Monday, September 26, 2016

"சாத்தான் மிக பெரியவன்"

"சாத்தான் மிக பெரியவன்"

வேளாங்கண்ணி கோயிலுக்கு மாதாவை கும்பிடப் போன பக்தர்களை சுனாமி சொந்தம் கொண்டாடி பரலோகத்துக்கு அழைத்துப்போய்விட்டது.

பூரி ஜெகநாதரை வழிபட பாதயாத்திரைப் போன பக்தர்களை வெள்ளமும் மண்சரிவும் சேர்ந்து சொர்க்கத்துக்கு டிக்கெட் எடுத்து கொடுத்தது.

அல்லாவால் அழிக்க முடியாத சாத்தானை கல்லால் எறிந்து கொல்லலாமென போன ஹஜ் பயணிகளை காலடியில் போட்டு நசுக்கி ஏக இறைவனோடு ஐக்கியமாக்கிவிட்டது ஜன நெரிசல்.

முட்டாள் தனமும் மூட நம்பிக்கைகளும் எந்தவொரு தனி மதத்துக்கும் சொந்தமானதல்ல என்பதே இவையுணர்த்தும் செய்தி.

வேளாங்கண்ணிக்கு ஒரு இளம்பெண்ணை அழைத்துச் சென்று அறையில் தங்கி உல்லாசமாக இருந்தபோது சிக்கிய பாதிரியார்.

செக்ஸ் அக்ரிமெண்ட் போட்டு பெண்களை அனுபவித்த நித்யானந்தா, கணவனை இழந்த பெண்ணிடம் தகாதபடி நடந்துகொண்டது மட்டுமல்லாமல் சங்கரராமனையும் கொன்ற ஜெயேந்திரன், கோவில் கருவறையிலேயே பெண்களோடு சல்லாபித்த தேவநாதன், இன்னும்.. இன்னும்..

அல்லாவின் பேரை சொல்லி புனிதப்போர் எனும் போர்வையில் அப்பாவிகளை கொன்று குவிக்கிற தலிபான், ஐஎஸ் தீவிரவாதிகள்..

தன் பேரை சொல்லி யார் எந்த அநீதியில் ஈடுபட்டாலும் எப்பேர்பட்ட கொலை பாதகத்தை செய்தாலும் எல்லா மத கடவுள்களுமே வெறுமனே வேடிக்கை பார்ப்பதையே தொழிலாக கொண்டிருக்கின்றன.

பெண்களின் இயல்பான உடல்மாற்ற மாதவிடாயை தீட்டு என ஒதுக்கி கூனி குறுக வைக்கிற இந்து மதம். பெண்களோடு கடவுளர்கள் புணர்கிற காட்சிகளை கோவில்களில் சிலை வடித்து புனிதபரவசத்தில் கையெடுத்து கும்பிட சொல்கிறது.

ஆயிரம் சமத்துவம் பேசினாலும் கன்னியாஸ்திரிகள் திருப்பலி நிறைவேற்ற முடியாது. திருச்சபையின் அதிகாரம் பொருந்திய பொறுப்புகளான ஆயர், கர்தினால், போப் உள்ளிட்ட பதவிகளை பெண்கள் நினைத்து பார்க்கவும் கூடாது என்கிறது கிறிஸ்தவம்.

புர்கா ஒழுங்காக அணியாத பெண்ணை கல்லால் அடித்து கொன்றும் கால் விரல் நகம் தெரிய நடந்த பெண்ணின் கால்களை வெட்டியும் காரணமே இல்லாமல் பெண்களை விவாக ரத்து செய்து, அதுவும் சம்பந்தபட்ட பெண் உட்பட யார் அனுமதியும் தேவையில்லாமல், ஆண் ஐந்து பெண்கள்வரை மணந்து கொள்ளலாம் என கழுத்தில் மிதிக்கிறது இஸ்லாம்.

