தொகுப்புகள்

Search This Blog

Sunday, October 27, 2019

தீபாவளியிடம் சில கேள்விகள் ?

தீபாவளி

இந்தப்பதிவினை இப்போதே பதிவிட்டதற்குக் காரணம் இனி யாரும் இந்த பண்டிக்கைகாக பணவிரயம் செய்து கடன்பட்டு அறிவிழந்து மானமிழந்து கேவலப்படவேண்டாம் என்பதற்காகவே! இனிதானே உங்கள் பணச்செலவுகள் இதற்காக நடந்தேறும், ஒரு நிமிடம் இங்குள்ள தகவலைப் படித்து நன்றாக சிந்தித்து முடிவெடுக்கவும்!

உண்மையில் தமிழர்களாய் நமக்கும் இந்தப்பண்டிகைக்கும்  என்ன உறவு. 

இங்கிருக்கும் எவருக்காவது தமிழர் என்ற உணர்விருந்தால் இப்படிப்பட்ட இழி காரணங்களுக்காக பண்டிகை கொண்டாடலாமா?  அறியாமையும் கண்மூடித்தனமாக எதையும் கேள்விகேட்காமல் ஏற்றுக்கொள்ளும் குணத்தினாலேயே வருகிறவன் போகிறவன் எல்லாம் தமிழன் தலையில் அடிக்கிறான். உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக இதோ தீபாவளியின் பின்புலம்(ச்சை நாறுகிறது)

விஷ்ணு பன்றிப் பிறவியெடுத்து இரண்யாட்சனைக் கொன்றுவிட்டுத் திரும்பும் காலையில், பன்றி தான் கொண்டு வந்த பூமியைத் தனக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய உரிமை இருக்கிறதென்று கருதி அந்தப் பூமியையே அந்த பன்றிப் புணர்ந்ததாம். பூமியும் அதற்கு இணங்கி இடம் கொடுத்ததாம். அப்போது பூமி கர்ப்பமாகி ஒரு குழந்தையையும் பெற்று விட்டதாம். அக்குழந்தைக்கு நரகாசூரன் என்று பெயர் இட்டார்களாம். ஏன் அப்பெயர் இட்டார்கள் என்றால் நரகலைச் சாப்பிடுகின்ற பன்றிக்கும், நரகலைச் சுமக்கின்ற பூமிக்கும் குழந்தை பிறந்ததால் நரகன் என்று பெயர் இடாமல் வேறு என்ன பெயர் இடுவார்கள் என்கின்றனர்.

இப்படிப் பிறந்த இந்தக் குழந்தை வங்காளத்துக்கும், அஸ்ஸாமுக்கும் மத்தியில் உள்ள ஒரு பிரதேச (அதாவது இசுலாமியர் வாழும் வங்காளதேசம்) அரசனாக இருந்து கொண்டு பிரம்மாவின் மனைவியின் காதணியையும் வருணனின் ஆயுதத்தையும் பிடுங்கிக் கொண்டு, இந்திரனின் சிம்மாசனத்தையும் தூக்கிவர எத்தனித்தானாம். அதோடு தேவர்களுக்கு தொல்லை கொடுத்தானாம்; உலகத்தையும் துன்புறுத்தினானாம். தேவர்களுக்காக கிருஷ்ண பகவான் வந்து இந்த அசுரனை வதம் செய்தாராம். அந்த நாளை கொண்டாடுவதுதான் தீபாவளியாகும். இது என்ன கதை? இதில் அறிவு மானம் இருக்கிறதா?

இரண்யாட்சன் பூமியை சுருட்டித் திருடிக் கொண்டு போகக் காரணம் என்ன? 

பூமி தட்டையாய் இருந்தாலல்லவா சுருட்ட முடியும்? அதுதான் உருண்டை ஆயிற்றே? பூமியை உருட்டிக் கொண்டல்லவா போயிருக்க வேண்டும்?

அப்படியே சுருட்டினதாக வைத்துக் கொள்வதானாலும் சுருட்டினவன் எங்கே இருந்து கொண்டு பூமியை சுருட்டி இருப்பான்? ஒரு சமயம் வானத்தில் தொங்கிக் கொண்டு சுருட்டி இருந்தாலும் பூமியில் இருந்த மலை, கடல், ஆறு, உயிரினங்கள் முதலிய அனைத்துமே பாயாக சுருட்டப்பட்டு பாய்க்குள் சிக்கி இருக்க வேண்டும். அப்படி இருக்க அவன் பூமியை தூக்கிக் கொண்டு ஒளிய வேறு கடல் ஏது? வேறு கடல் இருந்திருந்தால் அது எதன்மீது இருந்திருக்கும்?

அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்தப் பூமியை திருப்பிக் கொண்டுவர விஷ்ணு அவதாரமெடுப்பானேன்? அதுவும் பன்றி அவதாரமெதற்கு? அப்போது அது உணவாக எதைத் தின்று இருக்கும்? எதையோ தின்று தொலைந்து போகட்டும்.

