Thursday, February 24, 2011

பதிவுலகில் :- தி.மு.க.வும் நடுநிலைவாதிகளும்

வணக்கம் பதிவர்களே ,

தமிழ்பதிவுலகில் சமீப காலமாக நடுநிலைவாதிகள் அதிகமாகி வருகிறார்கள். முதலில் நடுநிலைவாதி என்பவர் யார். நீங்களும் எப்படி நடுநிலைவாதி ஆகலாம் என்று பார்க்கலாம். நடுநிலைவாதி ஆவது என்பது மிகவும் எளிது. கலைஞரை திட்டி ஒரே ஒரு பதிவு எழுதினால் போதும். ஆயுளுக்கும் உங்களோடு ஒட்டிக் கொள்ளும் நடுநிலைவாதி பட்டம் உடனே கிடைத்துவிடும்.

பதிவு எழுதுகிற அளவிற்கு உங்களுக்கு நேரம் கிடைக்காவிட்டால் பரவாயில்லை. அதற்கு இன்னொமொரு சுலபமான வழி ஒன்று இருக்கிறது. ஏற்கனவே நடுநிலைவாதி பட்டம் பெற்றவர்கள் பதிவில் போய் ஒரு பின்னூட்டம் போட்டாலே போதும்

 இதில் குறிப்பிட பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நான் சென்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு தான் ஓட்டு போட்டேன் என்று ஒரு டிஸ்கியையும் போட்டுவிட வேண்டும். இந்த டிஸ்கியை போட்டுவிட்டால் நடுநிலைவாதி பட்டம் உங்களுக்கு கன்ஃபார்ம் ஆன மாதிரி தான்

இப்படி ஒட்டு போட்டதாக சொல்லிக் கொண்டு கலைஞரை பற்றி அவதூறாக எழுதி கொண்டு இருப்பவர்கள் உண்மையில் ஓட்டை போடுபவர்களாகவே இருக்கிறார்கள். இந்த ஓட்டை போடுபவர்களை உடன்பிறப்புகள் சிலர் விமர்சித்து எழுதினால் "அவர் பெரியவர், அவருக்கு மரியாதை கொடுக்கவும்" என்று அறிவுரை வரும். அடப்பாவிகளா, கலைஞர் எவ்வளவு மூத்தவர் அவருக்கு நீங்கள் மரியாதை கொடுத்தீர்களா. பெரியவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் 89 வயது பெரியவரை  என்னென்ன வசவு சொற்களை எல்லாம் பாவிக்கிறீர்கள்.



இவர்கள் ஏன் கலைஞரை வசைபாட நடுநிலை வேஷம் போட வேண்டும். ஏனென்றால் இவர்கள் தாங்கள் அ.தி.மு.க. அபிமானி என்று காட்டிக் கொண்டால் அவர்கள் சொந்த வீட்டிலேயே அவர்களை மதிக்கமாட்டார்கள். ஒரு அ.தி.மு.க. அனுதாபிக்கு சமூகத்தில் எவ்வளவு மரியாதை என்று பார்த்தீர்களா. இதை உணர்ந்தே பலர் நடுநிலைவாதிகள் ஆகிவிட்டனர்.

ஐயா பெரியவர்களே, தங்களை விமர்சிக்க வேண்டாம் என்று சொலவில்லை, அதிமுக தலைவி போல் அல்லாமல் 89 வயதிலும் உழைக்கும் கலைஞரை  இனிமேலாவது மரியாதை குறையாமல் விமர்சிபார்களா இந்த நடுநிலைவாதிகள் ?

நன்றி - உடன்பிறப்பு 

8 comments:

  1. // 89 வயதிலும் உழைக்கும் கலைஞரை இனிமேலாவது மரியாதை குறையாமல் விமர்சிபார்களா இந்த நடுநிலைவாதிகள் ? //

    இருந்தாலும் ரொம்பவும் தான் கிண்டல் உங்களுக்கு.இந்த தள்ளாத வயதிலும் அவர் பாராட்டு விழாக்கள், திருமண விழாக்கள் , திரைப்பட விழாக்கள் என்று மிகவும் சிரமப்பட்டு ஒரு விழாவை கூட விட்டுவிடாமல் சக்கர நாற்காலியில் சென்று கலந்து கொண்டு மகிழ்வதை இப்படியா கிண்டல் செய்வது?