எல்லாம் வல்லவரான, எங்கும் நிறைந்தவரான, தூணிலும் துரும்பிலும் இருக்க கூடிய , முக்காலமும் உணர்ந்த, நன்மையே உருவான, கருணை மிகு கடவுள் அகோர சிரிப்போடு இவைகளை வேடிக்கை பார்த்து பொழுதுபோக்குவதன்றி வேறொன்றும் செய்தானில்லை.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், கடவுளை உண்டாக்கிய மனிதன் தான் சாத்தானையும் உண்டுபண்ணினான். ஆனால் உங்கள் கடவுளர்களை விட சாத்தான் மிக பெரியவனும் அதி வல்லமையுமுடையவனாய் இருக்கிறான்.

ஆம், உங்கள் அறியாமையும் அறிவுக்கொவ்வாத மூடபழக்கவழக்கங்களும் மதவெறியும் ஆதிக்கவெறியும் தான் அந்த சாத்தான். அந்த சாத்தானை ஒழிக்க வெறுமனே கற்கள் போதாது, மந்திரங்களோ கயிறோ அந்த சாத்தானை அசைத்துகூட பார்க்காது.

தேவையெல்லாம் பகுத்தறிவு. அதுதான் சாத்தானை கொல்லும் ஒரே ஆயுதம். நீங்கள் பகுத்தறிவை கைக்கொள்ளாதவரையில் சாத்தானுக்கு நீங்கள் பலியாவதை எந்த பெரிய கடவுளாலும் தடுக்க முடியாது. தெளியுங்கள்!

நன்றி:- Leo Joseph D

Friday, September 23, 2016

கலைஞர் தடுக்கவில்லையா?

