தொகுப்புகள்

Search This Blog

Monday, December 19, 2011

அரசு பால் + ஹசாரே பால்= கோல்மால்


அரசு லோக்பால் - ஜன் லோக்பால் என்றால் என்ன ?
அன்னா ஹசாரேவிற்க்கு அரசியல் சட்டம், அரசுலோக்பால் பாராளுமன்றம் மீதெல்லாம் நம்பிக்கையில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
இவர் சொல்லும் ஜன்லோக்பால் சட்டம் வந்துவிட்டால் எல்லாம் மீண்டும் புனிதமாகி விடுமா?

இவையிரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களைப் பற்றிப் பலர் எழுதி விட்டனர். இரண்டில் எது வந்தாலும் அதுஊழலை முற்றிலும் ஒழித்து விடாது என்பது ஒரு புறம்இருக்கட்டும்.

அரசின் லோக்பால் மசோதா மிகவும் பலவீனமானது என்பதில் துளியும் சந்தேகமில்லை.

ஆனால்,

ஹசாரேவின் வரைவு மிக உன்னதமா? அதன் அடிப்படைஎன்ன...?

"ஊழல் என்றால் என்ன?" என்று பிரிவு 2(4) -ல்கீழ்க்கண்டவாறு விளக்கியிருக்கிறார்கள்.
"to include anything made punishable under Chapter IX of the Indian Penal Code or under the Prevention of Corruption Act (PCA), 1988."
ஆக, இதன் அடிப்படை ஏற்கனவே உள்ள சட்டங்கள் தான்என்பது புரிந்திருக்கும்.

ஆகவே, அந்த சட்டங்களில் இருக்கிற அனைத்து குறைபாடுகளும் அண்ணா ஹசாரேயின் ஜன்லோக்பாலுக்கும் இயல்பாகவே பொருந்தும்என்பதுதானே உண்மை...? ’
இருக்கிற சட்டங்கள் போதாது; புதிதாய்ச் சட்டம்கொண்டு வருகிறோம்," என்று புறப்பட்டவர்களே, இதுயாரை ஏமாற்றுகிற வேலை?

Prevention of Corruption Act (PCA) என்ற ஊழல் ஒழிப்புச் சட்டம்எல்லாக் குடிமகன்களுக்கும் பொருந்தாது. அது மக்கள்சேவகர்கள் (Public Servants) என்ற ஒரு பிரிவை மட்டுமே கருத்தில் கொண்டு இயற்றப்பட்ட சட்டம். அத்துடன், ஜன்லோக்பால் வரைவில் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 410 முதல் 424 வரையிலான சட்டப்பிரிவுகள்விலக்கப்பட்டுள்ளன. பொது சேவகரோ அல்லதுதனியாரோ மோசடி அல்லது ஏமாற்று போன்றகுற்றங்களில் ஈடுபட்டால் தண்டிப்பதற்குரிய பிரிவுகள்அவை.

அவற்றை ஜன் லோக்பால் மசோதாவிலிருந்துவிலக்கியதால் என்ன விளைவு ஏற்படும்?

ராமலிங்க ராஜு போன்ற பணமுதலைகளயோ, ஹர்ஷத்மேத்தா, கேதன் தேசாய், தெல்கி போன்றவர்களையோ அண்ணாவின் ஜன் லோக்பால் சட்டத்தால் தண்டிக்கமுடியாது. இவ்வளவு ஏன், ஆ.ராசா, சுரேஷ் கல்மாடிபோன்றவர்கள் மீது கூட "மோசடி" என்ற குற்றச்சாட்டைமுன்வைக்க முடியாது.

ஏன்? ஏன்?? ஏன்???
சரி, அரசு லோக்பால் சட்ட வரைவில், அரசல்லாதநிறுவனங்கள் (Non Government Organisations) மீதும்நடவடிக்கை எடுக்க வழிவகைகள் உள்ளன.
ஆனால்,
அவற்றை அண்ணா ஹசாரேயின் ஜன் லோக்பால் குழுவன்மையாக எதிர்த்தது. ஏன்? தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் ஊழல்  நடப்பதில்லையா? அண்ணாவின் ’இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்’டிலேயேநடந்தது என்பது தானே பி.பி.சாவந்த் அறிக்கையின்சாரம்?

மும்பையில் அமைந்துள்ள லீலாவதி ஹாஸ்பிடல்மிகவும் பழமையானது மட்டுமல்ல; பிரம்மாண்டமானதுகூட! இது ஒரு சேவை நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மிக அண்மையில் இந்த டிரஸ்டில்ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கில் அந்நியச்செலாவணி மோசடி நடந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு எல்லா ஊடகங்களிலும் செய்திகள் வந்தனவே?

தன்னார்வத்தொண்டு நிறுவனங்களில் பல என்னசெய்கின்றன? மக்கள் சேவை என்று சொல்லிக்கொண்டு அரசுகளிடமிருந்து நிதி வசூலிக்கின்றன;வெளிநாடுகளிலிருந்து நன்கொடை மற்றும் நிதியுதவிபெறுகின்றன. "நான் தான் தலைவர், நீ செயலாளர், நீபொருளாளர்," என்று சுயேச்சையாக (adhoc) நிர்வாகத்தைஉருவாக்கி, வருகிற நிதிகளை மனம்போலச் செலவழிக்கின்றனர்.

விரல்விட்டு எண்ணக்கூடியவை தவிர மீதமிருப்பவைமிக மோசமான நிர்வாகம், பணமோசடி என்ற அளவிலேதான் இருக்கின்றன.

இவற்றை லோக்பாலின் கீழ் கொண்டு வர வேண்டாம்என்று அண்ணா சொல்வது ஏன்?

தொண்டு நிறுவனங்களை விடுங்கள்; அவைநடத்தப்படுகிற லட்சணம் எல்லாருக்கும் தெரியும். ஜாதி,பதவி, சமூக அந்தஸ்து, பணவசதி போன்றஅடிப்படையில் இயங்கும் பெரும்பாலான தொண்டுநிறுவனங்கள், அடிக்கடி செய்தித்தாள்களில் புகைப்படம்போட்டு, பேனர் தூக்கியது தவிர என்னகிழித்திருக்கிறார்கள்?

ஹசாரே முன்னிறுத்தும் வடிவம், அரசு முன்னிறுத்தும் வடிவம்இரண்டில் எது சட்ட வடிவமானாலும் உயர் நீதி மன்றத்தில் ஓர்எளிய ரிட் மனு மூலம் அது பொடிப் பொடியாகும் சாத்தியம்அதிகம். அதிலும் ஹசாரே முன்னிறுத்தும் வடிவம் சொல்லவே வேண்டாம் .

ஹசாரேயின் உண்ணாவிரதம் ஏன் என்ன பயன் ?

காந்தி உண்ணாவிரதம் இருந்தார் அவர் பிளவுபட்டசமுதாயங்களை ஒன்றிணைக்க உண்ணாவிரதம்இருந்தார்.

அண்ணா ஹசாரே, தனது உண்ணாவிரதத்தால் சமூகத்தையே இரு கூறாகப் பிளந்திருக்கிறார். இவருக்குஆதரவு தெரிவிப்பவர்களில் பெரும்பாலானோர் அரசியல் சட்டம், பாராளுமன்றம், ஜனநாயகம் எல்லாவற்றையும் உதவாக்கரைகள் என்றுவிரக்தியோடு சொல்லுமளவுக்கு நாட்டில் ஒருஎதிர்மறையான மனப்போக்கை உருவாக்கியிருக்கிறார்.

இயலாமையில் உழன்று கொண்டிருக்கும் நடுத்தரவர்க்கமும், மெத்தப்படித்த புத்திசாலிகளின் கூட்டமும் ஊழலுக்கு எதிரான தங்களது கண்டனங்களைத் தெரிவிக்க அண்ணா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள்; இவராவது வந்தாரே என்றபெருமூச்சுடன்!

ஆனால், ஹசாரேவின் போராட்டம் போகிற திசையைப் பார்த்தாவது, இது சத்யாகிரஹம் இல்லை; வேறுஎன்னவோ திட்டமிருக்கிறது என்று புரிந்து கொள்ளவேண்டாமா?

ஒன்றை கவனிக்க வேண்டும்! காவல்துறை விதித்த 22நிபந்தனைகளில், வெறும் 6 தான் ஹசாரேவின் கோஷ்டியால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் மிகமுக்கியமானதாக இவர்கள் சொன்னதென்ன?

"5000 பேர்கள் என்ற கட்டுப்பாடெல்லாம் கூடாது: மூன்றுநாட்கள் தான் என்பதையும் ஒப்புக்கொள்ள முடியாது,"என்றுதான் பேட்டிகளில் கிரண்பேடி மாய்ந்து மாய்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்.

"தேவைப்பட்டால் உச்சநீதி மன்றத்தை அணுகுவோம்,"என்று அர்விந்த் கேஜ்ரிவால் மார்தட்டினார். ஆனால், திடீரென்று அடுத்த திருப்பம். புதிதாக நான்கு நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள்.
காரணம், அதிகபட்சம் 5000 பேர்கள், மூன்று நாட்கள்என்பதெல்லாம் தில்லி உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்த வரைமுறைகளுக்கு (guidelines) ஏற்பவிதிக்கப்பட்டிருப்பதாக தில்லி காவல்துறை தெரிவித்திருக்கிறார்கள்.

