தொகுப்புகள்

Search This Blog

Tuesday, November 15, 2011

கொஞ்சம் சிதைத்து, திரித்து, இழுத்து,


வணக்கம் தோழர்களே
தமிழ் தமிழர் என ஏன் பெருமை என கேட்டால் இதோ ......
தெலுங்கு மொழி, கன்னடம், மலையாளி இதுவெல்லாம் தமிழில் இருந்துதான் வந்தது இதற்க்கு பல உதாரணங்கள் சொல்லலாம் அவர்கள் பேசும் ஒவ்வொறு வார்தையிலும் தமிழ்தான் உள்ளது.
அவர்கள் உரைக்கும் எண்கள்கூட தமிழை சார்ந்தே உள்ளது.
தமிழை சிதைத்து, கொஞ்சம் திரித்து, கொஞ்சம் இழுத்து,
கூடவே கொஞ்சம் சமற்கிருதம் இன்னும் பிற மொழியை கொஞ்சம் சேர்த்து பேசினால்
இதோ சுட, சுட தெலுங்கு,கன்னடம், மலையாளம் ரெடி.

தோழரே,
இதோ பெரியார் சொன்னது,
தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் உள்ள சமற்கிருதத்தை நீக்கனால்
அது தூய்மையான தமிழாக மாறிவிடும் என்றார்,

தமிழ்தான் அனைத்து தென்னாட்டு மொழிக்கும் தாயகம்
என்பதை அறிந்து அதை மக்கள் உணரவும் பாடுபட்டார்.

அதனால்தான் ஆங்கிலேயேரிடம் திராவிட நாடு என்று கோரிக்கையை முன்வைத்தார் ஆனால்
அந்த முன்று இனத்தவருக்கும் தில்லியிடம் தஞ்சம் அடைவதையே பெருமையாக கொண்டமையால்
பெரியார் பின்பு தமிழ்நாடு தனி நாடு என்ற கொள்கையை முழங்கினார்

இவர் மீதுதான் பார்ப்பனர்கள் எத்தனை பொய் பரப்புரை செய்தார்கள்.
இவர் தமிழரே இல்லை என்று பார்ப்பனர்கள் சொன்னதுதான் வேடிக்கையின் உச்சம்.

இந்திய மொழிகளில், இணையத்தில் தமிழில் தான் அதிக பக்கங்கள் இருக்கிறதென்று ஒரு தகவல் படித்திருக்கிறேன். அப்படியே இல்லையென்றாலும், ஹிந்திக்கு அடுத்தப்படியாக கண்டிப்பாக இருக்கும். இன்னும் நிறைய விஷயங்களில் இந்தியாவில் ஹிந்திக்கு அடுத்தப்படியாக தமிழ் இருக்கும். காரணம்?
தமிழகத்தை தவிர மற்ற மாநிலத்தவர்களிடம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று நான் சந்தித்தவர்கள் மிகவும் குறைவு. தமிழகத்திலும் கடவுள் நம்பிக்கையுடையவர்கள் நிறைய இருந்தாலும், அதை மறுப்பவர்கள் கணிசமான சதவிகிதம் உள்ளனர். அப்படியே, சாமி கும்பிடுபவர்கள் என்றாலும், அதை லைட்டாக எடுத்து கொள்பவர்கள் அதிகம். ஏதேனும், மத சர்ச்சை கிளம்பும் போது, அதிக பாதிப்பு இல்லாதது, தமிழகம். காரணம்?

இன்று மற்ற அண்டை மாநிலங்களில் போட்டு கொள்வது போல், தமிழகத்தில் பெயருக்கு பின்னால் சாதியை பெருமையாக போட்டுக் கொள்ளும் வழக்கம் குறைவு. சில திருமணப் பத்திரிக்கைகளில் இருக்கிறது. இருந்தாலும் பேசிக் கொள்ளும் போது, சாதியை பெருமையாக பேசிக் கொள்வது குறைவு. 
திராவிடர் என்பது தமிழின் மற்மொழியே.. ஆரியக் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள நம்மை சரியாக அடயாளப் படுத்துவதற்குத்தான் திராவிடர் எனும் சொல்.மற்ற மாநில்த்தவர் பயன் படுத்தாததுதான் திராவிடர் எனும் சொல்லின் பலம் ஆகும்.
நான் காரணமாக நினைப்பது பெரியாரைத்தான். 
நன்றி - சாரு 

No comments:

Post a Comment