கர்நாடகா அணைகள் கட்டியபோது கலைஞர் தடுக்கவில்லையா? நடந்தது என்ன?
1970 இல் காவேரி பிரட்சினையில் கலைஞரின் நிலைபாடு இதுதான்
1) 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தம் காலாவதியாகவில்லை. உபரிநீரை பயன்படுத்துவதை பற்றி மட்டுமே புதிய ஒப்பந்தம் காண வேண்டும்
2)காவேரியில் தமிழகத்தின் அனுமதியின்றி கட்டப்படும் அணைகளை சட்டத்திற்கு புறம்பானது என்று அறிவிக்க வேண்டும்.
மேற்கண்ட இரண்டு கோரிக்கைகளை வலியுருத்தியும் நடுவன் குழுவை அமைக்க கோரியும் 1970 ஆம் ஆண்டு கலைஞர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். (28.10.1970 இந்து)
இவ்வாறு கடிதம் எழுதும் முன்பு ஆறு முறை மத்திய நீர் பாசன அமைச்சர் முன்னிலையில் தமிழகம் கர்நாடகா கேரளா முதல்வர்கள் கூடி பேசி பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்திருந்தன.
அனால் மத்தியில் அப்போதிருந்த காங்கிரஸ் அரசு கர்நாடகா அரசிற்கே சாதகமா இருந்து கலைஞரின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தியது.
எனவே 1971 இல் உச்ச நீதி மன்றத்தில் காவேரி நடுவர் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உத்தவிட வழக்கு தொடுத்தது கலைஞர் அரசு
இதை கண்டு அப்போதைய பிரதமர் இந்திரா பேசி தீர்த்து கொள்ளலாம் என்றும் வழக்கெல்லாம் வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்தார்.
கலைஞர் இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்தார். கூட்டத்தில் வழக்கை முழுமையாக வாபஸ் வாங்காமல் .
மீண்டும் தாக்கல் செய்யும் உரிமையுடன் வழக்கை வாபஸ் வாங்க முடிவு செய்யப்பட்டது. வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டது கலைஞர் அரசு.
அதன் பின்னர்21.5.72 இல் மத்திய நீர்பாசனத்துறை அமைச்சர் முன் ஓர் ஒப்பந்ம் ஏற்பட்டது. ஆனால் எந்த மாநில அரசும் அதை ஏற்கவில்லை. அதன் பின்னரும் 1972-75 வரை மூன்று முறை பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
கலைஞர் தனது இரண்டு நிபந்தனைகளையும் எந்த சூழ்நிலையிலும் தளர்த்திக்கொள்ளவில்லை.
1975 இல் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த கர்நாடகா அரசு அழைத்த போது கபிணியில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீரை திறந்து விட்டால் மட்டுமே பேசமுடியும் எனத் பிடிவாதமாக தெரிவித்து விட்டார். எமர்ஜென்சியும் வந்து விட்டது. கலைஞர் ஆட்சியும் கலைக்கப்பட்டு விட்டது.
ஆனால் 1977 ல் ஆட்சிக்கு வந்து விட்ட தமிழ் இன துரோக கட்சியான அ தி மு க வழக்கு தாக்கல் செய்யும் உரிமையை வேண்டுமென்றே தவிர்த்து கர்நாடகாவிற்கு ஆதரவாக நடந்து கொண்டதே உண்மை . 1980 இல் எம்ஜிஆர் அரசு காவேரி டிரிபுயூனல் கோரி உச்ச நீதி மன்றத்தில் போட்ட வழக்கை வாபஸ் பெற்று தமிழர்களுக்கு பெரும் துரோகத்தை இழைத்தது. 1977 முதல் 1988 வரை காவேரி விவகாரம் கிடப்பில் போடப்பட்டது
அதன் பிறகு ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் காவேரி பிரட்சினையில் எதையும் செய்யவில்லை.
ஆனால் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்த பின்னரே 1990 இல் கலைஞரின் பெரு முயற்சியால் காவேரி நடுவர் மன்றமே அமைக்கப்பட்டது.
1977 ல் மீண்டும் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் அப்போதே 1924 ம் ஆண்டு ஒப்பந்தபடியே வழக்கு தொடர்ந்திருப்பார் . அது மட்டுமின்றி 1977 லேயே காவிரி வழக்கில் தலைவர் கலைஞர் அவர்கள் வெற்றியும் கண்டிருப்பார்.
மீண்டும் 1989 ல் ஆட்சிக்கு வந்த தலைவர் கலைஞர் அவர்கள் 1977 முதல் 1988 வரை நடந்த செயலற்ற அ தி மு க அரசின் துரோகங்களை ஒழித்து கட்டினார்
பிற்காலத்தில் சட்ட சிக்கல் எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலையும் பெற்று . அன்றய முதல்வர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தி மு க ஆதரவு பெற்ற வி.பி. சிங்கின் மத்திய அரசு 02/06/90 ம் தேதி உத்தரவிட்டு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது.
அப்படி காவிரி நடுவர் மன்றத்தை அமைத்த போது அதை எதிர்த்து நக்கலும் நையாண்டியும் செய்தவர் ஜெயலலிதா ...

நன்றி :- அந்தோனி பரிமளம்

Sunday, September 18, 2016

கடவுள் பயமே வேண்டாமா?

கடவுள் பயமே வேண்டாமா?"

பிறந்ததில் இருந்து இன்று வரை நீங்கள், நான், அனைவருமே, கடவுளோ, வேதமோ செய்யக்கூடாது என்று கூறிய விசயங்கள் எத்தனையோவற்றை செய்துவிட்டு, இதெல்லாம் சின்ன தப்பு, கடவுள் நம்மை கண்டுக்கமாட்டார் என்று நமக்கு நாமே சமாதானம் கூறியிருக்கின்றோம். யாராவது மறுக்கின்றீர்களா? சிறு சிறு பொய்கள் சொல்லும் விசயத்தில் ஆரம்பித்து, ஏமாற்றுதல், பிறர் மனம் நோகச் செய்தல்.. இப்படி தவறுகள் செய்யாத மனிதனே கிடையாது.