இந்தப் பன்றி பூமியைப் புணர ஆசைப்படுவானேன்! கொண்டு வந்ததற்குக் கூலியா? அப்படியேதான் இருக்கட்டும். இதற்கு இந்தப் பன்றியுடன் உடலுறவு செய்ய பூமிதேவி இணங்கலாமா? இது என்ன கதை?

திரைவிடத்தின் தமிழ் மக்களை அசுரன், இராட்சதன், அரக்கன் என்று கூறி அவர்களை இழிவு செய்ய எழுதியதல்லாமல் வேறு என்ன இது? வங்காளத்தில் ஆரியர் வரும் முன்பு நாம்தானே ஆண்டு கொண்டிருந்திருக்க வேண்டும்? ஆரியர்கள், தமிழர்களைக் கொல்வதானால் மானம், வெட்கம் பார்க்காமல் விலங்குகளுடன் புணர்ந்தானாலும் சரி, மலத்தைத் திண்றாலும் சரி, எப்படியான இழிவான அசிங்கமான காரியத்தைச் செய்தாவது கொல்லலாம் என்கின்ற கோட்பாடுகளை ஆரியர்களுக்கு போதிக்க வந்த மனுநூல் போன்ற ஒரு இழிவான கொள்கை தானே ஒழிய இப்புராணங்களுக்கு வேறு என்ன கருத்து சொல்ல முடியும்?

ஆகவே அப்பேர்ப்பட்ட கதையில் ஒன்றான நரகாசூரன் கதையை நம்பி நாம் பண்டிகை கொண்டாடலாமா? நாம் சங்கம் வளர்த்து அறிவுசார் தமிழரல்லவா? இதெல்லாம் நம் கடவுளா? அப்படியே நீங்கள் நம்பினாலும் நம் கடவுள்கள் மலம் தின்பதையும், நம் பெண் கடவுள்கள் பன்றியுடன் புணர்ச்சி செய்வதையும் ஒப்புக் கொள்ள நம்மால் முடியுமா? ஒப்புக் கொள்ளலாமா? நமக்கு மானம், வெட்கம், புத்தி ஒன்றுமே கிடையாதா?

நம் தலைவனைக் கொன்றதை நாம் கொண்டாடும் அளவிற்கு அவ்வளவு மானம் ஈனம் அற்றவர்களா நாம்? நம் இன மக்கள் தீபாவளி கொண்டாடலாமா? கண்டிப்பாய் கொண்டாடாதீர்கள். கொண்டாடுவதானால் இந்தக் கதை கொண்ட புத்தகங்களை வாங்கி நடு வீதியில் வைத்து ஆண்கள் மிதியடியால் மிதி மிதியென்று மிதியுங்கள்; பெண்கள் முறத்தால் மொத்து மொத்து என்று மொத்துங்கள்.

இதற்கு முகநூலில் வாழ்த்தும் பரப்புரையும் தேவையா?

நாம் ஏன் அவர்கள் இல்லை என்பதை அவர்களாக நம்மைப்பற்றி எழுதியதை மேற்கண்ட இந்தப்புரட்டுடன் இன்னொரு புரட்டையும் ஒப்பிடுகிறேன்:

சமஸ்கிருத இனம்:
பன்றி விஷ்ணு தான் கொண்டு வந்த பூமியை என்ன வேண்டுமானாலும் செய்ய உரிமையுள்ளதாகக் கருதிப் புணர்ந்ததாம்

தமிழினம்:
தமிழன் ராவணன் தானே கொண்டு வந்திருந்தாலும் சீதையின் ஒப்புதலுடன் அவளை மணக்க காத்திருந்தான்..
நன்றி :- யாரோ

5 comments:

  1. Hello Dear, are yyou truly visiting this website on a regular basis, if so afterward you will definitely obtain good know-how.

    ReplyDelete
  2. Great blog! Is your theme cuwtom made orr diid you download it from somewhere?
    A design like yours with a few simple adjustements
    would really make my blog stand out. Please let mme know where youu goot your design. Thank you

    ReplyDelete
  3. Hi there! Would you mind if I share your blog with my twitter group?
    There's a lot of foolks that I think would really appreciate yolur
    content. Please let me know. Thanks

    ReplyDelete
  4. Ꮋi! This is my 1st comment here so I just wanted to give
    a quick shout out and say I rreally enjoy readng your articles.
    Can you suggest any other blogs/websites/forums that go over the same subϳеcts?
    Thanks for your tіme!

    ReplyDelete
  5. I absolutely love your site.. Excellennt colors & theme.

    Did you create thgis amazing site yourself? Please reply back as I'm
    looking to create my very own blog and want to know where
    you got this from or what the thheme is called.
    Appreciate it!

    ReplyDelete