Friday, September 23, 2016

கலைஞர் தடுக்கவில்லையா?

கர்நாடகா அணைகள் கட்டியபோது கலைஞர் தடுக்கவில்லையா? நடந்தது என்ன?
1970 இல் காவேரி பிரட்சினையில் கலைஞரின் நிலைபாடு இதுதான்
1) 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தம் காலாவதியாகவில்லை. உபரிநீரை பயன்படுத்துவதை பற்றி மட்டுமே புதிய ஒப்பந்தம் காண வேண்டும்
2)காவேரியில் தமிழகத்தின் அனுமதியின்றி கட்டப்படும் அணைகளை சட்டத்திற்கு புறம்பானது என்று அறிவிக்க வேண்டும்.
மேற்கண்ட இரண்டு கோரிக்கைகளை வலியுருத்தியும் நடுவன் குழுவை அமைக்க கோரியும் 1970 ஆம் ஆண்டு கலைஞர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். (28.10.1970 இந்து)
இவ்வாறு கடிதம் எழுதும் முன்பு ஆறு முறை மத்திய நீர் பாசன அமைச்சர் முன்னிலையில் தமிழகம் கர்நாடகா கேரளா முதல்வர்கள் கூடி பேசி பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்திருந்தன.
அனால் மத்தியில் அப்போதிருந்த காங்கிரஸ் அரசு கர்நாடகா அரசிற்கே சாதகமா இருந்து கலைஞரின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தியது.
எனவே 1971 இல் உச்ச நீதி மன்றத்தில் காவேரி நடுவர் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உத்தவிட வழக்கு தொடுத்தது கலைஞர் அரசு
இதை கண்டு அப்போதைய பிரதமர் இந்திரா பேசி தீர்த்து கொள்ளலாம் என்றும் வழக்கெல்லாம் வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்தார்.
கலைஞர் இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்தார். கூட்டத்தில் வழக்கை முழுமையாக வாபஸ் வாங்காமல் .
மீண்டும் தாக்கல் செய்யும் உரிமையுடன் வழக்கை வாபஸ் வாங்க முடிவு செய்யப்பட்டது. வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டது கலைஞர் அரசு.
அதன் பின்னர்21.5.72 இல் மத்திய நீர்பாசனத்துறை அமைச்சர் முன் ஓர் ஒப்பந்ம் ஏற்பட்டது. ஆனால் எந்த மாநில அரசும் அதை ஏற்கவில்லை. அதன் பின்னரும் 1972-75 வரை மூன்று முறை பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
கலைஞர் தனது இரண்டு நிபந்தனைகளையும் எந்த சூழ்நிலையிலும் தளர்த்திக்கொள்ளவில்லை.
1975 இல் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த கர்நாடகா அரசு அழைத்த போது கபிணியில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீரை திறந்து விட்டால் மட்டுமே பேசமுடியும் எனத் பிடிவாதமாக தெரிவித்து விட்டார். எமர்ஜென்சியும் வந்து விட்டது. கலைஞர் ஆட்சியும் கலைக்கப்பட்டு விட்டது.
ஆனால் 1977 ல் ஆட்சிக்கு வந்து விட்ட தமிழ் இன துரோக கட்சியான அ தி மு க வழக்கு தாக்கல் செய்யும் உரிமையை வேண்டுமென்றே தவிர்த்து கர்நாடகாவிற்கு ஆதரவாக நடந்து கொண்டதே உண்மை . 1980 இல் எம்ஜிஆர் அரசு காவேரி டிரிபுயூனல் கோரி உச்ச நீதி மன்றத்தில் போட்ட வழக்கை வாபஸ் பெற்று தமிழர்களுக்கு பெரும் துரோகத்தை இழைத்தது. 1977 முதல் 1988 வரை காவேரி விவகாரம் கிடப்பில் போடப்பட்டது
அதன் பிறகு ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் காவேரி பிரட்சினையில் எதையும் செய்யவில்லை.
ஆனால் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்த பின்னரே 1990 இல் கலைஞரின் பெரு முயற்சியால் காவேரி நடுவர் மன்றமே அமைக்கப்பட்டது.
1977 ல் மீண்டும் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் அப்போதே 1924 ம் ஆண்டு ஒப்பந்தபடியே வழக்கு தொடர்ந்திருப்பார் . அது மட்டுமின்றி 1977 லேயே காவிரி வழக்கில் தலைவர் கலைஞர் அவர்கள் வெற்றியும் கண்டிருப்பார்.
மீண்டும் 1989 ல் ஆட்சிக்கு வந்த தலைவர் கலைஞர் அவர்கள் 1977 முதல் 1988 வரை நடந்த செயலற்ற அ தி மு க அரசின் துரோகங்களை ஒழித்து கட்டினார்
பிற்காலத்தில் சட்ட சிக்கல் எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலையும் பெற்று . அன்றய முதல்வர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தி மு க ஆதரவு பெற்ற வி.பி. சிங்கின் மத்திய அரசு 02/06/90 ம் தேதி உத்தரவிட்டு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது.
அப்படி காவிரி நடுவர் மன்றத்தை அமைத்த போது அதை எதிர்த்து நக்கலும் நையாண்டியும் செய்தவர் ஜெயலலிதா ...

நன்றி :- அந்தோனி பரிமளம்

No comments:

Post a Comment