முன்னாள் சட்ட அமைச்சரான சாந்திபூஷணும்,முன்னணி வழக்குரைஞரான பிரசாந்த்பூஷணும்உடனிருக்கும்போதே இப்படியொரு சொதப்பல்! இதுதான்அண்ணா ஹசாரே குழுவிலிருக்கிற மெத்தப்படித்தவர்களின் லட்சணம்!
ஆக, மொத்தம் 22-ல் 6 நிபந்தனைகளை, "அரசியல்சட்டத்துக்குப் புறம்பானது(unconstituitional)" என்று ஹசாரேவின் குழு தெரிவித்திருக்கிறது. இது நீதிமன்றஅவமதிப்பாகக் கருதப்படுமா இல்லையா என்றுசட்டநிபுணர்கள்தான் சொல்ல முடியும்.
அப்படியே இருந்தாலும், அதுகுறித்து ஹசாரேகவலைப்படப் போவதில்லை. காரணம், ஏற்கனவேஅவர்மீது ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில்இருக்கிறது.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் எவ்விதமாற்றுக்கருத்துமில்லை. ஆனால், அதை ஹசாரே ஒருவரால் தான் முடியும் என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை!

வாசிக்கிறவர்கள் என்ன நினைக்கிறார்கள் அவரை ஆதரிப்பதை நிறுத்துவிட்டு யோசிப்பவர்கள் எத்தனைபேர், நான் சொன்னதை சரியாக புரிந்துகொள்ளது என்னை திட்டப்போகிறவர்கள் எத்தனை பேர் என்பது பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை.

ஏன் என்றால் இதை ஏற்ப்பதும் ,மறுப்பதும் அவரவர் விருப்பம் .என்னை பொறுத்தவரை ஊழலுக்கு ஏதிரான இந்த போராட்டம் தவறில்லை அதை வழிநடத்தும் நபர் சரியில்லை என்பது மட்டுமே , தவறான நபரை ஆதரித்தது நம் மக்கள் என்ற தீராத பழிக்கு ஆளாக வேண்டாம் என்பதே என் ஆதங்கம் .


நன்றி:-மயில்ராவணன் 

Sunday, December 18, 2011

கூடங்குளம், முல்லை பெரியாறு -ஜோதிட தீர்வா?


சோதிடத்தை நம்பிக் கெட்டவர்கள்!

சோதிடர் சொல்லுகிறபடி நடக்காத போது ஏன் சோதிடத்தை நம்ப வேண்டும் - பொருத்தம் ஏன் பார்க்க வேண்டும்?

சோதிடத்தை முழுமையாக நம்பிக் கொண்டு அன்றாட வாழ்வில் ஒவ்வொரு செயலுக்கும் சோதிடத்தின் வழிகாட்டலோடு தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருப்பவர்கள் நாட்டில் நிறைய பேர் உண்டு! 

அப்படி சோதிடத்தை நம்பி வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் வாழ்வு சோதிடர் சொன்னபடி சிறப்பாகஅமைந்ததா?

தினமணி நாளிதழில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலம் உங்கள் கையில் என்ற சோதிடப்பகுதி வெளியிடப்படுகிறது. அப்பகுதியில் மக்கள் தங்கள் துன்ப துயரங்களைக் கூறி என் கஷ்டம் தீருமா? நோய் தீருமா?பரிகாரம் உண்டா? திருமணம் நடைபெறுமா? வேலை கிடைக்குமா? என்றெல்லாம் கேட்டு எழுதுகின்றனர். அவற்றில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

பொருத்தம் என்றார் சோதிடர் - தனித்து வாழ்கிறார் பெண்!சோதிட நம்பிக்கை கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தபெண்ணுக்கு கணவரின் சாதகத்தோடு பொருத்தம் பார்த்து,மிகவும் சரியான பொருத்தம் வாழ்வு சிறப்பாக அமையும்10 பொருத்தத்தில் பத்தும் நன்றாகயிருக்கிறது என்றெல்லாம் சோதிடர் சொல்லிய பிறகு நாள்,நட்சத்திரம், லக்கினம் என்றெல்லாம் மங்கலகரமான நேரம் பார்த்து திருமணம் நடைபெற்றது. 

சில ஆண்டுகளுக்குப் பிறகு அப்பெண் என்னுடைய கஷ்டம் தீருமா என்று கண்ணீர் சிந்தி 6.4.2001-இல் தினமணி சோதிடர் பகுதிக்கு தபால் எழுதியிருக்கிறார்.

அதில் என் கணவரால் பலவிதக் கொடுமைகளுக்குஆளாக்கப்பட்ட நான் தற்போது 7 வயது மகனுடன் தனித்து வாழ்ந்து வருகிறேன். என் கஷ்டம் தீருமா? என்று சோதிடரிடம் கேட்டிருக்கிறார்.

அப்பெண்ணின் சாதகத்தை ஆராய்ந்து பார்த்து அவர்வாழ்க்கை சிறப்பாக அமையுமென்றார் சோதிடர்! ஆனால் கணவரால் சித்திரவதைக்குள்ளாகி தனிமையில் கஷ்டப் படுகிறார்! 

பொருத்தம் பார்த்த சோதிடரைக் கேட்டால், இதெல்லாம் பூர்வ பாவ புண்ணியத்தால் அல்லது தோஷத்தால்இவ்விதம் நடைபெறுகிறது என்று கூறி தப்பித்துக் கொள்வார்!

பூர்வ பாவ புண்ணியத்தால் எல்லாம் நடக்குமென்றால் பிறகு ஏன் சோதிடம் பார்த்தபோது பொருத்தம் நன்றாக இருக்கிறதென்று சொல்ல வேண்டும்.

சோதிடம் பார்த்துத் திருமணம் செய்து கொண்டஅப்பெண்ணின் வாழ்க்கை சிறப்பாக அமையாமல் போனது போல் ஏராளமான பெண்களின் வாழ்க்கையும் அவ்விதம் கஷ்டப்படும் நிலையில் இருக்கக் கூடும்! 

சோதிடர் சொல்லுகிறபடி நடக்காத போது ஏன் சோதிடத்தை நம்ப வேண்டும் - பொருத்தம் ஏன் பார்க்க வேண்டும்?

சோதிடப் பொருத்தம் சோகத்தில் முடிந்தது

23.1.2005 ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மணமகன் குருராஜன் தீயில் கருகி பலியானார். மணமகள் ஜெயஸ்ரீ பலத்த தீக்காயங்களுடன் தப்பித்தார். இவ்விபத்தில் 55 பேர் பலியானார்கள். 

இக்கோரவிபத்தால் தமிழ்நாடே சோகத்தில் மூழ்கியது. இந்தக் குடும்பமும் அய்தீக குடும்பந்தான். அய்தீக ஆசாரப்படி மணமக்களின் ஜாதகத்தை துல்லியமாக அலசி ஆராய்ந்து பார்த்து திருமணம் பேசி முடிக்கப்பட்டு, நாள் நட்சத்திரம் பார்த்து சோதிடர் குறிப்பிட்ட நல்ல நேரத்தில் திருமணம் நடைபெற இருந்த போதே மணப்பந்தல் தீப்பிடித்து மணமகன் பலியாகி, மணமகள் தீக்காயமுற்று உறவினர்கள் 55 பேர் இறந்து விட்டனர். திருமணப் பொருத்தம் பார்த்த சோதிடர் இதற்கு என்ன பதில் கூறுவார்?

தனி மனிதன் வாழ்வையும், துல்லியமாகச் சோதிடத்தில் கூற முடியும் என்று நம்புகிறவர்கள் இதற்கு என்ன காரணம் சொல்லுவார்கள்? 

சோதிடக் கணிப்பில் இந்தக் கோர சம்பவம் நடக்குமென்று தெரியாமல் போய்விட்டதா! சோதிடம் நம்பத் தகுந்ததல்ல என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்?

சோதிடத்தை நம்பி கருவைக் கலைத்தார்!ஒருவருக்குத் திருமணமாகி 4 ஆண்டிற்குப் பின் அவரதுமனைவி கருவுற்றார்! கணவர் சோதிடரை அணுகி தனக்குக் குழந்தை பிறந்தால் என் ராசி எப்படி இருக்கும் என்று கேட்டிருக்கிறார். இது முதல் குழந்தை ஆகவேராசிப்படி உடல் குறைபாடு உள்ளதாகப் பிறக்கும் என்று சோதிடர் சொல்ல அதை நம்பிய கணவர் உடனடியாகக் கருவைக் கலைக்க ஏற்பாடு செய்துவிட்டார். 

கருவைக் கலைப்பதில் தவறு ஏற்பட்டு மனைவிக்கு உடல் நலம் பாதித்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். சோதித்த மருத்துவர்கள் கர்ப்பப்பை மிகவும்பாதித்திருக்கிறது. அதை எடுத்து விட வேண்டுமென்று கூறி மனைவியின் கர்ப்பப்பையை எடுத்து விட்டார்கள். 

சோதிடர் சொன்னதைக் கேட்டு முட்டாள் தனமாக நடந்து கொண்டதால் இனி குழந்தை பெற முடியாத அளவிற்கு கர்ப்பப்பையை எடுக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. இச்செய்தி 22.1.2006 தினத்தந்தி குடும்பமலரில் வந்துள்ளது.

உதாரணத்திற்குத்தான் ஒன்று இரண்டு சம்பவங்கள் இங்குகுறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன. இதுபோன்று சோதிடத்தை நம்பி பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம் உள்ளனர்.


பொருத்தம் பார்த்த இலட்சணம்!12.11.2006-இல் தினமலரில் வந்த செய்தி. சங்கீதாவின்தந்தை, மகளுக்கு மாப்பிள்ளை தேடினார். சங்கீதாவின் சாதகத்தில் செவ்வாய்தோஷம் இருப்பதாகக் கூறியிருக்கிறார் சோதிடர்! 

