தொகுப்புகள்

Search This Blog

Wednesday, January 24, 2018

இந்து மதத்தை மட்டும் விமர்சிப்பது ஏன்?

தமிழகத்தில் இருக்கும்  கடவுள் மறுப்பாளர்கள் இந்து மதத்தை மட்டும் விமர்சிப்பது ஏன்?

ஒன்றை மிக​ தெளிவாக​ புரிந்து கொள்ளுங்கள். கடவுள் மறுப்பு கொள்கைக்காக​ இந்து மதம் விமர்சிக்கப்படுவதில்லை.

தமிழர்களை வேசியின் பிள்ளைகள் என்றும், தமிழ் மொழியை நீச​ மொழி என்றும், தமிழர்களை சூத்திரர்கள் என்றும், பிறப்பின் அடிப்படையில் தமிழர்களை  தாழ்ந்தவர்கள் என்றும் இந்து மத​ கோட்பாடுகள் கூறுவதால் தான் இந்து மதத்தை தமிழகத்தில் இருக்கும் கடவுள் மறுப்பாளர்கள் விமர்சிக்கிறார்கள்.

தமிழகத்தில் இருக்கும் கடவுள் மறுப்பாளர்கள் மற்ற​ மதங்களையும் விமர்சிக்கிறார்கள். ஆனால்  இந்து மத​ கோட்பாடுகளே தமிழர்களை இழிவு செய்வதால் இந்து மதத்தை மற்ற​ மதங்களை காட்டிலும் அதிகமாக​ விமர்சிக்கிறார்கள்.

மேலும் ஒர் இடத்தில் எந்த​ மதம் பெரும்பான்மையாக​ இருக்கிறதோ அதுவே கடவுள் மறுப்பாளர்களால் அதிகம் விமர்சிக்கப்படும். உதாரணமாக​ அமெரிக்காவில் இருக்கும் கடவுள் மறுப்பாளர்கள் சர்ச் வாசலில் நின்று கூட​ கிறிஸ்தவ​ மதத்தை விமர்சிப்பார்கள். அவர்களிடம் 'ஏன் கிறிஸ்தவ​ மதத்தை மட்டும் விமர்சனம் செய்கிறாய், அமெரிக்காவில் இருக்கும் இந்து கோவில்களின் முன் நின்று ஏன் விமர்சனம் செய்வதில்லை' என்று எந்த​ அமெரிக்கரும் சென்று  கேள்வி கேட்பதில்லை. ஒர் இடத்தில் எந்த​ மதம்  பெரும்பான்மையாக​ இருக்கிறதோ அதுவே கடவுள் மறுப்பாளர்களால் அதிகம் விமர்சிக்கப்படும் என்ற​ பகுத்தறிவு அமெரிக்கர்களிடம் இருக்கிறது.

ராமர் எந்த​ கல்லூரில் Engg படித்தார் என்று கலைஞா் கேட்டதை போல் இயேசுவை பார்த்தோ அல்லாவை பார்த்தோ கலைஞா் கேட்பாரா?

கலைஞா் தானாக​ அந்த​ கேள்வியை கேட்கவில்லை. ராமர் பெயரை சொல்லி தமிழகத்திற்கு நன்மை பயக்கும் சேது சமுத்திர​ திட்டத்தை ஆரிய சக்திகள் நிறுத்த​ முயன்றதால் தான் அந்த​ கேள்வியை கலைஞா் கேட்டார். 

இது போன்று இயேசுவின் பெயரை சொல்லியோ அல்லாவின் பெயரை சொல்லியோ தமிழகத்திற்கு நன்மை பயக்கும் திட்டம் ஏதாவது தடுக்கப்பட்டுள்ளதா? அவ்வாறு தடுக்கப்பட்டால் கலைஞா் இது போன்ற​ கேள்வியை மற்ற​ மதத்தை பார்த்தும் முன்வைப்பார். தமிழகத்தில் அவ்வாறு ஒரு சம்பவம் கூட​ நடக்காத​ போது கலைஞருக்கு மற்ற​ மதத்தை பார்த்து அந்த​ கேள்வியை கேட்க​ வேண்டிய​ அவசியம் இல்லை.

இந்து மதத்தை யாரும் விமர்சிக்க​ கூடாது என்றால் இந்து மதத்தின்  கோட்பாடுகளை கூறி இந்து கடவுளின் பெயரை சொல்லி பிறரை ஒடுக்கும் செயல்களை இந்து மதவாதிகள் நிறுத்த​ வேண்டும்.

Terance JP

1 comment: