Saturday, October 16, 2010

"குடுசையில் மடிக்கணினி"

குடிசைகளே இல்லாத மாநிலமாக தமிழகம் மாறவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் 2010-ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் நாள் கலைஞர் இலவச வீடு வழங்கும் திட்டம் அனைத்துக் கட்சிப் பிரமுகர்களின் பங்கேற்புடன் தொடங்கப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளில் 21 லட்சம் நிரந்தர வீடுகள் கட்டப்பட்டு, குடிசைகளை முற்றிலுமாக இல்லாமல் செய்யவேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.
அதற்காக இன்று நாங்கள் அவிநாசி பகுதியில் சில குடுசைகளுக்கு சென்றபோத ஒரு .குடுசையயில் மடிக்கணினி (Laptop) வைத்து விளையாடிய சிறுவர்களை கண்டு வியந்தோம் ..
இன்றைய உலகில் மடிக்கணினி பயன்பாடு என்பது அதிகமாகி விட்டது. ஒவ்வொருவரும் தங்களது தேவைகள், விருப்பங்களுக்கு ஏற்ப கால அளவில் பயன்படுத்துகின்றனர். சிலர் இந்த மடிக்கணினியில் நீண்ட நேரம் செலவிடுவார்கள். அதை பயன்படுத்தாமல் அவர்களால் இருக்க முடியாது. அதற்கு அடிமையாகி போகிறார்கள். இது கிட்டதட்ட ஒரு போதை பழக்கம் போலத்தான். நங்கள் விசாரித்ததில் அச்சிறுவன் தினமும் சுமார் முன்று மணி நேரம் விளையாட்டுக்கள், மற்ற விஷயங்கள் என கணிணியிலேயே செலவிடுகிறான் என்றார்கள்.

No comments:

Post a Comment