தொகுப்புகள்

Search This Blog

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, June 27, 2017

எது நம்பிக்கை

*நம்பிக்கை*

எல்லாம் ஒழுங்காக நடக்க,
நீ நம்பிக்கையோடு இருந்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை.

எதுவுமே ஒழுங்காக
நடக்காதிருக்கும் போதும், நீ
தைரியமாக வாழ்ந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

நீ நினைப்பதெல்லாம் உனக்கு
நடக்க நீ பலமாக உணர்ந்தால்
அதன் பெயர்
நம்பிக்கையில்லை . . .

நீ நினைக்காத பயங்கரங்கள்
உனக்கு நடந்தாலும் நீ
அசராமலிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

உற்றாரும் பிறரும்
உனக்கு உதவி செய்ய,
நீ நிதானமாக இருந்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .

உனக்கு உதவ யாருமே
தயாராக இல்லாத சமயத்திலும்
நீ பக்குவத்தோடிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

எல்லோரும் உன்னைக்
கொண்டாட, நீ சந்தோஷமாக
இருந்தால் அதன் பெயர்
நம்பிக்கையில்லை . . .

எல்லோரும் உன்னை
அவமதித்து ஒதுக்கித் தள்ள
அவர்கள் முன் ஜெயிக்கப் போராடினால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

உன் முயற்சிகளெல்லாம்
வெற்றியடைய நீ அழகாக
திட்டமிட்டால் அதன் பெயர்
நம்பிக்கையில்லை . . .

உன்னுடைய எல்லா முயற்சிகளும்
தோல்வியடைய, அதிலிருந்து
பாடம் கற்று நீ முயன்று கொண்டேயிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

எல்லோரும் உனக்கு
நம்பகமாக நடக்க, நீ
தெளிவாய் முடிவெடுத்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .

உனக்கு வேண்டியவரெல்லாம்
உன் முதுகில் குத்திக் கொண்டேயிருக்க
நீ தெளிவான வழியில் சென்றால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

உன்னிடத்தில் எல்லாம் இருக்க,
நீ எதிர்காலத்தைப் பற்றிக்
கவலையில்லாமல் இருந்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .

உன்னிடத்தில் எதுவுமே
இல்லாத பக்ஷத்தில், நீ எதிர்காலத்தை
நினைத்துப் பயப்படாமல் இருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

உனக்கு நம்பிக்கை இருக்கிறதா ???
*நம்பிக்கை இருந்தால் நல்லது*

நன்றி பழனியப்பன்

Sunday, March 5, 2017

விவசாயி வாழ்கை 2017

ஆராரோ ஆரிரரோ
கண்ணுரங்கு கண்மணியே...

ஈறஞ்சு மாசத்துல
வெள்ளாம வெளங்கவில்ல...
கந்துக்கு வாங்கி வந்த
காசுசெல்லாம் மண்ணுக்குள்ள...

காசு குடுத்த கெட்டிகாரன்
வட்டி கேட்டு வந்து நிக்க...
மெட்டி கூட காலில்லில்ல
வட்டி பணம் எங்க கட்ட....

பச்சையா அவன் பேச
படக்குன்னு ரோசம் வந்து...
பாலிடான குடிச்ச உங்கப்பன்
பாடை ஏறி போயிட்டானே...

இப்ப நட்டாத்துல நிக்கிறோமே
இங்க நாதியின்னு யாரிருக்கா ?
வெளஞ்ச மன்னுலதான் ஈரமில்ல ... நீ
அனஞ்ச மாருலதான் பாலுமில்ல...

அப்பன் செத்த கணக்கக் கூட
கவர்மெண்டு சேர்க்கவில்ல....
சர்காரு காசும்மில்ல
சோறு போட யாருமில்ல...

அப்பன் குடிச்ச பாலிடானு
பாதி இங்க மீதிருக்க..
உங்கப்பன் காட்டுன வழியிலேயே
நானும் நீயும் போயிருவோம்...

மறுஜென்மன்னு ஒன்னிருந்தா
மாடி வீட்ல பொறந்துக்கய்யா...
இந்த விவசாயி வீட்டோட
விலாசத்தயே மறந்திரய்யா....

ஆராரோ ஆரிரரோ...
கண்ணுறங்கு கண்மணியே....

இப்படிக்கு
கண்ணீருடன்
ஆ.பாபுசாந்தி,
அவிநாசி.

Thursday, September 15, 2016

அண்ணாவின் பொன்மொழிகள்






 பெருஞ்சிறப்புகளைக் கொண்ட அண்ணா அவர்களின் திருவாய்மொழிகள் புகழ்பெற்ற பொன்மொழிகளாக இன்றும் நிலைபெற்றுள்ளன. அவற்றுள் சில:-

1.கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு
2.மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு
3.கத்தியைத் தீட்டாதே உன்றன் புத்தியைத் தீட்டு. வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும்.
4.எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
5.சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு
6.மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை; தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை; தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பைப் பெருக்கும் நூல்கள் தேவை. 7.அறிவாலும் ஆற்றலாலும் ஆகாத காரியம் இல்லை. அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்.
8.நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்.
9.இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை.
10.இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள்.
11.நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.


1.ஜாதிகள் இருந்தாக வேண்டும் என்று எண்ணுபவர்கள் எவ்வழி உலகம் செல்கிறது என்பதை அறியாத ஏமாளிகள். காலத்தின் தாக்குதலைக் கயவரின் தாக்குதல் என்றும் பகுத்தறிவின் வேகத்தைப் பாப காரியம் என்றும் தவறாகக் கருதிடும் பக்குவமற்றவர்கள்.

2.என்ன இருந்தாலும் சார், கலையைக் கெடுக்கக்கூடாது பாருங்கோ என்று குழைவுடன் கூறும் குணாளர்களைக் கேட்கிறேன். கலை, மக்கள் நிலையை மாசுபடுத்தும்போது அந்தக் கலையைத் தொலைக்காமல் வேறென்ன செய்வது?

3.முருகன் என்றால் அழகுதான்; வேறல்ல என்கிறார்கள் சில முருகதாசர்கள். அப்படியானால் அன்றலர்ந்த ரோஜா, அடவி, ஆறு, மலை, மேகம், வெண்ணிலா, வானவில் ஆகிய அழகுப் பொருள்கள் இருக்க முருகன் என்றோர் தனிக் கற்பனை எதற்கு?