சென்னைக்கு அருகிலுள்ள ஓர் ஊரில் வசதி படைத்த இராசு என்பவரின் சாதகம் சங்கீதாவின் சாதகத்துடன் மிகவும் பொருத்தமுடையதாக இருக்கிறது என்று சோதிடர் சொல்ல திருமணம் பேசி தடபுடலாக நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு சங்கீதா பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானார்! சோதிடர் பொருத்தம் பார்த்துச் சொன்ன அந்தமாப்பிள்ளை ஆண்மையில்லாதவர்!

வாழ்க்கையின் நுணுக்கங்களைக் கூட சாதகத்தால்கணித்துச் சொல்ல முடியும் என்று கூறும் சோதிடர்கள் பொருத்தம் பார்த்துச் சொன்ன இலட்சணம் இப்படி! 

சங்கீதாவின் வாழ்க்கையைப் போல் சோதிடர்களால்பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம், ஏராளம்!

இன்று சிலபோலிகள் பத்திரிகைகளில் கூடங்குளம், முல்லை பெரியாறுக்கும் ஜோதிடத்தில் தீர்வு சொன்னதை பார்த்து சிரிப்புதான் வந்தது   
நன்றி-பார்தி 

Friday, December 9, 2011

திராவிட கலாச்சார மீட்டெடுப்பு


ஆரிய மாயை – சில உண்மைகள்…! (பகுதி – 2)

19 மற்றும் 20 – ம் நூற்றாண்டுகளில் நடந்த சில மறுமலர்ச்சிகளால் தமிழ் தன் இழந்த பெருமையை எல்லாம் திரும்பப் பெற்றது. காலங்களைக் கடந்து வாழும் ஒரு மொழியும் கலாச்சாரமும் என்றும் அழிக்கபடுவதில்லை. சில காலம் மறைத்து வைக்கப்படுவதுண்டு. ஆனால், அம்மொழியானவள் தன்னை வெளிப்படுத்த தலைசிறந்த மகன்களை தானே பெற்றெடுப்பாள். தமிழ்த்தாயும் அங்ஙனமே. முதலில் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குள் வந்த சிலர், தமிழரின் மொழி வளத்தை கண்டு இங்கு தங்கி தமிழ்ச்சேவை புரிந்தனர். கால்டுவெல், ஜி.யு.போப், வீரமாமுனிவர் ஆகியோர் அப்படித்தான். தமிழ் மக்கள் பலர், தமிழின் பெருமைகளை உணரத்துவங்கினர். பதினெட்டாம் நூற்றாண்டு முடிவிலும், பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும், பல சங்க கால தமிழிலக்கியங்கள் வெளிக்கொணரப் பட்டன. தஞ்சை மாவட்டத்தின் பல சிற்றூர்களில் பல அந்தணர்களின் வீட்டுப் பரணில் உறங்கிக் கிடந்த இந்த தமிழ் நூல்கள் யாவும் உ.வே சாமிநாதன், தாமோதரன் பிள்ளை, ஆகிய பெரியோர்களால் வெளியே கொண்டுவரப் பட்டு பதிப்பிக்கப்பட்டன. தமிழ் ஒரு காலத்தில் உலகின் தலைசிறந்த இலக்கியங்களைக் கொண்டிருந்ததை நாம் அறிந்து கொண்டோம்.
பின்னர் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழகத்தில் மிக முக்கியமான மாற்றாங்கள் நடந்தேறின. இரண்டு தலைசிறந்த மனிதர்கள் தமிழையும், திராவிட கலாச்சாரத்தையும் மீட்டெடுத்தனர். அவர்கள், மகாகவி பாரதியும், தந்தை பெரியாரும் தான். பாரதியார், தேனின் இனிய தமிழ்க் கவிதைகளை வடித்தார். மிகச் சிறிய வயதில், எளிய இனிய கவிதைகளை எழுதினார். மிகப் பெரும் சமூக மற்றும் மொழியியல் மறுமலர்ச்சிக்கு வித்திட்டார். ஆரிய மாயையை தமிழனுக்குச் சுட்டிக் காட்டினார். சாதி, மத, இன பேதங்களைச் சாடினார். பெண்ணடிமையை இடித்துரைத்தார். சொல்வதோடு நின்று விடாமல் வாழ்ந்தும் காட்டினார். தன் அக்ரகாரத்தில் சூத்திரனை அழைத்துச் சென்றார். தன் மனைவியை சமூக நிகழ்ச்சிகளுக்கு கூட்டிப் போனார். அவர் ஒரு மாபெரும் மனிதப் பிறவியானார். நம் துரதிருஷ்டம் அவரால் நீண்ட நாள் வாழ இயலவில்லை.
அடுத்து தந்தை பெரியார். தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்த ஈரோட்டுப் பெரியார், திராவிடர்களின் தனித்தன்மையை அவர்களுக்கு உணர்த்துவதில் பெரிய அளவில் வெற்றி பெற்றார். தமிழ் தனித்தன்மை பெற்று பெருமையுறுவதைக் கண்ட ஆரிய ஆதிக்க சக்திகள், அதற்கு ஒரு வழி கண்டறிந்தன. சமஸ்கிருதத்தின் வழித்தோன்றலான இந்தி மொழியை இந்தியாவெங்கும் பரவச் செய்வது தான் அது. 1935-ம் ஆண்டு சென்னை மாகாணத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதும், ராஜாஜி முதல்வரானார். கட்டாய இந்தி கல்வித் திட்டம் கொண்டு வந்தார். அதன் படி, இந்தி மொழிப் பாடம் கட்டாயமாக்கப் படும். அனைத்து வகுப்பு மாணவர்களும் இந்தி மொழியைப் படிக்க வேண்டும். ஒரு இனத்தின் மீதும், சமூகத்தின் மீதும் நடத்தப் பட்ட இந்த திணிப்பைக் கண்டு பெரியார் வெகுண்டெழுந்தார். பெரும் போராட்டங்கள் வெடித்தன. இந்தி மொழியை திணிப்பதை உடனே நிறுத்த வேண்டுமென அவர் போராடினார். இருந்தாலும் ராஜாஜி நிறுத்துவதாயில்லை. எப்படியோ ஒருவழியாக 1942-ம் ஆண்டு ஆங்கில கவர்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், அந்த சட்டத்தை நீக்கினார். 

