தொகுப்புகள்

Search This Blog

Thursday, December 21, 2017

உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்... - 2

வணிக நூலகம்: உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்...

தன்னை தானே அறிந்துக் கொள்வது என்பது நாம் நினைப்பதைக் காட்டிலும் மிகவும் கடினமான விஷயம். நம்மை நாமே அறிந்து கொள்வதற்கு பல்வேறு வகையான புறக்காரணிகளும், நம்முள்ளே இருக்கும் பல்வேறு வகையான காரணிகளும் காரணமாக அமைக்கின்றன. என்னை யாரும் புரிந்துக் கொள்ளவில்லை என்று குறைச் சொல்வதை விட அதை எதிர்க்கொள்வது மேலானதாகும்.

அதேபோல நாம் மற்றவரை சரியாக புரிந்துக் கொள்ளுவதில்லை என்ற குறைபாடும் புரிதலுக்கு எதிராகிறது. நாம் ஏன் மற்றவர்களை தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது புரிந்து கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு பலவாறான பதில்கள் இருக்கலாம்.

ஆனால், அவற்றுள் மற்றவர்களின் மனப்பாங்கு, எண்ணம், குணாதிசயங் களை அறிந்துக் கொள்ளுதல் ஆகியவை மிகவும் பயனுள்ளது. அவ்வாறு அறிந்துக் கொள்ளும் பொழுது அடுத்தவர் பற்றிய நம் புரிதல் மிகச் சரியானதாக இருக்கும். தவறான கண்ணோட்டம், குறைபாடுள்ள அணுகுமுறைகள், சிறிய தவறுகளை பெரிதுபடுத்துதல், அதிக எண்ணிக்கையில் குறைபாடுகளை மட்டுமே பூதாகரமாக்குதல் ஆகியவை அடுத்தவர்களை பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு தடைக் கல்லாக உள்ளது. இந்த தடைகளை தாண்டி வருவதற்கு முதலில் நம்மே நாமே சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும்.

புரிதல் அவசியம்

அந்த புரிதல் இருந்தால் மற்றவர்கள் பற்றிய புரிதல் எளிதாகும். மற்றவர்களைப் போல மனமும் அவர்களை போன்ற அளவான நேரம், குறைவான சக்தி ஆகியவைகளைதான் நாமும் பெற்றிருப்பதாக நினைக்கிறோம். அந்த நினைவில் அவர்களை போலவே குறுக்கு வழியில் வெற்றிக்கான வேகநடை பயில்கிறோம். விளைவு, நாம் மற்றவர்களில் இருந்து வேறுபட்டவர்கள் நம்முடைய நேரம், சக்தி மற்றும் மன வலிமை ஆகியவை நம்மை மற்றவர்களில் இருந்து வேறுபடுத்திக்காட்ட முடியாமல் போகிறது. அது போன்ற நேரங்களில் இருட்டில் கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் விழுகின்றோம். உலகமே நமக்கு எதிராக இருப்பதாகவும், உலகில் உள்ள அனைவரும் நம்மை எதிர்ப்பதாகவும் மனதில் ஆழமான கருத்துகளை ஏற்படுத்திக் கொள்கின்றோம். மாறாக, நாம் செய்வதை திருந்தச் செய்யும் பொழுது நம்மை பற்றிய புரிதல் நமக்கு ஏற்படுகிறது. இந்த உணர்வு நம்மை புரிந்து கொள்வதற்கு எதிரான போரில் பாதி வெற்றியை கொடுத்து விடுகின்றது.

குறைகளைத் தெரிந்து கொள்ளும் பொழுது முன்பே எடுத்த முடிவுகளையும், கண்ணோட்டங்களையும் அடிப்படை யாக வைத்து முடிவுகளை மேற்கொள் கின்றோம். மாறாக, அதுபோன்ற செயல்களை தவிர்த்து அடியோடு அழித்து புதிய எண்ணங்களை பயிர் செய்தல் அவசியம்.

நம்மை பற்றிய மற்றவர்களின் புரிதல்

நாம் குழப்பமான படைப்பு, பல உருவங்களாக இருக்கின்றோம். ஒவ் வொருவரிடமும் ஒவ்வொரு வகையாக நடந்து கொள்கின்றோம். நண்பர்களிடத் தில் நடந்து கொள்வதை போல பணியிடத் தில் நடந்து கொள்வதில்லை. பணியிடங் களில் நடந்து கொள்வதை போல குடும்பத்தில் நடந்து கொள்வதில்லை. இந்த பல்வேறு பல ஒருவன்கள் நம்மை மற்றவர்கள் புரிந்துகொள்வதில் குழப் பங்களை ஏற்படுத்துகின்றது. மற்றவர் களிடம் பேசிக்கொண்டிருக்கின்றோமா அல்லது நம்மை நாமே பார்த்துக் கொண்டிருக்கின்றோமா என்பதில் தெளிவு இருப்பதில்லை. உண்மையில், மற்றவர்கள் நம்மை சரியாக புரிந்து கொள்வதில்லை, தவறான மதிப்பீடு செய்கிறார்கள் என்றெல்லாம் எதை வைத்துக் கூறுகின்றோம். உண்மையாக இருப்பது எளிதான காரியம் அல்ல.

தன்னை பற்றிய புரிதல்

மற்றவர்களை பார்க்கும் பொழுது அனைவரையும் பற்றிய ஒருமித்த கருத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. அதேபோல நண்பர்கள், குடும்பத்தினர், உடன் பணிபுரிபவர்கள் அனைவரும் ஒருவரை புரிந்துகொள்ளவில்லை என்றால் தவறு மற்றவர்களிடம் அல்ல தனிமனிதனிடமே. அவ்வாறு அனைவரும் தவறாக கூறும் பொழுது அந்த கருத்துகளை சரி பார்த்து நம்மிடம் இருக்கக்கூடிய குறைபாடுகளைக் களைய வேண்டும். தன்னை தானே அறிந்துக் கொள்வதும், மற்றவர்களை அறிந்து கொள்ளுவதும் மனிதர்களுக்கு மிகுந்த கடினமான செயல். ஏனென்றால், மற்றவர்களுடைய வார்த்தைகளும் செயல்களும் சிக்கலானதாக இருக்கும். பல அர்த்தங்களையும், விளக்கங்களையும் அளிப்பதாக இருக்கும். அவற்றை சீர் தூக்கி பார்த்து புரிந்து கொள்வது மிகவும் கடினமான செயல். இதை உணர்ந்து கொள்ளாமல், காணும் காட்சிகளிலும் பேசும் பேச்சுகளிலும் எந்த விதமான முயற்சிகளும் இல்லாமல் தொடர்பே இல்லாமல் பங்கு கொள்கின்றோம். மற்றவர்கள் நம்மை தவறாக புரிந்து கொள்வதற்காக அவர்களை பழித்து பேசக் கூடாது. மாறாக நம்மை சரியாகப் புரிந்து கொள்ள வசதியாக சுலபமான முறையில் நம்மை வெளிப்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு மற்றவர்கள் நம்மை எளிதாக புரிந்துக் கொள்ள கீழ்கண்ட செயல்கள் உதவும்.

