தொகுப்புகள்

Search This Blog

Tuesday, October 26, 2010

தமிழன் - உலகின் ஒரு சிறந்த ஹீரோ

ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன்இவர் உலகப்புகழ்பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.ஒரு தமிழனாக, மிகவும் பெருமை படுகிறேன்இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது

   இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம்,LosAngeles இல் நடக்கும்ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள்இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்குநவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறதுஇதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும்,தமிழனும் பெருமை பட வேண்டும்

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்

வயது : 29

இருப்பு : மதுரை


அப்படி என்ன செய்து விட்டார்?

அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.

தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம்அருவருப்புடனும் கடந்து செல்வோம்சில சமயம் காசு போடுவோம்அதற்கும் மேல் என்ன செய்வோம்அதை மறக்கமுயற்சிப்போம்ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார்அருவருப்பில்லாமல் ஊட்டிவிடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார்மழை,புயல்,தேர்தல்,கலவரம்பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார்தினமும் 400 பேருக்குமூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லைஇது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள்விநியோகிக்கபட்டுள்ளது.
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்தவிருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர்சுவிட்சர்லாந்தில்ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்குவந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்றுஉணவு கொடுக்க ஆரம்பிக்கிறார்இது நடந்தது 2002. இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர்பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார்இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையைமுழுமையாக அர்பணித்துள்ளார்இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது,“அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க.நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார்.இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள்நான் உள்ளவரை உன்னைபார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார்இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்கமுடியாமல் தவித்தேன்எழுதும் இந்த கணமும் கூட.
சாகசம் செய்வது சாதனை அல்லஇல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள்பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.
ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்
http://www.akshayatrust.org/contact.php

Akshaya’s Helping in H.E.L.P. Trust

9, West 1st Main Street,

Doak Nagar Extension,
Madurai – 625 010. India

Ph: +91(0)452 4353439/2587104

Cell:+91 98433 19933

E mail : ramdost@sancharnet.in

ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள்நீங்கள்வோட்டு போடவேண்டிய இடம்.
இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்லஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம்இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

No comments:

Post a Comment