இந்த கடவுள் பயம் விசயத்தில் இன்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ளும் நிலைதான் அதிகம் காண்கின்றோம். அவரவர் வசதிக்கேற்ப தவறுகள் செய்துவிட்டு அதற்கு விளக்கம் கொடுத்து கொள்கின்றோம். சின்ன பென்சிலை திருடியவன், நான் என்ன தங்க செயினையா திருடினேன், இது பெரிய தவறு அல்ல என்று நினைக்கின்றான். தங்க செயின் திருடுபவன் நான் என்ன கடையையேவா கொள்ளை அடிச்சேன். ஒரே ஒரு செயின். அதுவும் அந்த கடைக்காரன் கொள்ளை அடிச்சு சேர்த்தது. இதை கடவுள் கண்டுக்கமாட்டாரு.. அந்த கடைக்காரனோ அத்தனை கடவுள் படத்தையும் கடையில மாட்டி வச்சிட்டு, கிலோவுக்கு கால் கிலோ தாமிரம் சேர்க்கிறான். இப்படித்தான் வியாபாரம் பண்ணனும். இது ஏமாத்து கிடையாது. கடவுள் கோவிச்சுக்கமாட்டாருன்னு சமாதானம் சொல்லிக்கிறான். இன்னும் ஒரு படி மேலே போய், சாமி உனக்கு தங்கத்தாலே தேர் வாங்கித்தர்றேன்னு சொல்லி, சாமிக்கே லஞ்சம் கொடுக்கிறான்.

நான் மேலே சொன்ன அவலங்கள் இன்றைக்கு நடைமுறையில் இல்லயென்று உங்களில் யாரேனும் மறுக்க முடியுமா? இதேபோல்தான் இன்றைக்கு கடவுள் சம்பந்தமான எல்லா விசயங்களுமே அவரவர் வசதிக்கேற்றார்போல் flexible ஆக வளைத்துக் கொள்ளும் விசயமாயிற்று. தவறுகளை செய்துவிட்டு காப்பதற்கு கடவுள் இருக்கின்றார் என்று கடைசியில் மனிதன் சென்று சேரும் இடமாக கடவுள் மாறிவருகின்றார்.

வாழ்க்கை நெறிமுறைகளுக்கு, வாழ்க்கை எப்படி வாழவேண்டும் என்பதற்கு இப்போது யாரும் கடவுளுக்கு பயப்படுவதுபோல் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அந்த எண்ணிக்கை குறைவுதான். கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றுதல், கொள்ளையடித்தல், கொலை செய்தல் என்ற அளவிற்கு மனித நாகரிகம் சீர் கெட்டுக் கிடக்கின்றது. ஆலயங்களிலேயே தவறுகள் நடக்கின்றன. தன்னையே கடவுள் என்று சொல்லிக்கொண்டு உலகை ஏமாற்றும் கயவர்களும் இந்த பூமியில் சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் கடவுள் பயம் குறைவதால் உண்டாகும் மாற்றம் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடப் போவதில்லை. எனது எதிர்பார்ப்பு, கடவுள் பெயரால் நடந்து வந்த அக்கிரமங்கள் குறையும். கடவுள் விசயம், சென்டிமென்ட் என்று சட்டம் தயங்கும் விசயங்களில், நாளை இந்த நம்பிக்கை சென்ற பின்பு சட்டம் எல்லாவற்றிற்கும் பொதுவாய் இருக்கும். மக்கள் தங்களது நேரங்களை இன்னும் பயனுள்ள விசயங்களில் செலவழிக்க இயலும்.

நான் நல்லவனா, கெட்டவனா என்பது எனக்கு தெரியாது. கடவுள் நம்பிக்கை இல்லாத எனக்கு கடவுள், பேய், பிசாசு, பில்லி சூனியம் போன்ற பயங்கள்தான் இல்லை. சட்டத்திற்கு பயப்படுகின்றேன். தவறு செய்ய பயப்படுகின்றேன். தவறு செய்தால், மாட்டிக்கொண்டு அதனால் ஏற்படப்போகும் மான, அவமான உணர்வு விசயங்களுக்கு பயப்படுகின்றேன். இதையெல்லாம் தாண்டி, என்னையே நீ செய்தது சரியா என்று கேட்கும் எனது மனசாட்சிக்கு பயப்படுகின்றேன். இந்த பயங்கள் எல்லோருக்குமே இருக்கின்றது. இந்த உலகில் வாழ இந்த மூன்று பயங்களுமே போதுமானது என்பதுதான் எனது எண்ணம்.

