தொகுப்புகள்

Search This Blog

Sunday, April 21, 2024

காட்ட வித்து கள்ளு குடிச்சா கவுண்டனா?

கொங்கு பகுதியில் உள்ள கவுண்டர்கள் சிலர் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக இருந்த காலம், பிறகு அறிஞர் அண்ணா தலைமையில் திமுக கட்சி ஆரம்பித்தபோது தீவிர திராவிட பற்றாளர்களாக மாறியவர்கள் சிலர், அந்த சமயத்தில் இலவச மின்சாரம், கொங்கு வேளாளர் கவுண்டர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது, என்று தன் ஜாதிக்கான அங்கீகாரத்தை பெற்று விவசாயம், தொழில், கல்வி என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு விரைவாக முன்னேறினார்கள்..
பல லோ கிளாஸ், லோவர் மிடில் கிளாஸ் குடும்பங்கள் மிடில் கிளாஸ் மற்றும் ஹையர் கிளாஸாக உயர்ந்தது அந்த சமயத்தில்தான் .. பிறகு எம்ஜிஆர் அதிமுக ஆரம்பித்தவுடன் பல பேர் பிரிந்து சென்று அதிமுகவில் இணைந்தார்கள்.. மீதமிருந்தோர் மதிமுக பிரிந்த போது மதிமுகவில் சேர்ந்தார்கள்... இது நான் விசாரித்து கேள்விப்பட்ட அரசியல்.. 1996 க்கு பிறகு நான் நேரடியாக அனுபவ பூர்வமான அரசியலை சொல்கிறேன் கேளுங்கள்..
மதிமுக செல்ஃப் எடுக்காது என்று தெரிந்தவுடன் மதிமுகவில் இருந்த என் தூரத்து உறவினர்கள் சிலர் தீவிர மதிமுகவிலிருந்து வேறு பல கட்சிகளுக்கும் தாவினார்கள்.. அதில் சிலர் திமுகவிற்கும் வந்தார்கள்..
பிறகு கேப்டன் விஜயகாந்த் தேமுதிக அறிவித்தபோது அவர்களே அதற்கும் சென்றார்கள்.. தேமுதிக ஆரம்பித்து சில நாட்களிலேயே கொங்குநாடு முன்னேற்ற கழகம் துவக்கப்பட்டது ..நம்ம சமூகத்திற்கு இன்று ஒரு கட்சி வந்துவிட்டது ஆகவே அதை நாம் ஆதரிக்க வேண்டும் என்று பல பேர் பல கட்சிகளில் இருந்து விலகி  கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்கள்..
கருமத்தப்பட்டியில் மிகப்பெரிய மாநாடு நடத்தப்பட்டது .. பிறகு பெஸ்ட் ராமசாமி, ஈஸ்வரன், நாகராஜ்  தனித்தனியாக பிரிந்தது கட்சில் பிளவை ஏற்படுத்தியது..  நாட்கள் கடந்தன. ஜெயலலிதா மறைந்தார். அதிமுக எடப்பாடியின் கையில் வந்தவுடன் நம்ம ஜாதியில் ஒரு முதல்வர், அவரையே ஆதரிப்போம் என்று  அதிமுகவை ஆதரிக்க துவங்கினார்கள். சில தீவிர ஜாதி வெறியர்கள் எடப்பாடியை கடுமையாக எதிர்த்தார்கள்.
அதற்கு அவர்கள் சொன்ன காரணம் தான் விந்தையானது.. கள்ளச்சி கால்ல விழுந்தவனெல்லாம் கவுண்டனே இல்ல என்றார்கள்..
(இந்த இடம்தான் மனச தேத்திக்க வேண்டிய இடம் சிரிக்காம படிக்கவும்)

தற்போது அந்த இரு பிரிவுகளிலும் இருந்து ஒரு குரூப் நம்ம ஜாதியில் ஒரு பிரதமர் வேட்பாளர் கிடைத்துவிட்டார். ஆதலால் அவரை ஆதரிக்க வேண்டும் என்று அண்ணாமலை பின்னாடி சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்..
இவர்களில் ஈமு கோழி, ஃபைன் பியூச்சர், மை வி3 என எளிதாக பணம் சம்பாதிக்க நினைத்து பணத்தை இழந்தவர்கள் .. கொஞ்சம் வசதி வாய்ப்பு வந்துவிட்டால் பேராசையும், சுயநலமும் கூடவே வந்துவிடும் போல் தோன்றுகிறது.. பொருளாதாரம் உயர அறிவும் கல்வியும் உயர வேண்டும் ..
எனக்கு தெரிந்த வகையில் வெகு சில கவுண்டர்கள் மட்டுமே தீவிர கொள்கை பற்றாளராக நீண்ட நெடுங்காலமாக திமுகவில்  இருக்கிறார்கள்..

நான் இங்கே குறிப்பிட்டது பொதுவாக அனைவரையும் அல்ல, பெரும்பாலானவர்கள், தான் உண்டு தன் வேலை உண்டு என்று பெரிய அரசியல் ஆர்வம் இல்லாமல் காத்தடிக்கும் பக்கம்  சாயும் அப்பாவிகளாகவே இருக்கிறார்கள்..  தற்போது  பொள்ளாச்சியிலிருந்து ஒரு  இட ஒதுக்கீட்டால் பயன் பெற்ற பெண் பேசிய ஆடியோ வைரலானது..
ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் சமூகம் தன் அடுத்த தலைமுறையை  அன்னியனுக்கு அடமானம் வைத்து விடும் என்பதுதான் வரலாறு..
சரியான வரலாற்றை படியுங்கள் பகுத்தறிவோடு செயல்படுங்கள்.. நன்றி ..

Thursday, March 7, 2024

பார்ப்பனர் எதிர்ப்பு நியாயமா அநியாயமா ?

தொடர்ந்து பார்ப்பன சமூகத்தை பெரியார்வாதிகள் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் என்று ஒருவர் வேதனைப்பட்டு ஆத்திரப்பட்டு பேசுவதாக ஒரு வீடியோ பார்த்தேன். 

முகநூலில் இருக்கும் பல பார்ப்பன இளைஞர்களுக்கும் அந்த உணர்வு இருக்கும் 

“ என்னடா இது எப்ப பாத்தாலும் எல்லாரும் பார்ப்பனர்களை குறை சொல்லிட்டே இருக்காங்களே” என்று தோன்றும். 

இப்பிரச்சனையை அவர்கள் கொஞ்சம் நுட்பமாக புரிந்து கொள்ள முன்வர வேண்டும். 

“பார்ப்பனர் உசத்தி” என்ற தியரியை குறைந்தது ஆயிரம் வருடங்களாவது அரசர்களின் உதவியோடு பார்ப்பனர்கள் செய்து வந்திருக்கிறார்கள். 

-பார்ப்பனர் உசத்தி
-பார்ப்பனர்கள் கொலை செய்தால் கூட அவர்களுக்கு மரண தண்டனை கூடாது.
-சிவனே ஆனாலும் பார்ப்பனன் தலையை எடுத்தால் பிரம்மஹத்தி தோஷம் வந்து விடும்.

கொஞ்சம் நீங்கள் ராமாயணம், மகாபாரதம் மற்றும் புராண கதைகளை இக்கோணத்தில் வாசித்தால் இதை புரிந்து கொள்ளலாம். 

அதாவது 97 % மக்களுக்கு 3 % மக்கள் உசத்தி உசத்தி என்று திரும்ப திரும்ப சொல்லப்பட்டு அவர்களை நம்பவும் வைத்திருக்கிறார்கள்.

என் வீட்டு ப்ரிட்ஜை சரி செய்ய ஒரு கடைக்கு சென்றிருந்தேன். அங்கே இரண்டாம் சேல்ஸுக்கு ப்ரிட்ஜுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

சும்மானாலும் அது பற்றி கேட்டுக் கொண்டிருந்தேன். கடைக்காரர் “ இத வாங்கிக்கோ சார். இதுக்கு முன்னாடி ஐயர் யூஸ் பண்ணின ப்ரிட்ஜ். நல்லா இருக்கும்” என்றார். 

ஒரு குளிர்பெட்டியை ஐயர் உபயோகித்தால் அது எப்படி மதிப்புள்ளதாக மாறும் என்று புரியவே இல்லை.

மக்கள் மத்தியில் இன்னமும் பார்ப்பனர் என்றால் உசத்தி என்ற எண்ணம் இருக்கிறதுதான். 

இது ஒரே நாளில் வந்ததல்ல. கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது. 

என்ன திட்டத்தின் மூலம் பார்ப்பனர் உசத்தி என்பது மக்கள் மத்தியில் ஏற்றப்பட்டது? 