4.மின்சார விளக்குகள் தேவையில்லை - பழைய குத்துவிளக்குத்தான் இருக்கவேண்டும். விமானம் பறக்கக்கூடாது - கருடன்தான் பறக்கவேண்டும். ரயில் வண்டி கூடாது - கட்டை வண்டிதான் சிறந்தது. தீப்பெட்டி தேவையில்லை - சிக்கி முக்கிக் கல்தான் தேவை. துப்பாக்கியா வேண்டாம் - வேலும் வில்லும் போதும். மாளிகைகள் தேவையில்லை - பர்ணகசாலைதான் வேண்டும் என்று யாரும் பேசுவதில்லை. ஆனால், இந்தக் காலம் கெட்டுவிட்டது. பழைய காலம்தான் நல்ல காலம் என்று பேசவோ தயங்குவதில்லை. இப்படிப் பேசலாமா? பேசுவது நாணயமா?

5.பொதுவுடைமை வாழ்வு என்றால் என்ன என்று கேட்கிறீர்களா - அது ஒரு புத்தம் புதிய நிலை. புண்ணிய பாவத்தை விரட்டிய நிலை. தத்தளிப்பைத் தவிர்த்த நிலை. தாசர், நீசர் என்னும் பேச்சை ஒழித்த நிலை. ஏழ்மை வறுமை இல்லாத நல்லநிலை.

6.அறிவுப் பண்ணைக்குப் பணியாற்ற முன் வருபவர்களை நாடு வரவேற்பதில்லை. நையாண்டி செய்கிறது. மதிப்பளிப்பதில்லை. தொல்லை தருகிறது. எனினும் அந்த ஒரு சிலரால்தான் நாடு முன்னேறுகிறது.

7.குழந்தைப் பருவத்தில் மனித சமுதாயம் இருந்தபோதுதான் இடிதேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக்கடவுள் என்று கடவுட் கதைகள் தேவைப்பட்டன. அறிவுப் பருவத்தை அவனியோர் பெற்றுள்ள இந்தக் காலத்தில் இவை எதற்கு?

8.உயர்வகுப்பென்று உறுமிக்கொண்டு பிறரை அடக்கியாள்வதும் ஆண் என்று ஆர்ப்பரித்துப் பெண்களை இழிவு செய்வதும்தான் புனித இந்து மார்க்கத்தின் பெரிய பெரிய நீதிகள். நாடு வாழவேண்டுமானால் இத்தகு நீதிகளைத் தரும் மார்க்கம் மறைய வேண்டும்.

9.புரட்சி என்பது வாலிபத்தின் கூறு; பகுத்தறிவாளர் ஆயுதம். பழைமை விரும்பிகள் - புரட்டர்கள் - எதேச்சதிகாரிகள் ஆகியோருக்கு நஞ்சு. மக்களின் மகத்தான சக்தி. அதைப் பொசுக்கிவிட எவராலும் முடியாது.

10.சர்வேஸ்வரனின் பொருள் களவு போனால் கூட சாதாரண போலீஸ்தான் கண்டுபிடிக்கிறதேயொழிய கடவுள் சக்தி அதற்கும் பயன்படுவதில்லையே - ஏன்? இந்தச் சில்லறைச் சேட்டைகளைக் கூடத் தடுக்க முடியாத தெய்வங்கள் இருப்பதால் நாட்டுக்கு என்ன பயன்?

11.காதல் உற்றவனின் உறுப்புக்களைச் சிதைப்பது, தவமியற்றிய தமிழன் தலையை வெட்டுவது, தம்பியின் துரோகத்தைத் துணைகொண்டு அண்ணன் தலையைக் கீழே உருட்டுவது - இதன் பெயர்தான் இராமாயணம். இந்த இராமாயணம் நமக்குத் தேவையா?

12.நாலுவேதம், ஆறுசாஸ்திரம், அறுபத்து நான்கு கலைஞானம் இருக்க, பராசர் யாக்ஞவல்கியர் உபதேசங்கள் இருக்க, உன்னதமான உபநிஷத்தும் உத்தமமான கீதையுமிருக்க, ஒரு வாசகத்துக்கும் உருகாதாரையும் உருகவைக்கும் திருவாசகம் இருக்க, முருகன் அருளைத் தரும் திருப்புகழ் இருக்க, எல்லாம் இருந்தும் இந்த நாட்டிலே இல்லாமையும் போதாமையும் கூடவே இருக்கின்றனவே - அது ஏன்? இல்லாமையைப் போக்க இந்த ஏடுகளால் முடியவில்லை என்றால் ஏன் இருக்க வேண்டும் இவை இன்னமும் இந்த நாட்டிலே?

13.இங்குள்ள ஜாதித் திமிரைக் கண்டிக்க முன் வராத வீரர்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ள நிறத் திமிரைக் கண்டிப்பது மகத்தான குடியன் மதுவிலக்கு பிரசாரம் புரிவது போன்ற செயல் தவிர வேறென்ன?

14.ஜாதி - இது ஒழிய வேண்டுமா? வேண்டாமா? என்பதுதான் இன்றுள்ள கேள்வி. பாழாய்ப்போன ஜாதிப்பேச்சு ஆரம்பமாகிவிட்டதா? எந்த ஜாதியாக இருந்தால் உனக்கென்னய்யா? இது அந்தக் கேள்விக்குரிய பதில் அல்ல. ஜாதியை நிலை நாட்டுவதற்குரிய தந்திரம்.

15.பூமியிலே புரண்டு கோவிந்தா போடுவதும், வேல் குத்திக் கொண்டு வேலாயுதா என்று சொல்வதும் பக்தி என்று சொல்லப்படுமானால், பக்தி என்ற சொல்லுக்குப் பொருள் பைத்தியம் என்பதாக இருக்கவேண்டும் அல்லவா?

16.நடுப்பகல் - சுடுமணல் - பெருநடை - சுகமான பயணம் - இந்நான்கு தலைப்புகளையும் ஒரே செய்திக்குப் பயன்படுத்தும் தோழரை நீங்கள் என்னவென்று கூறுவீர்கள்? அண்டப் புளுகர் என்பீர்கள்! அத்தகைய புளுகர்களால் எழுதப்பட்ட அர்த்தமற்ற ஏடுகள்தான் புராணங்கள்.

