Monday, December 19, 2011

அரசு பால் + ஹசாரே பால்= கோல்மால்


அரசு லோக்பால் - ஜன் லோக்பால் என்றால் என்ன ?
அன்னா ஹசாரேவிற்க்கு அரசியல் சட்டம், அரசுலோக்பால் பாராளுமன்றம் மீதெல்லாம் நம்பிக்கையில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
இவர் சொல்லும் ஜன்லோக்பால் சட்டம் வந்துவிட்டால் எல்லாம் மீண்டும் புனிதமாகி விடுமா?

இவையிரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களைப் பற்றிப் பலர் எழுதி விட்டனர். இரண்டில் எது வந்தாலும் அதுஊழலை முற்றிலும் ஒழித்து விடாது என்பது ஒரு புறம்இருக்கட்டும்.

அரசின் லோக்பால் மசோதா மிகவும் பலவீனமானது என்பதில் துளியும் சந்தேகமில்லை.

ஆனால்,

ஹசாரேவின் வரைவு மிக உன்னதமா? அதன் அடிப்படைஎன்ன...?

"ஊழல் என்றால் என்ன?" என்று பிரிவு 2(4) -ல்கீழ்க்கண்டவாறு விளக்கியிருக்கிறார்கள்.
"to include anything made punishable under Chapter IX of the Indian Penal Code or under the Prevention of Corruption Act (PCA), 1988."
ஆக, இதன் அடிப்படை ஏற்கனவே உள்ள சட்டங்கள் தான்என்பது புரிந்திருக்கும்.

ஆகவே, அந்த சட்டங்களில் இருக்கிற அனைத்து குறைபாடுகளும் அண்ணா ஹசாரேயின் ஜன்லோக்பாலுக்கும் இயல்பாகவே பொருந்தும்என்பதுதானே உண்மை...? ’
இருக்கிற சட்டங்கள் போதாது; புதிதாய்ச் சட்டம்கொண்டு வருகிறோம்," என்று புறப்பட்டவர்களே, இதுயாரை ஏமாற்றுகிற வேலை?

Prevention of Corruption Act (PCA) என்ற ஊழல் ஒழிப்புச் சட்டம்எல்லாக் குடிமகன்களுக்கும் பொருந்தாது. அது மக்கள்சேவகர்கள் (Public Servants) என்ற ஒரு பிரிவை மட்டுமே கருத்தில் கொண்டு இயற்றப்பட்ட சட்டம். அத்துடன், ஜன்லோக்பால் வரைவில் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 410 முதல் 424 வரையிலான சட்டப்பிரிவுகள்விலக்கப்பட்டுள்ளன. பொது சேவகரோ அல்லதுதனியாரோ மோசடி அல்லது ஏமாற்று போன்றகுற்றங்களில் ஈடுபட்டால் தண்டிப்பதற்குரிய பிரிவுகள்அவை.

அவற்றை ஜன் லோக்பால் மசோதாவிலிருந்துவிலக்கியதால் என்ன விளைவு ஏற்படும்?

ராமலிங்க ராஜு போன்ற பணமுதலைகளயோ, ஹர்ஷத்மேத்தா, கேதன் தேசாய், தெல்கி போன்றவர்களையோ அண்ணாவின் ஜன் லோக்பால் சட்டத்தால் தண்டிக்கமுடியாது. இவ்வளவு ஏன், ஆ.ராசா, சுரேஷ் கல்மாடிபோன்றவர்கள் மீது கூட "மோசடி" என்ற குற்றச்சாட்டைமுன்வைக்க முடியாது.

ஏன்? ஏன்?? ஏன்???
சரி, அரசு லோக்பால் சட்ட வரைவில், அரசல்லாதநிறுவனங்கள் (Non Government Organisations) மீதும்நடவடிக்கை எடுக்க வழிவகைகள் உள்ளன.
ஆனால்,
அவற்றை அண்ணா ஹசாரேயின் ஜன் லோக்பால் குழுவன்மையாக எதிர்த்தது. ஏன்? தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் ஊழல்  நடப்பதில்லையா? அண்ணாவின் ’இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்’டிலேயேநடந்தது என்பது தானே பி.பி.சாவந்த் அறிக்கையின்சாரம்?