உலகில் ஐம்புலன்களை பெற்று மனிதனாக பிறந்து விட்டாலே அவனுக்கு ஒரு பிரச்சனை இருக்கும். 

பிரச்சனையை தீர்க்க பெரும் சக்தி ஒன்றிடம் பிரார்த்தனை செய்வது மனித இயல்பு. அப்படித்தான் கடவுள் உருவாகிறார். 

பார்ப்பனர்கள் திட்டமிட்டு இந்த கடவுளை கைப்பற்றுகிறார்கள். 

அல்லது ஏற்கனவே மக்கள் வழிபட்டுக் கொண்டிருந்த கடவுளை அவர்கள் வழிபாட்டு முறைகளோடு இணைக்கிறார்கள். 

“நிமித்தம்” சொல்வதன் மூலம் அரசர்களை கைக்குள் போட்டுக் கொண்டு கடவுளை கைப்பற்றுகிறார்கள். 

கடவுளுக்கு அடுத்தது பார்ப்பனன்தான் என்ற தியரியை மக்களுக்குள் எளிதாக் மதத்தின் மூலமாக திணிக்கிறார்கள். 

இதனால்தான் பார்ப்பனர்கள் “அனைத்து சாதியினரும் அர்ச்சகர்” என்பதை ஒத்துக் கொள்வதில்லை. 

கடவுளுக்கு அடுத்து கோவிலில் அங்கே ஒரு பார்ப்பனர்தான் இருக்க வேண்டும் என்பது அவர்கள் எண்ணம்.

அங்கே ஒரு பறையரும், அருந்ததியரும், தேவரும், நாடாரும், வன்னியரும் நின்று பூஜை செய்து கொண்டிருந்தால் “பார்ப்பனர் உசத்தி” என்ற பிம்பம் மக்களிடையே மறைந்து விடும்.

ஸோ இப்படி இந்து மதத்துக்குள் பின்னி பிணைந்து பார்ப்பனர்கள் அவர்கள் பற்றிய இமேஜை மக்களிடையே உயர்த்திக் கொள்ளும் போதுதான் பெரியார் எதிர்க்கிறார். அம்பேத்கர் அதை எதிர்க்கிறார்.
 
பாமர மக்கள் “எப்படி ஒரு பார்ப்பனர் உசத்தி” என்று கேட்கும் போதெல்லாம் கடவுளை கைக்காட்டி “கடவுள் சொன்னாராக்கும். கடவுள் எழுதி வைச்சிருக்கிறார்” என்றெல்லாம் பார்ப்பனர்கள் பதில் சொல்லி நம்ப வைத்தனர். 

அதனால்தான் பெரியார் பார்ப்பனர்கள் கைகாட்டும் கடவுளையே எதிர்க்க ஆரம்பித்தார். 

இப்படி யோசித்து பாருங்கள். 

உங்கள் வகுப்பு லீடர் ஆசிரியர் இல்லாத நேரம் ஆசிரியர் சொன்னதாக பெரும் அதிகாரம் செய்கிறான். 

மற்றவர்களுக்கு தண்டனை கொடுக்கிறான். எதிர்த்து கேட்டால் “ டீச்சர்தான் எனக்கு பவர் கொடுத்தாங்க” என்று சொல்கிறான். 

குறிப்பிட்ட எல்லையை அவன் தாண்டும் போது “என்னடா உங்க டீச்சர். நா அவுங்க கிட்டையே கேப்பேன். டீச்சர காட்டி எங்கள அதிகாரம் செய்றியா? என்று ஸ்டாப் ரூமை நோக்கி செல்வோமா இல்லையா? “ 

அதைத்தான் பெரியாரும் செய்தார். 

கடவுள் ஒரு பெரும் சக்தி என்று நான் நம்புகிறேன் என்ற லாஜிக்கை பெரியார் எதிர்க்கவில்லை. 

சரி அது உன் நம்பிக்கை இருந்துவிட்டு போ என்றுதான் சொல்கிறார். 

ஆனால் கடவுள் பெரும் சக்தி, அவரின் ஒரே பிரதிநிதி பார்ப்பனர்கள்தான் என்று அதற்கு ஒரு லாஜிக் புராண கதைகளை இட்டு கட்டும் போதுதான் பெரியார் அதே லாஜிக்கை வைத்து அந்த புராண கதைகளை ஆராய்ந்து உண்மையை மக்களிடதில் அம்பலப்படுத்துகிறார். 

