தொகுப்புகள்

Search This Blog

Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

Friday, August 10, 2018

Whatsapp வதந்திகள்..

இத்தனை நாட்களாக என் பதிவை படித்தவர்களுக்கு மிக மிக நன்றிங்க,

சிக்சர்களும் ,பவுண்டரிகளும் , கோபங்களும் இயலாமையும் , சந்தோசங்களும், தெறிக்கும் இப்பதிவையும்  கடைசி வரிவரை படியுங்கள்,
படித்த பின்பு ,,
நெஞ்சில் நேர்மையிருந்தால் ஒரு துளி கண்ணீரோ , ஒரு பச்சதாபமோ ,, வரவில்லை என்று சொல்லுங்கள் இணையத்தை விட்டே விலகுகிறேன், 😥😥😥

----

நீதான் நடுசென்டராச்சே.. திமுக இல்லம்பியே அப்றம் ஏன் இப்டி கலைஞர் கலைஞர்னு கத்துறன்னு சில நட்புக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

பலர் கேட்காமல் கூட நினைத்துக்கொண்டிருக்கலாம்.

நியாயமான கேள்விதான். இதே ஜெயா இறந்தப்ப இவ்ளோ பொங்கல.
அதிமுகவும் இல்லதான்.

ஆனா ஏன் கருணாவுக்கு மட்டும்??

தராசு முள் எப்புறம் சரியுமோ அதன் எதிர்ப்புறம் இட்டு நிரப்பி சரிசெய்யவேண்டியதே ஒரு நடுநிலையாளனின் கடமை..

மாறாக நடுவில் நின்று தேமே என்று வேடிக்கை பார்ப்பதல்ல. அது ஒரு பொறுப்புத் தட்டிக்கழித்தல்.

கடந்த 49 வருடங்களில் கருணாநிதி தந்தது எத்தனையோ திட்டங்கள்.
சொல்லப்போனால் சாதனைகள்.

இருக்கலாம். ஊழல் இருந்திருக்கலாம். மறுக்கவில்லை. தவறுகள் நடந்தன. மறக்கவுமில்லை.

ஆனால் 1970க்குப் பிறகு மெல்ல மெல்ல வாழ்க்கை முறை மாறியது. எம்ஜியாரின் வரவுக்குப் பின்னர் ஒரு மாபெரும் முட்டாள் அடிமைக்கூட்டம் உருவானது.

காமராஜர் காலத்தில் மக்களின் மனநிலை வேறு. இப்ப கண்டிப்பா வேறு.

இப்ப காமராஜரே இருந்திருந்தாலும் டிராஃபிக் ராமசாமி லெவல்ல தான் டீல் பன்ணிருப்பாங்க. பண்ணிருப்போம்.

கவாஸ்கர் கால ஆட்டம் வேறு சச்சின் கால ஆட்டம் வேறு கோலி ஆட்டம் வேறு.

ஆனால் ஒருவர் மூன்று வித ஃபார்மெட்டிலும் தன் இருப்பை ஆணித்தரமாகப் பதிவு செய்திருக்கிறார். மறுக்கமுடியுமா என்ன?

இன்றைக்குச் சென்னை நகரத்தைக் கட்டமைத்ததில் அவருடைய ஆட்சிக்குப் பெரும்பங்கு உண்டு.

ஒரு காலத்தில் சொல்வார்கள்.
டாடாவுடைய தயாரிப்பில் ஏதேனும் பத்துப் பொருட்களை ஒரு இந்தியன் தன் வாழ்நாளில் பயன்படுத்திவிடுவான் என்று.
இப்ப அது ரிலையன்ஸ்டம் வாங்குகிறோம் ,

கலைஞரின் திட்டங்களும் நமக்கு அவ்வழியே..

ஆனால் அதற்குரிய மரியாதையை நாம் கொடுத்திருக்கிறோமா?

கடந்த ஐம்பதாண்டு காலமாக ப்ளான் பண்ணி,, கட்சிக் கணக்குக் கேட்டேன் தரலன்னு ஒரு பேராசைக்காரப் பொருளாளரே சொல்லி கட்சியை விட்டு விலகியது முதல் ,
எத்தனை வதந்திகள் எத்தனை கட்டுக்கதைகள் எத்தனை இழிபெயர்கள் எத்தனை பழிவாங்கல்கள் ???...

கருணாவால் பாதிப்படைந்தவர்கள்னு நிறைய பேர் உண்டு.அதுல பெரும்பாலானோர் இருக்கப்பட்டவங்க உயர்சாதிக்காரர்கள் இவன்லாம் நம்மை ஆளுறதான்னு சிரிச்ச ஆண்டை சாதிக்காரர்கள்.

ஆனா அவங்களுக்கும் இவர் பண்ணிய நலத்திட்டங்கள் ஏராளம். ,,
அவர் செத்ததும் வெடிவெடிச்சுக் கொண்டாடுனதும் இவங்கதான்.,
குறிப்பா பூணூலிஸ்டுகள்,

கருணாநிதி என்ன அவர் அப்பன் வீட்டுக்காசுலயா திட்டங்களைக் கொண்டுவந்தார்?

இல்லதான்.,
ஆனா காமராஜரோ கக்கனோ எந்த சுப்பனோ அவங்கவங்க அப்பன் வீட்டுக் காசுல சேவை செய்யலையே??

எல்லாருமே ஷாப் கோகனட் டுக்கு.
வே பிள்ளையாருக்கு டக்கு தானே..
கைக்காசப் போடலயே..

காமராஜர் கக்கன் செத்தப்போ சொத்தென்ன இப்ப சொத்தென்ன?

ம்ம். குட் க்வெஸ்டின்.

ஆனா காமராஜர் பீரியட்ல காமராஜருக்கு சொத்தில்ல.
ஆனா அவர் சார்ந்த இனத்தோட வளர்ச்சி என்ன??

இன்னிக்குத் தமிழகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தக்கூடிய இடத்துல இருக்காங்க.

அதுக்குக் காரணம் காமராஜர் இல்லதான??

உலகமயமாக்கலுக்குப் பின்னாடி பல கம்பெனிகளின் மதிப்பு தாறுமாறா ஏறியது. அதுல கலைஞர் குடும்ப நிறுவனங்களும் உண்டு. (கலைஞருக்கான பங்கு பிரித்து கொடுத்துவிட்டார்கள், இப்போது மாறன் சகோதரர்கள் மட்டுமே )

ஆனா இன்னிக்கும் சன் டிவி தான டிஆர்பில நம்பர் ஒன்.,
அதுக்கும் கலைஞர் தான் காரணமா??

அப்டிப் பாத்தா கலைஞர் டிவி அந்தளவு வளரலயே??
கருணா டொக்காயிட்டாரா சம்பாதிக்றதுல??

ப்ராமண லாபி பத்தி நம்ம எல்லாருக்கும் தெரியும். தெரிஞ்சிருக்கணும்..

பத்து பேர் வேலை செய்ற ஆஃபிஸ்ல ஒரே ஒரு வெஜ் ப்ராமிண் இருந்தா ட்ரீட்டுக்கு வெஜ் ஓட்டல்தான் போவாங்க. இதான் இன்னிக்கும் நிதர்சனம்.

நம்ம மனசுல இயல்பாவே புகுத்தப்பட்ட குற்ற உணர்ச்சி.. அய்யரப் பழிச்சா குலநாசம்னு..
அதே நேரம் தன் காரியம் ஆகணும்னா எந்த எல்லைக்கும் இலகுவாகப் போகக்கூடிய திறமை ப்ராமணர்களுக்கு எப்போதும் உண்டு.

ஸ்லெட்ஜிங் பண்ணியே எதிராளியின் உளவியலைத் தகர்க்கக்கூடிய திறமை ஆரியக்கூட்டத்திடம் அளவு கடந்து உண்டு.

ஏளனம் செய்தே நம்மைக் கூனிக் குறுகவைக்கமுடியும். கூட்டமாகக்கூட.

அப்படித்தான் கிளப்பப்பட்டன ஆயிரமாயிரம் வதந்திகள்.
2ஜி கூட அப்படி ஒன்றுதான். விஞ்ஞான ஊழல்வாதி என்றெல்லாம் பட்டப்பெயர்கள்.

ஆனால் ஒருமுறை கூட வஞ்சம் தீர்க்க இயலவில்லையே எப்படி??(இத்தனை எதிரிகளில் ஒருவரால்கூட நிறுபிக்க முடியாதா?)

வழக்குப் போட்டதாலேயே குற்றவாளி என்றால் நீதிமன்றங்களே தேவையில்லை.,
போலீஸ் ஸ்டேஷன் போதும். FIR போதும்.

சரி நம்ம கதைக்கு வருவோம்.,
கலைஞரை ஏன் இவ்வளவு தூரம் சிலாக்கவேண்டும்?

நியாயமா அந்தாளு செஞ்ச நல்லதுக்குக் கிடைக்கவேண்டிய மரியாதை கிடைக்கல. கொடுக்கவும் பலருக்கு மனசில்ல.