அந்தச் சட்டம் நீக்கப்பட்டாலும் கூட, இந்திய சுதந்திரத்துக்குப் பின் நேருவும், காந்தியும் கலந்து பேசி, இந்தியா முழுமைக்கும் ஒரு பொது மொழி இருக்க வேண்டும் என முடிவு செய்தனர். அதன் படி 15 ஆண்டுகள் இந்தியும், ஆங்கிலமும் நாட்டின் மொழியாக இருக்கும். அதன் பிறகு ஆங்கிலம் அறவே ஒழிக்கப்பட்டு இந்தி மொழி மட்டுமே நாட்டின் தேசிய மொழியாக இருக்கும் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வந்தனர். சுதந்திரத்துக்குப் பின் 1962-ம் ஆண்டு அலுவல் பணிச்சட்டம் மீண்டும் திருத்தப்பட்டு ஆங்கிலப் புழக்கம் இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. ஆனால், 1965-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கா.ந.அண்ணாதுரை, இந்தி திணிப்புக்கு எதிராக பெரும் போராட்டத்தை துவக்கினார். அப்போதைய முதல்வர் பக்தவச்சலம் இந்தப் போராட்டத்தை ஒடுக்கினார். இந்தியப் பிரதமராயிருந்த சாஸ்திரி அவர்களும் உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தாவும் இந்தியை தேசிய மொழியாக்குவதில் உறுதியாய் இருந்தனர். சென்னை மாகாணத்திற்குட்பட்ட காங்கிரசார் காமராஜர், நீலம் சஞ்சீவ ரெட்டி போன்றோர் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த காங்கிரசாரும் எதிர்த்தனர். சாஸ்திரியும், நந்தாவும் பொறுமை காத்தனர். தமிழகம் முழுதும் இந்தி திணிப்புக்கு எதிரான தீ கொழுந்துவிட்டு எரிந்தது. கோப்புகளின் படி சுமார் 70 பேரும், செய்தித்தாள்களின் படி, சுமார் 500 பேரும் உயிரிழந்தனர். தங்கள் மொழியை விரும்பிப் படிக்க, தங்கள் மொழியை அழிக்க நினைக்கும் ஆரிய ஆதிக்கத்தை எதிர்க்க பலர் தங்கள் இன்னுயிரை இழந்தனர். நடுவண் அமைச்சரவையில் இருந்த உணவுத்துறை அமைச்சர் சி.சுப்ரமணியம் அவர்கள் தன் பதவியை விட்டு விலகப் போவதாய் அறிவித்தார். சாஸ்திரி தன் அமைச்சரவையிலெயே ஏற்பட்ட எதிர்ப்பைக் கண்டு அதிர்ச்சியுற்றார். பின்னர் ஆங்கிலம் நீடிக்கும் என்று அறிவிப்பை வெளியிட்டார். 
இந்தியைத் திணிக்க நினைத்த காங்கிரஸ் அரசாங்கம் 1967-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது. அண்ணாதுரை வெற்றிப் பெற்று முதல்வரானார். இன்றுவரை காங்கிரஸால் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை. இனிமேலும் பிடிக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்திக்கு எதிரான போரா…? 
இந்தி எதிர்ப்பு போர் என்று சில பத்திரிக்கைகளால் வர்ணிக்கப்படும் இந்த போராட்டம் உண்மையில் இந்தி மொழிக்கு எதிர்ப்பான போர் அல்ல. இந்தி மொழியைத் திணிக்க எதிர்ப்பு தெரிவித்து எழுந்த போராட்டம். இந்த இந்தி திணிப்புக்கு எதிரான போர் அவசியமானதா….? இது வெறும் அரசியல் சார்புடையது மட்டுமா…? இந்த கேள்விகள் இன்று நம்மில் பலருக்கு எழுவது இயல்பு. அதற்குக் காரணம் நம்மைச் சுற்றியிருக்கும் ஆரிய மாயை. 
“சே… இந்தி படிச்சிருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்…” என்று நம்மில் பலர் புலம்புவதுண்டு. அப்படி அந்த இந்தி படிப்பது அவசியமானதா…?
இந்தி மொழி என்பது ஒரு சிறந்த மொழியாகும். மிகவும் எளிமையான அமைப்பு உடையது. யார் வேண்டுமானாலும் எளிதில் பயின்று கொள்ள முடியும். இந்தியாவில் இன்று பெரும்பான்மையான மக்களால் பேசப்படுவதும், உலகில் சீன மொழிக்கு அடுத்தபடியாக அதிகமான மக்கள் பேசும் மொழியுமாகும். பல தீஞ்சுவை இலக்கியங்கள் நிரம்பப்பெற்ற மொழியாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து வாழும் மொழியுமாகும். இந்தி மொழியை தமிழன் என்றுமே வெறுப்பதில்லை. அம்மொழி தங்கள் மீது திணிக்கப்படுவதைத் தான் வெறுக்கிறான். மூவாயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியான பாரம்பரியம் மிக்க தமிழ் மொழியை தங்கள் தாய்மொழியாக வரப்பெற்ற நாம், ஏன் அதை விட்டு வேறு மொழியை கட்டாயத்துக்குட்பட்டு கற்க வேண்டும்…? அவ்வாறு இந்தி மொழி திணிக்கப்படும் போது, நாளைடைவில் தமிழ் மொழியின் சிறப்பு குன்றச்செய்வதே அவர்கள் நோக்கம். இந்திக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம் நம் தாய் மொழியை அது சார்ந்த கலாச்சாரத்தை நாம் இழக்க நேரிடலாம்.
ஏற்கனவே இன்னும் 200 ஆண்டுகளில் இந்தியாவில் மிக முக்கிய மொழிகள் பல இல்லாமல் அழிந்து போகும் என்று யுனெஸ்கோ நிறுவனம் கூறியுள்ளது. அந்த அழிவின் பட்டியலில் தமிழ் சென்று சேர வேண்டுமா… பலவாறாக நமது முன்னோர்கள் காத்த நமது மொழியையும் கலாச்சாரத்தையும் நாம் இழக்க வேண்டுமா என்ன…? நமது அண்டை மாநிலங்களில் இந்தி மொழி கட்டாயமாக்கப் பட்டதன் விளைவாக அவர்கள் தங்கள் தாய் மொழியை மறந்துவிட்ட கொடுமைகள் இப்போது நடந்துதான் வருகின்றன. பல கோடி தெலுங்கு பேசும் மக்கள், இன்று சில சிறப்பான சொற்பயன்பாடுகளை தங்கள் தாய்மொழியில் இழந்துவருவதாக தாய்மொழிக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், மராட்டிய மாநிலத்திலும், குஜராத் மாநிலத்திலும் தங்கள் தாய்மொழியை விட இந்தி பேசுபவரே அதிகம். மெல்ல மெல்ல அவர்கள் தங்கள் தாய்மொழியை இழக்கின்றனர். 
இன்று ரயில்வே துறை, அஞ்சல் துறை, வங்கித் துறை போன்ற நடுவண் அரசின் துறைகள் இந்தியை மட்டுமே முக்கிய மொழியாக கொண்டு செயல்படுவதால் நம்மவர்கள் அவற்றில் வேலை வாங்குவதும் பதவி உயர்வு வாங்குவதும் கடினமாக ஒன்றாய் மாறிவிடுகிறது. அதைக் கண்டு நாம் “இந்தி படித்திருக்கலாமோ…?” என்று விசனப்படுவதுமுண்டு. இவையெல்லாம் ஆரிய மயக்கத்தின் தற்கால வடிவங்களாகும்.
அஞ்சல் சார்ந்த பல சேமிப்பு திட்டங்களில் வழங்கப்படும் படிவங்களும், கோப்புகளும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே இருப்பதை நம்மில் பலர் கவனிக்க மறந்திருப்போம். வங்கிகளில் இருக்கும் பல வண்ண சீட்டுகளும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சடிக்கப்பட்டிருக்கும். தமிழகத்தின் கடைக்கோடியிலிருக்கும் ஒரு கிராமத்தில் இருக்கும் வங்கியில் கூட அவ்வாறு தானிருக்கும். ஏனெனில் அஞ்சலகமும், வங்கியும் நடுவண் அரசின் துறைகள். அவர்கள் மறைமுகமாக இந்தியை திணிக்க முயல்கின்றனர். நடுவண் அரசின் போட்டித் தேர்வுகள் பெரும்பாலும் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் நடத்தப் படுகின்றன. இவ்வாறு நடத்துவதன் மூலம் இந்தியைத் தாய்மொழியாக கொண்டோர் மட்டும் நிறைய வேலைவாய்ப்பை பெறச்செய்வதில் நடுவண் அரசு மறைமுகமாக ஆரிய மயக்கத்தை ஏற்படுத்த முயல்கிறது. ஒருவேளை இந்தி மொழியைப் பாடமாக பயின்றிருந்தால் நாமும் அவ்வாறு வேலை வாய்ப்புகளைப் பெற்றிருக்கலாம் என நம்மை நினைக்கத் தூண்டுவதே அவர்களின் முக்கிய குறிக்கோள். அவ்வாறு நினைப்பதன் மூலம், நம் அரசியல்வாதிகள் செய்த இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை தவறு என சித்தரிக்கும் முயற்சிகள் இவை.
உலகின் 190-க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. அந்நாடுகளில் எல்லாம் வாழும் மக்கள் தங்கள் தாய்மொழியில் பேசவும், எழுதவும் அதையே அலுவல் மொழியாக பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்தியாவின் நிலை சற்று வேறுபட்டது. இங்கு பல மொழிகள் உள்ளன. அவற்றை எல்லாம் அலுவல் மொழியாக ஆக்குவது சற்று கடினம். நடைமுறைச் சிக்கல்கள் உள்ள விஷயமது. ஆனால், 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பேசும் மொழிகளை எல்லாம் முக்கிய மொழியாக கருதி அவற்றை அலுவல் மொழியாக ஆக்கலாம். சுமார் 25 மொழிகள் அவ்வாறு இந்தியாவில் உள்ளன. அவற்றை அலுவல் மொழியாக மாற்றுவது என்பது கடினமான விஷயமோ, நடைமுறைக்கு உதவாததோ அல்ல. ஆனால் ஆட்சியாளர்கள் அவற்றை செய்வதில்லை. 
அவற்றோடன்றி நாட்டின் மிக முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் யாவும் வட இந்தியாவிலிருக்கும் மாநிலங்களிலேயே நடத்தப்படுவதைக் காணலாம். தென்னிந்தியா பெரும்பாலும் புறக்கணிக்கப்படும். அதனாலேயே பெரும்பாலான தென்னிந்திய மாநிலங்களில் தேசிய கட்சிகள் தங்கள் ஆட்சிகளை இழந்து மாநில கட்சிகள் ஆட்சிக் கட்டிலேறின. மாநிலக் கட்சிகளாலேயே அந்த மாநிலங்கள் பெரும்பாலும் வளர்ந்திருப்பதைக் காணலாம். அவ்வாறின்றி தேசியக் கட்சி ஆட்சிக்குட்பட்ட கேரள மாநிலம் இன்றும் தொழில்வளர்ச்சியில் மிகவும் பிந்தங்கிய மாநிலமாகவே உள்ளது. தமிழ்நாடு இன்று தொழில் வளர்ச்சியில், மகாராஷ்டிரம், குஜராத்திற்கு அடுத்த மூன்றாவது இடத்திலும், நகரமயமாதலில் முதலிடத்திலும், ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாமிடத்திலும், கல்வி வளர்ச்சியில் முதலிடத்திலும் உள்ளது. இவை எல்லாம் நம் மாநிலக்கட்சிகளினால் நடந்தேறியவையே…!
நமது அண்டை நாடான இலங்கையில் தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தினாலும், தமிழ் அலுவல் மொழியாக பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூரில் நான்கு மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன. தமிழும் அதில் ஒன்று. மலேய நாட்டில் தமிழ் வழிக் கல்வி என்பது மிகச் சாதாரணமான ஒன்று. தமிழர்கள் மிகச் சிலவாக வாழும் தென்னாப்பிரிக்க குடியரசில் கூட தமிழில் நீங்கள் தேர்வு எழுத முடியும். அப்படியிருக்க, 7 கோடி தமிழர்கள் வாழ்ந்துவரும் தமிழரின் தாய்நிலமான இந்திய தேசத்தில் இன்னும் அந்த முறை ஏற்புடையதாயில்லை நடுவண் ஆட்சியாளர்களுக்கு.

நன்றி :- திரு.கோபி 

Tuesday, November 29, 2011

வீரமும் துரோகமும் - ஆரியமும் திராவிடமும்

ஆரிய மாயை – சில உண்மைகள்…!

ஆரிய திராவிட முரண்பாடுகள் இன்று நேற்று துவங்கிய பிரச்சினையல்ல. என்று சிந்து சமவெளி முழுவதும் புழங்கிவந்த திராவிடர்களை, நட்டாசியாவிலிருந்து வந்த ஆரியர்கள் விரட்டினரோ, அன்றே துவங்கிய பிரச்சினை. ஆரிய சமுதாயம் ஒரு நாடோடி சமூகமாகும். நிலையான நகர்ப்புறங்களையும் ஊர்ப்புறங்களையும் கொண்டு வாழ்ந்தவர்கள் அல்ல ஆரியர்கள். முதன் முதலாய், நன்கு கட்டமைக்கப்பட்ட சிறந்த நகரமான மொகஞ்சதாரோவைக் கண்டவுடன் அவர்களுக்கு அதைக் கைப்பற்ற ஆசை வந்தது. அங்கே வாழ்ந்திருந்த திராவிடர்கள் முரட்டுத்தனமான போர்க்கலைக்கு பழக்கப்பட்டவர்கள் அல்லர். அவர்களுக்கென்று சட்டதிட்டங்களுடன் அமைதியான செல்வச்செழிப்பான வாழ்க்கை வாழ்ந்திருந்தவர்கள். அதனால், ஆரியர்களின் அசுர தாக்குதலை சமாளிக்க முடியாமல் பெரும்பான்மையானோர் அழிந்தனர். குறிப்பிட்ட மக்கள் பின்வாங்கினர். வட இந்தியாவின் தென்கோடி வரை தங்கள் நகரங்களை விரிவு படுத்தினர். ஆயினும் அணியணியாய் வந்த ஆரியரின் விரிவாக்கப் பணிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல், விந்திய மலைக்கு தெற்கே விரட்டப்பட்டனர். அங்கே ஏற்கனவே வாழ்ந்திருந்த திராவிடப் பழங்குடி மக்களுடன் சேர்ந்து தங்களுக்கென்று நாகரிகத்தை உருவாக்கி, ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இன்றும் வாழ்ந்துவருகின்றனர்.

ஆரியரின் விரட்டுதல்கள் நின்றுவிட்டாலும் கூட அவர்களுடைய ஊடுருவல்கள் நிற்கவில்லை என்பதுதான் உண்மை. தங்களுடன் திராவிடர்களின் கலாச்சாரத்தையும் இணைத்து இன்று இந்தியா முழுதும் பரவியிருக்கும் இந்தியக் கலாச்சாரத்தை உருவாக்கினர் ஆரியர்கள். ஆனாலும், திராவிடர்கள் தங்களது தனித்தன்மையை விட்டுக் கொடுக்கவில்லை. இந்தியா முழுவதும் தங்களின் மொழியான சமஸ்கிருதத்தையும் அதன் மரூஉ மொழிகளான ப்ராகிருதம், பாளி ஆகியனவற்றையும் பரவ விட்டனர் ஆரியர்கள். ஆனால், தென்னகத்தில் தமிழ் நீங்கா இடம் பெற்றது. அதை முற்றிலும் அழித்தொழிப்பது கடினம் என அவர்கள் புரிந்து கொண்ட போது, ஏற்கனவே தமிழில் அழியாப் பேரிலக்கியங்கள் தோன்றிவிட்டிருந்தன. தூய தமிழ் வடிவின் மீதான தாக்குதல் மிக மிக மெதுவாக நடந்தேறியது. சந்திரகுப்தனின் மௌரியப் பேரரசு வட இந்தியா, மேற்கு மற்றும் வடமேற்கு இந்தியா, கிழக்கு இந்தியா என எங்கும் பரவினாலும், தெற்கே பரவாமல் போனது. அவன் மகனான பிந்துசாரனின் ஆட்சிக் காலத்தில் ஒரு பெரும் படையெடுப்பு நிகழ்ந்தாலும் கூட சேர சோழ பாண்டிய மன்னர்கள் சேர்ந்து அதை முறியடித்தனர் என்பது கலிங்க மன்னன் காரவேலனின் ஹதிகும்பா கல்வெட்டில் புலனாகிறது.


ஆனால், அந்தப் படையெடுப்பு ஒரு பெரிய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியது. அதாவது அதுவரை அனைத்துக் குடிகளும் ஒன்றாய் வாழ்ந்திருந்த தமிழகத்தில் சாதி முறை தோன்றலாயிற்று. கண்ணகியால் குற்றஞ்சுமத்தப் பட்டு நீதிக்காக தன் உயிரை விட்ட ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எழுதிய ஒரு புறனாநூற்றுப் பாடலில் “வேற்றுமை தெரிந்த நாற்குடியுள்ளும்” என்னும் வரி வருகிறது. இது சாதி வேறுபாடு தமிழகத்தில் தலைதூக்கியதற்கான சான்று. அதைத் தொட்டே, அவருக்கு பின் வந்த காலத்தவரான திருவள்ளுவர் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனும் குறளைச் சமைத்தனர்.

ஆரியர்களின் பேதங்கள் நிறைந்த சமூகமுறை மட்டுமல்ல தமிழகத்தில் பரவியது, அவர்கள் பயன்படுத்திய வடமொழியும் தான். கி.மு.300 க்கு முன்பாக எழுதப்பட்டதாக கருதப்படும் புறநானூற்றுப் பாடல்களில் வடமொழிக் கலப்பு மிக மிகக் குறைந்த அளவே இருக்க, அதன் பிறகு எழுதப்பட்ட பாடல்களில் மிகுந்த கலப்பு நிறைந்துள்ளதைக் காணலாம். மொழியும் கலாச்சாரமும் ஒரு குறிப்பிட்ட இனத்தின் அடிப்படையாகும். அவை அழிந்துபடும் போது அந்த இனத்தின் தனித்தன்மை இழக்கப்படுகிறது.


நாளைடைவில் ஆரியர்கள் அந்தணர் எனும் பெயரில் தமிழகத்தில் மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்த துவங்கினர். அதுவரை கடவுளரை தங்கள் சொந்த மொழியில் வணங்கி வந்த தமிழர்களை வடமொழி கொண்டு வணங்குமாறு செய்தனர். சில தமிழ் மன்னர்கள் தான் இதற்கு முதலில் பலியாகி இடங்கொடுத்தவர்கள். “பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி” எனும் பாண்டிய மன்னன் தான் பெரிதும் வடமொழி சடங்குகள் பரவ காரணமாயினன். பின்னர் பெரிய வணிகர்களும் பெரு நிலக் கிழார்களும் வடமொழி சடங்குகளை பின்பற்றினர். சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கும் கோவலனுக்கும் நடந்த திருமணச் சடங்குகள் குறிப்பிடப்பட்டுள்ளதை நினைவிற் கொள்க…! கண்ணகியும் கோவலனும் மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த மேல்தட்டு மக்களாவர்.

நாட்கள் செல்லச் செல்ல தமிழின் தனித்தன்மை சிறிது சிறிதாகத் தேயத்துவங்கியது. மதம் சார்ந்த இலக்கியங்கள் பெரிதும் குவிந்தன. ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் காலத்தில் மதம் பெரிதும் விரும்பப்படும் பாடு பொருளாயிற்று. அந்தணர்கள் வடமொழிப் பெயர்களை அப்படியே தமிழ்வழக்காக மாற்றத் துவங்கினர். தூய தமிழ்ப் பெயர்கள் மறையத் துவங்கின. அரசர்களும், அமைச்சர்களும், தளபதிகளும், பெருந்தனக்காரர்களும் கொஞ்சம் கொஞ்சமாக வடமொழியிலான பட்டப் பெயர்கள் கொண்டு வழங்கப்பட்டனர்.


“மாமல்லன்”, “மதுராந்தகன்”, “கோப்பரகேசரி”, “ராஜராஜன்”, “மகாராஜா”, “சத்ருமல்லன்”, என்றெல்லாம் பட்டப்பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டனர். இவ்வாறு சமஸ்கிருத பெயர்கள் சூட்டிக் கொள்வதை ஒரு ஆடம்பரமாக, ஒரு மேல்தட்டு நாகரிகமாக வளர்த்தனர். அவற்றோடன்றி, கடவுளரின் பெயரும் வடமொழியாக்கப்பட்டன. சிவன் “ஈஸ்வரன்” ஆகவும், முருகன் “சுப்ரமணியன், கார்த்திகேயன்” என்றும், மால் “மகாவிஷ்ணு” ஆகவும், வேந்தன் “இந்திரன்” என்றும், கொற்றவை “மகாகாளி” என்றும் மாற்றப்பட்டனர். தமிழிலேயே தனி இலக்கியங்கள் தோன்றியிருந்த காலம் போய், வடமொழி நூல்களை முதனூலாக கொண்டு வழிநூல்கள் எழுதும் பழக்கம் கொண்டுவரப்பட்டது. அவ்வாறு வழிநூலாக, மொழிபெயர்ப்பாக எழுதப்பட்ட கம்பராமாயணம் வடமொழி முதனூலையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு பெரிதும் சிறந்து விளங்கியது.


கோவில்களை அந்தணரே நடத்தும் முறையும் கொஞ்சம் கொஞ்சமாக பரவத்துவங்கியது. அந்தணரைத் தவிர மற்றவர் கருவறைக்குள் நுழைவது தடுக்கப்பட்டது. அரசர்களும் அந்தணர்களுக்கு கோவில் சார்ந்த நிலங்களை வாரி வாரி வழங்கினர். பல சலுகைகள் வழங்கப்பட்டன. கல்வி கற்பதும், கற்பிப்பதும் அந்தணர்களின் ஏக போக உரிமையானது. அவர்களாகப் பார்த்து யாருக்கு வேண்டுமானாலும் கற்பிக்கலாம். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கற்கும் அதிகாரம் உண்டு என்ற வழக்கம் வந்தது. சமூகத்தின் அனைத்து பிரிவினரும், பெண்களும் கற்றுத் தேர்ந்து கவிதை எழுதும் அளவுக்கு புலமை பெற்றிருந்த சங்க கால தமிழ்ச்சமூகம் நசிந்து போய், எழுத்தறிவில்லாதவர் பெருகவும், பெண்கள் அடிமையாகவுமாய் தமிழ்க் கலாச்சாரம் சிதையத் துவங்கியது. சங்க கால தூய தமிழ்நூல்கள் அந்தணர் வீட்டுப் பரண்கள் மீது தூங்கலாயின. தமிழன் ஆரிய மயக்கித்தில் விழுந்தான்.