மதன காமராஜன் கதை என்றொரு கதை கொத்து உண்டு. 

அதில் ஒரு பார்ப்பன இளைஞன் உலக அனுபவம் வேண்டி தேசம் விட்டு தேசம் செல்கிறான். 

காட்டை கடக்கும் போது வேடன் ஒருவன் எதிர்படுகிறான் 

“ ஐயா நீங்கள் இந்த இரவை காட்டின் இருட்டில் கடந்தால் மிருகங்கள் தாக்கி இறந்து போவீர்கள். ஆகையால் எங்கள் வீட்டில் தங்குங்கள் என்று அழைக்கிறான். 

பார்ப்பனனும் செல்கிறான். அங்கே சிறிய பரண் ஒன்று இருக்கிறது. 

கீழே தூங்கினால் புலி தின்றுவிடும் என்று பரண் அமைத்து அங்கே தூங்கும் பழக்கம் கொண்டிருந்தார்கள். 

வேடனின் மனைவி அப்பரணில் பார்ப்பனனும் தூங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தாள். 

அது இருவர் தூங்கும் பரண் எப்படி மூவர் தூங்க முடியும் என்று சொல்கிறாள். 

ஆனால் வேடனோ “பாவம் இந்த பார்ப்பனன் அஞ்சி நடுங்கி போய் இருக்கிறான். இவனுக்கு நாம்தான் அடைக்கலம் கொடுக்க வேண்டும்” என்று மூன்று பேரும் சமாளித்து பரணில் படுக்கிறார்கள். 

வேடன் இடது ஒரம் , மனைவி வலது ஒரம் , பார்ப்பனன் மத்தியில் என்று படுத்து தூங்குகிறார்கள். 

இரவில் அசைந்து தூங்கும் போது வேடன் பரணில் இருந்து விழுந்து விடுகிறான். 

அவனை புலி தின்று விடுகிறது. 

மறுநாள் காலை பார்ப்பனன் வருத்தம் தெரிவித்து விட்டு வேறு நாட்டுக்கு சென்று விடுகிறான். 

ஒருவருடம் கழித்து அந்த நாட்டின் மன்னனுக்கு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. அப்போது பார்ப்பனன் தியானம் செய்கிறான். 

அந்த தியானத்தின் போதுதான் தனக்கு பரணில் இடம் கொடுத்து உயிர் நீத்த வேடனே அப்புண்ணியத்தால் இளவரசனாக பிறந்ததாக கண்டுகொள்கிறான். 

சரி அந்த வேடனின் மனைவி என்னவானாள் என்று தியானம் செய்கிறான். அவளும் அந்த பிராமணன் சென்ற ஒரிரு நாளில் விஷமுள் குத்தி இறந்து விடுகிறாள். 

இப்போது அவள் எங்கே பிறந்திருக்கிறாள் என்று பார்த்தால் அவள் ஒரு சேரியில் பன்றிகுட்டைக்கு அருகே இருக்கும் வீட்டில் பிறந்திருக்கிறாளாம். 

கதையை கவனியுங்கள் 

- பார்ப்பனருக்கு உதவி செய்தால் அவர் மறுபிறவியில் இளவரசனாம்.

- பார்ப்பனருக்கு உதவி செய்ய மறுத்தால் அவர் பன்றிகுட்டை சேரியில் பிறப்பாராம்.

இது போன்ற ஏராளமான பார்ப்பன சாதி போற்றும் கதைகளை நம்மிடையே அனைத்து பழங்கதைகளும் திணித்திருக்கும். இப்படி திணித்து திணித்துதான் “பார்ப்பனர் உசத்தி” என்ற பிம்பத்தை உருவாக்கினார்கள். 

சமதர்ம சமூகத்தில் இந்த போலி பிம்பம் உடையத்தானே வேண்டும். 

அது தேவையில்லாத பிம்பம்தானே. 

அது சமத்துவத்துக்கு எதிரான பிம்பம்தானே. அந்த பிம்ப உடைப்பை ஒவ்வொருவரும் செய்யும் போதுதான் அது பார்ப்பனர்கள் மனதை புண்படுத்தி விடுகிறது. 

அந்த பிம்ப உடைப்பின் அவசியத்தை ஒரு சமூகநீதி ஆர்வலராக நீங்கள் புரிந்து கொள்ளும் போது நீங்களும் பெரியார்வாதிகளுடன் சேர்ந்து அப்பிம்பத்தை உடைக்க ஆரம்பித்துவிடுவீர்கள். 

எந்தவிதமான உண்மையும் இல்லாமல் வெறுமே இட்டுக்கட்டல் மூலம் பிம்பம் நமக்கெதுக்கு என்று அதற்கு எதிராக போராட ஆரம்பித்து விடுவீர்கள்.

- Vijay Bhaskarvijay பதிவு

Saturday, January 20, 2024

நான் மிக்ஜாம் பேசுகிறேன்..

நான் மிக்ஜாம் பேசுகிறேன்..


நிஷா, ஜல், தானே, வர்தா, ஒக்கி, நிவர் வரிசையில் நான் மிக்ஜாம் பேசுகிறேன்..

என் முன்னோர்கள் வந்தார்கள் சென்றார்கள், நானும் அப்படியே செய்ய நினைத்தேன்..
ஆனால் உங்களுக்கு சில பாடங்களை கற்றுத் தர வேண்டி இருந்தது..
நான் கடந்து சென்ற கதையை சொல்கிறேன் கேளுங்கள்..
நான் குறைந்த காற்றழுத்த மண்டலமாக உருவாகி 100 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து விடலாம் என்றுதான் நினைத்தேன்.. ஏனென்றால் என் முன்னோர்கள் வந்த பொழுதெல்லாம் 10 முதல் 20 சென்டி மீட்டர் மழையை கொட்டிச் சென்றாலே சென்னை மிதக்கும்..

எப்பவும் போல இல்லாமல் இந்த முறை நான் உருவாகும் பொழுதே முன்னெச்சரிக்கை அறிவிப்புகளும் நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டது.. எனக்கு கோபம்.. சரி ஒரு கை பார்த்து விடுவோம் என்று தல தோனியை போல் அடி பட்டையை கிளப்ப பூஸ்ட் குடித்துவிட்டு என் வலிமையை கூட்டி தயாரானேன்.. 
அதில் 20 சென்டிமீட்டர் பொழிந்தாலும் எதுவும் ஆகாது என்று மக்களுக்கு நம்பிக்கை விதைத்தார் மாசற்ற மனிதர் ஒருவர்.. 
இப்படித்தான் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்மார்ட்டா வேலை செஞ்சிருக்கோம் ஒரு சொட்டு தண்ணீர் தேங்காது என்று டி நகரில் நின்று எகத்தாளம் பேசினார் மண்டியிட்ட மனிதர் ஒருவர்.. ஆட்சி மாறியது காட்சியும் மாறியது 2021ல் என் தங்கச்சி பருவமழைக்கே பல்லை இளித்தது டி நகர்..

என் பலத்தை ஏற்றி கொண்டு நகரத் துவங்கினேன், 10 சென்டிமீட்டர் 20 சென்டிமீட்டர் என்று மழை பொழிவை கூட்டினேன்.. என்ன ஆச்சரியம், கொட்டியவுடன் ஆங்காங்கே காணாமல் போகிறது தண்ணீர்.. எனக்கு கோபம் தலைக்கேறியது உடனே பிரேக் போட்டு கீர் டவுன் செய்து 10 கிலோமீட்டர் என்று வேகத்தை குறைத்து அண்ட சராசரங்களும் நடுங்கும் அளவிற்கு அமலாக்கத்துறை விடிய விடிய சோதனை என்பதை போல் நின்று நிதானமாக இரவு பகலாக என் வேலையை காட்டினேன்.. 

அப்படி இருந்தும் என்னால் புறநகர் சென்னையான வேளச்சேரி, பள்ளிக்கரணை போன்ற சில இடங்களை தவிர எங்குமே தண்ணீரை நிரப்ப முடியவில்லை.. விசாரித்த போதுதான் தெரிந்தது, சரியாக திட்டமிட்டு ஏரிகளில் தண்ணீரை குறைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று.. 

