Tuesday, July 31, 2018

ஊழல்... விஞ்ஞான பூர்வ ஊழல்.. காமடிகள்..

ஊழல்... விஞ்ஞான பூர்வ ஊழல்.. காமடிகள்..

ஒரு வாதத்துக்கு, கலைஞர் தவறு செய்திருந்தால், தவறான வழில் சொத்து சேர்த்திருந்தால், கலைஞர் ஆட்சியில் இருந்ததைவிட, மிக அதிகமாய் அதிமுக தானே இங்கே ஆட்சில் இருந்தார்கள், கேவலம் ஒரு FIR கூட போடமுடியவிலையா?? அதற்கு வக்கில்லையா?? ஆண்மையில்லையா??? கலைஞர் ஆட்சியில் இருந்ததைவிட அதிக காலம் அதிமுகவும், அவரை ஜென்ம எதிரியாக கருதும் ஆட்களும் தானே இங்கேயும் மத்தியிலும் ஆட்சியில் இருந்தார்கள் / இருகிறார்கள், நடவடிக்கை எடுக்கலாம்மே.. யார் தடுக்கிறார்கள்??

எப்படி ஜெயாவுக்கு எதிராய் ஆதாரபூர்வமாக சொத்துக்குவிப்பு வழக்கை போட்டு, இருபது ஆண்டுகாலம் விடாது நடத்தி, உச்ச நீதிமன்றம் மூலம் இறுதி தீர்ப்பையும் பெற்று, ஜெயலலிதா ஒரு ஊழல் குற்றவாளி என நிரூபித்ததை போல, செய்யவேண்டியது தானே... 46 ஊழல் வழக்குகள் தொடுக்கப்பட்ட ஒரே முதல்வர் ஜெயாதானே... இருமுறை முதல்வர் பதவியிலிருந்து ஊழலுக்காக தண்டிக்கபட்டு கீழே இறங்கியவர் ஜெயா தானே... அப்படி ஒரு ஆதாரபூர்வமான வழக்கை கலைஞர் மீது போட்டு நிருபிக்கலாம்மே, யார் தடுக்கிறார்கள்?? அதற்கு ஆதாரம்மில்லையா அல்லது ஆண்மையில்லையா???

மேலும், ஒருவருடைய சொத்து என்றல் அவர் பெயரில் உள்ளது மட்டுமே, குடும்ப சொத்து என்றல் அவர் வீட்டு முகவரியில், ரேஷன் கார்டில் உள்ள உறுபினர்களின் சொத்து மட்டுமே... தனி தனி குடும்பத்தினர், கொண்டான் கொடுத்தான் என்று எல்லோருடைய சொத்தையும் சேர்த்து எப்படி ஒருவருடைய சொத்து என்று சொல்லமுடியும் ???? கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தொலைக்காட்சி குழுமத்தை, திறமையாக, வெற்றிகரமாக நடத்தி, இப்போதும் (ஜெயா & பிஜேபி ஆட்சியிலும்) இந்தியாவிலேயே முதன்மை சேனலாக வைத்துள்ள சன் குழும வியாபாரங்களுக்கும் கலைஞர் & திமுகவுக்கும் என்ன தொடர்பு??

அந்த காலத்திலேயே, அதாவது தேர்தல் அரசியலுக்கு கலைஞர் வருவதற்கு முன்பே, பல திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாகவும், பல நூல்கள், நாடகங்கள், பத்திரிக்கைகளில் எழுதியும் வந்தவர் கலைஞர்.. தனது இருபதாவது வயதிலேயே, 1944 ஆம் ஆண்டில், பிரபலமான ஜூபிடர் பிச்சர்ஸ் நிறுவனத்துக்கு வசன கர்த்தாவாக பணி செய்தவர் கலைஞர்.. அதுமட்டும் அல்ல, மேகலா, பூம்புகார் போன்ற சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவங்கள் மூலம் பல வெற்றி படங்களை தயாரித்தவர்.... அவருடைய கோபாலபுரம் இல்லம், அவர் முதன்முதலில் MLA வாகிய 1957 க்கு முன்பே வாங்கப்பட்டது.. கார் வீடு என்று அப்போதே உழைத்து வசதிவாய்ப்புக்களை உருவாக்கி கொண்டவர் கலைஞர்... கலைஞரும் அவர் குடும்பத்தினரும் இத்தனையாண்டுகளாக தங்களின் வருமானங்களுக்கு முறையாக வருமானவரி கட்டி வருபவர்கள். 

