தொகுப்புகள்

Search This Blog

Friday, May 15, 2026

தடம் மாறும் அரசியல்

நீங்கள் இப்போது முகநூலைக் கவனித்தால் ஓர் உண்மை புரியும். 

இத்தனை வருடங்களாய் சட்டமன்ற நிகழ்வுகளையோ பாராளுமன்ற நிகழ்வுகளையோ தொலைக்காட்சியில் பார்க்காதவர்கள் கடந்த மூன்று நாட்களாக ஒரு நாளைக்குப் பத்து பதிவுகள் போடுகின்றனர். அவர்களில் 90% பெண்கள். 

அப்படி என்ன எழுதியிருக்கிறார்கள் என்று ஆவலோடு பலரையும் தேடித் தேடிப் படித்தேன். 
செல்லத்துக்கு டிரஸ்ஸை மாத்தி விடுங்கடா 

கருப்பு கோட்டைக் கழட்டிட்டு இன்னிக்கு புளூல வாங்கடி தங்கம்.

என் ஆளுக்கு நல்ல தூக்கமில்ல போல. டல்லா இருக்காரு.

சி.எம் ஷோஃபாவுல நிறைய இடம் காலியா இருக்கே. நானும் அங்க வந்துரட்டுமா புஜ்ஜிமா.

டை அடிச்சிட்டு வெள்ளை வேட்டி சட்டைல வாங்கண்ணா. அப்பத்தான் மாஸ் அள்ளும். 

நீ என்னத்தை வேணாலும் உளறுண்ணா. நா உன்னயவே பாத்துட்டிருக்கேன். 

நீ எதுவுமே செய்ய வேணாம் கியூட்டான்டி. இப்பிடி தினம் வந்து போஸ் கொடுமா.

இவைதான் அந்த மாதரசிகள் அடைந்திருக்கிற திடீர் அரசியல் விழிப்புணர்வின் எச்ச சொச்சங்கள்.. சீரியஸாய் அரசியல் பேசுகிறவர்களும் ' எங்களுக்கு ஓட்டுப் போட்ட கட்சியோட ஆதரவுலதான் நீங்க முதலமைச்சரா உக்காந்திருக்கீங்க ' என்று உதய் சொன்னதைத் தவிர்த்திருக்கலாம் என்று அறிவுரை வயலின் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். 

இவர்கள்  சட்டமன்றத்தைக் கூட  audio luanch நடக்கிற இடமாகவே பார்க்கிறார்கள்.இன்னும் சிலர் இவரை பேரறிஞர் அண்ணாவோடெல்லாம் ஒப்பிட்டு  எரிச்சல்படுத்துகிறார்கள்.
அண்ணா காமராஜரைப் பார்க்கப் போனது media promotionகாக அல்ல. ஆனால் இவர் நடத்திக் கொண்டிருப்பது அக்மார்க் political shooting.  தளபதி பட்டத்தை ஸ்டாலினிடம் இருந்து பிடுங்கியது போல் இப்போது புகழேந்தி ஐயா என்கிற brand name க்கும் குறி வைத்திருக்கிறார். இனி நாகரிக அரசியலுக்கும் நான் மட்டும்தான் authority என்கிற திமிரான முன்னெடுப்பன்றி வேறில்லை. இன்னொரு கோணத்தில் சிந்தித்தால் லாட்டரி ஆன்டியின் துவார பாலகர்களை மட்டும் தனியே சந்தித்தால் எல்லோருக்கும் சந்தேகம் வந்து விடும் என்பதற்காக மீடியாக்களின் துணையோடு நடத்திக் கொண்டிருக்கிற கண்கட்டு வித்தை.

 Vijay TV நடத்தும் செல்லக் குரலுக்கான தேடலுக்கு fire விடுவது போல் தமிழக மக்கள் இந்தச் செல்ல முதலமைச்சருக்கான தேடலின் முடிவில் எந்த சீனைப் பார்த்தாலும் புளகாங்கிதம் அடைந்தபடி Tv க்கு முன்னால் உட்கார்ந்திருக்கிறார்கள். தேடிப் போன அரசியல் தலைமைகளின் வீடுகளிலும் ஓரிரு விதிவிலக்குகளைத் தவிர மற்ற இடங்களில் பிரபல நடிகர் வீட்டுக்கு வந்ததால் உருவான திடீர் பரவசத்தையும் கொஞ்சலான உடல்மொழியையும் மறைக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அரசியல் தலைவர்களின் குடும்பங்களே இப்படி நடந்து கொண்டால் சாதாரண ஆன்டிகளை என்ன சொல்ல முடியும்?