மும்பையில் அமைந்துள்ள லீலாவதி ஹாஸ்பிடல்மிகவும் பழமையானது மட்டுமல்ல; பிரம்மாண்டமானதுகூட! இது ஒரு சேவை நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மிக அண்மையில் இந்த டிரஸ்டில்ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கில் அந்நியச்செலாவணி மோசடி நடந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு எல்லா ஊடகங்களிலும் செய்திகள் வந்தனவே?

தன்னார்வத்தொண்டு நிறுவனங்களில் பல என்னசெய்கின்றன? மக்கள் சேவை என்று சொல்லிக்கொண்டு அரசுகளிடமிருந்து நிதி வசூலிக்கின்றன;வெளிநாடுகளிலிருந்து நன்கொடை மற்றும் நிதியுதவிபெறுகின்றன. "நான் தான் தலைவர், நீ செயலாளர், நீபொருளாளர்," என்று சுயேச்சையாக (adhoc) நிர்வாகத்தைஉருவாக்கி, வருகிற நிதிகளை மனம்போலச் செலவழிக்கின்றனர்.

விரல்விட்டு எண்ணக்கூடியவை தவிர மீதமிருப்பவைமிக மோசமான நிர்வாகம், பணமோசடி என்ற அளவிலேதான் இருக்கின்றன.

இவற்றை லோக்பாலின் கீழ் கொண்டு வர வேண்டாம்என்று அண்ணா சொல்வது ஏன்?

தொண்டு நிறுவனங்களை விடுங்கள்; அவைநடத்தப்படுகிற லட்சணம் எல்லாருக்கும் தெரியும். ஜாதி,பதவி, சமூக அந்தஸ்து, பணவசதி போன்றஅடிப்படையில் இயங்கும் பெரும்பாலான தொண்டுநிறுவனங்கள், அடிக்கடி செய்தித்தாள்களில் புகைப்படம்போட்டு, பேனர் தூக்கியது தவிர என்னகிழித்திருக்கிறார்கள்?

ஹசாரே முன்னிறுத்தும் வடிவம், அரசு முன்னிறுத்தும் வடிவம்இரண்டில் எது சட்ட வடிவமானாலும் உயர் நீதி மன்றத்தில் ஓர்எளிய ரிட் மனு மூலம் அது பொடிப் பொடியாகும் சாத்தியம்அதிகம். அதிலும் ஹசாரே முன்னிறுத்தும் வடிவம் சொல்லவே வேண்டாம் .

ஹசாரேயின் உண்ணாவிரதம் ஏன் என்ன பயன் ?

காந்தி உண்ணாவிரதம் இருந்தார் அவர் பிளவுபட்டசமுதாயங்களை ஒன்றிணைக்க உண்ணாவிரதம்இருந்தார்.

அண்ணா ஹசாரே, தனது உண்ணாவிரதத்தால் சமூகத்தையே இரு கூறாகப் பிளந்திருக்கிறார். இவருக்குஆதரவு தெரிவிப்பவர்களில் பெரும்பாலானோர் அரசியல் சட்டம், பாராளுமன்றம், ஜனநாயகம் எல்லாவற்றையும் உதவாக்கரைகள் என்றுவிரக்தியோடு சொல்லுமளவுக்கு நாட்டில் ஒருஎதிர்மறையான மனப்போக்கை உருவாக்கியிருக்கிறார்.

இயலாமையில் உழன்று கொண்டிருக்கும் நடுத்தரவர்க்கமும், மெத்தப்படித்த புத்திசாலிகளின் கூட்டமும் ஊழலுக்கு எதிரான தங்களது கண்டனங்களைத் தெரிவிக்க அண்ணா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள்; இவராவது வந்தாரே என்றபெருமூச்சுடன்!

ஆனால், ஹசாரேவின் போராட்டம் போகிற திசையைப் பார்த்தாவது, இது சத்யாகிரஹம் இல்லை; வேறுஎன்னவோ திட்டமிருக்கிறது என்று புரிந்து கொள்ளவேண்டாமா?

ஒன்றை கவனிக்க வேண்டும்! காவல்துறை விதித்த 22நிபந்தனைகளில், வெறும் 6 தான் ஹசாரேவின் கோஷ்டியால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் மிகமுக்கியமானதாக இவர்கள் சொன்னதென்ன?

"5000 பேர்கள் என்ற கட்டுப்பாடெல்லாம் கூடாது: மூன்றுநாட்கள் தான் என்பதையும் ஒப்புக்கொள்ள முடியாது,"என்றுதான் பேட்டிகளில் கிரண்பேடி மாய்ந்து மாய்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்.

"தேவைப்பட்டால் உச்சநீதி மன்றத்தை அணுகுவோம்,"என்று அர்விந்த் கேஜ்ரிவால் மார்தட்டினார். ஆனால், திடீரென்று அடுத்த திருப்பம். புதிதாக நான்கு நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள்.
காரணம், அதிகபட்சம் 5000 பேர்கள், மூன்று நாட்கள்என்பதெல்லாம் தில்லி உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்த வரைமுறைகளுக்கு (guidelines) ஏற்பவிதிக்கப்பட்டிருப்பதாக தில்லி காவல்துறை தெரிவித்திருக்கிறார்கள்.

முன்னாள் சட்ட அமைச்சரான சாந்திபூஷணும்,முன்னணி வழக்குரைஞரான பிரசாந்த்பூஷணும்உடனிருக்கும்போதே இப்படியொரு சொதப்பல்! இதுதான்அண்ணா ஹசாரே குழுவிலிருக்கிற மெத்தப்படித்தவர்களின் லட்சணம்!
ஆக, மொத்தம் 22-ல் 6 நிபந்தனைகளை, "அரசியல்சட்டத்துக்குப் புறம்பானது(unconstituitional)" என்று ஹசாரேவின் குழு தெரிவித்திருக்கிறது. இது நீதிமன்றஅவமதிப்பாகக் கருதப்படுமா இல்லையா என்றுசட்டநிபுணர்கள்தான் சொல்ல முடியும்.
அப்படியே இருந்தாலும், அதுகுறித்து ஹசாரேகவலைப்படப் போவதில்லை. காரணம், ஏற்கனவேஅவர்மீது ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில்இருக்கிறது.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் எவ்விதமாற்றுக்கருத்துமில்லை. ஆனால், அதை ஹசாரே ஒருவரால் தான் முடியும் என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை!

வாசிக்கிறவர்கள் என்ன நினைக்கிறார்கள் அவரை ஆதரிப்பதை நிறுத்துவிட்டு யோசிப்பவர்கள் எத்தனைபேர், நான் சொன்னதை சரியாக புரிந்துகொள்ளது என்னை திட்டப்போகிறவர்கள் எத்தனை பேர் என்பது பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை.

ஏன் என்றால் இதை ஏற்ப்பதும் ,மறுப்பதும் அவரவர் விருப்பம் .என்னை பொறுத்தவரை ஊழலுக்கு ஏதிரான இந்த போராட்டம் தவறில்லை அதை வழிநடத்தும் நபர் சரியில்லை என்பது மட்டுமே , தவறான நபரை ஆதரித்தது நம் மக்கள் என்ற தீராத பழிக்கு ஆளாக வேண்டாம் என்பதே என் ஆதங்கம் .


நன்றி:-மயில்ராவணன் 

1 comment:

  1. ... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

    ReplyDelete