தொகுப்புகள்

Search This Blog

Sunday, November 3, 2019

இராமாயணம் புத்தம் எது முன்னே...


இராமாயணம் நடந்த காலம் திரேதாயுகம். திரேதா யுகம், துவாபர யுகம் இரண்டிற்கும், முறையே 12,96,000; 8,64,000 ஆண்டுகள். மொத்தம் 21,60,000 ஆண்டுகள். ஆகவே இப்போது நடக்கும் கலியுகத்தை நீக்கி இராமாயணம் நடந்து 21,60,000 ஆண்டுகள் ஆகின்றன என்று கொள்ளலாம்.

புத்தர் பிறந்து இன்றைக்கு 2600 ஆண்டுகள்தான் ஆகின்றன. இவ்விதம் 2600 ஆண்டுக்குள் இருந்த புத்தரைப் பற்றி திரேதா யுகத்தில் (21,00,000 ஆண்டு களுக்கு முன்) நடந்த இராமாயணத்தில் காணப்படுவன ஆதாரங்களுடன் கீழே தரப்படுகின்றன:-

 (சி.ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு)
1. ராமனைப் பார்க்கவந்த பரதனிடம் ராமன் கேட்கும்போது பவுத்தன், சார்வாகன் முதலிய நாஸ்திக பிராமணர்களுடன் பழகாமலிருக்கிறாயா? புராணங்களையும் தர்ம சாஸ்திரங் களையும் பெரியோர்களுடைய சம்பிரதாயப் பரம்பரைப்படி அர்த்தம் செய்யாமல், கேவலம் தர்க்கத்தைப் பிரயோகித்து அவை இகத்திலும் பரத்திலும் பயனற்றவை என்று வாதிப்ப வர்கள் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
(அயோத்தி காண்டம் 100ஆம் சர்க்கம், 374ஆம் பக்கம்)

2. ராமன், ஜாபாலி என்ற புரோகித ரிஷியிடம் கூறும்போது திருடனும், பவுத்தனும் ஒன்றே; பவுத்தனுக்கும் நாஸ்திகனுக்கும் பேதமில்லை என்று சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(மேற்படி காண்டம் 109ஆம் சர்க்கம், 412ஆம் பக்கம்)

3. சீதையைத் தேடிச் சென்ற அனுமான் இலங்கையில் சீதை இருந்த வனத்திற்கு சற்று தூரத்திற்கப்பால் புத்தரின் ஆலயம் போல் கட்டப்பட்ட ஓர் உப்பரிகையைக் கண்டார்.
(சுந்தர காண்டம் 15ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்)

4. வாலியிடம் ராமன் கூறும்போது, பூர்வத்தில் ஒரு பவுத்த சன்யாசி உன்னைப் போல் கொடிய பாபத்தைச் செய்து அதற்காக மாந்தாதா சக்ரவர்த்தியால் கடின தண்டனை விதிக்கப்பட்டான் என்று சொன்னதாகக் குறிக்கப்பட்டுள்ளது.
(கிஷ்கிந்தா காண்டம் 18ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்)

5. இராமனுக்கு தசரதன் பட்டாபிஷேகம் செய்ய நகரை அலங்கரிக்கும்பொழுது வெளுத்த மேகம் போன்ற தேவாலயங்கள், நாற்சந்தி மண்டபங்கள், வீதிகள் புத்தரின் ஆலயங்கள், மதிற்சுவரின் மேல் கட்டப்பட்டிருக்கும் நாற்கால் மண்டபங்கள்..... முதலிய இடங்களில் கொடித் துணியுள்ள துவஜங்களும், கொடித் துணியில்லாத துவஜங்களும் எடுத்துக் கட்டப்பட்டன எனக் குறிக்கப்பட்டுள்ளது.
(அயோத்தி காண்டம் 6ஆம் சர்க்கம், 23, 24ஆம் பக்கங்கள்)

21 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகச் சொல்லப்படும் இராமாயணக் கதையில் 2600 ஆண்டுக்குள் இருந்து வந்த புத்தரைப்பற்றிக் கூறுகிற சேதியைக் கொண்டு ஆராய்ந்தால் இராமாயணக் கதை 2600 ஆண்டுகளுக்குள்ளாகவே தோன்றியிருக்கவேண்டும். கி.பி. 400 குப்தர்களின் காலத்தில்தான் இவை எழுத்துருபெற்றது. ஆதலால் இராமாயண காலம் என்பது பொய்யேயாகும். அத்துடன் சமஸ்கிருத மொழி தோற்றத்திற்கும் வரலாறு உண்டு.

இன்று விஞ்ஞானம் வளர்ந்த நிலையில் ஹோமோசேப்பியன்ஸ்சே 2 லட்ச வருடங்கள்தான் ஆகிறது என்று விஞ்ஞான ரீதியாக மரபணு மூலம் நிரூபித்திருக்கிறார்கள். ஒரு துகள் மரபணு மூலம் வரலாற்றையும் கூறமுடியும் இன்னொரு உயிரையும் உருவாக்க முடியும். இவ்வாறிருக்க நேற்று தோன்றிய சமஸ்கிருத மொழியில் கூறப்பட்ட கடவுள்களை நம்புவது எவ்வாறான செயல்?

வால்மீகிதான் இராமாயணத்தை சமஸ்கிருதத்தில் எழுதியது. ஆனால் திரேதா யுகத்தில் 21 லட்ச வருடங்களுக்கு முன்பு வால்மீகி ஆசிரமத்தில் சீதை வாழ்ந்ததாகவும் கூறுகிறது. 21லட்ச வருடங்களிற்குமுன் திரேதா யுகத்தில் வாழ்ந்தார் வால்மீகி எனில், துவாபர யுகமும் தாண்டி கலியுகத்தில் சமீபத்தில் தோன்றிய சமஸ்கிருதத்தில் எவ்வாறு இராமாயணத்தை எழுதியிருக்கமுடியும்?  இவ்வாறானவற்றை நம்பும் மூடர்களை என்னவென்று சொல்வது?

உண்மையில் நடந்தது என்னவெனில்...
கி.மு 6ம் நூற்றாண்டுகளிற்கு பிறகு வாய்வழியாக செய்யுள் வடிவில் உருவாகியது இந்த கற்பனை கதை. கதை கூறும்போது 21 லட்ச வருடங்களிற்கு முன் இக்கதை நடந்ததாகவும், (முன்னொரு காலத்தில் என்று கதை கூறுவதுபோல) ஏற்கனவே இருந்த இடங்களைவைத்து கதைகளை புனைந்தார்கள். (இன்றைய சினிமா எடுப்பதுபோல. ஏற்கனவே இருந்த நிலப்பரப்பை இராமர் கட்டிய பாலம் எனவும் அதற்கு ஒரு தேவை இருந்ததாகவும் கதைகளை உருவாக்கினார்கள்.) 

இதில் முக்கியமாக பார்க்கவேண்டியது கதை நடந்ததாக கூறப்படுவது 21 லட்ச வருடங்களிற்குமுன் திரேதா யுகத்தில் என்கிறார்கள். அதன்பிறகு துவாபர யுகம் இப்போது கலியுகம் என்கிறார்கள். அவ்வாறு பார்த்தாலும் திரேதா யுகம் அழிந்து துவாபரயுகம் ஆரம்பித்து அது அழிந்து கலியுகம் ஆரம்பித்தபின்பும் திரேதாயுக நிலப்பரப்புகளும், இராமர் மூன்று கோடுபோட்ட அணிலும், ஏன் 21 லட்ச வருடங்களாக வால்மீகியும் இருப்பது வேடிக்கை. 

விஞ்ஞானம்.. பரிணாம வளர்ச்சி, கண்ட ஓட்ட அசைவுகள், ஒவ்வொரு உயிர்கள், கண்டெடுக்கபட்ட பொருட்கள் எவ்வளவு பழமையானது என்று பலவற்றை நிரூபித்தபின்னும், புவியை தாண்டி பல கோள்கள், ஞாயிற்றுதொகுதிகள், இருப்பதை உறுதிசெய்த பின்பும், புவியில் சமீபத்தில் தோன்றிய ஒரு மொழியில் யாரோ மனிதன் கூறிய கதையில் அல்லது புத்தகத்தில் உள்ளவற்றை கடவுள் என்று நம்பினால் இவர்களை என்னவென்று கூறுவது?  

பல நிரூபிக்கப்பட்டபின்பும் இவை தெரியாது அல்லது இவை தவறு என்பதுபோல கண்களை மூடிக்கொண்டு மதங்கள் கூறும் பாலை அருந்தி அமைதியாவது ஐந்தறிவு பூனைகளின் செயலுக்கு ஒப்பானது.

#பகிருங்கள்
#Share_This
வேணு கோபால் சங்கர்
பதிவு

Friday, November 1, 2019

திராவிடம் என்றால் என்ன?