 நிதானமான செயல்பாடு

 நேர்மைக்கு தலை வணங்குதல்

 நிகழ்வுகளை தொடர்புபடுத்தாமல் தனித்தனியாக பார்த்தல்

நிதானமான செயல்பாடு

பார்த்தவுடன் தீர்ப்பு எழுதாதீர்கள். முதல் பார்வையில் சரியான நபரை மிகவும் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம். போகப் போக அந்த நடத்தைக்கு விளக்கங்களும், சப்பைக் கட்டுக்களும் நிதானமாக வந்து சேரும். எந்த சூழ்நிலையில் ஒருவர் அவ்வாறு நடந்துக் கொள்கிறார்கள் என முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சூழ்நிலைகளின் தாக்கங்களை புரிந்து கொண்டால் மனிதர்களைப் புரிந்து கொள்வது எளிதாகும். உதாரணமாக, ஒருவர் மிகவும் படபடப்போடும், பயத்தோடும் கேள்விகளுக்கு பதில் கூறும்பொழுது முரட்டுத்தனமானவன் என்றோ, முட்டாள் என்றோ முடிவுக் கட்டக் கூடாது. மாறாக வேறொரு சூழ்நிலையில் அந்த தவிப்பும், தாக்கமும் இல்லாமல் சாதாரணமாக நடந்து கொள்வதற்கு வாய்ப்புகள் அதிகம். அந்த நேரத்தில் முதலில் நாம் தவறாகப் புரிந்துகொண்டதை தொடர்ச்சியாக வேறு சூழ்நிலைகளுக்கு பொருத்திப் பார்க்க கூடாது.

நேர்மைக்கு தலை வணங்குதல்

நேர்மையான முறையில் மற்றவர் களை புரிந்துகொள்வது அவசியம். நேர்மையான முறையில் மற்றவர்களை புரிந்துகொள்ள முயற்சிக்கும் பொழுது, நாம் எந்த வகையில் அவரிடம் தொடர்பு வைத்திருக்கிறோமோ அதைப் பற்றிய சிந்தனை மேலோட்டமாக வரும். ஆழ்மனதில் இருக்கக்கூடிய அவரைப்பற்றிய குறைகள், தற்போதைய நிகழ்வை பின்னுக்குத் தள்ளி அவரை தவறான நபராக பார்ப்பதற்கு தூண்டும். இதை தவிர்த்தலே நியாயமாகவும், நேர்மையானதாகவும் நடந்துகொள்ளு தல் ஆகும். நியாயமாகவும், நேர்மையாக வும் நடந்துகொள்ள வேண்டும் என்று என்று நினைக்கிற பொழுது மற்றவர் களைப் பற்றிய நம்முடைய கணிப்பில் தவறுகள் குறைவாக இருக்கும்.

நிகழ்வுகளை தொடர்பு படுத்தாமல் தனித்தனியாக பார்த்தல்

ஒருவரை பற்றி ஒரு கருத்தை முன்னரே முடிவு செய்துவிட்டு, அவரையோ அவரைப் போன்றவரையோ பார்க்கும் பொழுது நம்முடைய கருத்து சரியானது என்று எண்ணுவது தவறு. இது எல்லா சூழ்நிலைகளிலும், முடிவு எடுப்பதிலும், புரிந்து கொள்வதிலும் தவறுகளை ஏற்படுத்தும். உதாரணமாக, ராஜேஸ் மற்றும் நிர்மலா இரண்டு பேரில் யாரை தலைமை மேலாளராக தேர்வு செய்வது என்ற சூழலில் நிர்மலாவிற்கு அந்த அளவிற்கு நிகழ்வுகளை கையாளும் திறனும் கருத்து பரிமாறும் திறமைகளும், தெளிந்த அறிவும் இல்லாததால் ராஜேஸ் தேர்வு செய்யப்படுகிறார். இதில் பிரச்சனை என்னவென்றால் நாம் நிகழ்வுகளை தொடர்புபடுத்தி நிர்மலா போன்ற பெண்ணால் கடினமான முடிவுகள் எடுக்கமுடியாது, கருத்துகளை ஓங்கி கூற முடியாது, குழப்பம் கூடுதலாக இருக்கும் என்று வேறு ஏதோ ஒரு நிகழ்வில் உள்ள காரணிகளை இங்கு தொடர்பு படுத்துவதால் முடிவுகள் தவறாக அமைக்கின்றன. புரிதலில் தவறுகள் கூடுகின்றன.

நூலில் கூறப்பட்டுள்ள கருத்துகளை படிக்கிறபோது, இதெல்லாம் தெரிந்த செய்திதானே என்ற எண்ணம் தோன்றும். ஆனால் இவற்றை ஆழ்மனதில் எழுதி வையுங்கள். அடுத்த முறை உங்களை பற்றியோ, மற்றவர்களை பற்றியோ புரிந்துக் கொள்ள வேண்டிய சூழலில் நிதானமான செயல்பாடு, நேர்மைக்கு தலை வணங்குதல், நிகழ்வுகளை தொடர்புபடுத்தாமல் தனித்தனியாக பார்த்தல் ஆகியவை உங்களுக்கு உதவும். என்னை யாரும் சரியாக புரிந்து கொள்வதில்லை மற்றவர்களை பற்றிய என்னுடைய புரிதல் தவறானதாக இருக்கின்றது என்ற கருத்தை இத்தோடு ஆழ்மனதில் இருந்தும் அழித்துவிடுங்கள்.

- ஆர்.வேங்கடபதி
 

உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால் - 1

"தன்னை அறிதல்””  என்பது எல்லா ஞானத்துக்கும் எல்லா வெற்றிக்கும் திறவுகோலாக முன்னோர்களும் சொன்னார்கள்.இப்போதும் அதுவே முன்னிறுத்தப்படுகிறது.ஆயினும்  “தன்னை அறிதல்”” என்பது குறித்து விதவிதமான விளக்கங்களும் வியாக்கியானங்களும் நாள்தோறும் புதிதுபுதிதாக முளைத்த வண்ணம் உள்ளது.ஒவ்வொன்றுக்கும் அதற்கே உரிய நோக்கங்களும் இலக்குகளும் உண்டு.வாழும் கலையைச் சொல்லித்தர குருஜிகளும் உண்டு. அவர்களுக்கு பெரும் தட்சணை தருவதும் உண்டு.சுயமுன்னேற்ற வழிகாட்டிகளும் கூட நவீன சாமியார்களாய் மாறி;“யோகா,தியானம் மூலமே தன்னை ஒருமுகப்படுத்தி வெற்றி இலக்கை நோக்கிச் செலுத்தமுடியும்””என அறிவுரைகளை அள்ளிவிடுகின்றனர்.