இன்னும் கொஞ்ச நாட்களில் சட்டமன்றத்தில் விஜய்யை எதிர்த்து யாராவது பேசினால் இந்த அரை மேக்கப் ஆன்டிகள்
" நீ பேசாம திரும்பி நடிக்க வந்துருண்ணா. இவனுகள்லாம் காட்டு மிராண்டிகள்." என்று அழுத விழிகளோடு வீடியோ போடுவார்கள்.ஆண் ஆச்சர்யக் குறிகள் ' சட்டமன்றத்திற்குள் புகுந்து எதிர்கட்சியினரை சுட்டுக் தள்ளும்படி ' போலீஸை வலியுறுத்தி மிரட்டல் ரீல்ஸை வெளியிடுவார்கள்.
தரவுகள் மக்கள் பிரச்சினைகள் அறிவுப் பூர்வமான விவாதங்கள் தவறுகளைச் சுட்டுதல் தமிழகத்தின் வளர்ச்சி சமூக நீதி நலத்திட்டங்கள்  மதச்சார்பின்மை எதுவுமே இவர்களுக்கு முக்கியமில்லை. இவர்களைப் பொறுத்தவரை அரசியல் என்பது தனிநபர் சாகசத்துக்கான கொண்டாட்டம். அதற்கு எதிராக கருத்துச் சொல்லும் அத்தனை பேரும் toxic boomers.

அரசியல் தலைவர்கள் ஊடகங்கள் உயர் அரசு அதிகாரிகள் காவல்துறை என்று மொத்தச் சமூகமும்  முழு அரசியல்வாதியாக மாறி விட்ட காரியக்கார நபரை இன்னும் உச்ச  நடிகராகவே கருதிப்  புளகாங்கிதம் அடைகின்றனர். இதன் விளைவுகளை நாம் எதிர்காலத்தில் கண்டிப்பாக அனுபவிக்கப் போகிறோம். Full mejarity யில் ஜெயித்திருந்தால் விஜய் சட்டமன்றத்தில் காட்டியிருக்கிற முகமே வேறு. வேல் பெல் கோஷ்டிகள் தவெகவில் முழுமையாக ஐக்கியமாகிற நாளில் பக்கா மாஸ் தன் original முகத்தை உலகிற்கு வெளிக்காட்டுவார். இப்போது fire விட்டுக் கொண்டிருக்கிற innocent முற்போக்குகளுக்கு அப்போதுதான் பித்தம் தெளியும். காரியக்கார முற்போக்குகள் அப்போதும் தம் கட்டிப் பேச மார்க்ஸ் பெரியார் ஏங்கல்ஸ் அம்பேத்கர் ஆகியோர் எழுதிய புத்தகங்களில் இருந்து ஏதாவது ஒரு வரியை இப்போதே  கண்டுபிடித்து பாதாள அறையில் ஒளித்து வைத்திருப்பார்கள். 

மொத்தத் தமிழகமும் ஒரு நடிகன் மீதான வெறியில் பைத்தியம் பிடித்து அலைவதைப் பார்ப்பதற்கே எரிச்சலாய் இருக்கிறது. இந்த எழவுக்காகவா அத்தனை தலைவர்களும், போராட்டங்களும். இரண்டே மாதங்களில் நோகாமல் முதலமைச்சராவது எப்படி ? என்றொரு புத்தகம் எழுதினால் தமிழ்நாடு உலகப் புகழை அள்ளும் வாய்ப்பிருக்கிறது.

Wednesday, December 17, 2025

இந்துராஸ்ட்டம் அமைந்தால்.. நாசமாக போகும் இந்தியா..

பல சமயங்கள் இணைந்து இந்து மதமாக தற்போது கருதப்படுகிறது.. 
சங்கீகள் எதிர்பார்ப்பது போல் இந்துராஷ்டிரம் அமைந்தால் இந்தியா என்னவாகும் என்பது நமக்கு வரலாறு பல பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது..
அவற்றை சுருக்கமாக பார்ப்போம்..
மத வெறியர்களால் கொல்லப்பட்ட வரலாற்று விஞ்ஞானிகள் மற்றும் சிந்தனையாளர்கள்

வரலாற்றில், அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தத்துவக் கருத்துக்கள் பெரும்பாலும் மத அமைப்புகளுடன் மோதலுக்கு வழிவகுத்துள்ளன. குறிப்பாக கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத வெறியர்களால் சில விஞ்ஞானிகள், தத்துவஞானிகள் மற்றும் அறிவுஜீவிகள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் அறிவியல் வளர்ச்சியைத் தடுத்தனவா என்பது விவாதத்துக்குரியது, ஆனால் அவை மனித உரிமைகள் மற்றும் சுதந்திரமான சிந்தனையின் மீதான அழுத்தங்களை வெளிப்படுத்துகின்றன. இக்கட்டுரையில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சில முக்கிய உதாரணங்களைப் பார்ப்போம். இவை வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை, மேலும் கிறிஸ்தவ மதத்தில் இத்தகைய சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ளன, அதேசமயம் இஸ்லாமிய சூழலில் பெரும்பாலும் தத்துவ அல்லது மதவியல் மோதல்கள் துன்புறுத்தலுக்கு வழிவகுத்தன.

கிறிஸ்தவ மத வெறியர்களால் கொல்லப்பட்டவர்கள்
கிறிஸ்தவ திருச்சபை, குறிப்பாக கத்தோலிக்க இன்குவிசிஷன் (Inquisition) மூலம், ஹெரெசி (இழிவான கருத்துக்கள்) என்ற பெயரில் பல அறிவுஜீவிகளை தண்டித்தது. இவர்களில் சிலர் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காகவே இலக்காக்கப்பட்டனர்.

- **ஹைப்பேஷியா (Hypatia, கி.பி. 370–415)**: அலெக்ஸாந்திரியாவின் பிரபலமான கணிதவியலாளர், வானியலாளர் மற்றும் தத்துவஞானி. அவர் பாகன் (பழங்கால மத) பின்னணியுடையவர், கிறிஸ்தவ மதத்தின் வளர்ச்சியால் ஏற்பட்ட மோதலில், 415ஆம் ஆண்டு அலெக்ஸாந்திரியாவில் கிறிஸ்தவ கும்பலால் (Christian mob) கொடூரமாகக் கொல்லப்பட்டார். அவரது கண்டுபிடிப்புகள், அஸ்ட்ரோலேப் (வானியல் கருவி) போன்றவை, அறிவியல் வரலாற்றில் முக்கியமானவை. இது கிறிஸ்தவ மத வெறியர்களின் அறிவியல் எதிர்ப்பை எடுத்துக்காட்டுகிறது.

ஜியோர்டானோ ப்ரூனோ (Giordano Bruno, 1548–1600)**: இத்தாலிய தத்துவஞானி, வானியலாளர் மற்றும் காஸ்மாலஜிஸ்ட். அவர் பிரபஞ்சம் அனந்தமானது, பூமி சூரியனைச் சுற்றுகிறது (Heliocentric theory) என்ற கருத்துக்களை முன்வைத்தார், இது கத்தோலிக்க திருச்சபையின் போதனைகளுக்கு எதிரானது. 1600ஆம் ஆண்டு ரோமில் இன்குவிசிஷனால் எரித்துக் கொல்லப்பட்டார். ப்ரூனோவின் மரணம் அறிவியல் சுதந்திரத்தின் மீதான மத அடக்குமுறையின் சின்னமாகக் கருதப்படுகிறது.

- **மைக்கேல் செர்வெடஸ் (Michael Servetus, 1511–1553)**: ஸ்பானிஷ் மருத்துவர், தத்துவஞானி மற்றும் இறையியலாளர். அவர் இரத்த ஓட்டம் (Pulmonary circulation) கண்டுபிடித்தவர்களில் ஒருவர், ஆனால் டிரினிடி (Trinity) கோட்பாட்டை மறுத்ததால், ஜான் கால்வின் (John Calvin) தலைமையிலான புராட்டஸ்டண்ட் கால்வினிஸ்ட் அதிகாரிகளால் 1553ஆம் ஆண்டு ஜெனீவாவில் எரித்துக் கொல்லப்பட்டார். இது கிறிஸ்தவ உட்பிரிவுகளுக்கிடையேயான மத வெறியையும் வெளிப்படுத்துகிறது.

- **லூசிலியோ வானினி (Lucilio Vanini, 1585–1619)**: இத்தாலிய தத்துவஞானி மற்றும் சுதந்திர சிந்தனையாளர். அவரது அத்தீயிஸ்டிக் (நாத்திக) கருத்துக்கள் மற்றும் இயற்கை அறிவியல் பார்வைகள் காரணமாக, 1619ஆம் ஆண்டு பிரான்சில் இம்பீயிட்டி (இழிவு) குற்றச்சாட்டில் தூக்கிலிடப்பட்டார்.

- **செக்கோ டி'அஸ்கோலி (Cecco d'Ascoli, 1269–1327)**: இத்தாலிய வானியலாளர், தத்துவஞானி மற்றும் மருத்துவர். அவரது வானியல் எழுத்துக்கள் ஹெரெசி எனக் கருதப்பட்டு, 1327ஆம் ஆண்டு புளோரன்சில் எரித்துக் கொல்லப்பட்டார்.

இவை போன்ற சம்பவங்கள் ஐரோப்பிய ரெனைசான்ஸ் காலத்தில் அறிவியல் வளர்ச்சியைத் தடுத்தன, ஆனால் இறுதியில் அறிவியல் புரட்சிக்கு வழிவகுத்தன.

இஸ்லாமிய மத வெறியர்களால் கொல்லப்பட்டவர்கள்
இஸ்லாமிய வரலாற்றில், அறிவியல் வளர்ச்சி (Islamic Golden Age) பெரும்பாலும் மத ஆதரவுடன் நிகழ்ந்தது. எனினும், சில தத்துவஞானிகள் மற்றும் மிஸ்டிக்ஸ் (சூஃபிகள்) மதக் கோட்பாடுகளுடன் மோதியதால் துன்புறுத்தப்பட்டனர். நேரடியாக அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காகக் கொல்லப்பட்ட உதாரணங்கள் குறைவு, ஆனால் சில பெர்செக்யூஷன்கள் (துன்புறுத்தல்கள்) உண்டு.

- **அல்-ஹல்லாஜ் (Al-Hallaj, 858–922)**: பாரசீக மிஸ்டிக், கவிஞர் மற்றும் தத்துவஞானி. அவரது மிஸ்டிகல் கருத்துக்கள் (அனால் ஹக் - நான் உண்மை) ஹெரெசி எனக் கருதப்பட்டு, 922ஆம் ஆண்டு அப்பாசிட் கலிபேட் அதிகாரிகளால் பாக்தாத்தில் கொல்லப்பட்டார். இது அறிவியல் அல்ல, மதவியல் மோதல்.

- **இப்ன் ருஷ்ட் (Averroes, 1126–1198)**: ஸ்பானிஷ்-முஸ்லிம் தத்துவஞானி மற்றும் மருத்துவர். அரிஸ்டாட்டில் போதனைகளை இஸ்லாமுடன் இணைத்தார், ஆனால் மத அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டு நாடுகடத்தப்பட்டார். கொல்லப்படவில்லை, ஆனால் அவரது புத்தகங்கள் எரிக்கப்பட்டன.

- இப்ன் சீனா (Avicenna, 980–1037)**: பிரபலமான மருத்துவர் மற்றும் தத்துவஞானி. சில மதவாதிகளால் எதிர்க்கப்பட்டார், ஆனால் கொல்லப்படவில்லை.

- ஹன்பலி பிரிவினரால் துன்புறுத்தப்பட்ட அறிஞர்கள்: அபு இஸ்ஹாக் அல்-ஷிராசி, இப்ன் ஹிப்பான் போன்றோர் பெர்செக்யூட் செய்யப்பட்டனர், ஆனால் கொலைகள் குறித்த தெளிவான ஆதாரங்கள் குறைவு.

