தொகுப்புகள்

Search This Blog

Saturday, February 16, 2019

காஷ்மீரில் நடந்த காதுகுத்து

லைட்டா எல்லோருக்கும் காது குத்துவது போல இருக்கு...!

இந்தியாவின் மற்ற பகுதிகளில் இப்படி ஒரு குண்டு வெடித்து இருந்தால் எதிர்பாராரது என்று சொல்லலாம், ஆனால் காஷ்மீர் போன்ற பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கும் பகுதியில இப்படி ஒரு குண்டு தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப் பட்டது என்பது எங்கையோ இடிக்கிறது.

எப்படியும் ரேடியோ தகவல்களை ஒற்றுக் கேட்டல், வீதிக்கு வீதி சோதனை சாவடிகள், எவனையும் எந்த கேள்வி இல்லாமல் சோதனையிடும் அதிகாரம், தினம் தோறும் ரோந்து நடவடிக்கை எல்லாம் இருந்தும் ஒரு காரில் 350 கிலோ வெடி மருந்துடன் வந்து ஒரு ரானுவ வாகனத்தை மோதி வெடிக்க வைக்க் முடியும் என்றால் அது ஒன்னும் பொட்டலம் கட்டி பக்கெட்டில் எடுத்து வரும் சமாச்சரம் இல்லை. இப்போது C4 போன்ற ப்ளாஸ்டிக் வெடிமருந்துகளை துல்லியமாக கண்டு பிடிக்கும் டிடெக்ட்டர்கள் இருக்கின்றன.

சரி ஒரு அரசால் தங்களுக்கு எதிரான பயங்கரவாத இயக்கத்தை வைத்து குண்டு வைக்க முடியுமா? சின்ன உதாரணம், இந்திராவின் ஆட்சிக் காலத்தில் 80 களில் இந்திய புலனாய்வுத் துறை காஷ்மீர் பகுதிகளில் செய்த ஆப்ரேஷ்னுக்கு பெயர் ரெட் ரோஸ். ஒன்னும் இல்லை, அந்த பகுதியில் உள்ள காஷ்மீர் விடுதலை இயக்கங்களுக்கு ஆயுத சப்ளை செய்வது. பாக்கிஸ்தானில் உள் நாட்டு கலவரம் செய்வதற்க்கும், காஷ்மீர் பகுதியில் அமைதி இன்மையை நிரந்தரமாக வைப்பதற்க்கும். அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் தான் ஈழ இயக்கங்களுக்கு இந்தியாவில் பயிற்சியும் ஆயுதமும் கொடுக்கப் பட்டது. இதை அந்த நாட்களில் இந்திய புலனாய்வு துறையில் இருந்தவர்களிடம் விசாரித்துக் கொள்ளலாம்.

அவ்வளவு ஏன் இலங்கையில், அப்போதைய ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன ஆட்சி முடிந்து அடுத்து ஆட்சிக்கு வந்த ஆர் பிரேமதாஸ, முன்னாள் ஜனாதிபதிக்கு விசுவாசமான அமைச்சர்கள் லலித் அத்துலத் முதலி, காமினி திஸ்ஸானாயக்க, பாதுக்காப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ன ஆகியோரை விடுதலை புலிகளை கொண்டு கொன்றொழித்தார். பின்னாட்களில் அவரும் அதே புலிகளால் கொல்லப் பட்டார்.  இப்படி உலகம் முழுக்க இந்த நடமுறை இருக்கிறது.

யாரும் பதவி என்று வந்து விட்டால் யோக்கியனில்லை. அதிலும் பிஜேபிக்கு வாழ்வா சாவா நிலை. ஆட்சி கைய விட்டு போனால் அதன் விபரீதம் புரிந்து இருப்பார்கள்.
பல ஆயிரம் கொலைகள் செய்து முதல்வர் பதவியை தக்க வைக்க தெரிந்த ஒருவரால் மரணத்தில் பிரதமர் பதவியை தக்கவைக்க மறுக்க மாட்டார் என்று எப்படி நம்ப முடியும் ?

Saturday, February 9, 2019

இந்துக்களை கொல்வது முஸ்லிமா?