இந்த இடத்துல அவர் மேல ஒரு வித பரிதாபம் வருது,6
. உழைச்சவன் ஒருத்தன் உயரத்துல போய் உக்காந்தவன் ஒருத்தங்குற மாதிரி.
திட்டுவாங்கிப் பழகியவன்ற ஒரே காரணத்துக்காகக் கண்ட கழிசடைகள்கிட்டயெல்லாம் திட்டுவாங்கிப் பொறுத்துப்போயாச்சு.

செத்தாலும் திட்டுறாங்க.,
ஈழத்தைச் சிதைத்தானாம்.அடப்பாவிகளா திகார்ல வச்ச கனிமொழியைவே காப்பாத்த முடியல.ஈழத்துக்கு என்ன ஏரோப்ளேனா விடமுடியும்??

சென்டரல் லாபி அவ்ளோ ஸ்ட்ராங்கானது.. எப்போதுமே.. (மேனன்கள் காலத்திலேயே இலங்கை பிரச்சினைக்கான முடிவுரை எழுதப்பட்டுவிட்டது )

சில மிஸ்கம்யூனிகேஷன்ஸ் சறுக்கல்கள் இருந்தது அந்த சமயத்துல.

ஆனா அதத் தொக்கா எடுத்துப் பயன்படுத்திக்கிட்டது பின்னாடி வந்த கட்சிக்காரங்க., கூடவே சில பிச்சைக்காரங்க.

ஏன்னா ஈழம்கிற பிச்சைப்பாத்திரம் ரொம்பவே பெருசு.,
சின்னப்புள்ளைக கண்ணைக் குத்தி அதக்காட்டி பிச்சை எடுத்துத் திங்குறமாதிரி.

சரி இருக்கட்டும்.,
அப்ப நடந்தது என்னன்னு கூடத் தெரியாம ஆமைக்கதைகளை நம்பிட்ருக்கவங்க நம்பட்டும்.

ஆனா அவங்களுக்கும் இந்த மனுஷன் எதாவது செஞ்சிருப்பார். அறிவு வளந்தப்றம் புரிஞ்சுக்கட்டும்..
அதுவரை இனத்துரோகி கலைஞர் ஒழிக. போதுமாடா என் ஷெல்வங்களே..
குச்சிமிட்டாய் சாப்டுங்க.

நிற்க...

சர்க்காரியா கமிஷன்6
எமர்ஜென்சி மிசா நள்ளிரவுக் கைது 2ஜி திகார் எத்தனை?எத்தனை?

பதிமூனு வருஷமா வனவாசம் போனதைபோல் எந்த ஆட்சி அதிகாரத்திலும்  இல்லை,
எம்ஜியார் போன்ற ஒரு ஏகாதிபத்தியக் கிறுக்கன் கையில மாநிலமே சிக்கியிருந்தது

ஊர்ப்பட்ட சாராய வியாபாரிகள் கல்வித்தந்தைகளானது அப்பத்தான்.

எம்ஜியார் எவ்ளோ நல்லவரு..
என்னா கலரு.. ஐ! பொன்மனச்செம்மல்யா..

இந்த ஜெயலலிதா.. வேணாம்.. எதுக்கு..

தங்களுக்குத் தெரியாத சட்டம் ஒன்றுமில்லை.. குற்றம் ஒன்றுமில்லை.

பரப்பன அக்ரகாரங்களும் குமாரசாமிகளும் சசிகலாக்களும் தினகரன்களும் சுதாகரன்களும்
ஈஓ பிஎஸ்களும் வாழ்க வளர்க.

சரி இதனால கருணாநிதியைப் பிடிக்கணுமா??

நல்ல கேள்வில்ல. ம்ம்..
நமக்குப் புரியற பாஷையிலயே பேசுவோம்.

நாம ஒரு சாதாரண ஆள். இருந்திருந்து கஷ்டப்பட்டு ஒரு நல்ல போஸ்ட் செம்மயா ஒரு கதை சூப்பரா ஒரு கவிதை அருமையா ஒரு படம் வரைஞ்சு போஸ்ட் பண்றோம். ஒருத்தனும் பாக்கல.

அதையே ஒரு பிரபலம் காப்பி பண்ணி ஆயிரம் லைக் வாங்குறான்.

காண்டாகும்ல.. ல்ல??

