Friday, April 27, 2018

திமுக மீது தொடரும் வதந்தி

திமுக எம்.ஜி.ஆரினால் இரண்டாக உடைக்கப்பட்டதற்குப் பிறகு ஒரு பக்கம் பேச்சு, எழுத்து, நிர்வாகம் என அனைத்திலும் திறன்பெற்ற கலைஞர். இன்னொரு பக்கம் ஒரு இழவுக்கும் லாயக்கில்லாத மத்திய அரசின் அடிமை எம்.ஜி.ஆர். ஆனால் 1969-1976 வரையிலான கலைஞரின் ஆட்சியில் பாதிக்கப்பட்ட பார்ப்பனர்களும், மிராசுதாரர்களும் கலைஞருக்கு மாற்றாக எம்.ஜி.ஆரை தூக்கிவைத்துக் கொண்டார்கள். இந்த ஆளை விட்டால் கலைஞரை கவிழ்க்க முடியாது என்பதை புரிந்துகொண்டார்கள். காங்கிரசில் இருந்த மிராசுதாரர்கள் கூட எம்.ஜி.ஆர் பக்கம் தாவியதற்கு காரணமும் அதுதான். ஒருபக்கம் எம்.ஜி.ஆரை வள்ளல், தர்மப்பிரபு, ஏழைப்பங்காளன் என பரப்பினார்கள். மறுபுறம் கலைஞரை முறியடிக்க அவர்கள் கையில் எடுத்த ஆயுதம் அவரைப் பற்றிய பொய்யும், புரட்டும், வதந்தியும்.

1996 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சியின்போது ஒருநாள் கலைஞர் 16 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என திடீரென ஒருநாள் பரப்பினார்கள். பள்ளியில் இருந்த எனக்கு அது இன்னமும் பச்சையாக நினைவிருக்கிறது. இதுபோல் ஏராளமான வதந்திகளைச் சொல்லமுடியும். கலைஞரின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்லாது அவர் நிர்வாகத்தின் மீதும், ஆட்சியின் மீதும்கூட இப்படியான பொய்கள் தொடர்ந்து திட்டமிட்டுப் பரப்பப்பட்டன. சர்க்காரியாவில் தொடங்கி, அந்தப் பொய்களின் தொடர்ச்சி இன்று வாட்சப் காலத்தில் காவிரி விவகாரம் வரை தொடர்கிறது.

நேற்று ஒரு தோழி, "ஸ்டாலின் யாரையும் ரேப் பண்ணாரா முன்னாடி?" எனக் கேட்டார். "இல்லை. அது வதந்தி," எனக் கோபத்தோடு மறுத்தேன். இப்போது ஸ்டாலினையும் வதந்தி ஆயுதம் விட்டுவைக்கவில்லை.

போனவாரம் ஒரு நாம் தமிழர் ஜந்து ட்விட்டரில், "பாத்திமா பாபு... ஸ்டாலின்," என உளறினான். உடனே நான் நேரடியாக பாத்திமா பாபுவை டேக் செய்து, "மேடம் உங்கள் மீது அவதூறு சொல்லும் ஆட்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்," என எழுதியதும் வதந்தி பரப்பிய அந்தக் கிருமி ஓடிவிட்டது.

இதோ இன்று பாத்திமா பாபுவே பொறுக்கிகள் பலகாலமாக பரப்பிவரும் வதந்திக்கு, "முகநூல் லைவ் ஆடியோ," வில் மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதோடு பின்னூட்டத்திலும் மறுப்பை தெரிவித்தோடு, “பலமுறை சொல்லிவிட்டேன். ஆனாலும் அப்படிப் பரப்புகிறார்கள்,” எனப் புலம்பியும் உள்ளார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும், ஆட்சித்திறன் பற்றியும் சொல்ல ஆயிரம் உண்மைகள் இருந்தும் அது எதுவும் பேசப்படுவதே இல்லை. (யாராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அலசுவதில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும் ஒரு ஒப்பீட்டுக்காகச் சொல்கிறேன்) ஆனால் எதனால் இத்தனை ஆண்டுகாலமாக கலைஞர் மீதும், திமுக மீதும் வதந்திகளைப் பரப்புகிறார்கள்? அதை ஏன் பார்ப்பன ஊடகங்களும், சமூகநீதிக்கு எதிரான கயவர்களும் தொடர்ந்து சொல்லிச் சொல்லி உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள்? ஏனெனில் அவர்களின் ஒரே எதிரி திமுக. ’சோ’ சொல்லியதைப் போல தமிழின விரோதிகளின் பரம்பரை எதிரி திமுக மட்டும்தான்.

