தொகுப்புகள்

Search This Blog

Friday, January 21, 2011

தமிழ் யூனிகோட் ஒதுக்கீட்டில் ஆரிய சதி



கணினித்துறை, இணையம் இவற்றில் இந்திய மொழிகளிலேயே அதிக அளவில் வளர்ச்சி கண்டு வருவது தமிழ்தான். அதிலும் ஒருங்குறி எனப்படும் யூனிகோட் முறையில் தமிழ் எழுத்துகள் வந்தபிறகு எண்ணற்ற இணையதளங்கள் பழந்தமிழ் இலக்கியங்களை யும், புதிய படைப்புகளையும் கொண்டும் அறிவியல் கருத்துகளை எளிய தமிழில் தந்து வருகின்றன. இதை எவ்விதத் தடங்கலுமின்றி, உலகின் எந்த மூலையிலிருந்தும் எழுத்துரு (குடிவே) தடையின்றி படிக்கலாம்; எழுதலாம். கூகிள், விண்டோஸ் உள்ளிட்ட அனைத்து நிறுவனங் களும் யூனிகோட் தமிழை அங்கீகரித்து தங்களது மென்பொருள்களிலும் இவற்றை பயன்படுத்திவருகின்றனர். ஏற்கெனவே தமிழுக்கென உலக அளவி லான யூனிகோட் ஒதுக்கீட்டில் 128 இடங்கள் மட்டுமே கிடைத்திருந்தன. இதை அதிகப் படுத்தி தமிழ் எழுத்துகள் அனைத்துக்கும் இடம் கிடைத்தால் தான் எளிமையாகவும், வேகமாகவும் பணிகள் நடைபெறும் . இதற்காக யூனிகோட் சேர்த்தியத்திடம் (Unicode Consortium) கணினித் தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கெனவே தமிழ் எழுத்துகளுடன், வழக்கத்தில் இருக்கும் கிரந்த எழுத்துகளான ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் அறிஞர்களின் வேண்டுகோளுக்கேற்ப தமிழக அரசும் யூனிகோடு முறையை அங்கிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழ் எழுத்துகளுடன் புதிதாக சில கிரந்த எழுத்துகளையும் சேர்க்கும் முயற்சியை தமிழ் அறிஞர்களுக்கும், தமிழக அரசுக்கும் தெரியாமல் பார்ப்பனக் கும்பல் மேற்கொண்டுள்ளது. இவர்கள் சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள 26 கிரந்த எழுத்துகளை இதுவரை நாம் பார்த்திருக்க வாய்ப்பேயில்லை. தமிழுக்கு சற்றும் தொடர்-பில்லாத, தமிழ் எழுத்துகளுக்கும், தமிழ் எழுத்து முறைக்கும், இலக்கணத்திற்கும் எந்தத் தொடர்புமில்லாத சமஸ்கிருத (கிரந்த) எழுத்துகளைத் தமிழில் சேர்க்க வேண்டும் என்று கோரியிருப்பவர் யார் தெரியுமா? ஸ்ரீ ரமண சர்மா என்ற பச்சைப் பார்ப்பனர். அதற்கு அவர் எடுத்துக்காட்டியிருக்கும் ஆதாரம் எது தெரியுமா? காமகோடி கோஷாஸ்தனத்திலிருந்து சில வரிகள் மற்றும் டி.எஸ். நாராயண சாஸ்திரியின் போஜ சரிதம்'. இப்போது புரிந்திருக்குமே இந்தச் சூழ்ச்சி வலையின் சூத்திரதாரிகள் யாரென்று! சந்தேகமேயில்லாமல் சங்கரமடத்தின் கைகள் தான் இதன் பின்னால் ஒளிந்திருக்கின்றன. காமகோடி பீடத்தைச் சேர்ந்த ஆயுர்வேதக் கல்லூரியும், சமஸ்கிருதக் கல்லூரியும் ஸ்ரீரமண சர்மாவின் பின்னணியில் இருந்து கிரந்த எழுத் துகளை தமிழ் என்று இணைக்க முயற்சிக் கின்றன. தமிழ் மொழிக்குடும்பம் வேறு! ஆரிய சமஸ் கிருத மொழிக்குடும்பம் வேறு! இரண்டின் எழுத்துகளும், அதற்கான முறைகளும், ஒலிப்புகளும் வேறானவை. ஆனால் இப்போது எடுக்கப்பட்டிருக்கும் இந்த முயற்சி வெற்றி பெற்றால் இனி வரும் காலத்தில் தமிழுடன் இந்த 26 கிரந்த எழுத்துகளும் இணைந்தே இருக்கும். வளர்ந்துவரும் இணையத் தமிழ் தான் அடுத்துவரும் அத்தனை தலைமுறைக்கும் தமிழின் அடிப்படையாக இருக்கப்போகிறது.