இஸ்லாமிய உலகில், அல்-கசாலி (Al-Ghazali) போன்றவர்களின் எழுத்துக்கள் அறிவியல் வளர்ச்சியைத் தடுத்ததாக சிலர் வாதிடுகின்றனர், ஆனால் நேரடி கொலைகள் அரிது.

இத்தகைய கொலைகள் அறிவியல் மற்றும் மதத்துக்கிடையேயான பழங்கால மோதல்களை வெளிப்படுத்துகின்றன. கிறிஸ்தவ உலகில் இன்குவிசிஷன் போன்ற அமைப்புகள் அறிவியலைத் தடுத்தன, அதேசமயம் இஸ்லாமிய உலகில் துன்புறுத்தல்கள் இருந்தாலும், அறிவியல் பெரும்பாலும் ஊக்குவிக்கப்பட்டது. இன்று, இவை வரலாற்று பாடங்களாக உள்ளன, சுதந்திரமான ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகின்றன.
இப்போது சொல்லுங்கள் அரசியலில் ஒரு மதம் கூலோச்சினால் அந்த நாடு அறிவியல் முன்னேற்றத்தில் பொருளாதாரம் முன்னேற்றத்தில் பின்தங்கி நாசமாக போய்விடும் என்பது இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களில் நடந்த உண்மைச் சம்பவங்களை கொண்டு புரிந்து கொள்ளலாம்..
இனியும் ஒரு மத சார்பான அரசு அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் அடுத்த தலைமுறையையும் இந்த நாட்டையும் கூட்டிச்செவராக்க துடிக்கிறார்கள் என்பதே பொருள் ..

Sunday, January 12, 2025

பெரியார் பற்றி சங்கி சீமான் அவதூறு உண்மையா ?

பெரியாரைப் பற்றி சங்கி சீமான் சொன்னது உண்மையா ?

சரஸ்வதி யார்? - தந்தை மகள் தகாத உறவு - கேவலமான புராணம்..

பிரம்மா உண்டாக்கினான். பிரம்மாவினுடைய மகள். அவள் அழகைக் கண்டு கட்டிப்பிடிக்க
முயன்றான். அவள், அப்பனுக்கு
உடன்படுவதா என்று ஓடினாள். 

அவனும் பின் தொடர்ந்தான். அவள் மானாக உருவெடுத்து வேகமாக ஓடி சிவனிடம் அடைக்கலம் புகுந்தாள். சிவனிடம், தன் தந்தையே தன்னைக் கட்டி அணைய
நினைக்கின்றான் என்றாள்.

சிவன் (இவன்தான் இந்து மத தரகர் கடவுள்)

சிவன் பிரம்மாவை பார்த்து ஏனடா இப்படி என்று கேட்டான்.

அதற்கு பிரம்மா, நான் என்ன பண்ணுவது; அவள் அழகாக
இருக்கின்றாள்; நான் அவளை எப்படி அடையாமல் இருப்பது என்றான். 

சிவன் மத்தியஸ்தம் பண்ணி இருவரையும் கணவன் -
மனைவியாக இருக்க அனுமதித்தான்.

அதுபோலவே, அப்பனும், மகளுமே புருஷன், பெண்டாட்டியாக இருந்து
வருகின்றனர்.

சில கடவுள்கள் அம்மாளைக் கட்டிக் கொண்டு இருக்கின்றன. சில கடவுள்கள் தங்கையைக் கட்டிக் கொண்டு இருக்கின்றன. 

இந்த 3000 வருஷமாக நமது கடவுளோ, மதமோ, சாஸ்திரமோ மாறுதல் அடையவில்லை; திருத்தம் அடையவே இல்லை..

இவற்றுக்கு இந்து மக்களும் கட்டுப்பட்டு இருப்பதனால் அவர்களும் மாறுதல் அடையவில்லை..

இந்தக் கதையை பெரியார் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும்வகையில் சொல்லிக் கொண்டிருந்தார்.. 
அதில் வந்த அந்த வார்த்தைகளை எடுத்து சங்கீகள் போல் இந்த சங்கி சீமானும் பரப்புவது கேவலத்தின் உச்சம்..

ஆதாரம் கேட்கும் அதிமேதாவிகளுக்காக ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது. பாகவத புராணம் 3.12.30