இதுவரை தமிழத்தில் கொலைசெய்யப்பட்ட

#RSS_BJP_இந்து_முண்ணனியில் இருக்கும் ரவுடிகளின் கொலைகளுக்கு முஸ்லிம்கள் காரணமா அல்லது அவர்கள் செய்யும் கட்டப் பஞ்சாயத்து, கந்து வட்டி, வப்பாட்டி இன்னும் பலபல சமூகவிரோத செயல் காரணமா?
கொஞ்சம் சமீபத்திய வரலாற்றை புரட்டி பார்ப்போமா?

1) #நாகப்பட்டிணம்_புகழேந்தி கொலை - 05.07.2012
கொலையாளி: முனீஸ்வரன்
காரணம்: நில அபகரிப்பு,கட்டப்பஞ்சாயத்து

2) #பரமக்குடி_முருகன் கொலை - 19.03.2013
கொலையாளிகள்: ராஜபாண்டி & மனோகரன்
காரணம்: நில தகராறு

3) சங்கரன்கோவில் இந்து முன்னணி நகரச் செயலாளர் #ஜீவராஜ் கொலை - 05.07.2014
கொலையாளி: அவரின் முதல் மனைவி அய்யம்மாள்
காரணம்: இரட்டை திருமணம்

4) #கோயம்பேடு_விட்டல்
கொலை 27.4.2012
கொலையாளிகள்: சுந்தரபாண்டியன், முருகன், கங்காதரன்
காரணம்: கந்து வட்டி கேட்டு தொல்லை, அபாச பேச்சு.

5) #ராமேஸ்வரம்_குட்டநம்பு
கொலை 07.07.2013
கொலையாளிகள்: ராமச்சந்திரன் உட்பட ஆறு பேர்
காரணம்: குடிபோதையில் தகராறு செய்ததால் மக்களிடம் கல்லால் அடிபட்டு மரணம்.

6) தென்காசி ஆர் எஸ் எஸ் அலுவலக குண்டு வெடிப்பு 24.01.2007
குண்டு வைத்தவர்: ஆர் எஸ் எஸ் ரவிபாண்டியன்
காரணம்: தன் அண்ணன் குமார் பாண்டியன் மரணத்தால் எந்த கலவரமும் ஏற்படவில்லை எனும் அதிருப்தியில். ஹிந்து முஸ்லிம் கலவரம் ஏற்படுத்த.

7) வேலூர் பாஜக மருத்துவரணி செயளாலர் #டாக்டர்_அரவிந்த்_ரெட்டி
கொலை - 23.10.2012
கொளையாளிகள் (உதயா, சந்திரன், ராஜா, தரணி)
காரண்ம்: கள்ளத் தொடர்பு

8) #ஆடிட்டர்_ரமேஷ்
கொலை - 19.07.2013
கொளையாளி: இன்னும் பிடிபடவில்லை
காரணம்: கள்ளத் தொடர்பு
பாஜகவைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி என்ற பெண் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் அல்லது கொல்லப் பட்டார்,
முருகமணி என்பவர் மாரடைப்பால் இறந்து விட்டார்
(கட்டிய மனைவி நன்றாக திடமாக இருக்கும்பொழுது,
இரு பெண்களும் ரமேஷ் மீது உள்ள மரியாதையால்தான் தற்கொலை/இறந்தார்கள் என்று நம்புவோமாக).

9, #சசிகுமார் கொலை 22;8;2016 இந்து முன்னணியின் கோவை மாவட்ட நிர்வாகி
கொலையாளி ; இந்து முன்னனி நிர்வாகி ஆனந்த் படுகொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான்  காரணம்; கள்ளக்காதலால் கொல்லப்பட்டார்

7 & 8 கொலையாளிகள் யார் என்று தெரிந்திருந்தும் இந்துத்வவாதிகளை திருப்தி படுத்துவதற்காக  சில முஸ்லிம்களையும் கைது செய்து இன்று வரை போதிய ஆதாரமின்றி விசாரணைக் கைதிகளாகவே தொடர்கின்றனர்.

