தொகுப்புகள்

Search This Blog

Saturday, January 20, 2024

நான் மிக்ஜாம் பேசுகிறேன்..

நான் மிக்ஜாம் பேசுகிறேன்..


நிஷா, ஜல், தானே, வர்தா, ஒக்கி, நிவர் வரிசையில் நான் மிக்ஜாம் பேசுகிறேன்..

என் முன்னோர்கள் வந்தார்கள் சென்றார்கள், நானும் அப்படியே செய்ய நினைத்தேன்..
ஆனால் உங்களுக்கு சில பாடங்களை கற்றுத் தர வேண்டி இருந்தது..
நான் கடந்து சென்ற கதையை சொல்கிறேன் கேளுங்கள்..
நான் குறைந்த காற்றழுத்த மண்டலமாக உருவாகி 100 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து விடலாம் என்றுதான் நினைத்தேன்.. ஏனென்றால் என் முன்னோர்கள் வந்த பொழுதெல்லாம் 10 முதல் 20 சென்டி மீட்டர் மழையை கொட்டிச் சென்றாலே சென்னை மிதக்கும்..

எப்பவும் போல இல்லாமல் இந்த முறை நான் உருவாகும் பொழுதே முன்னெச்சரிக்கை அறிவிப்புகளும் நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டது.. எனக்கு கோபம்.. சரி ஒரு கை பார்த்து விடுவோம் என்று தல தோனியை போல் அடி பட்டையை கிளப்ப பூஸ்ட் குடித்துவிட்டு என் வலிமையை கூட்டி தயாரானேன்.. 
அதில் 20 சென்டிமீட்டர் பொழிந்தாலும் எதுவும் ஆகாது என்று மக்களுக்கு நம்பிக்கை விதைத்தார் மாசற்ற மனிதர் ஒருவர்.. 
இப்படித்தான் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்மார்ட்டா வேலை செஞ்சிருக்கோம் ஒரு சொட்டு தண்ணீர் தேங்காது என்று டி நகரில் நின்று எகத்தாளம் பேசினார் மண்டியிட்ட மனிதர் ஒருவர்.. ஆட்சி மாறியது காட்சியும் மாறியது 2021ல் என் தங்கச்சி பருவமழைக்கே பல்லை இளித்தது டி நகர்..

என் பலத்தை ஏற்றி கொண்டு நகரத் துவங்கினேன், 10 சென்டிமீட்டர் 20 சென்டிமீட்டர் என்று மழை பொழிவை கூட்டினேன்.. என்ன ஆச்சரியம், கொட்டியவுடன் ஆங்காங்கே காணாமல் போகிறது தண்ணீர்.. எனக்கு கோபம் தலைக்கேறியது உடனே பிரேக் போட்டு கீர் டவுன் செய்து 10 கிலோமீட்டர் என்று வேகத்தை குறைத்து அண்ட சராசரங்களும் நடுங்கும் அளவிற்கு அமலாக்கத்துறை விடிய விடிய சோதனை என்பதை போல் நின்று நிதானமாக இரவு பகலாக என் வேலையை காட்டினேன்.. 

அப்படி இருந்தும் என்னால் புறநகர் சென்னையான வேளச்சேரி, பள்ளிக்கரணை போன்ற சில இடங்களை தவிர எங்குமே தண்ணீரை நிரப்ப முடியவில்லை.. விசாரித்த போதுதான் தெரிந்தது, சரியாக திட்டமிட்டு ஏரிகளில் தண்ணீரை குறைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று.. 