17.விஞ்ஞானி கண்டுபிடித்துக் கொடுத்த மோட்டாரில் ஏறிக்கொண்டு அஞ்ஞானத்தை வளர்க்கும் பஜனை மடத்திற்குச் செல்லும் நம் போக்கைக் கண்டு, உலகக் கொட்டகையில் எவ்வளவு பேர் கேலி செய்கிறார்களோ? யார் கண்டார்கள்? செய்யாமலா இருப்பார்கள்!

18.ஜாதி முறையை நாம் எதிர்க்கிறோம் என்றால் பொருளாதார பேத நிலையை உண்டாக்கியதும் நிலைத்திருக்கச் செய்வதுமான கொடிய ஏற்பாட்டைத் தகர்க்கிறோம் என்று பொருள். அதாவது சமதர்மத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம்.

19.சித்திரை, வைகாசியில் கருடசேவை, ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் பூரம், ஆவணியில் அவிட்டம், புரட்டாசிக்குத் திருப்பதி என்று ஒவ்வொரு மாதத்தையும் நாம் புண்ணிய காரியத்துக்கே செலவிட்டால் வேறு உருப்படியான காரியத்தை எப்போது தான் புரிவது?

20.ஆயிரம் கண்ணுடையாள் என்று அர்ச்சிக்கிறார்களே காளியை, அதில் ஒருகண்ணால் பார்க்கக்கூடாதா ஏழைகளை! ஏழைகள் படும் அவதியை! அவளை பக்தியோடு பூஜித்தால் பலன் உண்டு என்று சொல்கிறார்களே பூஜித்துப் பூஜித்து ஏழைகள் கண்ட பலனென்ன?

21.சினிமாப் படத்தில் யாரோ ஒரு மாது ஆபாசமாகக் காட்சியளித்தால் ஆக்ரோஷத்துடன் அதைக் கண்டிக்கிறோம். ஆனால் கம்பன் கலையிலே நெளிந்து கிடக்கும் காமரசத்தைக் கண்டிக்கமட்டும் தயங்குகிறோம். ஏன்?

22.முதலாளி - நிலப்பிரபு - புரோகிதன் இந்த மூவகைச் சுரண்டல் சக்திகளிலே ஒன்றைவிட்டு மற்றதை மட்டும் முறிப்போம் என்றால் முடியாது. ஏனெனில் சுயநலம், சுயசுகம் என்ற பசைபோட்டு இந்த மூன்று வளைவுகளையும் ஒன்றுடன் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது.

23.ஆலமரத்துப் பிள்ளையாருக்குக் கர்ப்பூரம் வாங்கிக் கொளுத்துவதைவிட ஆரஞ்சுப் பழத்தையே கண்டிராத உன் அருமைக் குழந்தைக்கு ஓர் ஆரஞ்சு வாங்கிக் கொடுப்பது மேல் என்று கூறுகிறது திராவிட இயக்கம். கூறக்கூடாதா? கூறுவது குற்றமா?

24.எங்கோ ஒரு குக்கிராமத்தில் குறி கூறுவான் ஒரு தந்திரக்காரன். அங்கே கும்பல் கூடும். அதற்கு அருகே அரியதோர் இயற்கை காட்சி இருக்கும். ஆனால் அதைக் காணவோ யாரும் வரார். இப்படிப்பட்ட நாட்டிலே இலக்கியம் வளரவில்லை என்றால் எப்படி வளரும்?

25.பாசியை நீக்கிவிட்டுக் குளத்தின் படிக்கட்டுகளை இடித்த கதைபோல, கனியைக் கொடுத்துவிட்டு, கடுவனையும் நிறுத்தியதுபோல. காலிலே தண்டையைப் பூட்டிவிட்டுக் கழுத்துப் புண்ணுக்கு மருந்திட மறுப்பது போல, பிரிட்டிஷ் ஆட்சி நம் நாட்டில் உடன்கட்டை ஏறுவதைத் தடுத்தது. ஆனால் தீண்டாமையைத் தடுக்கவில்லை. துடுக்கர் கூட்டத்தை ஒடுக்கிற்று. ஆனால் மதத்தரசர் கூட்டத்தைக் கொழுக்கவைத்தது. நகர், ஊர் பலவற்றை எழுப்பிற்று. ஆனால் சேரிகளைத் தகர்க்காது விட்டது. ஆம் ஏகாதிபத்தியத்தின் போக்கு மிகவும் விசித்திரமானது.

26.ஏழைகளை வஞ்சிக்க ஓர் ஏற்பாடு. அதற்குப் பெயர் மதம். உழைக்கிறவனை ஒடுக்குவதற்கு ஓர் இயந்திரம் - அதற்குப் பெயர் ஜாதி. பகற் கொள்ளை அடிப்பதற்கு ஒரு திட்டம் - அதற்குப் பெயர் பூசை, சடங்கு, தட்சணை.

27.விஞ்ஞானக் கண்டுபிடிப்பான மோட்டாரில் ஏறிக்கொண்டு வைதிகத் திருப்பதி மலைக்கு மொட்டையடிக்கச் செல்வது, முதல்தரமான முட்டாள்தனமல்ல. விஞ்ஞான அறிவுக்கு நாம் செய்யும் மகத்தான துரோகமும் ஆகும்.

28.அவதார புருஷனாகிய இராமனால் கண்டுபிடிக்கமுடியாத ரயிலை ஒரு சாதாரண மனிதனாகிய ஜேம்ஸ்வாட் தான் கண்டு பிடிக்க முடிகிறது. என்ன பொருள் இதற்கு? அவதார புருஷனாக இருப்பதைவிட சாதாரண மனிதனாக இருப்பது மேல் என்பது தானே?

29.அவர் சங்கரர்; இவர் ஜீயர்; இது தம்பிரான்; அது சாமியார் என்று யார் யாரையோ பூஜித்து அலுத்தீர்- பழைய வழியிலே நடந்ததால். இனி உழைப்பாளி விஞ்ஞானி. பொதுநல ஊழியன் என்பவரை ஆதரிக்கும் புதிய வழியில் நடவுங்கள்; உலகு சீர்திருந்தும்.

30.இந்தியாவில் அறிவு சூன்யமே. ஞானம் இருப்பதை இல்லை என்று கூறுவதே வேதாந்தம். இல்லாததை உண்டு என்று நம்பச் செய்வதே மார்க்கம். பொய்யும் புரட்டுமே சாஸ்திரம்.

31.தீண்டாமையைக் கையாள்வது நியாயமல்ல என்றுதான் தெரிகிறது. ஆனால் ..... என்று பலர் இழுத்தாற்போல் பேசுகின்றனர்.ஆனால் என்று அநேக காலமாகக் கூறியாகிவிட்டது. இனி நாம் ஆனால் என்பதை மறந்து ஆகையால் தீண்டாமை கூடாது என்று கூறியாக வேண்டும்.

32.அபின் விற்று வாழ்பவன். போதை கூடாது என்று சொற்பொழிவு ஆற்றுவானா? புராணப் பொய்யையே நம்பி வாழும் ஆரியர். மூடநம்பிக்கைக் கூடாது என்று போர்ப்பரணி பாடுவாரா? பாடத்தான் மாட்டார்கள்! எப்படிப் பாடுவார்கள்?

33.காரைக்காலம்மையை, கண்ணப்பரை, குகனை அவனுடைய ஓடத்தில் ஏறிச் சென்ற இராமனை, அனுமனை-அவன் வாலின் பெருமையை ஆகிய இவைகளையே நாம் இன்னமும் பேசிக் கொண்டிருந்தால், எப்படித் தோன்றுவார் ஒரு கலிலியோ இங்கு?

34.புஞ்சையிலே நஞ்சைப் பயிர் பலிக்காது. குளிர்ப்பிரதேச விளைவு, கொதிப்புள்ள இடத்திலே பயிராகாது. அவை போலத்தான் புராண ஏடுகளை மட்டும் படித்துப் பயிலுவோரிடம் அறிவுத் தெளிவு ஏற்படமுடியாது.

35.குடி கெடுப்பவன் - கும்பாபிஷேகம் செய்கிறான். கொள்ளை லாபமடித்தவன் வெள்ளி ரிஷபம் செய்து வைக்கிறான். விபசாரி அபிஷேகம் நடத்துவிக்கிறாள். இவ்வளவையும் தடையின்றி ஏற்றுக் கொள்கிறார் ஆண்டவன். ஏற்றுக் கொள்ளலாமா?

36.வியாசர் கூப்பிட்டபோது உலகம் வரவில்லை. நாம் கூப்பிட்டால் ரேடியோ மூலம் உலகமே நம் முன் வந்து நிற்கிறது. எதனால் ஏற்பட்டது இந்தத் திறமை நமக்கு? பக்தியாலா? இல்லை! பகுத்தறிவால்.

37.வாழ்வாவது மாயமாம்! இது மண்ணாவது திண்ணமாம்! இப்படியானால் மண்ணாகக்கூடிய இந்த வாழ்விலே வெள்ளி வாகனங்களேன்! வைரக் கிரீடங்களேன்! மாணிக்க மூக்குத்திகளேன்? பரமன் ஆலயங்களிலே இவையெல்லாம் அமைக்கப்பட்டிருப்பதேன்? திராவிடர் என்ற சொல் கற்பனையுமல்ல. கனவுலகக் கண்டுபிடிப்புமல்ல. காவியத்தில் உள்ள சொல். வரலாற்றில் வருகிற பெயர். ஒரு சிறந்த இனத்தவரின் அரிய திருநாமம். அந்தப் பெயரைத்தான் கூறுகிறோம் நாம். இந்தியன் என்பது போன்ற அரசியல் சூதாட்டப் பெயரையல்ல.

38.சமத்துவம், சமதர்மம் போன்ற இலட்சியங்களைப் பேசுவது சுலபம். சாதிப்பது கடினம். அந்த இலட்சியத்தின் சாயலை - முழுப்பயனைக்கூட அல்ல - சாயலைப் பெறுவதற்கே பல நாடுகளில் பயங்கரப் புரட்சிகள் நடந்திருக்கின்றன. நினைவிருக்கட்டும்.

39.மனித சமுதாயத்தின் அல்லலை, விஞ்ஞானம் எந்த அளவு குறைத்திருக்கிறது என்பது பற்றி எண்ணினால் மக்கள் வீழ்ந்து வணங்கவும் செய்வார்கள் விஞ்ஞானத்தின் முன்பு. மனித சமுதாயத்தின் வேதனையை விஞ்ஞானம் அந்த அளவுக்குக் குறைத்திருக்கிறது.

40.ஆழ்வாராதிகள், நாயன்மார்கள் கதைகளைப் புராணிகர்கள் படிக்கட்டும். வீர வாலிபர்களே! நீங்கள் உலக அறிவாளிகள், உத்தம விஞ்ஞானிகள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைப் படியுங்கள்.

41.ஆத்ம சக்தியிலே ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட காந்தியாருக்குக்கூட நோய் கண்டபோது, ஆத்மசக்தி அல்ல; ஆறு டாக்டர்கள்தான் அவசியமாகத் தேவைப்பட்டனர் ஏன்? அதைத்தான் கொஞ்சம் உங்களைச் சிந்திக்கச் சொல்லுகிறேன்.

42.ஒருவரை ஒருவர் கண்டதும் முகமலர்ச்சி சிரமமின்றி ஏற்படவேண்டும். பயன் கருதி அல்ல - பாசாங்குக்கு அல்ல - அர்த்தமற்று அல்ல - கண்டதும் களிப்பு - நம்மைப்போல ஒருவன் என்ற நினைப்பிலிருந்து களிப்பு மலர வேண்டும். அந்த அகமலர்ச்சிக்குப் பெயர்தான் தோழமை.

43.ரேடியோவும் டெலிபோனும் ஒலிபெருக்கியும் மின்சாரமும் ஞானப்பால் உண்டதால் வந்த வல்லமைகள் அல்ல. அசரீரி அடி எடுத்துக்கொடுத்ததால் உண்டான அற்புதங்களுமல்ல. தன்னலமற்ற அறிவாளிகளின் உழைப்பால் விளைந்த உன்னதப் பொருள்கள் அவை.


---------நன்றி: "உண்மை" 1-15-செப்டம்பர் 2008 

Tuesday, April 23, 2013

உயிரற்ற காகிதங்களின் குவியல் அல்ல





"புத்தகங்கள் வெறும் உயிரற்ற காகிதங்களின் குவியல் அல்ல. அவை அலமாரியில் இருந்து நம்மை வழி நடத்தும் உயிரோடு இருக்கும் மனிதங்கள்" என்றார் அமெரிக்க எழுத்தாளர் கில்பர் ஹையாத். . மனிதன் வரலாற்றுக்குரியவன் ..! நேற்று, இன்று, நாளை என்ற மூன்றும் மனிதனுக்குரியவை. சமூகத்தில் நிலவும் கருத்தாக்கங்கள், நம்பிக்கைகள், சந்தோஷங்கள், சவால்கள், மதிப்பீடுகள், நுணுக்கமான கருத்துக்கள் அனைத்தும் கல்விப் பொருளாக, புத்தகங்களாக மாற வேண்டும்..! காலத்தின் நிகழ்வுகள் உரிய, சரியான முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். அத்தகைய உள்ளடக்கம் கொண்ட கல்விதான் மக்களை விடுதலை செய்யும்.

ஹுமாயூன் உல்லாசபுரியாக இருந்த ஷேர் மண்டல் மாளிகையை அரிய நூல்களைக் கொண்ட நூலகமாக மாற்றினார்.

இந்தியநாட்டின் விடுதலைக்காகப் போராடி தனது 23 வது வயதில் தூக்கிலிடப்பட்ட மாவீரன் பகத் சிங் தூக்குக்கயிறு கழுத்தில் அரங்கேறும் வரை படித்துக்கொண்டே இருந்தான்.

ஒரு புத்தகத்தைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு தருபவனே மனித குலத்தின் உண்மையான விடிவெள்ளி --ஜான் மில்டன்.

ஒரு புத்தகம் 100 நண்பர்களுக்குச் சமம் ‍ சர் ஐசக் நியூட்டன்.

துப்பாக்கிகளைவிட பயங்கரமான ஆயுதங்கள் புத்தகங்கள்..மார்ட்டின் லூதர் கிங்.

ஆட்சி அதிகாரத்தையே உலுக்கிவிடும் பேராற்றல் ஒரு புத்தகத்திற்கு உண்டு.

"மனிதன் இருப்பு மௌனத்தால் கட்டப்படவில்லை. ! அவன் வார்த்தகளால், செயல்களால், எதிர்வினை தூண்டும் ஆழமான நடவடிக்கைகளால் கட்டமைக்கப்படுகின்றான். "--பாவ்லோ பிரையர்

உலக நாயகனான சார்லி சாப்ளின், ஒவ்வொரு புதிய படம் நடிக்க ஒப்புக்கொள்ளும்போதும், அதன் முன் பணத்தில் முதல் 100 டாலருக்கு புத்தகம் வாங்குவாராம்.

"ஒரு புத்தகத்தைத் திறக்கும்போது, உலகினை நோக்கிய ஒரு சன்னலைத் திறக்கிறோம்"...தோழர் சிங்காரவேலர்.

"வேறு எங்கோ ஒரு அற்புத உலகில் வசிக்க விரும்புவோருக்காக கண்டுபிடிக்கப்பட்டது புத்தகம் மட்டுமே"..மார்க் ட்வைன்

"ஒரு நல்ல வாசகனைக் கொண்டே, ஒரு நல்ல புத்தகம் அடையாளம் காட்டப் படுகிறது" ஜார்ஜ் பெர்னாட்ஷா

"ஒருவர் மூளைக்கும் இருக்கும் சிந்தனை மகரந்தங்களை மற்றொரு மூளைக்குள் கொண்டு செல்லும் தேனீக்கள்தான் புத்தகம்" -ஜேம்ஸ் ரஸ்ஸல்

"ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள்; அதைத் திருப்பித் தருபவன் அதைவிடப் பெரிய முட்டாள்"..-அரேபியப் பழமொழி.

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள், இங்கே ஒரு புத்தகம் உறங்குகிறது என்று- பெட்ரண்ட் ரஸ்ஸல்

புத்தகங்களும், நூலகங்களும் இல்லாத நாடு சிறைச் சாலைக்கு ஒப்பாகும்..நெப்போலியன்

மொத்த இறந்த காலத்தின் ஆன்மாவும் வசிக்குமிடம் புத்தகம்..தாமஸ் கார்லைல்

வாசிப்பின் வாசங்களை குழந்தைகளுக்குத் திறந்து கொடுக்கத் தெரிந்த பெற்றோரே வரம் பெற்றோர்

ஒரு நூலகத்தின் கதவு திறக்கப்படும்போது ஒரு சிறைச் சாலையின் கதவு மூடப்படுகிறது...பைபிள்

*அனைவரும் மூளையை உரசிப் பார்க்கும் புத்தகங்களை வாங்குங்கள்..!

* குழந்தைகள், நண்பர்கள், நெருங்கியவர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் இன்று புத்தகங்கள் பரிசளியுங்கள்...! 

* நாம் உலகப் புத்தக தினத்தன்று குழந்தைகளையும், பெரியவர்களையும் ஒன்றாகக் கூடி புத்தகம் படிக்க ஏற்பாடு செய்வோம்!"

"புத்தகம்தான் சமூக மாற்றத்திற்கான திறவுகோல்..!"

புத்தகம் நம் நினைவுகள் காற்றில் கரைந்து போய்விடாமல் காப்பாற்றி வைக்கிறது ...
ஆகவே அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்ப்போம்....

நன்றி - பார்த்திபன் 

Monday, March 5, 2012

இன்னும் பல கொலைவெறி



மனித உயர்களை குடிக்கும் மதவெறியே !

இதய துடிப்பை நிறுத்தும் இனவெறியே !

ஜனனத்தை மரணமாக்கும் ஜாதிவெறியே !

பண்பாடை மறந்து பழிவாங்கும் மொழி வெறிய !

காஷ்மீரில் உறைந்த பனிப்பாறையில்

தெளிக்கப்பட்ட குருதியின் சிவப்பு புள்ளிகள்தான்

மதவெறியர்களின் கட்சிக் கொடியோ ?

இலங்கையின் குறிஞ்சியை

குருதியில் நனைபதுதான்

இனவெறியர்களின் கொள்கையோ ?

கிராமங்களின் ஓரங்களில் வருமையுடுத்தி

கையின்றி இருபவர்தான்

ஜாதிவெரியின் வாரிசோ ?

ஜீவ நீர் தடுத்து

மௌனியாய் மரணத்தை பரிசளிப்பதுதான்

மொழி வெறியின் வீரமோ ?

மதவெறி தேசம் காக்க ..

இனவெறி மொழி காக்க ..

ஜாதிவெறி ஊர் காக்க... என்றால்

இவற்றை காப்பதை விட

மடிந்துகொண்டிருகும் மனித நேயத்தைக் காத்திட -உங்களை

மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன் .......

(1998 ஆம் ஆண்டு என் கணவரின் டைரியிலிருந்து ...)

Saturday, February 12, 2011

காதலர் தினத்தில் காதலர்களின் கவனத்திற்கு..!!


    வணக்கம் அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

என்னடா இது காரசாரமான பதிவினை விடுத்து காதலைப்பற்றி போட்டுள்ளாரே என்று பார்க்கிறீர்களா ..?? ஆம். நாளை மறுநாள் காதலர் தினம் என்றதும் என் மனம் குதூகலத்துடன் 24 வருடம் பின்னோக்கி நகர ஆரம்பித்து விட்டது.

யோசனை வேண்டாம்.நானே சொல்கிறேன் . நானும் எனது மனைவியும் காதலிக்க ஆரம்பித்து 24 வருடங்களாகிவிட்டது .நான் ஊட்டியில் ஏழாம் வகுப்பு படிக்கும்பொழுது தூரத்து உறவான சாந்தி அன்னூரில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்.எங்கள் சொந்தக்கார பாட்டியின் இறப்பு எங்கள் சந்திப்பிற்கு அடித்தளமிட்டது. அதில் இருந்த சில பெரியோர்கள் இது உனக்கொரு மாமன் பொன்னாகுது என்று எங்களுக்குள் காதல் விதைகளை தூவி விட்டனர்.அன்று முதல் "puppy love" என்று சொல்லக்கூடிய காதல் எங்களை தொற்றிக்கொண்டது.ஆனால் பின்னர் திருமணம் என்று வந்தவுடன் பிரச்சினைகள் மற்ற காதல்களைப்போலவே தான். காரணம் அவரின் படிப்பு B.E, நானோ +2தான். காதலித்தாலும் சாந்தி படிப்பில் படு சுட்டி. +2 வகுப்பில் பள்ளியில் முதலிடம் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர் என்றாலும் அவரது படிப்பை பார்த்து பல அமெரிக்க மாப்பிள்ளைகளும் இன்ஜினியர் மாப்பிள்ளைகளும் வந்த வண்ணம் இருந்தன.

 காதலிலும் ஜெயித்து வாழ்க்கையிலும் ஜெயிக்க் முடியாதா..?(This happen before BOYS movie) என்ற கேள்வியுடன்  என் தூரத்து உறவான சாந்தியை  சுமார் பதினான்கு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டடேன். பல போராட்டங்களுக்கு பிறகு பெற்றோர்களது சம்மதத்துடன் என்னை கை பிடித்தார் சாந்தி.  எங்களுடைய காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்த போதிலும் அவர்களுடைய சம்மதத்திற்க்காக காத்திருந்து பெற்றோர்களின் மனம் கோணாமல் பின்புதான் திருமணம் செய்து கொண்டோம்.. பிறகு அருகில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி கொண்டிருந்தார் . மேற்படிப்பு படிக்க ஆசை பட்டவரை M.E படிக்க வைத்தோம்.

 M.E இறுதியாண்டு படிக்கும் பொழுதே அகில உலக கருத்தரங்கில் கலந்து கொண்டு தனது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்த இவருக்கு அமெரிக்க நிறுவனம் ஓன்று சம்பளமாக சுமார் மூன்று லட்சம் ரூபாய்க்கு வேலை வாய்ப்பு அளித்தது, ஆனால் என் மனைவியோ அந்த வாய்ப்பை நிராகரித்து இந்தியாவிலேயே எங்கள் குடுப்பதினரோடு எங்கள் கிராமத்தில் இருப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி என்று கூறிவிட்டார் . 
                         (நிக்சிதா -  Our family friend & Avinashi union vice chairman's daughter)

சரி எங்களை விடுங்கள் . நாங்கள் இன்னும் எங்களுடைய கூட்டுக்குடும்பத்தில் 24 வருட காதலர்களாகவும் 10 வருட தம்பதியராகவும் இருப்பதால் தான் காதலை பற்றி இந்த பதிவினை போட தகுதியுடன் கூடிய ஆவல் ஏற்பட்டது.

பொதுவாக காதல் பிரச்சனை வீட்டில் தெரியவந்தவுடன் கண்டிப்பாக பிரச்சனைகள் வரவே செய்யும்.குழந்தையாக பாவித்துக் கொண்டிருப்பவர்கள் திடீரென மிகப்பெரிய முடிவினை அவர்களாகவே எடுக்கும் பொழுது கோபம், ஆத்திரம் எல்லாம் பெற்றவர்களுக்கு ஏற்படுவது நியாயமே. 

'ஏன் நமது நியாயமான காதல் ஆசையை, ஆர்வத்தைப் புரிந்து கொள்ளாமல் பெற்றவர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்?' என சிந்திக்காமல், அவர்களது கோபம் நியாயமே, அது தீர்வதற்கு சிறிது நேரம் கொடுக்கலாம் என காத்திருங்கள். இந்திரா காந்தி படிக்கும் காலத்தல் பெரோஸ் காந்தியைக் காதலித்தார். விஷயம் பிரதமராக இருந்த நேருவின் காதுகளுக்குப் போனது. 'நான்கு வருட காலம் இருவரும் சந்திக்காமல், பேசிக்கொள்ளாமல், கடிதம் எழுதாமல் இருங்கள். அதற்குப் பின்னர் இருவருக்கும் காதல் இருப்பதாகத் தெரிந்தால் திருமணம் முடித்து வைக்கிறேன்' என்று நிபந்தனை விதித்தார். 

இருவரும் காதலுக்காக சொன்ன சொல்லைக் காப்பாற்றிக் கிடந்தார்கள். அவர்கள் இருவரும் அன்போடு காதலில் காத்துக் கிடந்திருப்பதைப் பார்த்த நேரு, விரைவிலேயே இருவருக்கும் திருமணம் முடித்து வைத்தார். பெற்றோர்களது கோபம் தீரும் வரை காத்திருங்கள். காத்திருந்தால் கண்டிப்பாக நல்லதே நடக்கும். பெற்றோர், காதல் இரண்டும் மனிதனுக்கு இரு கண்களைப் போன்றது.அதனால் இரண்டுடனும் சேர்ந்து வாழ்வதற்காக முடிந்தவரை கஷ்டப்பட்டு சம்மதம் பெறுதலே நல்லது. 

சில பெற்றோர்கள் காதலுக்கு ஆதரவாகவே இருப்பார்கள். ஆனால், இந்த காதலுக்கு இசைவு தெரிவித்தால் அடுத்ததாக தம்பி, தங்கைக்கு திருமணம் முடிப்பதில் சிக்கல் ஏற்படும் என பயப்படுவார்கள். அவர்களது சந்தேகம், பயம் நியாயமானதே. அதனால் உங்களது காதலால் குடும்பத்தில் மற்றவர்களது எதிர்காலத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என உறுதியளிக்க வேண்டியது உங்கள் கடமை.காதல் திருமணங்கள் என்பது இப்பொழுது வெகு சகஜமாக நடைபெறுகின்றன. இது சமூக குற்றம் அல்ல என்பதை எடுத்துச் சொல்லி அவர்களது அன்பினைப் பெற்று அதன் பின்னர் திருமணம் முடிப்பதே நல்லது. 

உண்மையும், நேர்மையும் கலந்த காதல் என்றும் அழிவதில்லை, தோற்பதில்லை என்பார்கள். காதலின் அடிப்படையும் கூட அதுதான். ஒரு பெண் ஒரு ஆணை ஏன் காதலிக்க முடிவு செய்கிறாள்? இவன் நம் மனதுக்கு ஒத்து வருபவனாக இருக்கிறான், இறுதிவரை உடன் வருவான், துயரங்களில் துணை இருப்பான், இவனின் சினேகிதம் ஆறுதல் தருகிறது என்ற எண்ணத்தில்தான். இது ஆண்களுக்கும் பொருந்தும். இந்த எண்ணங்கள் எந்தக் கோட்டில் உடைகிறதோ அந்த நொடியே அந்தக் காதலின் அஸ்திவாரம் தவிடு பொடியாகி விடுகிறது.

முழுமையான புரிந்து கொள்ளுதல், பாதுகாப்புணர்வு, முழுமையான நம்பிக்கை, உண்மையான நேசம், இன்ன பிறதான் ஒரு காதலை உயிர்ப்புடன், துடிப்புடன், உண்மையான காதலாக நீட்டிக்க வைக்கும்.உணர்வுகளுக்கு அங்கு மதிப்பு இருக்க வேண்டும். பாசத்திலும், நேசத்திலும் பாசாங்கு இருக்கக் கூடாது. வெறும் வார்த்தையாக மட்டுமல்லாமல், உண்மையான செயல்பாடுகள் காணப்பட வேண்டும். உன் முன்னேற்றத்திற்கு நீ இப்படிச் செய்யலாம், இதை நீ செய்தால் சரியாக வரும். உனது உயர்வுக்கு இது உதவும் என்ற அறிவுரைகளில் உண்மையான காதலைக் காணலாம்.

காதல் என்றால் கூடவே எதிர்ப்பும் பின்னாலேயே நிற்கும். அதையும் உணர்ந்து, அதை எப்படி தாண்டுவது என்பதில் பாசிட்டிவான சிந்தனை இருக்க வேண்டும். அவசரம் காட்டுவது அலங்கோலத்திற்கு வழி வகுத்து விடலாம்.உண்மையான காதல், மரியாதை, நம்பிக்கை, பாசப் பிணைப்பு ஆகியவற்றை பலமாக கொண்ட ஒரு அடித்தளமாகும். ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவும் சக்திதான் காதல்.

எனவே, உண்மையாக காதலிப்போம், உண்மையான காதலைக் காதலிப்போம், காதலைக் கொண்டாடுவோம்

Thursday, February 10, 2011

அதிமுக vs திமுக -என்ன கொடுமை இது


 2002-2003 நெசவாளர்களை வறுமையில் வாடவிட்டு கஞ்சித்தொட்டி திறந்த பொழுது நான் எழுதிய கண்ணீர் கவிதை.

"ஆராரோ ஆரிரரோ 
கண்ணுறங்கு கண்மணியே 
ஈரஞ்சு மாசத்தில 
நேரமிங்கு சரியில்ல
நெஞ்ச துணி விக்கவில்ல
கஞ்சி காச்ச வழியுமில்ல  
மாருலதான் பாலுமில்ல 
பிஞ்சு நீயும் வாடுறியே 
கொஞ்சம் நீயும் பொருதுக்கயா 
நஞ்ச நானும் வாக்கையில 
பஞ்சமினி உனக்கில்ல
பரலோகம் போய்வாயா 
ஆராரோ ஆரிரரோ 
கண்ணுறங்கு கண்மணியே....!!!

2005-2006ல் 79 விசைத்தறி சங்கங்கள் மட்டும் லாபத்தில் இயங்கின. ஆனால் 2009-2010ல் 126 விசைத்தறி சங்கங்கள் லாபகரமாக இயங்கி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிற 5 கூட்டுறவு நூற்பாலைகளும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமும், ஈரோட்டில் இயங்கி கொண்டுள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலையும் லாபத்தில் இயங்கி வருகின்றன.

இலவச வேட்டி சேலைத்திட்டத்தில் "டெண்டர்" முறையே தொடர்ந்து கடை பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கைத்தறி கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் இலவச வேட்டி சேலை நெய்வதற்காக கூட்டுறவு நூற்பாலைகளில் இருந்து நூல் வழங்கப்பட்டு வருகிறது.

நூல் விலை எவ்வளவு அதிகரித்தாலும் அக்டோபர் 2010 வரை ரூ.950/- விலைக்கே நூல் வழங்கிட வேண்டும். டெண்டர் கமிட்டி முடிவு செய்துள்ள விலையான 5 கிலோ ஒன்றுக்கு ரூ.950/- தான் இந்த ஆண்டு இலவச வேட்டி சேலைக்கு கூட்டுறவு நூற்பாலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நூலுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க. ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு ஐந்தாண்டு காலத்தில் ஒரே முறை 2004ம் வருடம் மட்டும் 10 சதவிகித அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் 2007ல் 10 சதவிகித அகவிலைப்படி உயர்வும்; 2008-ஆம் ஆண்டில் 10 சதவிகித கூலி உயர்வும்; 2009-ஆம் ஆண்டு 15 சதவிகித அகவிலைப்படி உயர்வும்; 2010ல் 10 சதவிகித அடிப்படை கூலி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச வேட்டி சேலை திட்டத்தின் கீழ் 2005-ஆம் ஆண்டில் கைத்தறி சேலைக்கு ரூ45ஆக இருந்த கூலியை உயர்த்தி; தற்போது ரூ68.22 ஆகவும்; கைத்தறி வேட்டியின் கூலியை ரூ.42.13 ஆக இருந்த கூலியை ரூ.58.06ஆக உயர்த்தியும்; விசைத்தறி சேலைக்கு 2005-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ரூ.21.42ஐ, தற்போது ரூ.28.16ஆக உயர்த்தியும்; விசைத்தறி வேட்டிக்கு ரூ.12.38ஆக இருந்ததை ரூ.16 ஆக உயர்த்தியும் கலைஞர் அரசு வழங்கியுள்ளது.

இத்திட்டத்திற்கு கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் உள்ள 11000 கைத்தறிகளும், விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்ளைச் சார்ந்த 41000 தறிகளும் ஈடுபடுத்தப்பட்டு டிசம்பர் மாதம் வரை வேலை வாய்ப்பு வழங்கி உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இலவச வேட்டி சேலை திட்டத்தைப் பற்றி பேசுவதற்கு அருகதை அற்றவர் ஜெயலலிதா. ஏனென்றால் 2001-2002 மற்றும் 2002-2003 ஆகிய இரண்டாண்டுகளில் இத்திட்டத்தை செயல்படுத்தாமல் நெசவாளர்களை வறுமையில் வாடவிட்டு கஞ்சித்தொட்டி திறக்கும் நிலைமைக்கு ஆளாக்கியவர் இவர். தான் திருடி பிறரை நம்பாள் என்பது ஜெயலலிதாவிற்கே பொருந்தும். 

பால் கொள்முதல் விலை

அதிமுக ஆட்சியில் பால் கொள்முதல் விலை பசும்பாலுக்கு ரூ. 1.50, எருமைப் பாலுக்கு ரூ. 1.56 என்றுதான் உயர்த்தப்பட்டது. இப்போதைய திமுக ஆட்சியில் 4 முறை பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பசும்பாலுக்கு ரூ. 6.60 அளவுக்கும், எருமைப் பாலுக்கு ரூ. 12.70 அளவுக்கும் விலை உயர்வு தரப்பட்டுள்ளது.

பசும்பாலுக்கு இது 4 மடங்கும், எருமைப் பாலுக்கு 8 மடங்கும் விலை உயர்வு ஆகும்.தற்போது மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பால் கொள்முதலுக்கு கூடுதல் விலை கொடுக்கப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் லிட்டருக்கு ரூ.16.40ம், ஒரிசாவில்ரூ. 16.32ம், கேரளாவில் ரூ.16.07ம், ஆந்திராவில் ரூ.15.42ம், மேற்குவங்காளத்தில் ரூ. 15.19ம், மராட்டியத்தில் ரூ. 13.50ம் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பசும் பாலுக்கு ரூ.16.50ம், எருமைப்பாலுக்கு ரூ.25.20ம் வழங்கப்படுகிறது. 

இன்னும் இவற்றை போல பல இருக்கிறது எதை சொல்வது எதை விடுவது.
சமந்தபட்டவர்களுக்கு தெரியும் இவற்றின் வேறுபாடு .
மனசாட்சி உள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள் .

Wednesday, February 9, 2011

குப்பைத்தொட்டி தெய்வம்

என்னுடைய 10ஆம் வகுப்பில் கவிதை என்று நினைத்து நான் எழுதிய ஒன்றை இங்கு பதிகிறேன்.

சின்னஞ்சிறு சிட்டு!
கைகளிலோ பிச்சை தட்டு
வாடிப்போன முகம்
நொந்து போன அகம்
மெலிந்துபோன தேகம்
கண்களிலோ சோகம்
இவர்கள் பிச்சை எடுக்க யாரிட்ட சாபம்
தீர்க்கப்பட வேண்டியவை
இந்தப்பிஞ்சு இதயங்களின் தாகம்
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றால்
இன்று பல தெய்வங்களை
குப்பைத்தொட்டியில் தான் பார்க்க வேண்டும்
என்று மாறும் இந்த பரிதாபம் ?

Tuesday, October 12, 2010

அறவழி

றிவின் வழியே அறவழி யாகும் ,
லயம் தொழுவது சாலவும் தீது ,
றைவன் என்பது இயற்கையே யாகும் ,
சன் என்பவன் நீசநேயாவன் ,
ன்னிலும் உயர்தவன் ஒருவனும் இல்லை
ழ்வினை என்பது உன்னை ஏய்க்கவே,
ல்லாம் உன் செயல் என்பதை நீ அறி,
ழை என்பவன் கோலையே ஆவான் ,
துங்கி நில் என்றால் ஒட்டி நீ நில்,
துவோரெல்லாம் உயர்தோர் ஆகார்.....


கடவுள் என்பது கயவர்கள் கற்பனை!

டவுள் என்பது கயவர்கள் கற்பனை!
காசிக்கு போவது காசுக்கு நட்டம்!
கிளர்ச்சிகள் இன்றி வளர்ச்சிகள் இல்லை!
கீதை உன்னை கிழ்மகன் ஆக்கும்!
குட்டக் குட்டக் குனிபவன் முட்டாள்!
கூடி ஒற்றுமை கொள்கையில் காண்பாய்!
கெட்டாலும் மானம் விட்டு கேடாதே!
கேள்வி ஞானமே கேடில்ல ஞானம்!
கைபெண்ணாயினும் கட்டு தாலியை!
கொடுப்பவன் எல்லாம் கொடை வள்ளல் ஆகான்!
கோயில் இல்லா ஊரில் நீ குடி இரு!

கடவுளா ?

கடவுள் பெயரை சொல்லி கொண்டு !
காவி உடையை அணிந்து கொண்டு !
மக்கள் நிலையை புரிந்து கொண்டு !
சில போலிகள் இங்கு அலைவதுண்டு !
வாயை திறந்தால் லிங்கம் வரும் !
கையை விரித்தால் விபூதி வரும் !
கண்ணி பெண்ணை அணைத்த கரம் !
கொடுத்துவிடுமாம் பிள்ளை வரம் !
பெண்ணே உனக்கு ஏது தோஷம் !
அவன் போடுகிறான் காவியில் வேஷம் !
அவனுடன் நீ போடாதே கோஷம் !
உன் வாழ்க்கை ஆகிவிடும் நாசம் !
கவி:- என் கணவர் -ஆ.பாபு