பிள்ளைப் பிறப்பில் துவங்கி, அன்றாட வழிபாடு, திருமணம், பெயர்ச்சூட்டுதல், பிள்ளை வளர வளர வரும் சடங்குகள், இறப்பு, அதற்குப் பின் வரும் இறுதிச் சடங்குகள், நீத்தார் நினைவுநாள் சடங்குகள் என எல்லாம் அந்தணர் செய்யும் சடங்குகளாயின. எல்லாச் சடங்குகளும் தமிழர்களுக்குப் புரியாத சமஸ்கிருத மொழியிலேயேச் செய்யப்பட்டன. சம்ஸ்கிருத மொழி தேவபாஷை என வழங்கலாயிற்று. இங்ஙனம் சடங்குகளின் போதேயல்லாது மற்றபடி வழக்கு மொழியிலிருந்து சமஸ்கிருதம் முற்றிலும் அழிந்தது. அதன் எச்சங்கள் மிகுந்த மொழிகள் வட இந்தியாவெங்கும் பரவின. தென்னகத்தில் தமிழேயன்றி, மற்ற திராவிட மொழிகள் சமஸ்கிருதக் கலப்பு மிகுந்து பரவின. 50 விழுக்காட்டிற்கும் மேல் சமஸ்கிருதச் சொற்கள் கலந்தன. தமிழிலும் சமஸ்கிருதம் கலந்தது. தூய தமிழ்ச் சொற்கள் மறக்கப்பட்டன. அல்லது மறைக்கப்பட்டன.

தனித் தமிழ் அழிந்து போய், மணிப்பிரவாள நடை மேலோங்கியது. இலக்கியங்கள் எல்லாம் மணிப்பிரவாளம் கொண்டே சமைக்கப்பட்டன. தமிழ் அழிவில் விளிம்பிற்குத் தள்ளப்பட்டது. தமிழரின் தனித்தன்மையான கலாச்சாரம், ஆரியச் சடங்கு முறைகளுக்குள் சிக்கி அழியத் துவங்கியது. 15ஆம் நூற்றாண்டில் கடைசியாக மலையாள மொழியும் பிறந்து தமிழினின்று பிரிந்து சென்றது. ஆரியர்கள் பெரும்பாலும் அம்மொழியை வளர்க்கத் துவங்கினர். கோவில்கள் எல்லாம் ஆரியமயமாக்கப் பட்டன. அதன் பிறகு வந்த மூன்று நூற்றாண்டுகள், தமிழரின் மொழியும் நாகரிகமும் தனித்தன்மையும் முற்றிலும் அழிந்து போன நாட்களாகும்…

Tuesday, November 15, 2011

கொஞ்சம் சிதைத்து, திரித்து, இழுத்து,


வணக்கம் தோழர்களே
தமிழ் தமிழர் என ஏன் பெருமை என கேட்டால் இதோ ......
தெலுங்கு மொழி, கன்னடம், மலையாளி இதுவெல்லாம் தமிழில் இருந்துதான் வந்தது இதற்க்கு பல உதாரணங்கள் சொல்லலாம் அவர்கள் பேசும் ஒவ்வொறு வார்தையிலும் தமிழ்தான் உள்ளது.
அவர்கள் உரைக்கும் எண்கள்கூட தமிழை சார்ந்தே உள்ளது.
தமிழை சிதைத்து, கொஞ்சம் திரித்து, கொஞ்சம் இழுத்து,
கூடவே கொஞ்சம் சமற்கிருதம் இன்னும் பிற மொழியை கொஞ்சம் சேர்த்து பேசினால்
இதோ சுட, சுட தெலுங்கு,கன்னடம், மலையாளம் ரெடி.

தோழரே,
இதோ பெரியார் சொன்னது,
தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் உள்ள சமற்கிருதத்தை நீக்கனால்
அது தூய்மையான தமிழாக மாறிவிடும் என்றார்,

தமிழ்தான் அனைத்து தென்னாட்டு மொழிக்கும் தாயகம்
என்பதை அறிந்து அதை மக்கள் உணரவும் பாடுபட்டார்.

அதனால்தான் ஆங்கிலேயேரிடம் திராவிட நாடு என்று கோரிக்கையை முன்வைத்தார் ஆனால்
அந்த முன்று இனத்தவருக்கும் தில்லியிடம் தஞ்சம் அடைவதையே பெருமையாக கொண்டமையால்
பெரியார் பின்பு தமிழ்நாடு தனி நாடு என்ற கொள்கையை முழங்கினார்

இவர் மீதுதான் பார்ப்பனர்கள் எத்தனை பொய் பரப்புரை செய்தார்கள்.
இவர் தமிழரே இல்லை என்று பார்ப்பனர்கள் சொன்னதுதான் வேடிக்கையின் உச்சம்.

இந்திய மொழிகளில், இணையத்தில் தமிழில் தான் அதிக பக்கங்கள் இருக்கிறதென்று ஒரு தகவல் படித்திருக்கிறேன். அப்படியே இல்லையென்றாலும், ஹிந்திக்கு அடுத்தப்படியாக கண்டிப்பாக இருக்கும். இன்னும் நிறைய விஷயங்களில் இந்தியாவில் ஹிந்திக்கு அடுத்தப்படியாக தமிழ் இருக்கும். காரணம்?
தமிழகத்தை தவிர மற்ற மாநிலத்தவர்களிடம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று நான் சந்தித்தவர்கள் மிகவும் குறைவு. தமிழகத்திலும் கடவுள் நம்பிக்கையுடையவர்கள் நிறைய இருந்தாலும், அதை மறுப்பவர்கள் கணிசமான சதவிகிதம் உள்ளனர். அப்படியே, சாமி கும்பிடுபவர்கள் என்றாலும், அதை லைட்டாக எடுத்து கொள்பவர்கள் அதிகம். ஏதேனும், மத சர்ச்சை கிளம்பும் போது, அதிக பாதிப்பு இல்லாதது, தமிழகம். காரணம்?

இன்று மற்ற அண்டை மாநிலங்களில் போட்டு கொள்வது போல், தமிழகத்தில் பெயருக்கு பின்னால் சாதியை பெருமையாக போட்டுக் கொள்ளும் வழக்கம் குறைவு. சில திருமணப் பத்திரிக்கைகளில் இருக்கிறது. இருந்தாலும் பேசிக் கொள்ளும் போது, சாதியை பெருமையாக பேசிக் கொள்வது குறைவு. 
திராவிடர் என்பது தமிழின் மற்மொழியே.. ஆரியக் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள நம்மை சரியாக அடயாளப் படுத்துவதற்குத்தான் திராவிடர் எனும் சொல்.மற்ற மாநில்த்தவர் பயன் படுத்தாததுதான் திராவிடர் எனும் சொல்லின் பலம் ஆகும்.
நான் காரணமாக நினைப்பது பெரியாரைத்தான். 
நன்றி - சாரு 

Saturday, September 24, 2011

அரசியல் என்றால் - வணக்கம் தோழர்களே




வணக்கம் தோழர்களே
இன்று அரசியல் என்றால் முகம் சுளிப்பவர்கள் உண்டு.பொதுவாக யாரிடம் கேட்டாலும் நமக்கு எதுக்குங்க அரசியலெல்லாம் என்று சொல்லுவார்கள். உண்டான சோலியப் பாக்கவே நமக்கு நேரம் இல்லை. இதிலே எங்கே அரசியலைப்பத்திக் கவலைப் பட?என்பார்கள். தேர்தல் வந்தால் ஓட்டு போடுவோம்; ஆனால் அரசியலில் இருந்து விலகியே நிற்போம் என்று சொல்பவர்கள் உண்டு.பொதுவாகவே ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன, நான் உண்டு என் வேலை உண்டு; எனக்கு அரசியல் பிடிக்காது என்று ஒதுங்கி நிற்போர் ஒருவகையில் அரசின் நடவடிக்கையை ஆதரிப்பவராகிவிடுகிறார். நமது வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் அரசியல் இரண்டற கலந்து கிடக்கிறது. ஒருவரின் வாழ்க்கையின் ஏற்ற இறக்கத்திற்கு அரசும் காரணம் என்கிற போது அந்த அரசு பற்றி கவலைப் படாமல் இருக்க முடியுமா?

இன்னொரு பக்கம்-யாராவது கமுக்கமாகச் சில காரியங்களைச் செய்தால் “ஏ…அவன் பயங்கர பாலிக்ட்டிக்ஸ் பண்றாம்ப்பா” என்போம்.

“உங்க பாலிடிக்ஸ்லே என்னை மாட்டிவிடாதிங்க”
“நாம ஒண்ணும் இங்க பாலிடிக்ஸ் பண்ண வரலே”

என்றெல்லாம் பேசுகிறோம்.இந்த இடத்தில் அரசியல் என்றால் சதி,வஞ்சகம்,சூது என்ற அர்த்தத்தில்தான் பேசுகிறோம்.
இன்னும் ஒரு வாதம் உண்டு . “இப்பெல்லாம் என்ன சார் அரசியல் நடக்கு? கக்கன்,காமராஜ் காலம் மாதிரியா இப்ப இருக்கு? அரசியல்னாலே துட்டு அடிக்கிறதுன்னு ஆகிப்போச்சு. நல்ல தமிழ் பேசி துட்டு அடிக்கப்போறியா இல்லாட்டி கான்வெண்ட் இங்கிலீக்ஷ் பேசித் துட்டு அடிக்கப்போறியாங்கிறது தான் கேள்வி. ஆனால் கக்கன்,காமராஜர் காலத்தில் என்ன பேச்சிருந்ததென்றால் “என்ன சொல்லுங்க வெள்ளக்காரனை மாதிரி நிர்வாகம் பண்ண முடியுமா?”