 

“நீ எதுவாக நினைகிறாயோ அதுவாகவே மாறுவாய்”என்று மூளையில் ஒருவித  கருத்துப் பதியம் செய்யப்படுகிறது.”துன்பமும் நீதான். இன்பமும் உன்னிடம்தான்.பிரச்சனையும் நீதான். தீர்வும் நீதான்”.எனவே ஒவ்வொருவரும் தன்னை அறிவதுதான் வெற்றியின் முதல்படி” என்று தொடர்ந்து எல்லோராலும் வலியுறுத்தப்படுவது சரியா?“ஆம்””என்றால் நான் ஏமாற்றுகிற திருக்கூட்டத்தில் சேர்ந்தவனாகிவிடுவேன்.”“இல்லை””என்றால் ஒரு வாசலை அடைத்தவனாகிவிடுவேன். “சரி, சரி நீங்களும் உங்கள் பங்குக்கு குழப்புங்கள்””என்று நீங்கள் கூறுவது காதில் விழுகிறது.ஆயினும் இப்பிரச்சனையில் சற்று நிதானமாகவே பேசவேண்டியுள்ளது.ஏனெனில் இது பெரும் தத்துவத்தை உள்ளடக்கிய ஒரு விவாதமால்லவா?

 

“பறவையைப் பார்த்து பறக்க ஆசைப்பட்டான். அந்த ஆசைதானே விமானத்தைக் கண்டுபிடிக்க உந்துசக்தியானது?””இப்படி கேள்வியை சொடுக்கினார் நண்பர்.நான் பதில் சொன்னேன்,” “ஆம்,ஆனால் அதில் புதைந்துள்ள உண்மை வேறு.ரைட் சகோதரர்கள் பறக்க ஆசைப்பட்டதும் உண்மை,ஆயினும் அந்த ஆசையினால் மட்டுமே அவர்கள் வெற்றிபெற வில்லை.அதற்கு முன்பு பலர் ஆசைப்பட்டு,கனவு கண்டு பல முறை முயற்சித்தனர்.இம்முயற்சியில் தோற்றவர் எராளம்.அதில் உயிரை இழந்தவர்கள் ஏராளம்.அவர்களின் தோல்விகள்,அனுபவங்கள் இவற்றை உள்வாங்கி முயன்ற போது.வெற்றி சாத்தியமானது””

 

 “ரைட் சகோதரர்கள் ஆசைப் படாமல்,கனவுகாணாமல் அது கைக்கூடியிருக்குமா?””என எதிர் கேள்விபோட்டார். “”நீங்கள் சொல்வது ஒருவகையில் சரி ஆசை முயற்சியின் தொடக்கம்.அதே சமயம் சூழல் அதற்கேதுவாய் அமையின் மட்டுமே சாத்தியம்.பறக்க வேண்டும் என்ற மனிதனின் கனவு ஒரு நாளில் கைகூட வில்லை அது பலநூற்றாண்டுக் கனவு.தொடர் முயற்சி,தொடர் கண்டுபிடிப்புகள் இவற்றின் கூட்டுத்தொகையாய் கிடைத்ததுதான் விமானம்.இதில் ரைட் சகோதரர்கள் பங்கையும் மறுதலிக்கக் கூடாது.அதேபோல் அதற்கான சூழலையும்-முன்னர்கூறியதையும் மறுதலிக்கக் கூடாது.””என்பதிலில் நண்பர் திருப்ப்தி அடையவில்லை.அதுவும் நல்லதே.திருப்தியின்மையே தேடலுக்கு வழிவழிகுக்கும்.

 

“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்”” என்றார் வள்ளுவர். எண்ணம்போல் வாழ்க்கை என்பதையும் நினைவில் கொள்ளவும். “வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு”” என்ற திருக்குறளை நம் நாட்டின்  குடியரசுத் தலைவராக இருந்த  ஏ.பி.ஜே. அப்துல் கலாம்  அடிக்கடி கூறுகிறார்.“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணிய ராகப் பெறின்””என்னும் வள்ளுவர் வாக்குப்படி, வலுவான எண்ணங்கள் வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும்.இப்படி நண்பர் கூறினார்.நான் உண்மையைத் தேடத் துவங்கினேன்.

 

நண்பர்  கருதுவதில் பெரும் குற்றம் சொல்ல விரும்பவில்லை ஆனால் தனிநபர் முயற்சி சார்ந்த விஷயங்களில் நாம் எதையும் வற்புறுத்த விரும்பவில்லை என்பதோடு என்பணிமுடியவில்லை.அதற்கும் மேல் சமூகம் சார்ந்த பார்வையை மறந்துவிடக்கூடாது என்பதுதான் என் கருத்து.அப்துல் கலாம் மேற்கோள்காட்டும் குறளையே சரியா பொருள் கொண்டால் நான் சொன்னது சரி என்றாகிவிடும்.ஆம்.நீரில் மிதக்கும் தாமரை,அல்லி போன்ற செடிகளின் உயரம் நீரின் மட்டத்துக்கேற்ப இருக்கும்.அதுபோல் உள்ளத்துக்கேற்ப அமையும் உயர்வு.ஆம்,அது சரி,வெள்ளத்தின் உயரம் மழையைப் பொறுத்து, கரையின் உயரத்தைப் பொறுத்து,கரையின் வலுவைப் பொறுத்து இப்படி பல காரணங்களால் அமையும்,அது போல் உன் வாழ்க்கைச் சூழல், சமூகச்சூழல் சார்ந்தே உன் எண்ணம் சமையும் என்பதை மறந்து விடாதே.அகச்சூழலும் புறசூழலும் பொருந்திப்போகும் போதே விரும்பிய மாற்றங்கள் கைகூடும்.அதைத்தான் மார்க்ஸ் சொன்னார்  “உன் எண்ணங்கள் சமூகச்சூழலை தீர்மானிப்பதில்லை.மாறாக சமூகச் சூழலே உன் எண்ணங்களைத் தீர்மாணிக்கிறது”.”