நான் இறுதியாகச் சொல்வது இதுதான். திமுக விமர்சிக்கப்படவே கூடாத கட்சி அல்ல. ஆனால் அதில் நேர்மையும், உண்மையும் வேண்டும். தயவுசெய்து பத்துபேர் சொல்கிறார்கள் என்பதற்காக ஒரு பொய்யை உண்மை என நம்பி பரப்பாதீர்கள்.
தமிழ்நாடு சீரழிந்தது சொல்லப்படாத உண்மைகளாலும், தொடர்ந்து சொல்லப்பட்ட பொய்களாலும் தான். நன்றி.

நன்றி -அசோக்.R (டான் அசோக்)
Don Ashok - Ashok.R

Thursday, April 26, 2018

அது அந்த காலம்

#oldmemories அந்த காலம் தான் நன்றாக இருந்தது....!

பேருந்துகுள் கொண்டுவந்து நாளிதழ்கள்  விற்பார்கள் .,

எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்..,

மிதி வண்டி வைத்திருந்தோம்.,

எம் ஜி ஆர் உயிரோடு இருந்தார்.,

கலைஞரின் அறிக்கைகளை தேடி படித்தார்கள்.,

எல்லா வீடுகளிலும் முதல் மரியாதை பாடல் ஒலித்தது.,

வானொலி நாடகங்களை ரசித்து கேட்டோம்.,

எல்லோரும் அரசு பள்ளிகளில் படித்தோம்.,

சாலையில் எப்போதாவது வண்டி வரும்.,

மழை நின்று நிதானமாக பொழியும்
,சாராய கடைகள் இருந்தன.,ஆனால் இன்றைய கூட்டம் அன்று என்றுமே இருந்ததில்லை.,

தமிழ் ஆசிரியர்கள் தந்நிகரற்று விளங்கினர்.,

வேலைக்கு போகாதவன் எந்த குடும்பத்திற்க்கும் பாரமாயில்லை.,

எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.,

வெஸ்ட் இன்டீசை வெல்லவே முடியாது.,

சந்தைக்கு போக பத்து ரூபாய் போதும்.,

முடி வெட்ட இரண்டு ரூபாய்தான்.,

பருவ பெண்கள் பாவாடை தாவணி உடுத்தினர்.,சிலின்டர் மூடுதுணி போல் யாரும் நைட்டி அணிய வில்லை.,

சுவாசிக்க காற்று இருந்தது.,குடிதண்ணீரை யாரும் விலைக்கு வாங்க வில்லை.,

தெருவில் சிருமிகள் பல்லாங்குழி ஆடுவார்கள். அவர்களை கலாய்த்துகொண்டே நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்.,

மயில் இறகுகள் குட்டி போட்டன,புத்தகத்தில்.,

ஐந்து ரூபாய் தொலைத்ததற்க்கு அப்பாவிடம் அடி வாங்கினேன் ..,

மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே,ஆங்கிலம்.,

ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால்
டவுசர்.,

கடந்து தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்..,

நம்பிக்கைகளும்தான்.., மொத்தத்தில் மரியாதை இருந்தது.

ப.பி

Monday, April 23, 2018

SVe.சேகர் பற்றி சாருவிற்கு வந்த கடிதம்

இங்கே நான் எழுதியிருக்கும் குறிப்பை சுமார் ஒரு லட்சம் பேர் படித்தால்தான் நல்லது.  முடிந்தவரை இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு சாரு நிவேதிதா...

இன்று எனக்கு வந்த ஒரு வாசகர் கடிதத்தைப் படித்து மிகவும் அதிர்ந்து போனேன்.  எஸ்.வி.சேகர் அப்படி ஒரு முகநூல் குறிப்பைப் பகிர்ந்தது தப்புதான்.  அதற்குத்தான் அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாரே, அப்புறம் என்ன?  ரொம்பத்தான் ஓவரா பண்றாங்க எல்லாரும்.

இதை எழுதியிருப்பது ஒரு பெண்.  எஸ்.வி. சேகர் பகிர்ந்து கொண்ட குறிப்பு என்ன சொன்னது தெரியுமா?  அதை விட அசிங்கமாக பெண்களை யாரும் பேசி விட முடியாது.   பத்திரிகைகளில் வேலை செய்யும் பெண்களை மட்டும் அது குறிக்கவில்லை.  ஒட்டு மொத்தமாகப் பெண்களைப் பற்றிக் கேவலமாக நினைக்கும் ஒருவர்தான் அப்படி எழுத முடியும்.  அதை நான் இங்கே மேற்கோள் கூட காண்பிக்க முடியாத நிலையில் இருக்கிறேன்.  ’எந்தப் பெண்ணும் படுக்க அழைத்தால் வந்து விடுவாள்’ என்று நினைக்கும் காவாலிப்பயல்தான் அப்படி எழுத முடியும்.  இதைப் படிக்காமல் பகிர்ந்து கொண்டு விட்டேன் என்று எஸ்.வி. சேகர் சொல்வது பொய்.  அந்தக் குறிப்பு ஒரு நாலு வரி.  அதில் வரும் வார்த்தைகள் முகத்தில் தடியால் அடிக்கக் கூடியவை.  அதை எப்படி ஒருவர் படிக்காமல் பகிர முடியும்? 

எஸ்.வி. சேகர் மீது எல்லோரும் கொந்தளிப்பு ஏன் தெரியுமா?  எனக்குக் கடிதம் எழுதிய அம்மணி இங்கே கொஞ்சம் கவனிக்க வேண்டும்.  பெண்கள் பப்புக்குப் போகக் கூடாது என்கிறார்கள்.  யார்?  எஸ்.வி. சேகர்கள்.  நரேந்திர மோடிகள்.  பெங்களூரில் பப்புக்குள் புகுந்து அங்கே குடித்துக் கொண்டிருக்கும் பெண்களை அடித்துத் துரத்திய காவிகள்.  நிர்பயா என்ற பெண்ணை ஐந்து பேர் வன்கலவி செய்து கொன்றார்கள் இல்லையா?  அப்போது அந்தக் குற்றவாளிகளுக்காக வாதாடிய வக்கீல் என்ன சொன்னார் தெரியுமா?  என் பெண் அப்படி இரவில் தன் ஆண் நண்பரோடு போயிருந்தால் அவளை உயிரோடு கொளுத்தியிருப்பேன்.  இதுதான் இன்றைய இந்தியக் காவிகளின் செய்தியாக இருக்கிறது.  பெண்ணே, நீ தாய்.  நீ காளி.  நீ இந்திய மாதா.  உன்னை வணங்குகிறோம்.  எதுவரை?  நீ படி தாண்டாத வரை.  படியைத் தாண்டினால் உன்னைக் கொளுத்துவோம்.  இதுதான் காவிகளின் பெண் கோட்பாடு.  இதுதான் தாலிபானின் கருத்தும் கூட.  எல்லா அடிப்படைவாதிகளின் கொள்கைகளும் அடிப்படையில் ஒன்று போலவே தான் இருக்கும். 

அம்மணி, எஸ்.வி. சேகரின் கூற்றை (அதாவது, அவர் பகிர்ந்து கொண்டதை) நீங்கள் இன்றைய சூழலின் நடுவே வைத்துப் பார்க்க வேண்டும்.  வட இந்தியாவில் கிராமங்களில் முஸ்லீம்களையும் தலித்துகளையும் அடித்துக் கொல்கிறார்கள்.  இது குறித்த பல கள ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  இதையெல்லாம் நீங்கள் படிக்க வேண்டும்.  காஷ்மீரில் என்ன நடந்தது?  கோவிலில் வைத்து முஸ்லீம் சிறுமியை ஒரு கூட்டமே வன்கலவி செய்து சிதைத்துக் கொன்றது.  ஒரு போலீஸ்காரர் அந்தச் சிறுமியின் முதுகில் தன் முழங்காலை வைத்து உடம்பை இரண்டாக உடைத்திருக்கிறார்.  அம்மணி, அந்தச் சிறுமியை உங்கள் மகளாக நினையுங்கள்.  ஆனால் அப்படிச் செய்த குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றுள்ள பிஜேபி எம் எல் ஏக்கள் இரண்டு பேர் ஊர்வலம் போயிருக்கிறார்கள்.  இது என்ன விதமான சமிக்ஞையைத் (signal) தருகிறது.  ஆசிஃபா நம் மகள் என்று முதலைக் கண்ணீர் வடிக்கும் மோடி, ஆசிஃபாவை வன்கலவி செய்து கொன்ற குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் போன தன் கட்சி எம்மெல்லேக்களை ஏன் ஜெயிலில் தூக்கிப் போடவில்லை?  வன்கலவி குற்றத்துக்கு ஆதரவாக ஊர்வலம் போவது குற்றம் இல்லையா?

இப்போது, இந்தச் சூழலில் எஸ்.வி. சேகர் பகிர்ந்த கருத்தைப் பாருங்கள்.  பெண்கள் மீது அடிப்படையிலேயே மரியாதை இல்லாத, பெண்ணடிமைத்தனத்தைப் பேணுகின்ற ஒருவர் தான் இப்படியெல்லாம் பேச முடியும்.  ஒரு சிவில் சமூகத்தில் பத்திரிகையில் வேலை செய்யும் பெண்களெல்லாம் முதலாளிகளோடு படுத்தவர்கள் என்று எழுதியவரையும் பகிர்ந்தவரையும் கைது செய்து சிறையில் அடைப்பதுதான் முறை.  மன்னிப்புக் கேட்டால் ஆயிற்றா? 

இப்போது நடப்பதைத்தான் நான் கடந்த ஒரு ஆண்டாக எழுதி வருகிறேன்.  இந்தியாவின் படித்த வர்க்கமே ஃபாஸிஸ்டுகளாக மாறி வருகிறது.  படித்தவர்களே வன்முறையைக் கையில் எடுக்கத் துணிகிறார்கள்.  படுத்தால்தான் பத்திரிகை வேலை கிடைக்கும் என்று எழுதுகிற துணிச்சல் வேறு ஆட்சியில் எவனுக்காவது வருமா அம்மணி?  அடிப்படைவாதிகளையும், வன்முறையாளர்களையும், ஃபாஸிஸ்டுகளையும் மோடி அரசு தூண்டி விடுகிறது.  இந்தியா படுகுழியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. 

அம்மணி, ஹிட்லருக்கு எதிராக மார்ட்டின் என்ற பாதிரி எழுதிய கவிதையை உங்களுக்கு வாசிக்கத் தருகிறேன்.  இந்தக் கவிதை இப்போது இந்தியாவில் அர்த்தமாகும் தருணம் வந்து விட்டது.

First they came for the Socialists, and I did not speak out—
Because I was not a Socialist.
Then they came for the Trade Unionists, and I did not speak out—
Because I was not a Trade Unionist.
Then they came for the Jews, and I did not speak out—
Because I was not a Jew.
Then they came for me—and there was no one left to speak for me.

Charu Nivedita

Tuesday, April 3, 2018

ஆ.ராசா A.RAJA spectrum 2G

ஆ.ராசாவின் சமீபத்திய  நேர்காணல்கள் விதந்தோதப்படுகின்றன.  இன்றைக்கு ஆ.ராசா நீதிமன்றத்தில் வென்று வந்தவர்; அதுபோக தமிழ் ஊடகவியலாளர்களுக்கு திமுக பிரமுகர்கள் என்றால் இயல்பாகவே கொஞ்சம் தொடை நடுங்கும். ஆனால் 4 வருடங்களுக்கு முன்பு இந்தி சேனல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சி இது.

விசாரணை செய்பவன் ரஜத் “ஷர்மா”  நீதிபதியாக "ராஜகோபாலன்”  ஆடியன்ஸ் முழுக்க முன்கற்பிதத்துடன் அமர்ந்திருக்கும் வடக்கத்திய பாமரர்கள். எப்பேர்ப்பட்ட அவதூறுகளை நேரடியாகச் சுமத்தினாலும் யாரும் மறுக்கப்போவதில்லை. அரங்கினுள்ளேயும் வெளியேயும் அதுதான் நிலைமை.

தீர்ப்பு வராத நிலையில், திமுக ஆதரவாளர்களே  ஆ ராசாவை முழுவதும் நம்ப இயலாத அந்தச் சூழலில், சிபிஐ,அமலாக்கத்துறை, உச்சநீதிமன்றம், சிஏஜி உட்பட நாடே ஆ.ராசாவுக்கு எதிர்மனநிலையில் இருக்க... ஒற்றை ஆளாய் அமர்ந்திருக்கிறார் அந்த நபர்.

உதாரணத்திற்கு அந்த ஸ்டூடியோ அமைப்பைப் பாருங்களேன். அதிலிருக்கும் கூண்டில் வந்து அந்த நேரத்தில் அமர்வதற்கு எத்தனை தைரியமும், என்றைக்கிருந்தாலும்  இந்த  வழக்கில் நாம் நிச்சயம் வெல்வோம் என்ற தன்னம்பிக்கையும் இருந்திருக்க வேண்டும்?

ஒருவேளை அங்கு ஆ ராசா குற்றஞ்சாட்டிய அமைப்புகளுக்கு எதிராக  உச்சஸ்தாயியில் எதுவும் பேசினால் அதுவே கூட  மத்திய அரசையும், வழக்கை விசாரிக்கும் டிரையல் கோர்ட்டையும் எரிச்சலூட்டும் வாய்ப்புமிருந்தது. அவையனைத்தையும் தாண்டி ஆ ராசா அங்கே ஒரு மணி நேரம் வாதாடியிருக்கிறார்.  கூட்டணி உறவு தவிர்த்து மற்றைய  அத்தனை கேள்விகளுக்கும் நேரிடையான பதில்கள்! கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் இந்தியில்.. 90% கேள்விகள் ராசாவைச் சீண்டும் நோக்கில் பார்வையாளர்களிடம் கைதட்டல் பெறுவதற்காகவே கேட்கப்படுகின்றன.

தொகுப்பாளர் கேள்வியைக் கேட்ட அடுத்த நொடி, ஆ ராசா பதிலிறுக்கும் முன்னமே ஒவ்வொரு முறையும்  கைதட்டும் வடக்கத்தியர்கள்,  இந்தி புரியாமலும், உடைந்த ஆங்கிலத்தாலும் ராசாவுக்கு ஓரிரு இடங்களில் சற்று வார்த்தைகள் குளறும்போது ஓவென்று சத்தமிடுகின்றனர்.

ஆச்சரியப்படத்தக்க வகையில்  நிகழ்ச்சி முடியும் தறுவாயில் கொஞ்சம் கொஞ்சமாக ராசா பார்வையாளர்களைக் கன்வின்ஸ் செய்கிறார். யோசித்துப் பாருங்கள் எந்த ஊழல் குற்றவாளி பொது forum இல் வந்து இப்படி அமர்ந்து பதில் சொல்வான்? என்ன தேவை இருக்கிறது மீடியா முன்பு வந்து சிதையில் இறங்க வேண்டுமென்று?   So called Iron lady ஜெயாவுக்கு இந்த வக்கு இருந்திருக்கிறதா?  ஆனால்  உண்மையிலேயே நெருப்பாற்றில் நீந்தி வந்திருக்கிறார் ராசா.

கட்சியா தனி நபரா என கணக்குப் போட்டு ராசாவை பலிகொடுத்திருக்க திமுகவுக்கு எத்தனையோ நியாயங்கள் இருக்கலாம். நாட்டில் இருக்கும் எந்தக் கட்சியும் அதைத்தான் செய்திருக்கும். ஆனால்  கலைஞர் அதைச் செய்யவில்லை. தகத்தகாய சூரியனே என்றார்.

அன்றைக்கு கலைஞர் தேவையில்லாமல் தலித் கார்டை உபயோகிக்கிறார் என்று நானும் கருதியதுண்டு. அதற்காக இப்போது உள்ளபடியே வருத்தப்படுகிறேன்.   

And.,  ஆ.ராசா you beauty!  ❤️

https://m.youtube.com/watch?v=e86_u94WzWo

ராஜா ராதாமணாளன்