எழுத்தாளர் சுஜாதா சொன்னதுபோல் இந்த நம்பிக்கைகளால் நன்மைதான் எனும்போது விட்டுவிடலாம். அதைத்தான் நானும் இதுநாள் வரை செய்து வருகின்றேன். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு என்று ஒதுங்கி, எனது நம்பிக்கையை அடுத்தவர் மேல் திணிக்கும் செயலை செய்யக்கூடாது என்று எண்ணுகின்றேன். ஆனால், நடக்கும் சமூக அவலங்களைப் பார்க்கும்போது நாம் ஒதுங்குவது தவறோ என்று தோன்றுகின்றது.

நன்றி..அறுசுவையில் இருந்து பாபு என்ற வாசக நண்பர்...

Friday, September 16, 2016

இயற்கை மொழி தோரா. கி.மு.1,00,000 – 5,00,000

இலமுரியா கண்டம்

ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள்.

பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக “சந்தாத் தீவுகளிலிருந்து” தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் “இலமுரியா” (Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர்.

பேரறிஞர் திரு. கட்டு எலியட் என்பவர் தாம் எழுதிய “மறைந்த இலமுரியா” (Lost Lemuria) என்ற நூலில் காட்டியுள்ள நில வரைபடத்தில் ஒரு பெரிய மலைத் தொடர் மேடைக்கடலில் தொடங்கித் தென் வடக்காகக் குமரிமுனை வரை சென்று பின்பு தென் மேற்காகத் திரும்பி மடகாசுக்கர் என்னும் ஆப்பிரிக்கத் தூவு வரை சென்றது எனச் சுட்டிக் காட்டுகிறார் என பேராசிரியர் திரு. கா. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் கூறுகின்றார்.

ஆஸ்திரேலியா, சாலித்தீவையும், தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த நாடே “குமரி கண்டம்” என்கிறார் திரு. தேவநேயப்பாவாணர். இக்கண்டத்தில் தோன்றியவன் தான் “மாந்தன்” இவனை குமரிமாந்தன் என்பர். இவனுடைய நிலை மொழியற்ற ஊமையர் நிலை தோரா. கிமு.500000-100000 வரையாகும்.

குமரிமாந்தரின் மொழியற்ற நிலை“சைகை மொழி” – Sign Language.

குமரி நாட்டு மாந்தன், முற்காலகட்டத்தில் ஆடையின்றி விலங்குகளைப் போல் தன் இச்சைகளைப் பெற்று வந்தான். மனவுறமுமின்றி, மொழியுணர்ச்சியுமின்றி, உணர்ச்சியொலிகளையும், விளியொலிகளையும் கையாளத் தொடங்கினான். காலப் போக்கில் தன் கருத்துக்களைச் சைகைகளாலேயே வெளிப்படுத்தி வந்தான். (Gesture Language or Sign Language) இதை ஊமையர் மொழி என்றே கூறலாம்.

இயற்கை மொழி தோரா. கி.மு.1,00,000 – 5,00,000

எழுத்தும், உச்சரிப்பும் சொற் பொருத்தமும் இல்லாமல் இயல்பாகப் பேசப்படும் ஒலித்தொகுதி (Natural Language) இயற்கை மொழியாம், இம்மொழியை “முழைத்தல் மொழி” (Gesture Language – or Sign Language) என்கிறோம். இம்மொழியின் ஒலிகள் 8 வகைப்படும். அவை

1. உணர்ச்சியொலிகள் (Emotional Sounds)இன்ப துன்ப உணர்வை வெளியிடும் ஒலிகள்.

2. விளியொலிகள் (Vocative Sounds) பிறரைவிளித்தல், அழைத்தல், கூப்பிடிதல் போன்றவைகள்.