இன்னொரு பக்கம் லஞ்சம், ஊழல்கூடப் பரவாயில்லை அடிதடி, வெட்டுக்குத்து,சொந்தக் கட்சிக்காரனையே போட்டுத்தள்றது-இதெல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமாப் போச்சு. இதுகெல்லாம் மேலே தலைவர்கள், தலைவிகள் காலில் விழுந்து கும்பிடுகிற அசிங்கம். சேச்சே…மானம் ரோஷம் உள்ளவன் அரசியலுக்குப் போவானா?

ஆனால், இவையே முழு உண்மையும் இல்லை. இது மட்டுமே அரசியல் என்பதும் சரி இல்லை
ஒரு முக்கியமான உண்மையை நாம் எல்லோரும் மறந்துவிடுகிறோம். சாக்கடை என்றும் மானங்கெட்டது என்றும் நாம் பேசும் அரசியல் எவ்வளவு புனிதமானது என்பதை யாரும் புரிந்துகொள்வதில்லை.
நம் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் பல முடிவுகளை எடுப்பது அரசியல் அல்லவா? அதுபற்றி நாம் அக்கறையில்லாமல் இருப்பது எப்படி சரியாகும்?

மாணவர்களிடம் நீ கல்வி முடித்தவுடன் என்ன உத்தியோகம் பார்க்கப்போகிறாய், என்றால் பொறியாளர்,மருத்துவர்,மென்பொருள் நிபுணன் அல்லது பத்திரிக்கையாளன் ஆவேன் என்பார்கள் ஒருபோதும் அரசியல்வாதியாக ஆவேன் என்று சொல்லமாட்டார்கள். அந்த அளவிற்கு நம் சமூகம் அரசியல் என்பதை மக்களிடமிருந்து ஒதுக்கிவைத்துள்ளது.

நம் நாட்டில் மட்டுமல்ல உலகில் எந்த ஒரு மூலையிலும் வாழும் சகல மக்களின் வாழ்க்கையை தீர்மானிப்பது அரசியல் தான். நாம் மீடியாக்களின் வாயிலாக சகல செய்திகளையும் அறிந்து கொள்கிறோம், மீடியாவில் வருபவை எல்லாமே நடு நிலையான செய்திகள் என்று கூறமுடியாது.

தினமும் மக்கள் பார்க்கும் செய்திகளில் அவர்கள் விவாதிக்கும் போது அரசியல் என்றாலே சாக்கடை தான், அது காசு பணம் சம்பாதிக்கின்ற தொழில் அல்லது தேர்தல் மட்டுமே அரசியல் என்று தான் பார்க்கிறோம். மேலும் அரசியல்வாதியை குறைசொல்லாத நபரே இல்லை, ஒவ்வொருவரும் எல்லாவற்றிற்கும் அரசியல்வாதியை குறைகூறுகிறோம்,ஆனால் நாம் தவறவிட்ட அதிகாரத்தை கேள்வி கேட்கும் தன்மை இங்கு இல்லை. எல்லா அரசியல் வாதியும் ஒண்ணு தான் என்ற ரீதியில் பேசுவோம். ஆனால் மக்களுக்காக அரசியல் நடத்தும் சில இயக்கங்களை காணத்தவருகிறோம். அரசியலில் தலைமையை நோக்கி கேள்வி கேட்கும் ஜனநாயகத் தன்மை இல்லை தான். தமிழ்சினிமாவில் வரும் கதாநாயகனைப் போல் இந்த சமூகத்தை யாராவது வந்து மாற்றிவிடமாட்டார்களா என்று தான் உள்ளோமே தவிர நம்முடைய கடமை / பங்கு என்ன என்பதை நாம் செய்வதில்லை.

மனித சமுதாயத்தில் துன்ப, துயரங்களை பற்றி கவலை கொள்ளாதவர்களை மிருகங் கள் என்றார் மாமேதை மார்க்ஸ். அதையே புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் சொல்லும் பொழுது

தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோ ன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!
கன்னலடா என்சிற்றூர் என்போ னுள்ளம்
கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம்!

என்று சீறுகிறார்.

அரசியல் என்றால் என்ன? அதில் நம்முடைய பங்கு என்ன?
அரசியல் என்பதன் அடிப்படையை -அரசு +இயல் என்பதை தெரிந்துகொண்டால்தான் ஏமாற்றங்களிலிருந்து விடுபடமுடியும். விரக்தியில்லாமல் நமக்கான அரசியலைப் புரிந்துகொள்ளமுடியும்.
எது உண்மையிலேயே நம்ம கட்சி என்று கண்டுபிடிக்கத்தெரியாமல் எல்லாக் கட்சியிலேயும் சேர்ந்து ஏமாந்துகொண்டிருக்கிறார்கள். அல்லது ஒரு கட்சியும் வேண்டாம் எல்லாமே சாக்கடை என்று ஒதுங்கி நிற்கிறார்கள்..
அரசாங்க செயல்பாடுகளில் மக்கள் நேரிடையாக பங்கேற்கின்றனர். அரசாங்கத்தில் தீர்மானங்களை உருவாக்கும் வகையில் மக்கள் நேரிடையாக தொடர்பு உண்டு .

அரசியல் என்பது மக்கள் குழுக்களில் முடிவெடிவெடுக்கும் முறையைக் குறிக்கும் சொல். பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும்.
அரசியல் என்பது என்ன என்பது பற்றிப் பலர் பல கோணங்களிலிருந்து பார்த்து வரைவிலக்கணம் கொடுத்துள்ளார்கள். இவ் வரைவிலக்கணங்களுள் சில கீழே தரப்பட்டுள்ளன

"ஆட்சி செய்வதற்குரிய கலையும், அறிவியலும் ஆகும்."

குறிப்பாக, இது "பொதுத் திட்டங்களுக்காக, மக்கள் ஆதரவைத் திரட்டுவதன்மூலம், முரண்பாடுகளைத் தீர்க்கும் ஒரு நடைமுறையாகும்"

"என்ன, எப்பொழுது, எங்கே, எப்படி யார் பெறுகிறார்கள்" என்பதே அரசியல்".

ஆனால் நாம் இன்று செய்துகொண்டிருப்பது என்ன என்பதை சற்று சிந்திப்போம், இன்றைய பல இந்திய இளைஞர்களின் அதிகப்படியான எதிர்பார்ப்பு என்னவென்றால் ஐம்பதாயிரம் சம்பளத்தில் ஒரு வேலை , ஒரு கார் , ஒரு பிளாட் , அழகான ஒரு மனைவி.இதையும் தாண்டி சிந்திப்பவர்கள் , கவிஞர்களாகவும் , எழுத்தாளர்களாகவும் , இயகுனர்களாகவும், வலைப்பூவிலும் , முகநூளிலும் ,தன் சிந்தனையை வெளிபடுத்துகிறனர்.புதிய சட்டம் போடணும் ,தொலைநோக்கு பார்வையுடன் திட்டம் திட்டணும் வாய்யளவில் பேசிக்கொண்டும் , மனதளவில் எண்ணிக்கொண்டும் இருந்தால் மட்டுமே போதாது , சட்டத்தையும் , திட்டத்தையும் நடைமுறை படுத்த நமக்குள்ளே ஒரு "தீ" வேண்டும் , நாம் தகுதியை வளர்த்துக்கொண்டு , தகுந்த சமூக பொறுப்பை (பதவி) அடையவேண்டும் .மேலும் உள்ளாட்சி பொறுப்பில் இருந்து படிபடியாக சென்றால்தான் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கமுடியும் .
படித்த பலர் மைக்ரோ சாப்டில் வேலை வேண்டும் , ஆட்சியர் அலுவலகத்தில் நிரந்தர பணி வேண்டும் என்றுதான் விரும்புகிறனர் , ஆளும் பொறுப்புக்கு வரவேண்டும் என்று விரும்புவோர் மிகவும் குறைவு , (எல்லோரும் கலக்டர் ஆனால் கம்போண்டர் ஆவது யார் என்று கேட்பது எனக்கு புரிகிறது)

உண்மையை சொல்லப்போனால் சமூக அக்கறையும் , தொலைநோக்கு பார்வையும் உள்ள வலைபூ நண்பர்களும் , முகநூல் நண்பர்களும் சற்று களத்தில் இறங்க முற்படவேண்டும்.
இன்று வலைபூ நண்பர்களும் , முகநூல் நண்பர்களும் எந்தனை பேர் எங்களை போல் கிராமத்தில் வசிக்கிறார்கள் என்று சொல்லுங்கள். கிராம ஜனங்கள் நிலை மிகவும் பரிதாபகரமானதாகும். பட்டணத்துக்காகவே கிராமங்கள் இருந்து வருகின்றன. கிராம சீர்திருத்தம் என்பது பட்டணங்களில் வாழ்பவர்களின் சௌகரியத்துக்கு ஆக செய்யப்படும் காரியமேயாகும். கசாப்புக் கடைக்காரன் ஆட்டைப்பற்றி கவலை கொள்ளுவது போல்தான் பட்டணக்காரன் கிராமத்தைப் பற்றி கவலை கொள்ளுவதாய் இருக்கிறது. அரசியல் தானாகட்டும், சமூக இயல் தான் ஆகட்டும் எவ்வளவுதான் முற்போக்கடைந்தாலும் கிராமக்காரனின் நிலை ஒரே மாதிரிதான். அவன் பாடுபட்டு உழைத்து வஸ்துக்களை உண்டாக்க வேண்டியதும், அதன் பலனை பட்டணக்காரன் அனுபவிப்பதுமல்லாமல் கிராமத்திற்க்கு உருவாக்கப்படும் திட்டங்களையும் கிராமத்தையும் கிண்டலடிக்கும் மனோபாவம் இன்று நிலவுகிறது .
இதை வாசிக்கும் எத்தனை பேர் கிராமத்தில் வசிக்கின்றனர் என்று எண்ணி பாருங்கள் . இங்கு பின்னுட்டம் எழுதுவதும் , வலை பூ எழுதுவதும் ,ஒரு பெரிய காரியமல்ல , தற்பெருமைக்காக சொல்லவில்லை , நான் M.E இறுதியாண்டு படிக்கும் பொழுதே அகில உலக கருத்தரங்கில் கலந்து கொண்டு எனது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்த போது அமெரிக்க நிறுவனம் ஓன்று சம்பளமாக சுமார் மூன்று லட்சம் ரூபாய்க்கு வேலை வாய்ப்பு அளித்தது, ஆனால் அந்த வாய்ப்பை நிராகரித்து இந்தியாவிலேயே எங்கள் குடுப்பதினரோடு எங்கள் கிராமத்தில் இருப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி என்று கூறிவிட்டேண். இப்பொழுது சொல்லுங்கள்---( நீ பிழைக்க தெரியாதவள் என்று) ஏன் என்றால் பல படித்தவர்களும் பட்டினதாரும் என்னை பார்த்து சொல்லும் ஒரே வார்த்தை இதுதான் .நாம் கிராமத்துக்குப்போய் அவர்களுடைய பழமைப்பித்தை ஒழிக்க வேண்டும் மூடநம்பிக்கையை அகற்றவேண்டும் , நீங்கள் இதை செய்தால் அதுவே கிராம முன்னேற்றமான வேலையாகும். மற்றபடி நீங்கள் என்ன செய்தாலும் அது பயன்படாது.படிப்பதும் மட்டும் ஒரு மாணவரின் கடமையல்ல. வளமான பாரதத்தை வலுவான பாரதமாக மாற்றுவது, நமது இளைய பாரதங்களின் கையில் தான் உள்ளது. அதை நிறைவேற்ற வேண்டியது அனைவரும் தான். ,

நமது தேசியத்துக்காக செல்ல வேண்டிய பாதையின் திறவு கோல் எமது போராட்டங்களின் தோல்விகளில் இருந்து கிடைக்கப்பெறுகிறது. ..மானத்தை உயர்வென்றெண்னி.! மரணத்தை துச்சமாக நினைப்பவன் எவனோ.! அவனே தமிழன்
இன்றைய மக்களிடம் (சுயநலம்) , ஒவ்வொருவரும் தமது நலங்களுக்கே முக்கியதுவம் கொடுத்து செயற்படுவதே மேலோங்கி இருப்பதால் ஒரு திட்டத்தை நிறைவேற்ற உண்மையான மக்கள் சேவகர்கள் படும் பாடு ....... அய் அய் அய் அய் யோ ...............என்னை பொறுத்த வரை நான் எந்த வேலை செய்தாலும் எனக்கு பிடித்தால் மட்டுமே செய்வேன் அல்லது மற்றவர்களது நன்மைக்காகவும் , மகிழ்ச்சிக்காகவும் செய்வேனே தவிர . கோடி கொடுத்தாலும் காசுக்காக கஷ்டப்பட்டு எதையும் செய்யமாட்டேன், கஷ்டப்பட்டு ஒரு வேலையை செய்வதை விட இஷ்டப்பட்டு செய்வதுதான் எனக்கு திருப்தியை தரும் , எனக்கு போராட்டம் மிகவும் பிடிக்கும். காரணம் நாம் பூமியில் வாழுவதற்கு கொடுக்கும் வாடகைதான் நமது சேவை .

என்னை சுற்றி உள்ள அனைவரும் நல்லவர்கள் , நான் செய்கின்ற பணி சிறந்தது என்று வாழ்வதால்தான் என்னால் குடும்பதினருடனும் , கிராம மக்களுடனும் ,மாணவர்களுடனும்,முகநூல் வலைப்பூ நண்பர்களுடனும் மகிழ்ச்சியுடன் தன் கருத்துகளை பரிமாறி என் பனிகளை சிறப்பாக மேற்கொள்ள முடிகிறது.


பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2010,23:27 IST
அவிநாசி :அவிநாசி ஊராட்சி ஒன்றிய தலைவிக்கு, "இளம் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது.அவிநாசி ஊராட்சி ஒன்றிய தலைவியாக சாந்தி உள்ளார். திருச்செங்கோட்டில் நடந்த ஜேசீஸ் மண் டல மாநாட்டில், இவருக்கு 2010ம் ஆண்டின் "இளம் சாதனையாளர்' விருது வழங்கப்பட்டது; ஜேசீஸ் முன் னாள் தேசிய தலைவர் வல்லபதாஸ் வழங்கினார்.ஒன்றிய தலைவி சாந்தி கூறுகையில்,""உலக அளவில் இளைஞர் விழிப்புணர்வு, தனிமனித மேம்பாடு உள்ளிட்ட பல பயிற்சிகளை அளிக்கும் ஒரே சங்கம் ஜேசீஸ் மட்டுமே. இன்றைய இளைஞர் கள் அரசியலை பார்த்து பயப்படக்கூடாது; சமூகப் பணியாற்ற கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும்,'' என்றார்


                       

சமூக விழிப்புனர்வுக்காக மட்டுமே இப் பதிவு , பெருமைக்காகவோ அல்லது , யார் மனதையும் புன்படுத்தும் நோக்கத்திலோ அல்ல ,

தவறாக இருந்தால் தயவுகூர்ந்து மனிக்கவும்,

உங்கள் அன்பு சகோதரி :-சாந்திபாபு 


Thursday, September 15, 2011

வரம்பை மீறிய சதித்திட்டம்

இழப்பை கணக்கிடுவது சிஏஜியின் (CAG) வேலையல்ல 

- அப்போ ஏன்டா 2Gல 1.76 லட்சம் கோடி இழப்புன்னு வாய் கூசாம பொய் சொன்னிங்க...

"Estimating loss was not within the scope of our audit," Rekha Gupta, Deputy CAG

நேற்று வெளியான கிருஷ்ணா கோதாவரி பெட்ரோலிய ஒதுக்கீடு, ஏர் இண்டியாவிற்கு விமானம் வாங்கியது போன்றவற்றிற்கான CAG ஆடிட்டர் அறிக்கைகளில் முறைகேடு நடந்துள்ளது என்று சொல்லி, எந்தவிதமான இழப்பு தொகையையும் குறிபிடப்படவில்லை. ஏன் அவ்வாறு அரசாங்கத்திற்கான இழப்பு தொகையை கணக்கிட்டு குறிப்பிடபடவில்லை என்று CAGயை கேட்டதற்கு,இழப்பை கணக்கிடுவது சிஏஜியின் (CAG) வேலையல்ல,அது தணிக்கைகாண வரைமுறைக்குள் வராது (ஆடிட் ஸ்கோப்) என்று CAG தலைமை ஆடிட்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அறிக்கைகளை CAG வெளியிடும்போது எந்தவிதமான டிவி கேமேரக்களோ, நேரடி ஒளிபரப்பையோ CAG செய்யவில்லை.

ஆனால், 2G குறித்த CAG அறிக்கையில்,அதில் எந்தவிதமான தொழில்நுட்ப அறிவும் இல்லாமல் இதே CAG 1.76 லட்சம் கோடி இழப்பு என்று எந்த அடிப்படையில் (ஆடிட் ஸ்கோப்) அறிவித்தது ?...மேலும் 2G குறித்த அறிக்கையை டிவி கேமேரகளுடன் நேரடி ஒளிபரப்பையும் செய்தது. இந்த ஆதாரம் அற்ற CAG அறிக்கையை அடிப்படையாக கொண்டுதான், ஏதோ திமுக 1.76 லட்சம் கோடி கொளையடிது விட்டதுபோல, குறிபிட்ட பிரிவினரின் மீடியாக்கள் தொடர் பொய் பிரச்சாரம் செய்தன,இதை நம் மக்கள் நம்பும் மாதிரி தொடர் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இவற்றை பார்க்கும்போது, இது ஏதோ ஒரு பெரிய சதி திட்டத்தின் ஒரு பகுதியாக சிஏஜி 2G விஷயத்தில் வரம்பை மீறி செயல்பட்டிருப்பது தெரிகிறது. அந்த சதித்திட்டம் 15 வருடங்களுக்கு மேலாக மத்தியில் திமுக ஒரு முக்கிய கட்சியாக இருப்பதை பொறுகாமலா அல்லது செல்போன் கட்டணங்களை குறைத்து, செல்போன் தொழிலில் ஒரு தரப்பின் ஆதிக்கத்தை கட்டுபடுத்தி அணைத்து தரப்பினரும் பயன்பெறும்வண்ணம் செய்ததை பொறுகாமலா என்று தெரியவில்லை. இன்னும்கூட சிலர் இதை புரிந்துகொளாமல் இருகின்றனர்.

CAG officials justified the absence of a specific figure on estimate of losses, especially in the KG Basin contract, saying they were beyond the audit norms. "Estimating loss was not within the scope of our audit," Rekha Gupta, Deputy CAG, said. 

There were no TV cameras and live telecast as the CAG briefed media about three audit reports tabled in Parliament -- the audit of oil exploration contracts, especially of KG Basin given to Reliance Industries, the aircraft purchase for Air India/Indian Airlines and their integration.



What prompted the Comptroller and Auditor General from not quantifying the losses to the exchequer in the KG Basin contract and Air India decisions may never be known.

நன்றி - விஜய்