உடனே 4 ஆயிரம் கோடி எங்கே என்று கொக்கரித்தது சில கூட்டம்... அடேய் அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் சென்னையை அழித்திருப்பேன்..
அப்படி இருந்தும் பள்ளிக்கரணை ஏரி கரைகள் உயர்த்தப்படாதது குற்றம் தானே?
குற்றம்தான் யார் செய்த குற்றம்?
கரையோரத்தில் இருக்கும் கோயில்களை கட்டியவர் குற்றமா? கோயிலை இடித்தால் இந்து மதத்திற்கு எதிரி என்று பொய் பிரச்சாரம் செய்பவர்களின் குற்றமா ?அல்லது பழிச்சொல் வந்தால் பரவாயில்லை என்று அந்தக் கோயிலை இடித்து கரையை பலப்படுத்தி உயர்த்தாமல் இருந்தவர்களின் குற்றமா?
எது எப்படியோ என் ஆசை கொஞ்சம் நிறைவேறியது..
ஊரே தத்தளிக்க முன்னெச்சரிக்கை இல்லாமல் மதியற்ற ஒருவர் மாண்புமிகுவின் மனைவிக்கு அலைபேசியில் உதவி கேட்டு அழைத்த சர்ச்சைகள் ஆங்காங்கே.. எப்பவும் போல நான்கு பேர் வீடியோ எடுக்க மூட்டை தூக்கும் முட்டாள் கூட்டம் ஒரு பக்கம்..  
வாம்மா மின்னல் போல திடீரென்று வந்து நொட்டை சொல்லும் மண்டியிட்ட மாமனிதர் ஒரு பக்கம். 
இரண்டு நாட்களுக்கு முன்பு கொடுத்த உணவை எடுத்து நாடகம் போடும் நாடக கம்பெனி ஒரு பக்கம்...
வாயில் மட்டுமே வடை சுடும் ராஜ் பவன் ராங்கி எங்கு சென்றார் என்ற கேள்விகள் ஒரு பக்கம்...
இருந்தாலும் என் முன்னோர்கள் வந்து சென்றதற்கும் இதற்கும் பல வேறுபாடுகளை காண முடிகிறது.. பவர் இல்லாமல் வந்து பத்து நாள் முடக்கி போட்டு பல பேரை பலி வாங்கிய என் முன்னோர்களை காட்டிலும் பத்து மடங்கு பவரோட வந்த என்னால் அதில் பாதி சேதாரம் கூட செய்ய முடியவில்லை.. திட்டமிட்டு பவர் கட் செய்து ஆங்காங்கே மக்களை பாதுகாத்து என் பவரை குறைத்துவிட்டது இந்த அரசாங்கம்..
அப்படி இருந்தும் நடுநிலை அமுக்கிகள் (translate in English) என்று சொல்லிக்கொண்டு கேப்டன் விஜயகாந்த் சொல்வதைப்போல ஒரு பக்கம் தானே காட்டுனீங்க என்பதைப் போல் அவதூறுகளை மட்டுமே காட்டிக் கொண்டிருந்தன சில அமுக்கிகள்..
பாதம் தாங்கிகள், ஆட்டுக் கூட்டங்கள் எல்லாம் ஆங்காங்கே குறை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்த போது பறந்து வந்த ஒன்றிய ஆய்வுக் குழு சிறப்பாக செயல்பட்டதால் இயல்பு வாழ்க்கை ஈஸியாக திரும்பிவிட்டது என்று நற்சான்றிதழ் கொடுத்து கொக்கரித்த கூட்டங்களின் வாயில் வாழைப்பழம் வைத்தது.. 
இதிலும் ஒரு சூட்சமம் இருக்கலாம்.. ஜாக்கிரதையாக இருங்கள் ஒன்றிய நிவாரண தொகையை குறைத்துக் கொடுக்க பாராட்டு பத்திரம் வாசிக்கவும் வாய்ப்பிருக்கிறது..
எது எப்படியோ மனசாட்சி உள்ளவர்களுக்கு தெரியும் என் வலிமை என்னவென்று.. என்னை சமாளித்த அரசுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும்..
என்னால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணத் தொகை வாங்கிக் கொண்டு தங்கள் வாழ்க்கை பயணத்தை மகிழ்ச்சியாக தொடருங்கள்.. 
எங்கள் குடும்பத்திலிருந்து இனிய எவராவது வருவாராயின் பல மடங்கு பலத்துடன் வருவோம்..
அரசாங்கம் மட்டுமல்ல மக்களாகிய நீங்களும் எச்சரிக்கையாக இருங்கள்..
அரசாங்கம் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் ஆங்காங்கே வாட்டர் பீட் போடும் முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
அமேசானில் நான்கு பேர் செல்லும் படகு எட்டாயிரம் ரூபாய்தான் வரும் வீதிக்கு ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்..
மீண்டும் சந்திப்போம்.. நன்றி

இப்படிக்கு உங்கள் அன்பு மிக்ஜாம் புயல்..