அது ஏன் எல்லா டிரௌசரும் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு படுகொலை செய்யப் படுகின்றனர்?
எல்லோருமே அப்படியா?
அப்படியல்ல. சமூகவிரோதிகள் தம்மை பாதுகாத்துக் கொள்ள ஒரு இயக்கமும் தன்னை யாரும் நெருங்காமல் இருக்க ஹிந்து  எனும் போர்வையும் தேவைப் படுகிறது.
அதனால்தான் சமூக விரோதிகள் பெரும்பாலானோர் சங் பரிவார இயக்கங்களில் இணைகின்றனர்.
அதுவே அவர்களுக்கு சிறந்த புகலிடமாகவும் இருக்கிறது.

இவர்களை ஹிந்துக்கள் எனும் வரம்பில் வைத்து பார்க்கக் கூடாது.
இவர்களை ஹிந்து மக்கள்தான் முதலில் புறக்கணிக்க வேண்டும்.

இறந்தவனைப் பற்றி கவலைப் படும் கூட்டமல்ல அவை.
இறந்தவனை வைத்து மதக் கலவரம் ஏற்படாதா என்று ஏங்கி ஒவ்வொரு முறையும் ஏமாறும் கூட்டம்

Thursday, February 7, 2019

*யார் இந்துக்களுக்கு எதிரி?*

*யார் இந்துக்களுக்கு எதிரி?*

இதுவரை வழங்கப்பட்டிருக்கும் 48 பாரத் ரத்னா விருதுகளில் 23 விருதுகள் பார்ப்பனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. மொத்த மக்கள்தொகையில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் பிராமணர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை விருதுகள். பிற சாதி இந்துக்களுக்கு யார் எதிரி?

தமிழகத்திலிருந்து கிரிக்கெட் விளையாடச் சென்றவர்களில் பிராமணர்கள் அல்லாதவர்கள் எத்தனை பேர்?

ஹெச்.ராஜா பாஜகவின் தேசியச் செயலாளர் ஆனால் தி.நகரில் இருக்கும் பா.ஜ.கவின் தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு எத்தனை முறை சென்றிருக்கிறார் என்று யாருக்காவது தெரியுமா? நாடார் பெண்ணான தமிழிசை தலைவராக இருக்கும் வரை அந்த அலுவலகத்துக்குச் செல்லமாட்டேன் என்று அவர் பிடிவாதம் பிடிப்பது உண்மையா இல்லையா? விசாரித்து உண்மையைத் தெரிந்து கொண்டால் புரியும் யார் இந்துக்களுக்கு எதிரி என்று.

தமிழ்தாய் வாழ்த்துப் பாடும் போது கூட அமர்ந்திருந்த சங்கராச்சாரியார் தமிழர்களுக்கு எதிரி இல்லையா?

கி.பி. 1650 வரை தமிழ் பண்டாரங்கள் பூசை செய்த பழநி ஆண்டவருக்கு ராமப்ப அய்யர் என்ற திருமலை நாய்க்கரின் படைத்தளபதி ‘பிராமணரில்லாதவரிடம் பிரசாதம் வாங்க மாட்டேன்’ என்று சொல்லி பார்ப்பனர்களைக் கோவிலுக்குள் கொண்டு வந்து பண்டாரங்களை வெளியில் அனுப்பினார். தமிழர்களுக்கு யார் எதிரி?

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் மட்டும் சுமார் 5000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்கிறது. குடமுழுக்குக்கு என திமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட தொகை 550 கோடி ரூபாய்கள். அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 140 கோடி ரூபாய். யார் இந்துக்களுக்கு எதிரி?

மணமகளிடம் திருமணத்தின் போது ‘நீ முதலில்சந்திரனுக்கு உரியவள்; பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான்; அவனுக்குப் பிறகு அக்னி உன்னை அடைந்தான்; இனி நான்காவதாக இவன் உனக்குக் கணவன் என்று மந்திரம் சொல்லி அதைத் திருமணத்தில் ஓதி இந்துப் பெண்களை விபச்சாரிகளாக மாற்றி வைப்பது யார்? யார் இந்துக்களுக்கு எதிரி? (இந்த விளக்கத்தைக் கொடுத்தவர் சங்கராச்சாரியார்)

காலங்காலமாக தமிழர்களின் மரபு சார்ந்த கோவில்களில் ஆடு கிடா வெட்டக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்து தமிழர்களின் பாரம்பரியத்தை அழிக்க முயன்றது யார்?

இந்துக்களுக்கு எதிரி யார் என்று புரிகிறதா? காலங்காலமாக தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த கூட்டம் இன்றைக்கு தமிழக அரசையும் அடிமைப்படுத்தியிருக்கிறது.

தமிழர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். வரலாறு நெடுகவும் தமிழர்களுக்கும், சாதி இந்துக்களுக்கும், தாழ்த்தப்பட்டர்வர்களுக்கும் தொடர்ந்து துரோகம் செய்து, ஏமாந்தவர்களை அடிமைகளாக்கி, , தமிழர்களின் உரிமைகளை எல்லாம் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த அதே சிறு பிராமணக் குழுதான் ‘நாம் எல்லோரும் இந்துக்கள்’ என்று குரல் எழுப்பி, ஏமாற்றி ஓட்டு வாங்கும் வித்தையைச் செய்து கொண்டிருக்கிறது. இதனைச் சுட்டிக் காட்டுகிறவர்களையெல்லாம் ‘இந்துக்களின் எதிரி’ என்று முத்திரை குத்துகிற பார்ப்பனர்களும், அவர்களது பாஜகவும் அவர்களுக்குத் துணையாக இருக்கும் கட்சிகளும்தான் தமிழர்களுக்கும் தமிழகத்தைச் சார்ந்த இந்துக்களுக்கும் எதிரி.

தமிழர்களே விழிப்பாக இருங்கள்.
#கோவைகவிதா

சுடலை என்கிற ஸ்டாலின்


ஆம் எங்கள் தளபதி சுடலை தான்!

ஸ்டாலின் என்கிற பொதுவுடமைத் தலைவனின் பெயரை தன் மகனுக்கு சூட்டினார் கலைஞர் கருணாநிதி! அந்தப் பெயரை பார்ப்பனர்கள் சிலர் ‘சுடலை’ என்று மாற்றி கேலியாக பேசிவருகின்றனர். அவர்களுக்கு ஒன்று தெரியாது.. சுடலை என்பது அவர்கள் நினைப்பது போல கேவலமான பெயர் அல்ல. அதுவும் வீரத்துக்கு அடையாளமான தமிழர்களின் சிறுதெய்வத்தின் பெயர் தான்! தமிழர்களின் குலதெய்வத்தின் பெயர்!

பார்ப்பனர்கள் தங்களுடைய வேத மதத்தை தமிழகத்தில் திணிக்கும் வரை தமிழர்கள் சிறுதெய்வங்களையே வணங்கினார்கள்.

முனியாண்டி, மதுரை வீரன், கறுப்பு, நொண்டி முனி, முத்துப்பட்டன், கொடலமாடன், சுடலமாடன் என்று நூற்றுக்கணக்கான சிறுதெய்வங்கள் தமிழர்களுக்கு உண்டு. ஊருக்கு ஆபத்து வந்தபோது யார் முன்வந்து தங்கள் உயிரையும் கொடுத்து மக்களைக் காப்பாற்றினார்களோ அவர்களுக்கு தமிழர்கள் சிலை வைத்து வணங்கினார்கள். கையில் அரிவாளுடன், குதிரையின் மேல் அமர்ந்து இருக்கும் இவர்களை தான் தமிழர்கள் தெய்வங்களாக கும்பிடுவார்கள். நாட்டார் வழிபாடு என்று பண்பாட்டு ஆய்வாளர்கள் இதனை குறிப்பிடுவார்கள்.

பின்னால், பார்ப்பனீயம் தமிழகத்துக்குள் நுழைந்து அவர்களுடைய பெருந்தெய்வங்கள் தான் உயர்ந்தது என்றும் காலங்காலமாக தமிழர்கள் வணங்கிவந்த நாட்டார் தெய்வங்களை சிறுமைப்படுத்தவும் தொடங்கினர்.

நாட்டார் தெய்வங்கள் எல்லாம் காட்டிற்குள் இருக்கும், ஊர் எல்லையில் இருக்கும், மக்களோடு மக்களாக இருக்கும். ஆனால், பார்ப்பனர்களின் பெருந்தெய்வங்களோ, பெரிய சுற்றுச்சுவருக்குள், உயர்ந்த கோபுரங்களின் கீழே இருக்கும். உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் அங்கு செல்வார்கள். நாட்டார் தெய்வங்களோ இன்றுவரை உழைக்கும் மக்களால் வணங்கப்படுகிறது, கொண்டாடப்படுகிறது.

நாம் நாட்டார் தெய்வங்களுக்கு ஆடு, கோழி படைப்பதைக் கூட பார்ப்பனர்கள் மோசமான பண்பாடுபோல சித்தரித்தார்கள். அசைவத்தைவிட சைவமே சிறந்தது, சைவ உணவு சாப்பிடுவோர் தான் உயர்ந்தவர்கள் என்றும் ஆக்கினர்!

இப்போது சிந்தித்துப் பாருங்கள். பார்ப்பனர்கள் ஏன் ‘சுடலை’ என்கிற சுடலமாடன் பெயரை கேலிக்குரிய பெயராகப் பயன்படுத்துகிறார்கள் என்பது நன்கு விளங்கும். தமிழர்கள் எப்படி ‘பார்த்தசாரதி’ என்கிற பார்ப்பனப் பெயரை கேலியாக பயன்படுத்துகிறோமோ அதற்கு பழிக்குப்பழியாக ‘சுடலை’ என்கிற பெயரை கேவலமாக்கப் பார்க்கிறார்கள்.

பார்ப்பனர்கள் ஸ்டாலினை ‘சுடலை’யாகத்தான் பார்ப்பார்கள். காரணம், அது தமிழர்களுடைய நாட்டார் தெய்வத்தின் பெயர். அதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், பார்ப்பனர்களுக்கு அடிமையாக இருப்பதற்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கித் தவிக்கும் அடிமைத் தமிழர்கள் சிலரும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு ‘சுடலை’ ‘சுடலை’ என்று கேலி பேசுகிறார்கள்! பார்ப்பனர்களின் காலை நக்குவதையே வரலாற்றுக் கடமையாகக் கருதி தமிழர்களின் குலதெய்வமான ‘சுடலைமாடனை’ கொச்சப்படுத்துகிறார்கள் சில அடிமைகள்!

மிகச்சிறந்த தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர் ஒருவர் தன்னுடைய நூலில் தமிழர்களின் குலதெய்வங்கள், நாட்டார் தெய்வங்கள் பற்றி இவ்வாறு எழுதினார்,

“The subaltern heroes invert the pre-existing power structure by appropriating different signs of authority of the elite…… They in their own ways turn the iniquitous world upside down and usurp those normally elusive signs of authority.”

ஏற்கனவே நிலவிவந்த அதிகாரபீடங்களை தலைகீழாகப் புரட்டிப்போட்டு, மேட்டுக்குடியிடம் இருந்து அதிகாரத்தைப் பெற்று சாதாரண உழைக்கும் மக்களுக்கு நல்லது செய்தவர்கள் தான் நாட்டார் தெய்வங்கள். அதில் ஒன்று தான் ‘சுடலைமாடன்’!

அந்த வகையில் பார்த்தால், சமஸ்கிருதம் தான் உயர்ந்தது, தமிழ் தாழ்ந்தது, சைவம் தான் உயர்ந்தது, அசைவம் தாழ்ந்தது, வைதீகம் தான் உயர்ந்தது, தமிழர்களின் வழிபாட்டுமுறை தாழ்ந்தது என்று சொல்லும் வஞ்சப் பார்ப்பனர்களின் கோட்டையைத் தகர்த்து, தமிழர்களின் உரிமையை நிலைநாட்டப் போர்க்களத்தில் நிற்கும் தளபதி ஸ்டாலின் எங்களுக்கு, உழைக்கும் மக்களுக்கு ‘சுடலை’ தான்!

எழுதியவர்: எழுத்தாளர் கருங்குயில்