Friday, December 31, 2010

ஈழ தமிழர்களின் வில்லி - கோமளவள்ளி


அனுதாப அலையின் மூலம் செல்வி.ஜெயலலிதா மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல் அமைச்சர் என்ற பெருமையை தமிழக அரசியலில் பெற்றார்.

* அம்மா என்று அழைக்கப்படும் ஜெயலலிதா ,வயதில் பெரிய அமைச்சர்களை கூட தனது காலில் விழுந்து வாழ்த்து பெறுவதை பொது மேடைகளில் கூட தமிழ்நாடு காண செய்தார்.

* தோழி சசிகலா தனது குடும்ப உறுப்பினர்களோடு பெரும் செல்வங்களை அரசியல் செல்வாக்கின் மூலமாக பெற்று இன்றும் இவருடைய நிழலாக இருப்பது பல்வேறு கண்டனங்களையும் ,எதிர்ப்புகளையும் ஏற்படுத்தி இவரை பல வழக்குகளில் சிக்க செய்தன

* ஒரு கிலோ எடையுள்ள தங்க ஒட்டியாணம் மட்டும் ஏறக்குறைய ஐம்பத்து லட்ச ருபாய் மதிப்புடையதாககணக்கிடப்பட்டுது!.நானுட்ட்ரி அறுபத்தி எட்டு வகையான தங்க ஆபரணங்கள் தேடுதலின் போது கை பற்றப்பட்டது !

*இவர் மீது பல ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன .

* திருமணம் செய்துகொள்ளாமல் செல்வியாக இருந்து வரும் ஜெயலலிதா, சசிகலா என்கிற சாதாரண வீடியோ லைப்ரரி நடத்தி வந்தவரை தனது ஆத்ம தோழியாக ஏற்று கொண்டார். வேறு யாரும் அவரை நெருங்காதவண்ணம் உயிர் தோழிகளாக இன்று வரை உள்ளார்கள்

* ஜோசியம் ,யாகம்,யானை பசுமாடு போன்ற தானங்கள் என பலவற்றை நடத்தி தன்னை சக்தி மிக்கவராக காட்டி கொண்டவரும் ஜெயலலிதாதான் !

* மதமாற்ற தடை சட்டம் இயற்றியும் அரசு பணியாளர்கள் ஒரு லட்சத்தி எழுபது ஆயிரம் பேரை அதிரடி பனி நீக்கம் செய்தவர் ஜெயலலிதா .இதுவே அவருடைய ஆட்சி இழப்பிற்கு காரணமாக அமைந்தது எனலாம் !

ஜெயலலிதா, சசிகலா சொத்து கணக்கையும் கொஞ்சம் பாருங்கள் 

இதில் ஜெயா டிவி, ஆந்திராவில் உள்ள திராட்சைத் தோட்டம், ஊட்டி தேயிலைத் தோட்டம் ஆகியவை அனைவரும் அறிந்த சில சொத்துக்கள்.
 ஒரு ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள பட்டியல் விவரம்:

1. ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், சென்னை

2. ஜே. பார்ம் ஹவுசஸ், சென்னை

3. ஜெயா கான்ட்ராக்டர் அண்ட் பில்டர்ஸ், சென்னை

4. கிரீன் பார்ம் ஹவுசஸ், சென்னை

5. ஜே.ஜே லீசிங், சென்னை

6. ஜே.எஸ். ஹவுசிங் டெவலப்மெண்ட், சென்னை

7. ஏபி அட்வர்டைசிங், சென்னை

8. ஃபிரஷ் மஷ்ரூம்ஸ், சென்னை

9. ரிவர்வே அக்ரோ ப்ரோடக்ஷன், நீலாங்கரை

10. சூப்பர் டூப்பர் டி.வி, சென்னை

11. லெக்ஸ் பிராப்பர்டி டெவலப்மெண்ட், சென்னை

12. மாஸ்டர் ஜே விவேக்ஸ், போயஸ் கார்டன், சென்னை

13. மெடோ அக்ரோ பார்ம்ஸ் சென்னை

14. சினோரா பிசினஸ் என்டர்பிரைசஸ், சென்னை

15. ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், சென்னை

16. விக்னேஸ்வரா பில்டர்ஸ், சென்னை

17. லட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன், சென்னை

18. கோபால் ப்ரமோட்டர்ஸ், சென்னை

19, சக்தி கன்ட்ஸ்ரக்ஷன்ஸ், சென்னை

20. நமச்சிவாயா ஹவுஸ்சிங், சென்னை

21. அய்யப்பா பிராப்பர்டி டெவலப்மெண்ட், சென்னை

22. ஸீ என்கிளேவ், சென்னை

23. நவசக்தி கான்ட்ராக்டர்ஸ் அண்ட் பில்டர்ஸ், சென்னை

24. ஓசியாணிக் கன்ஸ்டரக்ஷன், சென்னை

25. ஜே ரியல் எஸ்டேட், சென்னை

26. கிரீன் கார்டன் அபார்மெண்ட், சென்னை

27 கொடநாடு டீ எஸ்டேட், உதகை

28. மார்பிள் அண்ட் மார்வெல்ஸ், சென்னை

29. பேக்ஸ் யுனிவர்சல், சென்னை

30. வினோத் வீடியோ விஷன் சென்னை

31. இண்டோ டோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்ம்சுடிக்கல்ஸ், சென்னை

32. மெட்டல் கிங், சென்னை

33. ஜெயா பப்ளிகேஷன்ஸ், சென்னை

34. சசி எண்டர்பிரைசஸ், சென்னை

என்று ஜெயலலிதா சசிகலா தொடர்பான வர்த்தக நிறுவனங்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருந்தன இந்த நிறுவனகள் யாவும் அபிராமபுரம் இந்தியன் வங்கியிலேயே கணக்கு வைத்திருந்தன.பெரும்பாலும் 1994 -1995 லேயே இங்கு கணக்குகள் தொடங்கப்பட்டன.1995 ஆம் ஆண்டில் ஏழு முதல் பதினாறு வரையிலான ஒவ்வொரு கம்பெனியிலும் ரூ.22 ௦௦ ௦௦௦ முதலீடு செய்யப்பட்டது.மொத்தம் ரூபாய் 40700000 முதலீடு செய்யப்பட்டது.இவைகளெல்லாம் எங்கிருந்து வந்த முதலீடுகள்?யார் சம்பாதித்தது?

இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில்?

ஜெயலலிதா தலைமையில் தனி ஈழம் பெறுவோம் என்று மார்தட்டும் "மகாபெரிய மேதை"களே! உங்களைத்தான்...

1. அந்தத் தனி ஈழம் விடுதலைப்புலிகளுக்குத் தொடர்பே இல்லாத சுதந்திர நாடா?

2. தனி ஈழம் பேசினாலும் விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு - உலகத்தில் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட அமைப்பு - இலங்கைத் தமிழர்களுக்கு ஒரே பிரதிநிதி விடுதலைப்புலிகள் என் பதை நாங்கள் நம்பவில்லை என்று ஜெயலலிதா திட்டவட்டமாகக் கூறியுள்ளாரே - இவருடன் கூட்டணி சேர்ந்துள்ள தனி ஈழ ஆதரவாளர்களின் பதில் என்ன?

3. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடித்து இந்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டு, அதன்பின்னர் இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி தனி நாடு வாங்கி, யாரிடம் ஒப்படைக்கப் போகிறார்?

4. விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் போடுகிறது. விடுதலைப்புலிகளைத் தடை செய்ததற்கு நான் தான் காரணம். இரண்டாண்டுக்கு ஒருமுறை இந்தியா வில் விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்படுவதும் என்னால்தான் என்று சட்டமன்றத்திலேயே இறுமாப்புடன் தீர்மானம் போட்டாரே - இதன்மீது அதன் கூட்டணியில் உள்ள விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களின் பதில் என்ன?

5. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு முதல்வர் கலைஞர் இரங்கல் கவிதை எழுதினார் என்பதற்காக தி.மு.க. ஆட்சியைக் கலைக்கவேண்டும் என்று சொன்னாரே - அந்த நிலையிலிருந்து ஜெயலலிதா மாறுபட்டுள்ளாரா? அப்படி ஜெயலலிதா அறிக்கை விட்டபோது, அது தவறு என்று கண்டித்து அறிக்கை விடுவதைத் தடுத்தது எது?

6. ஆன்டன் பாலசிங்கம் மருத்துவ உதவிக்கு இந்தியாவுக்கு வருவதைக்கூட எதிர்த்து அறிக்கைவிட்ட மனிதாபிமானமற்ற ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்காக இப்பொழுது விடுவது நீலிக் கண்ணீரா அல்லது கிளிசரின் கண்ணீரா?

7. விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்ததைக்கூட, கருணாநிதியும் - திருமாவளவனும் பேசி வைத்துக்கொண்டு ஆடிய நாடகம் என்றாரே ஜெயலலிதா இப்பொழுது ஜெயலலிதாவின் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் கூட்டணித் தலைவர்கள் ஜெயலலிதாவின் அந்தக் கூற்றைக் கண்டித்து அறிக்கை வெளியிடாதது ஏன்? அப்படியென்றால், அந்த நாடகத்தில் இவர்கள் வகித்த பாத்திரங்கள் என்னென்ன? கோமாளிப் பாத்திரமா - வில்லன் பாத்திரமா? காட்டிக் கொடுக்கும் எட்டப்பர் பாத்திரமா?

8. ஈழப் பிரச்சினைக்காகத்தான் ஜெயலலிதாவோடு கூட்டு சேர்ந்ததாக இவர்கள் சொல்வார்களேயானால், இவர்கள் ஜெயலலிதாவோடு கூட்டணி சேர்ந்த நேரத்தில், அந்த அம்மையார் தனி ஈழத்துக்கு ஆதரவாகப் பேசியது கிடையாதே - அப்படி இருக்கும்போது இந்தக் கருத்து எப்படி உண்மையாக இருக்க முடியும்?

9. ஜெயலலிதா தலைமையில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்டோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டோ தனி ஈழம் என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ளாத நிலையில், இந்தக் கூட்டணியின் கொள்கை தனி ஈழம்தான் என்று எப்படி சொல்ல முடியும்?

10. ஈழப் பிரச்சினையைத் தேர்தல் பிரச்சினையாக நாங்கள் முன்வைக்க மாட்டோம் என்று தோழர் தா. பாண்டியன் பேட்டி அளித்துள்ளாரே - அப்படி இருக்கும்போது இந்தக் கூட்டணியின் பொதுக்கொள்கை தனி ஈழம்தான் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

11. 1996 சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு கூட்டுச் சேர்ந்த ம.தி.மு.க., மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்சினையை முன்வைக்கவில்லையே - இந்த நிலையில் ஈழத் தமிழர்களுக்காக உயிரையே கொடுப்போம் என்று தோழர் வைகோ முழங்குவதில் சாரம் உண்டா?

12. ஈழப் பிரச்சினையில் ஒத்த கருத்தோடு பணியாற்றும் பா.ம.க., ம.தி.மு.க., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து தனிக் கூட்டணி வகுத்துத் தேர்தலைச் சந்திப்போம் என்று தோழர் திருமாவளவன் அவர்கள் கூறிய கருத்தை ஏற்றுக் கொள்ளாமல், ஈழப் பிரச்சினையில் தமிழர்களுக்கு விரோதமாகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் ஜெயலலிதாவின் பக்கம் ஓடி கூட்டணி வைத்துக் கொண்டதன் மர்மம் என்ன?

13. தேர்தலுக்கு முன்பே காங்கிரசைக் கூட்டணிக்கு அழைத்த செல்வி ஜெயலலிதா, தேர்தலுக்குப் பிறகு என்ன முடிவு எடுப்பார் என்பதற்கு இப்போது அந்த அம்மையாருடன் கூட்டணி சேர்ந்துள்ள தலைவர்கள் உத்தரவாதம் கொடுப்பார்களா?

14. தேர்தல் முடிந்ததற்குப் பின்னால் பாரதீய ஜனதா கூட்டணியில் ஜெயலலிதா சேர்வார் என்று பாரதீய ஜனதா தலைவர் எல்.கே. அத்வானி கூறியதற்குப் பதிலாக ஒரு நல்ல அரசியல்வாதி எதையும் நிராகரிக்க மாட்டார் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறாரே - இதன் பொருள் என்ன?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அ.இ.அ.தி.மு.க. வுடன் கூட்டணி சேர்ந்துள்ள கட்சித் தலைவர்கள் பதில் சொல்வார்களா ...????
நன்றி -தமிழ் 
                      

Wednesday, December 29, 2010

சீமான் விலைக்குத் தானே விற்றார்....


தேசிய பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விடுதலையான சீமான், தற்போது நாம் தமிழர் இயக்கத்தின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்துச் சென்று கொண்டிருப்பதுடன், நடிகர் விஜய்யுடன் இணைந்து “பகலவன்” படத்தை இயக்கும் பணிகளிலும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். தி.மு.க-காங்கிரஸை கடுமையாக விமர்சிக்கும் சீமானும் தி.மு.க.வுக்கு எதிராக அ.தி.மு.க.வுடன் கைகுலுக்கத் துடிக்கும் விஜய்யும் இணையவிருப்பது சீமானின் கொள்கை சறுக்கல் என்ற விமர்சனமும் வைக்கபடுகிறது.
மண்ணுக்காக, மக்களுக்காக சினிமாவில் இருந்து எழும் ஒரு கலகக் குரல் இயக்குநர் சீமானுடையது. அதிர வைக்கும் வசனங்கள், கோபாவேசமான காட்சிகள் என இவர் இயக்கிய தம்பி படம், பார்க்க வந்தவர்களை முறுக்கேற்றி அனுப்பியது ஆனால் சீமான் அவர்களின் ஈழ ஆதரவு, அரசியல் பிரவேசம், ஆக்ரோசப் பேச்செல்லாம் பார்க்கும்போது, புத்தருக்கு போதி மரத்தடியில் கிடைத்ததுபோல் இவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு ஞானோதயம் கிடைத்தது போல் தெரிகிறது. கலைஞரைத் திட்டினால் பிரபலமாகலாம் எனத் திட்டிக் கொண்டிருக்கிறார் எனத்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்… அவரது பேட்டியை ஜெயா டிவி நேர்முகம் நிகழ்ச்சியில் காணும்வரை.

முதலில் அவரையும் மதித்து பேட்டி எடுக்கக் கூப்பிட்டிருக்கிறார்களே என ஒரு ஆவலில் போயிருப்பார் என நினைத்தேன். ஆனால் அவரது பேச்சில் ஈழ மக்களின் நலனை விட கலைஞரைத் திட்டி அம்மையாரிடம் அரசியல் ஆதாயம் பெற முடியுமா என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது…

எதற்கெடுத்தாலும் கலைஞர் அதைச் செய்யவில்லை…இதைச் செய்யவில்லை எனக் கூறுவதை ஜெயா டி.வி யே விரும்புவதில்லை என்பது சீமானுக்குத் தெரியவில்லை.. அதைச் செய்யவில்லை…இதைச் செய்யவில்லை எனச் சொன்னால், அந்த டி.வி யை எப்போதாவது பார்க்கும் பாமர மக்கள் கூட இந்த அம்மா ஆட்சியில் இருக்கும்போது செய்திருக்கலாமே எனச் சொல்லி பார்க்காமல் இருந்துவிடுவார்கள் என்பது ஜெயா டி.வி நிர்வாகிகளுக்குத் தெரியாமல் இருக்காது… சினிமாவில் வெற்றி பெற முடியாததால் அரசியல் பிரவேசம் செய்த சீமானுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை…

அண்டப் புழுகு ஆகாசப் புழுகு எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்..சிவகங்கை மாவட்டத்திலுள்ள அவரது ஊரில் 18 மணி நேரம் மின்வெட்டு என வாய் கூசாமல் அவர் சொன்ன போதுதான் இதுதான் அண்டப் புழுகு ஆகாசப் புழுகு என்பதை உணர்ந்தேன்..

அவரது பேச்சில் ஈழ மக்களின் பிரச்சனைகளை விட அவரது மாயாண்டி குடும்பத்தார் படத்தை விலை கொடுத்து வாங்கி (இலவசமாக அல்ல) வெளியிட்ட தொலைக்காட்சி அவரது ஒரு பாடலை வெட்டி வெளியிட்ட வருத்தம்தான் இருந்தது…

ஏதோ இவர் திரைத் துறையில் லாப நோக்கின்றி சேவையாற்றுவது போலவும் அந்தத் தொலைக்காட்சி அந்தப் பாடலை வெட்டியது தவறு என்பது போலவும் புலம்பினார்… பொறுத்துக் கொள்ள முடியாமல் ஜெயா டி.வி. ரபி பெர்னார்டே நன்றி சீமான் எனச் சொல்லி பேட்டியை முடித்தது இன்னமும் நகைச்சுவையாக இருந்தது..

இவர் சினிமாத் துறையில் வெற்றி பெற முடியாததால் அரசியலுக்கு வந்தார் என அனைவருக்கும் தெரியும்.. ஏதோ இவர் வந்து தான் ஈழப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது போல் காட்டிக் கொண்டார்…

மாயாண்டி குடும்பத்தார் விஷயத்துக்கு வருவோம்…. ஏதோ ஆஸ்கார் விருது பெறும் படமாக இருந்தாலும் சீமான் விலைக்குத் தானே விற்றார்.. ஒரு பாடலை வெட்டி விட்டார்கள் என இன்னொரு தொலைக்காட்சியில் வந்து புலம்புவது நியாயமா….அவர்கள் செய்தது தவறென்றால் அதற்குத் தீர்வு காண எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. கிடைத்தது வரை லாபம் எனப் படத்தை விற்றுவிட்டு பாடலை வெட்டிவிட்டார்கள் எனப் புலம்புவதிலிருந்து சீமானின் அபரிதமான தமிழுணர்வும், ஈழ மக்களின் துன்பத்தை விட இது அவரை எவ்வளவு பாதித்துள்ளது என்பதும் தெரிகிறது…

இதோ இவர்களின் சில முரண்பாடு முட்டைகள்
அப்பாவிகளான ஈழத் தமிழர்கள் சிங்கள இராணுவ குண்டு மழையிலிருந்து காப்பாற்றப்படவேண்டும்; சொந்த மண்ணிலேயே அம்மக்கள் ஏதிலிகளாகி, காடுகளிலும், வனாந்தரங்களிலும் பசி, பட்டினியோடு நாளும் செத்துக் கொண்டுள்ள நிலையில், போர் நிறுத்தம் ஏற்படவும், தமிழர்களுக்கு நிவாரண உதவி போய்ச் சேரவேண்டு மென்றும் குரல் கொடுத்தால், அப்படிப் பேசுகிறவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளின் தீவிரவாதத்திற்குத் துணை போகிறவர்கள் என்று அறிக்கை விடும் அறிக்கை அரசி ஜெயலலிதா .

சீமான் பேசுவதை ஜெயலலிதா நியாயப்படுத்துவதாக இருந்தால் அவர் முதலமைச்சராக இருந்த நேரத்தில், வைகோ அவர்களின் அத்தகைய பேச்சு இறையாண்மைக்கு விரோதமான உரை என்றும் சட்ட விரோதம் என்று பொடாவின்கீழ் கைது செய்து ஓராண்டுக்குமேல் சிறையில் தள்ளியது ஏன்?

நீதிமன்ற ஆணையின் அடிப்படையில் விடுதலை பெற்ற பிறகும்கூட அவர்கள் பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டுப் போட்டவர் யார்? சாட்சாத் இதே ஜெயலலிதா அம்மையார்தானே. அந்த நேரத்தில் கொலைகாரி என்ற சொல்லைப் பயன்படுத்தியவர்தானே - ஒழித்துக்கட்டுவோம் என்று சூளுரைத் தவர்தானே தோழர் வைகோ?

இந்த நிலையில் சீமான் ஜெயலலிதாவிற்கும் வை கோ விற்கும் வக்காலத்து வாங்குவது எந்த அடிப்படையில்? மனந்திருந்திய நிலையிலா? ஈழத்தமிழர்கள் மீது உண்மையான அக்கறை கொண்டதன்மையிலா?

ஜெயலலிதா பக்கத்தில் நின்றுகொண்டு கலைஞர்மீது கல்லெடுத்து எறிபவர்கள் அந்தரங்கச்சுத்தியுடன் ஒரு கணம் நினைத்துப் பார்க்கவேண்டாமா?

ஒரு தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்காக மனிதாபி மானத்தோடு கலைஞர் அவர்கள் எழுதிய இரங்கல் கவி தைக்குக் கடும் எதிர்ப்பைக் காட்டியவர்தானே ஜெயலலிதா!

ஆண்டன் பாலசிங்கம் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு முயற்சித்தபோது முதலமைச்சர் என்ற முறையில் மிகவும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தவராயிற்றே ஜெயலலிதா.

மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதும், நோய்க்கு வைத்தியம் செய்வதும் உலகம் ஒப்புக்கொண்ட மனிதாபிமானச் செயல்கள். அதைக்கூட ஈழத் தமிழர்கள் விஷயத்தில் காட்டத் தயாராக இல்லாத ஜெயலலிதாவை முன்னிறுத்தி ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதாகப் பேசுவதை விட ஏமாற்று வேலை, மோசடி வேலையை தவிர வேறு எதுவாகத்தானிருக்க முடியும்?

தமிழ் ஈழம் என்பதை உணர்ச்சியோடு, உணர்வோடு கலந்து உச்சரிக்கக் கூடியவர்கள் திராவிடரியக்கத்துக்காரர்கள்தான்.
எனவே திராவிடர் இயக்கத்தைப் பலகீனப்படுத்தி, அதன் மூலமாக லாபம் அடையலாம் என்று சொன்னால் அது கையிலே கிடைத்த முக்கியமான ஒன்றை தூக்கி எறியக்கூடிய சிறுபிள்ளைத்தனமான ஒரு முடிவாகத்தான் அது ஆகும்.

எனவேதான் இதிலே தொலைநோக்குப் பார்வை தேவை என்பதே என் தாழ்மையான கருத்து. 
                                                                          நன்றி தமிழ் 

Monday, December 27, 2010

படித்தவர்கள் பயந்தாகொள்ளியா ?

                                          

"இவர் நல்லவராயிற்றே, இவர் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்' என அவர்கள் கேட்கின்றனர். இதில் இருந்து , அரசியலில் நல்லவர்கள் இருக்க முடியாது என அர்த்தமா ?. இதே போன்ற எண்ணம், தமிழகத்தில் உள்ள மாணவர்கள், பட்டதாரிகள், ஓய்வு பெற்றவர்கள், முதியோர் என, பலதரப்பட்டவர்களின் மனதிலும் ஏற்பட்டுள்ளது. 

அரசியல் ஒரு சாக்கடை, அது அசுத்தம் நிறைந்தது என்றும் அவர்கள் கருதுகின்றனர். படித்தவர்கள் அரசியலில் இருந்தால் தான், நம் நாடு முன்னேறும். தகுதியும், திறமையும் மிக்கவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று பேசும் படித்தவர்கள்  அதிக உடல் உழைப்பில்லாத நாகரிகமான சூழ்நிலை இருக்க கூடிய,தன்னை பிறர் மதிக்க கூடிய இடத்தில்தான் பணிபுரிய விரும்புவார்கள்.அரசியலில் அப்படி ஒரு நிலையை எதிர்பார்க்க முடியாது. ஆனால், அரசியல் என்பது கடின உழைப்பைக்கொண்டது.அதில் நுழையும் வழி நேர்வழியாகவும் இருக்கலாம்.தவறான வழியாகவும் இருக்கலாம்.ஆனால் அதற்கும் பல சிரமங்களை கடந்தாக வேண்டும்.பல கீழ்த்தர விமர்சனங்களை கூட சகித்துக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். படித்தவர்களிடம் இந்த சகிப்புத்தன்மையை எதிர்பார்க்க முடியாது. எனவே,அதெற்கெல்லாம் துணிந்தவர்கள் மட்டும்தான் அரசியலில் தலைதூக்க முடியும்.

 ஒருவேளை அரசியல் என்பது பன்னாட்டு நிறுவன வேலை போலவோ, அலுவலக உத்தியோகம் போலவோ ஆக்கப்பட்டால் படித்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடும். படித்தவர்கள் தங்கள் வேலை, குடும்பம் இதற்கு கட்டுப்பட்டு அரசியலுக்கு வர பயப்படுகிறார்கள். படிக்காதவர்களை ஒப்பிட்டு பார்க்கையில் படித்தவர்கள் இந்த காலத்தில் சற்று பயந்தாகொள்ளியாகத் தான் இருக்கிறார்கள்.

இன்னோரு விசியம் நம்மை வளர்க்கு பொற்றொர் இஞ்சினியர்,டாக்டர் ஆக வேண்டும் என்று எதிர்பார்கிறார்கள் யாரும் அரசியல் வாதியாக வர வேண்டும் என்று விரும்புவதில்லை. சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்று அக்கறை உள்ளவர்கள் அரசியலுக்கு அதிகமாக வரும் வரையில் அது நாற்றமடித்துக்கொண்டுதான் இருக்கும். கால்வாயில் கலந்த சாக்கடை நீர் வெளியேற வேண்டுமானால் அதில் நல்ல நீர் வெள்ளமாய்ப் பாய்ந்தால்தான் நடக்கும். நாறுகிறதே என்று மூக்கைக் பொத்திக்கொண்டு நல்லநீருக்கு அணைபோட்டுத் தடுத்துவைத்திருக்கும் வரையில் சாக்கடை நாற்றத்தை மாற்ற முடியாது என்றார் குமரேசன் அசாக்.

அறிவும்,ஆற்றலும் மிக்க இளைய தலை முறையில் பெரும்பாலனவர்கள் வெளிநாட்டு மோகம் கொண்டு வேறு நாடுகளுக்குப் பறந்து விடுகிறார்கள்... செலவு செய்தது தரமான கல்வியைக் கொடுப்பது தாய் நாடு என்பது அவர்களுக்குக்கு மறந்து விடுகிறது..
அரசியல் சாக்கடையாய்க் கிடக்கிறது என்று குற்றம் சொல்ல மட்டும் இந்தியாவில் ஆயிரம்,ஆயிரம் ஆட்களுண்டு...ஆனால் அதில் இறங்கி சுத்தம் செய்யும் துணிவு வராத வரையில் என்ன பயன்?

அரசியலா அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தான் இன்றைய மாணவர்கள் நினைத்து அதை விட்டு விலகி நிற்கின்றனர்.சமுதாயத்தில் உள்ள பெண்களும் அரசியல் என்றால் ஆபத்து என்று நினைத்து விலகி நிற்கின்றனர்.

பெரியாரும் ,அண்ணாவும் நமக்கு அரசியலை கற்று தரவில்லையா? அதற்கான முன் மாதிரி திராவிடம் இல்லையா? அப்படியானால் நம் முன்னோர் எப்படி ஆட்சி செய்தார்கள்?

அரசியலை சாக்கடை என்று சொல்லி படித்தவர்களும், பண்புள்ளவர்களும் ஒதுங்கிப் போனால், அதை யார்தான் சுத்தம் செய்வது?' என்று வசனம் பேசுகிற பல ஹீரோக்கள்... வாழ்கையில் ஓட்டுப் போடுவதோடு தங்கள் ஜனநாயக் கடமையை முடித்துக் கொள்கிறார்கள்.(சிலர் அதையும் செய்வதில்லை ) இது  சாக்கடை என்று பயந்து ஒதுங்கிக் கொள்வதால் ரவுடிகளும், கட்டை பஞ்சாயத்து ஆசாமிகளும் இன்று அரசியலை தம் உள்ளங்கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள்.ஒரு முக்கியமான உண்மையை நாம் எல்லோரும் மறந்துவிடுகிறோம். சாக்கடை என்றும் மானங்கெட்டது என்றும் நாம் பேசும் அரசியல் எவ்வளவு புனிதமானது என்பதை யாரும் புரிந்துகொள்வதில்லை.
 இந்த நிலையில், 'சாக்கடையை சுத்தம் பண்ண நான் ரெடி' என்று சொல்ப்பவர்கள் எத்தனை பேர் ? 


Saturday, December 25, 2010

அய் அய் அய் அய் யோ !!!!!!!



நமது பொதுவாழ்வில் நடைபெறும் பல முக்கிய விவாதங்கள் இரு துருவங்களாகப் பிரிந்த நிலையிலேயே நடைபெறுகின்றன. எதிரெதிர் விளிம்புகளுக்கு நடுவிலும் நிலைப்பாடுகள் இருக்கின்றன என்பதைப் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்வதில்லை. நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறையுங்கள் என்று கேட்பவன் தேசபக்தி இல்லாதவன். 

ரிஷி பிரகாஷ் தியாகிக்குத் தூக்கு தண்டனையை ரத்து செய்யுங்கள் என்றால், அவன் காவல்துறையின் எடுபிடி. சிங்களப் பேரினவாதத்திடம் இருந்து தமிழர்களுக்கு தேசிய சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றால், அவன் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன். புலிகள் நடத்திய 'துன்பியல் சம்பவத்தை' நினைவுகூர்ந்தால், அவன் தமிழர் நலனுக்கு எதிரானவன்.

அப்பாவி மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் எதிராக நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டித்தால் அவன் தேசிய வெறியன். காவல்துறையின் மனித உரிமைகள் மீறலைக் கண்டித்தால் அவன் பயங்கரவாதி. இவ்வாறு இரு துருவங்களில் இருந்தும் இப்படிப்பட்ட முத்திரைகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு நபர்களுக்கு குத்தப்படுகின்றன.

"அன்பு தோழர்களே, அரசியல்வாதிகளை கேவலமாக பேசுவோருக்கும் ஆசிரியர்களின் ஊதியம் அதிகம் என்றும் பேசுவோருக்கும்" - ஒரு கேள்வி.
உங்களை அரசியல்வாதிகளாகவோ ,ஆசிரியர்களாகவோ ஆகவிடாமல் தடுத்தது யார் ?

என்று பொதுவாக கேட்டால் ,

 எல்லோரும் அரசியல்வாதியாகிவிட எல்லோரும் சாந்திபாபு அல்ல, எப்படியாவது கூஜா தூக்கி பிழைக்க, இரண்டு காலமும் திமுக அடிவருடி அரசியலில் ஊறித்திழைத்து கோடிக்கணக்கான வருமான‌த்தில் பட்டம் வாங்கி, அதிகார பலத்தால் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் வேலை வாங்கும் திறமை எல்லோருக்கும் வராது. 
என்கிறார்கள் 

நான் அப்படி இல்லைங்க சொல்லி ,குமுதம்-1,குமுதம்-2, , தினமலர் ,தினமணி  ,மங்கையர்மலர் பாருங்க சொன்ன 
குமுதம், கல்கண்டு இவங்க பத்திரிக்கை விற்க, நொறுக்கு தீனி மாதிரி ஏதாச்சும் ஒரு விளம்பரமான செய்தியை போடுவாங்க, இதையெல்லாம் பாராட்ட நான் சராசரி அல்ல. பொது வாழ்க்கைக்கு வரும் எவருக்கும் செய்தியோ, விளம்பரமோ அவசியமில்லை , என்கிறார்கள் .

பத்து , இருபது பிளாக் வெச்சுயர்கவங்கக்கெல்லாம் நிம்மதியா இருகாங்க , இந்த ஒரு ப்ளாக் வெச்சிட்டு நா படுற பாடு இருக்கே  அய் அய் அய் அய் யோ

ம்ஹும்... பொது வாழ்வில் சம்பவிக்கும் முக்கிய விவாதங்கள் இரு துருவங்களாக இல்லை. நமக்கேன் வம்பு என ஒதுங்கியிருந்தாலும் இவனுக்கு ஒன்றுமே தெரியாது என்று மூன்றாவது முத்திரையும் குத்தப்படுகிறது.

கஷ்டப்பட்டு ஒரு வேலையை செய்வதை விட இஷ்டப்பட்டு செய்வதுதான்  திருப்தியை தரும் , எனக்கு போராட்டம் மிகவும் பிடிக்கும். காரணம் நாம் பூமியில் வாழுவதற்கு கொடுக்கும் வாடகைதான் நமது சேவை

Wednesday, December 22, 2010

களவாணி கலைஞர்

வணக்கம் , வாருங்கள் , இதைத்தான் எதிர்பார்த்தேன் ,
கலைவாணி கலைஞர் என்ற தலைப்பிற்கும் பதிவுக்கும் என்ன தொடர்பு ?
இன்றைய நிலையில் இணையத்தில் கலைஞரைத் பேசினால்தான் மக்கள் நம்மைத் திரும்பிப்பார்ப்பார்கள், அப்படியாவது 
தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்துகொள்ளட்டும்



தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் ஜூன் 3, 1924ல் இசை வேளாளர் குடும்பத்தில் திரு. முத்துவேலர் அவர்களுக்கும் திருமதி அஞ்சுகம் அம்மையார் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற் பெயர் தட்சிணாமூர்த்தி. தனது மாணவர் பருவத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் கல்வியில் நாட்டம் காட்டவில்லை. இருப்பினும் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் பேச்சால் ஈர்க்கப்பட்ட தலைவர் கலைஞர் அவர்கள், தனது 13ஆவது அகவையில், சமூக இயக்கங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.தனது இளமை பருவத்தில், வட்டார மாணவர்களை ஒருங்கிணைத்து இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பைக் தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்திற்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான "அனைத்து மாணவர் கழகம்" என்ற அமைப்பாக உருவாக்கி அதன்மூலம் மொழிபற்றையும் இனமான உணர்வை ஊட்டியவர் நம் தலைவர் கலைஞர்.

தலைவர் கலைஞர் அவர்கள் திருக்குவளை தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்தார். அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை படித்தார். 

தலைவர் கலைஞர் அவர்களின் முதல் போராட்டம் 

1936 திருவாரூர் உயர்நிலைப் பள்ளி 6-ஆம் வகுப்பில் சேர்த்துக் கொள்ள இயலாது என்று தலைமை ஆசிரியர் கஸ்தூரி ஐயங்கார் மறுத்தார். இடம் தரவில்லையெனில் எதிரேயுள்ள தெப்பக் குளத்தில் குதித்து உயிரை விட்டுவிடுவேன் என்று கூறியது மட்டுமின்றி, அவ்வாறு குதிக்கவும் முனைந்தார். படிப்பில் அவருக்கு இருந்த ஆர்வம் கண்டு 5-ஆம் வகுப்பில் சேர்ந்து படிக்க இசைவு அளிக்கப்பட்டது. முதல் போராட்டத்தின் வெற்றி இது.

பொது வாழ்வில் எடுத்து வைத்த முதல் அடி 

1938 இந்தி எதிர்ப்புப் போர் தமிழகத்தில் தொடங்கிய நேரம். நாள்தோறும் மாணவர்களைக் கூட்டி, கையில் கொடியுடன் இந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பிக் கட்டாய இந்தியை எதிர்த்து மாணவர் பேரணி நடத்தினார். இதுவே தலைவர் கலைஞர் பொது வாழ்வில் எடுத்து வைத்த முதல் அடி எனலாம்.

முதல் சொற்பொழிவு 

1939 பள்ளியில் நடைபெற்ற சொற்போட்டியில் “நட்பு” என்ற தலைப்பில் பேசினார். அப்போது எட்டாம் வகுப்பு மாணவர். அதுவே அவர் ஆற்றிய முதல் சொற்பொழிவு. அதே சமயம் தான் சிறுவர் சீர்திருத்தச் சங்கம் அமைத்து வாரம்தோறும் பேச்சுப் பயிற்சி அளித்தார். அப்போதே மாணவர்களிடையே வார சந்தா வசுலித்து அமைப்பு ரீதியாகச் செயல்பட்டார். 

முதல் அமைப்பு 

19.4.1940 மாணவர் ஒற்றுமைக்கென "தமிழ்நாடு" "தமிழ்நாடு மாணவர் மன்றம்" என்கிற தனி அமைப்பு ஏற்படுத்தி வாரம்தோறும் கூட்டம் நடத்தினார். 

1941 தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் கிளைகள் தஞ்சை மாவட்டத்திலும், தமிழ் நாட்டில் பல இடங்களிலும் ஏற்படுத்த அயராது பாடுபட்டார்.

முதல் பத்தரிக்கை 

1941 மாணவர்களிடையே எழுத்தாற்றலைச் சிறப்பாக வளர்க்க “மாணவநேசன்” என்ற மாத இதழைக் கையெழுத்து ஏடாகத் தொடங்கி நடத்தினார்.

முதல் விழா 

1942 தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் ஆண்டு விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடி பேராசிரியர் க.அன்பழகன், கே.ஏ.மதியழகன் ஆகிய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் அன்றைய மாணவர்களை அழைத்துப் பேசச் செய்தார். அந்த ஆண்டு விழாவின் போது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துப்ப பிற்காலத்தில் உணர்ச்சிக் கவிதையாக வரலாற்றுப் புகழ் பெற்று அமைந்தது. இந்நிகழ்ச்சியின் போது நிதிப் பற்றாக்குறைக்காக தமது கைச்சங்கிலியை அடகு வைத்துச் சமாளித்தார். 

முதல் கட்டுரை 

1942 பேரறிஞர் அண்ணா நடத்திய “திராவிட நாடு” மூன்றாவது இதழில் “இளமைப் பலி” என்ற இவரது எழுத்தோவியம் வெளிவந்தது. திருவாரூரில் நடைபெற்ற நபிகள் நாயகம் விழாவுக்கு வருகைதந்த அறிஞர் அண்ணா அவர்கள் “இளமைப்பலி” கட்டுரை எழுதிய இளைஞர் மு.கருணாநிதியை சந்திக்க விரும்பி, அவரை அழைத்து வரச் செய்து நோரில் சந்தித்து தலைவர் கலைஞரின் எழுத்தாற்றலைப் பாராட்டினார். அத்துடன் படிப்பில் தொடர்ந்து ஆர்வம் காட்டச் சொன்னார். அண்ணாவின் அறிவுரைகளில் தலைவர் கலைஞர் செயல்படுத்தாமல் விட்டது இது ஒன்றுதான். இதே ஆண்டில் தான் “முரசொலி வெளியீட்டுக் கழகம்” என்ற பெயரால் ஒரு நிறுவனம் தொடங்கி “முரசொலியை” மாத இதழாக 10.08.1942ல் வெளியிட்டார். அதில் “சேரன்” என்ற புனைப் பெயரால் கனல் தெறிக்கும் கட்டுரைகளை எழுதினார். 

முதல் நாடகம் 

28.5.1944 திருவாரூர் கருணாநிதி திரையரங்கில் (பேபி டாக்கீஸ்) முதன் முதலாகப் ‘பழனியப்பன்’ என்ற சீர்திருத்த நாடகத்தை அரங்கேற்றினார். திருவாரூர் சுயமரியாதைச் சங்க ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த பெரியார் அவர்கள் தலைவர் கலைஞாரின் முரசொலி ஏடு கண்டு மகிழ்ந்த மிகச்சிறந்த பணி என்று பாராட்டினார். அன்று முதல் பெரியாருடன் கூட்டங்களில் கலந்து கொண்டு ஆவேசமாகப் பேசத் தொடங்கினார். திராவிட நடிகர் கழகத்தை ஆரம்பித்து விழுப்புரத்தில் ‘பழனியப்பன்’ நாடகத்தை நடத்தியதோடு அதில் முக்கியப் பாத்திரமேற்று நடித்தார். 

திருமணம்

11.11.44 அன்று பத்மாவதி அம்மையாரை வழக்கறிஞர் விசயராகவலு தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டார். 

கலைஞர் மீது நடந்த முதல் தாக்குதல்

புதுவையில் திராவிடர் கழக மாநாட்டுக்குச் சென்று திரும்பியபோது காங்கிரசார் கலைஞைரைக் கடுமையாகத் தாக்கினார்கள். மயங்கி விழுந்து விட்டவரை இறந்துவிட்டார் எனக் கருதி சாக்கடையில் வீசி எறிந்துவிட்டுச் சென்றுவிட்டனர். கருணை உள்ளம் கொண்ட தாய் ஒருவரும், இளைஞர் ஒருவரும் அவரைக் காத்தனர். மறுநாள் முகமதியர் போன்று மாறு வேடமணிந்து பொயாரைச் சந்தித்தார். பெரியார் தலைவர் கலைஞரைக் கட்டித் தழுவிக் காயங்களுக்கு மருந்திட்டார். தன்னுடன் அழைத்துச் சென்று “குடிஅரசு” வார இதழின் துணை ஆசிரியராக்கினார்.

முதல் கொடி அமைப்பு 

19.4.1946 திராவிடர் கழகக் கொடிக்கு மாதிhp அமைத்து நடுவில் உள்ள சிவப்பு நிறத்தைக் குறிக்க, தன் கைவிரலை அறுத்து இரத்தத்தை பதித்தார். முதன் முதலாக தன் குருதியை கொடிக்குக் காணிக்கையாக்கினார். கோவை ஜுபிடர் நிறுவனத்திற்கு கலைப் பணிபுரிய பெரியாரிடம் விடை பெற்றுச் சென்றார். 

தந்தை மறைவின் போது 

19.4.1946 தம் தந்தையார் மரணப் படுக்கையில் இருந்தபோது மருத்துவரை அழைக்க தலைவர் கலைஞர் சென்றார். அப்போது அந்த மருத்துவர், சித்த வைத்தியர்கள் மாநாட்டினை தலைமையேற்று நடத்திக் கொண்டு இருந்தார். அங்கு வந்த தலைவர் கலைஞரை கண்டதும் மாநாட்டில் உடனே அவரை உரையாற்றிட அறிவித்து விட்டார். தலைவர் கலைஞர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது நண்பர் தென்னன், தந்தையின் மரணச் செய்தியோடு வந்தார். 

முரசொலி வார இதழை வெளியிட்டார்.

1947 இந்தியாவுக்குச் சுந்திரம் கிடைத்ததைப் பெரியார் தமிழர்களுக்குத் துக்க நாள் என்றார். அண்ணா “அது திராவிடர்களுக்குத் திருநாள்” என்று குறிப்பிட்டார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைக் களைய, பெரியாருக்கும், அண்ணாவுக்கும் பாலம் அமைக்க முரசொலியில் ‘கடைசி நாட்கள்’ என்ற கட்டுரையைக் தலைவர் கலைஞர் வடித்தார்.

துணைவியாரின் மறைவின் போதும்...

1948 துணைவியார் பத்மாவதி அவர்கள் நோயுற்று மரணப்படுக்கையில் இருந்த நேரத்திலும் இயக்கத் தோழர்களின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் தலைவர் கலைஞர் புதுக்கோட்டைக் கூட்டத்திற்கு உரையாற்றச் சென்றிருந்தார். கூட்டம் முடிந்து லாரியில் ஊர் திரும்புவதற்குள் தலைவர் கலைஞரின் துணைவியார் இயற்கை எய்திவிட்டார். 

திருமண நாளிலும்... 

1948 தயாளு அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். அதே நாளில் திருமணத்திற்கு சற்று முன்பு, மணமகன் கோலத்தில் இருந்தபோதும், அவ்வழியே சென்ற இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர் நம் தலைவர் கலைஞர்.

தி.மு.க தொடக்கம்.

17.9.1949 இல் திராவிட முன்னேற்ற கழகம் பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்டது. நம் தலைவர் கலைஞர் அதன் தோற்றுநர்களுள் ஒருவர் ஆவர். 1957ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும.1967ல் பேரறிஞர் அண்ணா அவர்களின் அமைச்சரவையில் பொதுபணிதுறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராகவும் அறிஞர் அண்ணா மறைந்த பின் அவரது இதயத்தை இரவல் வாங்கிக் கொண்டு, சோதனைகள் நிறைந்த கால கட்டத்தில் முதல்வர் பொறுப்பினையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பினையும் ஏற்று, கழகத்தையும், கழகம் மேற்கொண்ட கடமைகளையும் காப்பாற்றிய பெருமையானது தலைவர் கலைஞருக்கு மட்டுமே உரிமையானது கழகம் பிளவுபட்ட காரிருள் வேளைகளிலும் கதிரவனாய் முன் நின்று தி.மு கழகத்தை காப்பவர் நம் தலைவர் கலைஞர்.

தலைவரின் வரலாற்றில்....

தமிழக சட்டமன்ற உறுப்பினர் 1957 – 1962
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் 1962 – 1967
பொதுப்பணித்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு 1967 – 1969
தமிழக முதலமைச்சர் 1969 – 1971
இரண்டாவது முறையாகத் தமிழக முதலமைச்சர் 1971 – 1976
தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் 1977 – 1983
தமிழக சட்ட மேலவை உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் 1984 – 1986
மூன்றhம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1989 – 1991
நான்காம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1996 – 2001
ஐந்தாம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 2006

நின்றார்! வென்றார்!

தமிழ்நாடு சட்டப் பேரவைக்குக் கீழ்க்காணும் தொகுதிகளில் போட்டியிட்டுத் தலைவர் கலைஞர் பெரு வெற்றி பெற்றார். 

குளித்தலை 1957-62
தஞ்சாவூர் 1962-67
சைதாப்பேட்டை 1967-71
அண்ணாநகர் 1977-76
அண்ணாநகர் 1977-80
அண்ணாநகர் 1980-83
சட்ட மேலவை உறுப்பினர் 1984-1986 
துறைமுகம் 1989-91
துறைமுகம் 1991
சேப்பாக்கம் 1996-2001
சேப்பாக்கம் 2001-2006
சேப்பாக்கம் 2006 லிருந்து
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் - மேலவையில் 53 ஆண்டுகளாகப் பதவி வகிப்பவர். 1957 – லிருந்து 2006 வரை போட்டியிட்ட சட்டமன்றத் தேர்தல்கள் அனைத்திலும் வெற்றிச் சரித்திரம் படைத்தவர், படைத்துக் கொண்ட வருபவர்.


உருவாக்கப்பட்ட சமூக நலத் திட்டங்கள் 
தமிழகம் முதல் இடத்தில் 


* இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்,
* உயர் சிகிச்சைக்கான உயிர் காக்கும் கலைஞர் காப்பிட்டு திட்டம்,
* முக்கிய நாட்களில் இலவச அரிசி வழங்கும் திட்டம்,
* மாற்று திறனாளிகளுக்கு அரசில் வேலை, வேலைக்கு சென்றுவர மூன்று சக்கர வாகனமும் இலவசம். 
* விடுதலை நாளில் கோட்டையில் தேசியக் கொடியை மாநில ஆளுநர் ஏற்றி வைக்கும் வழக்கத்தை மாற்றி மாநில முதல்வர்களுக்கு அவ்வுரிமையை பெற்றுத் தந்தார்.
*குடிசை மாற்று வாரியம் அமைத்து குடிசைவாசிகளுக்காக அடுக்குமாடி வீடுகள் அமைத்து அவர்களைக் குடியேற்றினார்.
* தாழ்த்தப்பட்டோருக்கும், மீனவர்களுக்கும், இலவச அடுக்குமாடி வீடுகளைக் கட்டித் தந்தார்.
* இந்தியாவிலேயே முதல் முதலாக போலீஸ் கமிஷன் அமைத்துக் காவல் துறையினரின் சீருடை, பணி, ஊதியம் ஆகியவற்றைச் கீர்திருத்தி அமைத்தார்.
* பணியாற்றும் பொழுது இறக்க நேரிடும் அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.1,00,000 (தற்போது ஒரு இலட்சம்) உதவித் தொகை வழங்கும் முறையைத் தொடங்கி வைத்தார். 
* தனியார் பேருந்துகளை நாட்டுடைமை ஆக்கி சேர, சோழ, பாண்டியன், பல்லவன்-திருவள்ளுவர் ஆகியோர் பெயர்களால் போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கினார். 
* மாணவர்களுக்கு +2 வரை இலவசப் பேருந்துப் பயணச் சலுகை வழங்கினார். 
* பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ, ஐ.பி.எஸ். பயிற்சி முகாம் தொடங்கினார்.
* மனிதனை வைத்து மனிதன் இழுக்கும் கை ரிக்க்ஷாவை ஒழித்து, அவர்களுக்கு இலவசமாக சைக்கிள் ரிக்க்ஷாவை வழங்கினார்.
* ஏழையர்க்கு கண்ணொளி வழங்கும் திட்டம் செயல்படுத்தினார்.
* தொழுநோய் மற்றும் இரவலர்க்கு மறுவாழ்வு இல்லங்கள் அமைத்தார்.
* ஆதரவற்ற குழந்தைகளைக் காத்திடக் கருணை இல்லம் அமைத்தார். 
* தமிழ்நாட்டில் மே முதல் நாளைத் தொழிலாளர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை என அறிவித்தார்.
* தமிழறிஞர்களின் பிள்ளைகளுக்கு பொறியியல், மருத்துவப் படிப்புகளில் 5% தனி இடஒதுக்கீடு வழங்கினார். 
* கல்வித்துறையில் இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புத் தேர்வுகளை நடைமுறைப்படுத்தினார்.
* மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு இணையாக தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கினார்.
* மாநகராட்சி மேயருக்கு நேரடித் தேர்தல் முறையைக் கொண்டு வந்தார். 
* மாநில சுயாட்சி குறித்து ஆராய்ந்திட ‘இராஜமன்னார் குழு’ அமைத்தார்.
* மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்காக 20% இட ஒதுக்கீடு அளித்தார்.
* கிழக்கு ஆசியாவிலேயே முதன்முதலாகக் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் ஏற்படுத்தினார்.
* தியாகி வ.உ. சிதம்பரனார் சிறையில் மெய்நோக இழுத்த செக்கினைத் தேடிக் கண்டுபிடிக்கச் செய்து அதை நினைவுச் சின்னமாக்கினார். 
* விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படுவது போல், மொழிப்போர் தியாகிகளுக்கும் ஓய்வூதியம் வழங்கினார். 
* விடுதலைப் போராட்ட வீரர் இறந்துவிட்டால், அவருக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என ஆணையிட்டார். 
* ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்ட ஒரு சிற்றூரைத் தேர்ந்தெடுத்து, அதில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைச் செயற்படுத்தினார். 
* சாதி, சமயப் பூசல்களை மறந்து தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாய் வாழ்ந்திட நாடெங்கும் சமத்துவபுரம் திறந்து அவற்றிற்குப் பெரியார் நினைவு சமத்துவபுரம் எனப் பெயரிட்டார்.
* நாட்டு மக்களிடையே கூட்டுறவு, தற்சார்பு உணர்வுகளை வளர்த்திட நமக்கு நாமே திட்டம் கொண்டு வந்தார்.
* தமிழ்நாட சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றி அதனைத் தில்லிக்கு அனுப்பினார்.
* பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலங்காக்கத் தனித்துறை (அமைச்சகம்) ஏற்படுத்தினார். 
* சமூக சீர்திருத்தத்திற்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தினார். 
* இடைத்தரகர்களின் தலையீடு இன்றி உற்பத்தியாளரும், நுகர்வோரும் நேரடித் தொடர்பு கொள்ளும் வகையில் உழவர் சந்தைகள் தொடங்கினார். 
* கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு, பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் 5% தனி இட ஒதுக்கீட வழங்கினார். 
* பட்டதாரிகள் இல்லாத குடும்பங்களிலிருந்து வரும் 100 மாணவ, மாணவியர்களுக்கு இலவச தொழிற் கல்வி வழங்கினார்.
* மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என மாற்றினார். 
* உள்ளாட்சி அமைப்புகளில் 33 விழுக்காடு மகளிருக்கு இடஒதுக்கீடு
* அரசு அலுவலர்கள், அரசின் நிறுவனங்கள், ஊராட்சி மன்றங்கள். கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவற்றில், பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு செய்தார். 
* நகரங்களை குக்கிராமங்களுடன் இணைத்திட சிற்றுந்து (மினிபஸ்) திட்டம் கொண்டு வந்தார்.
* தில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் (1969) ‘வங்கிகளை நாட்டுடைமை’ ஆக்கிட யோசனை கூறினார். (இதன் அடிப்படையில்தான் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் 14 தனியார் வங்கிகளை நாட்டுடைமை ஆக்கினார்.
* பன்னாட்டு மூலதனத்தை தமிழ்நாட்டுக்குக் கவர்ந்திட இந்தியாவிலேயே முதன்முதலாக டைடல் பூங்கா என்னும் கணினி மென்பொருள் பூங்காவினை அமைத்தார்.
* அரசு ஊழியர்களைப் பழிவாங்குவதற்கே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்த இரகசியக் குறிப்பேடு முறையை ஒழித்தார்.
* தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக மாநில திட்டக்குழுவை அமைத்தார். 
* எட்டாம் வகுப்பு வரை படித்த ஏழை இளம் பெண்களுக்கு அரசின் சார்பில் ரூ.5,000 (அதன்பின் ரூ.10,000- இப்பொழுது ரூ.15,000- திருமண நிதி உதவித் திட்டம் வகுத்தார்) 
* ஏழை எளியோருக்கான பன்முனை மருத்துவப் பரிசோதனைத் திட்டமான வருமுன் காப்போம் திட்டத்தை அறிவித்தார்.
* சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி அலுவலகம் கட்ட ரூ.5 இலட்சம் ஒதுக்கீடு செய்தார்.
* தமிழகத்தை இந்தியாவின் டெட்ராய்ட் ஆக மாற்றிய கார் உற்பத்தி தொழிற்கூடங்கள் தொடங்க அனுமதித்தார். 
* உலகத் தமிழ் இணையம் பல்கலைக் கழகத்தை உருவாக்கினார்.
* தமிழ்விசைப் பலகையை தரப்படுத்துவதற்காக தமிழ் இணைய மாநாட்டை சிறப்பாக நடத்தினார். 
* சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தொகுதி மேம்பாடு நிதி ஒதுக்கீடு செய்தார்.
* தமிழர்களின் 150 ஆண்டு கனவான சேது சமுத்திரத் திட்டம் நடைமுறைக்கு வரச் செய்தார்.
* தமிழைச் செம்மொழியாக அறிவிக்கச் செய்தார். 
* தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையத்தை சென்னைக்கு கொண்டு வந்தார்.
* கடல் சார் பல்கலைக் கழகம் அமைக்கச் செய்தார்.
* பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் பதவியேற்ற தலைவர் கலைஞர் அவர்கள் அதே மேடையில் தமது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்த 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் அறவே ரத்து, சத்துணவில் வாரம் இரு முறை முட்டைகள் வழங்கல் போன்ற திட்டங்களை நிறைவேற்றுவதாக அறிவித்து, அதற்கான கோப்புகளில் மக்கள் முன்னிலையில் கையெழுத்திட்டார். 
* தந்தை பெரியார் நெஞ்சில் உள்ள முள்ளை அகற்றும் அரும்பணியாக தகுதியுள்ள அனைத்து சாதியினரும் திருக்கோயில்களில் அர்ச்சகராக உத்தரவு பிற்பித்தார். 
* எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடமக்கப்பட்டது. 
* கண்ணகி சிலை திறப்பு 
* இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கல் 
* நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம்
* பனைத் தொழிலாளர் நலனுக்குத் தனி வாரியம் 
* தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் 
* நுழைவுத் தேர்வு ரத்துக்கு நிபுணர் குழு அமைப்பு 
* மருத்துவம், பொறியில் கல்விக் கட்டணம் குறைப்பு 
* மதமாற்றத் தடைச் சட்டம் திரும்பப் பெறுதல் 
* பின்தங்கிய பகுதிகளில் தொழில் தொடங்க மானியம் 
* சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் 
* அனைத்து நகராட்சிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் 
* சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் 
* அரசு ஊழியர்களுக்கு எதிரான டெஸ்மா சட்டம் ரத்து 
* அரசுப் பணியில் சேர வயது வரம்பு நீட்டிப்பு 
* இளைஞர் சுய உதவி குழு அமைத்தல் 
* சட்டமன்ற மேலவை மீண்டும் கொண்டு வருதல் 
* கிராமங்களில் அமைதி ஏற்பட கோவில்களில் வழிபடும் இடங்களில் ஏற்றத்தாழ்வு அகன்றிட முக்கியப் பிரமுகர்ளுக்கு, பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி தடை செய்யப்பட்டது. 
* தலைவர் கலைஞர் அவர்களின் தன்னிகரில்லாப் பணிகள் இன்னும் பலப்பல.... பலப்பல.. பலப்பல.. தொடரும்... தொடரும்.....
என்னை பொறுத்தவரை உண்மையான தமிழ் இதயங்களை திருடிய களவாணி இவர்தான்.

Tuesday, December 21, 2010

கருணாநிதி ஒழிந்தான் இனி கவலையில்லை-மேலவை நீக்குதல் தீர்மானம்


"நான் இல்லாவிட்டால் இந்த மேலவை கலைக்கப்படாமல் நீடிக்குமென்றால் நான் இந்தப் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன். கருணாநிதி ஒழிந்தான். இனி கவலையில்லை. அவன் இல்லாத மேலவை தொடர்ந்து நீடிக்கட்டும் என்ற முடிவை முதலமைச்சர் (எம்.ஜி.ஆர்) எடுக்க முன்வரட்டும்"

தமிழக சட்டமன்ற மேலவை 1986ல் கலைக்கப்படுவதற்கு முன்னால் மேலவையில் திமுக தலைவர் மு. கருணாநிதி பேசியதுதான் மேலே இருப்பது. பலத்த சர்ச்சைகளுக்கு இடையே கலைக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்ற மேலவையைத் திரும்பக் கொண்டுவருவதற்கு திமுக அரசு முறைப்படியான நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது.

நாடாளுமன்றத்துக்கு மாநிலங்களவை இருப்பது போல சட்டமன்றங்களுக்கு மேலவை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நிரம்பிய அவை சட்டப்பேரவை. மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களும் நியமன உறுப்பினர்களும் நிரம்பியது மேலவை. படித்தவர்கள், பண்பாளர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், பத்திரிகையாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் போன்றவர்கள் இடம்பெறவேண்டும் என்ற காரணத்துக்காக உருவாக்கப்பட்டது மேலவை.

இந்த அவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் பலரும் தமிழக அரசியல் சரித்திரத்தையே மாற்றியமைத்தவர்கள். சட்ட நிபுணர் லட்சுமணசாமி முதலியார், ஆந்திர கேசரி டி. பிரகாசம், மூதறிஞர் ராஜகோபாலாச்சாரியார், நீதிக்கட்சித் தலைவர்களான பி.டி.ராஜன், டாக்டர் நடேசன், மூத்த காங்கிரஸ் தலைவர் பக்தவத்சலம், முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கடராமன், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். கலைஞர். ம.பொ.சி போன்றவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் மேலவையில் இடம்பெற்றுள்ளனர். சுவைமிக்க விவாதங்கள் பல நடந்துள்ளன.

கனவான்கள் சங்கமிக்கும் இடம் என்று வர்ணிக்கப்பட்ட இந்த அவை ஒருகட்டத்தில் ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பின்வாசல், மக்களைச் சந்தித்து வெற்றிபெற இயலாதவர்கள் பதவிக்கு வருவதற்கான கொல்லைப்புறம் என்றெல்லாம் விமரிசிக்கப்பட்டது. 1952 தேர்தலில் நடைபெற்ற தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக யாரை முதல்வராக்குவது என்ற கேள்வி எழுந்தபோது அதற்குப் பொருத்தமானவராகக் கருதப்பட்டவர் ராஜாஜி.

ஆனால் அவர் அப்போது சட்டமன்ற உறுப்பினராகவும் இல்லை. மேலவை உறுப்பினராகவும் இல்லை. இந்த இரண்டு அவைகளில் ஒன்றில் உறுப்பினராக இருப்பவர் முதலமைச்சராகலாம். அதன்படி முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்ட ராஜாஜி, பிறகு மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களைச் சந்திக்காமலேயே முதலமைச்சராகிவிட்டார் ராஜாஜி என்று எதிர்கட்சிகள் விமரிசித்தன.

அதேபோல 1967 தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதலமைச்சராகப் பதவியேற்க வேண்டிய அண்ணாவோ நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இதனால் அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு முதலமைச்சரானார். பிறகு தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கட்சிக்குப் பணியாற்றுபவர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள், கட்சித் தலைமைக்கு வேண்டியவர்கள் ஆகியோரும் மேலவைகளில் இடம்பெறத் தொடங்கினர். குறிப்பிடத்தகுந்த உதாரணம் எம்.ஜி.ஆர் மேலவை உறுப்பினரானது. 1962 தேர்தலில் திமுகவின் வெற்றிக்காகப் பல இடங்களுக்கும் நேரடியாகப் பிரசாரம் செய்த எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மேலவை உறுப்பினர் பதவியை வழங்கினார் அண்ணா. ஆனால் கட்சிக்குள் இருப்பவர்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகத் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஜி.ஆர்.

1985ல் ஈழத்தமிழர்கள் இலங்கையில் தாக்கப்படுவதைக் கண்டித்து திமுக தலைவர் கருணாநிதியும் அன்பழகனும் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர். அதன்பிறகு சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கருணாநிதி. இந்தச் சமயத்தில்தான் பிப்ரவரி 1986ல் தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றியிருந்தது. அஇஅதிமுகவுக்கு படுதோல்வி. எம்.ஜி.ஆர் என்ற மிகப்பெரிய அரசியல் ஆளுமைக்குக் கிடைத்த முக்கியத் தோல்வியாக அந்த உள்ளாட்சித் தேர்தல் தோல்வி கருதப்பட்டது.

இந்தத் தோல்விக்கு சில மாதங்களுக்கு முன்புதான் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி மற்றும் எழும்பூர், பெரம்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் திமுகவே வெற்றி பெற்றிருந்தது. தற்போது உள்ளாட்சித் தேர்தல்களில் கிடைத்த தோல்வி எம்.ஜி.ஆரைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. அடுத்த இரண்டு மாதங்களில் மீண்டும் ஒரு தேர்தல் வந்தது. அதுவும் சட்டமன்ற மேலவைக்கு.

பட்டதாரிகளும் ஆசிரியர்களும் வாக்களித்து உறுப்பினர்களைத் தேர்வுசெய்ய வேண்டும். அப்போது நான்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் பூர்த்தி ஆகிவிட்டதால் அந்தத் தொகுதிகளுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் திமுகவுக்கு இரண்டு தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. மற்ற இரண்டு தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். ஆக, நான்கில் ஒரு தொகுதியிலும் அஇஅதிமுக வெற்றி பெறவில்லை. எம்.ஜி.ஆருக்கு மீண்டும் ஒரு தோல்வி கிடைத்தது.

அடுத்து, மேலவைக்கு ஆளுநரால் நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. அமைச்சரவை பரிந்துரை செய்யும் மூவரை மேலவை உறுப்பினர்களாக ஆளுநர் நியமிக்கமுடியும். எம்.ஜி.ஆர் அரசு அறிவித்த மூன்று பேரில் ஒருவர், பிரபல நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா.

எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்தவர். ரகசிய போலீஸ் 115, ஊருக்கு உழைப்பவன், மீனவ நண்பன் போன்ற படங்களில் நடித்தவர். இதயக்கனி படத்தில் எம்.ஜி.ஆருக்காக ஒற்றைப் பாடலுக்கும் ஆடியிருந்தார். பொருளாதார ரீதியாக பலவீனப்பட்டிருந்த அவரைக் கைதூக்கிவிட நினைத்தார் எம்.ஜி.ஆர். மேலவைக்கு வர வாய்ப்பு கொடுத்தார். அவரும் மேலவைக்கு நியமிக்கப்பட்டார்.

இந்த இடத்தில்தான் இன்னொரு பிரச்னை வந்தது. நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா கடன் பிரச்னை காரணமாக ஏற்கெனவே திவால் நோட்டீஸ் கொடுத்திருந்தார். ஆகவே அவரை மேலவைக்கு நியமித்தது செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பத்திரிகைகள் தோண்டித் துருவ ஆரம்பித்துவிட்டன.

பெரிய அளவிலான தொகையைக் கடன் பாக்கி வைத்திருக்கிறார் நிர்மலா என்று தெரிந்ததும் நீதிமன்றத்தில் அவர் சார்பாக முதலில் ஏழு லட்சம் ரூபாய் கட்டப்பட்டது. பிறகு மூன்று லட்ச ரூபாய் கட்டப்பட்டது. பணம் கட்டியது யார் என்ற கேள்வி பகிரங்கமாக எழுப்பப்பட்டபோது வெண்ணிற ஆடை நிர்மலாவிடம் இருந்து ராஜினாமா கடிதம்தான் பதிலாக வந்தது.

மேலவையில் திமுகவின் பலம் உயர்ந்தது. இதன்மூலம் மேலவை எதிர்க்கட்சித் தலைவராக கருணாநிதி வரப்போகிறார் என்று ஊடகங்கள் எழுதின. கருணாநிதியும் அதை ஆமோதித்தார். இதற்கிடையே சட்டமன்ற மேலவை முற்றிலுமாக நீக்கிவிடலாம் என்பதற்கான மசோதா தாக்கல் செய்யப்படக்கூடும் என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சிகள் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தன. திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலவையை ஒட்டுமொத்தமாக நீக்கிவிடும் நடவடிக்கையை கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். ஆனாலும்
14 மே 1986 அன்று சட்டமன்றத்தில் மேலவை நீக்குதல் தீர்மானம் நாவலர் நெடுஞ்செழியனால் முன்மொழியப்பட்டது. வாக்கெடுப்பு தொடங்கியது. பெரும்பாலான எதிர்க்கட்சிகள் தீர்மானத்தை எதிர்த்தன. இந்திரா காங்கிரஸ் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளியேறியது. தீர்மானம் நிறைவேறியது. சட்டமன்ற மேலவை நீக்கப்பட்டது!
25 ஆண்டுகளாக இல்லாமல் இருந்த மேல்சபை அமையப்பெற்று கூடிய விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது .

காபியை கோப்பையில் வைத்துக் குடித்தால் சூடாக இருக்கும். அதையே சாஸரில் ஊற்றிப் பருகினால் பதமாக இருக்கும். சட்டமன்றம் கோப்பை போல; மேலவை, சாஸர் போல. ஒரு விவகாரத்தை சட்டமன்றத்தில் பேசினால் அனல் பறக்கும். அதுவே, மேலவையில் பேசப்படும்போது நிதானமான முறையில் நாசூக்காகப் பேசப்படும். இது மேலவை பற்றி அண்ணா சொன்னது.

Monday, December 20, 2010

வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே


தமிழினத்தின் சிறப்பை அறிய வேண்டுமெனில் தமிழ் மொழியைப்பற்றி அறிதல் வேண்டும். மொழியின் இலக்கண கட்டமைப்பில் திகழக்கூடிய திகட்டாத இலக்கியங்களை அறிதல் நலம். இவைகளுக்கெல்லாம் தொடக்கமாகத் திகழும் தமிழ் வரிவடிவங்களைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது சிறப்பாகும்.
ஏனெனில் பிறிதொரு உதவி ஏதுமின்றி தமிழினம் தனக்காக, தானே முயன்று உருவாக்கிய மொழியே தமிழ்.
ஒரு இனம் தன்னுடைய வரலாறு பற்றி மிகத் தெளிவான விளக்கத்தை தன்னகத்தே கொண்டிருப்பதென்பது அதனது மிகப் பெரிய பலம் என்றுதான் கூறவேண்டும். தனது இனத்தின் வரலாறு, வரலாற்றுச் சம்பவங்கள், அந்தச் சம்பவங்களுக்கான ஆதாரங்கள், பற்றிய அறிவையும் தெளிவையும் ஒரு இனம் நிச்சயம் கொண்டிருக்கவேண்டும். உலகத்தால் அங்கீகரிக்கப்படுவதற்கு இந்த அறிவும் தெளிவும் மிக மிக அவசியம்.

யூதர்களுக்கு இனது இனத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றிய அறிவும் தெளிவும் மிக அதிகமாகவே இருக்கின்றது. தமது இனத்தின் வலாறு பற்றிய அறிவு இல்லாத யூதர்களே இல்லை என்று கூறலாம். யூதக் குழந்தைகள் கூட தமது இனம் பற்றி, தமது மொழி பற்றி, தமது மதம் பற்றி மிக மிக விரிவான அறிவைத் தமதாகக் கெண்டவர்களாக இருக்கின்றார்கள்.  தமது சந்ததி என்ன? 3000, 4000 வருடங்களுக்கு முன்னர் தமது இனத்தை ஆண்ட அரசர்கள் யார், அவர்களது சந்தியினர் யார் என்ற வரலாறு ஆதாரங்களுடன் யூதர்கள் கரங்களில் இருக்கின்றது.

ஈழத் தமிழரைப் பொறுத்தவரையில் எம்மிடம் - எம்மில் பலரிடம் இருக்கின்ற ஒரு மிகப் பெரிய குறை இதுதான்.

தமிழின் வரலாறு எமக்கு தெரியாது. ஆரியர்களுடைய வரலாற்றைத்தான், அவர்கள் புனைந்த கதைகளைத்தான் நாம் தமிழின வரலாறாக கூறிக்கொண்டிருக்கின்றோம்.

ஒரு தமிழ் அரசன் ஆரியர்களால் அழிக்கப்பட்ட தினத்தை ஆரியர்கள் கொண்டாடுகின்றார்கள். அந்த கொண்டாட்டத்தை விளக்கம் தெரியாமல் நாமும் கொண்டாடுகின்றோம்- தீபாவளியென்று. (முள்ளிவாய்க்காலில் சிங்களவர்கள் பெற்ற வெற்றியை எதிர்காலத்தில் சிங்களவர்களுடன் சேர்ந்து எமது சந்ததிகள் கொண்டாடுவதைப் போன்றதுதான் இது)

தமிழர்களின் வரலாறு பற்றிய அறிவை நாம் கொண்டிருக்கவேண்டும்.

தொல்காப்பியம் பற்றியும் அதன் உள்ளடக்கம் பற்றியும் நாம் தெரிந்திருக்கவேண்டும். ஆத்திசூடி எங்களில் எத்தனை பேருக்கும் தெரியும்?

எமது இனத்தின் பெருமைகள் பற்றி ஒவ்வொருவரும் அடிக்கடி பேசிக்கொள்ளவேண்டும். எமது அடுத்த சந்ததிக்கு கூறி வைக்கவேண்டும்.

ஒரு இனம் விடுதலையை நோக்கிப் பயணிக்க வேண்டுமானால், அந்த இனத்திற்கான உலக அங்கீகாரம் மிக மிக அவசியம்.

புலிகளைப் பிளவுபடுத்த முடிந்த காரணத்தாலேயே அவர்களுடனான யுத்தத்தில் அரசாங்கம் வெற்றியீட்ட முடிந்தது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவிக்கின்றார்.

இந்நாட்டில் பதவிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் புலிகளைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாகவும், அவ்வாறாக புலிகளைப் பிளவுபடுத்தும் நோக்கிலேயே தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச காலத்தில் புலிகளுக்கு ஆயுதம் வழங்கப்பட்டதாகவும் அவர் ஒப்புக் கொள்கின்றார்.

அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவினால் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கூட புலிகளைப் பிளவுபடுத்தும் நோக்குடனேயே செய்து கொள்ளப்பட்டதாக அவர் தெரிவிக்கின்றார்.

மேலும் ஜே. ஆர். ஜயவர்தன, சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அரசாங்கங்களும் புலிகளைப் பிளவுபடுத்தும் வேலைத் திட்டங்களை முன்னெடுத்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.

அவ்வாறான பிளவுபடுத்தல் நடவடிக்கை வெற்றியடைந்ததன் காரணமாகவே புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா ஒரு கட்டத்தில் அரசாங்கத்துடன் இணங்கிப் போகும் நிலைப்பாட்டுக்கு மாற்றமடைந்ததாகவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார். யோகியும் அதற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

ஆயினும் புலிகளைப் பிளவுபடுத்துவதில் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமே வெற்றி கண்டதாகவும், அதன் காரணமாகவே யுத்தத்தில் வெற்றியை ஈட்ட முடிந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்களை அரவணைப்பதாயின் அதனை வெகு அவதானத்துடன் செய்ய வேண்டுமெனக் குறிப்பிடும் அவர், புலிகளுக்கு ஆதரவான தமிழ் மக்களை எக்காரணம் கொண்டும் அரவணைக்க முற்படக் கூடாது என்றும் வலியுறுத்துகின்றார்.

இதற்கு முக்கிய காரணம் நம் வரலாறு எமக்கு தெரியாது என்பதுதான்.


Sunday, December 19, 2010

சீமான் தூண்டுவது தவறில்லையா?

ஒப்பிட முடியாத ஒரு சில உதாரணங்கள் . 
தன்னுடைய 14 வது வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபடலானார். அதன்பின் இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் மூலம் தன் அரசியல் தீவிரத்தைக் காட்டினார். அவர் வாழ்ந்த திருவாரூர் பகுதியில் இளைஞர்களை மாணவ நேசன் என்ற துண்டு கையெழுத்துப் பதிப்புகள் மூலம் ஒன்று திரட்டினார். அவ்விளைஞர் அணியை பின் மாணவர் அணியாக தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற பெயரில் உருவாக்கினார். தமிழ்நாட்டில் உருவான முதல் திராவிட இயக்க மாணவர் அணி என்ற நிலையை ஏற்படுத்தினார். கருணாநிதியும் அவரது மாணவர் அணித் தோழர்களும் பல்வேறு குடிசை வாழ் மக்களிடையே சென்று சமூக பணிகளிலும், விழிப்புணர்வு வேலைகளிலும்  ஈடுபட்டனர்.

செபாஸ்டின் சீமான் 
சென்னை வரும்போது எனக்கு வயசு 19. ஊரில் இருக்கிற வரைக்கும் பரமக்குடி, இளையான்குடி தாண்டி எதுவும் தெரியாது. கல்லூரி படிக்கும்போதுதான் மதுரை, ராமேஸ்வரத்துக்கு நண்பர்களோட போனேன், அதுவும் சினிமாப் பார்ப்பதற்குத்தான். அதனால் சென்னை வந்தபோது அந்த பிரம்மாண்டம் எனக்கு ரொம்ப பிரமிப்பாயிருந்தது. இது சீமான் பேட்டியில் கூறியது .


சீமானின் தமிழுணர்வையோ, அவரது ஈழ ஆதரவையோ குறை சொல்வதல்ல என் நோக்கம்..
ஆனால் அவர் செய்வது சொல்வது எல்லாம் அவரை ஒரு சுயநலவாதியாகவே காட்டுகிறது.. சினிமாவில் ஓய்வு பெற்றவர்களும், வெற்றி பெற முடியாதவர்களும் அரசியலை நோக்கிப் பார்வையைத் திருப்புவது இயல்பு.. சீமானும் அதே பாணியில், கலைஞரைத் தாக்கிப் பேசினால் மக்கள் நம்மைத் திரும்பிப்பார்ப்பார்கள், அப்படியாவது 2011ல் இல்லாவிட்டாலும் 2016ல் ஆவது நம் கட்சியை ஒரு சக்தியாக மாற்றிவிடலாம் என நினைக்கிறார்..

கலைஞரைக் குறை சொல்லும் அவர் ஈழத்திற்காகக் கலைஞர் செய்த தியாகங்களை மறைத்துவிட்டு ஏதோ தன்னைவிட்டால் வேறு யாரும் இல்லை என்பதைப் போல் பேசுகிறார்….சீமான் அவர்கள் சினிமாவில் முயன்று கொண்டிருக்கும்போதெல்லாம் ஈழம் பற்றி ஏன் பேசவில்லை… சீமான் ஈழம் பற்றி முதல் அறிக்கை விட்ட நாளன்றுதான் ஈழப் பிரச்சனை உருவானதா?

அப்பாவித் தமிழர்கள் ஈழத்தில் கொல்லப்படுகிறார்கள் எனக் கூறிக் கொண்டே, தமிழகத்தில் சிங்களவன் எங்கே படித்துக் கொண்டிருக்கிறான், எங்கிருக்கிறான் என்று தெரியும், பட்டியல் இருக்கிறது என்றாரே…இது தான் வீரமா? அந்த சிங்கள மாணவர்கள் அப்பாவிகள் இல்லையா? ராஜீவ் படுகொலைக்காக அப்பாவித் தமிழர்களைக் கொல்கிறார்களே எனச் சொல்லிக் கொண்டு, ராஜபக்க்ஷேவின் தவறுக்காக அப்பாவி சிங்கள மாணவர்கள் மீது வன்முறையைத் தூண்டுவது தவறில்லையா?

சாதி அடையாளம் பூசிக் கொள்ளத் தயாரான உங்களை எப்படித் தமிழர்கள் பொதுவானவராக ஏற்றுக் கொள்ள முடியும்…

அரசியலில் ஈடுபடாமல் மக்கள் இயக்கமாக, ஈழ மக்களுக்கு ஆதரவு திரட்டும் அமைப்பாக இயங்கியிருந்தால் உங்கள் பின்னால் மக்கள் அணிதிரண்டிருப்பார்கள்….

அரசியல் ஆதாயம் தேடி, ஈழத்தை வைத்து இங்கு அரசியல் நடத்துபவர்கள் எல்லாம் ஒரு வகையில் சுயநலவாதிகளே..


நன்றி -தமிழ் 

Saturday, December 18, 2010

அக்கரைக்கும் அறிவுரைக்கும் நூலிழைதான் வேறுபாடு


இரண்டும் ஒன்றுபோல் பொருள் தந்தாலும். புரிந்துகொள்ளுதல் என்ற நிலையில் பொருள் மாறுபடுகிறது. அறிவுரை சொல்வது அல்வா சாப்பிடுவது போல் எல்லோருக்கும் எளிது. தம் மேதாவித்தனத்தை காட்டுவதற்கே அறிவுரையை பெரும்பாலோர் கையில் எடுக்கின்றனர். இரு காதுடன் யாராவது வாய் பேசாதவர்கள் எக்கு தப்பாக மாட்டிவிட்டால் போதும், 'இந்த பிடி அட்வைஸ்' என்று நம் முழுத்திறமையையும் கேட்பவர் காது இரத்தம் வழியும் வரை நாம் விடுவதில்லை.

சரி அறிவுரை எங்கு செல்லுபடியாகிறது. நம்மை யாராவது மதித்தால், அப்படி நம்மை மதிப்பவர் விரும்பிக் கேட்டுக் கொண்டால் மட்டுமே அறிவுரை அறிவுரையாக கேட்கப்படும். அப்படி இல்லாமல் வழியே சென்று அறிவுரை சொல்கிற பேர்வழியாக நம்மை நினைத்துக் கொண்டு 'இதை நீ செய்வதைக் காட்டிலும் உருப்படியாக வேறு ஏதாவது செய்' என்று சொன்னால் அது அறிவுரையாகப் பார்க்கப்படுமா ? இல்லவே இல்லை அது அகம்பாவ உரை என்று புறந்தள்ளிவிடுவர். நாம் பிறருக்கு அறிவுரை சொல்லும் முன் நாம்மை முதலில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது மற்றவர்கள் அறிவுறுத்தலை நாம் ஏற்றுக் கொள்கிறோமா, அறிவுரை சொல்வதற்கான சூழல் இருக்கிறதா, எல்லாவற்றையும் விட நமக்கு அந்த தகுதி இருக்கிறதா என்று. அப்படி சீர்தூக்கிப் பார்க்காதவர் ஏதோ பொது நல விரும்பி போல் அவதாரம் எடுக்க முயன்றால் அவருக்கு ஏச்சுக்களும் பேச்சுக்களும் மட்டுமே மிஞ்சும்.

அறிவுரை சொல்பவர் ஆசானாக இருக்கவேண்டும், இல்லை என்றால் அனுபவப் பாடம் படித்தவரோ, உணர்ந்தவராக இருக்கவேண்டும், அத்தகையவரை யாராவது இனம் கண்டு 'இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு ?' என்று கேட்டால் மட்டுமே அறிவுரை சொல்லலாம். இல்லை என்றால் ஆபத்தில் இவர் சிக்கப் போகிறார், இதனால் இவருக்கு பெரும் துன்பமோ கேடோ நிகழப் போகிறது என்று முன் கூட்டியோ நாம் உணர்ந்திருந்தால் அந்த நபருக்கு அறிவுரை சொல்லலாம். அல்லது இதைச் செய்வதால் நீங்கள் போற்றப்படுவீர்கள் என்று அவரே உணராததை ஒரு வேளை நாம் நன்கு உணர்ந்திருந்தால் அறிவுறுத்தலாம். செல்லுபடியாகாது என்று தெரிந்தே அறிவுரை சொல்லப் போனால் பெரும்பாலும் அவமானமே மிஞ்சும்.

அக்கரைக்கும் அறிவுரைக்கும் நூலிழைதான் வேறுபாடு, இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால் தான் உறவுகளுக்குள் விரிசல் ஏற்படுகிறது. நமக்கு வேண்டியவர்கள் நமக்கு அறிவுரை சொன்னால், உடனே என்ன சொல்லுகிறார் எனக் கவனியாமல், உடனே சொல்பவர் தகுதியை எடை போடக் கூடாது. மாறாக எதற்காக இவர் நமக்கு அறிவுரை சொல்கிறார் என்று பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கும் போது நம்மால் ஒரு விசயத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும். அதாவது நம் மீது இவர் வைத்துள்ள அன்பின் காரணத்தால் நமக்கு அறிவுரை சொல்கிறார் அது அறிவுரையின் பெயரில் செலுத்தும் அக்கரை. அங்கே அறிவுரை அக்கரையாக பார்க்கப் படாவிட்டால் ஈகோ (ஆணவம்,ஆகம்பாவம்) தலை தூக்க ஆரம்பித்து யார் அறிவாளி என்ற எதிர்க்கேள்வி ஏற்பட்டு உறவுகள் சீர்கெட ஆரம்பிக்கும்.

ஆகவே நண்பர்களோ, சொந்தங்களோ எதையாவது அறிவுறுத்தினால் நாம் அங்கு பார்க்க வேண்டியது அன்பின் வெளிப்பாட்டில் மறைமுகமாக சொல்லப்படுவது அறிவுரை மட்டின்றி அதையும் தாண்டிய நம் மீதான அக்கரை!

 நன்றி -GK
-

Wednesday, December 15, 2010

துவேசத்தை விதைகும் சீ சீமான்


உண்மையாகச் சொன்னால் இந்தக் கட்டுரையை எழுதும் தெம்பும் திராணியும் எனக்கில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த வாரம் எழுதலாம்…… இல்லையில்லை அடுத்த வாரம் எழுதலாம் என்று ஒவ்வொரு வாரமும் தள்ளிப் போட்டுக் கொண்டே போன கட்டுரைதான் இது.

அதுவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாய் தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழி ஈழ துயரத்தை ஓரிரு பக்கங்களில் அடக்கிவிட முடியுமா என்ன?

இது வரையிலும் இதுபற்றி வெளிவந்துள்ள நூற்றுக்கணக்கான புத்தகங்கள்…..
ஆயிரக்கணக்கான கட்டுரைகள்……
மரியாதைக்குரிய நீதிபதிகளது உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகள்…
இதோ ..
தமிழக இளைஞர்களே ...

"இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று"

என்பது வள்ளுவன் குறள் ஆனால் சமீப காலங்களாக ஊருக்கு ஊர் மேடை போட்டு தமிழக முதல்வரையும் மத்திய அரசையும் , தேசிய ஒருமைபடையும் வன் சொற்களால் வசைபாடியும் திரையுலக நடிகர்களையும் மிரட்டி வருகிறார் ஒருவர் . அவரை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளுங்கள் . வாய்சவடால் வீரரான அவர் ஒரு பேட்டியில் என்னுடன் சிறையில் இருந்த கைதி ஒருவன் "மலையாளியையோ கன்னடத்தானயோ கொலை செயவில்லை சக தமிழனை கொன்றான் என்றார், அப்படியானால் இவருடைய எஜமானர்களாகிய "விடுதலை புலிகள்" செய்த வரலாற்றை பின்னோக்கி சற்று 


சிறி சபாரத்தினம் யார் ?
1986 மே 6ம் தேதி, ஈழ விடுதலயை வைத்திருந்த அந்த இதயம் தோட்டக்களால் சுக்குநூறாக சிதறடிக்கபட்டது, ஒன்றல்ல இரண்டல்ல, எதிரில் நிராயுதாபாணியாக நின்ற அந்த போராளியின் உடலை 20க்கும் அதிகமான குண்டுகள் சல்லடையாக்கின, சுட்டது எதிர்த்த சிங்களவன் அல்ல , தன் ரத்தம் பகிர்ந்த சகோதரன்.என்ன தவறு செய்திருந்தாலும் சபாவுக்கு இந்த தண்டனை அதிகம், அதற்க்கு என்ன காரணம், எந்த தரப்பில் இருந்து சொல்லபட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.அன்று சரிந்து விழுந்தது சபாவின் சடலம் மட்டுமல்ல, ஈழம் என்கிற ஒரு தேசத்தின் நம்பிக்கை.

நடராஜன் தங்கதுரை மற்றும் யோகசந்திரன்(குட்டிமணி) என்பவரால் உருவாக்கபட்ட ஒரு சிறு குழு தான் பின்னாளில் தமிழிழ விடுதலை இயக்கமாக(டெலொ) மாறியது.அப்பொழுது அவர்களுடன் களத்தில் தளபதியாக செயல்பட்டவர் சிறி சபாரத்தினம். இந்தியாவிற்க்கு தப்ப முயன்ற தலைவர்கள் இருவரும் இலங்கை ராணுவத்தால் கைது செய்யபட, இடைக்கால தலைவராக பொறுப்பேற்று இயகத்தை வழி நடத்தினார் சபா. குட்டிமணியும், தங்கதுரையும் சிறையில் கொடுராமக கொலை செய்யபட, டெலோவின் தலைவரானார் சிறி சபாரத்தினம்.


தலைவர் என்று ஆணையிடுபவரல்ல சபா, களத்தில் இறங்கி போராடுபவர்.இன்றும் சபாவை அப்படி தான் ஈழ தமிழர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் நினைவு கூறுகின்றனர்.ஈழ விடுதலை இயக்கங்களும் அனைத்தும் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்க, இந்திராவும் போராளி இயக்கங்களுக்கு தாரளமாகவே உதவியளித்தார்.

டெலோ, இராஸ்,விடுதலை புலிகள் என பல இயக்கங்களாக சிதறிகிடந்தவற்றை ஒன்றாக இணைத்து ENLF ஆக உருவாக்கபட்டது.அனைத்து போராளிகளும் ஒன்றாக இணைந்து தனி ஈழத்திற்க்காக் போராடுவது என உறுதி செய்யபட்டது.

தங்களின் தொப்புள் கொடியான தமிழகத்தின் அரசியல்வாதிகள், ஈழ பிரச்ச்னையை அரசியலாக்க முயலுகிறார்கள் என்ற ஒரு சிறு விஷ்யம் தெரியாமல், புலிகளும் ,மற்ற இயக்கங்களும் பிரிந்தனர். எம்ஜிஆர் புலிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்ய, கலைஞர் டேலொவிர்க்கு தன் ஆதரவை தெரிவித்திருந்தார். சபா, கலைஞரின் அன்பிற்க்குரியவரானார். கலைஞர் திரைக்கதை எழுதிய ‘பாலைவன் ரோஜாக்கள்’ படத்தில் கதநாயகனின் பெயர் சபாரத்தினம்.

இந்திய உளவுத்துறை போராளி இயக்கங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து அவர்களுக்கு வியுகங்களையும் அமைத்து கொடுக்க, இதனை ஏற்க புலிகள் தயங்கினர். இந்தியா தன் சுயலாபத்திற்க்கு ஈழ போராளிகளை பயன்படுத்துகிறதென முடிவு செய்த்னார், ஆனால் இந்தியாவின் உளவுத்துறையின் வாக்கை வேத வாக்காக் மற்ற இயக்கங்கள் எடுத்து கொள்வதாக் கோபப்பட்டனர்.

தனி ஈழத்தை குறிக்கோலாக கொண்டு மற்ற இயக்கங்கள் இந்தியாவின் உதவியுடன் செயல்பட்டுக்கொண்டிருந்தன, அவர்களுக்கு தேவை தனி ஈழம்.

இயக்கத்துனுள் கருத்து வேறுபாடுகள் முற்றின,எந்த இயக்கம் பெரியது என்ற மிக மோசமான ஃமாபியா அரசியல் ஈழ விடுதலை இயக்கத்தினுள் புகுந்தது. பரஸ்பரம் சில நபர்கள் கொலை செய்ய்பட்டனர், அந்த கொலைகள் மற்ற இயக்க்ங்கள் தான் செய்கின்றன என தமக்குள் சந்தேக பட தொடங்கினர்.

அந்த வழியில், புலிகள் இயக்கதிற்கு உயிர் சேதமும், தனி ஈழம் என்ற லட்சியத்தில் விரிசல் இருபதாக புலிகள் மற்ற இயக்கங்களை சந்தேக பாட தொடங்கியது, அவர்கள் ஒரு படி மேலே போய் சில கொலைகளுக்கான காரணத்தை ஆராயமால் ‘துரோகி’ பட்டத்தை சபாவிர்க்கு கொடுத்தனர்.

‘துரோகி’ என்ற வார்த்தை வந்துவிட்டால் விடுதலை புலிகள் அதற்கு ஒரே தண்டனையாக வைத்திருத்து மரணத்தை.

சபாவிற்க்கு டார்கெட் வைக்கபட்டது. அப்பொழுது சபாவிற்க்கு யாரும் அடைக்கலம் தர கூடதெனவும், சபாவை உடனடியாக் பிடித்து கொடுக்குமாறும் மக்களுக்கு விடுதலை புலிகள் ஆணையிட்டனர்.சபா என்ன செய்வதறியாமல் மறைந்து வாழ்ந்து வந்தார்.

தமிழகத்தில் அப்பொழுது நடைபெற்ற டெசோ மாநாட்டின் போது, சபாவின் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்த கலைஞர், விடுதலை புலிகள் இயக்கத்திடம் தன் சார்பில் சபாவை ஒன்றும் செய்ய வேண்டாம் என கோரினார், புலிகளும் அதற்க்கு செவி சாய்த்தனர்.சபாவின் உயிருக்கு தங்களால் ஆபத்து வராது என உறுதியளித்தனர்.


கஞ்சா காடு ஒன்றில் சமாதானத்திர்க்கு வந்த சபாரத்தினத்தை புலிகள் இயக்கத்தை சேர்ந்த கிட்டு, மண்டியிட்ட சபாரத்தினம் எவ்வளவும் கெஞ்சியும் அவருக்கு மரணத்தை பரிசாகளித்தார். போராளி என ஆனபோதே சபாவின் மரணம் உறுதியானது தான் என்ன தன் சகோதரனால் கொல்லபட்டார்.


உமா மகேஸ்வரன் யார்? 

காதல் என குற்றஞ்சாட்டப்பட்டதால், விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு உமா மகேஸ்வரன்வெளியேறினார். பிரபாகரன் காதல் விவகாரம் தொடர்பில் உமாமகேஸ்வரனிடம் கேள்விஎழுப்பினார். "எங்களுக்குள்எந்தக் காதலும் இல்லை'' என்று மறுத்தார், உமா மகேஸ்வரன். "ஆதாரம் இல்லாமல் நான் குற்றம் சாட்டமாட்டேன். நாம்பிரிவதற்கான நேரம் வந்துவிட்டது. நீ ஊர்மிளாவை மணந்து கொள்வதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.ஆனால் இயக்கத்தில் இருந்து வெளியேறிவிடு. தவறான முன்னுதாரணம் எங்களுக்குத் தேவை இல்லை'' என்றுபிரபாகரன் கண்டிப்புடன் கூறினார்.
உமா மகேஸ்வரனை இயக்கத்தில் இணைத்து அவருக்குத் தலைவர் பதவியை அளித்து மகிழ்ந்தவரும் அவரே.ஊர்மிளாவை இயக்கத்திற்கு கொண்டு வந்தவர் உமா மகேஸ்வரன். இயக்கத்தில் சேருவதற்கு முன்பே இருவருக்கும்இடையே நெருக்கம் இருந்து இருக்கிறது. காதல், `செக்ஸ்' கூடாது என்ற இயக்கத்தின் கொள்கையை உமா மீறிவிட்டதாகபிரபாகரன் கருதினார்.
"ஒரு புரட்சி இயக்கத்தின் தலைவன், அதன் ஒழுக்க நெறிகளில் முழுமையான நம்பிக்கையும், அர்ப்பணிப்பும்உள்ளவனாக இருக்க வேண்டும்; தலைவனே விதிகளை மீறினால் அந்த இயக்கம் அழிந்துவிடும்'' என்பது பிரபாகரனின்அன்றைய எண்ணம். இதனால் அவர் பிடிவாதமாக இருந்தார். உமா மகேஸ்வரனோ ராஜினாமா செய்ய மறுத்தார்.
சிறிது காலத்திற்கு முன்பு, விடுதலைப்புலிகளின் தலைவராக உமா மகேஸ்வரனை உலக நாடுகளில் உள்ள போராளிப்பிரதிநிதிகளிடம் அறிமுகம் செய்து வைத்த லண்டன் பிரதிநிதிகள், இந்த மோதலை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் சார்பாக கிருஷ்ணனும், ராமச்சந்திரனும் சென்னைக்கு வந்து பிரபாகரனைச் சந்தித்தனர். "உமா மகேஸ்வரன்பெரிய தவறு எதுவும் செய்யவில்லை. காதல்தானே! விட்டு விடுங்கள்'' என்று அவர்கள் பிரபாகரனிடம் பரிந்துரைசெய்தனர்.

தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பு(`பிளாட்') என்று பெயர். 1982-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ந்தேதி உமா மகேஸ்வரனின் வலதுகரமாகவும், "புதிய பாதை''என்ற இதழை நடத்தி வந்தவருமான சுந்தரம் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
"புதிய பாதை'' பத்திரிகையில் விடுதலைப்புலிகளையும், தமிழர் விடுதலைக் கூட்டணியையும் சுந்தரம் கடுமையாகவிமர்சனம் செய்து வந்தார். அச்சகத்துக்குள் இருந்த சுந்தரத்தை ஜன்னல் வழியாக சீலன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். ஊர்மிளா விவகாரம் பூதாகரமாக கிளம்பியபோது, விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைக்கடத்தி ஒளித்துவைத்தது, இந்த சுந்தரம்தான். இந்தக் கொலைக்கு விடுதலைப்புலிகள் பொறுப்பேற்றனர். பிரபாகரனைப் பழிவாங்க உமாமகேஸ்வரன் தமிழ்நாட்டுக்குத் தப்ப முடிவு செய்தார். கண்ணன், காக்கா, ஆண்டன், தாசன் ஆகியோருடன் பிப்ரவரி25-ந்தேதி படகில் ஏறி தமிழகம் வந்தார். படகில் திரும்பிய ஆண்டனை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்அளித்த தகவலின் பேரில் வவுனியாவில் இருந்த "பிளாட்'' முகாமை ராணுவம் தாக்கியது. அதில் இருந்த ஆயுதங்கள்பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை வந்து சேர்ந்த உமா மகேஸ்வரன், சென்னையில் தமிழ் அறிஞர் பெருஞ்சித்திரனார் இல்லத்தில் தங்கிஇருந்தார். சுந்தரத்தின் கொலைக்கு, பிரபாகரனை பழிவாங்கக் காத்திருந்தார். உமா மகேஸ்வரனை தீர்த்துக்கட்டபிரபாகரனும் சமயம் பார்த்திருந்தார்.
சென்னை பாண்டி பஜாரில் உமா மகேஸ்வரனை, பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டார். ஆனால், உமா மகேஸ்வரன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார்.

யார் இந்த தோழர் க.பத்மநாபா ?

பாசிசத்திற்கெதிராகவும், ஏகாதிபத்தியத்திற்கெதிராகவும், இந்தியாவின் நண்பனாக, சர்வதேச முற்போக்கு விடுதலை இயக்கங்களின் உற்ற தோழனாக, அமைதி, சமாதானம், ஜனநாயகத்தை ஏற்படுத்த உறுதியோடு போராடிய போராளி.
மார்க்சிய, லெனினிய சித்தாந்தத்தில் அதிக ஈடுபாடும், நம்பிக்கையும் கொண்டிருந்தார். இடது சாரிகளின் ஐக்கியத்தை வலியுறுத்தினார். இலங்கையிலும், இந்தியாவிலும் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இயங்கிய பல்வேறு இடதுசாரி தலைவர்களோடும், நெருங்கியத் தொடர்பினை வைத்திருந்தார். சிங்கள முற்போக்கு சக்திகள் மத்தியிலும் நன்மதிப்பைப் பெற்றதுடன், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஐக்கியத்திற்கும், மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் நலன்களைப் பேணுவதிலும் சகல முற்போக்கு சக்திகளோலோடும் இணைந்து நின்று செயலாற்றினார். 
ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் பிரதானமானவர். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நிறுவனர். அதன் முதல் பொதுச் செயலாளர். 1951 நவம்பர் 19ல் பிறந்த இவர் தனது 39 வருடகால வாழ்நாளில் 20 வருடங்கள் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், அப்போராட்டத்தின் வழி நின்று இலங்கையின் ஒற்றுமைக்கும், அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின், தொழிலாளர்கள், விவசாயிகளின் பூரண விடுதலைக்காகவும் அயராது இறுதிவரைப் போராடியவர்.

சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைகளுக்கு எதிரான போராட்டம் ஆயுதப் போராட்டமாக வடிவெடுத்தபோது, ஆயுதத்தின் மீது காதல் கொள்ளாமல், ஒரு தற்காப்பு கருவியாகவே பயன்படுத்தவேண்டும் என்று தனது இயக்கத்தினருக்கு வழி காட்டினார்.

தமிழ் போராளி இயக்கங்களிடையே ஒற்றுமையின்மை தலைதூக்கியபோதெல்லாம், அதை வேரூன்றவிடாமல் ஒற்றுமைக்காக கடுமையாகப் போராடினார். 

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், டெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினம், பிளாட் இயக்கத் தலைவர் பாலகுமார் மற்றும் மிதவாத இயக்கத்தலைவர்கள் அமிர்தலிங்கம் போன்றோரை சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக ஒற்றுமைப்படுத்தும் நடவடிக்கையில் சளைப்பில்லாமல் ஈடுப்பட்டார். 

ஆனால் பாசிச குணம் கொண்டு, தான் மட்டுமே தமிழர்களின் ஏகப்பிரதிநிதி என ஆயுத பலத்தின் வன்மையால், சகோதரப்படுகொலைகளை நிகழ்த்தி, மேலே சொன்ன தலைவர்களை கொன்றொழித்தது பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலைப் புலிகள் இயக்கம். 1990 ஜூன் 19-இல் சென்னையில் இயக்கத் தலைவர்களுடன் உரிமைப் போராட்டத்திற்கான திட்டம் வகுக்க உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது பாசிச புலிகளால் தோழர்.பத்மனாபாவையும் உடனிருந்த 13 தோழர்களையும் கோழைத்தனமாக கொலை செய்தனர் புலிகள்.


இவர்கள் தமிழ்கள் இல்லையா ?


இன்று ஈழவிடுதலை பற்றி பேசுகின்ற அவர் அதற்காக ஒரு சிறு துருபை கிள்ளி போடதுண்டா?
கலைஞர் எதிர் கட்சித்தலைவராக இருந்தும் கூட எம்.ஜி.ஆர் ஆட்சியில் இவருடைய ஒரு மித்த கருத்தில் ஈழவிடுதலைத் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றபட்டது. அதன் பின் ஈழபோரளிகளுக்கு தேவையான எல்லா உதவிகளையும் கலைஞர் முன்னின்று செய்தார்.
ஆறு போராளிகள் இயக்கங்களின் கூட்டமைப்பான "டெலோ" என்ற அமைப்பு கலைஞரின் 
முயர்ச்சியால் நிறுவபெற்றது, இதை சீமான் அறியாமல் இருப்பாரா ?

அதன்பின் நடந்தது என்ன ?
டெசோ இயக்கம் ஆரம்பித்த ஐந்தாவது மாதத்திலேயே சீறி சபாரத்தினம் தலைமையேற்ற டெலோ இயக்கத்தின் மேல் விடுதலை புலிகள் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி அதன் அறிவுபூர்வமான இளம் தலைவரையும் அதன் இயக்கத்தவர்களையும் கொலை செய்தனர். 
அதன் பின்னும் அவர்களுடைய கொலைப்பசி அடங்கவில்லை 
அப்பொழுதுதான் 1990 ஜூன் 19-இல் சென்னையில் இயக்கத் தலைவர்களுடன் உரிமைப் போராட்டத்திற்கான திட்டம் வகுக்க உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது பாசிச புலிகளால் தோழர்.பத்மனாபாவையும் உடனிருந்த 13 தோழர்களையும் கோழைத்தனமாக கொலை செய்தனர் புலிகள்.
அரசியல், ஜனநாயகக் கோட்பாடுகளில் நம்பிக்கையற்று, ஆயுதத்தின் மூலம் மட்டுமே விடுதலையை அடைய முடியும் என்ற பாசிச கோட்பாட்டில் மூழ்கி திளைத்து, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை பலி கொடுத்து தானும் பலியானதுதான் பிரபாகரனின் சாதனை. தனக்குப் பின்னால் இயக்கத்தை வழி நடத்த இரண்டாம் கட்டத் தலைவர்களைக் கூட உருவாகத் தவறிய ஏகாதிபத்தியவாதியாக திகழ்ந்தவர் பிரபாகரன்.

அதன் பிறகு உச்சகட்ட நிகழ்வாக ஸ்ரீ பெரும்புதூரில் ராஜீவ் படுகொலை செயப்பட்டார் .

இப்படியாக கலைஞரின் அணைத்து முயசிகளையும் கொட்சைப்படுதியது விடுதலைப்புலிகள்தான் என்ற வரலாறு தெரியாதாவரா சீமான் ?

ராஜீவ் கொலை விசாரணைக்காக ஜெயின் கமிஷன் அமைக்கப்பட்டு பதினாறு வருட விசாரனைக்கு ஒரு பதில் கூட தராத பிரபாகரன்:- அது ஒரு துன்பியல் சம்பவம் " என்று கூலாக 

பதில் சொல்கிறார் . இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கிறது , விடுதலை புலிகளிடம் கைதான சக போராளி இயக்கங்களைச் சார்தவர்களை துப்பாக்கி ஆடும் பயிற்சிக்காக "டார்கெட் "ஆக பயன்படுத்தியிருகிறார்கள் . உலக அளவில் இந்த செயலை முதலில் செய்தது ஹிட்லர்தான் அவருக்கு அடுத்த இடத்தை பிரபாகரன் பிடித்துவிட்டார். உலகின் வரலாற்றை பின்னோக்கி நகர்த்திச் செல்ல முயன்ற ஹிட்லர், முசோலினி போன்ற பாசிசவாதிகளை வரலாறு குப்பைத் தொட்டியில் தூக்கி வீசியது போல, தமிழ் பேசும் மக்கள் மத்தியில், தமிழ் மக்களையே கொன்று குவித்த, மீண்டும் குவிக்கத் துடிக்கும் பாசிசக் கூட்டத்தை தமிழ் மக்கள் தோற்கடித்து, வரலாற்றுச் சக்கரத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்வர் என்பது திண்ணம்பொதுவாக வன்முறை என்பது இருபுறமும் கூரான வாள் போன்றது அது பிடிதிருப்பவனையும் தாக்கும் , இது புலிகளின் விடயத்தில் உண்மையானது .
அவர்கள் தங்கள் இனத்தை சேர்ந்த சக போராளிகளையும் சமூகத்தினரையும் கொன்று குவித்த போதிலும் அவர்களுக்காக உழைத்த கலைஞரின் நட்பையும் இழந்து விட்டனர் இறுதில் சிங்கள பேரினவாதம் வென்று விட்டது ஈழத்தில் அப்பாவி மக்கள் சாவுக்கு கொடூரன் ராஜபக்ஷே எவ்வளவு உடந்தையோ பிரபாகரனுக்கும் அதில் சம அளவு பங்கு உள்ளது.... 

தற்போது தமிழர் பகுதியில் புனர் நிர்மானம் மற்றும் மறு குடியிருப்பு சம்மந்தமாக அணைத்து நடவடிக்கைகளும் கலைஞரின் வற்புறுத்தலின் பேரிலேயே மத்தியஅரசு செய்து வருகிறது.

ஒரு உண்மையை சொல்லப்போனால் எம் ஜி ஆர் , கலைஞரை போல , விடுதலை புலிகளுக்கு உதவியவர்கள் தமிழகத்தில் இருப்பது அபூர்வம். 

இதை புரிந்து கொள்ளாமல் துவேசத்தை விதைத்து வன்முறையை அறுவடை செய்யும் போக்கை சீமான் மாற்றிகொண்டு " தம்பி " போன்ற சமூக கருத்துடைய வன்முறைக்கு எதிரான திரைப்படங்களை தந்தால் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடிப்பார்...