3. ஒப்பொலிகள் (Imitative Sounds)இரு திணைப் பொருளுரைக்கும் ஒலிகள்.

4. குறிப்பொலிகள் (Symbolic Sounds) வழக்கப்படிகருத்துக்களைத் தெரிவிக்கும் ஒலிகள்.

5. வாய்ச் செய்கையொலிகள்வாயினாற் செய்யும் செய்கைகளும் செயல்களும்.

6. குழவி வளர்ப்பொலிகள் (Nursery Sounds)குழந்தைப் பருவத்தினருக்குப் பொருந்தும் ஒலிகள்.

7. சுட்டொலிகள் (Decitive Sounds)சுட்டிக் காட்டும் ஒலிகள் சுட்டொலிகள், மற்றும்.

8. வினாவொலிகள் என்பவைகளும் உண்டு,அவை ஐயம், சந்தேகம் மற்றும் வினாக்களைஎழுப்பும் ஒலிகள் எனப்படும்.

தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000

மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். இதைச் செயற்கை மொழி (Artificial Language or Artificial Speech) என்கிறோம். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள்.

தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும்

பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா4. தொலை கிழக்கில் – சீன நாடு5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிட நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன.

குமரிக்கண்டப் பழங்குடிமக்கள் தமிழர்களே!

குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியாகிய பழந்தமிழ் நாட்டை ஆண்டவன் தமிழனே! அம்மொழியும் தமிழ் மொழியே! கடல் கோள்களால், தமிழனின் புகழும், நாடும், மொழியும் அழிவுற்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கடல்கோள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப் பல. நான்கு முறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்கள் குமரிக் கண்டத்தை அழித்து நாசமாக்கியது.

நான்கு பெருங் கடல் கோள்கள்

1. முதல் சங்கம் – தென்மதுரை – கடல் கொண்டது2. இரண்டாவது – நாகநன்னாடு – கடல் கொண்டது3. மூன்றாவது இடைச்சங்கம் – கபாடபுரம் – கடல் கொண்டது4. நான்காவது – காவிரிப்பூம்பட்டிணம் – கடல் கொண்டது.

சிறுகடல் கோள்கள் எண்ணில் அடங்காது.

தொல்காப்பியம்

பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த குமரிமாந்தனின் காலத்தைவிட பல்லாயிரம் ஆண்டுகள் பிந்தியதே தொல்காப்பியம். தொல்காப்பியம் தோன்றிய காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு 5-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும். தொல்காப்பியர் காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே தமிழ் மொழி மிகச் சிறப்புற்றிருந்தது. சிறப்பு மிக்க தமிழ் இலக்கியங்கள் பல இருந்தன. ஆனால் அவைகள் அனைத்தும் நான்குமுறைகள் ஏற்பட்ட கடல் கோள்களால் முழுமையாக அழிவுற்றன.

மூன்று தமிழ் : தமிழ் மொழி தோற்றத்தையும் வரலாற்றுக் காலத்தையும் பல பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.

1. பழந்தமிழ்2. இடைக்காலத்தமிழ்3. தற்காலத்தமிழ்

1. பழந்தமிழ் (Ancient Tamil)

உட்பிரிவுகள் மூன்று.

அ. முன்பழந்தமிழ் – தொல்பழந்தமிழ்

Early ancient Tamil (or) Proto Ancient Tamil

ஆ. மத்திய பழந்தமிழ் – Medieval Ancient Tamil

இ. பின்பழந்தமிழ் – Later Ancient Tamil

2. இடைக்காலத் தமிழ் (Medieval Tamil)

உட்பிரிவுகள் மூன்று.

அ. முன்இடைக்காலத் தமிழ் – Early Medieval Tamil

ஆ. மத்தியஇடைக்காலத் தமிழ் – Medium Mediaval Tamil

இ. பின்இடைக்காலத் தமிழ் – Later Medieval Tamil

3. தற்காலத் தமிழ் (Modern Tamil)

உட்பிரிவுகள் மூன்று.