 

 “யோகாவும் தியானங்களும்” தனி மனிதனின் உள்ளத்தின் பதற்றத்தைத் தணிப்பதில் ஒரு பங்கு வகிக்க முடியும் ஆனால் அது மட்டுமே தீர்வல்ல.  “யோகா,தியானம்,மரக்கறி உணவுப் பழக்கம்”இவை அறிவுக்கூர்மையோடும் ஆன்மீகத்தோடும் இணைத்துப் பேசப்படுவது ஏற்கத்தக்கதா? இல்லை என்பது என் கருத்து.யோகா எனும் மூச்சுப்பயிற்சியும் அதோடு சேர்ந்த உடற்பயிற்சிகளும் கடவுள் நம்பிக்கை சார்ந்தது அல்ல. உடல்நலம் சார்ந்தது.அதுபோல் தியானம் உளவியல் பயிற்சி.இதுவும் ஆன்மீகம் கடவுள் நம்பிக்கை சார்ந்தது அல்ல.இவை அனைத்தும் மதத்தோடு குழப்பப்பட்டதால்தான் பிரச்சினை.

 

அதுபோல் மாட்டுக்கறி உண்பதால் அறிவுமந்தம் ஏற்படும் என்பதும் சமூக ஒடுக்குமுறை நோக்கம் கொண்டபார்வையே.இன்றைக்கு நாம் அனுபவிக்கிற அறிவியல் கண்டுபிடிப்புகள் சாதனைகள் நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காடு மாட்டுக்கறி சாப்பிடுபவர்களால் கிடைத்ததே.மனிதன் வெந்த புலால் உணவை சாப்பிடத் தொடங்கிய பின்னரே மூளை வளர்ச்சி வேகமடைந்தது என்பது அறிவியல் கூறும் செய்தி.அதுபோல் இந்த சாதனையாளர்கள் எல்லோருமே யோகா, தியானம் மூலம் வல்லமை பெற்றவர்கள் என்று  கூற இயலாது.தியானம்,யோகா,ஆரோக்கியமான உணவு இவை உடல்நலம் சார்ந்தது.ஆரோக்கியமான உடல்,உள நிலை உங்கள் முயற்சிக்கு ஊக்கம் தரும் அவ்வளவே. சமூக,அரசியல்,பொருளாதராக் காரணங்களால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளே பெரும்பாலும் நம்மை அலைக்கழிக்கின்றன.அவற்றை எதிகொள்ளப் பழக வேண்டும் அதனை வெற்றிகொள்ள சமூகப்பார்வை அவசியம்.தனிமனிதனாகவும்,சமூக மனிதனாகவும் பிரச்சனைகளை எதிகொள்ளப்பழகுவ்தே சாரியான வழிமுறையாகும்.

 

நீ உன்னை அறிவது அவசியம்.உலகை அறிவது அதைவிட அவசியம்.நீ உண்ண,உடுக்க,படிக்க,இருக்க,நடக்க,பேச,பழக, வாழ இந்த சமூகம் அவசியம்.சமூகத்தைத் தவிர்த்து நீ இல்லை,இதை உணரவேண்டும்.நீ சமூகத்தின் ஒரு துகள் என்பதை அறிந்தால் உன்னைப் பற்றிய பார்வையிலும் மாற்றம் வரும். ஏற்றம் வரும்.சுயநலக் குடுவையில் அடைபடாமல் சமூகமனிதனாய் இமை திற....எழுந்து நில்..விசாலப்பார்வையால் உயர்ந்து மேலேறு..நீயும் வாழு... சமூகத்துக்கும் தோள்கொடு.

தொடரும் ....
சு.பொ.அகத்தியலிங்கம்.

Saturday, October 14, 2017

திமுக வரலாறு - DMK History

திமுகவின் வரலாறு

1916

டாக்டர் டி.எம்.நாயரும், வெள்ளுடை வேந்தர் என்று அழைக்கப்படும் சர். பிட்டி.தியாகராயரும் இணைந்து 20.1.1916 அன்று ஒரு கட்சியை நிறுவினர். அன்று அவர்கள் துவங்கிய அரசியல் கட்சிதான் “தென்னிந்திய நல உரிமை சங்கம்”. அக்கட்சியின் கொள்கை பிரச்சாரத்திற்கு “ஜஸ்டிஸ்” என்ற ஆங்கில நாளேடு துவங்கப்பட்டது. அதன் முதல் ஆசிரியர் டாக்டர் நாயர். பிறகு இப்பத்திரிக்கையின் பெயரால் “ஜஸ்டிஸ் கட்சி” என்று அழைக்கப்பட்டது. தமிழில் “நீதிக்கட்சி” என்று அழைக்கப்பட்டது. “தென்னைந்திய நல உரிமை சங்கம்” என்றும், பின்னர் “நீதிக்கட்சி” என்றும் வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்டவைதான் திராவிட இயக்கத்தின் ஆணிவேராகும்!

1920

1920-ஆம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. கட்சி தலைவரான சர். பிட்டி.தியாகராயர், தான் முதலமைச்சராகாமல் 17.12.1920 அன்று அ.சுப்பராயலு ரெட்டியாரை முதலமைச்சராக்கினார். ஆனால் சுப்பராயலு ரெட்டியார் அவர்கள் மரணம் அடைந்து விடவே 11.7.1921 அன்று பனகல் அரசர் முதல்வரானார்.

1936

1920-லிருந்து 16 ஆண்டுகள் தமிழகத்தில் மக்களிடம் செல்வாக்குடன் இருந்த நீதிக் கட்சிக்கு 1936-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை.

1937

இந்தி திணிப்பை எதிர்த்து முதல் போர்.

1938

தந்தை பெரியார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரம். 1938 டிசம்பர் 29,30,31 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 14-வது மாகாண மாநாட்டில் “என் தோளுக்குச் சூட்டிய மாலையைப் பெரியாரின் தாளுக்குச் சூட்டுகிறேன்” என்று உணர்ச்சிப் பெருக்குடன் மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு தமக்களித்த மாலையைச் சூட்டினார் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம். பின்னர், நீதிக் கட்சியின் தலைவராக தந்தை பெரியார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட, மாநாட்டில் இருந்தவர்கள் அனைவரும் “உங்கள் உடல் சிறைப்படுத்தப்பட்டிருந்தாலும், உங்களின் வீரத் திருவுருவத்தின் முன் நாங்கள் அனைவரும் எழுந்து நிற்கிறோம்” என்று முழக்கம் எழுப்பினர்.

