தொகுப்புகள்

Search This Blog

Friday, September 14, 2018

விநாயகர் உனக்கு சொந்தமா ?

திராவிட மக்களின் வழிபாட்டு தெய்வங்களின் வரலாறுகளை புராண, ஆபாச குப்பை கொண்டு மறைத்துவிட்டனர், சுயனலமிகளான பார்ப்பனர்கள்! புத்தரின் 2000 அம்சங்களில் தலையாயது யானை பிறவியெடுத்த புத்தரின் அவதாரம்! புத்தரின் சிஷ்ய கோடிகளாக சேர்ந்த பார்ப்பன சிந்தனையாளர்களே, பிழைப்பிற்காக இத்தகைய கதைகளை(புராணங்களை) இட்டுக்கட்டினர்! புத்தர் உபயோகித்த, சாதாரண மக்கள் புழங்கிய, பிராகிருதத்தை விடுத்து சமஷக்ருதத்தை புகுத்தினர்! பின்னர் சமயம் பார்த்து பவுத்த அரசுகளை வீழ்த்தி பார்ப்பன ஆதரவு அரசுகளை அமைத்த போது, பவுத்த வேடமிட்ட பார்ப்பன பூசாரிகள் வினாயகனையும், விஷ்ணுவையும் வழிபட ஆரம்பித்தனர்! சக வம்சத்து அரசர்கள் தாஙகள் பவுத்தர்கள் என்று கூறிக்கொண்டனர்! மீண்டும் பார்ப்பன மதம் தலையெடுத்தவுடன் விஷ்ணு கோத்திரத்துடன் வேத மதத்தவர் ஆயினர்! இப்போதும் வைணவர்கள் மற்ற சைவ வேத பிரமாணங்களை ஏற்றுக்கொள்வதில்லை!

முதலில் பிள்ளையார் என்பது ஒரு கிராம தேவதையாகதான் நம் முன்னோர் வழிபாட்டு வந்தனர். ஆனைமுகம், மனித உடல் கொண்ட அந்த கடவுள் சிவனின் பிள்ளையானது பின்னர் வந்த ஆரியர் உண்டாக்கிய கதைதான்.

முருகன் என்ற குறவர் கடவுளை ஸ்கந்தன் என்று சிவனின் இந்திரியத்தில் இருந்து பிறந்த குழந்தை என்று மாற்றி கதை உருவாக்கியவர்களும் அவர்களே.

திருப்பதி மலை மேல் இருப்பதும் அந்த ஊர் மக்கள் கும்பிட்ட வன தேவதைதான். ஆனால் அதனை வெங்கடேச பெருமாளாக மாற்றி பணம் சம்பாதிக்கின்றனர். இன்றும் திருப்பதி சாமியின் பின்புறம் பார்த்தால் தெரியும், நீண்ட சடை இருப்பது தெரியும். அது பெண் தெய்வத்தின் சிலை தான்.

அய்யப்பன் கடவுள் கூட உள்ளூர் மலை மக்கள் வழிபட்ட கடவுள் தான். அதற்கு சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் (ஆணுக்கும், பெண் வடிவம் தரித்த ஆணுக்கும்) பிறந்த குழந்தை என்று கதை கட்டி அங்கும் கல்லா கட்டினார்கள்.

நம் முன்னோர்கள் எந்த வித தடையும் என்றி நேரடியாக கடவுளை தொட்டு வணங்கிய காலம் மாறி இன்று பார்ப்பனர்கள் மட்டும் தொட்டு வணங்கவும், நான் தொலைவில் நின்று பார்த்து விட்டு திரும்பும் அவலம் நடைபெறுகிறது.

1 comment:

  1. Thanks for sharing your thoughts on men who want a larger penis.
    Regards

    ReplyDelete