தொகுப்புகள்
- தொகுப்பு (199)
- வரலாறு (181)
- அரசியல் (164)
- கட்டுரை (78)
- வாதம் (40)
- அனுபவம் (32)
- கல்வி (27)
- கடவுள் ? (26)
- பயணம் (26)
- சினிமா (21)
- ஈழம் (17)
- வாழ்த்துக்கள் (17)
- கலைஞர் (16)
- ஜெயா (12)
- கவிதை (11)
- பகுத்தறிவு (8)
- நாங்கள் (7)
- புகார் மனு (7)
- ஜெயலலிதா (6)
- கல்லூரி (4)
- சமூகம் (4)
- அறிவியல் (3)
- ஆன்மீகம் (3)
- காதல் (3)
- தமிழ் (3)
- தொகுப்பு கட்டுரை வரலாறு (2)
- பெரியார் (2)
- பொருளாதாரம் (2)
- மருத்துவம் (2)
- Body language (1)
- அரசியல் தொகுப்பு வரலாறு (1)
- ஆய்வு (1)
- உணவு (1)
- கடவுள் (1)
- கட்டுரை அரசியல் சமூகம் தொகுப்பு (1)
- கட்டுரை தொகுப்பு அரசியல் வரலாறு (1)
- கட்டுரை தொகுப்பு வரலாறு (1)
- கருத்து (1)
- காமம் (1)
- சமுகம் (1)
- திராவிடம் (1)
- தொகுப்பு கட்டுரை அரசியல் வரலாறு (1)
- தொகுப்பு வரலாறு அரசியல் (1)
- தொடர் (1)
- நாத்திகம் (1)
- மதம் கடவுள் (1)
- மொழி (1)
- வரலாறு கட்டுரை சினிமா அரசியல் (1)
- வரலாறு தொகுப்பு அரசியல் கட்டுரை (1)
- விஞ்ஞானம் (1)
Search This Blog
Friday, June 7, 2024
நீங்கள் யார் பக்கம் ? மோடியா ராமரா ?
Sunday, April 21, 2024
காட்ட வித்து கள்ளு குடிச்சா கவுண்டனா?
பல லோ கிளாஸ், லோவர் மிடில் கிளாஸ் குடும்பங்கள் மிடில் கிளாஸ் மற்றும் ஹையர் கிளாஸாக உயர்ந்தது அந்த சமயத்தில்தான் .. பிறகு எம்ஜிஆர் அதிமுக ஆரம்பித்தவுடன் பல பேர் பிரிந்து சென்று அதிமுகவில் இணைந்தார்கள்.. மீதமிருந்தோர் மதிமுக பிரிந்த போது மதிமுகவில் சேர்ந்தார்கள்... இது நான் விசாரித்து கேள்விப்பட்ட அரசியல்.. 1996 க்கு பிறகு நான் நேரடியாக அனுபவ பூர்வமான அரசியலை சொல்கிறேன் கேளுங்கள்..
மதிமுக செல்ஃப் எடுக்காது என்று தெரிந்தவுடன் மதிமுகவில் இருந்த என் தூரத்து உறவினர்கள் சிலர் தீவிர மதிமுகவிலிருந்து வேறு பல கட்சிகளுக்கும் தாவினார்கள்.. அதில் சிலர் திமுகவிற்கும் வந்தார்கள்..
பிறகு கேப்டன் விஜயகாந்த் தேமுதிக அறிவித்தபோது அவர்களே அதற்கும் சென்றார்கள்.. தேமுதிக ஆரம்பித்து சில நாட்களிலேயே கொங்குநாடு முன்னேற்ற கழகம் துவக்கப்பட்டது ..நம்ம சமூகத்திற்கு இன்று ஒரு கட்சி வந்துவிட்டது ஆகவே அதை நாம் ஆதரிக்க வேண்டும் என்று பல பேர் பல கட்சிகளில் இருந்து விலகி கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்கள்..
கருமத்தப்பட்டியில் மிகப்பெரிய மாநாடு நடத்தப்பட்டது .. பிறகு பெஸ்ட் ராமசாமி, ஈஸ்வரன், நாகராஜ் தனித்தனியாக பிரிந்தது கட்சில் பிளவை ஏற்படுத்தியது.. நாட்கள் கடந்தன. ஜெயலலிதா மறைந்தார். அதிமுக எடப்பாடியின் கையில் வந்தவுடன் நம்ம ஜாதியில் ஒரு முதல்வர், அவரையே ஆதரிப்போம் என்று அதிமுகவை ஆதரிக்க துவங்கினார்கள். சில தீவிர ஜாதி வெறியர்கள் எடப்பாடியை கடுமையாக எதிர்த்தார்கள்.
அதற்கு அவர்கள் சொன்ன காரணம் தான் விந்தையானது.. கள்ளச்சி கால்ல விழுந்தவனெல்லாம் கவுண்டனே இல்ல என்றார்கள்..
(இந்த இடம்தான் மனச தேத்திக்க வேண்டிய இடம் சிரிக்காம படிக்கவும்)
தற்போது அந்த இரு பிரிவுகளிலும் இருந்து ஒரு குரூப் நம்ம ஜாதியில் ஒரு பிரதமர் வேட்பாளர் கிடைத்துவிட்டார். ஆதலால் அவரை ஆதரிக்க வேண்டும் என்று அண்ணாமலை பின்னாடி சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்..
இவர்களில் ஈமு கோழி, ஃபைன் பியூச்சர், மை வி3 என எளிதாக பணம் சம்பாதிக்க நினைத்து பணத்தை இழந்தவர்கள் .. கொஞ்சம் வசதி வாய்ப்பு வந்துவிட்டால் பேராசையும், சுயநலமும் கூடவே வந்துவிடும் போல் தோன்றுகிறது.. பொருளாதாரம் உயர அறிவும் கல்வியும் உயர வேண்டும் ..
எனக்கு தெரிந்த வகையில் வெகு சில கவுண்டர்கள் மட்டுமே தீவிர கொள்கை பற்றாளராக நீண்ட நெடுங்காலமாக திமுகவில் இருக்கிறார்கள்..
நான் இங்கே குறிப்பிட்டது பொதுவாக அனைவரையும் அல்ல, பெரும்பாலானவர்கள், தான் உண்டு தன் வேலை உண்டு என்று பெரிய அரசியல் ஆர்வம் இல்லாமல் காத்தடிக்கும் பக்கம் சாயும் அப்பாவிகளாகவே இருக்கிறார்கள்.. தற்போது பொள்ளாச்சியிலிருந்து ஒரு இட ஒதுக்கீட்டால் பயன் பெற்ற பெண் பேசிய ஆடியோ வைரலானது..
ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் சமூகம் தன் அடுத்த தலைமுறையை அன்னியனுக்கு அடமானம் வைத்து விடும் என்பதுதான் வரலாறு..
சரியான வரலாற்றை படியுங்கள் பகுத்தறிவோடு செயல்படுங்கள்.. நன்றி ..