1944

நீதிக்கட்சியின் 16-ஆவது மாகாண மாநாடு சேலத்தில் நடைபெற்றது. நீதிக்கட்சி “திராவிடர் கழகம்” என்று பெயர் மாற்றப்பட்டது. இதற்காக சேலம் மாநாட்டில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு “அண்ணாதுரை தீர்மானம்” என்றே பெயர்.

1949

சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் “திராவிட முன்னேற்றக் கழகத்தை” 17.9.1949 அன்று துவக்கினார் பேரறிஞர் அண்ணா. அன்று நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, ஈ.வே.கி.சம்பத், கே.ஏ.மதியழகன் உள்பட 26 பிரமுகர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர். அப்போது “கூட்டு முயற்சி இல்லாமல் கொள்கை பரவாது. இலட்சியமும் உருப்பெறாது. அந்தக் கூட்டு முயற்சிக்கான வசதியும், வாய்ப்பும், வலிவும் நம்மிடம் இருக்கின்றன” என்றார் அண்ணா.

அன்று மாலை ராயபுரம் ராபின்சன் பூங்கா மைதானத்தில் பெத்தாம்பாளையம் பழனிச்சாமி அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துவக்க விழா பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. முதல் கூட்டமே போராட்ட அறிவிப்பாக அமைந்தது. அதில் பேசிய அறிஞர் அண்ணா, “முதல் வேளையாக எழுத்துரிமை, பேச்சுரிமை எதையும் அடக்கும் சர்க்காரின் போக்கை எதிர்த்துப் போராடுவோம்” என்றவர், “பெரியார் அவர்களே நீங்கள் அளித்த பயிற்சியும், பக்குவமும் பெற்ற நாங்கள் உங்கள் வழியே சர்க்காரை எதிர்த்து சிறைச்சாலை செல்லுகிறோம்” என்றார் உணர்ச்சிப் பிழம்பாக!

1956

திருச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மே மாதம் 17, 18, 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 1957 பொதுத் தேர்தலில் போட்டியிடலாமா என்று மாநாட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, “போட்டியிட வேண்டும்” என்போர் சிவப்பு பெட்டியிலும், “வேண்டாம்” என்போர் கறுப்பு பெட்டியிலும் தங்கள் வாக்குகளைப் போடலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வாக்கெடுப்பு நடைபெற்ற 20.5.1956 அன்றே வாக்கு எண்ணிக்கையும் நடந்தது. அதில் தி.மு.க. தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவாக 56942 வாக்குகளும், போட்டியிட வேண்டாம் என்று 4203 வாக்குகளும் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் வாக்கெடுப்பு நடத்தி பொதுத் தேர்தலில் போட்டியிட்டது திராவிட முன்னேற்றக் கழகம்தான்!

1957

தி.மு.க. போட்டியிட்ட முதல் பொதுத் தேர்தல். 10.2.1957-ல் நடைபெற்ற தேர்தல் சிறப்பு மாநாட்டில் தி.மு.க. போட்டியிடுவது பற்றிப் பேசிய அறிஞர் அண்ணா, “தேர்தலில் ஈடுபட்டுத்தான் அந்தஸ்து தேடிக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் அறிமுகம் இல்லாதவர்கள் அல்ல தி.மு.கழகத்தில் இருப்பவர்கள். நாட்டிற்கு புதியதோர் அந்தஸ்து தேடித் தருவதற்காகவே தி.மு.கழகம் தேர்தலில் போட்டியிடுகிறது” என்றார்.

அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற பேச்சாற்றல் மிக்க தலைவர்களால் திராவிட முன்னேற்றக் கழகம் 15 சட்டமன்றத் தொகுதிகளிலும், 2 நாடாளுமன்றத் தொகுதியிலும் வெற்றி பெற்றது. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே சுமார் 17 லட்சம் வாக்குகளைப் பெற்றது கழகம். குளித்தலை சட்டமன்றத் தொகுதியிலிருந்து கலைஞர் கருணாநிதி வெற்றி பெற்றார். அறிஞர் அண்ணா முதன் முறையாக எதிர்கட்சித் தலைவரானார்.

1959

சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று மாநகராட்சியைக் கைப்பற்றியது. இந்த வெற்றிக்காக கலைஞர் கருணாநிதிக்கு பேரறிஞர் அண்ணா கணையாழி அணிவித்தார். 45 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க.வின் முதல் மேயரானார் அ.போ.அரசு.

1963

இரண்டாவது இந்தி திணிப்பு எதிர்ப்பு போர்.

1965

மூன்றாவது கட்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு போர்.

1967

இந்த தேர்தலில் 138 இடங்களில் வெற்றி பெற்றது தி.மு.க. முதலில்  அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி அனைவரும் திருச்சி சென்று பெரியாரிடம் ஆசி பெற்றார்கள். பிறகு 6.3.1967 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் அறிஞர் அண்ணா.

பின்னர், சென்னை கோட்டையில் “தமிழக அரசு தலைமைச் செயலகம்” என்ற பெயர்பலகையை திறந்து வைத்தார். அரசின் கோபுரச் சின்னத்தில் “மதராஸ் கவர்ன்மென்ட்” “சத்தியமேவ ஜயதே” என்று இருந்த வார்த்தைகளை “தமிழக அரசு” “வாய்மையே வெல்லும்” என்று மாற்றினார்.

அறிஞர் அண்ணா அவர்கள் அமைச்சரவையில் மூன்று  முக்கிய முடிவுகளை எடுத்தார். ஒன்று மதராஸ் என்ற மாநிலப் பெயரை “தமிழ்நாடு” என்று மாற்றியது. இரண்டாவது சுயமரியாதை திருமணச் சட்டம் நிறைவேற்றியது. மூன்றாவது இந்தி ஒழிப்புத் தீர்மானம் நிறைவேற்றியது.

1969

தி.மு.க. நிறுவனர் பேரறிஞர் அண்ணா மறைந்தார். 3.2.1969 அன்று தமிழர்களை மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டு மறைந்த பேரறிஜர் அண்ணாவின் இறுதி ஊர்வலம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. அந்த அளவிற்கு மக்கள் கடல் அலை போல் திரண்டனர். “இரவலாக உன் இதயத்தைத் தந்திடு அண்ணா” என்று கண்ணீர் மல்க கவிதை இயற்றினார் கலைஞர் கருணாநிதி.