திராவிடம் என்றால் என்ன? 
தமிழ் என்றால் என்ன?
பகுதி - 1
## பெரியார் தான் 'தமிழரை' 'திராவிடர்' என்று சொல்லி ஏமாற்றி இன அடையாளத்தை அழித்தாரா? ##
2 பக்க கட்டுரையை கூட முழுதாக படிக்காத சில 'குமாரு' போன்ற இளைஞர்கள், யாரோ சிலர் வரலாற்று திரிபுகளோடு சொல்லும் கருத்தை சரியா தவறா என்று யோசிக்காமல் நம்புகிறார்கள். 'குமாரு' போன்ற இளைஞருக்காக நாம் வரலாறை 1ம் வகுப்பிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
# பெரியாரால் முதலில் 'திராவிடர்' என்ற பெயர் பயன்படுத்தப்படவில்லை.
* 1881ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, தீண்டத்தகாதவர்கள் தங்களை "சாதியில்லா திராவிடர்கள்" என பதிவு செய்து கொள்ளும்படி அயோத்தி தாச பண்டிதர் அறிவிப்பு செய்கிறார்.
(இதை தொடர்ச்சியாக வலியுறுத்தி 1910ம் ஆண்டு கூட வெள்ளையரிடம் மனுகொடுக்கிறார். அந்த மனுவில்,
"இத்தேசப் பூர்வ சரித்திரங்களைக் கொண்டும், இத்தேசப் பூர்வ சரித்திரங்களின் ஆதாரங்களைக் கொண்டும், பூர்வ குடிகளை சாதி பேதமுள்ள இந்துக்களினின்று பிரித்து, சாதி பேதமற்ற திராவிடர்கள் என்றே எழுதும்படியான உத்திரவளிக்க வேண்டுகிறோம்." - 14- 12- 1910
அயோத்தி தாசரின் இறுதி ஆண்டுகளான 1913, 1914 ஆண்டு கூட 'திராவிடர்' என்ற சொல்லையே பயன்படுத்தி இருக்கிறார். இதனால் இவர் 'திராவிட கருத்தியலின் முன்னோடி' என்றும் கருதப்படுகிறார்)
* 1885 ஆம் ஆண்டு, அயோத்தி தாச பண்டிதர், ஜான் ரத்தினம் அவர்களோடு இணைந்து 'திராவிட பாண்டியன்' என்ற இதழை தொடங்குகிறார்
* 1891ம் ஆண்டு, அயோத்தி தாச பண்டிதர் 'திராவிட மகாஜன சபை'யை நிறுவுகிறார்
* 1892ம் ஆண்டு, ஜான் ரத்தினம் 'திராவிட கழகம்' தொடங்குகிறார்
* 1891 ஆம் ஆண்டு இரட்டைமலை சீனிவாசன் தொடங்கிய 'பறையர் மகா ஜன சபை' 1893 ஆம் ஆண்டு 'ஆதி திராவிட மகா ஜன சபை' என பெயர் மாற்றப்படுகிறது
* 1912ல் நடேசனாரால் ஆரம்பிக்கப்பட்ட 'Madras United League' என்ற பெயரை 1913ம் 'திராவிடர் சங்கம்' என்று அவரே மாற்றி 'திராவிடர்' என்ற சொல்லை பயன்படுத்தினார்.
* அதன் பிறகு தான் 1944 ஆம் ஆண்டு பெரியார் 'திராவிடர் கழகம்' தொடங்கினார். (அதுவும் பெரியாருக்கும் முன்பே அவரது தோழர்கள் 'செவ்வாய்பேட்டை திராவிடர் கழகம்' , 'கோவை மாவட்ட திராவிடர் கழகம்' என்று ஆரம்பித்து பெரியார் தலைமையில், அண்ணா கலந்து கொண்ட கூட்டங்கள் நடத்தியதெல்லாம் வரலாறு)
அதன் தொடர்ச்சியாக தமிழக அரசியல் வரலாற்றில் தன் சுயமரியாதை மீட்கவும், சமூக நீதிக்காக போராடிய இயக்கத்தின் தொடர்ச்சியாக பெரியாரும் 'திராவிடர்' என்ற பெயர் நியாயமானதாகவும் தேவையானதாகவும் அமைவதால் 'திராவிடர் கழகம்' என்று தன் இயக்கத்திற்கு பெயர் வைக்கிறார்.
இவையெல்லாம் தெரியாமல் 'திராவிடம்' என்று சொல்லை பெரியார் தான் திணித்தார். அவர் தான் உபயோகித்தார்.. அவர் தமிழர் என்ற வார்த்தையை இருட்டடிப்பு செய்துவிட்டார் என்றெல்லாம் புலம்புவது அறியாமை..
#####
திராவிடம் என்றால் என்ன? தமிழ் என்றால் என்ன? இரண்டுக்குமான தொடர்பு என்ன? இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா?
திராவிடம் இன அடையாளத்தை அழித்ததா? இனத்தின் சுய மரியாதையை மீட்டதா?
அடுத்தடுத்த பதிவில் வரலாற்று தரவுகளோடு சொல்றேன் குமாரு...

பகுதி - 2
## திராவிடம் என்றால் என்ன? தமிழ் என்றால் என்ன? இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா? இரண்டுக்குமான தொடர்பு என்ன? ##
'திராவிடம்' என்பதற்கு ஆய்வாளர்கள் பலர் பல கோணங்களின் தனது ஆராய்ச்சி முடிவை தருகிறார்கள். இருப்பினும் அந்த முடிவுகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதும், ஒரு புள்ளியில் இணைவதை பார்க்கிறோம். அவைகளை தொகுத்தால், 'திராவிடம்' என்னும் வார்த்தை மூன்று நிலைகளில் ஆளப்படுகிறது.
திராவிடம் என்பது,
அ. தமிழ் / தமிழம் என்பதற்கான மாற்றுச்சொல்
ஆ. தமிழக, ஆந்திர, கருநாடக, கேரளப்பகுதிகளை உள்ளடக்கிய தென்னாடு
இ. பார்ப்பனிய மேலாதிக்கத்துக்கான எதிர்ச் சொல்
அ. தமிழ் / தமிழம் என்பதற்கான மாற்றுச்சொல்
1. 'தமிழ்' என்ற சொல் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட பிறகு, 'தமிதா' என்றும் 'தமிளா' என்றும் உருமாறி பிறகு 'திராவிட' மாகி விட்டது. திராவிடம் என்பது அம்மக்களின் மொழியைக் குறிப்பிடுகின்றது. அது அம்மக்களின் இனத்தைக் குறிக்கவில்லை. நாம் நினைவில் கொள்ள வேண்டிய மூன்றாவது செய்தி 'தமிழ்' அல்லது 'திராவிடம்' என்பது தென்னிந்தியாவின் மொழி மட்டும் அன்று; ஆரியர்கள் வருமுன் தமிழ் மொழி இந்திய துணைக்கண்டம் முழுவதும் பேசப்பட்ட மொழி. தமிழ், காஷ்மீரத்தில் இருந்து குமரி வரையில் பேசப்பட்ட மொழி. - பாபா சாகேப் அம்பேத்கர்.
'பாபா சாகேப்' 'தமிழ்' என்ற வார்த்தை தான் சமஸ்கிருதத்தில் 'திராவிடம்' என்று உச்சரிப்படுவதாக குறிப்பிடுகிறார்.
2. தமிழம் என்பது திராவிடம் என்பதன் திரிபுச்சொல்லே - பாவாணர்
பண்டைய காலத்தில் நாட்டுப்பெயர்கள் 'அம்' ஈறு பெற்றே வழங்கி வந்தன. (எ.கா) சிங்களம், கடாரம், ஆரியம், மராட்டியம், வங்காளம், அராபியம் இவ்வகையிலேயே தமிழம் என்று வழங்கப்பட்டது.
ஒரு சொல்லின் முதலெழுத்து உயிர்மெய் எழுத்தாக இருந்தால், அதிலுள்ள உயிரெழுத்தை நீக்கி, மெய்யாக நிறுத்தி, அதையடுத்து 'ர' என்னும் எழுத்தை சேர்த்துக் கொள்வது ஒருவகை திரிபு முறை.
படி (copy) என்ற சொல்லில் உள்ள 'ப' என்ற உயிர் மெய் எழுத்தில், 'அ' என்னும் உயிரெழுத்தை நீக்கி, 'ப்' மெய் எழுத்தை நிறுத்தி, 'ர' எழுத்தை சேர்த்தால் 'ப்ரடி' 'ப்ரதி' 'பிரதி' என்று வடமொழியில் மாறும்.
பவளம் - ப்ரவளம் - பிரவாளம்
மதங்கம் - ம்ரதங்கம் - மிர்தங்கம் - மிருதங்கம்
தமிழம் - த்ரமிளம் என்று திரிந்தது இயல்பே. பின்பு நாளடைவில் 'த்ரமிடம்' என்று திரிந்து 'திரவிடம்' என்றாகித் 'திராவிடம்' என்று நீண்டது என்று பாவாணர் விளக்குகிறார்.
* 'திராவிடம்' தமிழை இருட்டடிப்பு செய்தது என்று சொல்பவர்களால் தான் 'திராவிட மொழி ஞாயிறு' பாவாணர் என்பவர் இருட்டடிப்பு செய்யப்பட்டு வெறும் 'மொழிஞாயிறு பாவாணர்' என்றே அழைக்கப்படுகிறார் smile emoticon
3. "திராவிடம் என்னும் சொல், தமிழ் மொழியை ஆரியர்கள் ஒலியிலே மாறுபாட்டுடன் குறித்த சொல். சமற்கிருதம் இல்லாமல் திராவிடம் இல்லை, திராவிடரும் இல்லை. ஆனால் சமற்கிருதம் நீக்கினால் ஏனைய திராவிட மொழிகள் அனைத்தும் தமிழ் மொழியே" என்றும் "ஆரியர் வருகைக்கு முன்பாகத் திராவிடர் என்று யாரும் குறிக்கப் பெறவில்லை. ஆரியர் வருகைக்குப் பின்பாகவே தமிழர்கள் 'த்ரமிளர்' என்றழைக்கப்பட்டு 'த்ரவிடர்' என்று மருவித் திராவிடர் என்பதாக உருப்பெற்றுள்ளது" என்கிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
பெரியார் துரோகம் இழைத்தார் என்றால் பெரியார் சொல்வதை ஏற்க வேண்டாம். தமிழறிஞர் பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியோர் திராவிடம் குறித்து என்ன சொன்னார்கள் என்று படிக்கலாமே!
அவர்களைப் படித்தாலே 'திராவிடம்' 'தமிழ்' இவற்றிலுள்ள குழப்பம் தீரும். இவர்கள் யாரையுமே படிக்கவில்லை என்பது தான் இங்கு வருத்தமான செய்தி.
ஒரு பெயர் மற்ற மொழியாரால் பயன்படுத்தப்படும் போது அவர்களுடைய இலக்கணப்படியோ, அல்லது வழக்காற்றிலோ திரிவது இயல்பே.
நமக்கு தெரிந்தே ஆண்டனி (Antony) என்ற பெயர் நம்மால் 'அந்தோணி' என்று சொல்லப்படவில்லையா? ரஷ்யா (Russia) 'உருடியா' என்று மாற்றப்படுவதில்லையா?
4. தமிழரின் நாகரிகத்தை எழுத்தை ஆராய்ந்த ஈராஸ் பாதிரியார் தமிழ் எழுத்துக்கள் மற்ற தொன்மை நாகரிக எழுத்துக்களுடன் ஒன்றிணைந்திருப்பதை கண்டறிந்தார். தமிழின், திராவிடத்தின் தொன்மையை அறிந்த அவர், தான் 'ஸ்பெயினில் உள்ள திராவிடன்' (I am Dravidian from Spain) என்று அறிவித்துக்கொண்டார்
5. வடமொழி இலக்கியங்களில் 'தமிழ்' என்பதற்கு 'திராவிடம்' என்றே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது தென்னிந்தியர்களாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
* கி.மு. முதல் நூற்றாண்டிலே மனுஸ்மிருதி, 10ம் அத்தியாயத்தில், 43,44 வது ஸ்லோகத்தில், திராவிட என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, "சாதி தர்மத்தை அனுசரிக்காதவர்களுக்கு பிறந்தவர்கள் திராவிடர்கள்.. திராவிட தேசத்தை ஆண்டவர்கள் சூத்திரர்கள்" என்கிறது மனுஸ்மிருதி.
* கி.பி. 7ம் நூற்றாண்டில், குமரிலப்பட்டர் 'திராவிடர்' என்ற சொல்லை பயன்படுத்தினார்
* கி.பி. 470இல் சமணத்தின் மையமாக மதுரை திகழ்ந்த போது, பூச்சியநாதரின் சீடரான வச்சிர நந்தி என்பார் 'த்ரமிள சங்கம்' நிறுவினார்.
* கி.பி 17ம் நூற்றாண்டில், தாயுமானவர் "கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்" என்று படித்தவர்களின் போலியை நகைக்கிறார். அதில், "படித்தவர்கள் தமக்கு எல்லாம் தெரியும் போல காட்டிக்கொள்வார்கள். தமிழ் தெரிந்தவரிடம் தமக்கு வடமொழி தெரியும் என்பார்கள். வடமொழிப் பண்டிதர் எதிரில் வந்தால், தமக்கு திராவிடமும் தெரியும் என்பார்கள்" என்று கூறுகிறார்.
'தமிழ் மொழியும் தெரியும்' என்று சொல்வதற்கு பதிலாக 'திராவிடமும்' தெரியும் என்று தான் பயன்படுத்துகிறார்.
* திருஞான சம்பந்தர் 'திராவிட சிசு' என்றே அழைக்கப்பட்டார்.
#####
இதிலிருந்து 'தமிழம்' / 'தமிழ்' என்ற சொல்லே வட மொழியில் 'திராவிடம்' என்றானது. திராவிடம் என்ற தனித்த மொழியோ, இனமோ இல்லை. 'தமிழ்' தான் 'திராவிடம்'. 'திராவிடம்' தான் 'தமிழ்' - 'தமிழரை'த் தான் 'திராவிடர்' என்று குறித்தார்கள் என்று அறிய முடிகிறது.
'திராவிடம்' என்றால் என்ன என்று சிலரை கேட்டால் 'அது தெலுங்கரை குறிக்கும் சொல்' என்று சொல்கிறார்கள். (அவர்கள் தமிழ் மொழியின் அடிப்படை வரலாறு கூட தெரியாத பச்சிளம் குழந்தைகள் என்பது புரிந்து கொள்ள முடிகிறது). அவர்களை பார்த்தால் தான் பாவமாக இருக்கிறது.
தமிழக, ஆந்திர, கருநாடக, கேரளப்பகுதிகளை உள்ளடக்கிய தென்னாடு திராவிடம் என்று அழைப்பதன் பின்புலமும், எவ்வாறு பார்ப்பனிய மேலாதிக்கத்துக்கான எதிர்ச் சொல்லாக மாறியது என்பதை இதே பதிவில் எழுதினால் பதிவு நீளும் என்பதால் அடுத்த பதிவுகளில் பார்ப்போம். smile emoticon

பகுதி - 3
## 'தமிழ்' தான் 'திராவிடம்' என்றால், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் திராவிடம் இல்லையா?
ஆ. தமிழக, ஆந்திர, கருநாடக, கேரளப்பகுதிகளை உள்ளடக்கிய தென்னாடு
தமிழ் மொழியின் அடிப்படை வரலாறு தெரிந்தவர்கள், தமிழ் தான் தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளுக்கு மூத்த மொழி என்பதை மறுக்க முடியாது. நேரடியாக சொல்வதானால் 'தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவை தமிழ் மொழிக்குடும்பம்' என்று சொல்லலாம். நாம் முன்னர் பார்த்தது போல், 'தமிழ்' தான் 'திராவிடம்' என்றால் அதை 'திராவிட மொழிக்குடும்பம்' என்றும் அழைக்கலாம்.
தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் தமிழரிலிருந்து பிரிந்தவர்கள் தான், அவர்களின் மொழி நம் தமிழ் மொழியிலிருந்து தான் பிரிந்தது என்பதை நாம் ஏற்றுக்கொண்டால், நாம் மேலெ சொன்ன 'திராவிடம்' விளக்கத்தின் படி அவர்களும் 'திராவிடரிலிருந்து (தமிழரில்)' பிரிந்தவர்கள். 'திராவிட (தமிழ்) மொழி' யிலிருந்து பிரிந்தவர்கள்.
ஆனால் கால்ட்வெல் 'தென்னிந்திய / திராவிட மொழிக்குடும்பம்' என்பதை இதே பொருளில் கூறவில்லை என்பதை கவனிக்க. இந்த (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு) மொழிகளுக்கு மூத்த மொழி (Proto Dravidian) ஒன்று இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார். அதை கண்டறிய முடியாததால், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, துளு ஆகியவைகளை சேர்த்து 'திராவிட மொழிக்குடும்பம்' என்று கூறுகிறார்.
இங்கு தான் நாம் குழப்பத்தில் நிற்கிறோம். கால்ட்வெல்லின் 'திராவிட மொழி ஒப்பிலக்கணமும்', தமிழறிஞரின் ஆய்வையும் வேறு வேறு தளத்தில் வைத்து ஆராய்ந்தால் அதில் உள்ள சிறிய அளவில் முரண்பாடுகளும் பெரிய ஒற்றுமையையும் காண முடியும்.
சுருக்கமாக சொன்னால், கால்ட்வெல் வரையறையில் 'திராவிடம்' என்பது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகியவற்றின் கூட்டாக கருதினார். அதில் 'தமிழ்' தான் மூத்த மொழி என்றார். தமிழறிஞர்கள் 'தமிழ்' தான் 'தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு' ஆகியவற்றுக்கான மூல மொழி" என்று கருதுகிறார்கள்
( இந்த இடத்தில் அயோத்தி தாச பண்டிதர், தாத்தா இரட்டை மலை சீனிவாசனார் ஆகியோர் தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்க 'ஆதி (மூல) திராவிடர்' என்ற சொல்லை பயன்படுத்தியதை நினைவு கூர்க ).
** ஆக, 'தமிழி' தான் 'திராவிட'மாகவும் 'தமிழர்'தான் 'திராவிடரா'கவும் குறிக்கப்பட்டது போல தமிழிலிருந்து பிரிந்த தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளின் குடும்பம் திராவிட (தமிழ்) குடும்பம் என்றும் தெலுங்கர், மலையாளி, கன்னடர் 'திராவிடர்' என்றும் குறிக்கப்படுகிறார்கள்.
** தமிழ்நாடு, கேரளத்தின் மலபார்ப் பகுதி, இலட்சத்தீவுகள், ஆந்திரப் பிரதேசத்தின் ஆந்திரா மற்றும் ராயலசீமை பகுதிகள், கர்நாடகத்தின் பெல்லாரி, தட்சிண கன்னடா, உடுப்பி பகுதிகள் ஆகியவை ஒன்றாக சேர்ந்து 'சென்னை மாகாண'மாக இருந்த போது (1956 முன்பு வரை) இந்தியாவிலிருந்து தனிநாடாக 'திராவிடஸ்தான்' என்றும் 'திராவிட நாடு' என்றும் கோரிக்கை விடுத்த பெரியார் தான், 1956க்கு பிறகு மொழிவாரி மாகாணமாக 'இப்போதுள்ள தமிழ் நாடு' பிரிக்கப்பட்ட பிறகு 'தமிழ்நாடு தமிழருக்கே' என்று தான் தனிநாடு கோரிக்கை விடுத்தார்.
இ. பார்ப்பனிய மேலாதிக்கத்துக்கான எதிர்ச்சொல்
'தமிழ்' என்பதற்கு 'திராவிடம்' என்ற சொல்லும் வரலாறு நெடிங்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதை பார்த்தோம். ஒடுக்கு முறைக்கு எதிரான 'உரிமை' முழக்கமாக 'திராவிடம்' என்ற பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தான் பெரியாருக்கு முன்பே, 'திராவிட மகாஜன சபை', 'ஆதி திராவிட மகா ஜன சபை', 'திராவிடர் சங்கம்' உருவானது.
1. (தென்னிந்தியாவில்) ஆரியர்களின் சமஸ்கிருத மொழியை ஏற்கவில்லை. இந்த வேறுபாட்டை நாம் எண்ணிப்பார்த்தால் தென்னிந்தியாவில் வாழும் மக்களை மட்டுமே குறிப்பிட, ஏன் 'திராவிடர்' என்ற பெயரைப் பயன்படுத்தத் துவங்கினார்கள் என்பது புரியும். - பாபா சாகேப் அம்பேத்கர்
2. தாத்தா ரெட்டைமலை சீனிவாசனார் மற்றும் அவரது மகா ஜன சபையின் 6 உறுப்பினர்களும் அன்றைய தலைமை ஆளுனர்(கவர்னர் ஜெனரல்) எல்ஜின் பிரபுவை சந்தித்த போது பேசியதை தனது 'ஜீவிய சரித்திரச் சுருக்க' த்தில் குறிப்பிடுகிறார்.
அதில், "எல்ஜின் பிரபு.. பறையர்,பஞ்சமர், தாழ்த்தப்பட்டோர் என்று பல பேரால் அழைக்கப்பட்டு வந்து இப்போது ஆதி திராவிடர் என வழங்கும் சமூகத்தவர்களுக்கு, இதர சமூகத்தவர்கள் போல் அரசாங்க காரிய நிர்வாகத்திலும், பரிபாலன நிறைவேற்றத்திலும், இராஜிய வியவகார மந்திரி பதவியிலும் பங்கு பெரும் உரிமை உண்டாகி இருக்கின்றது" என்று ஆதி திராவிடர் என்ற சொல் கௌரவமான வரலாற்றில் மூத்த குடிகள் என்ற பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார். ஆனால் பெரியார் தான் 'ஆதி திராவிடர்' என்ற பெயரை தொன்மக்களுக்கு திணித்தார் என்று வரலாறு தெரியாமல் பேசுகின்றனர்.
** இந்த இடத்தில் நம்ம குமாருக்கு ஒரு செய்தியை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன. என்னவென்றால், தாத்தா இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் வரலாற்று ஆதாரத்தோடும் முந்தைய பதிவில் அயோத்தி தாசர் அவர்களின் வரலாற்று ஆதாரத்தோடும் பார்த்தால் 'ஆதி திராவிடர்' என்ற அடையாளத்தை பூர்வகுடி மக்களுக்கு பெரியார் திணிக்கவில்லை. மாறாக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் தொன்மையின் அடையாளத்தை குறிக்கவும், பண்பாட்டின் மீட்சி சொல்லாகவும் 'ஆதி திராவிடர்' (திராவிடர்களில் தொன்மையானர்கள்) என்னும் சொல்லை அவர்களாகவே பயன்படுத்திக்கொண்டனர்.
'ஆதி திராவிடர்' என்ற சொல்லை தொன்மை தமிழருக்கு பெரியார் கொடுத்துவிட்டதால், 'ஆதி தமிழர்' என்ற நம் அடையாளத்தை 'வந்தேறி தெலுங்கு அருந்ததிய மக்கள்' அபகரித்துவிட்டனர் என்று பேசுவது எவ்வளவு பெரிய விஷமத்தனமான பொய் என்பது இதிலிலிருந்து புரியுதா குமாரு?
இனியாவது, உழைக்கும் மக்களான பள்ளர், பறையர் சமூகத்தினருக்கு எதிராக அருந்ததிய சமூகத்தினரை எதிரிகள் போல் சித்தரிக்கும் போக்கை கைவிட வேண்டும். வரலாற்று உண்மையறியாத நம் இளைஞர்களோ இந்த விஷமக்கருத்துக்கு ஆட்படுகின்றனர் என்பது வருத்தமான செய்தி.
###########

இல.வேந்தன்.

Sunday, October 27, 2019

தீபாவளியிடம் சில கேள்விகள் ?

தீபாவளி

இந்தப்பதிவினை இப்போதே பதிவிட்டதற்குக் காரணம் இனி யாரும் இந்த பண்டிக்கைகாக பணவிரயம் செய்து கடன்பட்டு அறிவிழந்து மானமிழந்து கேவலப்படவேண்டாம் என்பதற்காகவே! இனிதானே உங்கள் பணச்செலவுகள் இதற்காக நடந்தேறும், ஒரு நிமிடம் இங்குள்ள தகவலைப் படித்து நன்றாக சிந்தித்து முடிவெடுக்கவும்!

உண்மையில் தமிழர்களாய் நமக்கும் இந்தப்பண்டிகைக்கும்  என்ன உறவு. 

இங்கிருக்கும் எவருக்காவது தமிழர் என்ற உணர்விருந்தால் இப்படிப்பட்ட இழி காரணங்களுக்காக பண்டிகை கொண்டாடலாமா?  அறியாமையும் கண்மூடித்தனமாக எதையும் கேள்விகேட்காமல் ஏற்றுக்கொள்ளும் குணத்தினாலேயே வருகிறவன் போகிறவன் எல்லாம் தமிழன் தலையில் அடிக்கிறான். உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக இதோ தீபாவளியின் பின்புலம்(ச்சை நாறுகிறது)

விஷ்ணு பன்றிப் பிறவியெடுத்து இரண்யாட்சனைக் கொன்றுவிட்டுத் திரும்பும் காலையில், பன்றி தான் கொண்டு வந்த பூமியைத் தனக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய உரிமை இருக்கிறதென்று கருதி அந்தப் பூமியையே அந்த பன்றிப் புணர்ந்ததாம். பூமியும் அதற்கு இணங்கி இடம் கொடுத்ததாம். அப்போது பூமி கர்ப்பமாகி ஒரு குழந்தையையும் பெற்று விட்டதாம். அக்குழந்தைக்கு நரகாசூரன் என்று பெயர் இட்டார்களாம். ஏன் அப்பெயர் இட்டார்கள் என்றால் நரகலைச் சாப்பிடுகின்ற பன்றிக்கும், நரகலைச் சுமக்கின்ற பூமிக்கும் குழந்தை பிறந்ததால் நரகன் என்று பெயர் இடாமல் வேறு என்ன பெயர் இடுவார்கள் என்கின்றனர்.

இப்படிப் பிறந்த இந்தக் குழந்தை வங்காளத்துக்கும், அஸ்ஸாமுக்கும் மத்தியில் உள்ள ஒரு பிரதேச (அதாவது இசுலாமியர் வாழும் வங்காளதேசம்) அரசனாக இருந்து கொண்டு பிரம்மாவின் மனைவியின் காதணியையும் வருணனின் ஆயுதத்தையும் பிடுங்கிக் கொண்டு, இந்திரனின் சிம்மாசனத்தையும் தூக்கிவர எத்தனித்தானாம். அதோடு தேவர்களுக்கு தொல்லை கொடுத்தானாம்; உலகத்தையும் துன்புறுத்தினானாம். தேவர்களுக்காக கிருஷ்ண பகவான் வந்து இந்த அசுரனை வதம் செய்தாராம். அந்த நாளை கொண்டாடுவதுதான் தீபாவளியாகும். இது என்ன கதை? இதில் அறிவு மானம் இருக்கிறதா?

இரண்யாட்சன் பூமியை சுருட்டித் திருடிக் கொண்டு போகக் காரணம் என்ன? 

பூமி தட்டையாய் இருந்தாலல்லவா சுருட்ட முடியும்? அதுதான் உருண்டை ஆயிற்றே? பூமியை உருட்டிக் கொண்டல்லவா போயிருக்க வேண்டும்?

அப்படியே சுருட்டினதாக வைத்துக் கொள்வதானாலும் சுருட்டினவன் எங்கே இருந்து கொண்டு பூமியை சுருட்டி இருப்பான்? ஒரு சமயம் வானத்தில் தொங்கிக் கொண்டு சுருட்டி இருந்தாலும் பூமியில் இருந்த மலை, கடல், ஆறு, உயிரினங்கள் முதலிய அனைத்துமே பாயாக சுருட்டப்பட்டு பாய்க்குள் சிக்கி இருக்க வேண்டும். அப்படி இருக்க அவன் பூமியை தூக்கிக் கொண்டு ஒளிய வேறு கடல் ஏது? வேறு கடல் இருந்திருந்தால் அது எதன்மீது இருந்திருக்கும்?

அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்தப் பூமியை திருப்பிக் கொண்டுவர விஷ்ணு அவதாரமெடுப்பானேன்? அதுவும் பன்றி அவதாரமெதற்கு? அப்போது அது உணவாக எதைத் தின்று இருக்கும்? எதையோ தின்று தொலைந்து போகட்டும்.

இந்தப் பன்றி பூமியைப் புணர ஆசைப்படுவானேன்! கொண்டு வந்ததற்குக் கூலியா? அப்படியேதான் இருக்கட்டும். இதற்கு இந்தப் பன்றியுடன் உடலுறவு செய்ய பூமிதேவி இணங்கலாமா? இது என்ன கதை?

திரைவிடத்தின் தமிழ் மக்களை அசுரன், இராட்சதன், அரக்கன் என்று கூறி அவர்களை இழிவு செய்ய எழுதியதல்லாமல் வேறு என்ன இது? வங்காளத்தில் ஆரியர் வரும் முன்பு நாம்தானே ஆண்டு கொண்டிருந்திருக்க வேண்டும்? ஆரியர்கள், தமிழர்களைக் கொல்வதானால் மானம், வெட்கம் பார்க்காமல் விலங்குகளுடன் புணர்ந்தானாலும் சரி, மலத்தைத் திண்றாலும் சரி, எப்படியான இழிவான அசிங்கமான காரியத்தைச் செய்தாவது கொல்லலாம் என்கின்ற கோட்பாடுகளை ஆரியர்களுக்கு போதிக்க வந்த மனுநூல் போன்ற ஒரு இழிவான கொள்கை தானே ஒழிய இப்புராணங்களுக்கு வேறு என்ன கருத்து சொல்ல முடியும்?

ஆகவே அப்பேர்ப்பட்ட கதையில் ஒன்றான நரகாசூரன் கதையை நம்பி நாம் பண்டிகை கொண்டாடலாமா? நாம் சங்கம் வளர்த்து அறிவுசார் தமிழரல்லவா? இதெல்லாம் நம் கடவுளா? அப்படியே நீங்கள் நம்பினாலும் நம் கடவுள்கள் மலம் தின்பதையும், நம் பெண் கடவுள்கள் பன்றியுடன் புணர்ச்சி செய்வதையும் ஒப்புக் கொள்ள நம்மால் முடியுமா? ஒப்புக் கொள்ளலாமா? நமக்கு மானம், வெட்கம், புத்தி ஒன்றுமே கிடையாதா?

நம் தலைவனைக் கொன்றதை நாம் கொண்டாடும் அளவிற்கு அவ்வளவு மானம் ஈனம் அற்றவர்களா நாம்? நம் இன மக்கள் தீபாவளி கொண்டாடலாமா? கண்டிப்பாய் கொண்டாடாதீர்கள். கொண்டாடுவதானால் இந்தக் கதை கொண்ட புத்தகங்களை வாங்கி நடு வீதியில் வைத்து ஆண்கள் மிதியடியால் மிதி மிதியென்று மிதியுங்கள்; பெண்கள் முறத்தால் மொத்து மொத்து என்று மொத்துங்கள்.

இதற்கு முகநூலில் வாழ்த்தும் பரப்புரையும் தேவையா?

நாம் ஏன் அவர்கள் இல்லை என்பதை அவர்களாக நம்மைப்பற்றி எழுதியதை மேற்கண்ட இந்தப்புரட்டுடன் இன்னொரு புரட்டையும் ஒப்பிடுகிறேன்:

சமஸ்கிருத இனம்:
பன்றி விஷ்ணு தான் கொண்டு வந்த பூமியை என்ன வேண்டுமானாலும் செய்ய உரிமையுள்ளதாகக் கருதிப் புணர்ந்ததாம்

தமிழினம்:
தமிழன் ராவணன் தானே கொண்டு வந்திருந்தாலும் சீதையின் ஒப்புதலுடன் அவளை மணக்க காத்திருந்தான்..
நன்றி :- யாரோ

Tuesday, October 22, 2019

வயசுக்கு வந்த ப்ராய்லர் கோழி

நேற்று பேலியோ கடைபிடிக்கும் கால்நடை மருத்துவ சகோதரர் ப்ராய்லர் கோழியில் தீதில்லை என்று வீடியோ பதிவு செய்திருந்தார் 

ப்ராய்லர் கோழி நாம் உண்ண உகந்தது என்று பல முறை தொடர்ந்து எழுதி வந்திருக்கிறோம்.

இருப்பினும் அந்த துறை சார்ந்த வல்லுனர் அதைப்பற்றி பேசும் போது அதற்கு கூடுதல் எடை இருக்கிறது. 

அவர் கூற்றின் சாராம்சம் இது தான் 

1. ப்ராய்லர் கோழிகளுக்கு ஹார்மோன் ஊசி போட வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு நான்கு முறை போட வேண்டும். அதற்கு செலவாகும் முதல் அதிகம். ப்ராய்லர் கோழிகள் அனைத்தும் தீவனம் சாப்பிட்டு தான் உடல் போடுகின்றன. 

2. கோலிஸ்டின் ஆண்ட்டிபயாடிக் குறித்து சமீபத்தில் வெளியான அரவம் படத்தில் காட்சிகள் உள்ளன. அந்த கோலிஸ்டின் மருந்து இந்தியாவில் தடை செய்யப்பட்டு பல காலம் ஆகிறது 

3. ப்ராய்லர் கோழிகள் உண்ணத்தகுதியானவை. அவற்றால் பூப்பெய்துதல் சீக்கிரம் நிகழ்வதில்லை. 

இதில் முதல் இரண்டு செய்திகள் கால்நடை மற்றும் ப்ராய்லர் வளர்ப்பு துறை சார்ந்தது. 

மூன்றாவது பாய்ண்ட் என்னுடைய துறை சார்ந்தது. 

அதில் சில கருத்துகளை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். 

உண்மையில் நாம் அச்சம் கொள்ளும் அளவு,  வளர் இளம் பெண்கள் பூப்பெய்தும் வயது சீக்கிரமே நடக்கிறதா??? 

இல்லை என்பதே பதில். 

இப்போதும் இந்தியாவில் வளர் இளம் பெண்கள் பூப்பெய்தும் வயது சராசரியாக 13.5 தான். 
கூடக்குறைய இரண்டு வருடங்கள் இருக்கலாம். 

இந்த சராசரியும் அனைத்தும் இடங்களிலும் ஒன்றாக இருப்பதில்லை. 

ஒரு ஆராய்ச்சியில் 
ஹிந்தி பேசும் மாநிலங்களில் பெண்கள் கொஞ்சம் லேட்டாக பூப்பெய்துவதாகவும்

ஹிந்தி பேசாத மாநிலங்களில் பெண்கள் முன்னவர்களை விட சீக்கிரம்  பூப்பெய்துவதாகவும் ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. 

இது என்னடா கூத்து? 

ப்ராய்லர் தான் காரணம் என்றால் 
ஹிந்தி பேசுவது கூட காரணமா? 

அப்ப நாம எல்லாம் ஹிந்தி பேசத்தொடங்கி விட்டால் நம்ம புள்ளைக லேட்டாக வயதுக்கு வருவார்களா??? 

அது அப்படி இல்லை. 

உலகம் முழுவதும் செய்த ஆராய்ச்சிகளில் 
கிடைத்த முடிவுகளின் சாரங்களை இங்கு பதிவு செய்கிறேன் 

 உலகம் முழுவதும் பெண்களின் பூப்பெய்தும் வயது ஒரு தசாப்தத்துக்கு ( பத்து வருடங்களுக்கு) ஒரு முறை ஒரு மாதம் குறைந்து வருகிறது. 

மொத்தமாக 1900 களில் இருந்த சராசரி பூப்பெய்துதல் வருடம் - 14.5 என்றால் இப்போது 13.5 ஆகி இருக்கிறது. 

இதற்கான காரணங்கள் 

1. மரணம் மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம் இன்றி வாழ்வது 

தடுப்பூசிகள் புழக்கத்துக்கு வந்து உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து குழந்தைகளை காத்தன. 

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு பெரிய மகா யுத்தங்கள் நடக்கவில்லை. அதனால் மக்கள் கொத்து கொத்தாக சாவது மற்றும் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு அகதிகளாக ஓடுவது நின்றது ( ஒரு சில நாடுகள் தவிர) 

இயந்திரப்புரட்சி
பசுமைப்புரட்சி
வெண்மைப்புரட்சி
என்று விவசாய முறைகளில் கண்ட அசுர வளர்ச்சி காரணமாக 

செயற்கை மற்றும் இயற்கை பஞ்சங்கள் ஒழிக்கப்பட்டன. 
பட்டினியால் செத்த மக்களைப் பார்த்த 
19 ஆம் நூற்றாண்டு எங்கே.. 
தின்றே சாகும் மக்களைப்பார்க்கும்
21 ஆம் நூற்றாண்டு வந்தது. 

ஒட்டுமொத்தமாக உலகில் மக்களின் வருமானம் உயர்ந்துள்ளது. அவர்கள் உணவுக்கு செலவழிக்கும் தொகை அதிகரித்துள்ளது.
இதனால் ஊட்டச்சத்துள்ள உணவுகள் வாங்கி உண்ணும் நிலை வந்துள்ளது. 

ஒரு காலத்தில்
கால் வயிறு கூட நிரப்பாத சோழக்கூழு தின்று வளர்ந்த பிள்ளைகள் 
கலோரி பார்த்து சாப்பிட ஆரம்பித்த காலம் தொடங்கியதும் இப்போது தான். 

படிப்பறிவு பெண்களையும் அடைந்த போது
சூரியனிடம் இருந்து உடைந்த போது முதல் முறை பிறந்த உலகம் ..
மற்றொரு  முறை மீண்டும் பிறந்தது..

 எட்டுக்கு முன்னாடியும் (Precocious puberty) 
பதினாறு பின்னுக்கும் ( delayed puberty)  வயதுக்கு வந்தால் தான் பிரச்சனை. 

இதற்கு நடுவே எப்போது வயதுக்கு வந்தாலும் பிரச்சனை இல்லை. 

நான் மேலே சொன்ன இத்தனை காரணங்களும் 
பூப்பெய்துதல் வயது குறைவதற்கு காரணமாக முன்மொழியப்பட்டிருக்கும் தியரிகள். 

ப்ராய்லர் கோழியை நாம் சாப்பிட ஆரம்பித்து 
முப்பது வருடம் இருக்குமா? 

அதற்கு முன்னாலும் பெண்கள் வயதுக்கு வந்து கொண்டு தான் இருந்தார்கள்.
ஆனால் அப்போது அதைப்பற்றி நாம் பேசவே இல்லை .

என்ன காரணம் ? 

அப்போது நமக்கு இதைப்பற்றி பேசவெல்லாம் நேரமே இல்லை. 
வயசுக்கு வந்தால் உடனே பள்ளி படிப்பை விட்டு பெண்களை நிறுத்தி விட்டு 
அடுத்த முகூர்த்தத்தில் திருமணம் செய்து வைக்கும் வேலைகளில் பிசியாக இருந்தோம். 

இப்போது காலம் மாறி விட்டது. 
எதைப்பற்றி பேச வேண்டுமோ அதை விட்டுவிட்டு வேறதைப்பற்றியோ பேசிக்கொண்டிருக்கிறோம்.

உண்மையில் பெண்கள் மீது அக்கறை கொண்ட சமூகம் எப்படி சிந்திக்க வேண்டும் தெரியுமா? 

1. பேருந்து நிறுத்தம் , பெட்ரோல் பங்க் போன்ற அனைத்து பொது இடங்களிலும் பெண்களுக்கு சுத்தமான இலவசமான கழிவறைகள் கிடைக்க வழி வகை செய்ய யோசிக்க வேண்டும்.