    ReplyDelete
  2. கிழவரும்,கும்மாவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.இவருக்கு சர்க்காரியா ,கும்மாவுக்கு பெங்களூர் கோர்ட்டு.இவர் மதுரை தினகரன் ஊழியர்களை எரித்தார்,கும்மா கோவை மாணவிகளை தர்மபுரியில் எரித்தார்.naalai kilavar thotru கும்மா ஆட்சிக்கு vanthaal இதே கிழவருக்கு ஆலவட்டம் போடுபவர்கள் கும்மாவுக்கு ஜால்ரா அடிப்பார்கள் என்பது சர்வ நிச்சயம்.முதல் ஆள் தயாநிதி மாறன்.

    ReplyDelete
  3. நடுநிலை என்பது ஆளும்கட்சியை அரவணைத்து போவதும், சமயம் கிடைக்கும் போது எதிர்கட்சியை வதைப்பதும் இல்லை. தவறு எங்கிருந்தாலும் சுட்டிகாட்டுவது தான். 86 வயதில் உழைக்கசொல்லி யாரும் இங்கு அழவில்லை.
    உழைப்பு என்ற பெயரில் ஏழைகளின் வயற்றில் அடிக்க சொல்லவும் இல்லை.

    ReplyDelete
  4. நண்பரே! நடுநிலைவாதி என்பதற்கு என்ன ஒரு அருமையான விளக்கம். அசந்து போய்விட்டேன் போங்கள். சரியான செயல்களுக்கு பாராட்டு தெரிவிப்பதை துதிபாடல் என்றும், ஜால்ரா (ஆதரவாளர்கள்) என்றும், தவறுகளுக்குக் கண்டனம் தெரிவிப்பதை வசவுகள் என்றும், எதிரிகள் என்றும் அர்த்தம் செய்து கொண்டால் கருத்துப் பரிமாற்றங்களுக்கு இடமே இல்லாமல் போய்விடும். நீங்கள் ஏதாவது ஒருபுறம் சார்ந்திருப்பது உங்கள் விருப்பம். அதற்காக நடுநிலைவாதிகளை நையாண்டி செய்யவேண்டியதில்லை. இந்தப் பதிவின் மூலம் நீங்கள் யாருக்கோ வால் பிடிக்க நினைக்கிறீர்களோ என ஐயம் ஏற்படுகிறது. அப்படி இல்லையெனில், மகிழ்ச்சி! எல்லா பொதுநலவாதிகளும் விமர்சனங்களுக்கு உட்பட்டவர்கள். விமர்சனங்களைப் பொறுத்துக் கொள்ளும் மனப்பக்குவமும், பொறுப்பாக பதிலளிக்கும் தன்மையும் இல்லாதவர்கள் சமூக நலனில் அக்கறை கொண்டவர்களாக இருக்கமுடியாது.

    ReplyDelete
  5. தங்களின் திமுக பாசம் பொங்கிவழிகிறது, கொஞ்சம் துடைத்துக் கொள்ளுங்கள்... பதிவுலகில் திமுகவை நாம் எதிர்ப்பது திமுக செய்த மொள்ளமாரித்தனங்களால் தான் ஒழிய. அதிமுக அம்மையாரின் அன்பைப் பெறவோ, அதிமுகவுக்கு கான்வாச் பண்ணவோ இல்லை.... தாங்கள் திமுகவில் இருப்பதால் அவர்கள் என்ன குற்றம் செய்தாலும் கண்டிக்க முடியாது இருக்கிறீர்கள் அவ்வளவே !!! உண்மையான ஜனநாயக கட்சியாக இருந்தால், திமுகவின் தலமை செய்த தவறுளை சுட்டிக் காட்டி ஒரு பதிவைப் போட்டுப் பாருங்கள்.. உடனே எங்களைப் பார்த்து அதிமுக காரர்கள் இவர்கள் என கொக்கரிக்கவேண்டாம். எந்த முக்கோ சந்தோ சேர்ந்தவர்களோ இல்லை............

