தொகுப்புகள்

Search This Blog

Sunday, October 22, 2023

A2B புறக்கணிப்பு வரலாறு..

1940 வரையிலும் கூட ஹோட்டல் எனும் பெயரே அதிகம் புழங்கவில்லை. க்ளப்பு கடை (மெம்பர்களுக்கு மட்டுமான கடையாக இருந்து மெல்ல மற்றவர்களுக்கும் விற்கத் தொடங்கியவை), காபி கடை (cafe என்பதின் மருவல்), பட்ஷணக் கடை (டிஃபனுக்கு தமிழ்ப் பெயர் பலகாரம்) என்றெல்லாம் தான் இருந்தது. ஹோட்டலில் சாப்பிட்டு வாழ்வது என்பது சபிக்கப்பட்ட வாழ்க்கை என்று கருதிய காலம். தமிழ் பிரமணர்கள், கன்னட பிராமணர்கள், நெல்லை பிள்ளைமார்கள் போன்ற பிரிவினர் கையில் மட்டுமே இருந்த தொழில் அது.
பெரும்பாலான ஹோட்டல்களில், "பிராமணர்கள் மட்டும் சாப்பிடும் அறை" என்று தனியாக இருந்தது. 1941 ஆம் ஆண்டு வெளிவந்த சபாபதி போன்ற பழைய திரைப்படங்களில் இவைகளை காணலாம்! மேலும் இதையெல்லாம் தி.ஜ, லாசரா காலத்துக் கதைகளில், அப்பம், வடை, தயிர்சாதம் நாவலில் கதைப் பின்னணியாக பாலக்குமாரன் விரிவாக எழுதி இருப்பதைப் படிக்கலாம். 

காங்கிரஸ் மாநாட்டில் சாப்பாட்டுப் பந்தியில் பிராமணர், சூத்திரர் என தனி தனி பந்திகள் அமைக்கப்பட்டதை எதிர்த்ததுதான் தந்தை பெரியார் முதலில் காங்கிரஸில் கருத்து மாறுபாடு கொண்டார். பின்னாளில் அவர் மாநாடு நடத்தியபோது, "நாடார் சமைக்கும் உணவு பறிமாறப்படும்" என்று நோட்டீஸிலேயே போட்டார். நாடார்கள் என்பது அந்தக் காலத்தில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள். தொட்டாலே தீட்டு எனப் பார்க்கப்பட்டவர்கள். அவர்களை அழைத்து பொதுச் சமையல் செய்யச் சொல்லி சமத்துவப் புரட்சி நிகழ்த்தினார். 

உணவுக் கூடங்களில், தொழில்களில் இத்தகைய ஒரு சாராரின் ஆதிக்கம், அடக்குமுறைகள் தமிழ்நாட்டில்தான் முதன் முதலாக எதிர்க்கப்பட்டது. பின்னாளில் மாற்றப்பட்டது.

அதை முதன்முதலில் எதிர்த்தவர் பெரியார். மாற்றியவர் பெரியார்.

இத்தனை ஆதாரங்கள், காட்சிப்படங்கள், காணொளிகள் இருக்கும்போதே முழுப் பூசணியை உப்புமாவில் மறைக்கப் பார்க்கின்றனரே!

இவர்கள் நமக்குக் காட்டும் அந்தக்காலச் சரித்திரம் எந்த லட்சணத்தில் இருக்கும்!!

#ஈரோடு_குரங்குகுட்டை பதிவிலிருந்து