9.2.1969
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலைஞர் தலைவராக தேர்ந்தெடுக்க அமைச்சர் கே.ஏ.மதியழகன் முன் மொழிந்தார். அமைச்சர் சத்தியவாணிமுத்து வழிமொழிந்தார். சட்டமன்றக் கட்சித் தலைவராக கலைஞர் தேர்வு செய்யப்பட்டார். 10.2.1969 அன்று கலைஞர் முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

27.7.1969
அறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு தி.மு.க.வை தலைமை தாங்கவும், சிறந்ததொரு தலைவராக செயல்படவும் தலைவர் கலைஞரை தி.மு.க. தலைவராக கட்சியினர் ஒருமனதாக தேர்வு செய்தனர். அன்றிலிருந்து இன்றுவரை மக்கள் பணியில் அயராது பாடுபட்டு தி.மு.கழகத்தை கட்டிக்காத்து வருகிறார் தலைவர் கலைஞர்.

1970

அண்ணாவின் முதலாமாண்டு நினைவு நாள். திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் ஐம்பெரும் முழக்கங்கள் வெளியிடப்பட்டது. அந்த ஐம்பெரும் முழக்கங்கள்:

அண்ணா வழியில் அயராது உழைப்போம்.
ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.
இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.
1971

தி.மு.க. 184 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 15.3.1971 அன்று இரண்டாவது முறையாக முதலமைச்சரானார் கலைஞர் கருணாநிதி. சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

1972

கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக எம்.ஜி.ஆர் தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார்.

1975

சூன் மாதம் 26-ம் தேதி சுதந்திர இந்தியாவின் சரித்திரத்தில் அழியா இடம்பெற்ற கருப்பு நாள். நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. மிசா சட்டம் அமலுக்கு வந்தது. நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் அதை கண்டித்து தி.மு.க. தலைமை செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நெருக்கடி நிலையை எதிர்த்து இந்தியாவிலேயே நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம் இதுதான்.

1976

ஜனநாயகத்தை காக்க தீர்மானம் நிறைவேற்றியதற்காக ஜனவரி 31ம் தேதி தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. மிசாவின் கீழ் முன்னணி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

1.2.1976
தளபதி மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் கொடுஞ்சிறை வாசம் சென்றார்.

1982

தி.மு.க. இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் பணியில் அயராது பாடுபட்டு வரும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், ”உழைப்பு” என்பதற்கு அடையாளம் என்றால் மிகையாகாது. 

1989

தி.மு.க. வெற்றி பெற்று 27.1.1989 அன்று மூன்றாவது முறையாக முதலமைச்சரானார் கலைஞர்.

1991

இலங்கை தமிழர் நலனுக்கு பாடுபட்டதற்காக ஜனவரி 30-ம் தேதி இரண்டாவது முறையாக தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. அதுவும் அரசியல் சட்டப் பிரிவு 356 வது பிரிவில் உள்ள “otherwise” என்ற சொல்லை பயன்படுத்தி நாட்டில் கலைக்கப்பட்ட முதல் அரசு தி.மு.கழக அரசுதான்!

1996

தி.மு.கழகம் வெற்றி பெற்று கலைஞர் நான்காவது முறையாக முதலமைச்சரானார். நாற்பதுக்கு நாற்பது இடங்களிலும், 234 சட்டமன்றத் தொகுதிகளில் 221 இடங்களிலும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்று வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனை படைத்தது.

மாநிலத்தில் கழக ஆட்சியும், மத்தியில் பிரதமர் தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் அமைச்சரவையில் முதன் முதலாக தி.மு.கழகம் பங்கேற்றது.

இதே வருடத்தில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட, சென்னை மாநகர மேயரானார் மு.க.ஸ்டாலின்.

1999

நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் வெற்றி பெற்று மத்திய அரசில் அங்கம் வகித்தது. பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் தி.மு.க. பங்கேற்றது.

2003

தி.மு.க. பொதுக்குழுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் துணை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2004

தி.மு.க. தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தமிழகத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது இடங்களிலும் வெற்றி பெற்றது. பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் அங்கம் வகித்தது. 

2006

தி.மு.கழகத்தின் ஆறாவது அமைச்சரவை 13.5.2006 அன்று பதவியேற்றது. தலைவர் கலைஞர் ஐந்தாவது முறையாக முதலமைச்சரானார்.

2008

தி.மு.க. பொருளாளராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம், கட்சிக்கு அவர் ஆற்றி வரும் சேவை ஆகியவற்றின் பயனாக அவர் பொருளாளராக உயர்ந்தார்.

2009

திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மத்திய ஆட்சியில் பங்கேற்றது.

29.5.2009
மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.

2011

தி.மு.க. தலைவர் கலைஞர் குளித்தலையில் தொடங்கிய சட்டமன்ற தேர்தல் பிரவேசத்திலிருந்து 12-வது முறையாக தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். அதுவும் தான் பிறந்த மண்ணான திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றது இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்கது.

2014

பதினோராவது முறையாக கலைஞர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

2015

பேராசிரியர் அன்பழகன் தொடர்ந்து 9-வது முறையாக தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் தி.மு.க பொருளாளராக தளபதி மு.க.ஸ்டாலின் மீண்டும் இரண்டாவதாக தேர்வு செய்யப்பட்டார்.
#அனைவருக்கும் இந்த திமுக வரலாறு தெரியவேண்டும் என்பதே என் எண்ணம்.
இந்த இயக்கம் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல ....!

என்றும் தளபதி வழியில்...
கழக பணியில் உங்கள்,
ஆ.இரா.அருண்.
மாவட்ட பிரதிநிதி, சென்னை கிழக்கு மாவட்டம்.திமுகவின் வரலாறு

1916

டாக்டர் டி.எம்.நாயரும், வெள்ளுடை வேந்தர் என்று அழைக்கப்படும் சர். பிட்டி.தியாகராயரும் இணைந்து 20.1.1916 அன்று ஒரு கட்சியை நிறுவினர். அன்று அவர்கள் துவங்கிய அரசியல் கட்சிதான் “தென்னிந்திய நல உரிமை சங்கம்”. அக்கட்சியின் கொள்கை பிரச்சாரத்திற்கு “ஜஸ்டிஸ்” என்ற ஆங்கில நாளேடு துவங்கப்பட்டது. அதன் முதல் ஆசிரியர் டாக்டர் நாயர். பிறகு இப்பத்திரிக்கையின் பெயரால் “ஜஸ்டிஸ் கட்சி” என்று அழைக்கப்பட்டது. தமிழில் “நீதிக்கட்சி” என்று அழைக்கப்பட்டது. “தென்னைந்திய நல உரிமை சங்கம்” என்றும், பின்னர் “நீதிக்கட்சி” என்றும் வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்டவைதான் திராவிட இயக்கத்தின் ஆணிவேராகும்!

