளவன், வைகோ, ராமதாஸ், உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியோட நிறுவனர் கன்ஷி ராம் உட்பட எத்தனையோ தலைவர்களோட சமூக நீதி கொள்கைகளுக்கு ரோல் மாடல் ஆக இருந்தவர் / இருப்பவர் பெரியார்.</div><div>பெரியார் அவர்கள் இறந்து போறதுக்கு சில நாள் முன்னால சொன்ன விஷயம்... "இந்தி திணிப்பை எதிர்த்து ஜெயிச்சாச்சு.. தெருவுக்குள்ள விடமாட்டேன்னு சொன்னவங்களை எதிர்த்து போராடி ஜெயிச்சாச்சு.. கோவிலுக்குள்ள விடமாட்டேன்னு சொன்னவங்களை எதிர்த்து ஜெயிச்சாச்சு..</div><div>ஆனா, நான் சாகும்பொழுது இப்போவும் உங்களை எல்லாம் சூத்திரனாவே விட்டுட்டு போறேனே. இந்த ஜாதியை இன்னமும் ஒழிக்க முடியலையே"ன்னு வருத்தப்பட்டார்.</div><div>நாடு முழுக்க கால்தடம் பதிச்ச பாஜக, இன்னமும் தமிழ்நாட்டுல மட்டும் நோட்டாவுக்கு கீழே இருக்குன்னா அதுக்கு காரணம் பெரியார் அவர்கள் வளர்த்தெடுத்த சமூகநீதி, சமத்துவ கொள்கைகள்!</div><div><br></div><div>வரலாறு தெரிஞ்சவர்கள் </div><div>வாட்சப் வதந்தியை பார்த்து வாயை பொளக்காதவர்களுக்கு தெரியும்.</div><div><br></div><div>ஆமா..... பெரியார் தான் எல்லாம் பண்ணார்🖤❤️</div><div><br></div><div>நன்றி :- பாக்டீரியா</div>சாந்திபாபு http://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-9355242189618460982023-08-06T11:08:00.001+05:302023-08-06T11:08:11.182+05:30சீமான் எப்போது கட்சியை கலைக்க போகிறார்?<div>தி.மு.க ஆட்சியில் இஸ்லாமியருக்கு செய்த ஒரு நன்மையை சொன்னால் நான் கட்சியை கலைத்து விட்டு போகிறேன் என்று சொன்ன சீமான் எப்போது கட்சியை கலைக்க போகிறார்?</div><div><br></div><div>*******************************************</div><div>பால்வாடி சீமான் கவனத்திற்கு!!!</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEg7tPhWg8_1-GIZS648m0-wmRr_M-XD0yPnJVCdJwnFdi-f8rtMKVwIOpYw8TBJeDuqKoLeHjYAhDDn1-WuoKlufC4wfkhVAGjNbDDNo4fsIR_o3vBBfD-7IF2xo_53HvuhYXDaWiimmqOV4CrnL8DwTOpeRegLRdDmCDPNyQv2eMJ4OlzDzM7yHwktk6M" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEg7tPhWg8_1-GIZS648m0-wmRr_M-XD0yPnJVCdJwnFdi-f8rtMKVwIOpYw8TBJeDuqKoLeHjYAhDDn1-WuoKlufC4wfkhVAGjNbDDNo4fsIR_o3vBBfD-7IF2xo_53HvuhYXDaWiimmqOV4CrnL8DwTOpeRegLRdDmCDPNyQv2eMJ4OlzDzM7yHwktk6M" width="400">
</a>
</div><br></div><div><br></div><div>1. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு</div><div><br></div><div>கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி 15.9.2007 ல், அறிவிப்பு. </div><div><br></div><div>இதன் காரணமாக அரசு பணியில் </div><div>1774 அலுவலர்கள்/பணியாளர்கள் பயன்பெற்றுள்ளனர். </div><div><br></div><div>தொழில் நுட்பகல்வியில் </div><div>16518 மாணவ/மாணவியர்களும் மற்றும் மருத்துவக் கல்வியில் </div><div>306 மாணவ/மாணவியர்களும் ஆக மொத்தம்18598 அரசு பணியாளர்கள் மற்றும் மாணவ/மாணவியர்கள் பயன்பெற்றுள்ளனர்.</div><div><br></div><div>2. இட ஒதுக்கீட்டின் பலன் முஸ்லிம்களை முழுமையாகச் சென்றடைய </div><div>உயர்மட்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கபட்டது. </div><div><br></div><div>தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர், </div><div>உள்துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை முதன்மைச்செயலாளர், </div><div>பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர், </div><div>ஆசிரியர் தேர்வாணைய குழுத்தலைவர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர், </div><div>சிறுபான்மையினர் நல ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைத்து முதல்வர் கலைஞர் 29.01.2011 அன்று உத்தரவிட்டார்.</div><div><br></div><div>3. கல்வி உதவி</div><div><br></div><div>தொழிற்கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மையின </div><div>மாணவ மாணவியருக்கு ரூ 1867.07லட்சம் செலவில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. </div><div><br></div><div>இவற்றில் ரூ 729.86 லட்சம் செலவில் </div><div>2820 இஸ்லாமிய மாணவ/மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். </div><div><br></div><div>இது மொத்த செலவினத்தில் 39 விழுக்காடு ஆகும்.</div><div><br></div><div>பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை</div><div><br></div><div>11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் 67683 சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு</div><div> 2007-2008ஆம் ஆண்டு முதல் </div><div>2010-11 ஆம் ஆண்டு வரை </div><div>ரூ.2315.90 லட்சம் செலவில் </div><div>34637 இஸ்லாமிய மாணவ/மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். </div><div><br></div><div>இது மொத்த செலவினத்தில் 46 விழுக்காடு ஆகும்.</div><div><br></div><div>பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை</div><div><br></div><div>. 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ/மாணவியருக்கு சேர்க்கைக்கட்டணமாக ஆண்டுக்கு </div><div>ரூ 500/-ம், கற்பிப்புக்கட்டணமாக </div><div>ரூ 3500/-ம் விடுதிகளில் தங்கி படிப்போருக்கு மாதம் ரூ600/-ம் வழங்கப்படுகிறது.</div><div><br></div><div>11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு, பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. </div><div><br></div><div>2007-08 ல் ரூ 94/- லட்சமும், தொடர்ச்சியான ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ 247/-லட்சமும் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.</div><div><br></div><div>தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் திட்டம் தொழில் மட்டும் தொழில் நுட்பம், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் சிறுபான்மையின மாணவ/மாணவிகளுக்கு ரூ435.48/-லட்சம் வழங்கப்பட்டுள்ளது.</div><div><br></div><div>4. முஸ்லிம் மாணவியருக்கான விடுதிகள்</div><div><br></div><div>திண்டுக்கல் , வேலூர், கோவை, திருச்சி மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கென விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.</div><div><br></div><div>5. திறன் வளர்ப்பு பயிற்சி</div><div><br></div><div>சிறுபான்மையின மக்கள் தகவல் தொழில்நுட்பம், ஆயத்த ஆடை, காலணிகள் உள்ளிட்ட சுய தொழில்களைக் கற்பதற்கு நடப்பு ஆண்டில் ரூ 2.50/- கோடி செலவிடப்பட்டுள்ளது.</div><div><br></div><div>6. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்</div><div><br></div><div>சிறுபான்மையினரின் பொருளாதார மேம்பாட்டிற்கு, தமிழ்நாடு சிறுபான் மையிர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் 1999-ல் துவங்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.</div><div><br></div><div>அ. தனி நபர் கடன் திட்டம்</div><div><br></div><div>சிறுபான்மையினர் தொழில் தொடங்கிட ரூ 1 லட்சம் வரை கடன். கடந்த 4 ஆண்டுகளில் 7331 பயனாளிகளுக்கு ரூ 3107.13 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 4836 முஸ்லிம்கள்- கடன் தொகை ரூ 2143.97</div><div><br></div><div>ஆ. சிறுகடன் திட்டம்</div><div><br></div><div>சிறுபான்மையின மாணவ/மாணவியருக்கு தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ படிப்பு பயில வருடம் ரூ.50,000 வரை கடன் வழங்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ 40.10 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம்களுக்கு ரூ 14.53 லட்சம். இ. 60 விழுக்காடுகளுக்குக் குறையாமல் சிறுபான்மையினர் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய சுய உதவிக்குழுவில் உள்ளவர்களுக்கு ரூ.25,000 கடன்</div><div><br></div><div>ஈ. ஆட்டோ ஓட்டுநர் தொழிற்கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள சிறுபான்மையினருக்கு சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.1,21,000 வரை கடன்</div><div><br></div><div>உ. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு இரு கலப்பின பசுக்கள் வாங்குவதற்கு ரூ.50,000 வரையிலும், இரு உயர் ரக முர்ரா எருமைகள் வாங்க ரூ.70,000 வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.</div><div><br></div><div>7. முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்</div><div><br></div><div>ஆதரவற்ற, கணவனால் கை விடப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் 23.4.2007 முதல் துவக்கப்பட்டுள்ளது.</div><div><br></div><div>இச்சங்கங்கள் திரட்டும் நிதி ஆதராத்திற்கு இணையாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.10 லட்சம் ஷ�பூ அரசு மானியம் வழங்கி வருகிறது.</div><div><br></div><div>8. உலமாக்கள் பணியாளர் நல வாரியம்</div><div><br></div><div>உலமாக்கள் மற்றும் பணியாளர் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கு நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.</div><div><br></div><div>18 வயது முதல் 60 வயது வரை ஆலிம்கள், இமாம்கள், அரபி ஆசிரியர்கள், முஅத்தின் மற்றும் இதர பணியாளர்கள் உறுப்பினர்களாக இருந்து பயனடையலாம்.</div><div><br></div><div>முதியோர் ஓய்வூதியம், இறுதிச்சடங்கு உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித் தொகை, முடக்க ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு விஷங்களுக்கு இந்த நலவாரியத்திலிருந்து உதவி பெறலாம்.</div><div><br></div><div>கடுமையான வலியில் முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை செய்து, 38 நாள் ஓய்வுக்குப் பிறகு 2009 மார்ச் 14-ல் தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் கலைஞர் கையெழுத்திட்ட முதல் கோப்பே உலமாக்கள் பணியாளர் நலவாரியம் பற்றியதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.</div><div><br></div><div>9. தமிழ்நாடு வக்ஃப் வாரியம்</div><div><br></div><div>தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தவும், நிர்வாக செலவினங்களுக்கும், தணிக்கை கட்டணமாகவும் நடப்பு ஆண்டில் ரூ 77,51,000 அரசு மானியம் வழங்கியுள்ளது.</div><div><br></div><div>பள்ளிவாசல்கள், தர்காக்கள், மற்றும் வக்ஃப் நிறுவனங்களின் மராமத்து பணிகளுக்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2 கோடியே 82 லட்சம் அரசு மானியம் வழங்கியுள்ளது. இதனால் 207 வக்ஃப் நிறுவனங்கள் பயனடைந்தன.</div><div><br></div><div>10. கபரஸ்தான் பாதுகாப்பு:</div><div><br></div><div>தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் அடக்க ஸ்தலங்கள் வக்ஃப் செய்யப்பட்ட கபரஸ்தான்கள் ஆண்டு தோறும் 20 தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் சுற்றுச்சுவர் மற்றும் முள்கம்பி வேலி அமைப்பதற்கு தலா 5 லட்சம் ரூபாய் அரசு மானியம் வழங்கி வருகிறது.</div><div><br></div><div>11. உலமா ஓய்வூதியத்திட்டம்</div><div><br></div><div>ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கையை 2200 லிருந்து 2400 ஆக அரசு உயர்த்தியுள்ளது. ஆரம்பத்தில் ரூ 250/- ஆக இருந்த ஓய்வூதியம் இன்று ரூ 750/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்த ஓய்வூதியத்திற்கு அரசு ரூ 2.16 கோடி வழங்கியுள்ளது. உலமாக்களுக்கு இலவச மிதிவண்ட 3 கோடியில் வழங்கப்படுகிறது.</div><div><br></div><div>12. மணவிலக்கு பெற்ற பெண்களுக்கு வாழ்க்கைச் செலவு</div><div><br></div><div>மணவிலக்கு பெற்ற முஸ்லிம் பெண்களுக்கு வாழ்க்கைச்செலவுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.</div><div><br></div><div>13. வக்ஃப் சொத்துக்கள் மீட்பு</div><div><br></div><div>சென்னை பட்டினப்பாக்கம் சேக்மதார் அவுலியா தர்கா முதற்கொண்டு திருவள்ளூர், தஞ்சை, கோவை, பெரம்பலூர், தர்மபுரி, கடலூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள வக்ஃப் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.</div><div><br></div><div>14. மறுவாழ்வு திட்டம்</div><div><br></div><div>இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட ஊசி�ட்க்�வூதுறூஙு�ஸ்ன், சிறு குற்றங்களுக்காக சிறை சென்றவர்களுக்கும் சமுதாயத்தில் கண்ணியமான வாழ்க்கை நடத்த உதவும் வகையில் மறுவாழ்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலா ரூ.10,000 இதற்கு நிதி உதவி வழங்கப்படும்.</div><div><br></div><div>இதை தவிர</div><div><br></div><div>15. சிறுபான்மையினர் நல ஆணையம்</div><div><br></div><div>தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் நல ஆணையம், அதற்கு சட்டப்பூர்வமான அந்தஸ்து.</div><div><br></div><div>16. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நல ஆணையம்</div><div><br></div><div>17. சிறுபான்மையினர் நலனுக்கென தனி இயக்குநரகம்</div><div><br></div><div>18. சென்னை பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வு மையம்</div><div><br></div><div>19. உர்தூ அகாடமி</div><div><br></div><div>20. சமச்சீர் கல்வியில் உர்தூ, அரபி உள்ளிட்ட சிறுபான்மையின மொழிகளுக்கு உரிய அந்தஸ்து.</div><div><br></div><div>21. கட்டாயத்திருமண பதிவு சட்டத்தில் முஸ்லிம்லிடீக் கோரிக்கை ஏற்பு, பள்ளிவாசல் தஃப்தருக்கு பாதுகாப்பு.</div><div><br></div><div>22. அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு உரிய இடம்</div><div><br></div><div>23. நபிகள் நாயகம் பிறந்த நாளுக்கு அரசுவிடுமுறை, 1969-ல் கொண்டுவந்த நடைமுறையை 2001-ல் அ.தி.மு.க அரசு ரத்து செய்த போது 15.11.2006-ல் மீண்டும் விடுமுறை என அறிவிப்பு.</div><div><br></div><div>24. கட்டாய மதமாற்க்ஷித் தடைச்சட்டம் ரத்து</div><div><br></div><div>25. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களுக்கும், வழிபாட்டுத்தலங்களுக்கும் </div><div>தேவையான பாதுகாப்பு </div><div><br></div><div>26. தமிழகத்தில் இயங்கிவரும் சிறுபான்மை மற்றும் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் 11,307 ஆசிரியர்கள், </div><div>648 பணியாளர்கள் </div><div>ஆக 11,955 பணியிடங்களுக்கு அரசு ஊதியம் வழங்கும் என அறிவித்து</div><div>26.2.2011 அன்று அரசு ஆணை. </div><div><br></div><div>இதற்காக ஆண்டு தோறும் ரூ.331 கோடி அரசு ஒதுக்குகிறது என்ற அறிவிப்பு.</div><div><br></div><div>1991-92 க்குப்பிறகு சுயநிதியில் இயங்கும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளுக்கு மட்டுமின்றி</div><div> 1999 – க்குப்பிறகும் தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கும் அரசு நிதி அளிப்பது பற்றி அடுத்த கல்வி ஆண்டில் பரிசீலிக்கப்படும் என தேன் சொட்டும் அறிவிப்பு. </div><div><br></div><div>அடடா! யாருடைய ஆட்சியில் இப்படிப்பட்ட சாதனைகளை எண்ணிப்பார்க்க முடியும்!!</div><div><br></div><div>கலைஞர் கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம்!</div><div>பால்வாடி சீமானே </div><div>நீ கொட்டிக்கிடக்கும் </div><div>குப்பை கிடங்கு அடங்கு!!</div><div><br></div><div>பதிவு நன்றி: Napa</div>சாந்திபாபு http://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-4701741128234902872023-06-18T14:13:00.001+05:302023-06-18T14:13:18.847+05:30நடிகர் விஜய் படிக்க சொன்ன தலைவர்களுக்கு பின்னால்..<div>காமராசர், கக்கனைத் தாண்டி சிந்திக்காத ஆட்களிடையே, அம்பேத்கர், பெரியாரைச் சேர்த்துக் கொண்ட விஜய்யின் பெருந்தன்மைக்குப் பின்னும் தமிழருவி கொட்டக்கூடும், நிற்க, நாம பேசப்போவது அதை அல்ல !</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgi5hLb-yS4vY6yOSp1xe5QPLUOovqjee1h3Tyg9WTwtK-DeYdOzcX96NBqGb-dold5V1AoT3vhKlElzN4X7YwDgo8OcCV5lVMi97xDEOvWun6P0mYw1Wbforw5D7BPZWUCWh-oiWWg3e4y0p8xZWaxdjW5vPdjdJAPqz2kjnpjB-qsNn41ngUeykdu" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgi5hLb-yS4vY6yOSp1xe5QPLUOovqjee1h3Tyg9WTwtK-DeYdOzcX96NBqGb-dold5V1AoT3vhKlElzN4X7YwDgo8OcCV5lVMi97xDEOvWun6P0mYw1Wbforw5D7BPZWUCWh-oiWWg3e4y0p8xZWaxdjW5vPdjdJAPqz2kjnpjB-qsNn41ngUeykdu" width="400">
</a>
</div><br></div><div>ஜெயமோகன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். செங்கோலைப் பற்றிய கட்டுரைன்னு நினைக்கிறேன். அதில் பல வரிகளில் சங்கிகளை காறிக் காறி துப்புகிறார். இருந்தாலும் அது அவர்களுக்கு உறைப்பதில்லை. மாறாக ரசிக்கிறார்கள். ஏன் ?</div><div><br></div><div>குடப்பாலில் துளி நஞ்சு போல ஒரு சில வரிகளைச் செருகி விடுவார். அது அவர்களின் கண்களுக்கு பெரிய பத்தி போல பட்டு மகிழ்ச்சியை அள்ளித் தந்துவிடுகிறது. மாறாக, சங்கிகளையும் திட்டுகிறாரே என வாசித்துச் சிலிர்க்கும் சக உ.பிக்கள் மிக எளிதாக அந்த வரிகளைக் கடந்து விடுவதுதான், ஜெயமோகனின் எழுத்துச் சாதுர்யம் !</div><div><br></div><div>இந்திய விடுதலைக்குப் பின் அரசியலில் எளிமையாக இருந்தவர்களுக்கு ஜெயமோகன் காட்டும் இரண்டே சான்று, ஒன்று காமராஜர், இன்னொருவர் நம்பூதிரி பட்.</div><div><br></div><div>இருவரும் முதலமைச்சராக இருந்தாலும் மிக எளிமையான ஆடை, வாழ்க்கை முறை என்று அவர்களை விதந்தோதுகிறார் ஜெயமோகன்.</div><div><br></div><div>மகிழ்ச்சி. நமக்கும் காமராஜர் மீதோ, கக்கன் மீதோ, நம்பூதிரி, ஜோதிபாசு, புத்ததேவ் மீதோ எந்தக் காழ்ப்புமில்லை, கசப்புமில்லை !</div><div><br></div><div>என்ன கொடுமையெனில் இதே காலகட்டத்தில் வாழ்ந்த சாவர்க்கர் போன்ற இந்துத்துவத் தலைவர்கள், பிற தமிழ் தேசியத் தலைவர்களின் எளிமையைப் பற்றியோ, வாழ்க்கைமுறையைப் பற்றியோ இவர்கள் ஒருபோதும் சொன்னதில்லை, புகழ்ந்து எழுதியதுமில்லை !</div><div><br></div><div>ஆனால், காமராஜரை கொல்ல முயன்றச் சங்கிகள் கூட, அந்த எளிமையானக் காமராஜரை தன்னாள் என்பார்கள். </div><div><br></div><div>இந்தி எதிர்ப்பு போராட்டங்களை வெறுத்த, அதை இரும்புக்கரம் கொண்டு அடக்க மாணவர்களைச் சுட்டுக்கொல்வதை ஆதரித்த, சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத்தை ஒருபோதும் ஏற்காத, அதற்காக பல உயிர்கள் போகிறதே என்பதைக் கண்டுகொள்ளவேச் செய்யாத காமராஜரை, அந்த எளிமையானவரை, இன்றையத் தமிழ் தேசியர்களும் தன்னாள் என்பார்கள். ஏன் ??</div><div><br></div><div>ஒரே காரணம், அவர் திமுகவிடம் வீழ்ந்தது.</div><div><br></div><div>ஆக, எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற வகையில் காமராஜரை தன்னாளாக்கிக் கொண்டார்கள் இந்த லகடபாண்டிகள் !</div><div><br></div><div>இவர்களுக்கு ஒரு முக்கியமான வரலாறு தெரியாது. தெரிந்தால் வாழவே விருப்பப்பட மாட்டார்கள் !</div><div><br></div><div>காமராஜர் தன் அந்திமக்காலத்தில் தனித்து விடப்பட்டிருந்தார்.</div><div><br></div><div>தன்னால் ஆளான இந்திராவால் நொந்து போய்க் கிடந்தார்.</div><div><br></div><div>கறிவேப்பிலை போல உதாசீனப்படுத்தப்பட்டு காங்கிரசிலிருந்து விலகி, தனிக்கட்சி ஆரம்பித்திருந்தார். இந்தியளவில் பிரபலத் தலைவராக இருந்த அவரை, தமிழகத்திற்குள் முடக்கி விட்டிருந்தனர். போக, அவரால் வளர்க்கப்பட்டிருந்த பல தலைகளே எதிரிகளாகி அவரைத் தாக்கி பேசிக் கொண்டிருந்தனர் !</div><div><br></div><div>நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்ட போது அதற்கெதிராகப் பேசிய, எழுதிய அனைவரையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது !</div><div><br></div><div>காமராஜரையும் கைது செய்யப் போகிறோம் ஒத்துழைக்கவும் என்று முதலமைச்சராக இருந்த கலைஞரிடம் தூது வந்த ஒன்றிய அரசின் அதிகாரிகளிடம், மிகக் கடுமையாகப் பேசி ஒருபோதும் எங்களின் பெருந்தலைவரை காட்டிக் கொடுக்கவும் மாட்டோம், கைது செய்யவும் முடியாது, மீறி நீங்கள் செய்ய முயன்றாலும் அனுமதிக்க மாட்டோம் என்று விட்டிருந்தார் கலைஞர் !</div><div><br></div><div>நான் மேலே சொன்னது பொய் என்று ஒரே ஓர் ஆளை, ஆவணச்சகிதம் நிருபிக்கச் செய்யுங்கள், சவால் விடுகிறேன்.</div><div><br></div><div>இந்த மன அழுத்தத்தில் காமராஜர் இறந்துபோனார். அது ஒரு மழைக்காலம்.</div><div><br></div><div>வாரிசுகள் இல்லாத காமராஜரின் தலைமகன் போல தன் வேட்டியை முட்டிக்கு மேலே தூக்கிக் கட்டிக் கொண்டு, சகதியில் கால்வைத்து, பம்பரமாகச் சுழன்று, உச்சபட்ச அரசு மரியாதையுடன் இறுதிப்பயணத்தை, இறுதி அஞ்சலியை, கல்யாணச் சாவு போல எடுத்தார் கலைஞர் !</div><div><br></div><div>குறைந்தபட்சம் இதையாவது மறுக்க முடியுமா ?</div><div><br></div><div>விருதுநகரில் ஓர் இளைஞரிடம் தோற்ற காமராசர், அடுத்த சில வாரங்களிலேயே நாகர்கோவில் தொகுதியில் வென்று, மக்களவை உறுப்பினரானார். ஆனால் இப்போதுவரை திமுக ஹேட்டர்கள், சொந்த ஊர்லயே அவரைத் தோக்கடிச்சிட்டாங்கப்பா, அதாலயே நொந்துச் செத்தார்ம்பாய்ங்க. </div><div><br></div><div>அடேய் அவர் தோத்தது 1967. இறந்தது 1975.</div><div><br></div><div>கலைஞரின் இந்த அற்புதக் குணத்தைப் பாராட்டி பரிசளித்தார் இந்திராகாந்தி. ஆட்சி டிஸ்மிஸ்.</div><div><br></div><div>அந்தக் காலக்கட்டத்தில் பெரும்பாலும் அனைத்துத் தலைவர்களுமே எளிமையாகவே இருந்தனர். பரம்பரை பணக்காரரான ஜவகர்லால் நேரு உட்பட. </div><div><br></div><div>ஆனால் எளிமையின் சிகரமெனக் காந்தி, காமராஜரை சான்றாகக் காட்டுபவர்கள் நேருவைக் காட்டியதுண்டா ?</div><div><br></div><div>நம்ம அண்ணா ? </div><div><br></div><div>அவரென்ன பகட்டாகவா வாழ்ந்தார் ? </div><div><br></div><div>அவருடைய ஆடைகள் எத்துணை எளிமையானவை ? அவருடைய வாழ்க்கைமுறை ? </div><div><br></div><div>அவருடைய அறிவு, எழுத்தாற்றல், பேச்சாற்றல், ஆங்கிலத்தில் அவருக்கிருந்த வளமை... இதில் எதுவாவது அவருடையத் தோற்றத்தில் தென்படுமா ?</div><div><br></div><div>1947 லிலேயே சினிமாவில் பல்லாயிரம் சம்பாதிக்கத் துவங்கி, கட்சியில் முதலாளாய் கார், பார்ப்பனரிடமிருந்து கோபாலபுர வீடு வாங்குமளவு வசதி இருந்தும், கலைஞரிடம் என்ன பகட்டைக் கண்டுவிட்டார்கள் இவர்கள் ?</div><div><br></div><div>கலைஞர் பல லட்சத்தில் கோட், சூட் போட்டுக் கொண்டா வளைய வந்தார் ? அல்லது தங்கபஸ்பமும், தாய்லாந்து காளானையும் உண்டாரா ?</div><div><br></div><div>கலைஞருடைய தூய வெள்ளாடைகள், அவருடைய அன்றாட உணவுமுறைகளை ஆய்ந்து வாசித்தால் மட்டுமே அந்த உண்மைகளை நீங்கள் உள்வாங்கவே முடியும்.</div><div><br></div><div>எம் எல் ஏவாக, அமைச்சராக, முதல் அமைச்சராக, எதிர்கட்சித் தலைவராக, எந்தப் பதவிகளுமே இல்லாமல் கட்சித் தலைவராக மட்டுமே இருந்தாலும் கூட, அவருடைய உடைகளில், உணவுப் பழக்கவழக்கங்களில் எந்த மாற்றமுமே இருந்ததில்லை !</div><div><br></div><div>அட, அத்தனைப் பெரிய தலைவர் வீட்டுக்குச் சுற்றுச்சுவர் கூட இல்லை. இன்றளவுமே இல்லை. பெருமழை பெய்தால் அவர் வீட்டுக்குள் கொஞ்ச நேரம் வெள்ளம் தரிசித்துவிட்டுச் செல்லும் !</div><div><br></div><div>எவனாவது அறமிக்க ஒரே ஓர் எதிரியேனும், கலைஞரை எளிமைக்குச் சான்றாக சொல்வானா ? சொல்ல வாய் வருமா ??</div><div><br></div><div>1991 - 1996 களில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா பெரும்பாலும் ஹெலிகாப்டரை பயன்படுத்தியிருந்த போதும், 1996 - 2001 ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர், அரசு அம்பாசிடர் கார்களில்தான் எங்கெங்கும் பயணம் செய்தார். நீண்ட தூரமெனில் இரயிலில் செல்வார். அப்போதும் உடன் பல அரசு கோப்புகள், அவருடைய கையெழுத்துக்காகப் பயணிக்கும் !</div><div><br></div><div>அண்ணா, கலைஞர் எளிமையான முதலமைச்சர்கள் என எவை சொல்லவிடாமல் தடுக்கின்றன ?</div><div><br></div><div>பார்ப்பனியச் சூதுதான். அந்தளவு ஆரியத்திற்கெதிராக, திராவிடத்திற்காதரவாக இவர்களிருவரும் மறையும் வரை இயங்கியதுதான்.</div><div><br></div><div>அந்தத் தீராக்காழ்ப்பு உள்ளவரை காமராஜரும், கக்கனும்தான் அவர்களுக்கு எளிய அரசியல் ஆளுமைகள். ஆனால் அது முழு உண்மை அல்ல !</div><div><br></div><div>நம் குடும்ப முன்னேற்றத்திற்காக பல தியாகங்கள், அயரா உடலுழைப்புகள் செய்வோம். ஆனால் ஓர் அரசியல்வாதிக்கு அப்படி எதுவும் இருந்துவிடக் கூடாது. அப்படியே இருந்தாலும் அவர்கள் அடுத்தவேளைச் சோற்றுக்கு அரசு கோவில் க்யூக்களில் நிற்க வேண்டும்.</div><div><br></div><div>இப்படி ஒரு சீரியல் நாடகத்தைத்தான் மக்களை நம்ப வைத்திருக்கிறது அந்த பார்ப்பனியச் சூது. ஆஃப்ட்ரால் அல்லக்கை சூதுகளுக்குப் பலியாகிவிட்டு நமக்கு பாடமெடுக்க வருவார்கள் பாருங்கள், அவர்கள்தான் உலகமகா மூடர்கள் !!!</div>சாந்திபாபு http://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-43090264617734196502023-06-17T16:01:00.001+05:302023-06-17T16:16:52.808+05:30செந்தில் பாலாஜிக்களின் கைது<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEia83wCvx7fLks-IPEDUJFEC9BRSXJFzTo0H8dM9esvLbfbO9zOsy4Eq197A11M78Jx7Wgems07PpfTE096PVUAhyMhhXxVc9Nc_ByGgCTAnfZnpfG10bvk72oS9bOC5MJjwKJnucOH8Yl3q-Ttn234Olz5jwcjaeEyFqb9eJDw46X6JS49vozyw52L" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEia83wCvx7fLks-IPEDUJFEC9BRSXJFzTo0H8dM9esvLbfbO9zOsy4Eq197A11M78Jx7Wgems07PpfTE096PVUAhyMhhXxVc9Nc_ByGgCTAnfZnpfG10bvk72oS9bOC5MJjwKJnucOH8Yl3q-Ttn234Olz5jwcjaeEyFqb9eJDw46X6JS49vozyw52L" width="400">
</a>
</div><div>செந்தில் பாலாஜிக்களின் கைதும்; மோகன் பாகவத்துகளின் இந்து ராஷ்ட்டிரக் கனவும்.</div><div>========================================</div><div>தனது தவறுகளுக்காக செந்தில் பாலாஜி ஆயிரம் முறை தண்டிக்கப்பட வேண்டியவரெனில் அதையும் விட குரூர குற்றங்களுக்காக மோடியும், அமித்சாவும், அவரின் எஜமானர்களும் கோடி முறை தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆயிரம் செந்தில் பாலாஜிக்கள் தண்டிக்கப்பட்டாலலும் ஒரேயொரு அமித்சாவோ மோடியோ அல்லது மோகன்பகவத்தோ தண்டிக்கப்படலாகாது என்ற நவ இந்தியாவின் சனாதான சட்டத்தை நாட்டின் கூட்டு மனசாட்சியாக்க முயல்கிறது இந்துத்வ நவநாஜியிச பார்ப்பணீயம். '2025- இந்து ராஷ்ட்ர இந்தியா' என்ற தனது தீயநோக்கத்தை எப்பாடு பட்டேனும் நிறைவேற்றி விட வேண்டும் என்ற மூர்க்கத்தோடு திரியும் அது தனக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எத்தகைய அமைப்பையோ, தனி நபரையோ விடுவதாகவேயில்லை. </div><div><br></div><div>2019ல் மோடி மீண்டும் பிரதமரானதிலிருந்தே நடைபெறுகிற ஒவ்வொரு நிகழ்வின் பின்னனியில் இருப்பதும் இதுதான். இதன் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜி வேட்டையாடப் பட்டிருப்பதை நான் புரிந்து கொள்கிறேன்.சமூக ஊடகங்களில் செந்தில் பாலாஜி குறித்து நேர்காணல் அளிக்கின்ற பலரும் "செந்தில் பாலாஜியை நான் நியாயப்படுத்தவில்லை" என்றொரு தூய்மை வாதத்தையும் சேர்த்தே சொல்லுகிறார்கள். ஆனால் சங்கப்பரிவாரங்களின் குறி செந்தில்பாலாஜியல்ல. நாளையே செந்தில் பாலாஜி கட்சி தாவ தயாரெனில் இதுகாறும் அவர் அனுபவித்த சொகுசுகள் கடந்து இதைவிட சுகமானதொரு வாழ்வு அவருக்கு கிடைக்கக்கூடும். இன்னும் சரியாகச் சொல்வதெனில் அத்தனை பேரங்களும் தோல்வியுற்ற நிலையில்தான் சாமபேத தானம் கடந்து தண்டத்தை கையில் எடுத்துள்ளது ஒன்றிய அரசு. இல்லையெனில் 2011-16 நடந்து நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட வழக்கை தோண்டியெடுத்து அதில் 18 மணிநேரம் தொடர்ச்சியாக விசாரிக்கத் தேவையென்ன? அப்படி விசாரித்தும் நீதி மன்றத்தில் புதிதாக எந்த குற்றச் சாட்டையும் வைக்கமுடியாத அமலாக்கத்துறை ஏற்கனவே வழக்கு நடைபெற்ற காலத்தில் தமிழ்நாட்டு காவல்துறை ஏறக்குறைய எட்டாண்டுகளுக்கு முன்பு என்ன குற்றச் சாட்டுகளைக் கூறியுள்ளதோ அதைத்தான் நேற்றைய முன்தினம் நீதிமன்றத்தில் மீண்டும் கூறியுள்ளது. </div><div><br></div><div>எனில் 18 மணி நேரம் நடந்ததுதான் என்ன பேரமும், ஆங்காரமும், மிரட்டலுமின்றி வேறென்ன இருந்துவிடப் போகிறது.? பிரதான எதிர்கட்சி முக்கியஸ்தர்களிடம் அமலாக்கத்துறையின் நடவடிக்கை என்பது ஒன்று அவர்களை மோடிகும்பலுடன் சேர்த்து வைப்பது. அல்லது ஒத்து வராதவர்களை சிறையில் அடைப்பது. வேறென்னத்தை பிடுங்கியுள்ளது இத்துறை? </div><div><br></div><div>எனவே அதிகாரத்தின் இரை செந்தில் பாலாஜியல்ல. ஒட்டுமொத்த நாட்டையும் எவ்விதக் குறுக்கீடுகளுமற்று, கேள்விகளுமற்று, ஜனநாயகத் தரித்திரமற்று சனாதான இந்து ராஷ்ட்ரமாக கட்டமைத்து சுகபோகமாய் ஆளப்போகின்ற நாளுக்காக, ஒரு மன்னனாக முடிசூட்டிக் கொள்ளப்போகும் அத்தருணத்திற்காக கடந்த நூறாண்டுளாக ஒவ்வொரு வினாடியாக காத்துக் கொண்டிருக்கும் பகவத் கும்பலுக்கு அத்தகைய கனவைச் சிதைக்கும் யாருமே எதிரிகள்தான், சாதாரண எதிரிகளல்ல, குரூரமாய்த் தண்டிக்கப்பட வேண்டிய எதிரிகள். நாடெங்கும் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ள எதிர்கட்சி முக்கியஸ்தர்களில் தமிழ்நாட்டில் திமுகவின் சார்பில் செந்தில் பாலாஜி. கொங்கு மண்டலத்தில் பாஜகவின் அரசியல்தளத்தை தகர்த்தவர் செந்தில் பாலாஜி. ஆனால் வெறும் நான்கைந்து நாடாளுமன்ற உறுப்பினர் களுக்காகவா இப்படி வெளிப்படையான விகாரமும், வன்மமும் கட்டவிழ்த்து விடுகிறது? நிச்சயம் இல்லை. திராவிடம், என்றொரு சித்தாந்தமும், அதனை பேசுபொருளாக்கிக் கொண்டிருக்கும் திமுக என்றொரு பேரியக்கமும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்,தமிழன், தமிழ்நாடு என்ற மொழியின் மீதும், இனத்தின் மீதும், நிலப்பரப்பின் மீதும் பார்ப்பணீயக் கும்பல் கொண்டுள்ள குலை நடுக்கமே இத்தகைய வன்மத்தின் வெளிப்பாடுகள். ஏனெனில் எதிர்காலத்தில் இந்து ராஷ்ட்ரம் எனவொன்று அமைந்தே விட்டாலும் சர்வ சத்தியமாய் அதற்கு எதிர்வினையாக முழுமையானதொரு போராட்டம் துவங்கிற இடம் தமிழ்நாடாகத்தான் இருக்கும். அதைத்துவங்குகின்றவன் தமிழனாகத்தான் இருப்பான். தமிழ் என்ற மொழி அநீதிக்கு எதிரான சிறுபொறியையும் நாடெங்கிலும் பற்ற வைத்து அவர்களின் நூற்றாண்டுக் கனவைத் தகர்க்கக்கூடும். நித்திரையில் சுக ஸ்கலித கனவினூடே வரும் பேய்க்கனவைப் போலத்தான் அவர்களுக்கு தமிழ், தமிழன், தமிழ்நாடு. எனவேதான் இந்தியாவில் எந்த மாநிலத்திலுமில்லால் தமிழ்நாட்டில் மட்டும் ஆளுநரே ,அர்ஜூன் சம்பத்தாக அவதாரமெடுத்து ஒரே பாரதம், ஒரே கலாச்சாரம், சனாதான தர்மம், தமிழ்நாடு பதத்திற்கு பதிலாக தமிழகம், ஒவ்வொரு மாநிலங்களுக்குமான தனித்த கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளின் மீதான ஒவ்வாமை என வாந்தியெடுத்துத் திரிகின்றார்கள். </div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEj1x2LRH2tNEw4qyIcHsCnoAmQtUC5gTjr06jgpGZV4aZ7y-507k85TGeM1u8xcJ0bIAJF7CZ5jm2-Og5s3EmcwwpQeLy4ZWg35ml5bHKFxWmhrMKUDGEbozh3tXJn1S8scQqWD3Cqom7sBG5_AH9lSbplmcf9dx43hucCQMAxs6-vvXVzVaK9QS6Zx" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEj1x2LRH2tNEw4qyIcHsCnoAmQtUC5gTjr06jgpGZV4aZ7y-507k85TGeM1u8xcJ0bIAJF7CZ5jm2-Og5s3EmcwwpQeLy4ZWg35ml5bHKFxWmhrMKUDGEbozh3tXJn1S8scQqWD3Cqom7sBG5_AH9lSbplmcf9dx43hucCQMAxs6-vvXVzVaK9QS6Zx" width="400">
</a>
</div><br></div><div>எனவே செந்தில்பாலாஜி விவகாரத்தில் தூய்மைவாதம் பேசுகின்ற அனைவரும் திமுகவிற்கும், அதன் தலைவருக்கும் அதே தூய்மைவாதம் வாழங்கியுள்ள வாய்ப்புகளை மறந்து பொதுப்புத்திக்கு பலியாகின்றார்கள் அல்லது பொதுபுத்தியை கட்டமைக்கின்றார்கள்.</div><div>ஹின்டன் பெர்க் பகிரங்கமாக அம்பலப்படுத்திய பிறகும் பிரதமருக்கு அதானி உற்ற நண்பராக இருக்க முடியும். நண்பரின் முகத்தை ஏறெடுத்துப்பார்க்கவும் வக்கற்ற அமலாக்கத்துறை, நாடெங்கும் நடப்புக் குற்றங்களின் அறிக்கைகளைக்கூட கிடப்பில் போட்டு வைத்திருக்கின்ற அமலாக்கத்துறையும், இன்று வரையில் அதுகுறித்து நாட்டு மக்களிடம் வாய் திறக்காமல், அதைக் கேள்விக்கு உட்படுத்திய ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்து அவரின் பாஸ்போர்ட் வரையிலும் முடக்க முயற்சித்து அவரின் வெளிநாட்டுப் பயணத்தையும் தடுக்க முயன்ற பிரதமரும் செந்தில்பாலாஜியிடம் மட்டும் முஷ்டிமடக்கி நியாயத்தை கோருகின்ற நீதியென்பது பெரும் அநீதி. தீமையிலும் பெருந்தீமை. நாட்டுமக்களின் கூட்டு மனசாட்சியையே அநீதிக்கு இணங்க பழகச் செய்யும் அவலம். இத்தகைய அவலத்தை ஒரு பிரதமரே நடத்திக் கொணீடிருப்பதென்பது தேசத்தின் தீவினை. எனவேதான் ராகுல் காந்தி மற்றும் செந்தில் பாலாஜியென்ற தனி நபர்களானாலும் சரி, அல்லது காங்கிரஸ் மற்றும் திமுக என்ற இயக்கங்களானாலும் சரி தங்களின் எதிர்கால நோக்கத்திற்கு பாதகமாக இருக்கும், இருப்பார்கள் என்ற எதனையும், எவரையும் அழித்தே விடநினைக்கிறது பாகவத்கும்பல். </div><div><br></div><div>இத்தகைய நிற்கதி நிலையில் நிலையில் நெஞ்சு வலியிலும் மிரட்டலுக்கு பலியாகாமல் இருந்த ஒரு சகாவை ஒரு முதலமைச்சர் சென்று சந்திப்பதற்கான தார்மீகம் இயல்பாகவே அவருக்கு அமைந்து விடுகிறது. குடியரசு தலைவரை அவமதித்து திறக்கப்பட்ட நாடாளுமன்ற திறப்பு விழாவில், பாலியல் குற்றவாளியான பிரிஜ்பூஷனுடன் ஒரு பிரதமர் கலந்து கொள்வதும், அநீதியிழைக்கப்பட்ட தனது சகாவை ஒரு முதலமைச்சர் சென்று சந்திப்பதன் வாயிலாக 'நான் உன்னுடன் இருக்கின்றேன். இயக்கம் உன்னோடு இருக்கிறது', என்ற ஆறுதலையும் சமப் படுத்துபவர்களின் நோக்கம் என்ன? நீதி, அநீதி என வரும்போது தெளிவாக நீதியின் பாற்பட்டு நிற்பது எத்தனை முக்கியமோ அதற்கு சற்றும் குறைவில்லாதது பெருந்தீமை அல்லது சிறுதீமை என வரும்போது சிறுதீமையை தேர்ந்தெடுப்பது. ஒருவேளை ஸ்டாலின் சென்று சந்திக்கவில்லையெனில் 'செந்தில் பாலாஜியை கைவிட்டு விட்டாரா ஸ்டாலின்?' பாஜகவிற்கு பயந்து விட்டாரா ஸ்டாலின்? அமைச்சருக்கே இக்கதியெனில் தொண்டனின் கதியென்ன?' எனும் ஊளைகள் வராதென்பதற்கு என்ன உத்திரவாதம்? ஆர்ப்பரிக்கும் ஊடக அலைகளுக்கு பதில் சொல்லப்போவது யார்? அட அத்தனையையும் விட்டு விடுவோம். 'கட்சிக்காக இத்தனை உழைத்தேனே, கொங்குவை கட்சி வசமாக்கினேனே, சொல்லப்போனால் ஒருவிதத்தில் அத்தகைய அடையாளத்தினால்தானே இத்தகைய குரூரங்கள்? இருப்பினும் தலைமை நம்மை நிர்கதியாக்கி விட்டதே' என பாதிக்கப்பட்டவரும் அவரின் குடும்பமும் நினைத்தால் அவர்களுக்கு என்ன பதில்? ஒரு தலைமை வழங்குவதை விடவும் மேலான ஆறுதலை வேறெவரா வழங்கி விடவியலும்? செந்தில் பாலாஜி கண்டுகொடாமல் விடப்பட்டால் மீதமுள்ள சகாக்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்? நாளை நமக்கும் இதே கதிதானா ? என அவர்கள் நினைத்தால் திமுகவின் கதியென்ன? </div><div><br></div><div>எனவே நடைமுறையின்படி பார்த்தோமெனில் தனது அமைச்சரவை சகாவை ஸ்டாலின் சென்று சந்தித்ததில் கிஞ்சிற்றும் குறையில்லை. தனது சிறகினடிகளை குஞ்சுகளைப் பாதுகாக்கும் தாய்ப்பறவை போல தனது, சகாக்களை அவர் பாதுகாக்கத்தான் வேண்டும்., ஒவ்வொருவருவரிடமும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழ்வினைகள் அதற்கான நேரத்தில் உருத்து வந்து ஊட்டட்டும் அது இயற்கையின் நீதி. ஆனால் கொள்ளையனை கொலைகாரண் தண்டிப்பதென்பது மனு நீதி.</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiNxO9aRFcggMxRhY06i8L5oBRsgxX4G3vyDp1JCdapau4s01ABMIoQCNuahcI9_Ck1JuzpcZUv7X6rNDhTwW51LQ5gEuA8bA0Wc0KKKmJComClaQrWkNiwAu3CoTt56o_NGFhOy9-_PDyGSmNiswLJ7k-LYSALFwW1cxOBVE3udxW19h9c8n22mEjU" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiNxO9aRFcggMxRhY06i8L5oBRsgxX4G3vyDp1JCdapau4s01ABMIoQCNuahcI9_Ck1JuzpcZUv7X6rNDhTwW51LQ5gEuA8bA0Wc0KKKmJComClaQrWkNiwAu3CoTt56o_NGFhOy9-_PDyGSmNiswLJ7k-LYSALFwW1cxOBVE3udxW19h9c8n22mEjU" width="400">
</a>
</div><br></div><div>சரி செந்தில் பாலாஜிக்கு முன்பும், பிறகும் இத்தகைய தவறுகள் நடைபெறவே இல்லையா? நாடெங்கிலும் இப்போதும் போக்குவரத்து துறை மட்டுமல்லாது இருக்கின்ற அத்தனை துறைகளிலும் லஞ்சமற்று நேர்மையாகத்தான் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றனவா? செந்தில் பாலாஜி ஒருவர்தான் இன்றைய நேரத்தில் முதன்மையாக தண்டிக்கப் பட்டேயாக வேண்டிய குற்றவாளியா? வியாபம்- துவங்கி 40%ஐ லஞ்சமாக கேட்கின்றார்கள் என மோடிக்கே நேரடியாக கடிதம் எழுதிவிட்டு தன்னுயிரை மாய்த்துக் கொண்ட அனைத்து கேவல நிகழ்வுகள் பற்றியும், இவை அத்தனை சீரழிவுகளையும் தமது அதிகாரத்தின் கீழ் நடத்திக் கொண்டிருப்பவர்கள் குறித்து நீதித்துறையின் பதில் என்ன? குஜராத் அரசு மருத்துவமனைகளை அவைகள் மருத்துவமனைகளா? அல்லது பாதாள சாக்கடையா? என நெஞ்சு பொறுக்காமல் வினவிய குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். மொத்த ஊடகங்களையும் கையில் வைத்துக்கொண்டு பாஜக ஆளுகின்ற மாநிலங்கள் குறித்து எதிர்மறையான எச்செய்தியையும் வெளிவராமல் ஒரு இரும்புத்திரை மாநிலங்களாக மாற்றிக் கொண்டிருப்பவர்கள் தமிழ்நாட்டின் வெளிப்படைத்தன்மையை கேள்வி கேட்பது அதிகாரத்திமிரும், அற்பவாத லட்சியமுமேயன்றி வேறில்லை. </div><div><br></div><div>ஹிட்லரின் காலத்தில் நாம் இல்லை. நாஜியிச குரூரங்கள் என்பது நமக்கு சரித்திரங்களேயன்றி சம்பவங்களாக நாம் கண்டிருக்கவில்லை. ஆனால் நம் சமகாலத்தின் ஆகக்கேடான காட்சிகளை இன்னும் சமீபத்தில் எதிர்கொள்ள இருக்கின்றோம். ஹிட்லரோடு ஜெர்மனியில் நாஜியிசம் ஒரு முடிவுக்கு வந்தது. முசோலினியோடு இத்தாலியில் ஃபாசிஸம் ஒரு முடிவுக்கு வந்தது. காரணம் அவை அரசியலிலும், ஆட்சியிலும் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தன. ஆனால் ஜெர்மனியின் நாஜியிசத்தையும், இத்தாலியின் ஃபாஸிசத்தையும், இஸ்ரேலின் ஜியோனிசத்தையும் தன்னகத்தே வரித்து வைத்திருக்கும் இந்திய இந்துத்வ பார்ப்பணீயமோ இயக்கம் வேறு, கட்சிவேறென இருகூறாக இருக்கிறது. பின்னின்று அரசை நிறுவவும், கட்டுப்படுத்தவும் செய்கின்றது. எனவேதான் ஹிட்லர் மற்றும் முசோலினியைப் போல தனிநபரோடு முடிந்து விடக்கூடிய துயரமல்ல இந்தியத்துயரம். இது அழிவுச் சிந்தனையையும், பகையையும், வெறுப்பையும் இயல்பிலேயே தோற்றுவித்து நாட்டு மக்களை அதற்கேற்ப பழக்குகிறது. எனவே இதனை வீழ்த்தி சுபிட்சத்தை நிலைநாட்டுவதென்து தனிநபராலோ, ஒரேயொரு இயக்கத்தாலோ, ஒரு ஆட்சி மாற்றத்தாலோ ஆகக் கூடியதல்ல. மக்களனைவரும் ஒன்றுபட்டு தொடர்ச்சியான மக்கள் எதிர்ப்பினூடாகத்தான் அவைகளை சாதிக்கவியலும். எனவே பிரச்சனைகளின் அடிப்படையை கண்டறிவதை விடவும், அடிப்படையான பிரச்சனையை கண்டடைவதே இன்றைய முதன்மைத் தேவையாக இருக்கிறது. "எமது எதிர்கால சந்ததிகளேனும் சுதந்திர ஃபலஸ்தீனில் வாழ்வார்கள்"என்றாளொரு எட்டுவயதேயான ஃபலஸ்தீன சிறுமி. அப்படியேதான் நம்பத் தோன்றுகிறது. எமக்கும். எமது நாட்டை சூழ்ந்திருக்கின்ற சூழ்ச்சியும், பகைமையும், வெறுப்புணர்வும் நீங்கி, இதனை தோற்றுவித்தவர்கள் அனைவரும் முழுமையாக தோற்றோடி நவஉலகில் மீண்டும் ஒரு முன்மாதிரியான, எது குறித்தும் அச்சமற்ற முழு சுதந்திர இந்தியாவாக என் நாடு திகழும். எம் சகோதரர்கள் யாவரும் தமக்குள் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற அடிப்படையான தத்துவத்தின் பாற்பட்டு நிம்மதியான சுதந்திரக்காற்றை சுவாசிக்கக்கூடும்.</div><div><br></div><div>நன்றி வணக்கம்..</div>சாந்திபாபு http://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-32978564724552076502023-02-10T23:21:00.001+05:302023-02-10T23:21:46.433+05:30வாட்ஸ்அப் யுனிவர்சிட்டியில் மட்டும் படித்தவர்களுக்கு..<div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEu-fjquJ57L72tM-6IA-N5Bl9SucpWuBv2IXHmotNeA-7R2RSl-9lmKFJjJSTyCNSVzibvBw_QMjYC_OiznYUS82L7FQ78pS8v2CVX3mRN7X-I0oHemvmi2EGLRot3rF64hqiUtB-joI/s1600/1676051499363982-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEu-fjquJ57L72tM-6IA-N5Bl9SucpWuBv2IXHmotNeA-7R2RSl-9lmKFJjJSTyCNSVzibvBw_QMjYC_OiznYUS82L7FQ78pS8v2CVX3mRN7X-I0oHemvmi2EGLRot3rF64hqiUtB-joI/s1600/1676051499363982-0.png" width="400">
</a>
</div><div>வாட்சப் ல் வரலாறு படிப்பவர்களுக்காக…</div><div><br></div><div>கலைஞர் யார்?</div><div><br></div><div>1.கேள்வி: எம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா? </div><div><br></div><div>பதில்: இந்த கேள்வி வரலாறு தெரிந்தவர்களுக்கு சிரிப்பூட்டும் என்றாலும் திரிக்கப்பட்ட பல கட்டுக் கதைகள் இந்த சமூகத்தில் பரப்பப்பட்டு வருகின்றன என்பதும், அவைதான் உங்களைப்போன்ற இளைஞர்களை இப்படி கேள்வி கேட்க வைக் கின்றன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. சரி கவனமாக படியுங்கள்.</div><div><br></div><div>கலைஞர் பிறந்தது 1924ல், கோவையில் செயல்பட்ட ஜுபிடர் திரைப்பட நிறுவனத்திலும் பின் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திலும் கதை வசன எழுத்தாளராக வேலைக்கு சேர்ந்தது 1944ல் அதாவது இருபது வயதில். (அவர் முதன் முதலில் கோவைக்குத்தான் சென்றார்.சென்னைக்கு அல்ல)</div><div><br></div><div>மூன்றாண்டுகள் உதவி எழுத்தாளராக இருந்தவருக்கு 1947ல் ராஜகுமாரி என்ற திரைப்படத்தில் முதல் அங்கீகாரம் கிடைத்தது அதாவது உதவி ஆசிரியர் மு.கருணாநிதி என்ற பெயரில்.</div><div><br></div><div>அப்போது அவருக்கு வயது 23.அந்த படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்தவர் எம்ஜிஆர்.</div><div><br></div><div>கலைஞருக்கு அடுத்தடுத்து படங்கள் அமைந்தன. 1948ல் அபிமன்யு,1949ல் மருதநாட்டு இளவரசி 1950ல் மந்திரிகுமாரி என படங்கள் தந்த புகழில் கலைஞர் உச்சத்துக்கு போனார்.</div><div><br></div><div>1952ல் கலைஞர் சொந்தமாக கார் வைத்திருந்தார்...</div><div>கோபாலபுரத்தில் வீடும் வாங்கிவிட்டார்(1955)</div><div><br></div><div>அப்போதிருந்த திராவிட இயக்கத்தினரிடையே மிகவும் இளையவராகவும் பணக்காரராகவும் இருந்தவர் கலைஞர்.</div><div><br></div><div>எம்ஜிஆர் நடித்த எல்லா படங்களுக்கும் நட்பின் அடிப்படையில் கலைஞர் கைகொடுத்து வாய்ப்பளித்தார்.</div><div><br></div><div>எம்ஜிஆருக்கு மந்திரிகுமாரி படம் திருப்புமுனையாக அமைந்தது(1950)</div><div><br></div><div>அப்படம் திருப்புமுனையாக இருந்தாலும் அவரை சூப்பர் ஸ்டார் உயரத்துக்கு கொண்டு சென்ற படம் மலைக்கள்ளன்(1954).அதுவும் கலைஞர் திரைக்கதை வசனம் எழுதிய படமாகும்.</div><div><br></div><div>ஆனால் அதற்குமுன்பே கலைஞர் ஒரு மாபெரும் சூப்பர்ஸ்டாராக இருந்தார்.</div><div><br></div><div>அவர் கதைவசனம் எழுதி சிவாஜிகணேசன் அறிமுகமான பராசக்தி திரைப்படம் 1952 வந்தது.</div><div><br></div><div>இங்கே கவனிக்க வேண்டியது 1952 முதல் 1954 வரை சிவாஜியை விடவும் எம்ஜிஆர் சின்ன நடிகராக இருந்தார் என்பதாகும்</div><div><br></div><div>இன்னொன்று சொல்கிறேன்.</div><div><br></div><div>திமுக தொடங்கப்பட்டது 1949ல்</div><div><br></div><div>முதன் முதலில் தேர்தலின் நின்றது 1957ல்</div><div><br></div><div>வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது 1967ல். கலைஞர் அமைச்சாரனதும் அப்போதுதான்.</div><div><br></div><div>1944ல் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கி 1947ல் உச்சம்பெற்று 1952ல் சூப்பர்ஸ்டாராகி 1955க்குள் தனக்கு தேவையான எல்லா சொத்துக்களையும் தனது உழைப்பால் கலைஞர் சேர்த்துவிட்டார்.</div><div><br></div><div>அது மட்டுமல்ல. எம்ஜிஆர், சிவாஜி என்ற மாபெரும் திறமை படைத்த திரைக் கலைஞர்களை உலகத்திற்கு கொடுத்திருக்கிறார்.</div><div><br></div><div>அவர் கோடீஸ்வரனாகி சுமார் 13 ஆண்டுகள் கழித்துதான் அமைச்சர் பதவிக்கு வந்தார்.</div><div><br></div><div>இன்றைக்கும் கலைஞரின் சொத்து 1955ல் எவ்வளவு இருந்ததோ அவ்வளவுதான் இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.அந்த சொத்து கூட எதிர்காலத்தில் மருத்துவமனையாக வேண்டும் என்றே அவர் உயில் எழுதி வைத்திருக்கிறார்.</div><div><br></div><div>2. கலைஞரும் இந்து மத விரோதமும் </div><div><br></div><div>கலைஞர் என்றாலே இந்து மத விரோதி என்றும், அவர் கோயில்களை இழுத்து மூடுவதையே வழக்கமாக கொண்டவர் என்றும், திராவிட ஆட்சிகளினாலும் இந்து சமய அறநிலையத் துறையினாலும் எல்லாமே குடி மூழ்கிப்போனது என்றும் கூக்குரல்கள் எழுவது வழக்கமே!</div><div> </div><div>எதிரிகளால் கலைஞரை சுற்றி பின்னப்பட்ட எத்தனையோ பொய் வலைகளில் இதுவும் ஒன்று.</div><div> </div><div>அது எப்படி பொய்யாக இருக்கும்? அவர் தான் நாத்திகர் ஆயிற்றே என்பீர்கள்!</div><div> </div><div>அவர் நாத்திகர் தான், அதை அவர் என்றும் மறைத்ததில்லை. ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வராக அவர் பணியாற்றிய போதெல்லாம் அவர் எப்படி செயல்பட்டிருக்கிறார் என்று பாருங்கள். அப்போது தான் தெரியும் அவரின் உயரம்.</div><div> </div><div>அவர் முதல்வராக பணியாற்றிய காலத்தில், இந்து சமய அறநிலையத்துறை மூலமாக நடந்தவை:</div><div> </div><div>♦️ முதல்வர் தலைமையில், அறநிலையத் துறை அமைச்சர், அறநிலையத் துறைசெயலாளர், அறநிலையத் துறை ஆணையர், குன்றக்குடி ஆதினம், திருப்பனந்தாள் ஆதினம், திருவாவடுதுறை ஆதினம், திருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகள், திருமதி சௌந்தரம் கைலாசம், மேனாள் நெல்லை மேயர் உமா மகேஸ்வரி, கருமுத்து கண்ணன் ஆகியோர் அடங்கிய தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அமைப்பு, 1996</div><div> </div><div>♦️ புரவலர் விருது & தங்க நிற அட்டை திட்டம் - ரூ.5 லட்சம் நன்கொடை வழங்குபவர்களுக்கு திருக்கோயில் புரவலர் என்ற பட்டமும், அரசு சான்றிதழும், தங்க நிறத்திலான அட்டையும் வழங்க அரசு உத்தரவு. அவர்கள் குடும்பத்தினர் 5 பேருக்கு அறநிலையத்துறை கட்டுபாட்டிலுள்ள திருக்கோயில்களில் 20 வருடங்கள் சிறப்பு தரிசன அனுமதி வழங்கவும் உத்தரவு. 48 புரவலர்கள் மூலம் ரூ.2.40 கோடி நிதி திரட்டல், 2006-2011</div><div><br></div><div>♦️ திருக்கோயில் குடமுழுக்கு விழாக்கள்</div><div> </div><div>1. மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயில், 1996</div><div>2. திருப்பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில், 1997</div><div>3. திருநீர்மலை ரங்கநாத சுவாமி திருக்கோயில், 1997</div><div>4. திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் திருக்கோயில், 1997</div><div>5. திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், 1997</div><div>6. கடலூர் திருவேந்திரபுரம் தேவநாதசுவாமி திருக்கோயில், 1997</div><div>7. தஞ்சை பெரிய கோயில், 1997</div><div>8. சென்னை மல்லீஸ்வரர் திருக்கோயில், 1997</div><div>9. வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், 1997</div><div>10. சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், 1998</div><div>11. திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில், 1998</div><div>12. பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயில், 1998</div><div>13. ஆழ்வார் திருநகரி அரவிந்தலோசனர் திருக்கோயில், 1998</div><div>14. சென்னகேசவ பெருமாள் திருக்கோயில், 1999</div><div>15. வல்லக்கோட்டை முருகன் திருக்கோயில், 1999</div><div>16. கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில், 1999</div><div>17. திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், 1999</div><div>18. கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில், 1999</div><div>19. ஆழ்வார் திருநகரி ஆதிநாதாழ்வார் திருக்கோயில், 2000</div><div>20. குறுங்காலீஸ்வரர் திருக்கோயில், 2000</div><div>21. மதுரை காளமேக பெருமாள் திருக்கோயில், 2000</div><div>22. அகத்தீஸ்வரர் திருக்கோயில், 2000</div><div>23. வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், 2000</div><div>24. தொட்டியம் வேதநாராயண பெருமாள் திருக்கோயில், 2000</div><div>25. திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், 2000</div><div>26. பழனி தண்டாயுதபாணி திருக்கோயில், 2000</div><div>27. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், 2000</div><div>28. பவானி சங்கமேசுவரர் திருக்கோயில், 2000</div><div>29. காங்கேயம் சுப்ரமணியசுவாமி திருக்கோயில், 2000</div><div>30. திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில், 2000</div><div>31. திருமுட்டம் பூவராகசுவாமி திருக்கோயில், 2000</div><div>32. சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில், 2000</div><div>உள்ளிட்ட 2459 கோயில்களில் குடமுழக்கு, </div><div>33. தமிழகம் முழுவதும் 842 கோயில்களில் பல்வேறு திருப்பணிகள்.</div><div>34. ஆதிதிராவிடர், பழங்குடியினர் & பிற்படுத்தப்பட்டோர் வாழும் பகுதிகளில் உள்ள அறநிலையத்துறையின் கீழ் வராத 6350 கோயில்களில் புனரமைப்பு திருப்பணிகள்</div><div>35. கிராமப்புற திருக்கோயில்கள் திருப்பணிகளுக்கு ரூ.85000/- நிதி உதவி </div><div> </div><div> ♦️ கோயில் சுற்றுப்புற மேம்பாடு</div><div> </div><div>1. நிதிவசதி இல்லாத கோயில்களுக்கு அரசின் சார்பில் இலவச மின்விளக்கு </div><div>2. திருக்கோயில்களின் 2324 குளங்களில் 1146 குளங்கள் தூர்வாரல், படிக்கட்டுகள் செப்பனிடல் & மழை நீர் சேமிப்பு ஏற்படுத்துதல்</div><div>3. அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு காஞ்சி ஏகாம்பரேசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான திருகுளத்தை சீரமைக்க ரூ.43.90 லட்சம், அருள்மிகு அஷ்டபூஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரங்கசாமி குளத்தினை சீரமைக்க ரூ.22.50 லட்சம் நிதி ஒதுக்கல்</div><div>4. இந்து அறநிலையத்துறை அமைச்சர் தலைமையில் 50 முக்கிய திருக்கோயில்களில் உள்ள பழங்கால மூலிகை ஓவியங்களை பாதுகாக்க ரூ.20 லட்சம் செலவில் நடவடிக்கை </div><div> </div><div>♦️ கோயில்களில் தமிழ் </div><div> </div><div>1. தமிழில் வழிபாடு, தமிழில் வேள்வி 1998</div><div>2. சைவத் திருமுறை ஆகமங்கள், வைணவ திவ்விய பிரபந்த பயிற்சி மையங்கள், 1998-99</div><div>3. திருக்கோயில் ஆகம விதிகள் அடங்கிய உத்ரகாமிக ஆகமம் நூலை, 1999</div><div>4. தமிழ் போற்றி அர்ச்சனை புத்தகங்கள் வெளியீடு, 1999</div><div>5. சைவத் திருக்கோயில்கள் 5-ல் தேவார இசைப் பள்ளிகள் </div><div>6. வைணவத் திருக்கோயில்கள் 4-ல் பிரபந்த இசைப் பள்ளிகள் </div><div>7. 8 திருக்கோயில்களில் நாதஸ்வரம் & தவில் பயிற்சி</div><div>8. 75 திருக்கோயில்களில் திருக்குறள் வகுப்புகள் </div><div>9. சிதம்பரம் நடராசர் தமிழ் திருமுறைகள் இசைத்தல்</div><div> </div><div> ♦️ தங்க விமானங்கள், தங்கத்தேர் & மரத்தேர் பணிகள் </div><div> </div><div>1. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் புதிதாக 34 தங்கத் தேர்கள் </div><div>2. சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மூலவர் தங்க விமான மாற்றம், 2007</div><div>3. திருப்பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் மூலவர் தங்க விமான மாற்றம், 2007</div><div>4. சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் மூலவர் தங்க விமான மாற்றம், 2010</div><div>5. திருக்கோயில்களின் 241 மரத் தேர் புதுப்பிப்பு </div><div>6. திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் அம்பாளுக்கு புதிய திருத்தேர் அமைத்தல் & தேரோட்டம், 2008</div><div> </div><div>♦️ கோயில் சொத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் </div><div><br></div><div>1. கோயில் நிலங்களை தனியாருக்கு விற்பதில்லை என்ற கொள்கை முடிவு</div><div>2. தமிழகம் முழுவதும் 8325 கோயில் சொத்து பதிவேடுகள் உருவாக்கம், 1996</div><div>3. தனியார் ஆக்ரமிப்பில் இருந்த திருத்துறைப் பூண்டியில் 621 ஏக்கர், பேரூரில் 250 ஏக்கர் உள்ளிட்ட கோயில் நிலங்கள் மொத்தம் 2745 ஏக்கர் கோயில் நிலங்கள் நேரடி மீட்பு </div><div>4. நீதிமன்ற நடவடிக்கைகள் வாயிலாக 1414 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு </div><div>5. திருக்கோயில்களில் உள்ள உலோகத் திருமேனிகளை பாதுகாத்திட திருவொற்றியூர், திருத்தணி, விருதுநகர், விழுப்புரம் & தர்மபுரி உள்ளிட்ட 15 இடங்களில் உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையம்</div><div>6. மொத்தம் 532 திருக்கோயில்களில் களவு எச்சரிக்கை மணி பொருத்துதல்</div><div>7. மொத்தம் 59 திருக்கோயில்களில் CCTV பொருத்துதல்</div><div>8. திருக்கோயில்களின் சொத்துக்களை மீட்க தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் நீதிமன்ற கட்டணம் சொத்து மதிப்பில் 7.5 சதவிகிதம் என்று இருந்ததை மாற்றி அனைத்து வழக்குகளுக்கும் ஒரே கட்டணமாக ரூ.100/- என நிர்ணயித்து அரசு ஆணை, 2010</div><div>9. கோயில்களில் பக்தர்கள் வழங்கும் பருத்தி நூல் புடவை & வேட்டிகளை ஏலம் விடுவதை நிறுத்திவிட்டு, அவற்றை முதியோர், ஆதரவற்றோர் & கைம்பெண்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டம்</div><div> </div><div>♦️ பணியாளர் நியமனம் & நலன்</div><div> </div><div>1. ஓய்வூதிய நல நிதி, 1996</div><div>2. பணியாளர் சேமநல நிதி, 1997</div><div>3. பணியாற்றும் காலத்தில் இயற்கை எய்தும் பணியாளர்களுக்கு ரூ.2000/- இறுதி சடங்கு நிதி, 1997</div><div>4. பணியாளர்களின் மகன் திருமணத்திற்கு ரூ.6000, மகள் திருமணத்திற்கு ரூ.10000/-, 1997</div><div>5. மருத்துவப்படி, சீருடை சலவைப் படி, இருசக்கர வாகனம் வாங்க கடன், 1997</div><div>6. கோயில்களுக்கான 200 புதிய செயல் அலுவலர் பணியிடங்கள் தோற்றுவித்தல், 1998</div><div>7. ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்ட திருக்கோயில்களின் அனைத்து பணியாளர்களுக்கும் அகவிலைப்படி, 1998</div><div>8. திருக்கோயில் பணியாளர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி, 1999</div><div>9. ஆண்டுக்கு ஒரு லட்சமும் அதற்கு மேலும் வருமானம் உள்ள கோயில்களின் பணியாளர்களுக்கு சிறப்பு வருங்கால வைப்பு நிதி திட்டம், 1999</div><div>10. திருக்கோயில் பணியாளர் மகன்/மகளுக்கு மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் மடிக்கணனி வழங்குதல், 2010</div><div>11. திருக்கோயில் பணியாளர் மகன்/மகளுக்கு மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் உயர்கல்வி பயில நிதி உதவி, 2010</div><div>12. திருக்கோயில் பணியாளர்கள் 2575 பேருக்கு ஒரே சீருடை & அடையாள அட்டை, 2010</div><div>13. கிராம பூசாரிகள் 1146 நபர்களுக்கு ஓய்வூதிய திட்டம் </div><div>14. ஒரு காலப் பூசை நடைபெறும் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர் & பூசாரிகள்10,000 பேருக்கு இலவச சைக்கிள், 2010</div><div>15. மொத்தம் 49,240 கிராம பூசாரிகள் அடங்கிய நலவாரியம், 2010</div><div>16. திருக்கோயில்களில் 150 தமிழ்ப் புலவர்கள் நியமனம் </div><div>17. மங்களாசாசனம் செய்யப்பட்ட சரித்திர புகழ் வாய்ந்த கோயில்களில் 14 தவில், 30 நாதஸ்வரம், 4 தாளம் ஆகிய இசைக் கலைஞர்கள் 48 பேர் நியமனம் </div><div>18. சைவத் திருமுறைகளான தேவாரம் திருவாசகம் பாட 43 திருக்கோயில்களில் ஓதுவார்கள் நியமனம் </div><div> </div><div>♦️ கோயில்கள் சார்ந்து மக்கள் நலப் பணிகள் </div><div> </div><div>1. திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து 10 கோடி மைய நிதியை உருவாக்கி திருக்கோயில்கள் மூலம் நடத்தப்படும் பள்ளிகள் & கல்லூரிகளுக்கு நிதி வசதி </div><div>2. திருக்கோயில்களில் ஆதரவற்ற இளம் சிறார்கள் கருணை இல்லம் திட்டத்தின் கீழ் 38 திருக்கோயில்கள் மூலம் 43 கருணை இல்லங்கள், 1975</div><div>3. திருக்கோயில் கருணை இல்ல மாணவ, மாணவியர்களுக்கு இலவச கணினி, தட்டச்சு & தையல் பயிற்சி </div><div>4. திருக்கோயில்களால் நடத்தப்படும் ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச சீருடை</div><div>5. நிதிவசதியும், இடவசதியும் உள்ள 114 முக்கிய திருக்கோயில்களில் நூல் நிலையங்கள் அமைத்தல் </div><div>6. பழனியில் ரூ.1 கோடி மதிப்பில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் பஞ்சாமிர்த தயாரிப்பு நிலையம்</div><div>7. திருவேற்காடு, சமயபுரம் ஆகிய திருக்கோயில்கள் சார்பில் திருமண மண்டபங்கள், 2007 & 2009</div><div> </div><div>♦️ திருவாரூர் ஆழித் தேர்</div><div><br></div><div>அனைத்து துறைகளிலும் காலத்துக்கும் தன் பெயர் சொல்லும்படியான ஓர் சிறப்பு முத்திரையை பதித்துள்ள தலைவர் கலைஞர், அறநிலையத் துறையில் அப்படியான ஒரு முத்திரையை தன் சொந்த மாவட்டமான திருவாரூரில் பதித்துள்ளார்.</div><div><br></div><div>அது தான் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் கோயில் ஆழித் தேர்.</div><div><br></div><div>நீண்ட நெடுங்காலமாக ஆத்திகர்கள் ஆண்ட இந்த மாநிலத்தில் திருவாரூர் தேர் ஓட்டம் 1948 ஆம் ஆண்டோடு நின்றுவிட்டது. எண்கோண வடிவத்தில் நாலு நிலைகளுடன் 96 அடி உயரமும் 360 டன் எடையும் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய மரத்தால் ஆன ஆழித்தேரை, நாத்திகரான இவர் 1969ல் முதல்வரானவுடன் திருச்சி Bhel நிறுவனத்தின் உதவியுடன் செப்பனிட்டு, இரும்பு அச்சுகள், சக்கரங்கள் & Hydraulic Brake System எல்லாம் கொண்டதாக நவீனமயப்படுத்தி, 1970 ஆம் ஆண்டு ஓட வைத்து தமிழ்நாட்டுக்கும், திருவாரூருக்கும், தியாகராஜ சுவாமிக்கும் சிறப்பு சேர்த்தார்.</div><div><br></div><div>இவ்வளவு செய்த கலைஞரை, ஒரு சிறு கூட்டம் அவர் மறைவுக்கு பின்னரும் ஏன் தொடர்ந்து இந்து மத விரோதி என்று தூற்றுகிறது? </div><div><br></div><div>அதற்கு காரணம் கோயில்களில் அவர் செய்திருக்கும் சமுக நீதி சார்ந்த செயல்கள் தான். </div><div><br></div><div>தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மக்களிடையே சமத்துவத்தை வலியுறுத்துவதற்காக அவர் கொண்டு வந்த சட்டங்கள்,</div><div><br></div><div>1. பரிவட்ட மரியாதை நிறுத்தம்</div><div>2. அறங்காவலர் குழுவில் ஆதி திராவிடர் & மகளிர்</div><div>3. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் </div><div> </div><div>பரிவட்டம், அறங்காவலர் குழு பதவிகள், அர்ச்சர்கர் பணி, இந்த மூன்றுமே பரம்பரை பரம்பரையாக ஒரு குடும்பம், ஒரு சாதி என்ற குறுகிய வட்டத்திற்குள் இருந்த உரிமைகள். அதை இந்த மனிதன் சட்டத்தின் துணையுடன் பொதுமைப்படுத்தி எல்லாருக்குமான ஒன்றாக ஜனநாயகப்படுத்தி விட்டாரே என்ற கோபம் தான் அவர் மீதான வன்மமாக வளர்ந்து அவர் மறைவுக்கு பின்னரும் அவரை தூற்ற காரணமாகிவிட்டது.</div><div><br></div><div>கலைஞரின் வார்த்தைகளே தான் அவர்களுக்கான பதில்</div><div><br></div><div>கடவுளை கலைஞர் ஏற்கிறாரா இல்லையா என்பதல்ல கேள்வி.</div><div>கடவுள் என்றொருவர் இருந்தால் அவர் கலைஞரை ஏற்கிறாரா இல்லையா என்பது தான் கேள்வி.</div><div>அந்த கேள்விக்கான பதில் தான் அவர் செய்துள்ள, மேலே பட்டியிலடப்பட்டுள்ள பணிகள்</div><div><br></div><div>#FatherofModernTamilnadu #HBDKalaignar97</div><div><br></div><div>3. யார் இந்த மலையாளி </div><div>எம் ஜி ஆர் என்ன இப்படி நாறுது...</div><div><br></div><div>#படித்துதெரிந்துகொள்ளுங்கள். இளம் தலைமுறையினரே.....</div><div><br></div><div>யார் இந்த MGR? </div><div>மறைக்கப்பட்ட உண்மைகள்**</div><div>கலைஞருக்கு எதிரா சர்க்காரியா கமிசன் மட்டுமே.ஆனா MGR க்கு எதிரா பால்கமிசன், ரே கமிசன் எரிசாராய முறைகேடு, மருத்துவ கல்லூரி சீட்டு முறைகேடு, பால்டிகா கப்பல் நிலக்கரி பேர முறைகேடு,ராபின் மெயின் முறைகேடு, பாஸிச அடக்குமுறை ஆட்சி, ஏகப்பட்ட துப்பாக்கி சூடுகள், பொருளாதார நாசம், பத்திரிக்கை சுதந்திரம் பறிப்பு, நீதித்துறை மிரட்டல் என எண்ணற்ற குற்றச்சாட்டுகள்.</div><div><br></div><div>ஆனால் எதுவுமே பேசப்படவில்லையே ஏன்?</div><div><br></div><div>இவர் சினிமாவில் நடிகராக உத்தமர், வீரர், மக்கள் போராளி, குடியை எதிர்ப்பவர் என பல வேசங்களில் வலம் வந்தவர். ஆனால் உண்மையில் அவர் யார்?</div><div><br></div><div>திமுகவின் பொருளாளராக அனைத்து அதிகாரத்துடன் இருந்த MGR கணக்கு கேட்டாராம். ஆனா கலைஞர் கணக்கு தரவில்லையாம். அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்களாம்.</div><div><br></div><div>வேடிக்கையா இருக்குமே😁</div><div><br></div><div>ஆனால் ஊரெல்லாம் இதே பேச்சுதான். எல்லோரும் நம்பினர்.</div><div>ஆனா இந்திராவின் மிரட்டல்தான் MGR ரின் இந்த பேச்சுக்கும் நடத்தைக்கும் காரணம்.</div><div><br></div><div>MGR ஒன்னாம் நம்பர் பயந்தாங்கொள்ளி. மத்தியில் யார் பிரதமரோ யாரிடம் வருமானவரித்துறை இருக்கிறதோ அவர்களை கண்டாலே நடுக்கம்தான். அப்படித்தான் இந்திராவின் அடிமையாக மாறி திமுகவை பிரித்தார்.</div><div><br></div><div>MGR ன் அடிமைத்தனத்தால் கச்சத்தீவை இந்திரா கொடுத்தபோது திமுக மட்டுமே அதை எதிர்த்தது. அதிமுக அனைத்து துவாரங்களையும் மூடிக்கொண்டது. சட்டமன்ற தீர்மானத்தை கூட ஆதரிக்கவில்லை.</div><div><br></div><div> 2016 ல் ஜெ சட்டமன்றத்தில் கச்சத்தீவை பற்றி வாய்கிழிய பேசியபோது MGR ன் கோழைத்தனத்தை பற்றி பேசாதது ஏன்?</div><div><br></div><div>மேலும் ஜெ பேசும்போது 2008 ல் தான் கச்சத்தீவை மீட்க வழக்கு போட்டதாக சொல்லியிருக்கிறார்</div><div><br></div><div>1977 ல் ஆட்சிக்கு வந்த MGR ஏன் வழக்கு போடவில்லை?</div><div>1991 இல் ஜெ ஆட்சிக்கு வந்ததும் ஏன் வழக்கு போடவில்லை?</div><div><br></div><div>ஏனென்றால் இதெல்லாம் ஊரை ஏமாற்றும் வேலை என்பது ஜெ க்கு நன்கு தெரியும். இனி கச்சத்தீவை மீட்க வழியே இல்லை.</div><div>1974 ல் திமுகவுடன் காங்கிரஸ் மற்றும் அதிமுக சேர்ந்து மத்திய அரசின் முடிவை எதிர்த்திருந்தால் அப்போதைய கச்சத்தீவு தாரை வார்ப்பை தடுத்திருக்கலாம்.</div><div><br></div><div>ஆனா அப்போது பொத்திக்கொண்டு இருந்த அதிமுகவும் ஜெ யும் இன்று வாய்கிழிய பேசுவது உச்சகட்ட நகைச்சுவை</div><div><br></div><div>1976 இல் எமர்ஜென்சி நேரத்தில் கலைஞர் மீது எண்ணிலா வழக்குகளை போட்டார் இந்திரா.</div><div>அவரது நோக்கம் கலைஞரை ஊழல்வாதியாக ஒரு பிம்பத்தை உருவாக்குவதே. </div><div><br></div><div>அத்தனை பத்திரிக்கைகளும் ஊடகங்களும் 2G விவகாரத்தை </div><div>எப்படி ஊதி பெருக்கினார்களோ அதே மாதிரிதான் அன்றும் அவாள் சார்பு பத்திரிக்கைகள் தினம் தினம் சர்க்காரியா விசாரணை செய்திகளை பரப்பின. எமர்ஜென்சி என்பதால் ஒரு தரப்பான கலைஞருக்கு எதிராக செய்திகள் பரப்பப்பட்டது.</div><div>கலைஞர் தரப்பு நியாயங்கள் மக்களுக்கு போய் சேராமல் பார்த்துக்கொண்டன</div><div><br></div><div>மக்கள் குறிப்பாக அடித்தட்டு மக்கள் அப்படியே நம்பினார்கள். இன்றும் கலைஞர் மீது அன்று குத்தப்பட்ட ஊழல் முத்திரை விலகவில்லை.</div><div><br></div><div>ஆனால் இறுதிவரை சர்க்காரியா கமிசனால் எதையும் நிரூபிக்கமுடியவில்லை. ஆனால் மக்களிடத்தில் திமுக மீது வெறுப்பு வந்தது.</div><div><br></div><div>விளைவு... 1977 ல் அதிமுக + இந்திரா கூட்டணி பெரும் வெற்றி.</div><div>ஆனால் மத்தியில் காங்கிரஸ் தோல்வி. </div><div><br></div><div>வழக்கம்போல வடிகட்டிய கோழை MGR மத்திய அரசு பக்கம் சாய்ந்ததுடன் தனித்து நின்று தமிழகத்தில் ஆட்சியை பிடித்தார்.</div><div><br></div><div>மத்திய அரசுக்கு பயந்துக்கொண்டு தஞ்சை MP இடைத் தேர்தலில் இந்திரா போட்டியிட விரும்ப MGR அதை ஏற்கவில்லை.</div><div>இந்திரா கர்நாடகா சிக்மக்ளூரில் நின்று வென்றார்.</div><div><br></div><div>மத்தியஅரசின் நிர்ப்பந்தம் காரணமாக தன்னை நிராகரித்த கோழை MGR மீது கடும் கோபம் கொண்ட இந்திரா தான் கலைஞருக்கு செய்த கொடுமைகளுக்கு வருந்தி கலைஞருக்கு தூது அனுப்பி பின்பு மெரினாவில் மக்களிடம் தனது ஆட்சியின் எமெர்ஜென்சி கால தவறுகளுக்கு வருத்தம் தெரிவிக்க திமுக- காங்கிரஸ் உறவு ஏற்பட்டு 1980 ல் தமிழகத்தில் ஒரு இடம் தவிர அனைத்து MP தொகுதிகளிலும்</div><div>அந்த கூட்டணி வென்றது.</div><div><br></div><div>ஆனால் அதே ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் MGR மீண்டும் வெல்ல அதன் பிறகே MGR ன் உண்மை முகம் வெளியானது.</div><div><br></div><div> </div><div>1980 தேர்தலில் வென்ற பிறகுதான் எம்ஜிஆர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ரத்து செய்தார். சாராயக் கடைகளை கொண்டு வந்தார். அந்த சாராயக்கடைகள் ஏலம் எடுப்பதன் மூலம் அந்த வருவாய் கட்சிக்காரர்களுக்கே இருக்க வேண்டும் என்று கருதினார்.</div><div><br></div><div>அதற்காக சாராயக்கடை ஏலம் கோருபவர்கள் தங்கள் கட்சி உறுப்பினர் சீட்டு விவரங்களை குறிக்க வேண்டும். அவர்களுக்கே முன்னுரிமை தரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு எழுதப்படாத ஆணை பிறப்பித்தார். அது முறையாக நடக்கிறதா என்பதை உளவுத்துறை மூலம் கண்காணித்து நடைமுறைப்படுத்தவும் செய்தார்</div><div><br></div><div>சாராயக்கடைகள் திறக்கப்பட்ட வேளை. சாராயக் கம்பெனி நடத்த ஒரு குறிப்பிட்ட தொழிலதிபருக்கே அனுமதி வழங்கப்பட்டது.</div><div><br></div><div>1975-80 வரை அரசின் மொத்த வரி வருமானத்தில் கலால் வரியின் பங்களிப்பு வெறும் 1 சதவிகிதம் மட்டுமே.</div><div><br></div><div>1980-81 அஇஅதிமுக அரசு தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக மதுப் பயன்பாட்டின் மீதான தடையை நீக்கியது. இதனால் குறிப்பிடத்தகுந்த அளவில் கலால் வரி வருவாய் அதிகரித்தது.</div><div><br></div><div> மாநிலத்தின் மொத்த வரி வருவாயில் குறிப்பிடத்தகுந்த அளவாகக் கலால் வரியின் மூலம் 13.9 சதவிகித வருமானம் 1980-85 வருட காலத்தில் பெறப்பட்டது.</div><div><br></div><div> இந்தக் கலால் வரியில் 80 சதவிகிதம் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் பரவலாக அருந்தும் நாட்டுச் சரக்குகளான பட்டைச் சாராயம், கள் மூலம் பெறப்பட்டது என்பது பெரும்பாலான கலால் வரியை இவர்களே செலுத்தினார்கள் என்பதை விளக்குகிறது.</div><div><br></div><div>இந்தக் கலால் வரி வருமானமானது 1981-82 காலத்தில் ரூ.110 கோடியில் இருந்து 1984-85 வருட காலத்தில் ரூ.202 கோடியாக உயர்ந்து கிட்டத்தட்ட இரு மடங்கு அளவுக்கு அதிகரித்திருப்பது கவனத்துக்குரியது.</div><div><br></div><div>இதெல்லாமே MGR ரால் ஏழைகள் உழைப்பு எப்படி உறிஞ்சப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள்</div><div><br></div><div>எம்.ஜி.ஆரின் தயவால் பணக்காரர்கள் பெற்றது அதிகம். பட்ஜெட் புள்ளிவிவரங்கள் சொல்வதைவிட அதிகமாகவே அவர்கள் பயன்பெற்றார்கள்</div><div><br></div><div>சட்ட ரீதியாகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் பல கோடி ரூபாய் பொதுப் பணத்தைச் சாராய உற்பத்தியாளர்கள், நகர்ப்புற ரியல் எஸ்டேட் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரின் தனிப்பட்ட நலன்களுக்காகக் கைமாற்றிக் கொண்டார்கள்.</div><div><br></div><div>MGR ரின் அஇஅதிமுக அரசு முறையற்ற மோசடியான மதுக் கொள்கையை வகுத்தது</div><div><br></div><div>தமிழக அரசின் ஒட்டுமொத்த மது விற்பனையைக் கவனித்துக்கொள்ள டாஸ்மாக் அமைப்பு </div><div>ஏற்படுத்தப்பட்டது.</div><div><br></div><div>இந்தியாவில் உற்பத்தியாகும் வெளிநாட்டு மதுவகைகள் (IMFLs) விநியோகம் செய்யும் மது உற்பத்தியாளர்களுக்கே மது விலையை நிர்ணயிக்கும் உரிமையை வழங்கியது.</div><div><br></div><div>இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே IMFL மதுவகைக்கு உற்பத்தியாளர்களுக்குப் பதிலாக டாஸ்மாக் வழியாகத் தமிழக அரசே கலால் வரி செலுத்தியது.</div><div><br></div><div>சுத்திகரிக்கப்பட்ட ஸ்பிரிட் மீதான எல்லா வகையிலான கலால் வரியிலிருந்தும் மது உற்பத்தியாளர்களுக்குத் தமிழக அரசு வரிவிலக்கு வழங்கியிருந்தது. </div><div><br></div><div>இவை அனைத்தும் தமிழக அரசின் கஜானாவுக்கு ஒவ்வொரு வருடத்துக்கும் 100 கோடி ரூபாய் என்கிற அளவில் ஏழு வருடங்கள் தொடர்ந்து பெருத்த வரி இழப்பை உண்டு செய்தன.</div><div><br></div><div> லாபத்தில் இயங்கிக்கொண்டிருந்த அரசு நிறுவனங்கள் தனியாருக்கு அற்பத் தொகைக்குக் கைமாற்றப்பட்டன மற்றும் அரசுக்குச் சொந்தமான நகர்ப்புற நிலங்கள் மிக மலிவான தொகைக்குத் தனிப்பட்ட நபர்களின் நலன்களுக்காக வழங்கப்பட்டன. </div><div><br></div><div>1977-85 இடைப்பட்ட காலத்தில் அடிமைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு 26.70 லட்சம் நிதி ஒதுக்கியது. இதில் அஇஅதிமுக அரசு 17.04 லட்சம் நிதியைச் செலவு செய்யாமலும், 3.68 லட்சம் நிதியைத் தேவையில்லை என்றும் திருப்பிச் செலுத்தியது.</div><div><br></div><div>1983இல் இருந்து விவசாயக் கூலிகளுக்கான குறைந்தபட்ச ஊதியத்தைத் திருத்தியமைக்கவேயில்லை. ஒவ்வோர் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை ஊதியத்தை ஏற்ற வேண்டும் என்கிற மத்திய அரசின் அழுத்தத்துக்குப் பிறகும் அரசு இப்படி நடந்துகொண்டது.</div><div><br></div><div>வறுமைக் கோட்டுக்குக் கீழே தமிழகத்தின் 40 சதவிகித மக்கள் வாடிக்கொண்டிருந்தார்கள். 1977-87 வரை அவர்களின் நிலைமை முன்னேறவே இல்லை.</div><div><br></div><div> மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மை அளவு மேலும் அதிகரித்தது.1975- 83–க்கு இடைப்பட்ட காலத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை அளவு 86 சதவிகிதம் அதிகரித்தது.</div><div>இது ஒட்டுமொத்த தேசிய அளவான 17.8 சதவிகிதத்தை விட மிகவும் அதிகமாகும்.</div><div><br></div><div>நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை அளவு 1977-78 – 1983 காலத்தில் அகில இந்திய அளவில் குறைந்தபோது தமிழகத்தில் அதிகரித்தது.</div><div><br></div><div>விவசாயிகளின் தோழனாக பல படங்களில் நடித்த எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தவுடன் வாகைக்குளத்தில் விவசாயிகளைச் சுட்டுக் கொன்றார்.</div><div><br></div><div>மீனவனின் நண்பனாக படகோட்டியில் நடித்த எம்.ஜி.ஆர் அப்பாவி மீனவர்களை சுட்டு வீழ்த்தினார்.</div><div><br></div><div>வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் கொடுமையான நிலச்சுவான்தார்களை எதிர்த்துப் போராடிய மார்க்சிய- லெனினிய அமைப்பைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்களை துடிக்க துடிக்க என்கவுன்டர் செய்தார்.</div><div><br></div><div>ஒரு வருடத்திற்கும் மேலே முதல் தகவல் அறிக்கையே தராமல் 1.5 லட்சம் மக்களை சிறையில் அடைத்து சித்தரவதை செய்தார்.</div><div><br></div><div>எம்ஜிஆரின் ஆட்சி காலத்தில் பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், இயக்கவாதிகள் இப்படி அனைத்து தரப்பினருக்கும் அடக்குமுறை அனுபவத்தை தந்தது</div><div><br></div><div>இதற்காக குண்டாஸ் போன்ற புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன</div><div><br></div><div>காவல்துறைக்கு தன்னிச்சையான அதிகாரம் கொடுக்கப்பட்டு அரசை விமர்சிப்பவர்கள் ஒடுக்கப்பட்டனர்.</div><div><br></div><div>விசாரணைக் கைதிகளின் மரணம் வருடம்தோறும் அதிகரித்தது.</div><div><br></div><div>1980-களில் நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம், மாநிலம் தழுவிய கடையடைப்பு நடத்தியது. வேடசந்தூர் உட்பட பல கிராமங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், பல்வேறு காலகட்டங்களில் 14 விவசாயிகள் பலியாகினர்.</div><div><br></div><div>* 1980 டிசம்பர் 31-ம் தேதி, குருஞ்சாக்குளம் விவசாயப் போராட்டத்தின்போது, 8 விவசாயிகள் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகினர்.</div><div><br></div><div>* 1985-ம் ஆண்டு, சென்னையில் மீனவர் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில், 3 மீனவர்கள் பலியானார்கள். பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில், 5 பேர் பலியானார்கள்.</div><div><br></div><div>*1987 வன்னியர் சங்க போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் 21 பேர்</div><div><br></div><div>1980-ல் வடஆற்காடு மற்றும் தர்மபுரி மாவட்டகளில் மார்க்சிய லெனினிய கட்சியைசேர்ந்த 15 பேரும் 1981-ல் நான்குபேரும் எங்கவுண்டரில் கொல்லப்பட்டனர். இந்த கொலைகளை உயர் நீதிமன்றம் கண்டித்தும் இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.</div><div><br></div><div>எம்.எல்.ஏக்களையும் அமைச்சர்களையும் விமர்சிக்கும் திரைப்படங்களை தடை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.</div><div><br></div><div>1981-ல் பத்திரிக்கைகளை ஒடுக்கும் விதமாக சட்டம் கொண்டுவரப்பட்டது</div><div><br></div><div>எந்த வகையிலும் விமர்சனம் என்பது இல்லாமல் பார்த்துக்கொண்டது எம்ஜிஆர் அரசு. உதாரணமாக கோமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம் தமிழக கிராமங்களின் அவலத்தை சொல்லும்பு நாடகமாகும். இந்த நாடகம் தணிக்கை செய்யப்பட்டது. </div><div><br></div><div>இதைத் தழுவி எடுக்கப்பட்ட</div><div>K. பாலசந்தரின் ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படத்தை தடைசெய்ய்யக்</div><div>கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. </div><div><br></div><div>மத்திய அரசு தடைவிதிக்காத் சூழலில் காவல்துறை மூலம் அத்திரைப்படம் ஓடும் திரையரங்கு உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர்....</div><div><br></div><div>திட்டங்கள் கூட தொடர்ந்து 13 வருடம் ஆட்சியில் இருந்தும் சத்துணவை தவிர வேறு எதையும் பெரிதாக கொண்டு வர வில்லை என்பதும் உண்மை......</div><div><br></div><div>மக்களின் ஆதரவிருந்தும் ‘தண்ணீர் தண்ணீர்’ ஒரு சில வாரங்களிலே திரையிலிருந்து விலகியது....</div><div><br></div><div>மொத்தத்தில் அடக்குமுறையாலும் பார்ப்பணீயத்தாலும் மூடி மறைக்கப்பட்ட மிக மிக மோசமானவர் தான் இந்த ம.கோ.இராமச்சந்திரன்.......</div><div>அதில் சில ஆதாரங்கள்.......</div><div><br></div><div>எரிசாராய ஊழலும் ரே கமிசனும்**</div><div><br></div><div>MGR ம் ஈழமும்</div><div><br></div><div>எம்ஜிஆர் புலிகளை ஆதரிக்க காரணம் இரண்டு</div><div><br></div><div>1) கலைஞர் சபாரத்திணத்தை ஆதரித்தார். அவருக்கு எதிரா புலிகளை ஆதரித்தார்.</div><div><br></div><div>2) இந்திரா அப்போது ஈழப்போராளிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி தந்தார்</div><div><br></div><div>இல்லாவிடில் பொத்திக்கொண்டு</div><div>மௌனமாகத்தான் இருந்திருப்பார்.</div><div><br></div><div>எம்ஜிஆர் பணம் கொடுத்தார் என்பது உண்மைதான்</div><div>ஆனால் மத்திய அரசு ஒப்புதல் பெற்றுதான் கொடுத்தார்.</div><div><br></div><div>சார்க் மாநாட்டுக்கு ஜெயவர்த்தனே வந்தபோது சென்னையில் இருந்த பிரபாகரனை வீட்டுகாவலில் வைத்தது எம்ஜிஆர்.</div><div><br></div><div>டெல்லி அசோகோ ஹோட்டல் விவகாரத்தில் பிரபாகரன் எம்ஜிஆரிடம் உதவி கேட்டார் எம்ஜிஆர் கண்டுக்கொள்ளவில்லை.</div><div><br></div><div>1987இல் ராஜிவ் இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பிய போதும், 1987 செப்டம்பரில் 20க்கும் அதிகமான போராளிகளை இந்திய கடற்படை சிங்கள அரசிடம் ஒப்படைத்த போதும், திலிபன் உண்ணாவிரதம் இருந்து மறைந்த போதும், தமிழ் நாட்டில் அதிகாரத்தில் இருந்தது எம்ஜிஆர்</div><div><br></div><div>Ray commission உதயம் ஏன்?</div><div>கலைஞரை ஊழல்வாதி என முத்திரை குத்திய உத்தமர் எம்ஜியாரின் சாராய ஊழல் பற்றிய முழு விபரங்கள்</div><div><br></div><div>36 ஆண்டு கால ஆட்சி அதிமுக னு சொல்லுவானுங்க</div><div>தொடர்ந்து 3 முறை ஆட்சி</div><div>தொடர்ந்து 2 முறை ஆட்சி னு சொல்லுவானுங்க சரிடா உங்க தலைவர்கள் #எம்ஜிஆர், #ஜெயலலிதா என்னதான் மக்கள் நல திட்டங்கள், சட்டங்கள், சாதனைகள் செஞ்சாங்கனு கேட்டா பதிலே சொல்ல மாட்டானுங்க🤐😂🤣</div><div><br></div><div>4.இத்தனை திட்டங்கள் வேற கட்சி செய்ததை காட்டினால் LIFE TIME SETTLEMENT டா </div><div>#தலைவர்😎 #கலைஞர் மட்டும் தான்டா ...#நவீன_தமிழகத்தின் தந்தை </div><div><br></div><div>1. போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர் </div><div>2. போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர் </div><div>3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர் </div><div>4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர் </div><div>5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர் </div><div>6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர் </div><div>7. முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்தது கலைஞர் </div><div>8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு மையம் அமைத்தது கலைஞர் </div><div>9. கையில் இழுக்கும் ரிக்ஷா ஒழித்து இலவச சைக்கில் ரிக்ஷா கொடுத்தது கலைஞர் </div><div>10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர் </div><div>11. குடியிருப்பு சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர் </div><div>12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர் </div><div>13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர் </div><div>14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர் </div><div>15. அரசியலமைப்பில் BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர் </div><div>16. P.U.C வரை இலவச கல்வி உருவாக்கியது கலைஞர் </div><div>17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர் </div><div>18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர் </div><div>19. முதல் விவசாய கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர் </div><div>20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர் </div><div>21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர் </div><div>22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர் </div><div>23. கோவில்களில் குழந்தைகளுக்கான " கருணை இல்லம் " தந்தது கலைஞர்</div><div>24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர் </div><div>25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர் </div><div>26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர் </div><div>27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர் </div><div>28. SIDCO உருவாக்கியது கலைஞர் </div><div>29. SIPCOT உருவாக்கியது கலைஞர் </div><div>30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது கலைஞர் </div><div>31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர் </div><div>32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர் </div><div>33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர் </div><div>34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர் </div><div>35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபட்டோரில் இணைத்தது கலைஞர் </div><div>36. மிகவும் பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர் </div><div>37. மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர் </div><div>38. தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்</div><div>39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்</div><div>40. மிகவும் பிற்படுத்தபபட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்</div><div>41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளகலை பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர் </div><div>42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது</div><div>43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர் </div><div>44. பெண்ணுக்கு சொத்தில் சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர் </div><div>45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 % இடஒதுக்கீடு தந்தது கலைஞர் </div><div>46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது கலைஞர் </div><div>47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர் </div><div>48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர் </div><div>49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர் </div><div>50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர் </div><div>51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர் </div><div>52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர் </div><div>53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர் </div><div>54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர் </div><div>55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர் </div><div>56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர் </div><div>57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர் கலைஞர் </div><div>58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர் </div><div>59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு </div><div>60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர் </div><div>61. மெட்ராஸ், சென்னையாக்கியது கலைஞர் </div><div>62. முதல் தடவை விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் அளித்தது கலைஞர் </div><div>63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்தது கலைஞர் </div><div>64. முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர் </div><div>65. கான்கிரீட் சாலை அமைத்தது கலைஞர் </div><div>66. 24 மணி நேர மருத்துவ சேவை தந்தது கலைஞர் </div><div>67. தொழிற்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு </div><div>68. சமத்துவபுரம் தந்தது கலைஞர் </div><div>69. கிராமங்களில் மினி-பஸ் சேவையை கொண்டுவந்தது கலைஞர் </div><div>70. இந்தியாவிலே முதன் முறையாக டாக்டர். அம்பேத்கார் சட்ட கல்லூரி நிறுவியது கலைஞர் </div><div>71. பெரியார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர் </div><div>72. உலக தமிழர்களுக்கு உதவ, தமிழ் மெய்நிகர் பல்கலைகழகம் தந்தது கலைஞர் </div><div>73. உருது அக்காடமி தந்தது கலைஞர் </div><div>74. சிற்பான்மையினர் பொருளாதார வளர்ச்சி அமைப்பு ஏற்படுத்தியது கலைஞர் </div><div>75. உழவர் சந்தை திட்டம் தந்தது கலைஞர் </div><div>76. வருமுன் காப்போம் திட்டம் தந்தது கலைஞர் </div><div>77. கால்நடை பாதுகாப்பு திட்டம் தந்தது கலைஞர் </div><div>78. 133 அடி திருவள்ளுவர் சிலை கன்னியாகுமாரியில் வைத்தது கலைஞர் </div><div>79. டைடல் பார்க் சென்னையில் அமைத்தது கலைஞர் </div><div>80. வீட்டுமனை வழங்கும் திட்டம் தந்தது கலைஞர் </div><div>81. மாவட்ட, மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வருவோருக்கு மேற்படிப்பு உதவி தொகை தந்தது கலைஞர் </div><div>82. ஆசியாவிலே மிக பெரிய பேருந்து நிலையம் சென்னை கோயம்பேடு நிலையம் அமைத்தது கலைஞர் </div><div>83. விவசாய கூலி வேலை செய்வோர் நல வாரியம் அமைத்தது கலைஞர் </div><div>84. பொது கூலி வேலை செய்வோர் நல வாரியம் அமைத்தது கலைஞர் </div><div>85. அறிஞர்களுக்கும், தியாகிகளுக்கும் மணிமண்டபம் கட்டியது கலைஞர் </div><div>86. 20 அணைகள் கட்டியது கலைஞர் </div><div>87. பள்ளிகளில் உணவோடு முட்டை தந்தவர் கலைஞர் </div><div>88. 9 மாவட்டங்களில் புதிய மாவத்டாட்சியர் அலுவலகம் கட்டியவர் கலைஞர் </div><div>89. மதுரை நீதிமன்றம் கட்டியது கலைஞர் </div><div>90. இலவச பஸ் பாஸ் தந்தவர் கலைஞர் </div><div>91. அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர் </div><div>92. நமக்கு நாமே திட்டம் தந்தவர் கலைஞர் </div><div>93. நலிவுற்ற குடும்பநல திட்டம் தந்தது கலைஞர் </div><div>94. 104 கோடி ரூபாயில் சென்னை பொது மருத்துவமணை புதிய கட்டிடம் தந்தது கலைஞர் </div><div>95. 13000 மக்கள் நல பணியாளர்கள் நியமனம் செய்தது கலைஞர் </div><div>96. முதல் முறையாக 10000 சாலை பணியாளர்களை நியமனம் செய்தது கலைஞர் </div><div>97. சென்னையில் 9 மேம்பாலங்கள் தந்தது கலைஞர் </div><div>98. 1500 கோடி ரூபாயில் 350 துணை மின்நிலையம் உருவாக்கியது கலைஞர் </div><div>99. ஒப்பந்த பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தந்தது கலைஞர் </div><div>100. போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தந்தது கலைஞர் </div><div>101. வேலூர், தூத்துகுடி, கன்னியாகுமாரியில் புதிய மருத்துவ கல்லூரி அமைத்தது கலைஞர் </div><div>102. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டம் </div><div>103. பொது விநியோக திட்டத்தின் மூலம் சமையல் எண்னை மற்றும் பல வீட்டு பொருட்க்கள் நியாயவிலையில் தந்தவர் கலைஞர் </div><div>104. 10 சமையல் பொருட்க்களை 50 ரூபாய்க்கு தந்தது கலைஞர் </div><div>105. விவசாய கடன் 7000 கோடி தள்ளுபடி செய்தது கலைஞர் </div><div>106. சரியான நேரத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்றது கலைஞர் </div><div>107. மேம்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ 1050 ஆக உயர்த்தியது கலைஞர் </div><div>108. வகைபபடுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ 1100 ஆக உயர்த்தியது கலைஞர் </div><div>109. 172 உழவர் சந்தையாக உயர்த்தியதும் கலைஞர் </div><div>110. ஒரு டன் கரும்பின் கொள்முதல் விலை ரூ 2000 ஆக உயர்த்தியது கலைஞர் </div><div>111. மாவட்டத்திற்க்குள் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர் </div><div>112. ரூ 189 கோடி செலவில் காவிரி - குண்டூர் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர் </div><div>113. ரூ 369 கோடி செலவில் தாமிரபரணி - கருமேனியாரு - நம்பியாரு நதிநீர் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்</div><div>114. காமராஜர் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு தினமாக அறிவித்தது கலைஞர் </div><div>115. பொது நுழைவு தேர்வு ரத்து செய்தது கலைஞர் </div><div>116. 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயமாக்கியது கலைஞர் </div><div>117. 623 கோடி செலவில் 5824 கோவில்கள் புனராமைத்து கும்பாபிஷேகம் பணி செய்தது கலைஞர் </div><div>118. அர்ச்சகர்கள், பூஜாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கியது கலைஞர் </div><div>119. 2 லட்சம் மதிப்புள்ள இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தந்தது கலைஞர்</div><div>120. இதய நோய், சர்க்கரை நோய், புற்று நோய்க்கான " நலமான தமிழகம் திட்டம் " தந்தது கலைஞர் </div><div>121. மத்திய அரசோடு இணைந்து 108 ஆம்புலன்ஸ் தந்தது கலைஞர் </div><div>122. 25 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி 37 புது நிறுவனங்களை வர செய்து 41,090 கோடி முதலீடை கொண்டுவந்தது கலைஞர்.</div><div>123. 37 நிறுவன அனுமதியால் 3 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கியது கலைஞர் </div><div>124. 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தந்தது கலைஞர் </div><div>125. புதிய டைடல் பார்க் திருச்சி கோவை மதுரை திருநெல்வேலியில்யில் உருவாக்கியது கலைஞர் </div><div>126. அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம் தந்தது கலைஞர் </div><div>127. பேருந்து கட்டணம் ஏற்றாமல் 13000 புதிய பேருந்துகள் தந்தது கலைஞர் </div><div>128. அருந்ததியினர் இனத்திற்க்கு 3% தனி இடஒதுக்கீடு தந்தது கலைஞர் </div><div>129. அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோடு 10,096 கிராம பஞ்சாயத்து உருவாக்கியது கலைஞர் </div><div>130. 420 பேரூராட்சிகள் உருவாக்கி " அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம்" தந்தது கலைஞர் </div><div>131. அனைத்து இனத்தினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை பெற்று தந்தது கலைஞர் </div><div>132. உலக தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் நிறுவியது கலைஞர்</div><div>133. ஆசியவையே திரும்பி பார்க்க வைத்த புதிய சட்டமன்றம் நிறுவியது கலைஞர் </div><div>134. அடையார் சூழியல் ஆராய்ச்சி பூங்கா அமைத்தது கலைஞர் </div><div>135. சென்னை செம்மொழி பூங்கா அமைத்தது கலைஞர் </div><div>136. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தந்தது கலைஞர் </div><div>137. ஜப்பான் நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில் திட்டம் தந்தது கலைஞர் </div><div>138. ஒக்கேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது கலைஞர் </div><div>139. ராமநாதபுரம் - பரமக்குடி கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது கலைஞர் </div><div>140. கலைஞர் வீடு திட்டம் தந்தது கலைஞர் </div><div>141. முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியது கலைஞர் </div><div>142. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தது கலைஞர் </div><div>143. 119 புதிய நீதிமன்றம் உருவாக்கியது கலைஞர் </div><div>144. மாலை நேரம், மற்றும் விடுமுறை தின நீதிமன்றம் உருவாக்கியவர் கலைஞர் </div><div>145. அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் திருச்சி கோவை மதுரை திருநெல்வேலியில் உருவாக்கியது கலைஞர் </div><div>146. தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய ஆணையம் அமைத்தது கலைஞர் </div><div>147. சமச்சீர் கல்வி தந்தது கலைஞர் </div><div>148. இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கும் திட்டம் தந்தது கலைஞர் </div><div>149) முதல் பட்டதாரிக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு 80,000 பொறியியல் கல்வி கட்டணம் வழங்கியவர் கலைஞர்.</div><div>150) இஸ்லாமியர்களுக்கு 3.5% தனி இட ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர்..</div><div>151) இலவச எரிவாயு உருளை வழங்கியவர் கலைஞர். </div><div>152) பேருந்து கட்டணம், பால் விலை, மின்சார கட்டண உயர்தாதவர் கலைஞர்.</div><div>153) மாவட்ட தலை நகரங்களில் மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி துவக்கியவர் கலைஞர்</div><div>154) மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தி வழங்கியவர் கலைஞர். </div><div><br></div><div>இப்படி வாழ்ந்த பெருமகன்</div><div>சாய்பாபா வார்த்தைகளில் </div><div>ராஜராஜ சோழனின் மறுபிறவி</div><div>இவர் புகழ் ஆயிரம் ஆண்டுகள் நிலைக்கட்டும்.</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjr4skTnwfMvmdr25wgn8KUzU5367ECxD05WTu5YPHJEiU5x9WsQgE3K6RO4bjCdJ78OtFNkm1zgtkzhxFyU61Dpi-Ye1q3qoezCO8GzjWDNNdeP7-trB46KcD7tPoRD8jySNWgqeUTcY/s1600/1676051494530728-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjr4skTnwfMvmdr25wgn8KUzU5367ECxD05WTu5YPHJEiU5x9WsQgE3K6RO4bjCdJ78OtFNkm1zgtkzhxFyU61Dpi-Ye1q3qoezCO8GzjWDNNdeP7-trB46KcD7tPoRD8jySNWgqeUTcY/s1600/1676051494530728-1.png" width="400">
</a>
</div></div></div><div><br></div>சாந்திபாபு http://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-7640800458079279262021-02-10T09:37:00.001+05:302021-02-10T09:37:35.443+05:30நாத்திகர்களின் தெளிவான பார்வை!<div>* நாத்திகர்களின் தெளிவான பார்வை!</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiW-7hinud0is7PqrKWdhdsfDQ6xNji_DrszrZv53uEHgztEdEU9a_7anwucJczrY24Zy7r6752ftiaoMg2dIFXB3VtxVQi6kaRA5v2Gm3lMk51Dcbjf5L1EoOeSLDRHRtWGuTtsyUxL14/s1600/1612930046488800-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiW-7hinud0is7PqrKWdhdsfDQ6xNji_DrszrZv53uEHgztEdEU9a_7anwucJczrY24Zy7r6752ftiaoMg2dIFXB3VtxVQi6kaRA5v2Gm3lMk51Dcbjf5L1EoOeSLDRHRtWGuTtsyUxL14/s1600/1612930046488800-0.png" width="400">
</a>
</div><br></div><div>கடவுளை மறுப்பவர்கள் வாழ்க்கை சிரமமானது. நாங்கள் தவறுதலாகக்கூட தவறு செய்ய முடியாது. ஆத்திகர்கள் ஏதாவது பூச்சியை வணங்கினாலும் அதனை தன் நம்பிக்கை என்று சொல்லிவிட்டால் போதும். ஆனால் அதனை மறுப்பவன் ஆதாரபூர்வமாகவும் அறிவியல்பூர்வமாகவும் அதை செய்தாகவேண்டும். ஆக நாத்திகன் நேர்மையாளனாகவும் நியாயவானாக இருந்தாக வேண்டியது கட்டாயம்.</div><div><br></div><div>நாத்திகர்களின் வாழ்க்கை சுவாரஸ்யமானது. ஏனெனில் எங்களை சந்திக்கும் அனேக பக்திமான்கள் எங்களை தோற்றுப்போனவர்கள் என்று நிரூபிக்க போராடுகிறார்கள். அறிவுடமையை அறியாமை வெற்றிகொள்ள போராடுவது ஒரு சுவாரசியமென்றால், சமயங்களில் அறியாமை வென்றுவிட்டதாக அவர்கள் சொல்வது இன்னுமொரு சுவாரஸ்யம். ஒரு முன்னாள் நாத்திகர் பட்டு வேட்டி சட்டை கட்டினால் அது நாத்திகத்தின் வீழ்ச்சியாகவே பார்க்கப்படும். ஆனால் எல்லா மடத்திலிருந்தும் கசமுசா சமாச்சாரங்கள் அம்பலமானாலும் மதம் புனிதமானதாகவே நீடிக்கும். இத்தகைய சவால்களே நாத்திகர்கள் வாழ்வை சுவாரசியமாக்குகின்றன. அதனால்தான் எம்.ஆர்.ராதா வசனத்தை நூறுமுறை கேட்டாலும் சலிக்காத வெகுஜனத்துக்கு ஒருமுறை சாமி படம் பார்ப்பதே எரிச்சலூட்டுவதாக இருக்கிறது.</div><div><br></div><div>நாத்திகர்கள் வாழ்வு பொறுப்புகள் நிறைந்தது. எந்த முட்டாள்தனத்தை ஒழிக்க விரும்புகிறார்களோ அந்த முட்டாள்தனத்தை பின்பற்றுபவர்களது உரிமைகளுக்கும் அவர்கள்தான் குரல்கொடுத்தாக வேண்டும். அதனால்தான் பெரியார் கடவுளை மற என்று சொன்னதோடு நில்லாமல் மனிதனை நினை என்றும் சொன்னார். இதன் இன்னொரு விளக்கம் கடவுளை மறந்தால்தான் மனிதனைப்பற்றி நினைக்கமுடியும். தஞ்சை பெரியகோயிலின் இடது பக்கம் பன்றியைப்போல உருவமுடைய ஒரு சிலையைக்கொண்ட சன்னதி உண்டு. அதை தோப்புப்கரணம் போட்டபடியே வணங்கிய ஒருவர் “யானை மாதிரியும் இருக்கு பன்னி மாதிரியும் இருக்கே.. என்ன சாமி இது??” என்ற சந்தேகத்தை வாய்விட்டு சொல்லிக்கொண்டிருந்தார். இந்த வாய்ப்பு கடவுளை நம்பாவதவனுக்கு கிடையாது. அவர்கள் பெரியாரையும் தெரிந்துகொண்டாக வேண்டும் மத புத்தகங்களையும் தெரிந்துகொண்டாக வேண்டும்.</div><div><br></div><div>நாத்திகம் சிக்கனமானது மற்றும் எளிமையானது. விபூதி குங்குமத்தில் தொடங்கி மாட்டுச்சாணி வரை எதுவும் வேண்டியதில்லை. வீடு கட்டினால் ஒரு கழிப்பறைக்கான இடம் கூடுதலாக கிடைக்கும் (பூஜை அறைக்கான குறைந்தபட்ச இடம் அத்தியாவசியமான ஒரு பயன்பாட்டு இடத்துடன் ஒப்பிடப்பட்டிருக்கிறது.. அவ்வளவுதான்). ஒரேயொரு நபர் திருப்பூரிலிருந்து திருப்பதி போய்வரும் செலவைவிட என் ஒருமாத வீட்டு வாடகை குறைவு. குலதெய்வத்துக்கான பூஜை தொடங்கி பேருந்தில் நீட்டப்படும் சாமி உண்டியல்வரையான எல்லா நன்கொடை வேண்டுகோள்களை நிர்தாட்சண்யமாக நிராகரிக்க முடியும். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று நீங்கள் அறியப்பட்டுவிட்டால் சோதிடம், ஜாதகம், பரிகாரம் போன்ற தீயசக்திகள் பற்றி உங்களிடம் பிரச்சாரம் செய்யப்படமாட்டாது. மலச்சிக்கலுக்குக்கூட ஜாதகத்தை ஒருமுறை பார்த்துவிடலாம் என்று சொல்வது பேஷனாகிவிட்ட காலத்தில் இது எத்தனை பெரிய சவுரியம்?</div><div><br></div><div>“எல்லாம் சரி, இவ்வளவு பெருமை பேசினாலும் உங்க ஏரியா ஏன் வீக்காயிகிட்டே இருக்கு?” எனும் நக்கல் எனக்கு கேட்காமலில்லை. இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை, பெரியார் காலத்தைவிட இப்போது எங்கள் அணி பலவீனமான நிலையில்தான் இருக்கிறது. எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும் மதம் பிரச்சாரம் செய்யப்படுமளவுக்கு கடவுள் மறுப்பு பிரச்சாரம் செய்யப்படுவதில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் பிரதோஷம் என்றால் என்னவென்றே தெரியாத தஞ்சாவூரில் இன்று அந்த நாளில் பெரியகோயில் பக்கமே போக முடியவில்லை. டிவியை திறந்தால் லேகிய வியாபாரிகளைவிட தாயத்து வியாபாரிகளே அதிகம் ஆக்கிரமித்திருக்கிறார்கள். சம்சாரத்தோடு சண்டையிட்டவர்களும் வாழ்வு சலித்த வெளிநாட்டவர்களும் மட்டும் வந்துபோகும் இடமான திருவண்ணாமலையில் ரஜினிகாந்தின் அருணாசலம் படத்துக்குப் பிறகு கிரிவலத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது</div><div><br></div><div>ஆனால் இதுகுறித்தெல்லாம் நாம் கவலைகொள்ளத் தேவையில்லை. காரணம் கடவுள் மறுப்பு என்பது கொள்கையல்ல. அது ஒரு உண்மை அவ்வளவே. பூமி சூரியனை சுற்றுகிறது என்பதைப் போல, உலகம் உருண்டை என்பதைப் போல இதுவும் ஒரு கண்டுபிடிப்பு. என்ன, மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றை பொய்யென சொல்லும் கண்டுபிடிப்பு. ஐன்ஸ்டீன் ரிலேட்டிவிட்டி தியரிகூட பலருக்கு புரிவதில்லை, அதற்காக புரிந்தவர்கள் வருந்த முடியுமா? இல்லை பெரும்பான்மையோடு ஐக்கியமாவதற்காக புரிந்துகொண்டதை மறக்க முடியுமா? பல மேம்பட்ட மனிதப் பண்புகளுக்கு இது அடிப்படையானது என்பதால் நாத்திகம் எல்லோருக்கும் பரிந்துரைக்கப்படவேண்டியது என்பது மட்டும்தான் நாம் நினைவில் கொள்ளவேண்டிய செய்தி.</div><div><br></div><div>மேலும் மதம் பணக்காரனையே மதிக்கும் என்பதையும் மடங்கள் கிரிமினல்களின் கூடாரம் என்பதையும் நாத்திகர்களை மெனக்கெட வைக்காமல் அவர்களாகவே அம்பலமாக்கிக்கொள்கிறார்கள். மத பாரபட்சமில்லாமல் எல்லா கடவுளரின் ஏஜெண்ட்களும் இதில் அடக்கம். கேள்வி கேட்காத ஞானத்தைக் கொடு என்கிறது பைபிள். இது எல்லா மதங்களின் பொதுக்கருத்தாக இருப்பதால்தான் டி.ஜி.எஸ்.தினகரனும் மேல்மருவத்தூர் பங்காருவும் ஆயிரக்கணக்கான கோடிகளில் புரள்கிறார்கள். பர்தா பெண்ணுக்கு பாதுகாப்பு எனும் அராஜகமான வாதத்தை கைவிட இன்றுவரை மறுக்கிறது இசுலாம். நாய்கள்கூட உலவ முடியும் கோயிலில் மூன்றிலொரு பங்கு மக்களை அனுமதிக்க மறுக்கிறது இந்து மதம். வாழ்வில் உருப்படுவதற்கான மார்க்கமானது யாதொரு மார்கத்தையும் பின்பற்றாதிருப்பதுதான் என்பதை மார்கங்களே இப்போது ஓரளவுக்கு சொல்லித்தருகின்றன. ஆகவே நமக்கு பாதிவேலை மிச்சம்.</div><div><br></div><div>பெண்ணடிமைத்தனம், சாதிக்கொடுமை, மூடநம்பிக்கை என சமூகத்தின் சகல நோய்களுக்கும் வேராக கடவுள் நம்பிக்கையே இருந்திருக்கிறது என்ற காரணத்தால்தான் பெரியார் தன் கோடரியை அதன்மீது வீசினார். அதனால்தான் அவரது இயக்கம் மிகவேகமாகவும் மிக வீரியமாகவும் பரவிற்று. திராவிட இயக்கம் நாற்றம் பிடிக்கத்தொடங்கியது ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் சமரசத்துக்குப் பிறகுதான். நாமும் வேரை விட்டுவிட்டு சுலபமானவற்றை வெட்டுவதற்கு முயற்சி செய்கிறோம். சூத்திரன் என்றால் வேசிமகன் என்று பொருள், அந்த அடையாளத்தை துடைத்தெறிவது பெரியாரின் நோக்கமாக இருந்தது. இப்போது அந்த நோக்கத்தின் நிலை எப்படி இருக்கிறது? வேசிமகன் எனும் அடையாளம் பற்றிய கவலை போய் இப்போது பெரிய வேசிமகன் யார் எனும் போட்டியில் திருப்தியடைந்து நிற்கிறது சமூகம். ஆகவே நாத்திகம் தோற்றதாக என்றைக்குமே கருதமுடியாது, உண்மைக்கு போட்டியே கிடையாது எனும்போது தோல்வி எங்கேயிருந்து வரமுடியும்?. ஆனால் நாத்திகர்கள் கடமைதவறிவிட்டார்கள் (அல்லது தவறிவிட்டோம்) என்பதில் வேறு கருத்து இருக்க முடியாது.</div><div><br></div><div>பெருமையையும் ஆராய்ச்சியும் போதும். இறைமறுப்பாளர்கள் செய்வதற்கான குறைந்தபட்ச கடமை ஒன்றுண்டு அதுபற்றி பேசிவிடலாம். சென்ற தலைமுறை நாத்திகர்கள் பலர் தங்கள் வீட்டில் புதிய நாத்திகர்களை உருவாக்கத்தவறிவிட்டார்கள். குறைந்தபட்சம் நமது பிள்ளைகளை மட்டுமாவது கடவுளை மறுப்பவர்களாக தயாரிப்பது அவசியம். இதில் சுதந்திரம் பேசுவது பேராபத்தில் முடியும். சைவமா அசைவமா என்பதை வேண்டுமானால் அவர்களே தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் அவர்களை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது நம் கடமை அதனை குழந்தையின் விருப்பத்துக்கு விட்டுவிடுவேம் என்று நியாயம் பேசக்கூடாது . அதுபோலவே இல்லாதவற்றை நம்புவோராக குழந்தைகள் வளர்வதும் ஒருவகையில் ஆரோக்யக்கேடானதுதான்..</div><div><br></div><div>:- மகி</div>சாந்திபாபு http://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-67921165836222986482020-12-07T08:37:00.001+05:302020-12-07T08:37:00.199+05:30அரசியலன்னா எல்லோரும் மோசமா ?<div>எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!</div><div>யாரு வந்தாலும் ஒன்னும் செய்யப்போறதில்லை! அரசியல்னா சாக்கடை!</div><div>மாறி மாறி கொள்ளையடிப்பாங்க!</div><div>நான் எப்போவும் நோட்டாவுக்குத்தான்! </div><div>யார் ஆட்சிக்கு வந்தாலும் நாம உழைச்சாத்தான் சோறு ! </div><div>எல்லாம் அவன் அவன் குடும்பத்தை தான் பாப்பானுங்க! </div><div>அரசியலன்னா ரௌடிசம் தான்! </div><div><br></div><div>இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லுபவர்கள் பெரும்பாலும் புதிதாய் சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக இருப்பார்கள்! </div><div><br></div><div>1947 சுதந்திரம் அடைந்த பொழுது 35 கோடி தான் இந்தியாவில்மக்கள் தொகை-தற்பொழுது 130 கோடி.அதே போல் தமிழகத்தில் 2 கோடி பேர் இருந்திருக்கலாம் தற்பொழுது 8 கோடி பேர்! </div><div><br></div><div>இந்தியாவை தோரயமாக 50 வருடங்கள் காங்கிரஸ் ஆண்டிருக்கும் நேரு தொடங்கி இன்றைய மோடி வரை ,அதே போல் இந்தியாவிலேயே முதல் பிராந்தியக்கட்சி ஒரு மாநிலத்தில் ஆட்சியமைத்தது திமுக தான், அப்படி பட்ட தமிழகத்தில் காங்கிரஸ், திமுக, அதிமுக, போன்ற கட்சிகள் ஆண்டிருக்கிறது! </div><div><br></div><div>மேற்படி வசனம் பேசும் Elite போராளிகள் 60 வருடம் முன்பு இந்தியா எப்படி இருந்தது? இன்று எப்படி இருக்கிறது? உலக அளவில் இந்தியாவின் வளர்ச்சி என்ன ?இந்திய அளவில் தமிழகத்தின் வளர்ச்சி என்ன ?என்று பேசமாட்டார்கள்! </div><div><br></div><div>இந்திய நாட்டுக்கு என்று முதல் ராணுவதையே துவங்கி கட்டமைத்து இன்று ராணுவ பலத்தில் உலகின் 7 ஆவது நாடாக இருப்பதில் தொடங்கி கல்வி-சுகாதாரம்- வேலைவாய்ப்பு- உற்பத்தி பொருளாதாரம்...etc எல்லாவற்றிற்கும் காங்கிரஸ் தான்!</div><div><br></div><div>அதே போல் தமிழகத்தில் மாநிலத்துக்கு பெயர் தொடங்கி மொழி -இடஒதுக்கீடு- சமூகநீதி மதசார்பின்மை- கல்வி-உள்கட்டமைப்பு -மருத்துவம் அரசுப்பணி-தொழிற்துறை- நீர் மேலாண்மை இவை அனைத்திற்கும் திராவிட இயக்கமும் /ஆட்சி அதிகாரத்திற்கு வந்த திமுக -அண்ணா/கலைஞர் அன்றி வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது ! </div><div><br></div><div>உட்புறத்தில் பார்த்தால் அதிமுக தான் தமிழகத்தை அதிக நாள் ஆட்சி செய்தக்கட்சி ஒன்றுமே செய்யாமலா இருந்தார்கள்? என்று கேட்கலாம் எம்ஜியாரின் 13 ஆண்டுகாலமும் ஜெயாவின் 15 ஆண்டுகாலமும்,பன்னீரின் 2 ஆண்டுகாலமும், பழனியின் 4ஆண்டு காலமும் ஒரு ஒப்பீடு பாருங்கள்! </div><div><br></div><div>நீங்களே எஜமானர்கள்!</div><div><br></div><div>தரவுகளை பாருங்கள், திமுகவை எதிர்க்க/ கலைஞரை எதிர்க்க ஒரு கட்சி தொடங்கினார் எம்ஜியார்- அவரின் ஆட்சி,அவரின் பிந்தையவர்களின் ஆட்சிக்கு கடிவாளமாய் களத்திலும் ஆட்சிமன்றத்திலும் கலைஞர் இருந்தார் - அவர்களுக்கு இருந்தது ஒரே வழி கலைஞரின் அரசு செய்ததை பட்டி டிங்கரிங் பார்த்து வேறு போர்வையில் உலவவிடுவது, அல்லது முந்தய திட்டத்தைகிடப்பில் போடுவது 28 ஆண்டுகால அதிமுக அரசின் ஒரு பத்து தொலை நோக்குத்திட்டம் யாரவது சொல்வார்களா? ( டாஸ்மாக் ,Esma/Tesma/Pota , இட்லி கடை தோசைக்கடை எல்லாம் சொல்லக்கூடாது கோவமும் படக்கூடாது ) </div><div><br></div><div>இது போதாம் பொதுவான பார்வையில் சொல்லவில்லை ,சுகந்திர இந்தியாவின் தமிழகத்தை தீர்மானித்தது திராவிட இயக்கங்களும் திமுகவும் தான் !-வேண்டுமானால் சொல்லுங்கள் "இன்னும் செய்திருக்கலாம்" என்று ஒன்னும் செய்யவில்லை என்று சொல்லாதீர்! </div><div><br></div><div>உதாரணமாக 4 ஆண்டு பழனிசாமி ஆட்சியின் சாதனை யாரவது சொல்ல முடியுமா?</div><div><br></div><div>எளிதில் சொல்லலாம் .... </div><div><br></div><div>ஒரு அறிக்கை விடுவார் EPS &Co, அது தவறென்றால் ,அடுத்த 12 மணிநேரத்தில் </div><div>மு.க.ஸ்டாலின் "ஒரு அறிக்கை அல்லது ஊடக சந்திப்பு அல்லது போராட்ட அறிவிப்பு அல்லது நீதிமன்ற அணுகுமுறை அல்லது அணைத்து கட்சிக்கூட்டம் கண்டன தீர்மானம்!"</div><div><br></div><div>அது மாநில அரசாகட்டும்,மத்திய அரசாகட்டும் ஸ்டாலின் களத்தில் நிற்பார்- புதிய அரசாணை வெளிவரும் அல்லது அரசிடம் இருந்து மறுப்பறிக்கை வரும் ,இதுதான் நான்கு ஆண்டுகளாக நடந்து வருகிறது !</div><div><br></div><div>அதிமுகவை ஆண்டவர்கள் எல்லோரையும் </div><div>இப்படித்தான் கலைஞர் Practice செய்து வைத்திருந்தார் !</div><div><br></div><div>இந்த நான்கு ஆண்டைய் கடத்தி விட epsசும் அதிமுகவும் எவ்வளவுத் துரோகம் செய்திருக்கிறது! </div><div><br></div><div>நீட் </div><div>தமிழக அரசுப்பணிகள் </div><div>5/8பொதுதேர்வு குளறுபடிகள் </div><div>CAAசட்டங்களுக்கு ஆதரவு.... </div><div><br></div><div>என்று சொல்லிக்கொண்டே போகலாம்! </div><div><br></div><div>இவ்வளவு சீர்கேடுகளுக்கு இடையிலும் தமிழகம் தனித்துவமாக இந்திய அளவில் நிற்க காரணம் யார் என்பது தான் பெரும்பாலானோர் பேச மறுப்பது ,அதைப் பேச தான் கொத்தடிமை பட்டங்களை,200 உப்ஸ் பட்டங்களை வாங்கிக் கொண்டு,வாரிசு அரசியல் பட்டதை வாங்கிக் கொண்டும் தளத்திலும்/களத்திலும் நிற்கிறான் திமுக காரன்!</div><div><br></div><div>70 திமுக ஆண்டுகால அரசியல் பயணத்தில் ஊழல் ஊழல் ன்னு எவ்வளவோ பிரச்சாரம் பேசுபவர்களிடம் இருக்கும் ஆதாரத்தை கூட நீதிமன்றத்தில் கொடுக்க நேரம் இல்லாமல் அவர்களும் பேசிக்கொண்டே தான் இருக்கிறார்கள் பாவம் !</div><div><br></div><div>"இத தப்பா செஞ்சிங்கன்னு சொல்லு அல்லது மாற்றி செஞ்சிருக்கலாம் ன்னு சொல்லு மடையர்கள் போல் திமுக ஒன்னும் செய்யல நாங்களேமாற்று எல்லாத்தையும் மாற்றானும் ன்னு உளறாதிங்க ,அதை விட கோமாளித்தனம் ஏதும் இல்லை !</div><div><br></div><div>இது" தமிழ்நாடு" பெரியார் அண்ணா கலைஞரின் நாடு !</div><div><br></div><div>சில நாட்கள் முன்பு நாட்டின் உள்துறை அமைச்சர் Amith Shah தமிழ்நாட்டுக்கு வந்து திமுக தமிழ்நாட்டுக்கு என்ன செய்ததுன்னு மேடை போட்டு கேட்கிறார், இதை கேக்கவா இவ்வளவு தூரம் வந்தீங்க ?</div><div><br></div><div>இந்தக் கேள்வியை வேறு எந்தக் கட்சிகளிடமும் தமிழகத்தில் நீங்க கேக்கவே முடியாது!நல்லா யோசிங்க ஜி </div><div><br></div><div>எல்லாம் சொல்லிட்டு நீங்களும் அவுங்க சொல்வதை போல் ஜெயலலிதா ஒண்ணுமே செய்யல்ல ன்னு சொல்லுறீங்களே ?நியாயமா என்கிறீர்களா ?அதற்கு கலைஞர் சொல்லி இருக்கிறார் அம்மையாருக்கு அவர் கொடுத்த இரங்கல் அறிக்கை தான் ஜெயாவின் வாழ்க்கையின் வரலாறு வேறு ஒன்றும் இல்லை !</div><div><br></div><div>"மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று விரைவில் வீடுதிரும்புவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைக்கு மறைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறேன். கட்சிகளைப் பொறுத்து எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும் முதலமைச்சர் ஜெயலலிதா தனது கட்சியின் நலனுக்காக துணிச்சலோடு காரியங்களை ஆற்றியவர் என்பதில் எவருக்கும் வேற்றுக் கருத்து இருக்க முடியாது. குறைந்த வயதிலேயே அவர் மறைந்திவிட்டார் எனினும் அவர் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவரை இழந்து வாடும் அவருடைய கட்சியின் முன்னணியினருக்கும் இலட்சக் கணக்கான தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்."</div><div><br></div><div>திமுக வுக்கு பெருசா தோழர்கள் கூட ஊடகங்களில் பிரச்சாரம் செய்ய முன்வர மாட்டார்கள்- ஆனால் வாழையடி வாழையாக ஒவ்வொரு வீட்டில் இருந்து வருவார்கள் !</div><div><br></div><div>அதை நீங்க வாரிசுன்னு சொல்வீங்க !</div><div>ஆனால் அது எங்களின் தலைமுறை !</div><div><br></div><div>என்று நாங்கள் உறக்கச்சொல்லுவோம் </div><div><br></div><div>தமிழகம் காப்போம் அடிமைகளிடம் இருந்தும் காவிகளிடம் இருந்தும்!</div><div><br></div><div>மு.ரா. விவேக்</div><div>6/12/2020<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVfrqlmLANLjruzwDGpDCLEfhiz9W1XNGDO_4MCNGa6_C1FacQH3yBPIeSYuT8nKz3JItbnhtEYutP2MmQ8mGne0RXuRpZgJWNG0Lrr-heMh6n_q2bPDHazuoQG6WesdV_eC9Q7omH5AI/s1600/1607310412686567-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVfrqlmLANLjruzwDGpDCLEfhiz9W1XNGDO_4MCNGa6_C1FacQH3yBPIeSYuT8nKz3JItbnhtEYutP2MmQ8mGne0RXuRpZgJWNG0Lrr-heMh6n_q2bPDHazuoQG6WesdV_eC9Q7omH5AI/s1600/1607310412686567-0.png" width="400">
</a>
</div></div>சாந்திபாபு http://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-18048826594881273372020-08-24T04:18:00.001+05:302020-08-24T04:23:42.101+05:30மலையாள இதழ் என்ன சொல்கிறது ?<div>#onthisday</div><div><br></div><div>மொழியாக்கம் செய்தவருக்கு நன்றிகள் பல! </div><div><br></div><div>மலையாள இதழ் <div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDQade773VTbPgsgvT7t2WK5LJI0L2h1-01yVlw4vP2h6Twd3KyITskUQkQIRhpHd_d2qfJqnZ0l_GHyOiD4pE3T8x4j5k3I7rHkV8yD5E6OKjAAzyDU1RjwojBiNJ5svMqDH9YDfvago/s1600/1598222913060362-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDQade773VTbPgsgvT7t2WK5LJI0L2h1-01yVlw4vP2h6Twd3KyITskUQkQIRhpHd_d2qfJqnZ0l_GHyOiD4pE3T8x4j5k3I7rHkV8yD5E6OKjAAzyDU1RjwojBiNJ5svMqDH9YDfvago/s1600/1598222913060362-0.png" width="400">
</a>
</div>தேசாபிமாணியில் வெளிவந்த கவர் ஸ்டோரியின் தமிழாக்கம் 👌</div><div><br></div><div>(முழுவதும் படித்தவர்கள் மட்டும் பின்னூட்டம் இடவும்) </div><div><br></div><div>பெரியாரின் தொடர்ச்சி..</div><div><br></div><div>தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணாவுக்குப் பின் வேறெந்த சமூக, அரசியல் தலைவனின் இறுதி அஞ்சலிக்கும் இத்தனை லட்சம் மக்கள் திரண்டதில்லை என அரசியல் விமர்சர்கள் கலைஞரின் இறுதி அஞ்சலி நிகழ்வை மதிப்பிடுகிறார்கள். </div><div><br></div><div>கிட்டதட்ட தமிழ்நாட்டின் அத்தனை கிராமங்களும், நகரங்களும் தங்கள் இயல்பை அப்படியே நிறுத்திவிட்டு சென்னையை நோக்கி திரும்பியது. ஒரு மகத்தான தலைவனால் மட்டுமே எந்த புற உந்துதல்களுமின்றி மக்களை இப்படி உந்தித் தள்ள முடியும். </div><div><br></div><div>கலைஞர் கருணாநிதி நம் ஒவ்வொருவரின் மதிப்பீடுகளையும் மீறி உலகம் முழுக்க வியாபித்திருக்கும் மக்கள் மனதில் உறைந்திருந்தார்.</div><div><br></div><div> நீதிக்கட்சி, திராவிடக்கழகம், திராவிடமுன்னேற்றக்கழகம் என ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பெயரில் அடையாளப்படுத்தப் பட்டாலும், சமூக நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கான நியாயம் கேட்கும் அந்த இயக்கத்தின் குரல் காலத்துக்கு காலம் உரத்தும், தேய்ந்தும் இப்போதும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றன. </div><div><br></div><div>கடந்த நூறாண்டுகளை சமமாக நாம் பிரித்துக் கொண்டால் முன் பாதிக்கான போராட்டத்தை பெரியாரும், அண்ணாவும் முன்னெடுக்கிறார்கள். அவர்களிடமிருந்து கொள்கையையும் போராடும் குணத்தையும் அப்படியே சுவீகரித்துக் கொண்ட கருணாநிதி அடுத்த ஐம்பதாண்டுகளை தன் தலைமையின் கீழ் முன்னெடுத்தார். </div><div>அதில் நம் எதிர்பார்ப்புகளை மீறின சில சறுக்கல்கள் உண்டு. உலகம் முழுக்க தொடர்ந்து இயங்கும் அரசியல் இயக்கங்களில் இப்படியான சறுக்கல்கள் இல்லாத அரசியல் இயக்கம் எது? </div><div><br></div><div>தன் முன்னத்தி தலைவர்களிடம் தான் பெற்ற தீயை இது நாள்வரை அணையவிடாமல் காத்ததுதான் கருணாநிதி என்ற ஆளுமையின் தனிப்பெரும் கம்பீரம். அதனாலேயே மக்கள் அவரை தன் நம்பிக்கைக்குரிய தலைவனாக தங்களுக்குள் அடைகாத்துக் கொண்டார்கள்.</div><div><br></div><div>திமுகவின் செயல் தலைவரும், கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் தன் தந்தையின் உயிரற்ற உடலுக்கு முன் நின்று ஒரு ட்விட் போட்டார். தமிழ் மக்களை ஒரு கணம் கலங்க வைத்த நான்கு வார்த்தைகள் அது. </div><div>“தலைவரே, இப்போதாவது ஒரு முறை</div><div>அப்பா என்று அழைத்துக் கொள்ளட்டுமா?”</div><div><br></div><div>கலைஞரும், ஸ்டாலினும் திமுக என்ற பேரியக்கத்தின் இரு மூத்த உறுப்பினர்களாகவே நடந்து கொண்டார்கள். எம்.எல்.ஏ.க்கான நேர்கர்ணலில் தலைவர் கலைஞர், பேராசியர் அன்பழகன் முன் ஒரு கல்லூரி மாணவனைப்போல ஸ்டாலின் நேர்காணலுக்காக அமர்ந்திருந்த ஒரு புகைப்படம் ஏனோ இன்னேரம் நினைவுக்கு வருகிறது.</div><div>நேர்காணல் இல்லாமல்கூட ஸ்டாலினால் அந்த இடத்தை சுலபமாக அடைந்துவிட முடியும். ஒரு ஜனநாயக இயக்கம் பொது வெளிகளில் அப்படி நடந்து கொள்ள முடியாது. அல்லது கூடாது என்பதை இருவரும், அக்கட்சித் தொண்டர்களைப் போலவே நன்கு அறிந்திருந்தனர். </div><div><br></div><div>தன் பதினாங்காவது வயதில் ஒரு மாணவனாக தன் கையில் கொடியை ஏந்திக்கொள்கிறார் கருணாநிதி. தன் தொண்ணூற்றி ஆறில் தன் மரணத்தின் போதும் இடைவிடாத தன் போராட்டத்தை அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. ஆட்சியில் இல்லாதபோது வேறு மாதிரியும் ஆட்சியில் இருந்த போது ஆதிக்க சாதித் திமிரையும், துரோகங்களையும் எதிர்த்து அவர் போராட வேண்டியிருந்தது.</div><div><br></div><div>தன் வாழ்நாளில் தான் அதிகம் நேசித்த தன் அண்ணன் அண்ணா சமாதிக்கு அருகே தானும் விதைக்கப்பட வேண்டுமென அவர் விருப்பம் ஆட்சியாளர்களால் சுலபமாக துடைத்தெறியப்பட எடுத்த எல்லா முயற்சிகளும் சுலபத்தில் முறியடிக்கப்பட்டு, அவருக்கு மெரினா கடற்கரையில் அண்ணாவுக்கு அருகிலேயே கல்லறை என்ற முடிவு எட்டப்பட்டபோது துக்கமே பெரும் ஆனந்தமாக மாறி, மு.க.ஸ்டாலின் தன் கண்ணீரை கைகள் கொண்டு அடைக்க முயன்றும், தன் கைகளை நீட்டி தன் கட்சியின் மூத்த தலைவர் துரை முருகன், தன் தங்கை கவிஞர் கனிமொழி இவர்களை தன் தோள்களில் அணைத்த காட்சிப்பதிவு அத்தனை சுலபமாக கடந்துவிட முடியாத ஒன்று. அது காலத்தின் உறைநிலை. சமூக நீதியை எட்டுவதற்கான ஐம்பதாண்டு கால உழைப்பு அக்கண்ணீருக்கு பின்னிருக்கிறது. </div><div><br></div><div>உலகின் மகத்தான தலைவர்கள் அனைவருமே, தங்கள் மக்களிடம் பேச ஏதாவதொரு முறையை தேர்தெடுத்துக் கொள்வார்கள். எம்.ஜி.ஆர் க்கு உடல்மொழியும் கையசைப்பும் மட்டுமே போதுமானதாக இருந்தது.</div><div>கலைஞர் முரசொலி என்ற தன் கட்சி பத்திரிக்கையில் ’ உடன்பிறப்பே ! ‘ என தன் தம்பிகளை அழைத்து தன் எல்லா கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். </div><div><br></div><div>எழுதி எழுதித் தீராத தன் பேனாவை சில சமயங்களில் ஓய்வெடுக்க வைத்து விட்டு மேடைகளில் பேச ஆரம்பித்தார்.</div><div>அன்பார்ந்த என ஆரம்பித்து சற்று இடைவெளி விட்டு கூட்டத்தின் மொத்த மௌனத்தையும் உள்வாங்கி </div><div>‘என் உயிரினும் மேலான உடன்பிறப்பே’ </div><div>என அந்த வாக்கியத்திற்கு அவர் கமா போடுகையில் எழுகிற கரவொலியை தமிழகத்தின் எல்லா நகரங்களும் கிராமங்களும் விழித்திருந்து கேட்டிருக்கின்றன. காற்று அந்த கரவொலியின் வலிமையை டெல்லிவரை எடுத்துச் சென்று சேர்த்திருக்கிறது. அதனாலேயே பல பிரதமர்களின் உருவாக்கத்தில் இந்த எளிய ஆனால் வலுவான திராவிட மனிதனுக்கு மகத்தான பங்கிருந்தது.</div><div><br></div><div>தந்தை பெரியாருக்கும், பேரறிஞர் அண்ணாவிற்கும் பல சமூக கனவுகள் இருந்தன. தீண்டாமை ஒழிப்பு, விதவைமறுமணம் எனத் துவங்கும் அப்பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டேயிருந்தன. தான் முதல்வராக பணியாற்றிய 5 முறையும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை ஒவ்வொன்றாக நிறைவேற்றியவர் கருணாநிதி. அரசின் உள்ளிருந்து எழுந்த எதிர்ப்புகளை அநாவசியமாக புறந்தள்ளினார்.</div><div><br></div><div>தெருக்களின் பெயர்மாற்றம், சாதியின் பெயர்களால் அடையாளப்படுத்தப் பட்ட அத்தனையையும் அப்புறப்படுத்தியது, வரலாற்றில் நிலைக்கும் நினைவிடங்கள் உருவாக்கம். வள்ளுவர் கோட்டம் துவங்கி வள்ளுவனுக்கு குமரிக்கடலில் சிலை வைத்தது வரை வேறெந்த அரசியல் தலைவனின் மூளைக்குள்ளும் உதிக்காத சிந்தனைகள்.</div><div>மக்கள் இவைகளை மறந்துவிடக்கூடாது என நினைக்கும்போதெல்லாம் மாநாடுகள், கவியரங்குகள் என தன் பகுத்தறிவு கொள்கைகளை காலத்தின் முன் விதைத்துக் கொண்டே இருந்த மகத்தான தலைவர் அவர் மறந்து கொண்டேயிருப்பது மக்களின் இயல்பு, நினைவுப்படுத்திக் கொண்டுயிருப்பது கலைஞனின் கடமை என்ற வாக்கியத்திற்கு ஒரு வாழும் உதாரணமாக நாம் கலைஞரின் பொது வாழ்வை மதிப்பிடலாம். . </div><div><br></div><div>தொண்ணூற்றி ஆறு வயது மரணம் ஒரு மூப்பனின் மரணம், ஒரு வயோதிக மரணத்திற்க்கான காத்திருப்பு என எம் தமிழ்மக்கள் யாரும் உதாசீனபடுத்த முடியாத மகத்தான மரணம் அது. வயோதிகர்கள், பெண்கள், குழந்தைகள் என கூட்டம் கூட்டமாய் தன் தலைவனின் முகத்தை கடைசியாய் ஒருமுறை தரிசிக்க வேண்டி தமிழகத்தின் எல்லா திசைகளிலிருந்தும் வந்து குவிந்தார்கள். திராவிடத்தின் பலம் தாங்காமல் சென்னை ஒரு நிமிடம் திணறிய காட்சியை உலகமே வியர்ந்து பார்த்தது.</div><div><br></div><div>கூவம் கரையோரங்களில் எந்த பாதுகாப்பும், சுகாதாரமுமின்றி குடிசை வீடுகளில் வாழ்ந்து தீர்த்த பல ஆயிரம் குடும்பகளை பல மாடி ஹவுசிங் போர்டு வீடுகள் கட்டி குடியமர்த்திய தன் தலைவனுக்கு அவர் ஒவ்வொரு முறையும் ஓட்டு கேட்க வரும் போது தங்கள் குழந்தைகளின் கையில் மலர்களை தந்து அவர் மீது தூவ வைத்து அழகு பார்த்த எளிய மக்களின் பேரன்புதான் இத்தனை லட்சம் மக்களை தன் தலைவனை வழி அனுப்ப கூட்டி வந்தது.</div><div><br></div><div>பலமுறை கட்சி உடைந்திருக்கிறது. தனக்கு நெருங்கிய பலரே துரோகத்தால் அம்மனிதனின் முதுகில் கூரிய கத்திகளை செருகியிருக்கிறார்கள். இனி அவ்வளவுதான் ‘திமுக’ என்ற சொல் தொடர்ந்து அவரின் எதிரிகளால் ஒரு இயந்திர தொழிற்சாலையின் உற்பத்தி போல நிகழ்ந்திருக்கிறது. அவைகளை ஒரு முற்றிய மரத்தின் உறுதியோடு தனக்குள்ளேயே ஏற்றுக் கொண்டு, </div><div>“என் உயிரிலும் மேலான உடன்பிறப்பே”</div><div>என பல லட்சம் மக்களின் ஆரவார வரவேற்பில் அந்த வலியை கரைந்திருக்கிறார். </div><div><br></div><div>பெரியாரும் அண்ணாவும் கூட கலைஞர் அளவுக்கு களப்பணியையும், மக்கள் செல்வாக்கையும் பெற்றவர்கள் அல்ல. </div><div>பெரியார், தன் தொடர் பிரச்சாரம் மூலம் மக்கள் மனங்களை மெல்ல மெல்ல வென்றுவிட முடியும் என நம்பினார். </div><div>சட்டத்தை இயற்றுகிற கைகள் தனதாயின் இச்சமூக அவலங்களை ஏன் நிறுத்திவிட முடியாது? என அண்ணா நினைத்தார் ஆனால் அதற்கு வாய்ப்பளிக்காமல் காலம் அவரைத் தின்று தீர்த்தது. இவர்களிலிருந்து எழுந்து வந்த கலைஞர், எழுத்து, பேச்சு, செயல், கலை, இலக்கியம், ஆட்சி, அதிகாரம், என சகல துறைகளிலும் நின்றெழுந்து மக்களை தன் தொடர் செயல்பாட்டினால் மக்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டேயிருந்தார். </div><div><br></div><div>திராவிட இயக்கங்கள் அதுவரை கட்டிக்காத்த மதச்சார்பின்மையை என்ன காரணத்தாலோ வாஜ்பாயின் அரசில் பங்கெடுத்ததின் மூலம் பலிகொடுத்தார் கலைஞர். ஆனால் நீண்ட வரலாற்றில் எந்த மகத்தான தலைவனுக்கும் அப்படி சில சறுக்கல்கள் இருக்குமென, அதை வரலாற்றின் பக்கங்களிலிருந்து நீக்கிவிடலாம். </div><div><br></div><div>75 திரைப்படங்களின் உருவாக்கத்தில் பங்கெடுப்பு, பல நூறு நாடகங்கள், குறளோவியம், சங்கத்தமிழ், தொல்காப்பிய பூங்கா என இடைவிடாத எழுத்துச் செயல்பாடு. கைகள் அனுமதித்த வரை எழுத்து, சொல் சிதறாதவரை உரை, என கடைசிவரை இயங்கிய ஒரு சமூக செயற்பாட்டாளனாக தமிழ் சமூகத்தின் முன் உயர்ந்து நின்றவர் கலைஞர் கருணாநிதி. </div><div><br></div><div>இதுவரை சுமார் 2 லட்சம் பக்கங்கள் அவரால் எழுதப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. சலிப்பின்றி இயங்கும் ஒரு படைப்பு மனத்திற்கே இதுவெல்லாம் சாத்தியம். </div><div><br></div><div>ஆட்சியிழப்பு, குடும்ப சண்டைகள், முதுமை, நோய்மை, தனிமை, புறக்கணிப்பு இவைகளின் முதல் கோரிக்கை பலியே எழுத்தும், பேச்சும் தான். எச்சூழலிலும் கலைஞர் அதை மட்டும் தன் இன்னொரு கண் போல் காத்துக் கொண்டார். </div><div><br></div><div>பல உச்சங்களை தொட்ட அடுத்த நாளே பள்ளத்தில் வீழ்ந்திருக்கிறார். இந்தியாவிற்கு ஒரு பிரதமரை உருவாக்கிக் கொடுத்தக் கணத்தில் அவர் லோக்கல் போலீஸ்காரர்களால் ஒரு கிரிமினலைப் போல நடு இரவில் இழுத்து செல்லப்பட்ட காட்சி, அவர் எழுப்பிய மரண ஓலம், தமிழகமெங்கும் இருந்த மக்களை அச்சப்பட வைத்தது. உள்ளுக்குள் ஆத்திரப்பட வைத்தது. லுங்கி கட்டிக் கொண்டு சென்னை சிறை வாசலில் அவர் நடத்தியப் போராட்ட காட்சி எளிய மக்களின் மனங்களில் பனி போல உறைந்திருந்தது. அடுத்த தேர்தலில் அவரையே தங்கள் முதல்வராக பார்த்த பின்பே அந்த பனி உருகியது எனலாம். </div><div><br></div><div>வரலாறு நெடுக போராட்டங்களையே தன் வாழ்வு பக்கங்களில் குறித்துக் கொண்டார் கலைஞர். அவர் இறந்த பின்பும் அதன் ஒரு நாள் மிச்சமிருந்தது.</div><div>அது தான், தான் மரணித்து தன் புதையலுக்காக அவர் நடத்தியப் போராட்டம். அதிலும் அவர்தான் இறுதியில் வென்றார். </div><div><br></div><div>உலகமே வாயடைத்த நின்ற அந்த கணம்தான், போராட்டங்களால் நிறைவு பெறுகிற வாழ்வு அத்தனை எளிதானது அல்ல என்றும், கனி அழுகி வீரிய விதையாக முளை எழுப்பி, விருட்சமாகி, ஆயிரம் ஆயிரம் பறவைகளை தன் தோள் மீது அமர்த்தி வைத்து ஒரு போரட்ட ஆசிரியனைப் போல தன் நீண்ட நெடிய வாழ்வை பறவைகளுக்கும் கற்றுத் தரும். அப்படித்தான் கலைஞர் நம்முன்னே கம்பீரமாய் முன்செல்கிறார்.</div><div><br></div><div>( நன்றி - Bava Chelladurai )</div><div><br></div><div>#Kalaignar4Life |#ThankyouMK | #Kalaignarist | #கலைஞரிஸ்ட் | #BharatRatna4Kalaignar |</div><div>#Karunanidhi | #WhyIlikeMK | #DMK |</div><div>#திராவிடபேரரசன்கலைஞர்</div><div><br></div><div>நன்றி 🙏 Nilabharathi</div>சாந்திபாபு http://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-73550353670620608422020-06-13T21:45:00.001+05:302020-06-13T21:46:09.667+05:30கலைஞரும் இந்து மத விரோதமும் <div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkTaeaxb4uHfYiRplBdOkEVIFxqr7h5wz8vcIFukMUX5YAnJ-G0dKw6-xxvzxD7Vle5j2c9ZHKCUHxtt5AxoNecevLG0IMqBic1RHCRKneej38eieByg0_vljt7kECu1IZvQ5ovoQC1B4/s1600/1592064891856822-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkTaeaxb4uHfYiRplBdOkEVIFxqr7h5wz8vcIFukMUX5YAnJ-G0dKw6-xxvzxD7Vle5j2c9ZHKCUHxtt5AxoNecevLG0IMqBic1RHCRKneej38eieByg0_vljt7kECu1IZvQ5ovoQC1B4/s1600/1592064891856822-0.png" width="400">
</a>
</div><div>கலைஞர் என்றாலே இந்து மத விரோதி என்றும், அவர் கோயில்களை இழுத்து மூடுவதையே வழக்கமாக கொண்டவர் என்றும், திராவிட ஆட்சிகளினாலும் இந்து சமய அறநிலையத் துறையினாலும் எல்லாமே குடி மூழ்கிப்போனது என்றும் கூக்குரல்கள் எழுவது வழக்கமே!<br></div><div> </div><div>எதிரிகளால் கலைஞரை சுற்றி பின்னப்பட்ட எத்தனையோ பொய் வலைகளில் இதுவும் ஒன்று.</div><div> </div><div>அது எப்படி பொய்யாக இருக்கும்? அவர் தான் நாத்திகர் ஆயிற்றே என்பீர்கள்!</div><div> </div><div>அவர் நாத்திகர் தான், அதை அவர் என்றும் மறைத்ததில்லை. ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வராக அவர் பணியாற்றிய போதெல்லாம் அவர் எப்படி செயல்பட்டிருக்கிறார் என்று பாருங்கள். அப்போது தான் தெரியும் அவரின் உயரம்.</div><div> </div><div>அவர் முதல்வராக பணியாற்றிய காலத்தில், இந்து சமய அறநிலையத்துறை மூலமாக நடந்தவை:</div><div> </div><div>♦ முதல்வர் தலைமையில், அறநிலையத் துறை அமைச்சர், அறநிலையத் துறைசெயலாளர், அறநிலையத் துறை ஆணையர், குன்றக்குடி ஆதினம், திருப்பனந்தாள் ஆதினம், திருவாவடுதுறை ஆதினம், திருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகள், திருமதி சௌந்தரம் கைலாசம், மேனாள் நெல்லை மேயர் உமா மகேஸ்வரி, கருமுத்து கண்ணன் ஆகியோர் அடங்கிய தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அமைப்பு, 1996</div><div> </div><div>♦ புரவலர் விருது & தங்க நிற அட்டை திட்டம் - ரூ.5 லட்சம் நன்கொடை வழங்குபவர்களுக்கு திருக்கோயில் புரவலர் என்ற பட்டமும், அரசு சான்றிதழும், தங்க நிறத்திலான அட்டையும் வழங்க அரசு உத்தரவு. அவர்கள் குடும்பத்தினர் 5 பேருக்கு அறநிலையத்துறை கட்டுபாட்டிலுள்ள திருக்கோயில்களில் 20 வருடங்கள் சிறப்பு தரிசன அனுமதி வழங்கவும் உத்தரவு. 48 புரவலர்கள் மூலம் ரூ.2.40 கோடி நிதி திரட்டல், 2006-2011</div><div><br></div><div>♦ திருக்கோயில் குடமுழுக்கு விழாக்கள்</div><div> </div><div>1. மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயில், 1996</div><div>2. திருப்பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில், 1997</div><div>3. திருநீர்மலை ரங்கநாத சுவாமி திருக்கோயில், 1997</div><div>4. திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் திருக்கோயில், 1997</div><div>5. திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், 1997</div><div>6. கடலூர் திருவேந்திரபுரம் தேவநாதசுவாமி திருக்கோயில், 1997</div><div>7. தஞ்சை பெரிய கோயில், 1997</div><div>8. சென்னை மல்லீஸ்வரர் திருக்கோயில், 1997</div><div>9. வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், 1997</div><div>10. சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், 1998</div><div>11. திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில், 1998</div><div>12. பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயில், 1998</div><div>13. ஆழ்வார் திருநகரி அரவிந்தலோசனர் திருக்கோயில், 1998</div><div>14. சென்னகேசவ பெருமாள் திருக்கோயில், 1999</div><div>15. வல்லக்கோட்டை முருகன் திருக்கோயில், 1999</div><div>16. கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில், 1999</div><div>17. திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், 1999</div><div>18. கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில், 1999</div><div>19. ஆழ்வார் திருநகரி ஆதிநாதாழ்வார் திருக்கோயில், 2000</div><div>20. குறுங்காலீஸ்வரர் திருக்கோயில், 2000</div><div>21. மதுரை காளமேக பெருமாள் திருக்கோயில், 2000</div><div>22. அகத்தீஸ்வரர் திருக்கோயில், 2000</div><div>23. வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், 2000</div><div>24. தொட்டியம் வேதநாராயண பெருமாள் திருக்கோயில், 2000</div><div>25. திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், 2000</div><div>26. பழனி தண்டாயுதபாணி திருக்கோயில், 2000</div><div>27. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், 2000</div><div>28. பவானி சங்கமேசுவரர் திருக்கோயில், 2000</div><div>29. காங்கேயம் சுப்ரமணியசுவாமி திருக்கோயில், 2000</div><div>30. திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில், 2000</div><div>31. திருமுட்டம் பூவராகசுவாமி திருக்கோயில், 2000</div><div>32. சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில், 2000</div><div>உள்ளிட்ட "4,724" கோயில்களில் குடமுழக்கு</div><div>33. தமிழகம் முழுவதும் 842 கோயில்களில் பல்வேறு திருப்பணிகள்.</div><div>34. ஆதிதிராவிடர், பழங்குடியினர் & பிற்படுத்தப்பட்டோர் வாழும் பகுதிகளில் உள்ள அறநிலையத்துறையின் கீழ் வராத 6350 கோயில்களில் புனரமைப்பு திருப்பணிகள்</div><div>35. கிராமப்புற திருக்கோயில்கள் திருப்பணிகளுக்கு ரூ.85000/- நிதி உதவி </div><div> </div><div> ♦ கோயில் சுற்றுப்புற மேம்பாடு</div><div> </div><div>1. நிதிவசதி இல்லாத கோயில்களுக்கு அரசின் சார்பில் இலவச மின்விளக்கு </div><div>2. திருக்கோயில்களின் 2324 குளங்களில் 1146 குளங்கள் தூர்வாரல், படிக்கட்டுகள் செப்பனிடல் & மழை நீர் சேமிப்பு ஏற்படுத்துதல்</div><div>3. அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு காஞ்சி ஏகாம்பரேசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான திருகுளத்தை சீரமைக்க ரூ.43.90 லட்சம், அருள்மிகு அஷ்டபூஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரங்கசாமி குளத்தினை சீரமைக்க ரூ.22.50 லட்சம் நிதி ஒதுக்கல்</div><div>4. இந்து அறநிலையத்துறை அமைச்சர் தலைமையில் 50 முக்கிய திருக்கோயில்களில் உள்ள பழங்கால மூலிகை ஓவியங்களை பாதுகாக்க ரூ.20 லட்சம் செலவில் நடவடிக்கை </div><div> </div><div>♦ கோயில்களில் தமிழ் </div><div> </div><div>1. தமிழில் வழிபாடு, தமிழில் வேள்வி 1998</div><div>2. சைவத் திருமுறை ஆகமங்கள், வைணவ திவ்விய பிரபந்த பயிற்சி மையங்கள், 1998-99</div><div>3. திருக்கோயில் ஆகம விதிகள் அடங்கிய உத்ரகாமிக ஆகமம் நூலை, 1999</div><div>4. தமிழ் போற்றி அர்ச்சனை புத்தகங்கள் வெளியீடு, 1999</div><div>5. சைவத் திருக்கோயில்கள் 5-ல் தேவார இசைப் பள்ளிகள் </div><div>6. வைணவத் திருக்கோயில்கள் 4-ல் பிரபந்த இசைப் பள்ளிகள் </div><div>7. 8 திருக்கோயில்களில் நாதஸ்வரம் & தவில் பயிற்சி</div><div>8. 75 திருக்கோயில்களில் திருக்குறள் வகுப்புகள் </div><div>9. சிதம்பரம் நடராசர் தமிழ் திருமுறைகள் இசைத்தல்</div><div>10. அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து கோயில்களின் தலப்புராண வரலாற்றை சேகரித்து அச்சுவடிவமாக்கி பதிப்பித்து வெளியிடுதல், 1989</div><div> </div><div> ♦ தங்க விமானங்கள், தங்கத்தேர் & மரத்தேர் பணிகள் </div><div> </div><div>1. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் புதிதாக 34 தங்கத் தேர்கள் </div><div>2. சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மூலவர் தங்க விமான மாற்றம், 2007</div><div>3. திருப்பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் மூலவர் தங்க விமான மாற்றம், 2007</div><div>4. சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் மூலவர் தங்க விமான மாற்றம், 2010</div><div>5. திருக்கோயில்களின் 241 மரத் தேர் புதுப்பிப்பு </div><div>6. திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் அம்பாளுக்கு புதிய திருத்தேர் அமைத்தல் & தேரோட்டம், 2008</div><div> </div><div>♦ கோயில் சொத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் </div><div><br></div><div>1. கோயில் நிலங்களை தனியாருக்கு விற்பதில்லை என்ற கொள்கை முடிவு</div><div>2. தமிழகம் முழுவதும் 8325 கோயில் சொத்து பதிவேடுகள் உருவாக்கம், 1996</div><div>3. தனியார் ஆக்ரமிப்பில் இருந்த திருத்துறைப் பூண்டியில் 621 ஏக்கர், பேரூரில் 250 ஏக்கர் உள்ளிட்ட கோயில் நிலங்கள் மொத்தம் 2745 ஏக்கர் கோயில் நிலங்கள் நேரடி மீட்பு </div><div>4. நீதிமன்ற நடவடிக்கைகள் வாயிலாக 1414 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு </div><div>5. திருக்கோயில்களில் உள்ள உலோகத் திருமேனிகளை பாதுகாத்திட திருவொற்றியூர், திருத்தணி, விருதுநகர், விழுப்புரம் & தர்மபுரி உள்ளிட்ட 15 இடங்களில் உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையம்</div><div>6. மொத்தம் 532 திருக்கோயில்களில் களவு எச்சரிக்கை மணி பொருத்துதல்</div><div>7. மொத்தம் 59 திருக்கோயில்களில் CCTV பொருத்துதல்</div><div>8. திருக்கோயில்களின் சொத்துக்களை மீட்க தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் நீதிமன்ற கட்டணம் சொத்து மதிப்பில் 7.5 சதவிகிதம் என்று இருந்ததை மாற்றி அனைத்து வழக்குகளுக்கும் ஒரே கட்டணமாக ரூ.100/- என நிர்ணயித்து அரசு ஆணை, 2010</div><div>9. கோயில்களில் பக்தர்கள் வழங்கும் பருத்தி நூல் புடவை & வேட்டிகளை ஏலம் விடுவதை நிறுத்திவிட்டு, அவற்றை முதியோர், ஆதரவற்றோர் & கைம்பெண்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டம்</div><div> </div><div>♦ பணியாளர் நியமனம் & நலன்</div><div> </div><div>1. ஓய்வூதிய நல நிதி, 1996</div><div>2. பணியாளர் சேமநல நிதி, 1997</div><div>3. பணியாற்றும் காலத்தில் இயற்கை எய்தும் பணியாளர்களுக்கு ரூ.2000/- இறுதி சடங்கு நிதி, 1997</div><div>4. பணியாளர்களின் மகன் திருமணத்திற்கு ரூ.6000, மகள் திருமணத்திற்கு ரூ.10000/-, 1997</div><div>5. மருத்துவப்படி, சீருடை சலவைப் படி, இருசக்கர வாகனம் வாங்க கடன், 1997</div><div>6. கோயில்களுக்கான 200 புதிய செயல் அலுவலர் பணியிடங்கள் தோற்றுவித்தல், 1998</div><div>7. ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்ட திருக்கோயில்களின் அனைத்து பணியாளர்களுக்கும் அகவிலைப்படி, 1998</div><div>8. திருக்கோயில் பணியாளர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி, 1999</div><div>9. ஆண்டுக்கு ஒரு லட்சமும் அதற்கு மேலும் வருமானம் உள்ள கோயில்களின் பணியாளர்களுக்கு சிறப்பு வருங்கால வைப்பு நிதி திட்டம், 1999</div><div>10. திருக்கோயில் பணியாளர் மகன்/மகளுக்கு மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் மடிக்கணனி வழங்குதல், 2010</div><div>11. திருக்கோயில் பணியாளர் மகன்/மகளுக்கு மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் உயர்கல்வி பயில நிதி உதவி, 2010</div><div>12. திருக்கோயில் பணியாளர்கள் 2575 பேருக்கு ஒரே சீருடை & அடையாள அட்டை, 2010</div><div>13. கிராம பூசாரிகள் 1146 நபர்களுக்கு ஓய்வூதிய திட்டம் </div><div>14. ஒரு காலப் பூசை நடைபெறும் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர் & பூசாரிகள்10,000 பேருக்கு இலவச சைக்கிள், 2010</div><div>15. மொத்தம் 49,240 கிராம பூசாரிகள் அடங்கிய நலவாரியம், 2010</div><div>16. திருக்கோயில்களில் 150 தமிழ்ப் புலவர்கள் நியமனம் </div><div>17. மங்களாசாசனம் செய்யப்பட்ட சரித்திர புகழ் வாய்ந்த கோயில்களில் 14 தவில், 30 நாதஸ்வரம், 4 தாளம் ஆகிய இசைக் கலைஞர்கள் 48 பேர் நியமனம் </div><div>18. சைவத் திருமுறைகளான தேவாரம் திருவாசகம் பாட 43 திருக்கோயில்களில் ஓதுவார்கள் நியமனம் </div><div> </div><div>♦ கோயில்கள் சார்ந்து மக்கள் நலப் பணிகள் </div><div> </div><div>1. திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து 10 கோடி மைய நிதியை உருவாக்கி திருக்கோயில்கள் மூலம் நடத்தப்படும் பள்ளிகள் & கல்லூரிகளுக்கு நிதி வசதி </div><div>2. திருக்கோயில்களில் ஆதரவற்ற இளம் சிறார்கள் கருணை இல்லம் திட்டத்தின் கீழ் 38 திருக்கோயில்கள் மூலம் 43 கருணை இல்லங்கள், 1975</div><div>3. திருக்கோயில் கருணை இல்ல மாணவ, மாணவியர்களுக்கு இலவச கணினி, தட்டச்சு & தையல் பயிற்சி </div><div>4. திருக்கோயில்களால் நடத்தப்படும் ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச சீருடை</div><div>5. நிதிவசதியும், இடவசதியும் உள்ள 114 முக்கிய திருக்கோயில்களில் நூல் நிலையங்கள் அமைத்தல் </div><div>6. பழனியில் ரூ.1 கோடி மதிப்பில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் பஞ்சாமிர்த தயாரிப்பு நிலையம்</div><div>7. திருவேற்காடு, சமயபுரம் ஆகிய திருக்கோயில்கள் சார்பில் திருமண மண்டபங்கள், 2007 & 2009</div><div> </div><div>♦ திருவாரூர் ஆழித் தேர்</div><div><br></div><div>அனைத்து துறைகளிலும் காலத்துக்கும் தன் பெயர் சொல்லும்படியான ஓர் சிறப்பு முத்திரையை பதித்துள்ள தலைவர் கலைஞர், அறநிலையத் துறையில் அப்படியான ஒரு முத்திரையை தன் சொந்த மாவட்டமான திருவாரூரில் பதித்துள்ளார்.</div><div><br></div><div>அது தான் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் கோயில் ஆழித் தேர்.</div><div><br></div><div>நீண்ட நெடுங்காலமாக ஆத்திகர்கள் ஆண்ட இந்த மாநிலத்தில் திருவாரூர் தேர் ஓட்டம் 1948 ஆம் ஆண்டோடு நின்றுவிட்டது. எண்கோண வடிவத்தில் நாலு நிலைகளுடன் 96 அடி உயரமும் 360 டன் எடையும் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய மரத்தால் ஆன ஆழித்தேரை, நாத்திகரான இவர் 1969ல் முதல்வரானவுடன் திருச்சி Bhel நிறுவனத்தின் உதவியுடன் செப்பனிட்டு, இரும்பு அச்சுகள், சக்கரங்கள் & Hydraulic Brake System எல்லாம் கொண்டதாக நவீனமயப்படுத்தி, 1970 ஆம் ஆண்டு ஓட வைத்து தமிழ்நாட்டுக்கும், திருவாரூருக்கும், தியாகராஜ சுவாமிக்கும் சிறப்பு சேர்த்தார்.</div><div><br></div><div>இவ்வளவு செய்த கலைஞரை, ஒரு சிறு கூட்டம் அவர் மறைவுக்கு பின்னரும் ஏன் தொடர்ந்து இந்து மத விரோதி என்று தூற்றுகிறது? </div><div><br></div><div>அதற்கு காரணம் கோயில்களில் அவர் செய்திருக்கும் சமுக நீதி சார்ந்த செயல்கள் தான். </div><div><br></div><div>தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மக்களிடையே சமத்துவத்தை வலியுறுத்துவதற்காக அவர் கொண்டு வந்த சட்டங்கள்,</div><div><br></div><div>1. பரிவட்ட மரியாதை நிறுத்தம்</div><div>2. அறங்காவலர் குழுவில் ஆதி திராவிடர் & மகளிர்</div><div>3. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் </div><div> </div><div>பரிவட்டம், அறங்காவலர் குழு பதவிகள், அர்ச்சர்கர் பணி, இந்த மூன்றுமே பரம்பரை பரம்பரையாக ஒரு குடும்பம், ஒரு சாதி என்ற குறுகிய வட்டத்திற்குள் இருந்த உரிமைகள். அதை இந்த மனிதன் சட்டத்தின் துணையுடன் பொதுமைப்படுத்தி எல்லாருக்குமான ஒன்றாக ஜனநாயகப்படுத்தி விட்டாரே என்ற கோபம் தான் அவர் மீதான வன்மமாக வளர்ந்து அவர் மறைவுக்கு பின்னரும் அவரை தூற்ற காரணமாகிவிட்டது.</div><div><br></div><div>கலைஞரின் வார்த்தைகளே தான் அவர்களுக்கான பதில். . .</div><div><br></div><div>கடவுளை கலைஞர் ஏற்கிறாரா இல்லையா என்பதல்ல கேள்வி.</div><div>கடவுள் என்றொருவர் இருந்தால் அவர் கலைஞரை ஏற்கிறாரா இல்லையா என்பது தான் கேள்வி.</div><div>அந்த கேள்விக்கான பதில் தான் அவர் செய்துள்ள, மேலே பட்டியிலடப்பட்டுள்ள பணிகள்.</div><div><br></div><div>#FatherofModernTamilnadu #HBDKalaignar97</div><div>நன்றி:- சிவக்குமார்</div>சாந்திபாபு http://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-79975301889067349682020-05-28T18:06:00.001+05:302020-05-28T18:06:42.984+05:30இந்தியைத் தடுத்த திராவிடத்தால் வீழ்ந்தோம்..<div>50 வருடம் ஹிந்தி தெரியாமல் திராவிட ஆட்சி நடை பெற்றதால் பின்னோக்கி இருக்கும் ஒரு திராவிட மாநிலத்தின் கதை.....</div><div><br></div><div>1.உயர் கல்வி :</div><div><br></div><div>பள்ளிகல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம்… அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம்..</div><div><br></div><div>தமிழ் நாடு – 38.2%..♥</div><div>பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் </div><div>குஜராத் – 17.6% ; </div><div>மபி – 17.4% ; </div><div>உபி – 16.8% ; </div><div>ராஜஸ்தான் – 18.0% ;</div><div><br></div><div>இந்திய சராசரி : 20.4%♥</div><div>-----------------------------------------------------</div><div>2.கல்வி நிலையங்களின் தரம் :-</div><div><br></div><div>2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் HRD துறை வெளியிட்டுள்ளது… அந்த பட்டியலின் படி,</div><div><br></div><div>முதல் 100 சிறந்த கல்லூரிகளில் </div><div>♦37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்.. பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ வெறும் ♦மூன்றுதான்.. </div><div><br></div><div>இதேபோல ஹிந்தி பெல்ட் மாநிலங்களான மபி, உபி, பிகார், ராஜஸ்தான் போன்றவற்றிலிருந்து ஒன்று கூட இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை……</div><div>------------------------------------------------------------</div><div>3.முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில், </div><div>தமிழ் நாடு – 22 ;♥</div><div>குஜராத் – 5 ; </div><div>மபி – 3 ; </div><div>உபி – 6 ; </div><div>பிகார் – 1 ; </div><div>ராஜஸ்தான் –3</div><div>----------------------------------------------------------</div><div>4.முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில்</div><div>தமிழ் நாடு – 24 ;♥</div><div>குஜராத் – 2 ; </div><div>மபி – 0 ; </div><div>உபி – 7 ; </div><div>பிகார் – 0 ; </div><div>ராஜஸ்தான் – 4</div><div>-------------------------------------------------------</div><div>5.பொருளாதார மொத்த உற்பத்தி (GDP) :-</div><div><br></div><div>இந்தியாவில் இருக்கும் </div><div>♦29 மாநிலங்களில், </div><div>♦20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை #தமிழ்நாடு, #கர்நாடகா, #மகாராஷ்டிரா ஆகிய ♦3 மாநிலங்கள் அளிக்கிறது.. </div><div><br></div><div>மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ்நாடு.</div><div><br></div><div>தமிழ் நாடு – ₹18.80 lakh crore ♥</div><div> (2nd Place) ; </div><div>பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் </div><div><br></div><div>உபி – ₹12.37 lakh crore (4th) ; </div><div>குஜராத் – ₹10.94 lakh crore (5th) ; </div><div>ராஜஸ்தான் ₹07.67 lakh crore (7th) ;</div><div>மபி – ₹07.35 lakh crore (10th) ; </div><div>சத்தீஸ்கர் – ₹02.77 lakh crore (17th)</div><div>-------------------------------------------------------------</div><div>6.Infant Mortality Rate </div><div>(IMR சிசு மரண விகிதம் 1000</div><div> பிறப்புக்கு) :-</div><div><br></div><div>தமிழ் நாடு – 21 ; ♥</div><div><br></div><div>பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் </div><div><br></div><div>குஜராத் – 36 ; </div><div>மபி – 54 ; </div><div>உபி – 50 ; </div><div>ராஜஸ்தான் – 47 ; </div><div>சத்தீஸ்கர் – 46 ; </div><div>இந்திய சராசரி : 40 ♥</div><div>----------------------------------------------------------</div><div>7.Maternal Mortality Rate </div><div>(MMR – ஒரு லட்சம் பிரசவத்தில் தாய் இறக்கும் விகிதம்) :-</div><div><br></div><div>தமிழ் நாடு – 79 ; ♥</div><div>பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் </div><div>குஜராத் – 112 ; </div><div>மபி – 221 ; </div><div>உபி – 285 ;</div><div>ராஜஸ்தான் – 244 ; </div><div>சத்தீஸ்கர் – 221 ; </div><div>இந்திய சராசரி : 167♥</div><div>------------------------------------------------------</div><div>8..தடுப்பூசி அளிக்கப்படும் குழந்தைகள் சதவீதம் (vaccination coverage) :</div><div><br></div><div>தமிழ் நாடு – 86.7% ; ♥</div><div><br></div><div>பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் </div><div><br></div><div>குஜராத் – 55.2% ; </div><div>மபி – 48.9% ; </div><div>உபி – 29.9% ; </div><div>ராஜஸ்தான் – 31.9% ; </div><div>சத்தீஸ்கர் – 54.0% ; </div><div>இந்திய சராசரி : 51.2% ♥</div><div>--------------------------------------------------------</div><div>9.கல்வி விகிதாசாரம் (Literacy Rate) :-</div><div><br></div><div>தமிழ் நாடு – 80.33% ; ♥</div><div><br></div><div>பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் </div><div><br></div><div>குஜராத் – 79.00% ; </div><div>மபி – 70.00% ; </div><div>உபி – 69.00% ; </div><div>ராஜஸ்தான் – 67.00% ; </div><div>சத்தீஸ்கர் – 71.00% ; </div><div>இந்திய சராசரி : 74.00% ♥</div><div>-------------------------------------------------------------</div><div>10.ஆண் – பெண் விகிதாசாரம் </div><div>(ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) </div><div>இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):-</div><div><br></div><div>தமிழ் நாடு – 943 ; ♥</div><div><br></div><div>பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் </div><div><br></div><div>குஜராத் – 890 ; </div><div>மபி – 918 ; </div><div>உபி – 902 ;</div><div>ராஜஸ்தான் – 888 ; </div><div>இந்திய சராசரி : 919 ♥</div><div>------------------------------------------------------------</div><div>11.தனி நபர் வருமானம் </div><div> (Per Capita Income – ரூபாயில்)</div><div><br></div><div>தமிழ் நாடு – 1,28,366 ; ♥</div><div><br></div><div>பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் </div><div><br></div><div>குஜராத் – 1,06,831; </div><div>மபி – 59,770 ; </div><div>உபி – 40,373 ; </div><div>ராஜஸ்தான் – 65,974 ; </div><div>சத்தீஸ்கர் – 64,442 ; </div><div>இந்திய சராசரி : 93,293 ♥</div><div>-----------------------------------------------------------</div><div>12.மனித வள குறியீடு </div><div>(Human Development Index)</div><div><br></div><div>தமிழ் நாடு – 0.6663 ; ♥</div><div><br></div><div>பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் </div><div><br></div><div>குஜராத் – 0.6164 ; </div><div>மபி – 0.5567 ; </div><div>உபி – 0.5415 ; </div><div>ராஜஸ்தான் – 0.5768 ; </div><div>சத்தீஸ்கர் – 0.3580 ; </div><div>இந்திய சராசரி : 0.6087 ♥</div><div>-----------------------------------------------------------</div><div>13.ஏழ்மை சதவீதம் </div><div>(Poverty -% of people below poverty line)</div><div><br></div><div>தமிழ் நாடு – 11.28% ; ♥</div><div><br></div><div>பிஜேபி ஆளும் வட மாநிலங்கள்</div><div><br></div><div>குஜராத் – 16.63% ; </div><div>மபி – 31.65%;</div><div>உபி – 29.43% ; </div><div>ராஜஸ்தான் – 14.71% ; </div><div>சத்தீஸ்கர் – 39.93% ; </div><div>இந்திய சராசரி : 21.92% ♥</div><div>------------------------------------------------------</div><div>14.ஊட்டசத்து குறைபாடுள்ள குழந்தைகள் (Malnutrition)</div><div><br></div><div>தமிழ் நாடு – 18.0% ; ♥</div><div><br></div><div>பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் </div><div><br></div><div>குஜராத் – 33.5% ; </div><div>மபி – 40.0% ; </div><div>உபி – 45.0% ; </div><div>ராஜஸ்தான் – 32.0% ; </div><div>சத்தீஸ்கர் – 35.0% ; </div><div>இந்திய சராசரி : 28.0% ♥</div><div>---------------------------------------------------------</div><div>15.மருத்துவர்களின் எண்ணிக்கை </div><div>(ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு)</div><div><br></div><div>தமிழ் நாடு – 149 ; ♥</div><div>பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் </div><div>குஜராத் – 87 ; </div><div>மபி – 41 ; </div><div>உபி – 31; </div><div>ராஜஸ்தான் – 48 ;</div><div> சத்தீஸ்கர் – 23 ; </div><div>இந்திய சராசரி : 36 ♥</div><div>----------------------------------------------------------------</div><div> இப்படி எந்த ஒரு அளவீடை எடுத்துக்கொண்டாலும், தமிழ்நாடு, </div><div>மற்ற மாநிலங்களைவிட, குறிப்பாக, பிஜேபி ஆளும் மாநிலங்களை விட, எல்லாவிதங்களிலும் பல மடங்கு உயர்ந்த நிலையில் உள்ளது…. இந்திய சராசரியைவிட மேலே, முதலிடங்களில் உள்ளது..</div><div><br></div><div>மேலும்,</div><div><br></div><div>1. தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரின் வாழ்வியல் வசதிகள், வட மாநில முற்பட்ட வகுப்பினரைவிட அதிகமாக உள்ளது.</div><div><br></div><div>2. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நிலையைவிட, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலை உயர்வாக உள்ளது.</div><div><br></div><div>3. இந்தியாவிலே தமிழகத்தில்தான் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலைமை மிக மேம்பட்டு உள்ளது.</div><div><br></div><div>4. தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் தலித் தொழில் முனைவோர் அதிகம்..</div><div><br></div><div>5. தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் பெண் தொழில் முனைவோர் அதிகம்..</div><div><br></div><div>உண்மைநிலவரம் இப்படியிருக்க, திராவிட ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை, வளரவில்லை என பொய்களை, வாய் கூசாமல் சொல்லிக்கொண்டு இருகிறார்கள்… தமிழக மக்களை ஏமாற்ற முயல்கிறார்கள்….</div><div><br></div><div>Source from Tamil inyan </div><div><br></div>சாந்திபாபு http://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-35858302667110231742020-05-23T08:08:00.001+05:302020-05-23T08:08:07.992+05:30இவர் இல்லாமல் இருந்திருந்தால்...<div>பாக்யராஜூம் அவரது நண்பரும் எல்டாம்ஸ் ரோடு 92 c ரூமில் தங்கி இருந்தார்கள். அந்த நடிகர் நாடகங்களில் நடித்துக் கொண்டே சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தார்.</div><div><br></div><div>பாக்யராஜ் அப்போது பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தார். பாக்யராஜின் நண்பர் அப்போது சின்னச்சின்ன கேரக்டர்களில் சினிமாவிலும் தலைகாட்டிக் கொண்டிருந்தார். ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தை பாரதிராஜா ஆரம்பிக்கிறார். அதில் ஹீரோயின் ராதிகா. ஹீரோ சுதாகர். ராதிகாவின் அக்காவாக நடிக்கும் காந்திமதி, அன்றைக்கு மிகவும் பிஸியான நடிகை. காந்தமதிக்கு கணவனாக யாரை நடிக்க வைப்பது என்ற பேச்சு எழுந்தது.</div><div><br></div><div>அது மிகவும் முக்கியமான கேரக்டர். படத்தின் வில்லன் கேரக்டர். தன்னுடைய ரூம் மேட் அந்த கேரக்டரில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று பாக்யராஜ் முடிவு செய்கிறார். இயக்குநர் பாரதிராஜாவிடம் சொல்கிறார். அந்தப் படத்தின் வினியோகஸ்தர் ராஜ்கிரண். என் ராசாவின் மனசிலே ராஜ்கிரண். அவரும் பாரதிராஜாவிடம் அந்த நடிகரையே சிபாரிசு பண்ணியிருக்கிறார். </div><div><br></div><div>யாரு சொன்னதையும் காதில் போட்டுக் கொள்ளாத பாரதிராஜா, “போய்யா.. அந்தாளுக்கு தலையில முடியே இல்லை. ஆளும் நல்லாயில்ல” என்று மறுத்துவிட்டார். இத்தனைக்கும் பாரதிராஜாவின் முதல் படம் ‘16 வயதினிலே‘வில் அந்த நடிகர் நடிச்சிருந்தார்.</div><div><br></div><div>பாக்யராஜ், “விக்கு வச்சிக்கலாம்” என்று சமாதானம் சொல்லியிருக்கிறார். அதற்கு பாரதிராஜா, அந்த நடிகரை காந்திமதி உடன் நடிக்க வைத்து டெஸ்ட் சூட் பண்ணி காட்ட சொல்லியிருக்கிறார். பாக்யராஜ் தன் நண்பரை அழைத்து அவர் தலைக்கு தோதான விக் வைத்து, டைலாக் சொல்லி குடுத்து, டெஸ்ட் சூட் எடுத்திருக்கிறார்கள். அதை ப்ரிவியூ தியேட்டரில் பாரதிராஜாவுக்கு போட்டும் காண்பித்திருக்கிறார்கள்.</div><div><br></div><div>ஷோ முடிந்து பாக்யராஜ் நேராக ரூமுக்கு சென்றிருக்கிறார். ரூமுக்கு வெளியிலே தெரு முக்கில் பாக்யராஜ்க்காக அவரது நண்பர் காத்துக் கொண்டிருந்தார். பாக்யராஜைப் பாத்ததும் ஓடி வந்து கையைப் பிடிச்சிக்கிட்ட அவர், “என்ன ஆச்சு, டைரக்டர் என்ன சொன்னாரு?” என்று படபடவென கேட்டிருக்கிறார். </div><div><br></div><div>பாக்யராஜ், “டைரக்டர் ஒத்துக்கிட்டாரு. நீதான் காந்திமதிக்கு புருஷனா நடிக்கப் போற’’ என்று சொல்லியிருக்கார். உடனே, அந்த நடிகர் தன் கையோட வைத்திருந்த கற்பூரத்தை எடுத்து பூட்டியிருந்த தேனாம்பேட்டை ஆலையம்மன் கோயில் வாசலில் கொளுத்தி, கீழே விழுந்து கும்பிட்டிருக்காரு. கும்பிட்டு எழுந்தவர் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர்.</div><div><br></div><div>அதன் பின்பு அந்தப் படத்தில் காந்திமதிக்கு புருஷனாக வில்லனாக நடித்த கவுண்டமணிக்கு அந்தப் படத்திலிருந்து நட்சத்திர அந்தஸ்து கிடைக்கத் தொடங்கியது. பெரிய ஸ்டார் ஆனார். இதெல்லாம் அம்மன் அருளாலதான் நடந்தது என்று கவுண்டமணி இன்று வரை நம்புகிறார். </div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9Hslslh3g862ho2SOrtlICMy5eQd4_oVb6_DvTUKSluziGNlUqNad-KcZs5YMvhn7OMyuSKAzGh3nv-JZQxJhkqvNefxtqqrvonysyJCwUqSYdsRVjuItX57OgBcDr8EMUDAuknA3T3k/s1600/1590201480374254-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9Hslslh3g862ho2SOrtlICMy5eQd4_oVb6_DvTUKSluziGNlUqNad-KcZs5YMvhn7OMyuSKAzGh3nv-JZQxJhkqvNefxtqqrvonysyJCwUqSYdsRVjuItX57OgBcDr8EMUDAuknA3T3k/s1600/1590201480374254-0.png" width="400">
</a>
</div><br></div><div>கோவை மாவட்டம் வல்லக்குண்டாபுரம் கிராமத்தில் திருமூர்த்தி மலைச்சாரலின் பிறந்த சுப்பிரமணி சின்ன வயதில் வாய்ப் பேச முடியாதவராக இருந்திருக்கிறார். ‘வீட்டுக்கு ஒரே ஆம்பளப் பையன் இப்படி ஆகிப்போச்சே’ என்று அப்பா அம்மா கவலைப்பட்டிருக்கிறார்கள்.</div><div><br></div><div>சுப்பிரமணியின் அக்கா மயிலாத்தாள் தம்பி மேல் இருந்த பாசத்தால் போகாத கோயில் இல்லை. பார்க்காத வைத்தியம் இல்லை. சகோதரியின் வேண்டுதல் சுப்பிரமணியை பேச வைத்தது. அது மட்டும் நடக்காமல் போயிருந்தால் நமக்கு கவுண்டமணி என்ற மகா கலைஞன் கிடைக்காமலேயே போயிருப்பார்.</div><div><br></div><div>கிராமத்தில் எல்லோரும் நாடகம் பார்க்க ஆசைப்பட்ட காலத்தில் சுப்பிரமணி மட்டும் நாடகத்தில் நடிக்க ஆசைப்பட்டான். சின்ன வயதிலேயே சென்னை வந்துவிட்ட கவுண்டமணிக்கு இங்கே பாக்யராஜின் நட்பு கிடைத்தது. அதன் மூலமாக பாரதிராஜாவின் ‘பதினாறு வயதினிலே’ படத்தில், “பத்த வச்சிட்டீயே பரட்டை” என்ற வசனம் பேசி, எல்லாரையும் திரும்பிப் பாக்க வைத்தார்.</div><div><br></div><div>தமிழ் சினிமாவில் பாரதிராஜா வருகைக்கு முன்பு வரை எல்லோரும் உரைநடைத் தமிழில் தான் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சு வழக்கு மொழி தமிழ்ப் படங்களில் ஒலிக்கத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே கொங்கு வட்டார வழக்கைத் தமிழ் சினிமாவுக்குக் கொண்டு வந்தவர், கவுண்டமணிதான். கோவையைச் சேர்ந்த இயக்குநர் சுந்தர்ராஜனின் ‘வைதேகி காத்திருந்தாள்‘ படத்தில் “அடேய் கப்லிங் தலையா? இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா ஒரு நல்லவரு, ஒரு வல்லவருனு ஊருக்குள்ள இருக்கற அம்மணி அக்காகிட்டேல்லாம் போய் சொல்லோணும்” என்று பேசி, கொங்கு வட்டார வழக்கை சினிமாவுக்குள் கொண்டு வந்தார். </div><div><br></div><div>தமிழ் சினிமாவில் முதல் முதலில் பேசப்பட்ட வட்டார வழக்கும் கொங்கு மண்டல வழக்காகத் தான் இருக்கும் என்பது என் கணிப்பு. அதற்கு அச்சாரம் போட்டவர்கள் இயக்குநர்கள் பாக்யராஜ் மற்றும் சுந்தர்ராஜன் ஆகியோர்தான். ‘நாட்டாமை‘ படத்தில் அவரது கொங்கு தமிழ் உச்சத்தைத் தொட்டது. பெண் வேடத்தில் கவுண்டமணி , “யேங்கோ, நம்ம ரெண்டு பேர்த்துக்குப் பொறந்தானே ஒரு மகென். அவென் எங்கெங்கோ?” என்று கேட்கும்போது கோயமுத்தூரையே நம் கண் முன்னால் வந்து நிறுத்தியிருப்பார்.</div><div><br></div><div>பாக்கியராஜ் சாரோட ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில், “சரோஜா குப்பையால கொட்ற? கொட்டு, கொட்டு” என்று வழிந்து கொண்டே பேசி அடுத்த கட்டத்துக்கு போயிட்டாரு. அதன்பின்பு இயக்குநர் சுந்தர்ராஜன் வந்தார். அவர் கவுண்டமணியை அடுத்த கட்டத்துக்கு கூட்டிட்டுப் போனார் என்று சொல்வதைவிட, தூக்கிக் கொண்டு போனார் என்றுதான் சொல்ல வேண்டும். </div><div><br></div><div>இன்று நடித்துக் கொண்டிருக்கிற எல்லா நடிகர்களும் தங்கள் பெயருக்கு முன்னால் பட்டப் பெயர் வைத்துக் கொல்(ள்)கிறார்கள். புதுசா நடிக்க வருகிறவர்கள் கூட முதல் படத்துலயே அடைமொழி வைத்து அட்ராசிட்டி செய்கிறார்கள். காமெடி நடிகர்கள் கூட பட்டப் பெயர் வைத்துக் கொள்வது வழக்கமாவிட்டது. ஆனால், கவுண்டமணிக்கு இதுவரைக்கும் எந்தப் பட்டமும் கிடையாது. அவரிடம் பட்டப் பெயர் வைப்பது பற்றி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், “ஏன்டா சார்லி சாப்ளினுக்கே பட்டப் பெயர் கிடையாது. நடிப்புல நாம என்ன அவரை விடவா சாதிச்சிட்டோம். போங்கப்பா” என்று சொல்லியிருக்கிறார். அதுதான் கவுண்டமணி!</div><div><br></div><div>சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமலுடன் நடிக்கும் போதும் கூட கவுண்டர் தனக்குரிய பாணியை மாற்றிக்கொண்டது இல்லை. ‘மன்னன்‘, ‘பாபா‘ படங்களில் ரஜினியை கவுண்டர் சகட்டுமேனிக்குக் கலாய்ச்சிருப்பார். </div><div><br></div><div>‘சிங்காரவேலன்‘, ‘இந்தியன்‘ படங்களில் கமலையும், சத்யராஜ், சரத்குமார், அர்ஜுன் என உடன் நடித்த எல்லோரையும் கலாய்ப்பதில் கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். கவுண்டமணியைத் தவிர வேறு யாரும் இதுபோல் கலாய்த்திருந்தால் அந்த ஹீரோக்களின் ரசிகர்கள் ‘காண்டா‘கி இருப்பார்கள். அதுதான் கவுண்டமணியின் சக்சஸ்.</div><div><br></div><div>கவுண்டமணியின் காமெடி இல்லாம இருந்திருந்தால் நிறைய ஹீரோக்கள் அப்போதே காணாமப் போயிருப்பார்கள். அது சம்பந்தப்பட்ட அந்த நடிகர்களுக்கும் நன்றாகத் தெரியும். </div><div><br></div><div>கவுண்டமணி பிசியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்துல நிறையப் படங்கள் இளையராஜாவின் இசைக்காகவும், கவுண்டமணி-செந்தில் காமெடிக்காகவும் ஓடியிருக்கிறது. ‘கரகாட்டக்காரன்‘, ‘சின்னத் தம்பி‘ படங்கள் அதற்கு நல்ல உதாரணங்கள். தமிழ்ச் சினிமா வரலாற்றில் வசூலில் சாதனை படைச்ச இந்த இரண்டு படங்களிலும் இளையராஜாவும் கவுண்டரும் முழு திறமையைக் காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருபபார்கள். மணிரத்னத்தின் ‘பகல்நிலவு‘, ‘இதயக்கோயில்‘, ஷங்கரின் ‘ஜென்டில்மேன்‘, ‘இந்தியன்‘ படங்களின் காமெடி இன்றைக்கும் ‘வைரலா‘கிக் கொண்டிருக்கிறது.</div><div><br></div><div>பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் தங்களுடைய ஆரம்ப காலப் படங்களில் கவுண்டமணியைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்தப் பிறகு கவுண்டமணியை தவிர்க்கவே செய்திருக்கிறார்கள்.</div><div><br></div><div>இதற்கு, படத்தின் கதைக்கு முக்கியத்துவம் தராமல் தன் பாணியிலேயே இவர் நடிப்பது காரணமாக இருக்கலாம். ஆனால் நடிகர்கள் ராமராஜன், சத்யராஜ், அர்ஜூன் ஆகியோர் தொடர்ந்து கவுண்டமணியைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.</div><div><br></div><div>தன்னைப் பார்க்க வேண்டும் என்றால், ரசிகர்கள் தியேட்டருக்குத்தான் வர வேண்டும் என்பதில் கவுண்ட மணி எப்பவும் உறுதியாக இருந்திருக்கிறார். அதனால்தான் மீடியாவில் பேட்டி கொடுப்பதையோ தலைகாட்டுவதையோ அவர் விரும்பவில்லை. நட்சத்திர கலை நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்துகொண்டதில்லை. இந்த விஷயத்தில் இவர் பாணியைத்தான் தல அஜித் இப்போது பின்பற்றி வருகிறார்.</div><div><br></div><div>கவுண்டமணி நகைச்சுவை என்ற பெயரில் சக மனிதர்களின் உருவத்தை கேலி செய்வதையும், பெண்களை இழிவுப்படுத்துவதையும் இங்கே குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். ஆனால் கவுண்டமணி என்ற மகா கலைஞனை பயன்படுத்திக் கொள்ள தமிழ்ச் சினிமா தவறிவிட்டது என்றே சொல்லவேண்டும். இயக்குநர் வி.சேகரின் ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்‘, ‘பொறந்த வீடா புகுந்த வீடா‘ போன்ற படங்களில் கவுண்டமணி ஆகச் சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதை நிரூபித்திருப்பார். </div><div><br></div><div>கேரளாவில் இப்படியொரு கலைஞன் பிறந்திருந்தால், அவர்கள் இவரை வெறும் காமெடி நடிகராக மட்டுமே பார்த்திருக்க மாட்டார்கள் என்பதை ஆதங்கத்துடன் இங்கே பதிவு செய்கிறேன்.</div><div><br></div><div>கவுண்டமணியின் பெரும்பாலான படங்களுக்கு வீரப்பன் என்பவர் டிராக் எழுதியிருப்பார். நிச்சயமாக கவுண்டமணியின் வெற்றியில் இவருக்கும் பெரும் பங்குண்டு. ‘உதயகீதம்’ படத்தில கவுண்டமணிக்கு மாமனார் கேரக்டரில் போலீஸாக வீரப்பன் நடித்திருப்பார். </div><div><br></div><div> -ஊ இஸ் த டிஸ்டபென்ஸ்? </div><div>-நான் ரொம்ப பிஸி</div><div>-காந்த கண்ணழகி</div><div>-அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா </div><div> -நாட்டுல இந்த தொழில் அதிபருங்க தொல்ல தாங்க முடியலப்பா </div><div> -அய்யோ ராமா! ராமா என்னை ஏன் இந்த மாதிரி கழிசடை பசங்களோட எல்லாம் சேர வைக்குற</div><div>-பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டா, லிவருக்கு ரொம்ப நல்லது</div><div>-இதை தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கி வச்சிட்டு பக்கத்துல உட்கார்ந்துடு. உனக்குப் பின்னால வர சந்ததிகள் அதைப் பாத்துத் தெரிஞ்சுக்கட்டும்.</div><div><br></div><div>இப்படி கவுண்டமணியின் பஞ்ச் டைலாக்குகளை சொல்லிக் கொண்டே போகலாம். </div><div><br></div><div>இந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்கள் கூட பஞ்ச் டைலாக்குகள் பேசி இருக்க மாட்டார்கள்.</div><div><br></div><div>கவுண்டமணியின் புகழ் பாடும் இந்தக் கட்டுரையை யாராவது அவரிடம் சென்று காட்டினால், </div><div>அவர் என்ன சொல்லுவார் தெரியுமா?</div><div><br></div><div>‘நாராயணா.. இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா சாமி!‘</div><div><br></div><div>Vetri</div>சாந்திபாபு http://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-19275910102470927392020-04-16T13:00:00.000+05:302020-04-16T13:00:38.622+05:30வேப்பிலை மஞ்சள் கோமியம் கிருமிநாசினியா?<div>வேப்பிலை, மஞ்சள், கோமியம், நாட்டு மாட்டுச் சாண கலவை கிருமிநாசினியா?<br></div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcDDARFW9_3F-iUY22iCzwSQKiooPkCLhgehP8VmU-kqqIPMQNjdPP4aMvxVbdH4BjFwOIKEd32pIYpKdNmyo1w8ra0XbKqUkWxa87QjmQ6U5YWHWKNuZ1uzdVDvMRpeE6pP9fhOS6Uhc/s1600/1587022229262731-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcDDARFW9_3F-iUY22iCzwSQKiooPkCLhgehP8VmU-kqqIPMQNjdPP4aMvxVbdH4BjFwOIKEd32pIYpKdNmyo1w8ra0XbKqUkWxa87QjmQ6U5YWHWKNuZ1uzdVDvMRpeE6pP9fhOS6Uhc/s1600/1587022229262731-0.png" width="400">
</a>
</div><div><br></div><div><br></div><div>தமிழ் உலகின் மூத்த மொழி. இலக்கியங்களில் செழித்த மொழி. கணிதத்தின் தரத்தையும் மிஞ்சும் திருக்குறளைத் தந்த மொழி. எத்தனை கலைகள், எத்தனை மர, கருங்கல், உலோக சிலைகள், வானுயர கோபுரங்களைக் கொண்ட கோயில்கள், என் முன்னோர்களின் அறிவையும் ஆற்றலையும் அங்குக் காணலாம். கோயில்கள் பல தொழில் நுட்பத்தின் கண்காட்சி. ஆனால் கோவிலைச் சரியாகப் பார்ப்பவர்கள் நம்மில் சிலர் தான். மஞ்சள் காமாலை போன்ற கொடிய நோய்களுக்கு மருந்து தந்து உலகைக் காத்த என் முன்னோர்களை நினைத்துப் பெருமையடைந்த நான், </div><div><br></div><div>"வேப்பிலை, மஞ்சள், கோமியம், நாட்டு மாட்டுச் சாணம் கலந்த கலவை ஒரு கிருமிநாசினி" என ஏன் மக்கள் பயன்படுத்துவதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. மூடநம்பிக்கையாகத்தான் இதனைப் பார்க்கின்றேன். </div><div><br></div><div>கிருமிநாசினிகள் பூஞ்சைகள், பாக்டீரியா மற்றும் வைரஸ்களைக் கொல்ல வல்லது. எப்படி இவற்றைக் கொல்கின்றது என்பதைப் பார்ப்போம்.</div><div><br></div><div>சில பாக்டீரியாக்கள் வெளிப் புறத்தில் ஒருவகையான சவ்வைக் கொண்டது. சில பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் வெளிப் புறத்தில் நல்ல தடிமனான சுவரைக் கொண்டது. வைரஸ் வெளிப்புறத்தில் பல புரத கட்டமைப்பைக் கொண்டது. </div><div><br></div><div>கோடி கோடியாகப் பாக்டீரியாக்கள் உள்ளன. கோடி கோடியாகப் பூஞ்சைகள் மற்றும் வைரஸ்களும் உள்ளன. இவை அனைத்தையும் கொல்ல வல்லமை படைத்தது </div><div>இந்த கிருமிநாசினிகள். கிருமிநாசினிகள் பல வகைகள் உள்ளது. உங்கள் வசதிக்காக இவற்றை இரண்டாகப் பிரித்து விளக்குகின்றேன். </div><div><br></div><div>ஒன்று சாராயத்தை அடிப்படையாகக் கொண்டது.. இரண்டு சோப்பை அடிப்படையாகக் கொண்டது.... இவை இரண்டிலும் OH-, H+, போன்ற அயினிகளை உமிழவல்ல பொருட்களை அல்லது குளோரின், அயோடின், புரோமின், அல்லது குளோரோகெசிடின் (chlorhexidine) போன்ற வேதிப்பொருட்களில் ஒன்றே அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவையே இருக்கும். </div><div><br></div><div>இவை பூஞ்சைகள், பாக்டீரியா மற்றும் வைரஸ்களின் வெளிப்புற மற்றும் உட்புற அமைப்புக்களை ஒரு நிமிடத்தில் குலைக்கவல்லது. இந்த வேதிப்பொருட்களால் உருக்குலைக்கப்பட்ட நுண்ணுயிரிகளால் உயிர்வாழமுடியாது. காரணம் இந்த நுண்ணுயிரிகளில் உள்ள புரதம், கொழுப்பு மற்றும் மரபணுக்களை இந்த வேதிப்பொருட்கள் சிதைக்கின்றன. நம் கைகளில் மேல் உள்ளது தோல். இந்த தோலின் மேல் அடுக்கு இறந்த செற்களின் தொகுப்பு. எனவே இந்த வேதிப் பொருட்களால் நமக்குப் பாதிப்பில்லை. இவை நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.</div><div><br></div><div>வேப்பிலை, மஞ்சள், கோமியம், நாட்டு மாட்டுச் சாணம் கலந்த கலவை ஒரு கிருமிநாசினி இல்லை. இதனைப் பயன்படுத்துவதால் பயன் எதுவும் இல்லை. கரோனாவைரஸ் பரவிவரும் இந்த வேளையில் இதனை நம்பி உயிரைப் பணயம் வைக்கக்கூடாது.</div><div><br></div><div>மாறாக மாட்டுச் சாணம் டெட்டனஸ் என்ற நோயை உண்டுபண்ணும் பக்டிரியாவின் இருப்பிடம். இதனை கையால் தொடுவதையே அபாயம் என்பதை உணரவேண்டும். </div><div><br></div><div>ஆனால் நுண்ணுயிரியால் படித்தவர்களில் பலரும் கூட மாட்டுச் சாணத்தைக் கிருமிநாசினி என வாதாடுவதைப் பார்த்திருக்கிறேன். என்னத்த சொல்ல... படித்த மற்றும் நிரூபிக்கப்பட்ட உண்மைகளைவிட இந்த வகை மூடநம்பிக்கைகளைப் படித்த அறிவாளிகளும் நம்புகின்றனர். </div><div><br></div><div>மாட்டுச் சாணத்தில் கோடான கோடி பூஞ்சைகள், பாக்டீரியா மற்றும் வைரஸ்களும் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து உங்களைக் காப்பாற்றாது. நிச்சயம் உங்களுக்குப் பல தொல்லைகளைத்தான் தரும். </div><div><br></div><div>தெளிந்த தமிழ் சமுதாயத்தில் இப்படி ஒரு மூடநம்பிக்கையை எந்த கயவர்கள் எற்றிவிட்டார்கள் எனத் தெரியவில்லை. நம்மை வாழவைக்க இதனை அவர்கள் செய்யவில்லை.. நம்மை அழிக்கவே இந்த மூடநம்பிக்கையை நம்மிடம் ஏற்றியுள்ளார்கள் அந்த அற்பர்கள்.</div><div><br></div><div>மேலும் மஞ்சள் மற்றும் வேப்பிலையில் கிருமிநாசினிகளின் பண்பு சற்றுள்ளது என்பதில் ஐயமில்லை. ஆனால். இதனை வைத்து கை கழுவினால் அனைத்து நுண்ணுயிரிகளும் அழிக்கப்படுமா? எனப் பார்ப்போமா?</div><div><br></div><div>மஞ்சளில் கர்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருளும்; வேப்பிலையில் அசாடைரடின் (Azadirachtin) என்ற வேதிப்பொருளும் </div><div> கிருமிநாசினிகளின் பண்பு சற்றுள்ளது என்பது உண்மை. இவை இரண்டும் அனைத்து நுண்ணுயிரிகளையும் அழிக்கும் வல்லமை படைத்ததா என்றால் இல்லை என்பது என் பதில்.</div><div><br></div><div>சில பாட்டிரியாக்களையும் ஒரு சில பூஞ்சைகளையும் தான் இந்த அசாடைரடின் மற்றும் கர்குமின்-களால் அழிக்கமுடியும். பெரும்பாலான வைரஸ்களில் இந்த பொருட்களின் ஆற்றல் அறியப்படவில்லை. நான் சொல்லுவது என்னவென்றால் மிகச் சில நுண்ணுயிரிகளை மட்டுமே இந்த பொருட்களால் அழிக்கமுடியும். அனைத்து நுண்ணுயிரிகளையும் இதனால் அழிக்கமுடியாது. மேலும் இந்த பொருட்கள் நுண்ணுயிரிகளை அழிக்க அதிக நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. ஒரு நிமிடத்தில் அத்தனை நுண்ணுயிரிகளையும் அழிக்கவேண்டும். ஒரு முறை கை கழுவ அதிக நேரம் எடுத்துக் கொள்ள முடியாது. விரைவாகச் செயல்படும் பொருட்களையே கிருமிநாசினிகளாகப் பயன் படுத்தமுடியும். </div><div><br></div><div> மஞ்சளில் உள்ள கர்குமின் புற்றுநோய்க்கான நல்ல மருந்து. வேப்பிலையில் உள்ள அசாடைரடின் ஒரு சிறந்த பூச்சிக் கொல்லி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இவை நல்ல கிருமிநாசினிகள் என்பது உண்மையில்லை.</div><div><br></div><div>வேப்பிலை ஒரு சிறந்த பூச்சிக் கொல்லி எனத் தூத்துக்குடியைச் சார்ந்த ஒருவருக்குத் தெரிய, அவர் வேப்பிலையை நிரைய பறித்து பின் அரைத்து ஒரு பெரிய சொம்பு நிறையக் குடிக்க, அவர் உயிர் உடலைவிட்டுப் பிரிந்தது.. வேப்பிலை நல்லது தான். அதைச் சரியாகத் தெரிந்து பயன்படுத்தவேண்டும்.</div><div><br></div><div>- Dr. Sudhakar Sivasubramaniam </div><div>Professor at Biotechnology Department, </div><div>Manonmaniam Sundaranar University, Tamilnadu</div>சாந்திபாபு http://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-79451024496408333162020-04-01T09:45:00.000+05:302020-04-01T09:45:26.625+05:30இந்து மதம் எங்கே போகிறது ?<div>இந்து மதம் எங்கே போகிறது? </div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://lh3.googleusercontent.com/-0AcuD1qSAW4/XlCQUS_QPtI/AAAAAAAAAgQ/mFCs6EM6iPYg6FAYw9kuhzP-v_OjFRgQQCNcBGAsYHQ/s1600/1582338120003686-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://lh3.googleusercontent.com/-0AcuD1qSAW4/XlCQUS_QPtI/AAAAAAAAAgQ/mFCs6EM6iPYg6FAYw9kuhzP-v_OjFRgQQCNcBGAsYHQ/s1600/1582338120003686-0.png" width="400">
</a>
</div><br></div><div>“சுருதி ஸ்மிருதி இதிஹாஸ”, “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்”,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “மகா மஹோ பாத்யாய”, அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதியுள்ள “இந்து மதம் எங்கே போகிறது?","சடங்குகளின் கதை" இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. </div><div><br></div><div>இந்துமதம் இந்திய மதமா? தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள். </div><div><br></div><div> இந்து மதம் என்பது பிராமண மதம். பிராமணர்கள் இந்தியர்கள் இல்லை. </div><div><br></div><div>இந்தியர்கள் இல்லாதவர்களின் மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை!</div><div><br></div><div>இந்துக்களின் நாடு, இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில் இருக்கின்றது? எந்த புராணத்தில் இருக்கின்றது? எந்த சட்டத்தில் இருக்கின்றது?</div><div><br></div><div>இந்து என்பது ஒரு பாரசீக சொல்லாகும். அதற்கு அதிகாரப் பொருள், திருடன், வழிப்பறிக் கொள்ளையன், கொள்ளையன் என்பதாகும்.</div><div>27.8.2010 அன்று தினத்தந்தியில் ஒரு செய்தி படிக்க நேர்ந்தது. மராட்டியம், அய்தராபாத் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த பல்வேறு குண்டு வெடிப்பு குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் பேசும்போது, நாட்டில் சமீபகாலமாக நடக்கும் பல்வேறு குண்டுவெடிப்புகளில் புதுவகையான காவிதீவிரவாதம் சம்பந்தப்பட்டுள்ளது. என்று உண்மையைப் பேசி இருக்கின்றார்.</div><div><br></div><div>உடனே சிவசேனா கட்சி எம்.பிக்கள் ரகளையில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது ஒரு கேள்வியை எழுப்பி இருக்கின்றனர். </div><div>அது என்ன என்றால் இந்துக்களின் நாட்டில் ஓர் இந்து எப்படி தீவிரவாதியாக இருக்க முடியும்.</div><div><br></div><div>இதைப் போலவே காஷ்மீர் பிரச்சினை விவாதம் வரும்போது, முரளி மனோகர் ஜோஷி சிதம்பரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு அவரும் ஒரு கேள்வி கேட்டு இருக்கின்றார். </div><div><br></div><div>அது என்ன என்றால்,காவி என்பது அமைதியின் சின்னம். அதைத் தீவிரவாதத்துடன் ஒப்பிட முடியாது. இதுபோன்ற வார்த்தையைப் பயன்படுத்தினால், அதற்கேற்ற எதிர்விளைவுகள் ஏற்படும். பிறகு ஏன் அப்படிக் கூறவேண்டும்?என்று மிரட்டும் தொனியில் கேட்டு இருக்கின்றார். </div><div><br></div><div>இதற்கு மேலும் அவர்களை வளரவிட்டால் நாடு என்ன கெதிக்கு ஆளாகும் என்று, நாட்டின் வளர்ச்சியின் மேல் அக்கறை உள்ளவர்கள் சிந்திக்கத் துவங்கிவிட்டனர்.</div><div><br></div><div>இந்த போலி மதவாதிகளின் பொய்த்திரையை கிழிக்கும் காலம் வந்துவிட்டது. பல்வேறு மதத்தை, மொழியை, இனத்தை, கலாச்சாரத்தை பின்பற்றக் கூடிய மக்களைக் கொண்டு பரந்து விரிந்து கிடக்கும் இந்திய நாட்டை, ஆரிய சாங்பரிவார் கும்பல் எதற்கு எடுத்தாலும் இந்துக்களின் நாடு, இந்துக்களின் நாடு என்கிறார்களே, </div><div><br></div><div>இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில் இருக்கின்றது? எந்த புராணத்தில் இருக்கின்றது? எந்த சட்டத்தில் இருக்கின்றது?</div><div><br></div><div>முதலில் இந்து என்ற மதம் உண்டா?</div><div><br></div><div>இந்தக் கேள்விக்கு காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேரேந்திர சரஸ்வதி அவர்கள் எழுதிய தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தில் 125,126 ஆகிய பக்கங்களில் என்ன கூறியிருக்கின்றார் என்றால், </div><div><br></div><div>இந்து என்பது நமது பூர்வீகப் பெயரல்ல. வைதீக மதம், சனாதன மதம், என்றெல்லாம் சொல்கிறோமே அவைதான் பெயரா என்றால் அதுவுமில்லை. </div><div><br></div><div>நமது ஆதார நூல்களைப் பார்க்கும் போது இந்த மதத்திற்கு எந்தப் பெயருமே குறிப்பிடப்படவில்லை.</div><div><br></div><div>இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று சங்கராச்சாரியே சொல்லிவிட்டார்.</div><div><br></div><div>சங்கராச்சாரியைப் போலவே இந்துமதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று உயர்நீதிமன்ற தீர்ப்பே இருக்கின்றது.</div><div><br></div><div>சென்னை உயர்நீதி மன்றத்தில் மைக்கேல் X எதிர் வெங்கடேஸ்வரன் (65 லிகீ 108) என்ற வழக்கில் நீதிபதி பி.வி. ராஜமன்னார் ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கின்றார்.</div><div><br></div><div>அந்தத் தீர்ப்பில், இந்து மதம் என்று (நான்) குறிப்பிடும்போது அச்சொல்லின் பொருள் தெளிவற்ற ஒன்றாக இருப்பதை உண்மையில் உணர்ந்தே இருக்கின்றேன். </div><div><br></div><div>நாம் புரிந்துகொண்டுள்ள பொருளில் இந்து மதம் ஒரு மதமே அல்ல. அது (அச் சொல்) இந்தியாவில் தோன்றியதுமன்று. </div><div><br></div><div>இந்துக்கள் தங்கள் மதத்திற்கு அப்பெயரை எப்பொழுதும் பயன்படுத்தியதுமில்லை. ஆனால் அச்சொல் பயன்பாட்டில் நிலைத்துவிட்டது. </div><div><br></div><div>மதம் மற்றும் தத்துவத்தை உள்ளடக்கிய ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையைக் குறிப்பிட அச்சொல் வசதியின் காரணமாகப் பயன்பாட்டில் வைத்துக்கொள்ளப் பட்டிருக்கின்றது என்று உயர்நீதிமன்றமே தீர்ப்புச் சொல்லிவிட்டது இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று. </div><div><br></div><div>இந்தத் தகவலை புத்தர் ஓர் இந்துவா? என்ற புத்தகத்தில் டாக்டர் சுரேந்திர அஜ்நாத் என்பவர் மேற்கோளுக்காக கையாண்டுள்ளார்.</div><div><br></div><div>அதே புத்தகத்தில் பக்கம் 11 இல் இந்து என்ற சொல்லுக்கான பொருளையும், இந்துத்வாவாதிகள் அதைப் பயன்படுத்திய விதத்தையும் விவரித்துள்ளார்.</div><div><br></div><div>இந்து என்றால் திருடன் என்று சொன்னால்; நாக்கை அறுப்பேன் மூக்கை அறுப்பேன் என்று சொல்லும் வேதாந்திகள் முக்கியமாக இதைக் கவனிக்க வேண்டும். அந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள சங்கதி இதுதான்.</div><div><br></div><div>இந்து என்பது ஒரு பாரசீக சொல்லாகும். அதற்கு அதிகாரப் பொருள், திருடன், வழிப்பறிக் கொள்ளையன், கொள்ளையன் என்பதாகும்.</div><div><br></div><div>19ஆம் நூற்றாண்டின் இந்துத் தலைவர்கள், குறிப்பாக ஆரிய சமாஜத்தினர் இச்சொல்லைப் பயன்படுத்தவில்லை. </div><div><br></div><div>இந்த நூற்றாண்டின் தொடக்கப் பத்தாண்டுகளில் கூட, போரில் வென்றவன் தோற்றவரை இழித்துப் பழிப்பது போல் அமைந்துள்ளதாகக் கருதியதால், பயன்பாட்டில் இச்சொல் அவர்களால் தவிர்க்கப்பட்டது. </div><div><br></div><div>அதற்குப் பதிலாக ஆரியர் என்ற சொல்லையே அவர்கள் பயன்படுத்தினர். ஹிந்தி என்ற சொல்லையே கூட அவர்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்தனர். </div><div><br></div><div>ஆரிய சமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த் ஹிந்தி என்பதற்குப் பதிலாக ஆரிய மொழி என்ற சொல்லையே பயன்படுத்தினார். </div><div><br></div><div>ஆனால் இன்று கண்மூடித்தனமான இந்து மயமாக்கல் நடைபெற்று வருவதால் இச்சொல்லைப் பயன்படுத்த எவரொருவரும் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. என்கிறார் சுரேந்திர அஜ்நாத். </div><div><br></div><div>பாருங்கள் இந்து என்ற சொல்லின் பொருள் அசிங்கமாக இருப்பதால் அந்தச் சொல்லையே பயன்படுத்தாமல் தவிர்த்திருக்கின்றார்கள். </div><div><br></div><div>நியாயப்படி இந்து என்ற சொல் திருடர்களையும், வழிப்பறி செய்பவர்களையும் குறிக்கின்ற சொல். </div><div><br></div><div>ஆனால் சட்டப்படி அந்தச் சொல் யாரை யாரை எல்லாம் குறிக்கின்றது?</div><div><br></div><div>இந்திய அரசியல் சட்டம் 25 ஆவது விதி 2 ஆவது பிரிவு, விளக்கம் 2 இல் இந்து என்ற சொல் எவற்றைக் குறிப்பதாக சொல்லப்பட்டிருப்பதாவது;</div><div><br></div><div>விளக்கம் 2. (2) ஆவது கூறின் (6) கிளைக்கூறின் படி உள்ள இந்து என்ற சொல், சீக்கிய, ஜைன, புத்த மதங்களைச் சார்ந்தவர்களையும் குறிப்பதோடு இந்துக் கோயில், மதச்சார்பற்ற இடங்கள் என்பதும், அத்தகைய சீக்கிய, ஜைன, புத்த சமயக் கோயில்களையும் மற்ற மதச்சார்பற்ற இடங்களையும் குறிப்பதாகும்</div><div><br></div><div>இந்த சட்ட விளக்கத்தில் இந்து என்ற சொல் சீக்கிய, ஜைன, புத்த மதங்களைச் சார்ந்தவர்களையும் என்று வரும் வரிகளைக் கொஞ்சம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். </div><div><br></div><div>நல்லவேளை இந்த மூன்று மதங்களையும் உருவாக்கியவர்கள் முன்னமே செத்துப்போய்விட்டார்கள்.</div><div><br></div><div>இந்து மதம் என்றால் இதுதான் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூட தெளிவாக இல்லை. </div><div><br></div><div>இருக்கும் விளக்கத்தில்கூட சீக்கிய, ஜைன, மற்ற மதங்கள் எல்லாம் அரசமைப்புச் சட்டம் எழுதுவதற்கு முன்பு இருந்ததைப்போல தனித் தனியே பிரிந்து விட்டால், இந்து மதத்தில் என்ன இருக்கும்? </div><div><br></div><div>வெறும் சைபர்தானே இருக்கும்?</div><div><br></div><div>இந்த இலட்சணத்தில் இந்து நாடு, இந்து நாடு என்கிறார்களே காவிகள். இந்த மதமே இல்லை பிறகு எங்கே இந்து நாடு?</div><div><br></div><div>இதை எல்லாம் கொஞ்சம் ஆழமாக யோசிக்கும் போது ஓர் அய்யம் இயல்பாகவே எழுகிறது. அந்த அய்யம் என்ன என்றால், இந்து மதம் இந்தியாவில் பெரும்பான்மை மதமா? சிறுபான்மை மதமா? என்பதுதான்.</div><div><br></div><div>இந்த அய்யம் எழக்காரணமும் உள்ளது. இந்து என்ற வார்த்தை இந்திய வார்த்தை அல்ல, இந்து என்று ஒரு தனி மதம் இல்லவே இல்லை. </div><div><br></div><div>அப்படி இவர்கள் கூறும் மதக் கூட்டணியும் ஒன்றுக் கொன்று முரண்பாடானது. இவையும் போக அய்யத்திற்கு இன்னும் ஒரு காரணமும் உள்ளது. </div><div><br></div><div>அது என்ன என்றால், இந்து மதத்தின் முதன்மையாமான அம்சம் ஜாதி முறை. நான்கு வர்ணங்களை நான்தான் படைத்தேன் ஆனால் அவற்றை நான் நினைத்தால்கூட மாற்ற முடியாது என்று கீதையில் கண்ணன் சொல்கிறான. </div><div><br></div><div>இந்த நான்கு வருணங்களில் அதாவது பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என்ற நான்கு வருணங்களில் உயர்வானவன் பிராமணன். </div><div><br></div><div>மற்ற மூன்று வருணத்தாரும் அவனுக்குக் கீழானவர்கள். அவனுக்கு அடிமைத் தொழில் செய்பவர்கள் என்கிறது இந்து மதம், இதுதான் கீதை, இதுதான் மனுதர்ம சட்டம்.</div><div><br></div><div>இதுவரை இந்து மதத்தை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்களின் முடிவு கீதையும் மனுதர்ம சட்டமும் பிராமணர்களின் உயர்வுக்காகவே படைக்கப்பட்டவை; இந்து மதம் என்று சொல்லப்பட்டது கூட பிராமணர்களால் படைக்கப்பட்டது என்பதாகும்.</div><div><br></div><div>இந்திய வரலாற்றுப்படி இந்து மதத்தில் மிக உயர்வாகக் கருதப்படும் பிராமணர்கள் யார் என்றால், மத்திய ஆசியாவிலிருந்து கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். எல்லா வரலாற்று ஆசிரியர்களும் இக்கூற்றை ஒப்புக் கொண்டுள்ளார்கள்.</div><div><br></div><div>ஆக, நமக்கு அய்யம் வரக் காரணம் என்னவென்றால், இந்தியாவில் பிறக்காத, இந்திய நாடும் அல்லாத, நாடோடிகளாய் இந்தியாவிற்குப் பஞ்சம் பிழைக்க வந்த பிராமணர்கள், இந்தியாவில் உள்ள மதத்தில் எப்படி உயர்ந்தவர்களாக இருக்க முடியும்? </div><div><br></div><div>இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த மக்களை இழிவுபடுத்தி இந்தியர் அல்லாதவர்களை உயர்வு படுத்தும் ஒரு மதம் எப்படி இந்திய மதமாக இருக்க முடியும்? </div><div><br></div><div>அன்னியர்களுடைய மதம் இந்தியாவில் எப்படி பெரும்பான்மை மதமாக இருக்க முடியும்?</div><div><br></div><div>இவற்றுக்கெல்லாம் சங்பரிவார்கள் எப்படி பதில் சொல்ல முடியும்? </div><div><br></div><div>இந்துத் தீவிரவாதம் என்று சிதம்பரம் சொல்லி விட்டாராம் அதற்காக குதிக்கிறார்கள். நாம் ஒன்று கேட்கலாம்_முஸ்லிம் காரன் மதானி குண்டு வைத்தால் அது முஸ்லீம் தீவிர வாதம், சரி, பிரக்யாசிங் குண்டு வைத்தால் அது எந்தத் தீவிரவாதம். தயவு செய்து சொல்லுங்கள்.</div><div><br></div><div>காவி புனிதமானதாம்! யாருக்கு புனிதமானது? </div><div><br></div><div>கோவிலுக்குள்ளேயே சங்கரராமனை கொலை செய்த சங்கராச்சாரி உட்பட கொலைகாரர்களுக்கும் நடிகை ஒருவரோடு உல்லாசமாய் இருந்து மாட்டிக் கொண்டதால் நாட்டு மக்களால் செருப்படிபட்ட நித்தியானந்தாக்களைப் போன்ற காமவெறியர்களுக்கும் தான் காவி புனிதமானது.</div><div><br></div><div>எதற்கு எடுத்தாலும் இந்துநாடு, இந்து நாடு என்கிறீர்களே இந்திய மக்களாகிய எங்களின் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.</div><div><br></div><div>ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தால் வெளியிடப்பட்ட ஸ்ரீமத் பகவத் கீதையில், அத்யாயம் 9, 32 ஆவது சுலோகமான,</div><div>பார்த்தா, கீழான பிறவியர்களாகிய பெண்பாலர், வைசியர், சூத்திரர் ஆகியவரும் என்னைச் சார்ந்திருந்து நிச்சுயமாகப் பரகதியடைகின்றனர் என்று சொல்லப்பட்ட சுலோகத்திற்கு சுவாமி சித்பவானந்தர் சொல்லியிருக்கின்ற வியாக்கியானமாவது, மனபரிபாகத்திற்கு ஏற்றாற்போல் பிறவி மேலானது அல்லது கீழானது ஆகிறது. </div><div><br></div><div>ஈண்டு இயம்பப்பட்ட மூவரும் கீழான பிறவியரே. எக்குலத்தில் பிறந்தவராயினும், இயல்பாக மாதர் உறுதியான உள்ளம் உடையவர் அல்லர். </div><div><br></div><div>பேதைமையே பெண்டிரது இயல்பு. திண்மை வாய்ந்திருக்கும் தையலர் மிகக் குறைவு. அத்தகைய சிறுபான்மையர் விதிக்கு விலக்கானவர் என்றே சொல்லாம். </div><div><br></div><div>ஆகப் பொதுவாக பெண்மக்களைக் கீழான பிறவியர் என்பது இயற்கைக்கு ஒத்ததொரு சொல்லாகும் இழிச்சொல் அல்ல.</div><div><br></div><div>இவ்வுலக வாழ்க்கைக்குப் பயன்படுகிற பொருளைச் சேகரிப்பதிலேயே மனதை வைப்பவர்கள் வைசியர்கள். </div><div><br></div><div>அருளை நாடாது, பொருளை நாடுதலே அவர்களது போக்கு. </div><div><br></div><div>ஜடப் பொருளை எண்ணுகின்றளவு ஜடப் புத்தியே அவர்களிடத்து வலுக்கிறது. </div><div><br></div><div>அத்தகைய பிரவிருத்தியை உடையவர்கள் எல்லாம் கீழான பிறவியை யுடையவர்களாகக் கருதப்படுகின்றனர்.</div><div>அதிலும் கீழ்ப்பட்டவர் சூத்திரர். ஏனென்றால் பிறரிடத்து அடிமைத் தொழில் செய்தல் ஒன்றுதான் அவர்களுக்கு இயலும். ஜீவனோபாயத்தின் பொருட்டுத் தம் வாழ்க்கையை யார் பிறரிடத்து ஒப்படைக்கின்றனரோ அவரே சூத்திரர். </div><div><br></div><div>இவ்வுலகம் ஒன்றை மட்டும் அறிந்து, அதைச் சார்ந்திருக்கும் அன்னவர் இறைவனைச் சார்கிறதில்லை என்று இருக்கின்றது. </div><div><br></div><div>உழைக்கும் மக்களாகிய, இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய எங்களை, இழிந்த பிறவிகள் என்று சொல்லும் இந்து மதம் எங்கள் மதமா? இதற்குப் பெயர்தான் புனிதமான மதமா?</div><div><br></div><div>ஆனால் இந்து மதம் இந்தியாவின் மதம், அது புனிதமானது என்று காட்டுவதன் மூலமும், கிறித்துவ, முஸ்லிம் அல்லாத பிற எல்லா மதமும் இந்து மதம் என்று காட்டுவதன் மூலமும், அன்னியப் பார்ப்பனர்கள் உயர்வானவர்கள் என்றும், அவர்களும் இந்தியர்கள் என்று காட்டும் மோசடிதானே இந்தத் தீவிர வாதம்?</div><div><br></div><div>இதைக் கண்டித்தது, இந்தப் போலி பொய்த்திரையைக் கிழித்து இவர்கள் யார் என்று இந்தியர்களுக்குத் தெரிவிப்பது தவறா?</div><div><br></div><div>இந்து மதம் என்பது பிராமண மதம். பிராமணர்கள் இந்தியர்கள் இல்லை. இந்தியர்கள் இல்லாதவர்களின் மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! - </div><div><br></div><div>ஆக்கம்:- திருப்பூர் நா. சுதன்ராஜ். கட்டுரை "விடுதலை" 04-09-2010 நாளிதழில் பிரசுரமானது.</div>கலைநிதிhttp://www.blogger.com/profile/13405681200932123420noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-29486124621509898802020-03-21T09:45:00.001+05:302020-03-21T09:45:16.090+05:30கோவிட்-19 என்னும் கொடுந்துகள்!!<div>கோவிட்-19 என்னும் கொடுந்துகள்!!</div><div><br></div><div>அவ்வப்போது சொல்லமுடியாத வேதனைகளை மனிதகுலத்துக்குக் கொடுத்துவிட்டு தன்னைவிட இப்பேரண்டத்தில் மிக்காரும் தக்காரும் இலர் என்று காட்டிவிடுகிறது இப்பேரியற்கை. கொரானாவைரஸ் துகள்களால் பல்லாயிரம் உயிர்கள் அரவமேயின்றிக் கொலையுண்டு போயிருக்கின்றன. முகநூலுக்கு முழுக்குப்போட்டுவிட விரும்பினேன். இன்னமும் உயிருடன் இருப்பதாலும், அறிவியலைப் படித்துக்கொண்டிருப்பவனென்பதாலும், கொரானாவின் கோரத்தை என் சிற்றறிவுக்கு எட்டியவற்றை விளக்கிவிட முயல்கிறேன். </div><div><br></div><div>பொதுவாக, மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரல் நோய்களை உண்டாக்கவல்ல, பன்றிகள், ஒட்டகங்கள், வௌவால்கள் மற்றும் பூனைகள் போன்ற விலங்கினங்களில் பரவலாகக் காணப்படும் வைரஸ் நுண்துகள்களை கொரானாவைரஸ்கள் என்றழைக்கிறார்கள். விலங்கினங்களின் குருதியில் வளர்ந்து பல்கிப்பெருகும் இந்த கொரானாவைரஸ்கள் சில சமயங்களில் மனிதனின் மூச்சுக்குழாயிலும், நுரையீரலிலும் தொற்றிக்கொண்டுவிடுகின்றன. அவ்வாறு கொரானா வகை வைரஸ்கள் தொற்றுவதால், சளி, இருமல் உள்ளிட்ட சாதாரண சுவாசநோய்கள் மனிதனுக்கு உண்டாகின்றன என்றுதான் மருத்துவ உலகம் கடந்த 2002 ஆண்டுவரை நம்பிக்கொண்டிருந்தது. </div><div><br></div><div>ஆனால், 2003 இல் (சீனாவில்) வௌவால்களில் தோன்றிய வைரஸொன்று எப்படியோ, மனிதவுடலுக்குள் புகுந்து கொண்டு கடுமையான நுரையீரல் நோய்களை உண்டாக்கியதோடு, ஒட்டுவாரொட்டியாகப் பரவி நூற்றுக்கணக்கானவரை கொன்றொழித்தது. அதற்கு, சார்ஸ் (SARS-Cov-Severe Acute Respiratory Syndrome-Corona virus) வைரஸ் என்று பெயரிட்டதோடு, அது கொரானா குடும்பத்தைச் சார்ந்தது என்று ஆய்ந்து அறிந்துகொண்டபோதில் உலகமே விக்கித்துப்போனது. 'விடாது கறுப்பு' என்பது போல, 2012 ஆம் ஆண்டில் இதே குடும்பத்தைச் சார்ந்த இன்னொரு வைரஸ் ஐரோப்பிய கிழக்கத்திய நாடுகளில் உருவாகித் தொலைத்தது. அந்தவேளையில், வர்த்தகப்பயணமாக அந்நாடுகளுக்கு வந்த தென்கொரியப் பெருவணிகரொருவரைத் தொற்றிக்கொண்டு அவருடன் தென்கொரியா பயணித்தது. ஊர்திரும்பிய அவருக்கு வந்திருப்பது கொரானா வைரஸ்த்தொற்றுதான் என்று கண்டுபிடிப்பதற்குள், மருத்துவர், செவிலியர் தொடங்கி நாடு முழுவதும் பரவிவிட்டது. மெர்ஸ் (MERS- CoV- Middle East Respiratory Syndrome- Corona virus) கொரானா என்று பெயரிடப்பட்ட இந்த வைரஸைக் கண்டறிந்து அழிக்க தென்கொரிய நாடு கொடுத்த விலை நூற்றுக்கணக்கான மனிதவுயிர்கள்.</div><div><br></div><div>கடந்த டிசம்பர் 2019 இல், தெற்கு சீனாவின் வுஹாங் மாநகரத்தின் கடலுணவுச் சந்தையொன்றில் உருவானதாகக் கருதப்படும் இந்தப் புதுவகை (Novel) வைரஸும் கொரானா குடும்பத்தைச் சார்ந்தது என்று கடந்தகாலப் படிப்பினைகள் மூலமாக அறிந்திருந்தும் அதிதீவிர முயற்சிகள் எடுக்காமல் விட்டதால் இலட்சக்கணக்கான மக்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாயினர். முன்னெடுப்பு நடவடிக்கைகளை விட வேகமாக வைரஸ் பரவியதால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரிட்டது. எனினும், முழுமுயற்சிகள் எடுக்கப்பட்டு நிலைமை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தபட்டது. உலகமே அரண்டுபோய், ஆராய்ச்சிகளை வேகவேகமாக முடுக்கிவிட்டுக்கொண்டிருந்தன. இதுவரைக்கும் நாற்பது ஆராய்ச்சிக்கட்டுரைகள், சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து Science, Nature உள்ளிட்ட அறிவியல் இதழ்களில் வெளிவந்துள்ளன. </div><div><br></div><div>ஆனால், நாமோ, வைரஸைக் கட்டுப்படுத்த வாட்சாப் வாயர்களின் புரளிகளை, பஞ்சாங்கத்தில் அன்றே வைரஸ் வருமென்று கணித்திருக்கிறாரென்று புழுகிணிகள் அவிழ்த்து விடுவதை வாய்பிளக்கக் கேட்டுக்கொண்டும், உடலெங்கும் பசுஞ்சாணம் பூசிக்கொள்ள, கோமியம் குடிக்கச்சொல்லும் பக்தப்பதர்களின் பரிந்துரைகளைப் பரந்து உலகெலாம் பரப்பி நம் அறிவியலறிவை உலகமே காறித்துப்பினாலும் கவலையின்றிப் பரப்பிக்கொண்டிருக்கிறோம். வைரஸ் துகளின் உள்ளும் புறமும் இருக்கும் புரதங்கள் யாவை? அவற்றை எவ்விதம், எவ்வகை மருந்தைச் செலுத்தினால் துகளைச்சிதைக்கலாம்? கொரானா குடும்பத்தில் இருக்கும் மற்ற வைரஸ்களுடன் இந்த கோவிட்-19 வைரஸின் மரபணு மட்டும் எவ்வாறு மாறுபடுகிறது என்றெல்லாம் சிந்திக்கக் கற்றுக்கொடுப்பதை விடுத்து, பவளமல்லிச்சாற்றுக்கு வைரஸ் கட்டுப்படுமென்று ஆருடம்கூறும் டுபாக்கூர் ஹீலர்களை வளர்த்துவிடுகின்றன நம்மூர் ஊடகங்கள். இப்போது, தம்முடைய பப்பெல்லாம் கொரானாவிடம் வேகாது என்று தெரிந்தவுடன், சந்துபொந்தெல்லாம் ஓடியொளியச் சொல்கின்றன.</div><div><br></div><div>உலகச்சுகாதார நிறுவனம் (WHO) என்றுமில்லாதவாறு, அவசரநிலையை அறிவித்திருக்கிறது. 2012 இல் </div><div>MERS-CoV தொற்றினால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட தென்கொரியா, COVID-19 என்னும் வைரஸ் பேரரக்கன் ஆயிரக்கணக்கானோரைத் தாக்கியபோதும், "கேட்டினும் உண்டோர் உறுதி" என்று உறுதியுடன் அதிவிரைவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, தம் மக்களை வெகுவிரைவாக பேரழிவிலிருந்துக்காத்தது. </div><div><br></div><div>சரி இப்போது நாம் என்ன செய்யலாம்?</div><div><br></div><div>கோவிட்-19 வைரஸ் பற்றியும், அதன் பண்புகள் மற்றும், மேலும் பரவாமல் தடுக்க எடுக்கவேண்டிய முன்னெடுப்புகள் பற்றியும் நானறிந்தவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். </div><div><br></div><div>கோவிட்-19 வைரஸ் என்பதொரு உயிரற்ற மிக நுண்ணிய துகளாகும். உருண்டை வடிவில் இருக்கும் இந்தத்துகள்களின் விட்டம் 0.1 முதல் 0.2 மைக்ரான். அதாவது, புகையில் இருக்கும் கரித்துகள்களின் விட்டத்தை விட நூறுமடங்கும், ஏனைய நுண்ணுயிரிகளில் ஒன்றான பாக்டீரியாவின் விட்டத்தைவிட பத்துமடங்கு சிறியது என்பதால், சாதாரண முகவுறை அணிவதால் வைரஸ் பரவலையோ, தொற்றையோத் தடுக்கமுடியாது. உலக உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அமைப்பு (FDA) பரிந்துரைக்கும் N-95 வகை முகவுறைகள் மட்டுமே, கோவிட்-19 வைரஸ்களை வடிகட்டவல்லவை.</div><div><br></div><div>நம்முடைய உடல்மீதோ, அணிந்திருக்கும் துணிகள் மீதோ வந்துசேரும் கோவிட்-19 வைரஸ்கள் குறைந்தது ஆறுமணி நேரமாவது அவ்விடத்தில் சிதைபடாமல் இருக்கும். ஆனால், மரம், நெகிழி அல்லது மாழைப்பரப்புகளின் மீது மூன்று நாள்கள் வரை சிதைபடுவதில்லை. அதனால்தான், வீட்டுக்குள் இருக்கும்போதும் சோப்புப்போட்டுக் கைகழுவச் சொல்கிறார்கள். </div><div><br></div><div>ஏன் சோப்புப்போட்டுக் கைகழுவ வேண்டும்? </div><div><br></div><div>கோவிட்-19 வைரஸின் மேற்சுவரானது, கொழுப்பு அமிலங்களால் ஆனது என்பதால், சோப்பிலிருக்கும் கொழுப்பு, மேற்சுவரைக் கரைத்து வைரஸ் துகளை உடைத்துச்சிதைத்துவிடும். ஆகவே, அடிக்கடி சோப்புப்போட்டுக் கழுவும்போது கையிடுக்குகளில் பரவியிருக்கும் வைரஸ் துகள்கள் சிதைந்துவிடும்.</div><div><br></div><div>ஏன் அடிக்கடி தண்ணீர் குடிக்கவேண்டும்?</div><div><br></div><div>கோவிட்-19 வைரஸ்கள் நேரடியாக நுரையீரலைத் தாக்குபவை என்பதால், கால் மணிக்கொருமுறை (வாய்/தொண்டை வறண்டுபோகாமல்) நீர்ம உணவு அல்லது தண்ணீர் எடுத்துக்கொள்ளும்போது, அவை நுரையீரலுக்கு பதிலாக வயிற்றுக்குச்செல்லும். உணவுச்செரிமானத்திற்காக அங்கே ஊறும் அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலம், கோவிட்-19 வைரஸ்களைச் சிதைத்தழிக்கும். </div><div><br></div><div>ஏன் வீட்டுக்குள் தனித்திருப்பது நல்லது. </div><div><br></div><div>இதுவரை, பெரும்பாலும் சுவாசநோய்களால் அவதியுறும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்தாம் கோவிட்-19 வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட சிறுவர்-சிறுமியர் மற்றும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஆகவே, பேரச்சம் தேவையில்லை. அதே சமயத்தில், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் நலன்கருதி தற்காலிக சமூக விலக்கம் செய்துகொள்வது நமக்கும் நல்லது. நம் சுற்றத்துக்கும் நல்லது. </div><div><br></div><div>செ. அன்புச்செல்வன்</div><div>21/03/2020<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCb0c_eH2zOtGW9klyOc-j9ui7ylFy7I0WbAAsfF1v-RY_S_82225UKyqoUmzBpL-qtr-RpgfRrJBkBqGJGMcVTmKkp16kUC9huBJfPBi5crG9BFZg_tKYIhGmGvXOpYHzi0gb9oDCW5o/s1600/1584764102663001-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCb0c_eH2zOtGW9klyOc-j9ui7ylFy7I0WbAAsfF1v-RY_S_82225UKyqoUmzBpL-qtr-RpgfRrJBkBqGJGMcVTmKkp16kUC9huBJfPBi5crG9BFZg_tKYIhGmGvXOpYHzi0gb9oDCW5o/s1600/1584764102663001-0.png" width="400">
</a>
</div><br></div>சாந்திபாபு http://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-71606743238051769892020-02-22T07:50:00.000+05:302020-02-22T07:50:02.656+05:30ஆன்மீக அறிவியல்<div>இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்த உலகில் உள்ள அனைத்து போலி அறிவியல் தத்துவங்களையும் உங்களின் கண்முன் நிறுத்துவது அல்ல. மாறாக, போலி அறிவியலின் அடிப்படைகளை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு உண்மையான அறிவியல் எது? போலி எது? என்று அடையாளம் காணுவதே ஆகும்.<br></div><div><br></div><div>சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உள்ள இடத்தில்தான் பூமியின் காந்தப் புல மையம் உள்ளது என்று ஆரம்பித்து அம்மைநோயின்போது வேப்பிலைகள் கட்டுவது அது ஒரு ‘ஆண்டி-பயாடிக்’ என்ற அறிவியல் உண்மையின் காரணமாகத்தான் என்பதுவரை உங்களிடம் யாரேனும் ஆன்மீக அறிவியல் பாடம் எடுத்திருக்கக்கூடும்.</div><div>இவற்றையெல்லாம் அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள், முன்னோர்கள் முட்டாள்களில்லை என்றும் புலம்பியிருக்கக்கூடும்.</div><div><br></div><div>மேற்கண்ட கருத்துகளை நீங்கள் நம்பி இருந்தால் நீங்களும் ‘போலி அறிவியலுக்கு’ப் பலி ஆனவர்தான். </div><div><br></div><div>பூமி கோள வடிவிலானது, ஒரு கோளத்தின் காந்த மையம் அதன் நடுவில்தான் இருக்க முடியுமே தவிர அதன் வெளிப் பரப்பில் இருக்க முடியாது. வேப்பிலை ‘ஆண்டிபயாடிக்’ என்றும், அதனால்தான் அம்மை நோயின்போது அதனைக் கட்டுவதாகக் கூறி வரும் நண்பர்களுக்கு ‘அம்மை நோய்’ வைரசினால் ஏற்படும் நோய் என்பதும், ‘ஆண்டிபயாடிக்’ என்பது பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்து என்பதும் வைரசும் பாக்டீரியாவும் வேறு வேறு என்பதும் தெரியாது.</div><div><br></div><div>போலி அறிவியல் உருவாகக் காரணம் : நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் இடையேயான ‘சண்டை’ பல நூற்றாண்டுகால வரலாறு கொண்டது. கலிலியோ பூமி உருண்டை என்றபோது, மதவாதிகள் அவரைக் ‘குற்றவாளி’ என்றனர். மத நூல்கள் பூமி தட்டை என்று கூறுவதாகவும் கலிலியோ கடவுளுக்கு எதிராகப் பேசுவதாகவும் கூறி அவரைக் கொல்ல முனைந்தனர். டார்வின் உயிரி தோற்றக் கொள்கையை வெளியிட்டபோது, அது கடவுளுக்கு எதிரானது என்றும், கடவுள்தான் அனைத்து உயிரிகளையும் படைத்தார் என்றும் அவரை மதவாதிகள் சாடினர். ‘மரபியலின் தந்தை கிரிகர் மெண்டல்’ செய்த ஆய்வுகள் கடவுளின் படைப்பிற்கு எதிரானது என்று கூறி கிறிஸ்துவப் பாதிரியார்கள் அவரை இருட்டறையில் அடைத்தனர். பாரதத்தை மூடநம்பிக்கைகளின் தலைநகரம் என்றே நாம் கருதலாம். பாரம்பரியம், மரபு, கலாச்சாரம், மத நம்பிக்கைகளின் பெயரில் எதனை வேண்டுமானாலும் மக்களை நம்ப வைக்கலாம்.</div><div><br></div><div>மதத்தில் உள்ள கட்டுக் கதைகள் மிகுந்த கற்பனை வளம் கொண்டவை. அதன் கதைகளில் பூமியைக் கடத்திக் கொண்டு போய் பூமியில் உள்ள கடலிலிலேயே மறைத்து வைத்திருப்பார்கள். பகுத்தறிவும் அறிவியலும் வளர ஆரம்பித்த காலங்களில் முதலில் நமது மதவாதிகள் அறிவியலால் தீங்கு ஏற்படும் என்று பிரச்சாரம் செய்தனர். ஆனால் அறிவியல் வளர வளர அடிப்படைவாதிகளால் அறிவியலை முழுமையாக எதிர்க்க முடியவில்லை. மக்கள் அறிவியலைப் பின்பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். இதே நிலை தொடர்ந்தால் மதவாதிகளின் பிழைப்பில் மண் விழுந்துவிடும். என்ன செய்வது என்று சிந்தித்துத் திட்டம் போட்டவர்களின் கண்டுபிடிப்பே போலி அறிவியல் ஆகும். அறிவியலை எதிர்த்த நாட்கள் போய், இப்போது ஒவ்வொரு மதநிறுவனமும் எங்கள் மதம்தான் அறிவியல் பூர்வமானது என்று அடித்துக் கொள்ளும் நிலை வந்துவிட்டது.</div><div><br></div><div>இந்தப் போலி அறிவியலின் அடிப்படை எளிமையானது. அது வீழ்த்த இயலாத எதிரியை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். இதன்படி அறிவியலையும், நம்பிக்கைகளையும், கட்டுக்கதைகளையும், பாரம்பரிய மருத்துவ முறைகளையும் கோர்த்துவிடுவதுதான். இதன்படி மூடநம்பிக்கைகள் அனைத்தும் அறிவியல் பூர்வமானது என்று மக்கள் கருதுவார்கள். உதாரணமாக "இந்த Dark energy எனப்படும் ஆற்றலே தலயாய ஆற்றல் அதை எதனாலும் அளவிட இயலாது என்கிறது அறிவியல் அந்த ஆற்றலே நாம் சிவம் என்கிறோம்" இவ்வாறு வரலாறு உள்ள மனித கற்பிதங்களை இதுவரை தெரியாத அறிவியலுடன் முடிச்சுப்போடுவார்கள்.</div><div><br></div><div>இவ்வாறு மதத்தில் உள்ள ஒவ்வொரு மூடநம்பிக்கையின் பின்பும் ஒரு அறிவியல் உள்ளதாக கதை கிளப்பி விடப்படுகின்றது. தாலி கட்டுவது, தீ மிதிப்பது, மந்திரம் ஓதுவது, ஓமம் வளர்ப்பது, கோமியம் குடிப்பது, கோயில் சுற்றுவது, தோப்புக்கரணம் போடுவது போன்ற அனைத்தும் இன்று அறிவியல் பூர்வமானது என்று கதை கட்டப்பட்டு உள்ளது. அந்தக் கதைகளின் மூலம் மீண்டும் மதநிறுவனங்கள் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ள முனைகின்றன.</div><div><br></div><div>இந்தக் கதைகளைக் கட்டுவதற்கென்று ஆன்மீக எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். இவர்கள் ஆன்மீகத்தை மையமாகக் கொண்டு வெளிவரும் பத்திரிகைகளின் மூலம் இதனைச் செய்கின்றனர். ஒவ்வொரு வாரமும் ஒரு புதுக்கதை இருக்கும். எடுத்துக்காட்டாக, அதன் தலைப்புகள் ‘அம்மி மிதிப்பதன் அறிவியல் அடிப்படை’, ‘குளத்தைச் சுற்றினால் சரியாகும் தோல் நோய்’ என்றவாறு இருக்கும்.</div><div><br></div><div>அமெரிக்காவில் உள்ள நாசாவும், நமது திருமூலரும்தான் இவர்களால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள். எதற்கெடுத்தாலும் நாசாவிலேயே சொல்லிவிட்டார்களாம் என்பார்கள். இல்லையென்றால் திருமூலர் அப்பவே இதைச் சொல்லி வைத்துவிட்டு போய்விட்டார் என்பார்கள்.</div><div><br></div><div>ஒன்றை இன்னொன்றோடு முடிச்சுப்போடுவார்கள். அணுவின் இயக்கத்திற்கும் நடராஜர் நடனத்திற்கும்கூட முடிச்சுப்போடுவார்கள். ‘காஸ்மிக் டான்ஸ்’ அதனைக் குறிப்பால் உணர்த்தவே நடராஜர் ‘நடனம்’ ஆடுகின்றார் என்பார்கள். ஏன் நடராஜர் ஆடுவது டிஸ்கோ டான்சைக் குறிப்பால் உணர்த்துவதாக இருக்கலாம் என்று நாம்கூட கூறிவிட்டுபோகலாம். கேட்பவர் சுயமாக யோசிப்பதே இங்கு முக்கியம். ஆதாரமற்ற எவற்றையும் புறந்தள்ளுவதே புத்திசாலித்தனம்.</div><div><br></div><div>எதிர்காலத்தைக் கணிப்பதற்கு, சுகமான வாழ்வு வாழ, செல்வவளம் பெற கைரேகை, ஜாதகம், கம்ப்யூட்டர் ஜாதகம், நாடி ஜோதிடம், கிளி ஜோசியம், நியுமராலஜி, நேமாலஜி, மலையாள மாந்த்ரீகம், வாஸ்து சாஸ்திரம், பரிகார முறைகள், தனலட்சுமி எந்திரம், தாயத்து, பில்லி சூனியம், ஏவல் மற்றும் பல மரபு வழி முறைகள் நம்மைச்சுற்றி இன்றும் பரவலாகப் பின்பற்றப்படுகின்றன.</div><div><br></div><div>மேற்கண்ட முறைகளில் ஏதேனும் ஒன்றை வைத்துத் தொழில் செய்து மக்களை ஏமாற்றுபவர்கள் தங்களுக்கென்று ஒரு தொழில் தர்மத்தை வைத்திருக்கின்றனர். அது என்னவெனில், ஒருவர் மற்றவரைக் குறை சொல்லக் கூடாது. காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதுதான்.</div><div><br></div><div>எடுத்துக்காட்டாக ஜாதகம் கணிப்பவர், நியுமராலஜி அல்லது நேமாலஜி தவறான முறை என்று கூறுவதில்லை. கிளி ஜோசியம் பார்ப்பவர் அருகில் கைரேகை பார்ப்பவர் முறை தவறெனக் கூறுவதில்லை.</div><div><br></div><div>அதேபோல தங்கள் முறைதான் சரியானது, அறிவியல் பூர்வமானது, மற்ற முறைகள் தவறானவை என்று ஒருவர் மற்றவரை தொலைக்காட்சியில் பேசும் போதோ விவாதங்களின் போதோ காட்டிக் கொடுப்பதில்லை. ஆனால் நாடி ஜோதிடத்திற்கும், கிளி ஜோதிடத்திற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் இவர்கள் அனைவரும் அறிவியலுக்கு, பகுத்தறிவுக்கு எதிரானவர்கள். மூடநம்பிக்கையை வைத்து மக்களை ஏமாற்றுபவர்கள். எனவே இவர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர்.</div><div><br></div><div>ஒவ்வொருவரும் இந்த ஆன்மீகத்தில் அறிவியல் உள்ளது என்று ஏமாற்றும் ஏமாற்றுக்காரர்களை இனங்கண்டுகொள்வது அவசியமாகிறது. </div><div><br></div><div>நன்றி:- வேணுகோபால சங்கர்</div>கலைநிதிhttp://www.blogger.com/profile/13405681200932123420noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-10344072906082536342020-02-10T23:17:00.000+05:302020-02-10T23:17:10.884+05:30தமிழரின் மதம் என்ன? <div>தமிழரின் மதம் என்ன? </div><div><br></div><div>தமிழர்தான் இந்து, இந்துதான் தமிழர் என்று சில பிதற்றல்கள் அதிகமாகிவரும் நிலையில் இந்த பதிவு அவசியமாகிறது.</div><div><br></div><div>தமிழர் நாகரிகம் என்பது மிக பழமையானதும், மேம்பட்ட பண்பாட்டு கலாச்சாரத்துடன் வாழ்ந்த இனமாக இருந்துள்ளது என்பதற்கு பல வரலாற்று சான்றுகள் உள்ளது.</div><div><br></div><div>ஆனால் தமிழர்களின் உண்மையான மதம் எது என்பது பற்றி பெரும்பாலானோர் தெரிந்திருக்கவில்லை அல்லது புரிந்தாலும் உண்மையை ஏற்றுக்கொள்ள கடவுள் பாசம் அவர்களிற்கு இடங்கொடுப்பதில்லை. பலர் இந்துமதம் என்றும் குறிப்பாக சைவம் தான் தமிழர்களது மதம் என்று நம்புகிறார்கள். இவ்வாறு கூறுபவர்கள் அரைகுறை புரிதல் உடையவர்கள் என்பதுதான் உண்மையாகும். கருத்தில் முரண்படுபவர்கள் ஆதாரபூர்வமாக விவாதிக்க வரலாம். </div><div><br></div><div>உண்மையில் இந்து மதம்(வைதீகம்/சண்மதம்/சனாதனம்) என்பது தமிழர் மதம் இல்லை. இது ஆரிய பார்ப்பனர்களால் தோற்றுவிக்கப்பட்டு தமிழர்களிடம் இடைகாலத்தில் திணிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. எடுத்துக்கூறியும் புரியாதவர்கள் இந்து வழிபாட்டில் சமஸ்கிருதம் ஏன் என்பதற்கு விடையை கூறட்டும். </div><div><br></div><div>சிவனை முழுமுதற் கடவுளாக கொண்ட சிவவழிபாடு ஏறத்தாழ கி.பி ஏழாம் நூற்றாண்டில் தான் மதமாக உருவாக்கப்பட்டது. நாயன்மார்கள் சமய குரவர்கள் சைவ புராணங்கள் எல்லாம் தோன்றியது இந்த காலப்பகுதிகளில்தான். அதற்கு முன்பு இருந்தே ருத்ரன் என்று ஆரியர்கள் வழிபட்டு வந்திருந்தாலும் தமிழ்நாட்டில் தமிழர்களிற்கு மதமாக அறிமுகப்படுத்தப்பட்டது இந்த காலப்பகுதியில்தான். கி.மு 7ம் நூற்றாண்டுகளிற்குபிறகு தென்னிந்தியா வந்த பார்ப்பனர்கள் கி.பி 4ம் நூற்றாண்டில் வடக்கில் குப்தர்கள் ஆதிக்கம் செலுத்தும்வரை பெரிதாக தமிழகத்தில் தமது ஆதிக்கத்தை செலுத்த முடியவில்லை. குப்தர்கள் காலத்தில்தான் புராண இதிகாசங்கள் சமஸ்கிருதத்தில் எழுத்துரு பெறுகின்றது.. அதன்பின்புதான் இந்துமதம் வேகமாக வளர்கின்றது.</div><div><br></div><div>தமிழரின் சங்க இலக்கியங்களில் (கி.மு 4ம் நூற்றாண்டிற்குமுன்) எங்கேயும் சிவனையோ மற்ற இந்து கடவுள்களையோ தமிழர் வழிபட்டதாக எந்த செய்தியும் இல்லை. வேண்டுமானால் இன்னொரு பெயரை இன்னொரு பெயரோடு தொடர்புபடுத்த வேண்டுமானால் செய்வார்கள். உதாரணமாக மாயோன்தான் கிருஷ்ணன் என்றும் சேயோன்தான் முருகன் என்பதுபோன்றும். இன்றைக்கு திருக்குறளில்கூட இந்துக்கடவுளரின் பெயர்களை முடிச்சுப்போட ஆரம்பித்துவிட்டார்கள்.</div><div><br></div><div>சங்க காலத்திற்கு பின்பு சங்கம் மருவிய காலம் கி.மு 100 - கி.பி 600 நூற்றாண்டளவில் ஆசிவகம், சமணம், பௌத்தம் போன்றவை தமிழகதில் செழிப்புடன் வளருகின்றது. இவையும் வடக்கில் இருந்துதான் வந்ததாக இருந்தாலும் இம்மதங்கள் தோன்ற மூலவேராக இருந்த மெய்யியல் கருத்துக்களில் பெரும்பாலும் தமிழர்களின் மெய்யியல் சிந்தனையே ஆகும். (ஆசீவகம் வடக்கில் இருந்துதான் வந்ததா அல்லது இங்கேயே உருவாகியதா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. தெரிந்தவர்கள் ஆதாரபூர்வமாக விளக்கினால் உதவியாக இருக்கும்)</div><div>இருப்பினும் இம் மதங்கள் வலியுறுத்தும் கொல்லாமை மற்றும் புலால் மறுத்தல் தமிழர்களிடம் திணிக்கப்பட்ட ஒன்று.</div><div><br></div><div>தமிழர்கள் ஏதாவது ஒரு வகையில் புலால் உண்ணுபவர்களே, தங்கள் தேவைக்கும், சூழ்நிலைக்கும் (அதாவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்) ஏற்றவாறு மாமிசம் சாப்பிடும் பலி கொடுத்தும் வந்துள்ளனர் என்பதும் இலக்கிய நூல்களில் உள்ளது, இவை பாவத்திற்குறிய செயல்களாக கருதப்படவில்லை.</div><div><br></div><div>தமிழ் இலக்கியங்களில் தமிழர் வாழ்வியலை பிரதிபலிக்கும் பழமை வாய்ந்த நூலான தொல்காப்பியத்தில் நடுகல் வழிபாடு மற்றும் திணை நிலம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் முந்தைய சங்க கால நூலாகும். </div><div><br></div><div>நடுகல் வழிபாடு என்பது முன்னோர்களின் (வீரமரணம் அல்லது முன்னோர்களில் சிறந்தவர்கள்) நினைவுச்சின்னமாக கருதப்படுகிறது. இவையே பின்நாட்களில் குலதெய்வ வழிபாடாகவும் மாறியது.</div><div><br></div><div>மேலும் தொல்காப்பித்தில்..</div><div><br></div><div>மாயோன் மேய காடுறை உலகமும்</div><div>சேயோன் மேய மைவரை உலகமும்</div><div>வேந்தன் மேய தீம்புனல் உலகமும்</div><div>வருணன் மேய பெருமணல் உலகமும்</div><div>முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்எனச்</div><div>சொல்லிய முறையால் சொல்லவும் படுமே</div><div><br></div><div>என்று அக்கால தமிழர்கள் மதசார்பற்று இயற்கையோடு இசைந்து வாழ்ந்துவத்துள்ளனர் என்று கூறுகிறது. இதைதவிர மதம் என்ற ஒன்று தமிழர்களுக்கு இல்லை என்பதே உண்மை.</div><div><br></div><div>இதுவே பின்நாட்களில் ஆரிய புராண இதிகாசக்களில் மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என்ற மூதாதையர்களை முருகன், விஷ்ணு, இந்திரன், வருண பகவான் என்பதுபோல் ஒன்றுடன் ஒன்றை முடிச்சுப்போட்டு மாற்றப்பட்டுள்ளது. ஒன்றை இன்னொன்றோடு முடிச்சுப்போட்டு தமிழரை அழிக்க தமிழரின் கலாச்சாரத்தையே பயன்படுத்தும் ஆரிய முறை. இதுதான் உள்வாங்கி செரித்துக்கொள்ளும் ஆரிய முறை. சங்ககால தமிழ் மக்கள் வாழ்விற்கும் இன்றுள்ள இந்து கடவுள்களிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. உள்ளது என்பவர்கள் சங்க இலக்கியங்களில் இருந்து இந்த கடவுளர்களின் பெயரை ஒருமுறை காட்டிவிடவும். சேயோன்தான் ஸ்கந்தன் மாயோன்தான் விஷ்ணு எனும்வேலை வேண்டாம். </div><div><br></div><div>இதுமட்டுமின்றி தொல்காப்பியத்தில் பல்வேறு மெய்யியல் சார்ந்த கருத்துக்களும் உள்ளது.</div><div>இவ்வாறு மெய்யியலை உணர்ந்து, இயற்கையின் தன்மையை அறிந்து வாழ்ந்த தமிழர்களின் மெய்யியல் தேடலில் உருவானதே பல கண்டுபிடிப்புகளான மருத்துவக்கலை, தற்காப்பு கலை, அறிவியல், இசை, இலக்கணம் மேலும் பல. ஆனால் இன்று ஆரிய மதம் எனும் வலையில் சிக்கி மெய்யியலை மறந்து சாதிகளாக பிரிந்துகிடக்கிறோம். சாதி வைத்திருந்தால்தான் அவன் தமிழன் என்பதுபோல் சில அரசியல் வியாதிகள் தமிழ்நாட்டில் சமீபகாலமாக உருவாகியுள்ளார்கள். இது மீண்டும் ஆரிய மாயைக்குள் சிக்கும்செயல்.</div><div><br></div><div>மீண்டும் பழந்தமிழரின் மெய்யியல் வாழ்கையை பின்பற்றி வந்தால் அறிவையும், மனதையும், உடலையும் செழுமைபடுத்தி இவ்வையுலகம் வியக்கும் வகையில் சாதி மதம் கடவுள் அற்று வாழ்வோம் என்பதே மறுக்க முடியாத உண்மை. அதற்கு தமிழருக்கு தமிழர் என்றால் யார் அவன் உண்மையான அடையாளம் என்ன என்பது புரியவேண்டும். </div><div><br></div><div>ஆரியர்கள் எவ்வாறு தமிழரை உள்வாங்கி செரித்துக்கொண்டார்கள் என்பதுபற்றிய விரிவான பதிவு ஏற்கனவே எமது குழுவில் இட்டுள்ளேன். அதையும் பாருங்கள்.</div><div><br></div><div> நன்றி :- வேணுகோபால் சங்கர்</div>கலைநிதிhttp://www.blogger.com/profile/13405681200932123420noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-29108615312259386832020-02-02T18:01:00.001+05:302020-02-02T18:03:42.699+05:30யார் தமிழன்? யார் திராவிடன்? யார் ஆரியன்?<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://lh3.googleusercontent.com/-hcOF-8MT7_s/XjbBpB1Wu5I/AAAAAAAAAfw/O-LrfsMAxSA3uwtb8tZiqv7sh3kY5L1qACNcBGAsYHQ/s1600/1580646812432092-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://lh3.googleusercontent.com/-hcOF-8MT7_s/XjbBpB1Wu5I/AAAAAAAAAfw/O-LrfsMAxSA3uwtb8tZiqv7sh3kY5L1qACNcBGAsYHQ/s1600/1580646812432092-0.png" width="400">
</a>
</div><div>யார் தமிழன்? யார் திராவிடன்? யார் ஆரியன்?</div><div><br></div><div>இவை நமது வரலாறு. தெரியாதவர்களும் தெரிந்துகொள்ளவே இந்த கட்டுரையை எழுதுகின்றேன். இக்கட்டுரையில் ஆரியர் வருகையையும் அவர்கள் எவ்வாறு இங்கிருந்தவர்களை ஆதிக்கம் செய்து அவர்கள் சுயத்தையே அழித்தார்கள் என்பதையும், தமிழனின் அடையாளம் என்ன என்பதையும் மிக சுருக்கமாக விபரிக்கலாம் என்று எண்ணி இருக்கிறேன்.</div><div><br></div><div>ஆரியர் எனப்படுபவர்கள் கி.மு 1500 ஆண்டுகளிற்கு முன் இன்றைய இந்தியாவின் மேற்கு பக்கமிருந்து அதாவது தற்போதைய ஈரானிலிருந்து கைபர் கணவாய் ஊடாக இந்திய நிலப்பரப்பிற்குள் வந்தவர்கள் ஆவர். ஈரான் என்றால் பாரசீக மொழியில் ஆரியர்கள் நிலம் என்று பொருள்படும். ஆரியர்கள் அக்கினியை வழிபட்டவர்களாவர். </div><div><br></div><div>ஆரியர்கள் இந்திய நிலப்பரப்பிற்குள் வரும்போது இங்கே பல இனக்குழுக்கள் இருந்தன. அவற்றில் முக்கியமாக கிராதர் என்ற இனக்குழு இமய மலை சாரலில் சிவனையும் இந்திரனையும் கடவுளாக வழிபட்டு வந்தார்கள். ரிக் வேதத்தில் இவர்களுக்கு இடையேயான போர்களைபற்றிய குறிப்புகள் உள்ளது. </div><div><br></div><div>ஆரியர்கள் பொதுவாக எதிர்ப்பவரையும் உள்வாங்கி செரித்துக்கொள்ளும் வல்லமை பெற்றவர்கள். கிராதர்களின் கடவுள்களையும் உள்வாங்கி அதற்கு வேள்விகள் பண்ணி தருகிறேன் என்று அக்கினி வளர்த்து அவன் சுய அடையாளத்தை அழித்து இவன் தனக்கு வேண்டியதை சாதித்துகொண்டான். இவ்வாறு ஒவ்வொருவரினதும் அடையாளங்களிற்குள் கலந்து அவர்களின் சுய அடையாளங்களை அழிப்பதில் வல்லவன். இதற்கு அவனுக்கு பயன்பட்டது கடவுள் என்ற மாயை. இவன் மந்திரங்கள் தனக்கு தெரியும் அதன்மூலம் கடவுளுடன் பேச முடியும் நான் பேசி உங்களுக்கு கடவுள் சொன்னதை சொல்கிறேன் என்று வசதியாக உட்கார்ந்துகொண்டான். இன்றைக்குகூட சிலர் சமஸ்கிருதம் தேவ பாஷை என்பதை பார்த்திருப்பீர்கள். இதுதான் அது. </div><div><br></div><div>இவ்வாறு அவன் கடவுளின் பிரதிநிதியாக உட்கார்ந்து விட்டதால் அவனுக்கு தான் நினைத்ததை அந்த மக்களிடையே செய்யக்கூடியவாகவும் அவனை உயர்ந்தவனாக மக்கள் பார்க்க ஏதுவாகவும் இது அமைந்தது. இதே உத்தியைதான் மற்ற மதங்கள் பின்நாளில் கடவுளின் தூதர்கள் என்ற பெயரில் செய்தது.</div><div><br></div><div>இவ்வாறு அவன் சமுதாயத்தில் உயர்ந்தவனாக உட்கார்ந்து விட்டபடியால் அவனால் இலகுவாக பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரிக்கமுடிந்தது. பிரிவினையே அவன் பலம். இன்றும் அதையே கையாள்கிறான். நாடாளும் மன்னர்களுக்கு மேலேயே தான் உயர்ந்த சாதியாக இருப்பதால் சிலவேளை மன்னர்களால் தனக்கு தீங்கு வரலாம் என்று பயந்த அவன், அதற்கும் பிரம்மகத்தி தோஷம் போன்ற கட்டுகதைகளை கடவுள் பெயரால் கூறி மக்களிடத்தே ஒரு பீதியை உண்டுபண்ணினான். அதாவது யாராவது பிராமணனுக்கு தீங்கிழைத்தால் அவர்களுக்கு கடவுள் கொடுக்கும் தண்டனை.</div><div><br></div><div>சூத்திரர் தாழ்த்தப்படுவதும், அவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் தனக்கு தீங்கு ஏற்படலாம் என்று பயந்த அவன், சூத்திரர்களுக்குள்ளும் கிளை சாதிகளாக பிரிவினையை உண்டுபண்ணி அவர்களிற்குள் ஒற்றுமையை குலைத்து தான் தனது இருப்பை தக்கவைத்துக்கொண்டான். பல மூடநம்பிக்கைகளை மக்களிடத்தில் விதைத்து தான் இருந்த இடத்தில் குளிர் காய்ந்தான். தான் கூறுவதே வேத வாக்கு என்ற நிலைக்கு கொண்டுவந்தான். மன்னர்களுக்கே அறிவுரை வழங்கும் இடத்தில் உட்கார்ந்துகொண்டான்.</div><div><br></div><div>இவ்வாறு படிப்படியாக இவன் ஒவ்வொரு இனக்குழுவையும் உள்வாங்கி செரித்துகொண்டு, அவர்கள் சுய அடையாளங்களை அழித்துகொண்டு அவனது கலாச்சாரத்தை திணிப்பதில் வெற்றிகண்டான்.</div><div><br></div><div>இவ்வாறு வடக்கே ஒவ்வொரு இனக்குழுக்களாக உள்வாங்கி செரித்துகொண்ட அவன் தெற்கிலும் அதே நடைமுறையை பின்பற்றினான்.</div><div><br></div><div>தெற்கில் திராவிடர்கள் அதாவது இன்று தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள் வசித்து வந்தார்கள். இங்கே அவன் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றபோதும் அது கி.பி 400 குப்தர்கள் காலம்வரை இங்கே அவனால் பெரிய அளவில் காலூன்ற முடியவில்லை. </div><div><br></div><div>குப்தர்கள் காலத்திலேயே சமஸ்கிருத மொழியில் புராணங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாச இலக்கியங்கள் ஓலைச் சுவடிகளில் எழுத்து வடிவம் பெற்றது. பாடப் புத்தகத்தில்கூட குப்தர்கள் காலம் பொற்காலம் என்றுதான் குறிப்பிட்டு கேள்வியை கேட்பார்கள். யாருக்கு பொற்காலம்? ஆரியருக்கு பொற்காலம். திராவிடருக்கு?</div><div><br></div><div>திராவிடர் என்று குறிப்பிடும்போது திராவிடரில் மூத்தவன், திராவிட மொழி்களின் மூலமொழி தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழனையும் யார் என்று பார்க்க வேண்டும். நாம் தமிழர் ஆதலால் திராவிடர்களான மற்றைய தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பவற்றின் வரலாற்றிற்குள் போகாமல் தமிழனுக்கு என்ன நடந்தது என்பதிற்குள்ளேயே போகிறேன்.</div><div><br></div><div>தமிழன் இயற்கையை வழிபட்டு வந்தான். இறந்துபோன தனது மூதாதையர்களை காவல் தெய்வங்களாக நடுகல் வைத்து வழிபட்டுவந்தான். ஐந்திணை நிலங்களைான மலையும் மலைசார்ந்த இடமான குறிஞ்சியில் சேயோனையும், காடும் காடு சார்ந்த இடமான முல்லையில் மாயோனையும், குறிஞ்சிக்கும் முல்லைக்கும் இடைப்பட்ட தரிசு நிலத்தை பாலை என்றும், வயலும் வயல் சார்ந்த இடமான மருதத்தில் வேந்தனையும், கடலும் கடல் சார்ந்த இடமான நெய்தலில் வருணனையும் வழிபட்டு வந்தான்.</div><div><br></div><div>இதில் உன்னிப்பாக கவனிக்கவேண்டிய விடயம் இந்த மாயோன் இன்று விஷ்ணுவாகவும், சேயோன்தான் முருகன் என்றும், வேந்தன் இந்திரனாகவும், வருணன் வருண பகவான் என்று மழையுடனும் தொடர்புபடுத்தி ஆரியனின் கலாச்சாரத்தை தமிழனில் திணிக்க தமிழரின் கலாச்சாரங்கள் பயன்படுகின்றன. </div><div><br></div><div>இவற்றை நம்பவைக்க இங்குள்ள நிலப்பரப்புகளைவைத்து புராண இதிகாச கதைகளை தமிழர்களுக்கு தமிழிலேயே இயற்றி, (இன்றைய சினிமா எடுப்பதுபோல) அதில் ஆரிய கலாச்சாரத்தை போதித்து அதன் மூலம் தமிழனின் பாரம்பரியத்தை அழிக்கும் செயலை செய்தான். இதுவே உள்வாங்கி செரித்துக்கொள்ளும் ஆரியனின் முறை. </div><div><br></div><div>முன்னொரு காலத்தில் இங்கே சூரன் என்ற அசுரனுடன் ஸ்கந்தன் என்கிற சேயோன் போரிட்டான் என்பதுமாதிரியான கதைகளும், சேயோனை ஸ்கந்தனைாக்கி அவனை வினாயகனின் தம்பியாக்கி, சிவன் பார்வதியின் பிள்ளையாக்கி, அதன்பின்னும் அவனை மாம்பழ கதைபோல் ஒன்றை உருவாக்கி மூடனாக்கி காட்டுவது. எல்லாவற்றிற்கும் கடவுள் சாயம் பூசி கேள்வி கேட்காதவாறு மூளையை மழுங்கடிப்பது. இதில் அவன் வெற்றியும் பெற்றுவிட்டான். </div><div><br></div><div>இவ்வாறு எல்லா வழிகளிலும் தனது ஆதிக்கத்தை பரப்பியவன். தமிழ் மன்னர்களை கொண்டே தனக்கு இசைவாக ஆலயங்களை அமைத்துகொண்டான். அதைக்கொண்டு சமஸ்கிருதத்தையும் அவன் கலாச்சாரங்களையும் தமிழனில் திணித்துவிட்டான். அங்கே தனக்கு என்னென்ன தேவையோ அத்தனையும் இருந்த இடத்திலேயே கிடைக்ககூடியவாறு ஏற்பாடுகளை செய்துகொண்டான். அர்ச்சனைதட்டு, உண்டியல், பரிகாரம், நைவேத்தியம், தேவதாசி என்று பட்டியல் நீளும். </div><div><br></div><div>பார்ப்பனனின் மனுதர்ம சட்டத்தை கடவுளின் சட்டம் என்று நம்பிய பல முட்டாள் தமிழ் மன்னர்கள் இங்கே இருந்ததால்,</div><div>பார்பனன் கூறுவதை தலையாய பணியாக செய்து முடித்தனர்.</div><div>எதிர்த்த சமணர்களை கழுவேற்றி கொல்லவும் தயங்காதவனாக இருந்தான்.</div><div><br></div><div>இவ்வாறு தமிழன் சுயத்தை இழந்து இருந்தபோது ஆங்கிலேயரும் அரேபியரும் வந்து மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி உளக்கியதுபோல் அவர்களும் தமது பங்கிற்கு அரேபிய, ஆங்கிலேய கலாச்சாரங்களை தமிழனில் திணித்து தமிழனை சுய அடையாளம் அற்ற பரதேசியாக ஆக்கிவிட்டனர்.</div><div><br></div><div>இந்த நிலைதான் இன்றும் தொடர்கிறது. இந்த தமிழன் இன்னும் திருந்தியபாடில்லை. தான் யார் என்பதே தெரியாமல் ஆரிய சமஸ்கிருத கடவுள்களிற்கு வக்காலத்து வாங்குபவனாகவும், அரேபிய அல்லாவிற்கு வக்காலத்து வாங்குபவனாகவும், வத்திக்கான் கர்த்தருக்கு வக்காலத்து வாங்குபவனாகவும் இருந்து வருகிறான். </div><div><br></div><div>தமிழன் என்று கூறுபவர்கள் தங்களின் அடையாளம் என்ன என்பதை உணரவேண்டும்.</div><div><br></div><div>கருத்துக்களை வரவேற்கிறேன்.</div><div> நன்றி :- வேணுகோபால சங்கர்</div>கலைநிதிhttp://www.blogger.com/profile/13405681200932123420noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-76627648223700056442020-01-07T03:30:00.001+05:302020-01-07T03:30:47.708+05:30கடவுள் மறுப்பு கொள்கை அல்ல அது ஒரு உண்மை..<div>* நாத்திகர்களின் தெளிவான பார்வை!</div><div><br></div><div>கடவுளை மறுப்பவர்கள் வாழ்க்கை சிரமமானது. நாங்கள் தவறுதலாகக்கூட தவறு செய்ய முடியாது. ஆத்திகர்கள் ஏதாவது பூச்சியை வணங்கினாலும் அதனை தன் நம்பிக்கை என்று சொல்லிவிட்டால் போதும். ஆனால் அதனை மறுப்பவன் ஆதாரபூர்வமாகவும் அறிவியல்பூர்வமாகவும் அதை செய்தாகவேண்டும். ஆக நாத்திகன் நேர்மையாளனாகவும் நியாயவானாக இருந்தாக வேண்டியது கட்டாயம்.</div><div><br></div><div>நாத்திகர்களின் வாழ்க்கை சுவாரஸ்யமானது. ஏனெனில் எங்களை சந்திக்கும் அனேக பக்திமான்கள் எங்களை தோற்றுப்போனவர்கள் என்று நிரூபிக்க போராடுகிறார்கள். அறிவுடமையை அறியாமை வெற்றிகொள்ள போராடுவது ஒரு சுவாரசியமென்றால், சமயங்களில் அறியாமை வென்றுவிட்டதாக அவர்கள் சொல்வது இன்னுமொரு சுவாரஸ்யம். ஒரு முன்னாள் நாத்திகர் பட்டு வேட்டி சட்டை கட்டினால் அது நாத்திகத்தின் வீழ்ச்சியாகவே பார்க்கப்படும். ஆனால் எல்லா மடத்திலிருந்தும் கசமுசா சமாச்சாரங்கள் அம்பலமானாலும் மதம் புனிதமானதாகவே நீடிக்கும். இத்தகைய சவால்களே நாத்திகர்கள் வாழ்வை சுவாரசியமாக்குகின்றன. அதனால்தான் எம்.ஆர்.ராதா வசனத்தை நூறுமுறை கேட்டாலும் சலிக்காத வெகுஜனத்துக்கு ஒருமுறை சாமி படம் பார்ப்பதே எரிச்சலூட்டுவதாக இருக்கிறது.</div><div><br></div><div>நாத்திகர்கள் வாழ்வு பொறுப்புகள் நிறைந்தது. எந்த முட்டாள்தனத்தை ஒழிக்க விரும்புகிறார்களோ அந்த முட்டாள்தனத்தை பின்பற்றுபவர்களது உரிமைகளுக்கும் அவர்கள்தான் குரல்கொடுத்தாக வேண்டும். அதனால்தான் பெரியார் கடவுளை மற என்று சொன்னதோடு நில்லாமல் மனிதனை நினை என்றும் சொன்னார். இதன் இன்னொரு விளக்கம் கடவுளை மறந்தால்தான் மனிதனைப்பற்றி நினைக்கமுடியும். தஞ்சை பெரியகோயிலின் இடது பக்கம் பன்றியைப்போல உருவமுடைய ஒரு சிலையைக்கொண்ட சன்னதி உண்டு. அதை தோப்புப்கரணம் போட்டபடியே வணங்கிய ஒருவர் “யானை மாதிரியும் இருக்கு பன்னி மாதிரியும் இருக்கே.. என்ன சாமி இது??” என்ற சந்தேகத்தை வாய்விட்டு சொல்லிக்கொண்டிருந்தார். இந்த வாய்ப்பு கடவுளை நம்பாவதவனுக்கு கிடையாது. அவர்கள் பெரியாரையும் தெரிந்துகொண்டாக வேண்டும் மத புத்தகங்களையும் தெரிந்துகொண்டாக வேண்டும்.</div><div><br></div><div>நாத்திகம் சிக்கனமானது மற்றும் எளிமையானது. விபூதி குங்குமத்தில் தொடங்கி மாட்டுச்சாணி வரை எதுவும் வேண்டியதில்லை. வீடு கட்டினால் ஒரு கழிப்பறைக்கான இடம் கூடுதலாக கிடைக்கும் (பூஜை அறைக்கான குறைந்தபட்ச இடம் அத்தியாவசியமான ஒரு பயன்பாட்டு இடத்துடன் ஒப்பிடப்பட்டிருக்கிறது.. அவ்வளவுதான்). ஒரேயொரு நபர் திருப்பூரிலிருந்து திருப்பதி போய்வரும் செலவைவிட என் ஒருமாத வீட்டு வாடகை குறைவு. குலதெய்வத்துக்கான பூஜை தொடங்கி பேருந்தில் நீட்டப்படும் சாமி உண்டியல்வரையான எல்லா நன்கொடை வேண்டுகோள்களை நிர்தாட்சண்யமாக நிராகரிக்க முடியும். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று நீங்கள் அறியப்பட்டுவிட்டால் சோதிடம், ஜாதகம், பரிகாரம் போன்ற தீயசக்திகள் பற்றி உங்களிடம் பிரச்சாரம் செய்யப்படமாட்டாது. மலச்சிக்கலுக்குக்கூட ஜாதகத்தை ஒருமுறை பார்த்துவிடலாம் என்று சொல்வது பேஷனாகிவிட்ட காலத்தில் இது எத்தனை பெரிய சவுரியம்?</div><div><br></div><div>“எல்லாம் சரி, இவ்வளவு பெருமை பேசினாலும் உங்க ஏரியா ஏன் வீக்காயிகிட்டே இருக்கு?” எனும் நக்கல் எனக்கு கேட்காமலில்லை. இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை, பெரியார் காலத்தைவிட இப்போது எங்கள் அணி பலவீனமான நிலையில்தான் இருக்கிறது. எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும் மதம் பிரச்சாரம் செய்யப்படுமளவுக்கு கடவுள் மறுப்பு பிரச்சாரம் செய்யப்படுவதில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் பிரதோஷம் என்றால் என்னவென்றே தெரியாத தஞ்சாவூரில் இன்று அந்த நாளில் பெரியகோயில் பக்கமே போக முடியவில்லை. டிவியை திறந்தால் லேகிய வியாபாரிகளைவிட தாயத்து வியாபாரிகளே அதிகம் ஆக்கிரமித்திருக்கிறார்கள். சம்சாரத்தோடு சண்டையிட்டவர்களும் வாழ்வு சலித்த வெளிநாட்டவர்களும் மட்டும் வந்துபோகும் இடமான திருவண்ணாமலையில் ரஜினிகாந்தின் அருணாசலம் படத்துக்குப் பிறகு கிரிவலத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது</div><div><br></div><div>ஆனால் இதுகுறித்தெல்லாம் நாம் கவலைகொள்ளத் தேவையில்லை. காரணம் கடவுள் மறுப்பு என்பது கொள்கையல்ல. அது ஒரு உண்மை அவ்வளவே. பூமி சூரியனை சுற்றுகிறது என்பதைப் போல, உலகம் உருண்டை என்பதைப் போல இதுவும் ஒரு கண்டுபிடிப்பு. என்ன, மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றை பொய்யென சொல்லும் கண்டுபிடிப்பு. ஐன்ஸ்டீன் ரிலேட்டிவிட்டி தியரிகூட பலருக்கு புரிவதில்லை, அதற்காக புரிந்தவர்கள் வருந்த முடியுமா? இல்லை பெரும்பான்மையோடு ஐக்கியமாவதற்காக புரிந்துகொண்டதை மறக்க முடியுமா? பல மேம்பட்ட மனிதப் பண்புகளுக்கு இது அடிப்படையானது என்பதால் நாத்திகம் எல்லோருக்கும் பரிந்துரைக்கப்படவேண்டியது என்பது மட்டும்தான் நாம் நினைவில் கொள்ளவேண்டிய செய்தி.</div><div><br></div><div>மேலும் மதம் பணக்காரனையே மதிக்கும் என்பதையும் மடங்கள் கிரிமினல்களின் கூடாரம் என்பதையும் நாத்திகர்களை மெனக்கெட வைக்காமல் அவர்களாகவே அம்பலமாக்கிக்கொள்கிறார்கள். மத பாரபட்சமில்லாமல் எல்லா கடவுளரின் ஏஜெண்ட்களும் இதில் அடக்கம். கேள்வி கேட்காத ஞானத்தைக் கொடு என்கிறது பைபிள். இது எல்லா மதங்களின் பொதுக்கருத்தாக இருப்பதால்தான் டி.ஜி.எஸ்.தினகரனும் மேல்மருவத்தூர் பங்காருவும் ஆயிரக்கணக்கான கோடிகளில் புரள்கிறார்கள். பர்தா பெண்ணுக்கு பாதுகாப்பு எனும் அராஜகமான வாதத்தை கைவிட இன்றுவரை மறுக்கிறது இசுலாம். நாய்கள்கூட உலவ முடியும் கோயிலில் மூன்றிலொரு பங்கு மக்களை அனுமதிக்க மறுக்கிறது இந்து மதம். வாழ்வில் உருப்படுவதற்கான மார்க்கமானது யாதொரு மார்கத்தையும் பின்பற்றாதிருப்பதுதான் என்பதை மார்கங்களே இப்போது ஓரளவுக்கு சொல்லித்தருகின்றன. ஆகவே நமக்கு பாதிவேலை மிச்சம்.</div><div><br></div><div>பெண்ணடிமைத்தனம், சாதிக்கொடுமை, மூடநம்பிக்கை என சமூகத்தின் சகல நோய்களுக்கும் வேராக கடவுள் நம்பிக்கையே இருந்திருக்கிறது என்ற காரணத்தால்தான் பெரியார் தன் கோடரியை அதன்மீது வீசினார். அதனால்தான் அவரது இயக்கம் மிகவேகமாகவும் மிக வீரியமாகவும் பரவிற்று. திராவிட இயக்கம் நாற்றம் பிடிக்கத்தொடங்கியது ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் சமரசத்துக்குப் பிறகுதான். நாமும் வேரை விட்டுவிட்டு சுலபமானவற்றை வெட்டுவதற்கு முயற்சி செய்கிறோம். சூத்திரன் என்றால் வேசிமகன் என்று பொருள், அந்த அடையாளத்தை துடைத்தெறிவது பெரியாரின் நோக்கமாக இருந்தது. இப்போது அந்த நோக்கத்தின் நிலை எப்படி இருக்கிறது? வேசிமகன் எனும் அடையாளம் பற்றிய கவலை போய் இப்போது பெரிய வேசிமகன் யார் எனும் போட்டியில் திருப்தியடைந்து நிற்கிறது சமூகம். ஆகவே நாத்திகம் தோற்றதாக என்றைக்குமே கருதமுடியாது, உண்மைக்கு போட்டியே கிடையாது எனும்போது தோல்வி எங்கேயிருந்து வரமுடியும்?. ஆனால் நாத்திகர்கள் கடமைதவறிவிட்டார்கள் (அல்லது தவறிவிட்டோம்) என்பதில் வேறு கருத்து இருக்க முடியாது.</div><div><br></div><div>பெருமையையும் ஆராய்ச்சியும் போதும். இறைமறுப்பாளர்கள் செய்வதற்கான குறைந்தபட்ச கடமை ஒன்றுண்டு அதுபற்றி பேசிவிடலாம். சென்ற தலைமுறை நாத்திகர்கள் பலர் தங்கள் வீட்டில் புதிய நாத்திகர்களை உருவாக்கத்தவறிவிட்டார்கள். குறைந்தபட்சம் நமது பிள்ளைகளை மட்டுமாவது கடவுளை மறுப்பவர்களாக தயாரிப்பது அவசியம். இதில் சுதந்திரம் பேசுவது பேராபத்தில் முடியும். சைவமா அசைவமா என்பதை வேண்டுமானால் அவர்களே தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் அவர்களை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது நம் கடமை அதனை குழந்தையின் விருப்பத்துக்கு விட்டுவிடுவோம் என்று நியாயம் பேசக்கூடாது . அதுபோலவே இல்லாதவற்றை நம்புவோராக குழந்தைகள் வளர்வதும் ஒருவகையில் ஆரோக்யக்கேடானதுதான்.</div><div><br></div><div>#பகிருங்கள் #Copied</div>கலைநிதிhttp://www.blogger.com/profile/13405681200932123420noreply@blogger.com0