    ReplyDelete
  6. அதிமுக ஆட்சிக்கு வரட்டும் அப்புறம் பாருங்கள்.
    விலை வாசிகள் பாதியாக குறைந்துவிடும்.
    ஊழல் என்றால் என்னவென்றே தெரியாத சூப்பர் மாநிலமாக தமிழகம் திகழும்.
    பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா என கிடைக்கப் போகிறது பாருங்கள்

    ReplyDelete
  7. புறங்கையை நக்கினாலே அவ்வளவு சுவை, இன்று முழு தேனடையையும் ஆட்டையைப் போட்டுவிட்டு அந்த மஞ்சத்துண்டு என்னா போஸ் கொடுக்குது.

    இந்த வயதிலும் நக்கிப் பிழைக்க நினைக்கும் ஒருவரை ஆதரிக்க நாங்கள் கேனையர்களா? அன்று இந்திராவின் அது, இன்று சோனியாவின் அது.
    நாளை பிரியங்காவின் அது. இந்த வயதிலும் அது வேண்டுமா?

    தூமை வாழ்க்கை வாழும் கருநாதி வாழ்க!

    ReplyDelete
  8. ஏங்க நீங்க தெரிஞ்சுதான் பேசுறீங்களா இல்லை தமாசுக்கு பேசுறிங்களா?

    ஒரு 87 வயது முதியவர், நடக்க முடியாது, தன்னுடைய மலஜல கழிப்புகளுக்கு கூட துணை வேண்டும் இப்படிபட்டவர் தன் கம்பெனிக்கு மன்னிக்கவும் கட்சிக்கு தலைவராக இருப்பது எந்த விதத்திலும் தவறு இல்லை. ஆனால் 7 கோடி மக்களை ஆளும் ஒருவர் இப்படி இருப்பதை யாராவது ஏற்றுக்கொள்வார்களா? இவரால் இவருடைய மகன்களை கட்டுபடுத்துவது இருக்கட்டும் தன் மகளை கட்டுபடுத்த இயலவில்லை. இவர் எப்படி இந்த மாநிலத்தை ஆள முடியும்.

    நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், 87 வயதில் ஒரு முதியவர் நம் வீட்டில் தலைமை ஏற்று நடத்தினால் நாம் ஒப்புக்கொள்வோமா? 7 பேர் இருக்கும் குடும்பத்தை நடத்த நாம் பெரியவர்களை அனுமதிப்பது இல்லை. 7 கோடி மக்களை ஆள அனுமதிப்போமா?

    மேலும் ஒரு சந்தேகம்.

    அந்த காலத்தில் மன்னர்கள் மேடையில் உயரத்தில் அமர்ந்து கழுத்து முதல் பாதம் வரை ஆடை அணிந்த மங்கையர்கள் ஆட்டத்தை ரசிப்பார்கள்... ஆனால் இவரோ நவீன மன்னர் இல்லையா கீழே அமர்ந்து மார்பிலும், இடுப்பிலும் கர்ச்சீப் கட்டி கொண்டு ஆடும் மங்களை நடனத்தை பார்க்கிறாரே.... மன்னருக்கு வேறு வேலை இல்லையா? உங்கள் அப்பாறோ இல்லை அப்பச்சியோ உங்களை அருகில் வைத்து கொண்டு இப்படி நடனம் (காபரே) பார்த்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

    இதெல்லாம் உங்களிடம் கேட்க நடுநிலை எல்லாம் வேண்டாம்.... சிந்திக்க சிறிது அறிவு இருந்தால் போதும் என்பது என் எண்ணம்.

    ReplyDelete