1920

1920-ஆம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. கட்சி தலைவரான சர். பிட்டி.தியாகராயர், தான் முதலமைச்சராகாமல் 17.12.1920 அன்று அ.சுப்பராயலு ரெட்டியாரை முதலமைச்சராக்கினார். ஆனால் சுப்பராயலு ரெட்டியார் அவர்கள் மரணம் அடைந்து விடவே 11.7.1921 அன்று பனகல் அரசர் முதல்வரானார்.

1936

1920-லிருந்து 16 ஆண்டுகள் தமிழகத்தில் மக்களிடம் செல்வாக்குடன் இருந்த நீதிக் கட்சிக்கு 1936-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை.

1937

இந்தி திணிப்பை எதிர்த்து முதல் போர்.

1938

தந்தை பெரியார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரம். 1938 டிசம்பர் 29,30,31 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 14-வது மாகாண மாநாட்டில் “என் தோளுக்குச் சூட்டிய மாலையைப் பெரியாரின் தாளுக்குச் சூட்டுகிறேன்” என்று உணர்ச்சிப் பெருக்குடன் மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு தமக்களித்த மாலையைச் சூட்டினார் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம். பின்னர், நீதிக் கட்சியின் தலைவராக தந்தை பெரியார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட, மாநாட்டில் இருந்தவர்கள் அனைவரும் “உங்கள் உடல் சிறைப்படுத்தப்பட்டிருந்தாலும், உங்களின் வீரத் திருவுருவத்தின் முன் நாங்கள் அனைவரும் எழுந்து நிற்கிறோம்” என்று முழக்கம் எழுப்பினர்.

1944

நீதிக்கட்சியின் 16-ஆவது மாகாண மாநாடு சேலத்தில் நடைபெற்றது. நீதிக்கட்சி “திராவிடர் கழகம்” என்று பெயர் மாற்றப்பட்டது. இதற்காக சேலம் மாநாட்டில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு “அண்ணாதுரை தீர்மானம்” என்றே பெயர்.

1949

சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் “திராவிட முன்னேற்றக் கழகத்தை” 17.9.1949 அன்று துவக்கினார் பேரறிஞர் அண்ணா. அன்று நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, ஈ.வே.கி.சம்பத், கே.ஏ.மதியழகன் உள்பட 26 பிரமுகர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர். அப்போது “கூட்டு முயற்சி இல்லாமல் கொள்கை பரவாது. இலட்சியமும் உருப்பெறாது. அந்தக் கூட்டு முயற்சிக்கான வசதியும், வாய்ப்பும், வலிவும் நம்மிடம் இருக்கின்றன” என்றார் அண்ணா.

அன்று மாலை ராயபுரம் ராபின்சன் பூங்கா மைதானத்தில் பெத்தாம்பாளையம் பழனிச்சாமி அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துவக்க விழா பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. முதல் கூட்டமே போராட்ட அறிவிப்பாக அமைந்தது. அதில் பேசிய அறிஞர் அண்ணா, “முதல் வேளையாக எழுத்துரிமை, பேச்சுரிமை எதையும் அடக்கும் சர்க்காரின் போக்கை எதிர்த்துப் போராடுவோம்” என்றவர், “பெரியார் அவர்களே நீங்கள் அளித்த பயிற்சியும், பக்குவமும் பெற்ற நாங்கள் உங்கள் வழியே சர்க்காரை எதிர்த்து சிறைச்சாலை செல்லுகிறோம்” என்றார் உணர்ச்சிப் பிழம்பாக!

1956

திருச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மே மாதம் 17, 18, 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 1957 பொதுத் தேர்தலில் போட்டியிடலாமா என்று மாநாட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, “போட்டியிட வேண்டும்” என்போர் சிவப்பு பெட்டியிலும், “வேண்டாம்” என்போர் கறுப்பு பெட்டியிலும் தங்கள் வாக்குகளைப் போடலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வாக்கெடுப்பு நடைபெற்ற 20.5.1956 அன்றே வாக்கு எண்ணிக்கையும் நடந்தது. அதில் தி.மு.க. தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவாக 56942 வாக்குகளும், போட்டியிட வேண்டாம் என்று 4203 வாக்குகளும் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் வாக்கெடுப்பு நடத்தி பொதுத் தேர்தலில் போட்டியிட்டது திராவிட முன்னேற்றக் கழகம்தான்!

1957

தி.மு.க. போட்டியிட்ட முதல் பொதுத் தேர்தல். 10.2.1957-ல் நடைபெற்ற தேர்தல் சிறப்பு மாநாட்டில் தி.மு.க. போட்டியிடுவது பற்றிப் பேசிய அறிஞர் அண்ணா, “தேர்தலில் ஈடுபட்டுத்தான் அந்தஸ்து தேடிக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் அறிமுகம் இல்லாதவர்கள் அல்ல தி.மு.கழகத்தில் இருப்பவர்கள். நாட்டிற்கு புதியதோர் அந்தஸ்து தேடித் தருவதற்காகவே தி.மு.கழகம் தேர்தலில் போட்டியிடுகிறது” என்றார்.

அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற பேச்சாற்றல் மிக்க தலைவர்களால் திராவிட முன்னேற்றக் கழகம் 15 சட்டமன்றத் தொகுதிகளிலும், 2 நாடாளுமன்றத் தொகுதியிலும் வெற்றி பெற்றது. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே சுமார் 17 லட்சம் வாக்குகளைப் பெற்றது கழகம். குளித்தலை சட்டமன்றத் தொகுதியிலிருந்து கலைஞர் கருணாநிதி வெற்றி பெற்றார். அறிஞர் அண்ணா முதன் முறையாக எதிர்கட்சித் தலைவரானார்.

1959

சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று மாநகராட்சியைக் கைப்பற்றியது. இந்த வெற்றிக்காக கலைஞர் கருணாநிதிக்கு பேரறிஞர் அண்ணா கணையாழி அணிவித்தார். 45 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க.வின் முதல் மேயரானார் அ.போ.அரசு.

1963

இரண்டாவது இந்தி திணிப்பு எதிர்ப்பு போர்.

1965

மூன்றாவது கட்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு போர்.

1967

இந்த தேர்தலில் 138 இடங்களில் வெற்றி பெற்றது தி.மு.க. முதலில்  அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி அனைவரும் திருச்சி சென்று பெரியாரிடம் ஆசி பெற்றார்கள். பிறகு 6.3.1967 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் அறிஞர் அண்ணா.

பின்னர், சென்னை கோட்டையில் “தமிழக அரசு தலைமைச் செயலகம்” என்ற பெயர்பலகையை திறந்து வைத்தார். அரசின் கோபுரச் சின்னத்தில் “மதராஸ் கவர்ன்மென்ட்” “சத்தியமேவ ஜயதே” என்று இருந்த வார்த்தைகளை “தமிழக அரசு” “வாய்மையே வெல்லும்” என்று மாற்றினார்.