அ. முன் தற்காலத் தமிழ் – Early Modern Tamil

ஆ. பின் தற்காலத் தமிழ் – Later Modern Tamil

முன்பழந்தமிழ் அல்லது தொல்பழந்தமிழ்Early ancient Tamil (or) Proto Ancient Tamil

திராவிட மொழிகள் பல உள்ளன. அவைகள் அனைத்தும் தமிழ் என்ற ஒரு மூல மொழியிலிருந்து உருவானவைகள். தொல்பழங்காலத்தில் திராவிட மூல மொழியாக இருந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து, காலத்தாலும் இடமாற்றங்களாலும் வெவ்வேறு மாற்றமடைந்து வளர்ந்தவைகளே பிறமொழிகள். அவற்றை நாம் ” திராவிட மொழிக் குடும்பம்” என்று அழைக்கிறோம். பல மொழிகள் உருவாக மூலமாக, கருவாக இருந்த மொழியினைத் தொல்திராவிட மொழி அல்லது மூலத்திராவிட மொழி (Proto Diravidan Language) என்கிறோம்.

திராவிட மொழிக் குடும்பம்

மூலத்திராவிட மொழி அல்லது தொல் திராவிட மொழியாகத் திகழ்ந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து சென்ற மொழிகளைத் திராவிட மொழிக் குடும்பம் என்கிறோம். தமிழ், கோண்டி, கூயி, கூவி, கோவாமி, மண்டா, கொண்டா, நாயக்கி, குருக், மால்தோ, பிராகூய் போன்றவைகளோடு இன்னும் பல பல உண்டு. திராவிட மொழிகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

1. தென் திராவிட மொழிகள் – தமிழ், மலையாளம், கன்னடம்.2. நடுத்திராவிட மொழிகள் – தெலுங்கு, கோண்டி, கூயி, கூவி மேலும் பல உள்ளன.3. வடதிராவிட மொழிகள் – குருக், மால்தோ, பிராகூப் மேலும் பல உள்ளன.

தமிழ்மொழியின் பெரும்புகழ்

திராவிட மொழிகளில் மிகப் பழமை வாய்ந்த மொழி தமிழ். சுமார் ஐந்தாயிரம் (5000) ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண நூல்களையும் பல இலக்கியங்களையும் பெற்று பாரெங்கும் புகழ்பரவ, பெரும் வளர்ச்சி பெற்றிருந்த ஒரே மொழி தமிழாகும். திராவிட மொழியை ஆய்வு செய்த பேரறிஞர்கள் திரு. பர்ரோவும், திரு. எமனோவும் இணைந்து “திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி” (Diravidan Etymological Dictonary) வெளியிட்டனர் என்றால், தமிழ் மொழியின் வளர்ச்சியை உணருங்கள்.

இத்தமிழ் மொழி, இன்றைய தமிழ் நாட்டில் மட்டும் அல்ல அன்றைய குமரிக் கண்டமாகிய பழந்தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் பாரெங்கும் பரவியிருந்தது. பர்மா, மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தூவு, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ், கயானா, மடகாஸ்கர், கிரினிடால் போன்ற உலகின் பல பகுதிகளிலும் பரவி மலர்ந்திருந்தது.

தமிழினம் மற்றும் மொழிச் சிதைவு

உலகெங்கும் தன்னிகரற்ற பேரரசனாகக் கொடிகட்டிப் பறந்த தமிழினமும், அவன் தாய் மொழியாகிய தமிழ் மொழியும், நான்குமுறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்களால் அழிவுற்றது. அப்பெரும் கடல் கோள்களால் குமரிக்கண்டம் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலுமே பேரழிவுகளால் மலை மடுவானது, உலகின் பல நாடுகள் அழிவுற்றன. உயிரினங்கள் மாண்டன, மொழிகளும் சிதைவுற்றன. அவ்வாறே குமரிக்கண்டமும் நீரில் மூழ்கி அழிவுற்றது. இந்த அழிவுகளால் தமிழின் மரபு, பண்பாடு, கலாச்சாரம், தமிழ் இலக்கணங்கள், இலக்கியங்கள் அத்தனையும் சிதைந்து நாசமாகியது. உலகின் பூகோள வடிவமே மாற்று வடிவம் பெற்றது.

வரலாற்றுச் சான்றுகள்

வரலாறு பலவகை உண்டு. அவற்றில் மொழிவரலாறும் ஒன்று. மொழி வரலாறு என்பது மொழியின் தோற்றம், வளர்ச்சி, காலங்கள் தோறும் ஏற்படும் மொழியின் மாற்றங்கள், பிறமொழிக் கலவை, வரிவடிவ மாற்றங்கள் இப்படிப் பல மொழிச் செய்திகளை நமக்குத் தருவது மொழி வரலாறு. ஒரு மொழியின் வரலாற்றைப் படைக்க, சான்றுகளே முக்கியப் பங்கேற்கிறது. சான்றுகளின்றிப் படைக்கப்படும் வரலாறுகள் வரலாறுகள் அல்ல, அவைகள் கதைகளாகக் கருதப்படும்.

தமிழ் மொழி வரலாற்றுச் சான்றுகள்

மொழிகள் காலத்திற்குக் காலம் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மொழிகள் தோன்றிய காலம் எதுவென்று சரிவரக் கூறமுடியாத நிலை இன்னும் நீடிக்கிறது மனிதன் என்று தோன்றினான்? உயிரின வளர்ச்சிகள், மொழிகளின் இயற்கைத் தோற்றம், அவற்றின் வளர்ச்சிகள், போன்ற பலதலைப்புகளில் சிந்தனையைச் செலுத்தவும், ஆய்வினைக் கொள்ளவும், முதல் முதலில் தோன்றியது “டார்வினின் பரிணாமக் கொள்கையே” ஆகும். தமிழ் மொழியின் ஆய்வினைக் கொண்ட பேரறிஞர்கள் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், அகராதிகள், கல்வெட்டுகள், பிறமொழிக் கல்வெட்டுக்கள், அயல்நாட்டினர் குறிப்புகள், நடுகற்கள், அரசுச் சாசனச் செப்பேடுகள், தொல் பொருட்களின் மீது எழுதப்பட்ட வரி வடிவங்கள் போன்ற பல மொழி வரலாற்றுச் சான்றுகளைப் பயன்படுத்தி மொழி வரலாற்றைப் படைக்கின்றனர்.

ஆற்றுச் சமவெளி நாகரிகங்கள்

ஒரு வரலாற்றைப் படைக்க, ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள, ஒரு மொழியை அறிந்துகொள்ள அடிப்படையாக அமைவது ஆற்றுச் சமவெளி நாகரிகங்களே! இத்தோடு ஒத்துழைப்புத் தருபவைகள் மொழி இலக்கணங்களும், இலக்கியங்களும், அனைத்து விதமான ஆதாரங்களைக் கொண்டு உலக வரலாற்றைக் கண்டறிந்த ஆய்வு நிபுணர்கள், மொழி வரலாற்றையும் கண்டறிந்துள்ளனர். தமிழ்மொழியின் தொன்மையையும், தோற்றத்தையும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் பின்வரும் பகுதிகளில் நன்கு அறிவோம்.

சார்லஸ் டார்வின்

இங்கிலாந்து நாட்டின் வரலாற்று மேதை திரு. சார்லஸ் டார்வின் எழுதிய “உயிரினத்தோற்றம்” வாயிலாக கடல் வாழ் உயிரினங்கள், மற்றும் குரங்கையொத்த உருவைக் கொண்ட “மாந்தன் (Lemuria)” போன்ற உயிரினத் தோற்றங்களை அறிகின்றோம். மேலும் “மனிதனின் பாரம்பரிய வளர்ச்சி” என்னும் நூலின் வாயிலாக குமரிமாந்தனையும், மனித இன பரிணாம வளர்ச்சியையும் உணரமுடிகிறது.

Sources:
----------
32,000 year old underwater city found - Dwarka: