Monday, September 26, 2016

"சாத்தான் மிக பெரியவன்"

"சாத்தான் மிக பெரியவன்"

வேளாங்கண்ணி கோயிலுக்கு மாதாவை கும்பிடப் போன பக்தர்களை சுனாமி சொந்தம் கொண்டாடி பரலோகத்துக்கு அழைத்துப்போய்விட்டது.

பூரி ஜெகநாதரை வழிபட பாதயாத்திரைப் போன பக்தர்களை வெள்ளமும் மண்சரிவும் சேர்ந்து சொர்க்கத்துக்கு டிக்கெட் எடுத்து கொடுத்தது.

அல்லாவால் அழிக்க முடியாத சாத்தானை கல்லால் எறிந்து கொல்லலாமென போன ஹஜ் பயணிகளை காலடியில் போட்டு நசுக்கி ஏக இறைவனோடு ஐக்கியமாக்கிவிட்டது ஜன நெரிசல்.

முட்டாள் தனமும் மூட நம்பிக்கைகளும் எந்தவொரு தனி மதத்துக்கும் சொந்தமானதல்ல என்பதே இவையுணர்த்தும் செய்தி.

வேளாங்கண்ணிக்கு ஒரு இளம்பெண்ணை அழைத்துச் சென்று அறையில் தங்கி உல்லாசமாக இருந்தபோது சிக்கிய பாதிரியார்.

செக்ஸ் அக்ரிமெண்ட் போட்டு பெண்களை அனுபவித்த நித்யானந்தா, கணவனை இழந்த பெண்ணிடம் தகாதபடி நடந்துகொண்டது மட்டுமல்லாமல் சங்கரராமனையும் கொன்ற ஜெயேந்திரன், கோவில் கருவறையிலேயே பெண்களோடு சல்லாபித்த தேவநாதன், இன்னும்.. இன்னும்..

அல்லாவின் பேரை சொல்லி புனிதப்போர் எனும் போர்வையில் அப்பாவிகளை கொன்று குவிக்கிற தலிபான், ஐஎஸ் தீவிரவாதிகள்..

தன் பேரை சொல்லி யார் எந்த அநீதியில் ஈடுபட்டாலும் எப்பேர்பட்ட கொலை பாதகத்தை செய்தாலும் எல்லா மத கடவுள்களுமே வெறுமனே வேடிக்கை பார்ப்பதையே தொழிலாக கொண்டிருக்கின்றன.

பெண்களின் இயல்பான உடல்மாற்ற மாதவிடாயை தீட்டு என ஒதுக்கி கூனி குறுக வைக்கிற இந்து மதம். பெண்களோடு கடவுளர்கள் புணர்கிற காட்சிகளை கோவில்களில் சிலை வடித்து புனிதபரவசத்தில் கையெடுத்து கும்பிட சொல்கிறது.

ஆயிரம் சமத்துவம் பேசினாலும் கன்னியாஸ்திரிகள் திருப்பலி நிறைவேற்ற முடியாது. திருச்சபையின் அதிகாரம் பொருந்திய பொறுப்புகளான ஆயர், கர்தினால், போப் உள்ளிட்ட பதவிகளை பெண்கள் நினைத்து பார்க்கவும் கூடாது என்கிறது கிறிஸ்தவம்.

புர்கா ஒழுங்காக அணியாத பெண்ணை கல்லால் அடித்து கொன்றும் கால் விரல் நகம் தெரிய நடந்த பெண்ணின் கால்களை வெட்டியும் காரணமே இல்லாமல் பெண்களை விவாக ரத்து செய்து, அதுவும் சம்பந்தபட்ட பெண் உட்பட யார் அனுமதியும் தேவையில்லாமல், ஆண் ஐந்து பெண்கள்வரை மணந்து கொள்ளலாம் என கழுத்தில் மிதிக்கிறது இஸ்லாம்.

எல்லாம் வல்லவரான, எங்கும் நிறைந்தவரான, தூணிலும் துரும்பிலும் இருக்க கூடிய , முக்காலமும் உணர்ந்த, நன்மையே உருவான, கருணை மிகு கடவுள் அகோர சிரிப்போடு இவைகளை வேடிக்கை பார்த்து பொழுதுபோக்குவதன்றி வேறொன்றும் செய்தானில்லை.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், கடவுளை உண்டாக்கிய மனிதன் தான் சாத்தானையும் உண்டுபண்ணினான். ஆனால் உங்கள் கடவுளர்களை விட சாத்தான் மிக பெரியவனும் அதி வல்லமையுமுடையவனாய் இருக்கிறான்.

ஆம், உங்கள் அறியாமையும் அறிவுக்கொவ்வாத மூடபழக்கவழக்கங்களும் மதவெறியும் ஆதிக்கவெறியும் தான் அந்த சாத்தான். அந்த சாத்தானை ஒழிக்க வெறுமனே கற்கள் போதாது, மந்திரங்களோ கயிறோ அந்த சாத்தானை அசைத்துகூட பார்க்காது.

தேவையெல்லாம் பகுத்தறிவு. அதுதான் சாத்தானை கொல்லும் ஒரே ஆயுதம். நீங்கள் பகுத்தறிவை கைக்கொள்ளாதவரையில் சாத்தானுக்கு நீங்கள் பலியாவதை எந்த பெரிய கடவுளாலும் தடுக்க முடியாது. தெளியுங்கள்!

நன்றி:- Leo Joseph D

4 comments:

  1. சபாஷ் ,சாத்தானை அடக்க முடியாத கடவுள் என்ன கடவுள் :)

    ReplyDelete