கேவலம் ஒரு ரோமத்துக்கும் பிரயோஜனமில்லாத இந்த லைக்குக்கே இவ்ளோ காண்டாகுதே எத்தனை திட்டங்கள் இவர் யோசிச்சு ஆரம்பிச்சு வச்சுருப்பார்.

நோகாம அத அப்டியே காப்பியடிச்சு அல்லது பேர மாத்தி பேருவாங்கிட்டு கூடவே இவரையும் கேவலமா திட்டுறப்ப எப்டி இருந்திருக்கும்.

ஒரு தார்மீக ஆதரவு தரணுமா வேணாமா?
ஒரு அப்பா பேர் தெரியாத அனாதையைக் கூப்ட்டு போடா அப்பன் பேர் தெரியாதவனேன்னு கூப்பிட்டா எப்டி இருக்கும்.?

அடக்கி ஒடுக்கிவைக்கப்பட்ட சாதிலருந்து பிறந்த ஒருவன் தன் அறிவால் திறமையால் உழைப்பால் முன்னேறியபின்னும் தெலுங்கன் வடுகன் சின்னமேளம்னு நண்டு சுண்டெல்லாம் ஈஸியா கிண்டலடிக்கறப்ப ???

ஒரு சக மனுஷனா அவனை ஆதரிக்கவேணாமா??

தகுதியே இல்லாதவங்களுக்கு பாரத ரத்னா கொடுக்குறப்ப தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்ட ஒரு கலைஞனுக்கு ,,
தமிழக அரசியலைத் திருப்பிப் போட்ட ஒரு தலைவனுக்கு திருட்டுத் திராவிடன் பட்டமும் இனத் துரோகிப் பட்டமும் கொடுத்தா அதை எதிர்க்க வேணாமா??

மூனு நாள் பேசுன பொண்ணு நாலாவது நாள் கண்டுக்கலன்னதும் துரோகம் வலி சில்றைன்னு போஸ்ட் போடுற பசங்கள்லாம்,
பல வருஷம் கூடப்பழகுனவங்க,,
பதவிக்காக கட்சி மாறி விஷம் உமிழ்ந்தப்பவும் கலங்காம இருந்தவனைத் துரோகின்னு சொல்லும்போது அதை எதிர்க்கேள்வி கேக்கவேண்டாமா??

சாகும்வரை தாழ்த்த நினைத்தவர்கள் ,,
மத்தியில் தயங்காம நின்னு பிரச்சனையை நேருக்கு நேர் எதிர்கொண்டு எல்லாரையும் அரவணைத்து பாத்துக்கிட்ட ஒருத்தனை சாகுறப்பவாவது தாங்கிப்பிடிக்கவேண்டாமா??

வாழ்க்கை முழுக்க வன்மத்தால வீழ்த்தப்பட்டவனை வணங்கவேணாம். நினைக்கவேணாமா??

அதென்ன கட்டுமரம். ம்ம்..

ஆமா பின்ன சொகுசா பல்லாக்குல ஏறிப் படுத்துகிட்டு நம்மளை நாக்கு  தள்ளத் தூக்கிவரவச்சுட்டு
இறங்கிப்போறப்ப அசதியா இருக்குன்னு நெட்டிமுறிச்சுட்டுப் போறவன் எல்லாம்  சாமியாகுறப்ப,

தனி ஆளா முன்னேறித் தமிழ்நாட்டத் தூக்கி நிறுத்துனது  முட்டாப்பய கட்டுமரம்தான... ல்ல..
அட இதுக்கெல்லாம் அந்தாளக் கொஞ்சவா முடியும்னு கேக்கலாம். தப்பில்ல..,

ஆனா ஒரே ஒரு சின்னக் கேள்வி..

இதே கருணாநிதி ஒரு அக்மார்க் அய்யங்காரா இருந்திருந்தா இந்த இந்தியா அவரை எப்டி கொண்டாடி இருக்கும்?

பீஷ்மரே பிதாமகரே வாழ்விக்க வந்த வள்ளலே ராஜதந்திர ராஜனே அறிவின் ஆலமரமே அண்ணலே!!!
மனிதருள் மாணிக்கமே
தமிழக ஜோதியே
தரணியின் நீதியே!!!

அப்படின்னு கொண்டாடி இருக்கும்ல்ல??
ஆனா இப்ப அப்டி நடக்கலயே. ஏன்??
கடைசி நாள்ல கூட காமராஜரை மெரினால புதைக்கல காவேரிய கடல்ல கரைக்கலன்னு வாட்சப் வதந்தி., (முகநூல் வாட்ஸ்அப் வதந்திகளை நம்பி அரசே நீதீமன்றத்தில் பொய் தகவல் )

ஏன் இப்டிலாம்?

கொஞ்சம் யோசிக்கலாமா??

ஏன்னா அவன் அடிச்ச அடி அப்டி.
எங்க அடிச்சா வலிக்குமோ அங்க அடிச்சான்.

இன்னொன்னு என்ன? ம்ம்.. குடும்ப அரசியல்..

எனக்குத் தெரிஞ்சு இந்தியாவுல குடும்பம்னு பெரிசா இல்லாதவங்களைத் தவிர மீதி எல்லாருடைய குடும்பத்தினரும் குறிப்பா வாரிசுகள் அரசியல்லதான் இருக்காங்க.(அகிலேஷ் யாதவ், தேஜாஷ்வி, குமாரசாமி, சிந்தியா குடும்பம், Etc,, )

ஒரு சில விதிவிலக்குகள்.
சிலருக்கு இயல்பாவே வராது.
அதனால விலகிடுவாங்க.சிலர் வந்து விலகலாம்.
ஸ்டாலினோ கனிமொழியோ அழகிரியோ அவ்ளோ ஈஸியா இந்த நிலைக்கு வந்துடல.

ஸ்டாலினுக்கு இப்பதான் இளமை திரும்புதா? வயசென்ன.,
இந்த வயசுலயும் வியர்வையைத் தொடைச்சுகிட்டு விடிய விடியத் தூங்காம அழாம நின்னு நிலைமையைப் புரிஞ்சுகிட்டு நடக்கணும்னு என்ன தலையெழுத்தா?

அரசியலின் சூடு அவ்வளவு காத்திரமானது.

ஆனா ஸ்டாலின் போன்ற பெருந்தந்தை மகன்களுக்கு அது கூடுதான்..

ராகுலைப் பப்பு என்று கூறிச் சிறுமைப்படுத்துவது போல இந்த மனுஷனை சுடலைன்னு சொல்லி இழிவுபடுத்த அதே வதந்திக் கும்பல்.

தப்பில்லை. பிழைக்கணுமே.. சம்பாதிக்கறது எவ்ளோ கஷ்டம் இன்னிக்கு..

சரி கலைஞருக்கு வருவோம்.,
இலவசங்கள் கொடுத்து நாட்டைக் கெடுத்தார்.

உன்மைதான்.,
ஆனா ஒரு சின்ன தகவல்..
எங்க வீட்ல கலைஞர் டிவி வந்தப்றம் தான் கேபிள்னு ஒன்னு இழுத்தோம். Yy
ஐ மீன் அரசு இலவச வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி.
அதுவரை பணக்காரங்க வீட்ல போய் எட்டித்தான் பாப்போம்.

எத்தன பயனாளிகள்??

கார்ப்பரேட் ஸ்கூல்ல வேன்ல அடைஞ்சு போறவங்களுக்கு பஸ்பாஸ் மகிமை தெரியாதுதான்.,
ஆனா நிலக்கோட்டைலருந்து பஸ்பாஸ்லயே திண்டுக்கல் வரை வந்து படிச்சுட்டுத் திரும்பிப்போனவன்லாம்.. ??

மறந்துடலாமா??

மதிய உணவுத்திட்டத்துல ரெண்டு முட்டையப் போட்டு பேர மாத்தி பாரதரத்னா வாங்கத் தெரியலதான.. ஆம் கலைஞர் வேஸ்ட்ல?

நான் இஞ்சினியரிங் படிக்க முதல் வருஷ ஃபீஸுக்கே காட்டை வித்தோம்..

ஆனா எங்க சித்தி பையன் நோகாம படிச்சுட்டு வெளிய வந்தான்.முதல் நிலைப் பட்டதாரியா??

நாளைக்கு அவன் கூட நாம் தமிழராகவோ அதிரடி அனுமாராகவோ அதிமுக அடிமையாகவோ மாறி கலைஞரைத் துரோகின்னு சொல்லலாம்.

பழகிருக்கும் அந்தாளுக்கு...

சரி.,
இதெல்லாம் ஏதோ லைக்குக்கோ பொழுது போகாமலேயோ திமுக அபிமானிங்கறதாலயோ சொல்லல.

நம்மைப் போன்ற ஒரு சக மனுஷன்.,
ஒரு திறமைசலிக்கான அங்கீகாரம் அவனுக்குண்டான மரியாதை கடைசிவரை கிடைக்காமலேயே செத்துப்போன ஒரு சக உயிர் அப்டிங்குற ஆதங்கம்., வருத்தம்.. 😥😥😥😥

சென்டிமென்டல் இடியட்டாவே இருந்துக்கறேன். தப்பில்ல.

பி.கு 1: 2009 பொதுத்தேர்தல்லருந்து இப்ப வரை நான் திமுகவுக்கு ஓட்டுப் போட்டதில்லை.

பி.கு 2: இனியும் ஓட்டுப்போடுவதை அந்தந்த அரசியல் சூழலே தீர்மானிக்கும்.

பி.கு 3: கலைஞர் அங்கீகாரத்துக்கு ஏங்கிய குழந்தை. பாவப்பட்ட மனுஷன். வதந்திகளைக் களைந்து உண்மை உணர்வோம்.

மிஸ் யூ #கலைஞர் மாம்ஸ்

பகிர்விலிருந்து,

Friday, April 27, 2018

திமுக மீது தொடரும் வதந்தி

திமுக எம்.ஜி.ஆரினால் இரண்டாக உடைக்கப்பட்டதற்குப் பிறகு ஒரு பக்கம் பேச்சு, எழுத்து, நிர்வாகம் என அனைத்திலும் திறன்பெற்ற கலைஞர். இன்னொரு பக்கம் ஒரு இழவுக்கும் லாயக்கில்லாத மத்திய அரசின் அடிமை எம்.ஜி.ஆர். ஆனால் 1969-1976 வரையிலான கலைஞரின் ஆட்சியில் பாதிக்கப்பட்ட பார்ப்பனர்களும், மிராசுதாரர்களும் கலைஞருக்கு மாற்றாக எம்.ஜி.ஆரை தூக்கிவைத்துக் கொண்டார்கள். இந்த ஆளை விட்டால் கலைஞரை கவிழ்க்க முடியாது என்பதை புரிந்துகொண்டார்கள். காங்கிரசில் இருந்த மிராசுதாரர்கள் கூட எம்.ஜி.ஆர் பக்கம் தாவியதற்கு காரணமும் அதுதான். ஒருபக்கம் எம்.ஜி.ஆரை வள்ளல், தர்மப்பிரபு, ஏழைப்பங்காளன் என பரப்பினார்கள். மறுபுறம் கலைஞரை முறியடிக்க அவர்கள் கையில் எடுத்த ஆயுதம் அவரைப் பற்றிய பொய்யும், புரட்டும், வதந்தியும்.

1996 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சியின்போது ஒருநாள் கலைஞர் 16 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என திடீரென ஒருநாள் பரப்பினார்கள். பள்ளியில் இருந்த எனக்கு அது இன்னமும் பச்சையாக நினைவிருக்கிறது. இதுபோல் ஏராளமான வதந்திகளைச் சொல்லமுடியும். கலைஞரின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்லாது அவர் நிர்வாகத்தின் மீதும், ஆட்சியின் மீதும்கூட இப்படியான பொய்கள் தொடர்ந்து திட்டமிட்டுப் பரப்பப்பட்டன. சர்க்காரியாவில் தொடங்கி, அந்தப் பொய்களின் தொடர்ச்சி இன்று வாட்சப் காலத்தில் காவிரி விவகாரம் வரை தொடர்கிறது.

நேற்று ஒரு தோழி, "ஸ்டாலின் யாரையும் ரேப் பண்ணாரா முன்னாடி?" எனக் கேட்டார். "இல்லை. அது வதந்தி," எனக் கோபத்தோடு மறுத்தேன். இப்போது ஸ்டாலினையும் வதந்தி ஆயுதம் விட்டுவைக்கவில்லை.

போனவாரம் ஒரு நாம் தமிழர் ஜந்து ட்விட்டரில், "பாத்திமா பாபு... ஸ்டாலின்," என உளறினான். உடனே நான் நேரடியாக பாத்திமா பாபுவை டேக் செய்து, "மேடம் உங்கள் மீது அவதூறு சொல்லும் ஆட்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்," என எழுதியதும் வதந்தி பரப்பிய அந்தக் கிருமி ஓடிவிட்டது.