உடனே 4 ஆயிரம் கோடி எங்கே என்று கொக்கரித்தது சில கூட்டம்... அடேய் அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் சென்னையை அழித்திருப்பேன்..
அப்படி இருந்தும் பள்ளிக்கரணை ஏரி கரைகள் உயர்த்தப்படாதது குற்றம் தானே?
குற்றம்தான் யார் செய்த குற்றம்?
கரையோரத்தில் இருக்கும் கோயில்களை கட்டியவர் குற்றமா? கோயிலை இடித்தால் இந்து மதத்திற்கு எதிரி என்று பொய் பிரச்சாரம் செய்பவர்களின் குற்றமா ?அல்லது பழிச்சொல் வந்தால் பரவாயில்லை என்று அந்தக் கோயிலை இடித்து கரையை பலப்படுத்தி உயர்த்தாமல் இருந்தவர்களின் குற்றமா?
எது எப்படியோ என் ஆசை கொஞ்சம் நிறைவேறியது..
ஊரே தத்தளிக்க முன்னெச்சரிக்கை இல்லாமல் மதியற்ற ஒருவர் மாண்புமிகுவின் மனைவிக்கு அலைபேசியில் உதவி கேட்டு அழைத்த சர்ச்சைகள் ஆங்காங்கே.. எப்பவும் போல நான்கு பேர் வீடியோ எடுக்க மூட்டை தூக்கும் முட்டாள் கூட்டம் ஒரு பக்கம்..  
வாம்மா மின்னல் போல திடீரென்று வந்து நொட்டை சொல்லும் மண்டியிட்ட மாமனிதர் ஒரு பக்கம். 
இரண்டு நாட்களுக்கு முன்பு கொடுத்த உணவை எடுத்து நாடகம் போடும் நாடக கம்பெனி ஒரு பக்கம்...
வாயில் மட்டுமே வடை சுடும் ராஜ் பவன் ராங்கி எங்கு சென்றார் என்ற கேள்விகள் ஒரு பக்கம்...
இருந்தாலும் என் முன்னோர்கள் வந்து சென்றதற்கும் இதற்கும் பல வேறுபாடுகளை காண முடிகிறது.. பவர் இல்லாமல் வந்து பத்து நாள் முடக்கி போட்டு பல பேரை பலி வாங்கிய என் முன்னோர்களை காட்டிலும் பத்து மடங்கு பவரோட வந்த என்னால் அதில் பாதி சேதாரம் கூட செய்ய முடியவில்லை.. திட்டமிட்டு பவர் கட் செய்து ஆங்காங்கே மக்களை பாதுகாத்து என் பவரை குறைத்துவிட்டது இந்த அரசாங்கம்..
அப்படி இருந்தும் நடுநிலை அமுக்கிகள் (translate in English) என்று சொல்லிக்கொண்டு கேப்டன் விஜயகாந்த் சொல்வதைப்போல ஒரு பக்கம் தானே காட்டுனீங்க என்பதைப் போல் அவதூறுகளை மட்டுமே காட்டிக் கொண்டிருந்தன சில அமுக்கிகள்..
பாதம் தாங்கிகள், ஆட்டுக் கூட்டங்கள் எல்லாம் ஆங்காங்கே குறை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்த போது பறந்து வந்த ஒன்றிய ஆய்வுக் குழு சிறப்பாக செயல்பட்டதால் இயல்பு வாழ்க்கை ஈஸியாக திரும்பிவிட்டது என்று நற்சான்றிதழ் கொடுத்து கொக்கரித்த கூட்டங்களின் வாயில் வாழைப்பழம் வைத்தது.. 
இதிலும் ஒரு சூட்சமம் இருக்கலாம்.. ஜாக்கிரதையாக இருங்கள் ஒன்றிய நிவாரண தொகையை குறைத்துக் கொடுக்க பாராட்டு பத்திரம் வாசிக்கவும் வாய்ப்பிருக்கிறது..
எது எப்படியோ மனசாட்சி உள்ளவர்களுக்கு தெரியும் என் வலிமை என்னவென்று.. என்னை சமாளித்த அரசுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும்..
என்னால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணத் தொகை வாங்கிக் கொண்டு தங்கள் வாழ்க்கை பயணத்தை மகிழ்ச்சியாக தொடருங்கள்.. 
எங்கள் குடும்பத்திலிருந்து இனிய எவராவது வருவாராயின் பல மடங்கு பலத்துடன் வருவோம்..
அரசாங்கம் மட்டுமல்ல மக்களாகிய நீங்களும் எச்சரிக்கையாக இருங்கள்..
அரசாங்கம் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் ஆங்காங்கே வாட்டர் பீட் போடும் முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
அமேசானில் நான்கு பேர் செல்லும் படகு எட்டாயிரம் ரூபாய்தான் வரும் வீதிக்கு ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்..
மீண்டும் சந்திப்போம்.. நன்றி

இப்படிக்கு உங்கள் அன்பு மிக்ஜாம் புயல்..