அறிஞர் அண்ணா அவர்கள் அமைச்சரவையில் மூன்று  முக்கிய முடிவுகளை எடுத்தார். ஒன்று மதராஸ் என்ற மாநிலப் பெயரை “தமிழ்நாடு” என்று மாற்றியது. இரண்டாவது சுயமரியாதை திருமணச் சட்டம் நிறைவேற்றியது. மூன்றாவது இந்தி ஒழிப்புத் தீர்மானம் நிறைவேற்றியது.

1969

தி.மு.க. நிறுவனர் பேரறிஞர் அண்ணா மறைந்தார். 3.2.1969 அன்று தமிழர்களை மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டு மறைந்த பேரறிஜர் அண்ணாவின் இறுதி ஊர்வலம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. அந்த அளவிற்கு மக்கள் கடல் அலை போல் திரண்டனர். “இரவலாக உன் இதயத்தைத் தந்திடு அண்ணா” என்று கண்ணீர் மல்க கவிதை இயற்றினார் கலைஞர் கருணாநிதி.

9.2.1969
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலைஞர் தலைவராக தேர்ந்தெடுக்க அமைச்சர் கே.ஏ.மதியழகன் முன் மொழிந்தார். அமைச்சர் சத்தியவாணிமுத்து வழிமொழிந்தார். சட்டமன்றக் கட்சித் தலைவராக கலைஞர் தேர்வு செய்யப்பட்டார். 10.2.1969 அன்று கலைஞர் முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

27.7.1969
அறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு தி.மு.க.வை தலைமை தாங்கவும், சிறந்ததொரு தலைவராக செயல்படவும் தலைவர் கலைஞரை தி.மு.க. தலைவராக கட்சியினர் ஒருமனதாக தேர்வு செய்தனர். அன்றிலிருந்து இன்றுவரை மக்கள் பணியில் அயராது பாடுபட்டு தி.மு.கழகத்தை கட்டிக்காத்து வருகிறார் தலைவர் கலைஞர்.

1970

அண்ணாவின் முதலாமாண்டு நினைவு நாள். திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் ஐம்பெரும் முழக்கங்கள் வெளியிடப்பட்டது. அந்த ஐம்பெரும் முழக்கங்கள்:

அண்ணா வழியில் அயராது உழைப்போம்.
ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.
இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.
1971

தி.மு.க. 184 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 15.3.1971 அன்று இரண்டாவது முறையாக முதலமைச்சரானார் கலைஞர் கருணாநிதி. சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

1972

கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக எம்.ஜி.ஆர் தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார்.

1975

சூன் மாதம் 26-ம் தேதி சுதந்திர இந்தியாவின் சரித்திரத்தில் அழியா இடம்பெற்ற கருப்பு நாள். நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. மிசா சட்டம் அமலுக்கு வந்தது. நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் அதை கண்டித்து தி.மு.க. தலைமை செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நெருக்கடி நிலையை எதிர்த்து இந்தியாவிலேயே நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம் இதுதான்.

1976

ஜனநாயகத்தை காக்க தீர்மானம் நிறைவேற்றியதற்காக ஜனவரி 31ம் தேதி தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. மிசாவின் கீழ் முன்னணி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

1.2.1976
தளபதி மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் கொடுஞ்சிறை வாசம் சென்றார்.

1982

தி.மு.க. இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் பணியில் அயராது பாடுபட்டு வரும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், ”உழைப்பு” என்பதற்கு அடையாளம் என்றால் மிகையாகாது. 

1989

தி.மு.க. வெற்றி பெற்று 27.1.1989 அன்று மூன்றாவது முறையாக முதலமைச்சரானார் கலைஞர்.

1991

இலங்கை தமிழர் நலனுக்கு பாடுபட்டதற்காக ஜனவரி 30-ம் தேதி இரண்டாவது முறையாக தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. அதுவும் அரசியல் சட்டப் பிரிவு 356 வது பிரிவில் உள்ள “otherwise” என்ற சொல்லை பயன்படுத்தி நாட்டில் கலைக்கப்பட்ட முதல் அரசு தி.மு.கழக அரசுதான்!

1996

தி.மு.கழகம் வெற்றி பெற்று கலைஞர் நான்காவது முறையாக முதலமைச்சரானார். நாற்பதுக்கு நாற்பது இடங்களிலும், 234 சட்டமன்றத் தொகுதிகளில் 221 இடங்களிலும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்று வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனை படைத்தது.

மாநிலத்தில் கழக ஆட்சியும், மத்தியில் பிரதமர் தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் அமைச்சரவையில் முதன் முதலாக தி.மு.கழகம் பங்கேற்றது.

இதே வருடத்தில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட, சென்னை மாநகர மேயரானார் மு.க.ஸ்டாலின்.

1999

நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் வெற்றி பெற்று மத்திய அரசில் அங்கம் வகித்தது. பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் தி.மு.க. பங்கேற்றது.

2003

தி.மு.க. பொதுக்குழுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் துணை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2004

தி.மு.க. தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தமிழகத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது இடங்களிலும் வெற்றி பெற்றது. பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் அங்கம் வகித்தது. 

2006

தி.மு.கழகத்தின் ஆறாவது அமைச்சரவை 13.5.2006 அன்று பதவியேற்றது. தலைவர் கலைஞர் ஐந்தாவது முறையாக முதலமைச்சரானார்.

2008

தி.மு.க. பொருளாளராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம், கட்சிக்கு அவர் ஆற்றி வரும் சேவை ஆகியவற்றின் பயனாக அவர் பொருளாளராக உயர்ந்தார்.

2009

திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மத்திய ஆட்சியில் பங்கேற்றது.

29.5.2009
மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.

2011

தி.மு.க. தலைவர் கலைஞர் குளித்தலையில் தொடங்கிய சட்டமன்ற தேர்தல் பிரவேசத்திலிருந்து 12-வது முறையாக தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். அதுவும் தான் பிறந்த மண்ணான திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றது இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்கது.

2014

பதினோராவது முறையாக கலைஞர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

2015

பேராசிரியர் அன்பழகன் தொடர்ந்து 9-வது முறையாக தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் தி.மு.க பொருளாளராக தளபதி மு.க.ஸ்டாலின் மீண்டும் இரண்டாவதாக தேர்வு செய்யப்பட்டார்.

2016

தளபதி அவர்களின் செயல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்...

அனைவருக்கும் இந்த வரலாறு தெரியவேண்டும் ...
இந்த இயக்கம் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல ...