Sunday, March 11, 2018

தமிழ்தேசிய கட்சிகளுக்கும் திமுக எதிரியா ?

தமிழ்தேசிய கட்சிகளுக்கும் திமுகவை எதிர்க்கும் மூன்றாவது அணியினருக்கும்:

,காவிகளின் தமிழக ஊடுருவல் தோல்விக்கு மேல் தோல்வி அடைந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் லேடியா மோடியா பிரச்னைக்கு பின் ஜெ.யையும் வீழ்த்திய பின் முதலில் தீபா வை புரோமோட் செய்தனர் தோல்விக்குப் பின் மைத்ரேயனையும் பாண்டியராஜனையும் வைத்து ஓபிஎஸ் மூலம் அதிமுகவை வளைக்கப்பார்த்தனர் தோல்வி.பின்னர் பயமுறுத்தி ஈபீஎஸ்ஸை தினகரனிடமிருந்து பிரித்து ஓபிஎஸ்ஐயும் சேர்த்து தன் கட்டுப்பாட்டில் வைத்தும் எதிர்ப்பு பலமாகவே இடைதேர்தலிலும் நோட்டாவிடமே தோல்வி அடைந்த அவமானத்தில் தற்போது நடிகர்களை சாமர்த்தியமாக அரசியலில் நுழைக்கும் புராஜக்கெட் A B C தமிழ்நாடு திட்டம் போட்டுள்ளனர்.
புராஜக்ட் A திட்டமான நடிகர்கள் நுழைவும் அதற்கு எதிர்ப்பலை பலமாக உருவாகி விட்டதால் புராஜக்ட் B திட்டமான திராவிடத்திற்கெதிரான தமிழ் தேசியவாதிகளை ஊக்கப்படுத்தி திராவிட அரசியலை வீழ்த்த எத்தனிக்கின்றனர்.அதற்கு ஆதாரமாக சமீபத்தில் பலருடைய கடும் கண்டனாத்திற்காளான மூக்குடைப்பட்ட ஒரு நரி திராவிடத்தால் தமிழ்தேசியம் பாதிக்கப்பட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இப்போது நான் சொல்ல விழைந்தது என்ன வெனில் உங்களுடைய ஆதங்கத்தில் உண்மை இருந்தாலும் திராவிட ஆட்சியில்தான் உங்களது தமிழ்தேசிய குரலே ஒலிக்கிறது ஒலிக்க ஆம்பித்ததும் நடவடிக்கைகள் எடுத்ததும் நடந்துள்ளது.அப்படி இல்லாது போனால் நீங்கள் எல்லாம் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்பட்டு நசுக்கப்படுவீர்கள் இந்த காவிகளின் ஆட்சியில்.
திராவிட. ஆட்சிகளில் நிறையஅளவிற்கு தமிழ் தமிழர் பெருமை சமூக நீதி இத்யாதி எல்லாம் முன்னேற்றம் அடைந்ததையே பிடிக்காத காவிகள் அதை முறியடிக்க எப்படி எப்படி எத்தனித்தனர் என்பதை வரலாறு சொல்லும்.திராவிட ஆட்ச கட்சிகளை பிளவு படுத்தி தனக்கு சாதகமாக செயல்படும் போலி திராவிட ஆட்சிகளை நிறுவி அந்த ஆட்சிகளின் மூலமாக உங்கள் ஜனநாயக குரலையும் நசிக்கி வைத்ததை எல்லாம் எண்ணிப்பார்க்கனும் உண்மையான தமிழ்தேசியவாதிகளாக இருந்தால். ?
உங்கள் குரல்களில் நியாயம் இருந்தாலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி அடையும் நிலையில் உங்கள் அரசியல் கட்சி கட்டமைப்பு இல்லை.வாக்கு பிரிவுதான் நடக்கும்.அந்த  கட்டமைப்பு வர நீண்ட காலமாகும்.
ஆக திராவிட ஆட்சி அமைந்தால்தான் அதற்கு எதிர்கட்சியாக ஜனநாயக முறையில் வளரமுடியும்.
இதை ஆழ்ந்து சிந்திக்காமல் திராவிட ஆட்சியின் சில பல தவறுகளுக்கு விமர்சித்தால் அது வாக்கு சிதறலுக்கும் இன்ன பிற காவிகளின் சூழ்ச்சி அரசியலுக்கு பலியாகும் அவல நிலைக்கும் தள்ளப்படுவீர்கள்.
உதாரணமும் தமிழ்நாட்டரசியலிலேயே உண்டு.
நன்கு வளர்ந்து வந்த விஜயகாந்த் பாரியாளின் மைத்துனரின் பேச்சை கேட்டு 2014 ல் காவிகளிடம் கூட்டு வைத்ததால் இன்று தேய்ந்துக் கொண்டே போகும் நிலையில் உள்ளது.அதே போல மேலும் பல கட்சிகளும் உண்டு.
அதனால் காவிகளின் B டீம் என்ற அவப்பெயரை அடையாதீர்கள்.

நன்றி :- முகமது

No comments:

Post a Comment