2. மாதவிடாய் எனும் இயற்கை நிகழ்வை போனர் போஸ்ட்டர் அடித்து பெரிது படுத்தி அந்த பெண்ணை கூனிக்குருகச்செய்வது குறித்து யோசிக்க வேண்டும். 

3. இந்தியாவில் மாதவிடாய் அனுபவிக்கும் பெண்கள் 38 கோடி பேர். இவர்களுள் 88 சதவிகிதம் பேருக்கு சுகாதாரமான சேனிட்டரி நாப்கின் கிடைப்பதில்லை. வெறும் 12% பேருக்கு மட்டும் தான் சானிட்டரி நாப்கின் கிடைக்கிறது. இதைப்பற்றி யோசிக்கலாம்

4.  தங்கள் முதல் மாதவிடாய் காலத்தை பூப்பெய்துதல் மூலம் அடையும் எதிர்கால கனவுகளை சுமக்கும் மாணவிகள் 38 லட்சம் பேர் வருடாவருடம் பள்ளிப்படிப்பில் இருந்து நிறுத்தப்படுகின்றனர். இதைப்பற்றி யோசிக்கலாம். 

5.  இந்தியாவில் மாதவிடாய் அனுபவிக்கும் பெண் குழந்தைகளில் பெரும்பான்மைக்கு மாதவிடாய் காலங்களில் தன்சுத்தம் பேணல் பற்றி தெரியவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் 2014 செய்த ஆராய்ச்சி கூறுகிறது. 
இதை மாற்றி நல்லறிவு பகிர ஏதாவது யோசிக்கலாம்.

இதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல் 
ப்ராய்லர் கோழியால் தான் மாதவிடாய் சீக்கிரம் நேர்கிறது என்ற அறிவியலுக்கு புள்ளிக்கணக்குகளுக்கு சற்றும் ஒத்து வராத ஒரு உருட்டை உருட்டுவதால் என்ன பயன்? 

இன்றும் Cheap and easily available அதாவது 
விலை குறைவாகவும் எளிதாகவும் கிடைக்கும் புரதம் - ப்ராய்லர் கோழி தான்  

அனைவராலும் விலை அதிகமாக உள்ள நாட்டுக்கோழி மற்றும் மட்டன் வாங்கி சாப்பிட முடியாது. 

ஒரு ஏழை சம்சாரி வீட்டில்
வாரம் ஒரு முறையேனும் 200 கிராம் கோழிக்கறியாவது ஒரு கிராமத்துப் பெண் பிள்ளைக்கு கிடைத்து வருகிறது.  

ப்ராய்லர் மேல் ஒரு கெட்ட பிம்பம் உருவாக்கி அதையும்  அவளுக்கு மறுப்பது சரியா? 

சமூகத்திடமே இந்த கேள்வியை கேட்கிறேன். 

உங்கள் பெண் பிள்ளைக்கு 

ஹெல்த் எனர்ஜி ட்ரிங்க்
வடை பஜ்ஜி சமோசா
பரோட்டா  பாவ் பஜ்ஜி
பக்கெட் கறி பானி பூரி 
சாக்லேட் குர்குரே லேஸ்
சீனி கலந்த பானங்கள்
சோயா கலந்த பானங்கள்
இத்தனையும் எந்த கேள்வியும் கேட்காமல் கொடுத்து விட்டு 

ப்ராய்லர் கோழி மீது பழி போடுகிறீர்களே..

நியாயமா???? 

பின்குறிப்பு - ஹிந்தி பேசுவதால் எல்லாம் பூப்பெய்துதுல் தள்ளி போகாது. ஹிந்தி பேசும் மாநிலங்களை விட ஹிந்தி பேசாத மாநிலங்கள் பொருளாதாரத்திலும் சுகாதாரத்திலும் படிப்பறிவிலும் முன்னேறி இருப்பதே முதல்  மாதவிடாய்  சீக்கிரம் நிகழ்வதற்கு காரணம். 

இப்படிக்கு, 

Dr.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை

Thursday, June 6, 2019

இந்தி திணிப்பு - நம் வாழ்வாதார பிரச்சனை

இந்திப் படிச்சா இப்போ என்ன கெட்டுப்போய்டும்?

பணக்காரர்கள் இந்தி படிக்கிறார்கள், ஏன் ஏழை அரசு மாணவனை மட்டும் தடுக்கிறார்கள்?

இந்தி படித்தால் இந்தியா முழுவதும் எங்களால் வியாபாரம் செய்ய முடியும், வேலை செய்ய முடியும், அதை ஏன் தடுக்கிறிங்க?

பெற்றோர் எல்லாரும் இந்தி வேண்டுமென்று சொல்லும்போது அதைத் தடுக்க நீங்கள் யார் ?

தமிழ் மொழி, தமிழ் மொழினு சொல்லி, சொல்லியே தமிழர் வளர்ச்சியை ஏன் தடுக்கிறீங்க?

இந்திக்கு ஆதரவாக பேசுபவர்கள் முன்வைக்கும் வாதங்களே இவை. நியாயமாக தெரியும் வாதங்கள். உணர்வுப்பூர்வமான வாதங்கள்.

நாம் உணர்வுப்பூர்வமாக இதனை அணுகாமல், தமிழ் மொழி என் உயிர் என்ற நிலையில் இருந்து அணுகாமல், பொருளாதாரம் (வரவு - செலவு), யதார்த்தம் என்றளவில் இந்தி மொழி பயன்பாட்டை ஆராய்வோம்.

நாடு என்பது உண்மையில் அந்த நாட்டின் பொருளாதாரத்தையே குறிக்கும். நாடுகள் தோன்றுவதற்கு முன் சிறு, சிறு மக்கள் குழுக்கள் தங்கள் இடத்தில் தங்களுக்கான பொருளாதாரத்தை நிறுவிக் கொண்டனர். அவர்கள் செழிப்படைந்தவுடன், பக்கத்தில் உள்ள குழு படையெடுத்து வந்து செழிப்பான பொருளாதாரத்தைப் பிடித்துக்கொள்வார்கள். இது ஒரு இயல்பான சுழற்சி. மனிதக் கூட்டம் மட்டுமின்றி மிருகங்களின் எல்லையுமே இப்படித்தான் வரையறுக்கப்படுகிறது என்பதையும் நாம் அறிவோம். வலுத்த மிருகமே பொருளாதாரத்தை ஆளும்.

பொருளாதாரமே நாடு என்பதால், நாடு பிடிப்பதிலும் வரவு - செலவுக் கணக்குகள் உண்டு. போர் தொடுக்க 1000 ரூபாய் செலவாகும் என்றால், போரில் வெற்றி பெற்றால் அந்த நாட்டில் இருந்து 2000 ரூபாய் கிடைக்கும் என்றால் மட்டுமே போர் தொடுக்கப்படும். லாபம் இருந்தால் மட்டுமே போர் நடக்கும். அதைப் போல அந்த நாட்டைக் காப்பாற்றுவதற்கும், எதிரிகளை எதிர்த்து போரிடலாமா? சரணடையலாமா? என்பதும் இந்த வரவு - செலவை வைத்தே கணக்கிடப்படும். இராஜராஜன் சோழன் வடக்கே செல்லாமல், கிழக்காசியவிற்கு சென்றதற்கும் இந்த கணக்குகளே காரணமாக இருந்திருக்ககூடும். மொத்தத்தில், பொருளாதார கணக்குகள், பொருளாதாரத்தைப் பிடிப்பதற்காக நாடு பிடிப்பதாகும்.

ஆக, மனிதனோ, மிருகமோ, பொருளாதாரமே நாடு.
நாட்டுப் பற்று, தேசிய உணர்வு, மொழி, பண்பாடு, வரலாறு இவையெல்லாம் அந்த பொருளாதாரத்தைக் காத்து நிற்பவைகள் மட்டுமே. ஒரு நாட்டின் தலையாய கடமை, ஒரு அரசின் தலையாய கடமை தம் நாட்டின் பொருளாதாரத்தை அன்னிய சக்திகளிடம் இருந்து காப்பதே ஆகும்.

இந்நிலையில், இந்தி என்பது மக்கள் பயன்பாட்டிற்கும், மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே கொண்டு வரப்படுகிறது என்று எண்ணுகிறிர்களா? சுவாசிக்க நல்ல காற்றைக் கேட்டுப் போராடியவர்களை வாயிலேயே சுட்டுக் கொன்ற அரசுகளுக்கு, மக்கள் நலன் மேல் அவ்வளவு அக்கறையா என்ன?

நிச்சயம் கிடையாது. இந்தியா என்பது ஒரு நாடு கிடையாது, நாடுகளின் ஒன்றியம். அதாவது, இந்தியா என்பது ஒரு பொருளாதாரம் கிடையாது, பொருளாதாரங்களின் கூட்டமைப்பு. உதாரணத்திற்கு, தமிழ்நாட்டுக்கு என்று ஒரு கரான்சி இருந்தால் (டாலர் என்று வைத்துக்கொள்வோம்), 1 தமிழ் நாடு டாலர் 30 இந்தியா ரூபாய்க்கு  ஈடாக இருக்கக்கூடும். ஏனெனில், தற்பொழுது பிகாரில் 100 ரூபாய்க்கு இருக்கும் மதிப்பும், தமிழ்நாட்டில் 100 ரூபாய்க்கு இருக்கும் மதிப்பும் வெவ்வேறு. இரண்டும் வெவ்வேறு பொருளாதாரங்கள். இந்தியை அனுமதித்தால், தமிழர் வேலையெல்லாம் மற்றவர்களுக்கு செல்வது இந்த வேறுப்பாட்டால்தான். உதாரணம் - கார் ஒட்டுவதற்கு குறைந்த சம்பளத்திற்கு மற்ற மாநிலத்தில் இருந்து ஆள்கள் கிடைப்பார்கள். தமிழர்களும் அந்த குறைந்த சம்பளத்திற்கே வேலை செய்ய வேண்டும் அல்லது வேறு துறைக்குச் செல்ல வேண்டும். இப்படி எல்லாத் துறையிலும் நடக்கும் பொழுது நம் பொருளாதாரமே கிழ் இறங்கும், நம் வசதி வாய்ப்புகள் குறையும். பிகாரின் குறைந்த பொருளாதாரம் தம் லாபத்திற்காக, தமிழர் பொருளாதாரத்தைக் காவு கேட்கும்.

இப்பொழுது ஆரம்ப பத்திகளை மீண்டும் படிக்கவும். பொருளாதாரங்களைப் பிடிப்பதே, நாடு பிடிப்பதாகும்.

இந்தி படிச்சா இப்போ என்ன கெட்டுப்போய்டும்?

தமிழ் நாட்டின் பொருளாதாரம் கெட்டுப் போய்விடும். கைவிட்டுப் போய்விடும்.

பணக்காரர்கள் இந்தி படிக்கிறார்கள், ஏன் ஏழை அரசு மாணவனை மட்டும் தடுக்கிறார்கள்?

இந்தியை அனுமதிப்பதால் தமிழ் நாட்டுப் பொருளாதாரத்திற்கு நேரடி ஆபத்து என்கின்ற பொழுது தமிழ் நாடு அரசு தம் பள்ளிகளிலேயே இந்தியை அனுமதிக்க இயலாது. தேவையும், விருப்பமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.

இந்தி படித்தால் இந்தியா முழுவதும் எங்களால் வியாபாரம் செய்ய முடியும், வேலை செய்ய முடியும், அதை ஏன் தடுக்கிறிங்க?

நீங்கள் ஒருவர் இந்தி படித்து வெளிமாநிலங்களுக்கு செல்லலாம் என்று நினைத்தால், அங்கிருந்து அதே இந்தி முலம் 10 பேர் உள்ளே வருவார்கள் (நாம் 8 கோடி, அவர்கள் 100 கோடிக்கு மெல்). உதாரணத்திற்கு, தற்பொழுது தனியார் துறையில் மேலாளர் பதவி தவிர்த்து பெரும்பாலும் வேலையில் இருப்பவர்கள் தமிழர்கள், முக்கியமாக தென் மாவட்டங்களைச் சார்ந்தோர். இதற்கு முக்கிய காரணம் சென்னையில் இந்தி இல்லை என்பதால் வட நாட்டினர் சென்னைக்கு வர கடைசி முக்கியத்துவமே தருவர், ஆகையால், அதிகளவு போட்டி கிடையாது. 10 பேருக்குள் மட்டுமே போட்டி. 10 பேருமே தமிழர்கள். இந்தி படித்தால் 100 பேருக்குள் போட்டி. 90 பேர் தமிழர் அல்லாதவர்.போட்டிக்கு நாம் தயங்கவில்லை.  யதார்த்தத்தைப் பேசுவோம்.

இந்த உதாரணம் வியாபாரத்திற்கும் பொருந்தும்.

மொத்தத்தில் இந்தி படித்தால் வெளி மாநிலத்திற்கு சென்று வியாபாரம், வேலை செய்வது நடக்குமா என்பது தெரியாது, ஆனால், தமிழ்நாட்டில் வேலை, வியாபாரம் தமிழர்களுக்கு இல்லாமல் போகும்.

பெற்றோர் எல்லாரும் இந்தி வேணும்னு சொல்லும் பொழுது அதைத் தடுக்க நீங்க யார்?

8 கோடி மக்களும் விரும்பினாலும், தமிழ் நாட்டுப் பொருளாதாரத்தை காப்பதற்காக தமிழ் நாடு அரசு இந்தியை அனுமதிக்கக் கூடாது. அரசின் தலையாயக் கடமை இது. தமிழ் நாட்டு அரசு மட்டுமின்றி, உலகில் எந்தவொரு அரசும் இதையே செய்யும்.

தமிழ் மொழி, தமிழ் மொழியென்று சொல்லிச் சொல்லியே தமிழர் வளர்ச்சியை ஏன் தடுக்கிறீங்க?

தமிழ் மொழி என்பது வெறும் மொழி மட்டுமின்றி பல்லாயிரம் வருடங்களின் பொருளாதார ஆளுமைகளை உள்ளடங்கியது. தமிழர்கள் பல பொருளாதாரங்களுடன் தொடர்பு வைத்திருந்தனர். வலிமையாக இருந்துள்ளனர். தற்பொழுது, தமிழ் மொழி, தமிழ் மொழி என்றுரைப்பது மீண்டும் நம் வலிமையைப் பெற்றுச் சக்தி மிக்க பொருளாதாரமாக மாறுவதற்குத்தான். அதன் வழி நம் சரியாகவே பயணிக்கிறோம் என்பது கண்கூடு.

மொத்தத்தில், போரிட்டு நம் பொருளாதாரத்தைப் பிடிக்காமல், இந்தி திணிப்பு முலம் நம் பொருளாதாரத்தை, நம் வாழ்வாதாரத்தை, நம் வளத்தை கைப்பற்றப் பார்க்கிறார்கள். அதாவது, செலவே இல்லாமல் வரவை எளிதாக இந்திய ஒன்றியம் பெயரில் அடையப் பார்க்கிறார்கள்.

சில கேள்விகள் இயல்பு,

இந்தியப் பொருளாதாரத்துடன் தமிழர் பொருளாதாரம் இணைந்தால், தமிழருக்கு தீங்கு என்று எப்படி நிச்சயமாக சொல்றிங்க?

இரு பொருளாதாரங்கள் இயல்பாக இணையலாம். கட்டாயப்படுத்தினால், இரண்டில் ஒரு பொருளாதாரத்திற்கு நட்டம். அப்படி நட்டம் என்பதால்தான், கட்டாயம் உள்வருகிறது. உலகளவில், இரு பொருளாதாரங்கள் பரிவர்த்தனைக்கு Trade treaties போடுவார்கள். அதாவது, தொழில் ஒப்பந்தங்கள். இரு நாட்டு அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் ஆலோசித்துப் போடப்படும். இரு தரப்புக்கும் நட்டமின்றி பார்த்துக் கொள்ளப்படும். ஆனால், இந்தியாவில் தன்தோன்றித்தனமாக ஜி.எஸ்.டி, சாகர்மாலா, ஹட்ரோ கார்பன், இந்தி திணிப்பு போன்றவைகள் கட்டாயமாக தமிழர் பொருளாதரத்தில் திணிக்கப்படுகிறது. இதில் எப்படி தமிழருக்கு நன்மை நடந்திட முடியும்?

ஆந்திரா, கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்கள் இந்தியை அனுமதித்த பின் ஏன் தமிழ்நாடு மட்டும் முரண்டுப்பிடிக்கிறது?

அவர்கள் பொருளாதாரத்திற்கு இந்தி மொழி நன்மை செய்கிறது. ஆகையால் அனுமதித்துள்ளார்கள். உதாரணத்திற்கு, கேரளா பொருளாதாரத்தில்  படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவு. இந்நிலையில், தங்கள் மக்களுக்காக அடுத்தவர் பொருளாதாரத்தை அண்டி வாழ வேண்டி உள்ளதால், அவர்கள் இந்தி படிக்க வேண்டியுள்ளது. கர்நாடகம், ஆந்திராவிலும் இதே நிலைதான். ஏன் மொழிக்காக உயிரே தரும், மொழியால் தம் பாதியில்ஒரு நாடே உருவான மேற்கு வங்காளத்திலும் இந்திக்கு கடுமையான எதிர்ப்பு இல்லை. ஏனெனில், அவர்கள் பொருளாதாரத்திற்கும் அது நன்மை செய்வதாக உள்ளது.

மொத்தத்தில், இந்தித் திணிப்பு என்பது மொழிப் பிரச்சனை இல்லை, பொருளாதாரப் பிரச்சனை. நம் வாழ்வாதாரப் பிரச்சனை.

எதிர்ப்போம்...

எழுத்து,
பா.ச. பாலசிங்

சரிபார்ப்பு
ப. உதயகுமார்

Monday, April 29, 2019

நீங்க படிச்சா மட்டும் போதும்...

'ஒருவேளை சாப்பாட்டுக்கே பிரச்சினையா இருக்கு. இதுல எங்க சாமி எம்புள்ளைய படிக்க அனுப்ப?'

"உன் புள்ளைய படிக்க அனுப்பு. அந்த பிள்ளைக்கான சாப்பாட்டை நான் தரேன்" - தமிழக அரசு அரை நூற்றாண்டுக்கு முன்பு

'என் புள்ள பள்ளிக்கூடத்துக்கு போட்டுட்டு போக நல்ல துணி இல்லைங்க'

"புள்ளைய படிக்க அனுப்பு. சீருடையை நான் தரேன்"

'என் புள்ள கால்ல செருப்பு இல்லாம வெயில்லயும், மழையிலயும் நடக்குது'

"புள்ளைய படிக்க அனுப்பு. செருப்பு நான் தரேன்"

'பள்ளிக்கூடத்துல வெறும் சோறும் குழம்பும்தானாம். அத திண்ணுட்டு எப்படிங்க என் புள்ள தெம்பா படிக்கும்?'

"இனி சத்துணவுல முட்டை போட சொல்றேன். சந்தோஷமா?"

'புத்தகத்தை காசு கொடுத்து வெளியில வாங்க சொல்றாங்க சார். என்னால அதெல்லாம் முடியுமா?'

"உன் பிள்ளைக்கு புத்தகம், ஜியாமெண்டரி பாக்ஸ் எல்லாமும் இலவசமா தரேன். படிக்க மட்டும் அனுப்பு"

'எம்புள்ள அஞ்சாப்பு வரை எங்கூர்லயே படிச்சிடுச்சிங்க. அடுத்து ஆறாப்பு படிக்க பக்கத்து ஊருக்கு போனும். அது இங்கேர்ந்து 4-5 மைல் தூரம் இருக்கும். தினமும் பஸ்ல போக காசுக்கு நான் எங்க போவேன்'

"உன் பிள்ளைக்கு இலவச பஸ் பாஸ் நான் தரேன். படிக்க அனுப்பு"

'பக்கத்து ஊர்ல என் புள்ள படிக்குது. அந்த ஊருக்கு அடிக்கடி பஸ் இல்லை. எப்படி அனுப்புறது?'

"கவலைப்படாதீங்க. உங்க பிள்ளைக்கு இலவசமா சைக்கிள் தரோம். படிக்க அனுப்புங்க"

'நாங்க மலைக்கிராமங்க. எங்க ஊர்லேர்ந்து தினமும் பிள்ளைகளை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்கிறது சாத்தியமில்லைங்க'

"உங்களை மாதிரி மக்களுக்குதான் அரசாங்கம் சார்பில் உண்டு உறைவிட பள்ளிகளை கட்டியிருக்கோம். பிள்ளையை படிக்க அனுப்புங்க. தங்குற இடம்,  சாப்பாடு, படிப்பு அனைத்துக்கும் நாங்க பொறுப்பு"

'வயசுக்கு வந்த பொம்பள புள்ளைய எப்படி அந்த மூனு நாளுக்கு பள்ளிக்கூடம் அனுப்புறது? அதான் அந்த நாட்கள்ல பள்ளிக்கூடத்துக்கு அனுப்பறதில்லை'

"தைரியமா அனுப்புங்க. அந்த நாட்களுக்கு தேவைப்படும் நாப்கின்களை கொடுக்க தானியங்கி நாப்கின் மிஷின்களை பள்ளிக்கூடத்தில் அமைச்சிருக்கோம். அதுக்காகல்லாம் புள்ளைய லீவ் போட சொல்லாதீங்க"

'பத்தாவதுவரை அரசாங்க பள்ளிக்கூடத்தில் படிக்க வச்சிட்டேன். ஏதோ கம்பியூட்டர் படிப்பு வந்துருக்காம்ல அதுல சேர்த்து விடலாம்னு பார்க்குறேன். எங்க போயி சேர்க்குறதுன்னு தெரியலையே?!'

"எங்கிக்கிட்ட அனுப்புங்க. Computer Science படிப்பை நாங்களே சொல்லித்தரோம். படிக்கிற புள்ளைக்கு உதவியா இருக்க இலவசமா லேப்டாப்பும் தரோம்"

'என் புள்ளைதாங்க என் வம்சத்துலயே பள்ளிக்கூடம்வரை போய் படிச்சவன். அவனை காலேஜ் படிப்புக்கு அனுப்ப பணத்துக்கு நான் எங்க போவேன்?

"குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு கல்லூரி படிப்பும் இலவசம். தயங்காம படிக்க அனுப்பி வைங்க.நாங்க பார்த்துக்குறோம்"

'எம் புள்ள நல்லா படிச்சி டாக்டர்படிப்புக்கோ, என்ஜினியர் படிப்புக்கோ போகனும்னா எங்க போயி படிக்கனும்?'

"நம்ம பிள்ளைகள் எங்கேயும் போக வேணாம். அவுங்க டாக்டராகவோ, பொறியாளராகவோ ஆகனும்னா நம்ம மாநிலத்துலயே படிக்கலாம். அதுக்கு தேவையான மருத்துவ கல்லூரிகளையும், பொறியியல் கல்லூரிகளையும் நம்ம அரசு கட்டித்தரும். அதுக்கு 12வதுல நல்ல மார்க் எடுத்தா போதும்"

'பொம்பளப்புள்ள 8வதுவரை படிச்சிருக்கு. அது போதும்னு பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்திட்டோம். சட்டுபுட்டுனு அடுத்த தை மாசத்துல கல்யாணத்தை முடிச்சிடுவோம்'

"பெண் பிள்ளைகளை முழுமையா படிக்க விடுங்க. 12ம் வகுப்புவரை படித்தால் திருமணத்துக்கு 50,000 ரூபாய் பணமும் தாலிக்கு 8 கிராம் தங்க காசும் அரசாங்கம் சார்பா தரோம். படிக்க அனுப்புங்க"

'நீங்க நல்லாயிருக்கனும் சாமி. என் வம்சத்துலயே என் புள்ளதான் முதல் பட்டதாரி. இனி குடும்பம் தழைச்சிடும்'

திடீரென ஒரு வில்லன் வரான் " இனி நீங்கல்லாம் எனக்கு கட்டுப்படனும். நான் சொல்றபடிதான் நீங்கல்லாம் படிக்கனும்.
நீ என்ன தேர்வு எழுதனும்னு நான்தான் சொல்லுவேன். அதே மாதிரி இந்த கல்லூரிகள் எல்லாம் உனக்கு சொந்தமா இருக்கலாம் ஆனா அதில் யார் யாரை படிக்க வைக்கனும்னு நான்தான் முடிவெடுப்பேன். ஒரே நாடு,  ஒரே கொள்கை. இனி இப்படித்தான். இதை ஏற்று நீங்க நடக்கலைனா நீங்கல்லாம் தேச துரோகி. அடுத்து என்ன பாடம் சொல்லிக்கொடுக்கனும்னு நான்தான் சொல்லப்போறேன்"

இதுதான் அரை நூற்றாண்டுகளாக தமிழக அரசுகளின் உழைப்பால் கிடைத்த கல்வி எனும் சமூகநீதி , காவி பாவிகளின் கையில் சிக்கிய வரலாறு.
இலவசத்தால் தான் தமிழ்நாடு முன்னேறவில்லை என்று கூறும் அரைகுறை அரசியல் விமர்சகர்களுக்கு இது சமர்ப்பணம்.
#திராவிடம்_மறவேல்

-Nambikai

Saturday, February 16, 2019

காஷ்மீரில் நடந்த காதுகுத்து

லைட்டா எல்லோருக்கும் காது குத்துவது போல இருக்கு...!

இந்தியாவின் மற்ற பகுதிகளில் இப்படி ஒரு குண்டு வெடித்து இருந்தால் எதிர்பாராரது என்று சொல்லலாம், ஆனால் காஷ்மீர் போன்ற பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கும் பகுதியில இப்படி ஒரு குண்டு தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப் பட்டது என்பது எங்கையோ இடிக்கிறது.

எப்படியும் ரேடியோ தகவல்களை ஒற்றுக் கேட்டல், வீதிக்கு வீதி சோதனை சாவடிகள், எவனையும் எந்த கேள்வி இல்லாமல் சோதனையிடும் அதிகாரம், தினம் தோறும் ரோந்து நடவடிக்கை எல்லாம் இருந்தும் ஒரு காரில் 350 கிலோ வெடி மருந்துடன் வந்து ஒரு ரானுவ வாகனத்தை மோதி வெடிக்க வைக்க் முடியும் என்றால் அது ஒன்னும் பொட்டலம் கட்டி பக்கெட்டில் எடுத்து வரும் சமாச்சரம் இல்லை. இப்போது C4 போன்ற ப்ளாஸ்டிக் வெடிமருந்துகளை துல்லியமாக கண்டு பிடிக்கும் டிடெக்ட்டர்கள் இருக்கின்றன.

சரி ஒரு அரசால் தங்களுக்கு எதிரான பயங்கரவாத இயக்கத்தை வைத்து குண்டு வைக்க முடியுமா? சின்ன உதாரணம், இந்திராவின் ஆட்சிக் காலத்தில் 80 களில் இந்திய புலனாய்வுத் துறை காஷ்மீர் பகுதிகளில் செய்த ஆப்ரேஷ்னுக்கு பெயர் ரெட் ரோஸ். ஒன்னும் இல்லை, அந்த பகுதியில் உள்ள காஷ்மீர் விடுதலை இயக்கங்களுக்கு ஆயுத சப்ளை செய்வது. பாக்கிஸ்தானில் உள் நாட்டு கலவரம் செய்வதற்க்கும், காஷ்மீர் பகுதியில் அமைதி இன்மையை நிரந்தரமாக வைப்பதற்க்கும். அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் தான் ஈழ இயக்கங்களுக்கு இந்தியாவில் பயிற்சியும் ஆயுதமும் கொடுக்கப் பட்டது. இதை அந்த நாட்களில் இந்திய புலனாய்வு துறையில் இருந்தவர்களிடம் விசாரித்துக் கொள்ளலாம்.

அவ்வளவு ஏன் இலங்கையில், அப்போதைய ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன ஆட்சி முடிந்து அடுத்து ஆட்சிக்கு வந்த ஆர் பிரேமதாஸ, முன்னாள் ஜனாதிபதிக்கு விசுவாசமான அமைச்சர்கள் லலித் அத்துலத் முதலி, காமினி திஸ்ஸானாயக்க, பாதுக்காப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ன ஆகியோரை விடுதலை புலிகளை கொண்டு கொன்றொழித்தார். பின்னாட்களில் அவரும் அதே புலிகளால் கொல்லப் பட்டார்.  இப்படி உலகம் முழுக்க இந்த நடமுறை இருக்கிறது.

யாரும் பதவி என்று வந்து விட்டால் யோக்கியனில்லை. அதிலும் பிஜேபிக்கு வாழ்வா சாவா நிலை. ஆட்சி கைய விட்டு போனால் அதன் விபரீதம் புரிந்து இருப்பார்கள்.
பல ஆயிரம் கொலைகள் செய்து முதல்வர் பதவியை தக்க வைக்க தெரிந்த ஒருவரால் மரணத்தில் பிரதமர் பதவியை தக்கவைக்க மறுக்க மாட்டார் என்று எப்படி நம்ப முடியும் ?