Saturday, May 26, 2012

சந்தோஷ் சிவனின் - உறுமி


வாஸ்கோடகாமாவின் மரணத்தின் பின்னணியில் சந்தோஷ் சிவன் உருவாக்கியிருக்கும் ச‌ரித்திரப் படமான இதில் ஆரியா பிருத்விரா‌ஜ், ஜெனிலியா, பிரபுதேவா, பிந்து மாதவி, வித்யாபாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

வாஸ்கோ மூன்று முறை இந்திய வந்துசென்ற உண்மை நிகழ்வுகளை வைத்துக்கொண்டு கதை பின்னியிருக்கிறார் சந்தோஷ் சிவன்.வாஸ்கோவிடம் நம்பூதிரி தூதுக்குப் போகும்போது, அரசரின் மகன் ஒருவனும் கூடப் போகிறான். அரசன் என்றால் பெரிய அரசனெல்லாம் இல்லை. குறு மன்னன் போல. அந்த மன்னன் தன் மகனையும் நம்பூதிரியையும் காப்பாற்ற கப்பலுக்குச் செல்கிறான். அங்கேயே வாஸ்கோடகாமாவால் கொல்லப்படுகிறான். அவனது மகன் தப்பித்துவிடுகிறான். தப்பி கரைக்கு வரும்போது, கப்பலில் செத்துப் போனவர்களுக்கு இடையே ஒரே ஒருத்தி மட்டும் தங்கள் நகைகளை எல்லாம் கைகளில் ஏந்தி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறாள். அந்த நகைகளை வாங்கி அவற்றை உருக்கி ஓர் உறுமியாகச் செய்துகொள்கிறான். அது உறுமி மட்டும் அல்ல. அனைத்து மக்களின் உயிர் மூச்சு. அவனுக்கு உணவும் தங்க இடமும் அளித்து உதவுகிறான் ஒரு இஸ்லாமியத் தமிழ்ச் சிறுவன். இருவரும் வளர்ந்து எப்படி வாஸ்கோடகாமாவை எதிர்கொண்டார்கள் என்பது கதை.

இதன் விமசனம் அட்ராசக்க எழுத்துவார் என்று நினைத்தேன் ,, ஆனால் அவர் MIB க்கு எழுதிவிட்டார் ,
திராவிடத்தில் எனக்கு எப்பவுமே ஒரு ஆவல் உண்டு.
திராவிடத்தை பெருமையாக ட்ரைலரில் காட்டியதால் முதல் நாள் பார்த்தேன். மற்றபடி எனக்கு பெரிய சினிமா அறிவெல்லாம் கிடையாது ,

படம் நல்லாருக்கு நல்லா இல்ல என்றெல்லாம் எனக்கு சொல்லத்தெரியல ...முடிந்தால் படம் பாருங்க இல்லான வரும் நாட்களில் நம்ம தினத்தந்தி ,விகடன்,குமுதம்,விமர்சனகளை, அட அதைவிட நம்ம பதிவர்களின் விமர்சனங்கள் அருமையாக இருக்கும் படித்துகொள்ளுங்கள் .அம்புட்டுத்தான் ...


நன்றி வணக்கம் ........

4 comments:

  1. seems to be interesting story , let me try to watch

    ReplyDelete
  2. நீங்களும் உங்கள் பாணியில் படத்தினை விமர்சித்திருக்கலாம்.

    ReplyDelete
  3. உங்களுக்கு சினிமா அறிவு எவ்வளவு இருக்கோ அவ்ளோதான் அரசியல் அறிவும் .. இதுல எதுக்கு வேண்டாத வேலை .. ஊரு மக்களை ஏமாத்தி பிழைச்சா உங்க வாரிசுக்கு கேடு வரும் நல்ல யோசிச்சு செய்யுங்க மேடம் , அவ்வளவுதான் !!

    ReplyDelete
  4. நீங்கள் தன்மானமுள்ள தமிழச்சியாக இருந்தால் .. வீரபாண்டி ஆறுமுகத்தின் கைது பற்றியும் அவர்தம் குடிசை எரிப்பு சம்பவம் பற்றியும் விளக்கம் கொடுங்கள் பார்க்கலாம்

    ReplyDelete