"இது நீண்டகாலச் சதி. இந்த யூனிகோட் சேர்த்தியம் என்பது பன்னாட்டு நிறுவனம். அதன் சட்ட திட்டங்கள் ஓட்டை உடைசல் களைக் கொண்டன. யார் வேண்டுமானாலும் எந்த மொழியிலும் இன்னின்ன மாற்றங்கள் வேண்டும் என்று சொல்லி எழுதிக் கொடுக்கலாம். அதற்கு உள்ளேயும் தொடர்பிலேயும் சற்று வேண்டியவர்கள் இருந்தால் ஒரு மொழிக்கு என்ன கேடுகளை வேண்டுமானா லும் செய்யலாம். இதைப் பயன்படுத்தி ஆரிய நரிகள் சமஸ்கிருத எழுத்துகளை உள்நுழைக்கப் பார்க்கின்றனர். இதற்கு தமிழ்ப்பற்றாளர்களும், மிக முக்கியமாக தமிழக அரசும் கடுமையான கண்டனத்தையும், மறுப்பையும் உடனடியாகப் பதிவு செய்யவேண்டும். அக்டோபர் 25-ஆம் தேதி யூனிகோடு சேர்த்தியம் சர்மாவின் முன்வைப்பைப் பரிசீலனைக்கு எடுக்கிறது, கடந்த இரண்டுநாட்களில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இது குறித்து யூனிகோடு நிறுவனத் திற்கு தொடர்ந்து எழுதி முடிவு எடுப்பதை சில நாட்கள் தள்ளிப் போடும்படி செய்துள்ளனர். அதற்குள்ளாக போர்க்கால வேகத்தோடு இதனைக் கவனத்தில் எடுத்து தமிழக அரசு செயல்பட வேண்டும்" என்கிறார் தமிழ் கணினி வல்லுநரும், இப்பிரச்சினையை உலகறியத் தந்துள்ளவருமான நாக.இளங்கோவன். இது குறித்து உத்தமம் (INFITT) அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், இப்பிரச்சினை குறித்து அறிந்து செயல்பட்டுவருபவருமான நா.கணேசன் அவர்களின் தொடர்பு கொண்ட-போது, "இச்சிக்கலை உத்தமம் சார்பில் எடுத்துவைத்து எங்களது பரிந்துரையையும் அனுப்பியுள்ளோம்" என்றார். தமிழ்க் கணினித்-துறையில் முக்கியமானவரும், கணித்தமிழ் சங்கத்தில் பங்காற்றுபவருமான மா.ஆண்டோ-பீட்டர் அவர்களிடம் கேட்டபோது, "இது கண்டிப்பாக கண்டனத்திற்குரியது." என்று கருத்து தெரிவித்தார். மேலும், சங்கரமடத்தின் இந்தச் சதிக்கு எதிராக தமிழ்க்கணினித் துறை இளைஞர்களும், தமிழார்வலர்களும் கடும் போராட்டங்களில் ஈடுபட எண்ணியிருப்பதாக வும் தகவல்கள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. இப்படி தமிழ் அறிஞர்களின் கடும் எதிர்ப்புக்கிடையில் காஞ்சி காம'கேடி'களும், பார்ப்பனர்களும் தமிழைச் சிதைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருப்பது கவனத்திற்குரியதாகும். இது குறித்து எச்சரிக்கையுடன் இருந்து தமிழைக் காக்க வேண்டியது மிக அவசரமாகும். தமிழை அழிப்பதில் ஆரியம் எவ்வளவு முனைப்பு காட்டுகிறது என்பதை தமிழர்கள் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.

நன்றி -உண்மை 

No comments:

Post a Comment