Monday, March 5, 2012

இன்னும் பல கொலைவெறி



மனித உயர்களை குடிக்கும் மதவெறியே !

இதய துடிப்பை நிறுத்தும் இனவெறியே !

ஜனனத்தை மரணமாக்கும் ஜாதிவெறியே !

பண்பாடை மறந்து பழிவாங்கும் மொழி வெறிய !

காஷ்மீரில் உறைந்த பனிப்பாறையில்

தெளிக்கப்பட்ட குருதியின் சிவப்பு புள்ளிகள்தான்

மதவெறியர்களின் கட்சிக் கொடியோ ?

இலங்கையின் குறிஞ்சியை

குருதியில் நனைபதுதான்

இனவெறியர்களின் கொள்கையோ ?

கிராமங்களின் ஓரங்களில் வருமையுடுத்தி

கையின்றி இருபவர்தான்

ஜாதிவெரியின் வாரிசோ ?

ஜீவ நீர் தடுத்து

மௌனியாய் மரணத்தை பரிசளிப்பதுதான்

மொழி வெறியின் வீரமோ ?

மதவெறி தேசம் காக்க ..

இனவெறி மொழி காக்க ..

ஜாதிவெறி ஊர் காக்க... என்றால்

இவற்றை காப்பதை விட

மடிந்துகொண்டிருகும் மனித நேயத்தைக் காத்திட -உங்களை

மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன் .......

(1998 ஆம் ஆண்டு என் கணவரின் டைரியிலிருந்து ...)

No comments:

Post a Comment