கலைஞர் மீது எந்த ஒரு ஊழல் வழக்கும் கோர்டில் ஆதாரபூர்வமாய் நிரூபிக்கப்பட்டு அல்ல, குறைந்தபட்சம் விசாரணை கூட நடந்தது இல்லையே....ஊழல் வழக்குகளுக்காய் எத்தனை முறை கலைஞர் கோர்ட் படி ஏறியுள்ளார்???, ஊகத்தின் அடிப்படையில் நடைபெற்ற சர்க்காரியா கமிஷனிடமும், புகார் சொன்னவர்களே, அதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று பின்வாங்கி சென்றவர்கள்தானே.. ஐந்து முறை முதல்வராய் இருந்த கலைஞர், இதுவரை எத்தனை முறை ஊழல் வழக்கில் சிறை சென்றுள்ளார் ??, சிறை செல்வது இருக்கட்டும், எத்தனை வழக்குகள் கோர்ட்டில் விசாரணை நடந்திருக்கிறது????, விசாரணை இருக்கட்டும், எத்தனை வழக்குகள் அதாரபூர்வமாய் போட்டனர்????? ஒரே ஒரு ஊழல் வழக்கை கூட கலைஞர் மீது போட முடியவில்லையே, 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக நிர்வாகத்தில் இல்லாத சட்ட நிபுணர்களா??? ஜெயாவிடம் இல்லாத அரசு அதிகாரம்மா????

சிலர் வித்தியாசமாக திமுக விஞ்ஞான பூர்வமாக, அதாவது சைன்டிபிக் முறையில் ஊழல் செய்தது என சொல்வார்கள்.. அதாவது, யாராலும் கண்டுபிடிக்க முடியாதாம்.. அப்படியானால், சர்க்காரியா மட்டும் எப்படி கண்டுபிடிப்பார்??? சரி, விஞ்ஞான பூர்வம் என்றால் என்ன??? ஆதாரத்தோடு நிரூபிக்க முடியும் ஒன்றைத்தான், அறிவியல் பூர்வமான ஒன்று என ஏற்றுக்கொள்ளப்படும்.. ஆனால், எந்த ஒரு புகாரையும் ஆதாரபூர்வமாக நிரூபிக்காமல், விஞ்ஞான பூர்வ ஊழல் என்பது சுத்த டுபாகூர் தகவல்.. மக்களை முட்டாளாக்கும் ஒன்று...  

2G விஷயத்தில் கூட, எழு வருடங்களாக விசாரணை நடத்தி, சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் உள்ள இந்த வழக்கில், அனைத்து புலனாய்வு அமைப்புகளும், பலமுறை சோதனைகள் நடத்தி, இதுவரை என்ன கண்டுபிடித்தார்கள்???? எதை நிரூபித்தார்கள்?? - ஒன்றும் இல்லை.. நீதிபதி சைனியே "எழு ஆண்டுகளாக யாராவது ஒரே ஒரு ஆதாரத்தையாவது கொண்டுவது கொடுப்பார்கள் எனகோர்ட் வாசலை திறந்துவைத்து உட்கார்ந்திருந்தேன், ஆனால், ஒருவரும் வரவில்லை" என தனது தீர்ப்பில் குறிப்பிட்டு, 2G வழக்கு எந்த ஒரு அடிப்படை ஆதராமும் இல்லாத வழக்கு என ஏழாண்டுகள் விசாரித்து தள்ளுபடி செய்து, எல்லோரையும் விடுதலை செய்துவிட்டார்..

No comments:

Post a Comment