தொகுப்புகள்

Search This Blog

Thursday, February 7, 2019

சுடலை என்கிற ஸ்டாலின்


ஆம் எங்கள் தளபதி சுடலை தான்!

ஸ்டாலின் என்கிற பொதுவுடமைத் தலைவனின் பெயரை தன் மகனுக்கு சூட்டினார் கலைஞர் கருணாநிதி! அந்தப் பெயரை பார்ப்பனர்கள் சிலர் ‘சுடலை’ என்று மாற்றி கேலியாக பேசிவருகின்றனர். அவர்களுக்கு ஒன்று தெரியாது.. சுடலை என்பது அவர்கள் நினைப்பது போல கேவலமான பெயர் அல்ல. அதுவும் வீரத்துக்கு அடையாளமான தமிழர்களின் சிறுதெய்வத்தின் பெயர் தான்! தமிழர்களின் குலதெய்வத்தின் பெயர்!

பார்ப்பனர்கள் தங்களுடைய வேத மதத்தை தமிழகத்தில் திணிக்கும் வரை தமிழர்கள் சிறுதெய்வங்களையே வணங்கினார்கள்.

முனியாண்டி, மதுரை வீரன், கறுப்பு, நொண்டி முனி, முத்துப்பட்டன், கொடலமாடன், சுடலமாடன் என்று நூற்றுக்கணக்கான சிறுதெய்வங்கள் தமிழர்களுக்கு உண்டு. ஊருக்கு ஆபத்து வந்தபோது யார் முன்வந்து தங்கள் உயிரையும் கொடுத்து மக்களைக் காப்பாற்றினார்களோ அவர்களுக்கு தமிழர்கள் சிலை வைத்து வணங்கினார்கள். கையில் அரிவாளுடன், குதிரையின் மேல் அமர்ந்து இருக்கும் இவர்களை தான் தமிழர்கள் தெய்வங்களாக கும்பிடுவார்கள். நாட்டார் வழிபாடு என்று பண்பாட்டு ஆய்வாளர்கள் இதனை குறிப்பிடுவார்கள்.

பின்னால், பார்ப்பனீயம் தமிழகத்துக்குள் நுழைந்து அவர்களுடைய பெருந்தெய்வங்கள் தான் உயர்ந்தது என்றும் காலங்காலமாக தமிழர்கள் வணங்கிவந்த நாட்டார் தெய்வங்களை சிறுமைப்படுத்தவும் தொடங்கினர்.

நாட்டார் தெய்வங்கள் எல்லாம் காட்டிற்குள் இருக்கும், ஊர் எல்லையில் இருக்கும், மக்களோடு மக்களாக இருக்கும். ஆனால், பார்ப்பனர்களின் பெருந்தெய்வங்களோ, பெரிய சுற்றுச்சுவருக்குள், உயர்ந்த கோபுரங்களின் கீழே இருக்கும். உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் அங்கு செல்வார்கள். நாட்டார் தெய்வங்களோ இன்றுவரை உழைக்கும் மக்களால் வணங்கப்படுகிறது, கொண்டாடப்படுகிறது.

நாம் நாட்டார் தெய்வங்களுக்கு ஆடு, கோழி படைப்பதைக் கூட பார்ப்பனர்கள் மோசமான பண்பாடுபோல சித்தரித்தார்கள். அசைவத்தைவிட சைவமே சிறந்தது, சைவ உணவு சாப்பிடுவோர் தான் உயர்ந்தவர்கள் என்றும் ஆக்கினர்!

இப்போது சிந்தித்துப் பாருங்கள். பார்ப்பனர்கள் ஏன் ‘சுடலை’ என்கிற சுடலமாடன் பெயரை கேலிக்குரிய பெயராகப் பயன்படுத்துகிறார்கள் என்பது நன்கு விளங்கும். தமிழர்கள் எப்படி ‘பார்த்தசாரதி’ என்கிற பார்ப்பனப் பெயரை கேலியாக பயன்படுத்துகிறோமோ அதற்கு பழிக்குப்பழியாக ‘சுடலை’ என்கிற பெயரை கேவலமாக்கப் பார்க்கிறார்கள்.

பார்ப்பனர்கள் ஸ்டாலினை ‘சுடலை’யாகத்தான் பார்ப்பார்கள். காரணம், அது தமிழர்களுடைய நாட்டார் தெய்வத்தின் பெயர். அதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், பார்ப்பனர்களுக்கு அடிமையாக இருப்பதற்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கித் தவிக்கும் அடிமைத் தமிழர்கள் சிலரும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு ‘சுடலை’ ‘சுடலை’ என்று கேலி பேசுகிறார்கள்! பார்ப்பனர்களின் காலை நக்குவதையே வரலாற்றுக் கடமையாகக் கருதி தமிழர்களின் குலதெய்வமான ‘சுடலைமாடனை’ கொச்சப்படுத்துகிறார்கள் சில அடிமைகள்!

மிகச்சிறந்த தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர் ஒருவர் தன்னுடைய நூலில் தமிழர்களின் குலதெய்வங்கள், நாட்டார் தெய்வங்கள் பற்றி இவ்வாறு எழுதினார்,

“The subaltern heroes invert the pre-existing power structure by appropriating different signs of authority of the elite…… They in their own ways turn the iniquitous world upside down and usurp those normally elusive signs of authority.”

ஏற்கனவே நிலவிவந்த அதிகாரபீடங்களை தலைகீழாகப் புரட்டிப்போட்டு, மேட்டுக்குடியிடம் இருந்து அதிகாரத்தைப் பெற்று சாதாரண உழைக்கும் மக்களுக்கு நல்லது செய்தவர்கள் தான் நாட்டார் தெய்வங்கள். அதில் ஒன்று தான் ‘சுடலைமாடன்’!

அந்த வகையில் பார்த்தால், சமஸ்கிருதம் தான் உயர்ந்தது, தமிழ் தாழ்ந்தது, சைவம் தான் உயர்ந்தது, அசைவம் தாழ்ந்தது, வைதீகம் தான் உயர்ந்தது, தமிழர்களின் வழிபாட்டுமுறை தாழ்ந்தது என்று சொல்லும் வஞ்சப் பார்ப்பனர்களின் கோட்டையைத் தகர்த்து, தமிழர்களின் உரிமையை நிலைநாட்டப் போர்க்களத்தில் நிற்கும் தளபதி ஸ்டாலின் எங்களுக்கு, உழைக்கும் மக்களுக்கு ‘சுடலை’ தான்!

எழுதியவர்: எழுத்தாளர் கருங்குயில்

No comments:

Post a Comment