இதோ இன்று பாத்திமா பாபுவே பொறுக்கிகள் பலகாலமாக பரப்பிவரும் வதந்திக்கு, "முகநூல் லைவ் ஆடியோ," வில் மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதோடு பின்னூட்டத்திலும் மறுப்பை தெரிவித்தோடு, “பலமுறை சொல்லிவிட்டேன். ஆனாலும் அப்படிப் பரப்புகிறார்கள்,” எனப் புலம்பியும் உள்ளார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும், ஆட்சித்திறன் பற்றியும் சொல்ல ஆயிரம் உண்மைகள் இருந்தும் அது எதுவும் பேசப்படுவதே இல்லை. (யாராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அலசுவதில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும் ஒரு ஒப்பீட்டுக்காகச் சொல்கிறேன்) ஆனால் எதனால் இத்தனை ஆண்டுகாலமாக கலைஞர் மீதும், திமுக மீதும் வதந்திகளைப் பரப்புகிறார்கள்? அதை ஏன் பார்ப்பன ஊடகங்களும், சமூகநீதிக்கு எதிரான கயவர்களும் தொடர்ந்து சொல்லிச் சொல்லி உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள்? ஏனெனில் அவர்களின் ஒரே எதிரி திமுக. ’சோ’ சொல்லியதைப் போல தமிழின விரோதிகளின் பரம்பரை எதிரி திமுக மட்டும்தான்.

நான் இறுதியாகச் சொல்வது இதுதான். திமுக விமர்சிக்கப்படவே கூடாத கட்சி அல்ல. ஆனால் அதில் நேர்மையும், உண்மையும் வேண்டும். தயவுசெய்து பத்துபேர் சொல்கிறார்கள் என்பதற்காக ஒரு பொய்யை உண்மை என நம்பி பரப்பாதீர்கள்.
தமிழ்நாடு சீரழிந்தது சொல்லப்படாத உண்மைகளாலும், தொடர்ந்து சொல்லப்பட்ட பொய்களாலும் தான். நன்றி.

நன்றி -அசோக்.R (டான் அசோக்)
Don Ashok - Ashok.R

Thursday, April 26, 2018

அது அந்த காலம்

#oldmemories அந்த காலம் தான் நன்றாக இருந்தது....!

பேருந்துகுள் கொண்டுவந்து நாளிதழ்கள்  விற்பார்கள் .,

எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்..,

மிதி வண்டி வைத்திருந்தோம்.,

எம் ஜி ஆர் உயிரோடு இருந்தார்.,

கலைஞரின் அறிக்கைகளை தேடி படித்தார்கள்.,

எல்லா வீடுகளிலும் முதல் மரியாதை பாடல் ஒலித்தது.,

வானொலி நாடகங்களை ரசித்து கேட்டோம்.,

எல்லோரும் அரசு பள்ளிகளில் படித்தோம்.,

சாலையில் எப்போதாவது வண்டி வரும்.,

மழை நின்று நிதானமாக பொழியும்
,சாராய கடைகள் இருந்தன.,ஆனால் இன்றைய கூட்டம் அன்று என்றுமே இருந்ததில்லை.,

தமிழ் ஆசிரியர்கள் தந்நிகரற்று விளங்கினர்.,

வேலைக்கு போகாதவன் எந்த குடும்பத்திற்க்கும் பாரமாயில்லை.,

எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.,

வெஸ்ட் இன்டீசை வெல்லவே முடியாது.,

சந்தைக்கு போக பத்து ரூபாய் போதும்.,

முடி வெட்ட இரண்டு ரூபாய்தான்.,

பருவ பெண்கள் பாவாடை தாவணி உடுத்தினர்.,சிலின்டர் மூடுதுணி போல் யாரும் நைட்டி அணிய வில்லை.,

சுவாசிக்க காற்று இருந்தது.,குடிதண்ணீரை யாரும் விலைக்கு வாங்க வில்லை.,

தெருவில் சிருமிகள் பல்லாங்குழி ஆடுவார்கள். அவர்களை கலாய்த்துகொண்டே நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்.,

மயில் இறகுகள் குட்டி போட்டன,புத்தகத்தில்.,

ஐந்து ரூபாய் தொலைத்ததற்க்கு அப்பாவிடம் அடி வாங்கினேன் ..,

மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே,ஆங்கிலம்.,

ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால்
டவுசர்.,

கடந்து தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்..,

நம்பிக்கைகளும்தான்.., மொத்தத்தில் மரியாதை இருந்தது.

ப.பி

Monday, October 2, 2017

காமராஜர் நல்லவரா கெட்டவரா?

காமராஜர் நல்லவரா கெட்டவரா?

ஒன்பது ஆண்டு காலம் தமிழ்நாட்டை .. மன்னிக்க மெட்ராஸ் மாநிலத்தை ஆண்டவர் திரு.கு.காம்ராஜ்.
தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு பதிவு செய்தவரும், இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் போது அமைதி காத்தவரும், தேவிகுளத்தையும், பீர்மேட்டையும் கேரளாவிற்கு தாரை வார்த்தவரும், மேடாவது குளமாவது எல்லாம் இந்தியா வில் தானே இருக்கிறது என நக்கல் அடித்தவரும், நைசாக நாடார் வாழும் குமரியை மட்டும் தமிழக்கத்தில் சேர்த்தவரும், அரை காப்படி அரிசிக்கு மக்களை ரேசன் கடையில் தேவுடு காக்கவைத்தவரும், கச்சத்தீவு தாரைவார்ப்பின் முக்கியபுள்ளியும்,
தில்லிக்கு காவடி தூக்குவதில் ஸ்பெஷலிஸ்ட்டுமான திரு. கு. காமராஜை ஏன் கொண்டாட வேண்டுமென திராவிட இயக்கத் தோழர்கள் கேட்கலாம்?

நீதிகட்சியின் பி.டி.ராஜனுக்கு பிறகு, சுதந்திர(?) மெட்ராஸின் பிரதமரான முதல் தமிழர் என்ற முறையில் காம்ராஜைக் கொண்டாடுவது நமது கடமையாகவும் நமக்கே உரித்தான உரிமையாகவும் இருக்கிறது.
சமூகநீதியை மட்டுமே மூச்சாக கொண்டு செயல்பட்டுவந்த செயல்பட்டுவருகின்ற திராவிட இயக்கம், மாராப்பு கூட அணிய தடை விதிக்கப்பட்ட மேலாடை இல்லாத, தாலிக்கு வரி செலுத்திய, பெண்களின் முலைகளுக்கும் காம்புகளுக்கும் கூட வரி செலுத்திய ஒடுக்கப்பட்ட சமுதாயமான நாடார் இனத்தில் இருந்து ஒருவர் முதல்வராக வந்ததில் காங்கிரஸைக் காட்டிலும் நமக்கே பங்கு அதிகம்.  
"இந்த சாணாப்பய்ய காமராசு ராமர் ஆட்சி நடத்துவானு இவன கோட்டைல உக்கார வச்சா.. இவன் இராம்சாமி நடத்துறான்" னு சனாதன பிராமண கால்நக்கி முத்துராமலிங்கம் வயித்தெறிச்சலும் பொச்செறிச்சலும் கொண்டு கூட்டம் போட்டு கத்தியதில் காம்ராஜ் நடத்தியது வைதீக எதிர்ப்பு ஆட்சி என உங்களுக்கு மீண்டும் இங்கே நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
குலகல்வித்திட்டத்தை ரத்துசெய்தது, ராஜாஜி மூடிய பள்ளிகளை மீண்டும் திறந்தது, நீதிகட்சி நிறுவனர் சர் பி.டி.தியாகராயரின் மதிய உணவுத்திட்டத்தை தமிழகமெங்கும் விரிவுப்படுத்தியது அதன் மூலம் பள்ளிக்கு வரும்
பிள்ளைகளின் எண்ணிக்கை பெருக்கியது என திராவிட சிந்தாந்தங்களுக்கு காம்ராஜ் உயிரூட்டினார்.
"மாற்றான் வீட்டு மல்லிகை" என அண்ணா வியந்து பாராட்டும் அளவுக்கு வைதீக காங்கிரசில் பகுத்தறிவு சொத்தாக காம்ராஜ் இருந்தார் என பதிவு செய்வது கடமையாகிறது.
தி.கவினர் சேர்ந்துக்கொண்டு அண்ணா வை சிறுமைப்படுத்த காம்ராஜ் க்கு புனித பிம்பம் பூசினாலும்,
எந்த பா.ஜ.க காம்ராஜைக் கொள்ள முயன்றதோ அதே பா.ஜ.க வில் இன்று நாடார்கள் சேர்ந்துக்கொண்டு லூட்டி அடித்தாலும் அந்த சிவகாமி மகனை நாம் மறக்கலாகாது.
பதவிகள் ஏதும் இன்றி சாதா ப்ரஜையாக மறைந்த காம்ராஜ்க்கு அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்தவர் காம்ராஜரின் அந்திம கால அரசியல் வாரிசான கலைஞர் கருணாநிதி.
அவர் வாழ்ந்ததும் , வாழ்ந்து முடிந்ததும், முடிந்த பின்பு இன்று வரை நினைவில் வாழ்வதும் திராவிடத்தால் தான்! 

"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தலும்
ஆலயம் பதினாயிரம் நாட்டலும்
அன்னயாவினும் புன்னியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலே ! "

இர.பார்த்திபன்